22-12-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! பாபா என்னவாக
இருக்கிறாரோ, எப்படிபட்டவராக இருக்கிறாரோ, அவரை சரியான
விதத்தில் அறிந்து கொண்டு நினைவு செய்யுங்கள், அதற்காக
தங்களுடைய புத்தியை விசாலமாக்குங்கள் (பெரிதாக்குங்கள்)
கேள்வி:
பாபாவை ஏன் ஏழைப்பங்காளன் என்று
ஏன் சொல்லப்பட்டிருக்கிறது?
பதில்:
ஏனென்றால் இந்த சமயத்தில் முழு
உலகமும் ஏழையாக அதாவது துக்கமுடையதாக ஆகி விட்டது, அப்போது தான்
பாபா அனைவரையும் துக்கத்திலிருந்து விடுவிக்க வருகின்றார்.
மற்றபடி யார் மீதும் இரக்கப்பட்டு ஆடை கொடுப்பது, பணம்
கொடுப்பது, இவை ஒன்றும் அதிசயமான விசயம் இல்லை. இதன் மூலம்
அவர்கள் யாரும் செல்வந்தர்களாக ஆகி விடுவதில்லை. நான் ஒன்றும்
இந்த (ஏழை) மலை வாழ் மக்களுக்கு பணம் கொடுத்து ஏழைப்பங்காளன்
என்று சொல்லிக் கொள்ள மாட்டேன். ஏழை அதாவது தூய்மையற்றவர்கள்,
யாருக்கு ஞானம் இல்லையோ, அவர்களுக்கு ஞானம் கொடுத்து நான்
தூய்மையாக்குகின்றேன்.
பாடல்:
இது தான் வசந்தம் உலகை மறப்பதற்கு..........
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான குழந்தைகள் பாட்டைக் கேட்டீர்கள். இந்த
பாடலை உலகிலுள்ள மனிதர்கள் பாடியுள்ளார்கள் என்பதை குழந்தைகள்
தெரிந்துள்ளீர்கள். வார்த்தைகள் மிகவும் நன்றாக இருக்கிறது,
இந்த பழைய உலகத்தை மறக்க வேண்டும். முன்னால் இப்படி
புரிந்திருக்கவில்லை. புதிய உலகத்திற்குச் செல்ல வேண்டும்
என்றால் பழைய உலகத்தை மறக்க வேண்டும் என்பது கலியுக
மனிதர்களுக்குப் புரிவதில்லை. பழைய உலத்தை விட வேண்டும் என்ற
அளவிற்கு புரிந்துள்ளார்கள் ஆனால் இன்னும் நேரம் இருக்கிறது
என்று நினைக்கிறார்கள். புதியதிலிருந்து பழையதாக ஆகும் என்று
புரிந்துள்ளார்கள் ஆனால் காலத்தை அதிகரித்து கூறி விட்டதால்
மறந்து விட்டார்கள். இப்போது புதிய உலகம் ஸ்தாபனை ஆகிறது
ஆகையினால் பழைய உலகத்தை மறக்க வேண்டும், என்று உங்களுக்கு
இப்போது நினைவூட்டப்படுகிறது. மறந்து விடுவதினால் என்ன நடக்கும்?
நாம் இந்த சரீரத்தை விட்டு விட்டு புதிய உலகத்திற்குச் செல்வோம்.
ஆனால் அஞ்ஞான காலத்தில் இப்படிப்பட்ட விசயங்களின் அர்த்தத்தில்
யாருடைய கவனமும் செல்வதில்லை. பாபா எந்த விதத்தில் புரிய
வைக்கின்றாரோ, அப்படி புரிய வைக்கக் கூடியவர் யாரும் இல்லை.
நீங்கள் இதனுடைய அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியும். பாபா
மிகவும் சாதாரணமாக இருக்கின்றார் என்பதையும் குழந்தைகள்
தெரிந்துள்ளீர் கள். நெருக்கமான, நல்ல நல்ல குழந்தைகள் கூட
முழுமையாக புரிந்துகொள்வதில்லை. பிரம்மாவுக்குள் சிவபாபா
வருகின்றார் என்பதையே மறந்து விடுகிறார்கள். ஏதாவது டைரக்ஷன்
கொடுத்தால், சிவபாபா டைரக்ஷன் கொடுக்கின்றார் என்று புரிந்து
கொள்வ தில்லை. முழு நாளும் சிவபாபாவை மறந்தே இருக்கிறார்கள்.
முழுமையாக புரிந்து கொள்ளாத காரணத்தினால் அந்த காரியத்தைச்
செய்வ தில்லை. மாயை நினைவு செய்ய விடுவதில்லை. அவருடைய நினைவு
நிலையாக இருப்ப தில்லை. முயற்சி செய்து-செய்து கடைசியில் அந்த
நிலை கண்டிப்பாக ஏற்பட வேண்டும். இந்த சமயத்தில் கர்மாதீத்
நிலையை அடையக்கூடியவர்கள் யாருமே இல்லை. பாபா என்னவாக
இருக்கிறார், எப்படி இருக்கின்றார் என்று அவரை தெரிந்து
கொள்வதற்கு பரந்த புத்தி வேண்டும்.
பாப்தாதா கம்பளி ஆடை அணிவாரா என்று உங்களிடம் கேட்பார்கள்?
இருவருக்குமே அணியப் பட்டுள்ளது. நான் குளிரைபோக்கும் ஆடை
அணிவதில்லை என்ன என்று சிவபாபா சொல்வார். எனக்கு குளிர்வதில்லை
என்று சொல்வார். யாருக்குள் பிரவேசித்திருக்கிறேனோ அவருக்கு
குளிரும். எனக்கு பசியோ, தாகமோ ஏற்படாது. (என் மீது எதுவும்
ஒட்டாது) நான் எதனாலும் பாதிக்கப்பட மாட்டேன் சேவை செய்து
கொண்டே யிருந்தாலும் கூட நான் இவற்றிலிருந்து விடுபட்டவனாக
இருக்கின்றேன். நான் சாப்பிடுவதோ, அருந்துவதோ இல்லை. நான்
சாப்பிடுவ தில்லை, எதையும் அருந்துவதுமில்லை................
என்று ஒரு சாது கூட சொன்னார் அல்லவா. அவர் செயற்கையான வேடத்தை
தாரணை செய்து கொண்டார். நிறைய பேர் தேவதைகளின் பெயர் வைத்திருக்
கிறார்கள். வேறு எந்த தர்மத்திலும் தேவி-தேவதைகளாக ஆவதில்லை.
இங்கே எவ்வளவு கோயில்கள் இருக் கின்றன. வெளியில் ஒரு
சிவபாபாவைத் தான் ஏற்றுக் கொள்கிறார்கள். தந்தை ஒருவர் தான்
இருக்கின்றார் என்று புத்தியும் கூறுகிறது. தந்தையிட மிருந்து
தான் ஆஸ்தி கிடைக்கிறது. கல்பத்தின் இந்த புருஷோத்தம
சங்கமயுகத்தில் தான் பாபா விடமிருந்து ஆஸ்தி கிடைக்கிறது என்று
குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இருக்கிறது. நாம்
சுகதாமத்திற்குச் செல்லும்போது மற்ற அனைவரும் சாந்திதாமத்தில்
இருக்கிறார்கள். உங்களில் கூட இந்த புரிதல் வரிசைகிரமமாகத் தான்
இருக்கிறது. ஒருவேளை ஞான சிந்தனை யில் இருக்கிறார்கள் என்றால்
அவர்களுடைய பேச்சில் அது வெளிவரும். நீங்கள் பாபாவின் மூலம்
ஞானமும்-யோகமும் நிறைந்தவர் களாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் யோகி களாகவும் இருக்கிறீர்கள் மற்றும் ஞானிகளாகவும்
இருக்கிறீர்கள். நாங்கள் ரூப்-பசந்தாக (யோகம்-ஞானம்
நிறைந்தவர்களாக) இருக்கின்றோம் என்று உலகத்தில் யாரும் சொல்ல
முடியாது. நீங்கள் இப்போது படித்துக் கொண்டிருக்கிறீர்கள்,
கடைசி வரை வரிசைக்கிரமமான முயற்சியின்படி படித்து விடுவீர்கள்.
சிவபாபா ஆத்மாக்களாகிய நமக்கு தந்தை அல்லவா. இது கூட மனதில்
வருகிறது அல்லவா. பக்திமார்க்கத்தில் குறைவாகவே மனதில் படுகிறது.
நீங்கள் இங்கே முன்னால் அமர்ந்துள்ளீர் கள். பாபா மீண்டும்
இந்த சமயத்தில் தான் வருவார், வேறு எந்த சமயத்திலும் பாபா
வருவதற்கான அவசியமே இல்லை என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள்.
சத்யுகத்திலிருந்து திரேதாயுகம் வரை அவர் வர வேண்டியதில்லை.
துவாபர யுகத்திலிருந்து கலியுகம் வரை கூட வர வேண்டியதில்லை.
அவர் கல்பத்தின் சங்கமயுகத்தில் தான் வருகின்றார். பாபா ஏழைப்
பங்காளன் ஆவார், அதாவது துக்கமுடையதாக ஏழ்மை நிலையை அடைந்து
விட்ட முழு உலகத்திற்கு தந்தையாக இருக்கின்றார். இவருடைய மனதில்
என்ன இருக்கும்? நான் ஏழை பங்காளனாக இருக்கின்றேன். அனைவருடைய
துக்கம் அல்லது ஏழ்மை போய்விட வேண்டும் என்பது இருக்கும். அது
ஞானம் இல்லாமல் குறைய முடியாது. மற்றபடி ஆடை போன்றவை களை
கொடுப்பதினால் யாரும் செல்வந்தர்களாக ஆகி விட மாட்டார்கள்
அல்லவா. ஏழைகளை பார்த்தவுடன் இவர்களுக்கு ஆடை கொடுக்க வேண்டும்
என்று மனதில் வரலாம், ஏனென்றால் நான் ஏழைப்பங்காளன் என்ற நினைவு
வருகிறது அல்லவா. கூடவே இதையும் புரிந்து கொள்கிறேன் -
ஏழைப்பங்காளனான நான் இந்த ஆதிவாசிகளுக்காக மட்டும் இல்லை.
ஏழைப்பங்காளனான நான் முற்றிலும் தூய்மையற்றவர்களை
தூய்மையாக்குகின்றேன். நான் தூய்மையற்றவர்களை தூய்மை யாக்கு
பவனாவேன். நான் ஏழைப் பங்காளன் ஆனால் பணம் போன்றவைகளை எப்படி
கொடுப்பேன். பணம் போன்றவற்றை கொடுப்பவர்கள் உலகத்தில் நிறைய
பேர் இருக்கிறார்கள். நிறைய பணத்தை ஒதுக்குகிறார்கள், அவற்றை
அனாதை ஆசிரமம் போன்ற இடங்களுக்கு அனுப்பு கிறார்கள். அநாதைகள்
இருக்கிறார்கள் அதாவது யாருக்கு தலைவன் (பாதுகாப்பவர்) இல்லையோ
அப்படிப்பட்டவர்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்துள்ளனர். அநாதை
என்றால் ஏழைகள். உங்களுக்கும் கூட நாதன் இல்லை அதாவது தந்தை
இருக்கவில்லை. நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள், ஞானம் இல்லை.
யாருக்கு ஞானம் மற்றும் யோகம் இல்லையோ, அவர்கள் ஏழைகள்,
அநாதைகள் ஆவர். யார் யோகம் மற்றும் ஞானம் நிரம்பியவர்களோ
அவர்களை அனைத்தும் உள்ளவர்கள் என்று சொல்லப்படுகிறது. அனைத்தும்
பெற்றவர்கள் என்று செல்வந்தர்களையும் அநாதைகள் என்று ஏழை
களையும் சொல்லப்படுகிறது. அனைவரும் ஏழைகள், ஏதாவது கொடுக்க
வேண்டும் என்று உங்களுடைய புத்தியில் இருக்கிறது. பாபா
ஏழைப்பங்காளன் எனும்போது செல்வந்தர்களாக ஆகும்படியான பொருள்
எதையாவது கொடுக்க வேண்டும் என்று சொல்வார். மற்றபடி இந்த
துணிகள் கொடுப்பது பொதுவான விசயமாகும். நாம் ஏன் அதில் ஈடுபட
வேண்டும். நாம் அவர்களை அநாதை யிலிருந்து அனைத்தும்
உள்ளவர்களாக ஆக மாற்றி விடலாமே. சிலர் எவ்வளவு தான்
கோடீஸ்வரர்களாக இருக்கட்டும், ஆனால் அது கூட
அல்பகாலத்திற்கானதாகும். இந்த உலகமே அநாதைகளின் உலகமாகும்.
பணமுடையவர்கள் இருக்கிறார்கள், அது கூட அல்பகாலத் திற்கானதாகும்.
அங்கு எப்போதுமே செல்வந்தர்களாக இருப்பர். அங்கே இதுபோல்
காரியங்களைச் செய்ய மாட்டார்கள். இங்கே எவ்வளவு ஏழைகளாக
இருக்கிறார்கள். யாரிடம் செல்வம் இருக்கிறதோ, அவர்களுக்கு நாம்
சொர்க்கத்தில் இருக்கின்றோம் என்ற போதை ஏறியுள்ளது. ஆனால்
அப்படி இல்லை, என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். இந்த
சமயத்தில் எந்த மனிதர்களும் செல்வந்தர்கள் இல்லை, அனைவருமே
ஏழைகளே ஆவர். இந்த பணம் போன்றவை அனைத்தும் மண்ணோடு மண்ணாகக்
கூடியதாகும். நம்மிடம் இருக்கும் செல்வத்தில் நம்முடைய மகன்,
பேரன் போன்றவர்கள் வரை அனுபவிப்பார்கள் என்று மனிதர்கள்
நினைக்கிறார்கள். பரம்பரையாக இந்த செல்வம் இருக்கும் என்று
நினைக்கிறார்கள். ஆனால் அப்படி நடப்பதில்லை. இவை யனைத்தும்
அழிந்து விடும், ஆகையினால் உங்களுக்கு இந்த முழு பழைய உலகத்தின்
மீதும் வைராக்கியம் இருக்கிறது.
புதிய உலகத்தை சொர்க்கம் என்றும், பழைய உலகத்தை நரகம் என்றும்
சொல்லப்படுகிறது என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். பாபா உங்களை
புதிய உலகத்திற்காக செல்வந்தர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்.
இந்த பழைய உலகம் அழியப்போகிறது. பாபா எவ்வளவு செல்வந்தர் களாக
ஆக்குகின்றார். இந்த லஷ்மி- நாராயணன் எப்படி
செல்வந்தர்களானார்கள்? யாராவது செல்வந்தர்களிடம் இருந்து ஆஸ்தி
கிடைத்ததா அல்லது சண்டையிட்டார்களா? எப்படி மற்றவர்கள் ராஜ
சிம்மாசனத்தை அடைகிறார்களோ, அப்படி ராஜ சிம்மாசனத்தை
அடைந்தார்களா என்ன? அல்லது கர்மங்களின் படி இந்த செல்வம்
கிடைத்ததா? பாபா கர்மம் சொல்லிக் கொடுப்பதே தனிப்பட்டதாகும்.
கர்மம்-அகர்மம்-விகர்மம் என்ற வார்த்தைகள் கூட தெளிவாக
இருக்கிறது அல்லவா. சாஸ்திரங்களில் சில வார்த்தைகள் மாவில்
உப்பு சேர்ப்பதைப் போல் கொஞ்சம் நல்ல வார்த்தைகளாக இருக்கின்றன.
கோடிக்கணக்கான மனிதர்கள் எங்கே, அதில் 9 லட்சம் என்பது எங்கே
இருக்கிறது. கால் சதவீதம் கூட இல்லை. எனவே இதைத் தான் மாவில்
உப்பு இருப்பதைப் போல் என்று சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும்
வினாசமாகி விடுகிறது. மிகவும் குறைவான வர்களே சங்கமயுகத்தில்
இருக்கிறார்கள். சிலர் முதலிலேயே சரீரத்தை விட்டு விட்டு சென்று
விடுகிறார்கள். பிறகு அவர்கள் தேவதைகளை வரவேற்பார்கள். எப்படி
முகலி என்ற குழந்தை இருந்தார், நல்ல குழந்தையாக இருந்தார்
எனும்போது நிச்சயமாக நல்ல வீட்டில் பிறவி எடுத்திருப்பார்.
வரிசைக்கிரமமாக சுகத்தில் தான் பிறவி எடுக்கிறார்கள். அவர்கள்
சுகத்தை அடைய வேண்டும், கொஞ்சம் துக்கத்தையும் அடைய வேண்டும்.
கர்மாதீத் நிலை என்பது யாருக்கும் ஏற்படவில்லை. மிகவும் சுகம்
நிறைந்த வீட்டில் சென்று பிறவி எடுப்பார்கள். இங்கே சுகம்
நிறைந்த வீடு இல்லை என்று நினைக்காதீர்கள். நிறைய நல்ல
குடும்பங்கள் இருக்கின்றன, கேட்கவே கேட்காதீர்கள். பாபா
பார்த்திருக்கின்றார். ஒரே வீட்டில் மருமகள்கள் ஒன்றாக சேர்ந்து
அப்படியொரு அமைதியாக இருக்கிறார்கள், அனைவரும் ஒன்றாக பக்தி
செய்கிறார்கள், கீதை படிக்கிறார்கள்.....இவ்வளவு பேர் அனைவரும்
ஒன்றாக இருக்கிறீர்களே, சண்டை எதுவும் நடக்காதா என்று பாபா
கேட்டார்! எங்களிடம் சொர்க்கமே இருக்கிறது, நாங்கள் அனைவரும்
ஒற்றுமையாக இருக்கிறோம். ஒருபோதும் சண்டையிடுவதில்லை, அமைதியாக
இருக்கின்றோம் என்று சொன்னார்கள். இது எங்களுக்கு சொர்க்கத்தைப்
போல் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படி என்றால்
கண்டிப்பாக சொர்க்கம் கடந்து போய் விட்டது ஆகையினால் தான்
சொர்க்கத்தைப் போல் இருக்கிறது என்று சொல்கிறார்கள் அல்லவா?
ஆனால் இங்கே நிறைய பேருடைய சுபாவம் சொர்க்கவாசி ஆவதைப் போல்
தெரிய வில்லை. தாச-தாசிகளும் கூட உருவாக வேண்டும் அல்லவா. இங்கே
இராஜ்யம் ஸ்தாபனை ஆகின்றது. மற்றபடி யார் பிராமணர்களாக
ஆகின்றார் களோ, அவர்கள் தெய்வீக வம்சத்தில் வரக்கூடியவர்களாவர்.
ஆனால் வரிசைகிரமமாக வருவார் கள். சிலர் மிகவும்
இனிமையானவர்களாக இருக்கிறார்கள், அனைவர் மீதும் அன்பு பாராட்டு
வார்கள். ஒரு போதும் யார்மீதும் கோபப்பட மாட்டார்கள்.
கோபப்படுவதின் மூலம் துக்கம் ஏற்படு கிறது. யார்
மனம்-சொல்-செயலின் மூலம் யாருக்கும் துக்கம் கொடுத்துக் கொண்டே
இருக்கிறார் களோ, அவர்களை துக்கமுடைய ஆத்மா என்று
சொல்லப்படுகிறது. எப்படி புண்ணிய ஆத்மா, பாவாத்மா என்று
சொல்கிறார்கள் அல்லவா. சரீரத்தை வைத்து சொல்கிறார்களா என்ன?
உண்மையில் ஆத்மா தான் அப்படி ஆகிறது, அனைத்து பாவாத்மாக்களும்
கூட ஒரே மாதிரி இருப்பதில்லை. புண்ணிய ஆத்மாக்களும் ஒரே மாதிரி
இருப்பதில்லை. வரிசைக் கிரமமான முயற்சியின்படி இருக்கிறார்கள்.
மாணவர்கள் அவர்களே புரிந்து கொள்ள முடியும் அல்லவா, நம்முடைய
குணங்கள், மனோ நிலை எப்படி இருக்கிறது? நாம் எப்படி நடந்து
கொள்கிறோம்? அனைவரிடமும் அன்பாக பேசுகிறோமா? யாராவது ஏதாவது
சொன்னால் நாம் தலைகீழாக பதில் சொல்கிறோமா? பாபாவிடம் நிறைய
குழந்தைகள் கேட்கிறார்கள் - குழந்தையின் மீது கோபம் வந்து
விடுகிறது. எவ்வளவு முடியுமோ அவ்வளவு அன்போடு காரியத்தைச்
செய்யுங்கள். சிறிய குழந்தைகளை மாற்றுவதற்கு காதை
பிடிக்கிறார்கள். கிருஷ்ணரைப் பற்றி சொல்கிறார்கள் அல்லவா, அவரை
உரலில் கட்டிப் போட்டார்கள் என்று. இது கூட இந்த சமயத்தினுடைய
விசயமாகும். சிறிய குழந்தைகள் தொந்தரவு செய்கிறார்கள் என்றால்
கட்டிலில் அல்லது மரத்தில் கட்டிப் போட்டுவிடுங்கள்.
அடிக்காதீர்கள். இல்லையென்றால் அவர்களும் அப்படி கற்றுக்
கொள்வார்கள். கட்டிப்போடுவது சரியானதாகும். குழந்தைகள் வளர்ந்து
தாய்-தந்தையரை கட்டிப் போடுவானா என்ன? இது குழந்தைகளுக்கான
பாடமாகும். அதிகம் தொந்தரவு செய்கிறார்கள் என்றால் காதை
பிடிக்கலாம். சில குழந்தைகள் அதிக கஷ்டம் கொடுத்து
விடுகிறார்கள். பற்றற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
நாம் இந்த லஷ்மி-நாராயணனைப் போல் ஆக வேண்டும் என்பதை நீங்கள்
புரிந்து கொள்கிறீர்கள். குறிக்கோள் முன்னால் இருக்கிறது.
எவ்வளவு உயர்ந்த குறிக்கோளாக இருக்கிறது. படிப்பிக்கக் கூடியவர்
உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார். ஸ்ரீகிருஷ்ணருடைய மகிமையை
எவ்வளவு பாடுகிறார்கள் - சர்வகுணங்களும் நிறைந்தவர், 16
கலைகளும் முழுமையானவர்...... நாம் இப்போது அப்படி ஆகிக்
கொண்டிருக்கிறோம் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். நீங்கள்
இங்கு வந்திருப்பதே இப்படி ஆவதற்காகவே ஆகும். உங்களுடைய இந்த
உண்மையான சத்திய நாராயண கதையே நரனிலிருந்து நாராயணனாக
ஆவதற்கானதாகும். இது அமரபுரிக்குச் செல்வதற்கான அமர கதையாகும்.
சன்னியாசிகள் போன்ற யாரும் இந்த விசயங்களை தெரிந்திருக்கவில்லை.
எந்தவொரு மனிதனையும் ஞானக்கடல் என்றோ தூய்மையற்றவர்களை
தூய்மையாக்குபவர் என்றோ சொல்ல முடியாது. முழு உலகமுமே
தூய்மையற்றதாக இருக்கும்போது நாம் யாரை தூய்மையற்றவர்களை தூய்மை
யாக்குபவர் என்று சொல்வது? இங்கே யாருமே புண்ணிய ஆத்மாக்களாக
இருக்க முடியாது. இந்த உலகம் தூய்மையற்றது என்று பாபா புரிய
வைக்கின்றார். ஸ்ரீகிருஷ்ணர் முதல் நம்பர் ஆவார். அவரைக் கூட
பகவான் என்று சொல்ல முடியாது. பிறப்பு-இறப்பு இல்லாதவர் ஒரேயொரு
நிராகார தந்தையே ஆவார். சிவ பரமாத்மாய நமக என்று பாடப் படுகிறது,
பிரம்மா-விஷ்ணு சங்கரை தேவதைகள் என்று சொல்லி பிறகு சிவனை
பரமாத்மா என்று சொல்கிறார்கள். எனவே சிவன் அனைவரிலும்
உயர்ந்தவர் ஆகிறார் அல்லவா. அவர் அனை வருக்கும் தந்தையாவார்.
ஆஸ்தி கூட தந்தையிடமிருந்து தான் கிடைக்கிறது, சர்வவியாபி என்று
சொல்வதின் மூலம் ஆஸ்தி கிடைப்பதில்லை. பாபா சொர்க்கத்தை ஸ்தாபனை
செய்பவர் எனும்போது கண்டிப்பாக சொர்க்கத்தின் ஆஸ்தியை தான்
தருவார் அல்லவா. இந்த லஷ்மி-நாராயணன் முதல் நம்பர் ஆவர்.
படிப்பின் மூலம் இந்த பதவியை அடைந்தார்கள். பாரதத்தின் பழமையான
இராஜயோகம் ஏன் புகழ்பெற்றதாக இருக்காது. இராஜயோகத்தின் மூலம்
மனிதர்கள் உலகத்திற்கு எஜமானர்களாக ஆகின்றார்கள், அதனை சகஜ
இராஜயோகம் மற்றும் சகஜ ஞானம் என்று சொல்லப்படுகிறது. இது
மிகவும் சகஜமானதாகும், ஒரு பிறவியின் முயற்சியின் மூலம் எவ்வளவு
பலன் கிடைத்து விடுகிறது. பக்தி மார்க்கத்தில் ஒவ்வொரு
பிறவியிலும் ஏமாற்றம் அடைந்து வந்தீர்கள், எதுவும்
கிடைப்பதில்லை. இது ஒரு பிறவியிலேயே கிடைத்து விடுகிறது
ஆகையினால் சகஜமானது என்று சொல்லப்படுகிறது. ஒரு வினாடியில்
ஜீவன்முக்தி என்று சொல்லப்படுகிறது. இன்றைக்கு பாருங்கள்
எப்படி-எப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள் வந்து கொண்டி ருக்கின்றன.
அறிவியல் கூட அதிசயமானதாக இருக்கிறது. அமைதியின் அதிசயம் கூட
எப்படி இருக்கிறது என்று பாருங்கள். இங்கே எதுவுமே இல்லை.
நீங்கள் அமைதியாக அமந்துள்ளீர்கள், வேலை போன்றவைகளையும்
செய்கிறீர்கள், கைகள் காரியம் செய்கிறது, புத்தி பாபாவை நினைவு
செய்கிறது.......... காதலன் காதலி கூட பாடப்பட்டுள்ளார்கள்
அல்லவா. அவர்கள் ஒருவர் மற்றவருடைய முகத்தோற்றம் மீது காதல்
வசப்பட்டிருக் கிறார்கள், விகாரத்தினுடைய விசயம் இருப்பதில்லை.
எங்கு அமர்ந்திருந்தாலும் நினைவு வந்து விடும். ரொட்டி
சாப்பிட்டுக் கொண்டி ருப்பார்கள், முன்னால் அவர்களை பார்த்துக்
கொண்டிருப்பார்கள். கடைசியில் உங்களுடைய நிலை இப்படி ஆகி விடும்.
பாபாவை மட்டுமே நினைவு செய்து கொண்டிருப்பீர்கள். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) மழை மேகங்கள் (ரூப்-பஸந்தாக- யோகம் மற்றும் ஞானம்
நிரம்பியவர்களாக) ஆகி வாயிலிருந்து எப்போதும் சுகம்தரக் கூடிய
வார்த்தைகளையே பேச வேண்டும், துக்கம் கொடுப்பவர்களா ஆகக்கூடாது.
ஞானத்தினுடைய சிந்தனைகளில் இருக்க வேண்டும், வாயிலிருந்து ஞான
ரத்தினங்களே வர வேண்டும்.
2) பற்றற்றவர்களாக ஆக வேண்டும், ஒவ்வொருவரிடமும் அன்போடு வேலை
வாங்க வேண்டும் கோபப்படக் கூடாது. பாதுகாப்பற்றவர்களை
பாதுகாப்புள்ளவர்களாக (சிவபாபா குழந்தை களாக்கும்) சேவை செய்ய
வேண்டும்.
வரதானம்:
தனது பரிஸ்தா நிலை மூலமாக கதி, சத்கதியெனும் பிரசாதம் வழங்கி
மாஸ்டர் கதி, சத்கதி வள்ளல் ஆகுக !
நிகழ்காலத்தில் உலகில் அனேக ஆத்மாக்கள் இன்னல்களின் வசமாகி
கதறுகின்றனர். சிலர் விலைவாசி ஏற்றத்தால், சிலர் பட்டினியால்,
சிலர் உடல் வியாதியால் சிலர் மனம் அமைதி யின்மையால்.... அனைவர்
பார்வையும் அமைதியின் சிகரத்தின் பக்கம் திரும்புகின்றது.
எல்லோரும் இந்த அழு குரலுக்குப்பின் வெற்றி முழக்கம் எப்போது
முழங்கும் என பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இப்போது
மன்னுலகில் பரிஸ்தா ரூபத்தின் மூலமாக உலகின் துக்கத்தை தூர
விலக்குங்கள். மாஸ்டர் கதி சத்கதி (முக்தி ஜீவன் முக்தி) யின்
வள்ளலாகி பக்தர்களுக்கு கதி, சத்கதியெனும் பிரசாதம் வழங்குங்கள்.
சுலோகன்:
எந்த வித இன்னலாலும் மனம் ஆடிவிடாத அளவிற்கு சக்திசாலியயான மனதை
வைத்துக் கொள்ளுங்கள்.
அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது சம்பன்னம் மற்றும் கர்மாதீத்
ஆவதற்காக தீவிர ஆர்வத்துடன் செயல்படுங்கள்.
இப்போது சேவையெனும் கர்ம பந்தனத்திலும் வராதீர்கள். எனது இடம்,
எனது சேவை எனது மாணவர், எனது ஒத்துழைப்பாளர் இவைகளும் சேவையின்
கர்ம பந்தனமே ஆகும். இதி-ருந்தும் விடுபட்டு கர்மாதீத் நிலை
அடைக. கர்மாதீத் நிலை அடைவது மற்றும் இது அதுவே இதுவே எல்லாம்
என்பதை உணரச் செய்த ஆத்மாக்களை குறிக்கோளின் அருகே கொண்டு
வாருங்கள்.