23-06-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! உங்களுடைய முதன்
முதல் பாடமாவது: நான் ஆத்மா, சரீரம் அல்ல. (ஆத்ம அபிமானி) ஆத்ம
உணர்வுடையவராகி இருந்தீர்கள் என்றால் தந்தையின் நினைவு
இருக்கும்.
கேள்வி:
மனிதர்களிடம் இல்லாத எந்த ஒரு
மறைமுகமான பொக்கிஷம் குழந்தைகளாகிய உங்களிடம் உள்ளது?
பதில்:
உங்களுக்கு பகவான் தந்தை
கற்பிக்கிறார். அந்தப் படிப்பினுடைய குஷியின் (குப்த கஜானா)
மறைமுகமான பொக்கிஷம் உங்களிடம் உள்ளது. நாம் கற்றுக்
கொண்டிருப்பது வருங்கால அமர லோகத்திற் காகவேயன்றி, இந்த மரண
உலகத்திற்காக அல்ல என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். அதிகாலை
எழுந்து தாராளமாக உலாவுங்கள், சுற்றுங்கள், ஆனால் முதன் முதலான
பாடத்தை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் குஷியின் பொக்கிஷம்
சேமிப்பு சேர்ந்து கொண்டே போகும் என்று தந்தை கூறுகிறார்.
ஓம் சாந்தி.
குழந்தைகளே ! ஆத்ம அபிமானியாக ஆகி அமர்ந்துள்ளீர்களா என்று
தந்தை குழந்தை களிடம் கேட்கிறார். தன்னை ஆத்மா என்று உணர்ந்து
அமர்ந்துள்ளீர்களா? ஆத்மாக்களாகிய நமக்கு பரமாத்மா தந்தை
கற்ப்பித்துக் கொண்டிருக்கிறார். நாம் தேகம் அல்ல ஆத்மா ஆவோம்
என்ற நினைவு குழந்தைகளுக்கு வந்துள்ளது. குழந்தைகளை ஆத்ம
அபிமானியாக ஆக்குவதற்காகத் தான் உழைப்பு செய்ய வேண்டி உள்ளது.
குழந்தைகளால் ஆத்ம அபிமானியாக இருக்க முடிவ தில்லை. அடிக்கடி
தேக அபிமானத்தில் வந்து விடுகிறார்கள். எனவே ஆத்ம அபிமானியாக
ஆகி இருக்கிறீர்களா என்று பாபா கேட்கிறார். ஆத்ம அபிமானியாக
இருந்தீர்கள் என்றால் தந்தையின் நினைவு வரும் தேக அபிமானியாக (தேக
உணர்வில்) இருந்தீர்கள் என்றால் லௌகீக உறவினர் கள் நினைவிற்கு
வருவார்கள். முதன் முதலில் நாம் ஆத்மா ஆவோம் என்ற வார்த்தையை
நினைவில் கொள்ள வேண்டும். ஆத்மாவாகிய எனக்குள் தான் 84
பிறவிகளின் பாகம் நிரம்பி உள்ளது. இதை உறுதிப்படுத்த வேண்டும்.
நாம் ஆத்மா ஆவோம். அரைக் கல்பம் நீங்கள் தேக அபிமானியாக
இருந்தீர்கள். இப்பொழுது சங்கம யுகத்தில் மட்டுமே குழந்தைகளை
ஆத்ம அபிமானியாக (ஆத்ம உணர்வுள்ளவர்களாக) ஆக்கப்படுகிறது. தன்னை
தேகம் என்று நினைப் பதால் தந்தை நினைவிற்கு வரமாட்டார். எனவே
முதன் முதலில் ஆத்மாக்களாகிய நாம் எல்லை யில்லாத தந்தையின்
குழந்தைகள் ஆவோம் என்ற இந்தப் பாடத்தை பக்குவப்படுத்திக்
கொள்ளுங் கள். தேகத்தின் தந்தையை நினைவு செய்ய ஒரு பொழுதும்
கற்பிக்கப்படுவது இல்லை. பரலோக தந்தையாகிய என்னை நினைவு
செய்யுங்கள். ஆத்ம அபிமானி ஆகுங்கள் என்று இப்பொழுது தந்தை
கூறுகிறார். தேக அபிமானி ஆகும் பொழுது தேகத்தின் சம்பந்தங்கள்
நினைவிற்கு வரும். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு
செய்யுங்கள். இது தான் உழைப்பு ஆகும். இதை யார் புரிய வைத்துக்
கொண்டிருக்கிறார்? ஆத்மாக்களாகிய நமது தந்தை. அவரைத் தான் பாபா
வாருங்கள், வந்து இந்த துக்கத்திலிருந்து (லிபரேட்)
விடுவியுங்கள் என்று எல்லோரும் நினைவு செய்கிறார்கள். இந்தக்
கல்வியின் மூலம் நாம் வருங்காலத்தில் உயர்ந்த பதவி அடை கிறோம்
என்பதைக் குழந்தைகள் அறிந்துள்ளார்கள்.
இப்பொழுது நீங்கள் புருஷோத்தம சங்கமயுகத்தில் உள்ளீர்கள். இந்த
மரண உலகத்தில் இப்பொழுது முற்றிலும் இருக்க வேண்டியது இல்லை.
இந்த நம்முடைய படிப்பு இருப்பதே வருங்கால 21 பிறவிகளுக்காக.
நாம் சத்யுகம், அமரலோகத்திற்காகப் படித்து கொண்டிருக்கிறோம்.
அமர பாபா நமக்கு ஞானம் கூறிக் கொண்டிருக் கிறார். எனவே இங்கு
அமரும் பொழுது முதன் முதலில் தன்னை ஆத்மா என்று உணர்ந்து,
தந்தையின் நினைவில் இருக்க வேண்டும். அப்பொழுது விகர்மங்கள்
விநாசம் ஆகும் (பாவங்கள் நீங்கி விடும்). நாம் இப்பொழுது சங்கம
யுகத்தில் இருக்கிறோம். பாபா நம்மை புருஷோத்தமராக ஆக்கிக்
கொண்டிருக்கிறார். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள்
புருஷோத்தமராக ஆகி விடுவீர்கள் என்று கூறுகிறார். நான் மனிதனை
தேவதையாக ஆக்க வந்துள்ளேன். சத்யுகத்தில் நீங்கள் தேவதையாக
இருந்தீர்கள். இப்பொழுது எப்படி படி இறங்கி வந்துள்ளோம் என்பதை
அறிந்துள்ளீர்கள். நமது ஆத்மாவில் 84 பிறவிகளின் பாகம் பொருந்தி
உள்ளது. உலகத்தில் யாருமே அறியாமல் உள்ளார்கள். அந்த பக்தி
மார்க்கம் தனியானது. இந்த ஞான மார்க்கம் தனியானதாகும். எந்த
ஆத்மாக்களுக்கு தந்தை கற்பிக்கிறாரோ அவர்களுக்குத் தெரியும்
வேறு யாருக்குமே தெரியாது. இது வருங்காலத்திற்கான மறைமுகமான
கஜானா ஆகும். நீங்கள் படிப்பதே அமர லோகத்திற்காக, இந்த மரண
உலகத்திற் காக அல்ல. இப்பொழுது தந்தை கூறுகிறார், அதிகாலையில்
எழுந்து சுற்றுங்கள், உலாவுங்கள். முதன் முதல் பாடமான இதை
நினைவு செய்யுங்கள், நான் ஆத்மா, சரீரம் அல்ல. நமது ஆன்மீக பாபா
நமக்குக் கற்பிக்கிறார். இந்த துக்கமான உலகம் இப்பொழுது மாறப்
போகிறது. சத்யுகம் என்பது சுகத்தின் உலகம். புத்தியில் முழு
ஞானம் உள்ளது. இது ஆன்மீக (ஸ்பிரிச்சுவல் நாலேஜ்) ஞானம் ஆகும்.
தந்தை ஞானக்கடல் (ஸ்பிரிச்சுவர் ஃபாதர்) ஆன்மீகத் தந்தை ஆவார்.
அவர் (தேஹீ) ஆத்மாவின் தந்தை ஆவார். மற்றவர்கள் எல்லோருமே
தேகத்தினுடையதே உறவினர்கள் ஆவார்கள். இப்பொழுது தேகத்தின்
சம்பந்தத்தை விடுத்து ஒருவரிடம் இணைக்க வேண்டும். என்னுடையவரோ
ஒருவரைத் தவிர வேறு யாரும் இல்லை என்று பாடவும் செய்கிறார்கள்.
நாம் ஒரு தந்தையைத் தான் நினைவு செய்கிறோம். தேகத்தைக் கூட
நினைவு செய்வது இல்லை. இந்தப் பழைய தேகத்தையோ விட வேண்டி உள்ளது.
இந்த சரீரத்தை எப்படி விட வேண்டும் என்ற இந்த ஞானம்
உங்களுக்குக் கிடைக்கிறது. நினைவு செய்து செய்து சரீரத்தை
விட்டு விட வேண்டும். எனவே தேஹீ அபிமானி ஆகுங்கள் என்று பாபா
கூறுகிறார். தங்களுக்குள் அரைத்து (சிந்தனை) கொண்டே இருக்க
வேண்டும் - தந்தை, விதை மற்றும் விருட்சத்தை நினைவு செய்ய
வேண்டும். சாஸ்திரங்களில் இந்த கல்ப விருட்சத்தின் உதாரணம்
உள்ளது.
நமக்கு ஞானக் கடலான தந்தை கற்பிக்கிறார் என்பதையும் குழந்தைகள்
அறிந்துள்ளார்கள். எந்த ஒரு மனிதனும் படிப்பிப்பதில்லை. இதை
உறுதிப்படுத்திக் கொண்டு விட வேண்டும். படிக்கவோ வேண்டி உள்ளது
அல்லவா? சத்யுகத்தில் கூட தேகதாரிகள் கற்பிக்கிறார்கள். இவர்
தேகதாரி அல்ல. இவர் கூறுகிறார், நான் பழைய தேகத்தின் ஆதாரம்
எடுத்து உங்களுக்கு கற்பிக்கிறேன். கல்ப கல்பமாக நான்
உங்களுக்கு இது போல கற்பிக்கிறேன். பிறகு கல்பத்திற்குப்
பின்னரும் இது போல கற்பிப்பேன். இப்பொழுது என்னை நினைவு
செய்யுங்கள். அப்பொழுது உங்களது விகர்மங் கள் விநாசம் ஆகும்.
நான் தான் பதீத பாவனன் ஆவேன். என்னைத் தான் சர்வ சக்திவான்
என்று கூறுகிறார்கள். ஆனால் மாயை கூட குறைந்தது அல்ல. அதுவும்
சக்திவான் ஆகும். எங்கிருந்து வீழ்த்தி உள்ளது! இப்பொழுது
நினைவிற்கு வருகிறது அல்லவா? 84 சக்கரத் தினுடையதும் மகிமை
உள்ளது. இது மனிதர்களுடைய விஷயம் தான் ஆகும். நிறைய பேர்
மிருகங்களுக்கு என்ன ஆகும் என்று கேட்கிறார்கள். அட, இங்கு
மிருகங்களின் விஷயம் இல்லை. தந்தை கூட குழந்தைகளிடம் பேசுகிறார்.
வெளியில் இருப்பவர்களோ தந்தையை அறியாமலேயே இருக்கிறார்கள். எனவே
அவர்கள் என்ன பேசுவார்கள்? ஒரு சிலர் நாங்கள் பாபாவை சந்திக்க
விரும்புகிறோம் என்பார்கள். இப்பொழுது அவர்களுக்கு ஒன்றுமே
தெரியாது. தப்பும் தவறுமான கேள்விகள் கேட்பார்கள். 7 நாட்கள்
பாட முறை பயின்ற பிறகும் கூட இவர் நமது எல்லையில்லாத தந்தை
ஆவார் என்பதைக் கூட முழுமையாக ஒன்றும் புரிந்து கொள்வதில்லை.
யார் பழைய பக்தர்களோ, யார் முழுமையாக பக்தி செய்துள்ளார்களோ
அவர்களது புத்தியிலோ ஞானத்தின் அனைத்து விஷயங் களும் பதிந்து
விடுகிறது. பக்தி குறைவாக செய்திருந்தால் புத்தியில் குறைவாகப்
பதியும். நீங்கள் எல்லோரையும் விட அதிகமான பழைய பக்தர்கள்
ஆவீர்கள். பகவான் பக்தியின் பலனை அளிக்க வருகிறார் என்று
பாடவும் படுகிறது. ஆனால் இது யாருக்காவது தெரியுமா என்ன? ஞான
மார்க்கம் மற்றும் பக்தி மார்க்கம் முற்றிலுமே தனியானதாகும்.
முழு உலகம் பக்தி மார்க்கத்தில் உள்ளது. கோடியில் ஒருவர் வந்து
இதைக் கற்கிறார். விளக்கவுரையோ மிகவும் இனிமையானது! 84 பிறவி
களின் சக்கரத்தைக் கூட மனிதர்கள் தான் அறிந்து கொள்வார்கள்
அல்லவா? இதற்கு முன்பு நீங்கள் எதுவும் தெரியாமல் இருந்தீர்கள்.
சிவனைக் கூட அறியாமல் இருந்தீர்கள். சிவனுடைய கோவில் கள்
எவ்வளவு ஏராளமாக உள்ளன. சிவனுக்கு பூஜை செய் கிறார்கள், ஜலம்
தெளிக்கிறார்கள், சிவாய நமஹ என்கிறார்கள். ஏன் பூஜை
செய்கிறார்கள்? எதுவுமே தெரியாது. லட்சுமி நாராயணருக்கு ஏன்
பூஜை செய்கிறார்கள், அவர்கள் எங்கு சென்றார்கள் எதுவுமே
தெரியாது. பாரதவாசிகள் தான் தங்களது பூஜிக்கதக்கவர்களை
முற்றிலும் அறியாமல் உள்ளார்கள். கிறிஸ்து குறிப்பிட்ட இந்த
நூற்றாண்டில் வந்தார், வந்து ஸ்தாபனை செய்தார் என்பதைக்
கிறித்தவர்கள் அறிந்துள்ளார்கள். சிவபாபாவை யாரும் அறியாமல்
உள்ளார்கள். பதீத பாவனர் என்றும் சிவனுக்குத் தான்
கூறுகிறார்கள். அவர் தான் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் ஆவார்! அவர்
எல்லோரையும் விட அதிகமாக சேவை செய்கிறார். அனைவருக்கும் சத்கதி
அளிக்கும் வள்ளல் ஆவார். பாருங்கள் உங்களுக்கு எப்படி
கற்பிக்கிறார். வந்து பாவனமாக ஆக்குங்கள் என்று தந்தையை
அழைக்கவும் செய்கிறார்கள். கோவிலில் எவ்வளவு பூஜை செய்கிறார்கள்,
எவ்வளவு விமரிசைகள், எவ்வளவு செலவு செய்கிறார்கள்! ஸ்ரீநாத்
கோவிலில், ஜகந்நாதர் கோவிலில் போய்ப் பாருங்கள். இருப்பது ஒரே
ஒருவர். ஜகந்நாத்திடம் (ஜகத் நாத்) குவியலைப் படைக்கிறார்கள்.
ஸ்ரீநாத்திற்கோ நிறைய பொருட்கள் தயாரிக்கிறார்கள். ஏன்
வித்தியாசம் ஏற்படுகிறது. காரணம் வேண்டும் அல்லவா?
ஸ்ரீநாத்தையும் கறுப்பாக மற்றும் ஜகந்நாத்தையும் கறுப்பாக
செய்து விடுகிறார்கள். காரணம் எதுவுமே புரியாமல் இருக்கிறார்கள்.
ஜகந்நாத் என்று லட்சுமி நாராயணருக்குத் தான் கூறுகிறார்களா?
இல்லை ராதை கிருஷ்ணருக்குக் கூறுவார்களா? இராதை கிருஷ்ணர்,
மற்றும் லட்சுமி நாராயணருக்கிடையே என்ன சம்பந்தம் உள்ளது? இது
கூட யாருக்கும் தெரியாது. நாம் பூஜிக்கதக்க தேவதைகளாக இருந்தோம்.
பிறகு பூசாரி ஆகியுள்ளோம் என்பது இப்பொழுது குழந்தைகளாகிய
உங்களுக்குத் தெரிய வந்துள்ளது. சக்கரம் சுற்றி வந்தீர்கள்.
இப்பொழுது மீண்டும் தேவதை ஆவதற்காக நாம் படிக்கிறோம். இதனை
மனிதர் எவரும் கற்பிப்ப தில்லை. பகவானுவாக்கு- பகவான்
கூறுகிறார் என்றுள்ளது. ஞானக்கடல் என்றும் பகவானுக்கு
கூறப்படுகிறது. இங்கோ பக்தியின் கடல் நிறைய பேர் உள்ளார்கள்.
அவர்கள் பதீத பாவனரான ஞானக்கடலான தந்தையை நினைவு செய்கிறார்கள்.
நீங்கள் (பதீதமாக) தூய்மையற்றவராக ஆகி உள்ளீர்கள். பின் அவசியம்
பாவனமாக ஆக வேண்டும். இது இருப்பதே பதீதமான (தூய்மையற்ற)
உலகமாகும். இது சொர்க்கம் கிடையாது. வைகுண்டம் எங்கே உள்ளது
என்பது யாருக்கும் தெரியாது. வைகுண்டம் சென்று விட்டார் என்று
கூறுகிறார்கள். பிறகு நரகத்தின் உணவு ஆகிய வற்றை அவருக்கு ஏன்
ஊட்டுகிறீர்கள்? சத்யுகத்திலோ நிறைய பழங்கள், மலர்கள் ஆகியவை
இருக்குமே! இங்கு என்ன இருக்கிறது?. இது நரகமாகும். பாபா
மூலமாக நாம் சொர்க்கவாசி ஆவதற்கான புருஷார்த்தம் (முயற்சி)
செய்து கொண்டிருக்கிறோம் என்பதை இப்பொழுது நீங்கள்
அறிந்துள்ளீர்கள். பதீத நிலையிலிருந்து பாவனமாக ஆக வேண்டும்.
தந்தை யுக்தியோ கூறி யுள்ளார் - கல்ப கல்பமாக தந்தை கூட யுக்தி
கூறுகிறார். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் விகர்மங்கள்
விநாசம் ஆகும். நாம் புருஷோத்தம சங்கமயுகத்தில் இருக்கிறோம்
என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். பாபா நாங்கள் 5 ஆயிரம்
ஆண்டுகளுக்கு முன்னால் இது போல ஆகி இருந்தோம் என்று நீங்கள்
தான் கூறுகிறீர்கள். கல்ப கல்பமாக இந்த அமர கதையை பாபா விடம்
கேட்கிறோம் என்பதை நீங்கள் தான் அறிந்துள்ளீர்கள். சிவபாபா தான்
அமரநாத் ஆவார். மற்றபடி பார்வதிக்கு முன் அமர்ந்து கதை கூறினார்
என்பதல்ல. அது பக்தி ஆகும். ஞானம், பக்தியை நீங்கள்
புரிந்துள்ளீர்கள். பிராமணர்களின் பகல் மற்றும் பின்
பிராமணர்களின் இரவு. நீங்கள் பிராமணர்கள் ஆவீர்கள் அல்லவா? இதனை
தந்தை புரியவைக்கிறார். ஆதி தேவன் கூட பிராமணராகத் தான்
இருந்தார். தேவதை என்று கூற மாட்டார்கள். ஆதி தேவனிடம் கூட
செல்கிறார்கள். தேவிகளுக்குக் கூட எவ்வளவு பெயர்கள் உள்ளன.
நீங்கள் சேவை செய்திருக் கிறீர்கள். அதனால் உங்கள் பாடல் உள்ளது.
நிர்விகாரியாக (வைஸ்லெஸ்) இருந்த பாரதம் (விஷியஸ்) விகாரியாகி
விடுகிறது. இப்பொழுது இராவண இராஜ்யம் ஆகும் அல்லவா?
சங்கமயுகத்தில் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புருஷோத்தமராக
ஆகிறீர்கள். உங்கள் மீது (அவினாஷி) அழியாத குருதசை (பிரஹஸ்பதி)
ஆகிறது. அப்பொழுது நீங்கள் அமரபுரிக்கு அதிபதி ஆகி
விடுகிறீர்கள். மனிதனை தேவதையாக ஆக்குவதற்காக தந்தை உங்களுக்கு
கற்பித்துக் கொண்டிருக்கிறார். சொர்க்கத்திற்கு அதிபதி ஆவதற்கு
பிரகஸ்பதியின் தசை என்று கூறப்படு கிறது. நீங்கள் சொர்க்கம்,
அமரபுரியிலோ அவசியம் செல்வீர்கள். மற்றபடி படிப்பில் தசைகள்
மேலும் கீழும் ஆகிக் கொண்டே இருக்கின்றன. நினைவே மறந்து
விடுகிறது. என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறி உள்ளார்.
காமம் மகா எதிரி ஆகும் என்று. கீதையில் கூட பகவான் கூறுகிறார்,
படிக்கவும் செய்கிறார்கள். ஆனால் விகாரத்தின் மீது வெற்றி அடை
கிறார்களா என்ன? பகவான் எப்பொழுது கூறினார்? 5 ஆயிரம் வருடங்கள்
ஆகி விட்டது. இப்பொழுது மீண்டும் பகவான் காமம் மகா எதிரி ஆகும்
என்று கூறுகிறார். இதன் மீது வெற்றி அடைய வேண்டும் என்று
கூறுகிறார். இது முதல்-இடை-கடை துக்கம் கொடுக்கக் கூடியது ஆகும்.
முக்கியமானது காமத்தினுடைய விஷயம். இதற்குத் தான் பதீதமான (தூய்மையற்ற)
என்று கூறப் படுகிறது. இப்பொழுது இது பற்றித் தெரிய வந்துள்ளது.
இந்த சக்கரம் சுற்றுகிறது. நாம் பதீதமாக ஆகிறோம். பிறகு தந்தை
வந்து நாடகப்படி பாவனமாக ஆக்குகிறார். முதன் முதலில் (அல்ஃப்)
தந்தையின் விஷயத்தை நினைவு செய்யுங்கள் என்று பாபா திரும்பத்
திரும்ப கூறுகிறார். ஸ்ரீமத்படி நடப்பதாலேயே நீங்கள்
சிறந்தவர்களாக (சிரேஷ்டமாக) ஆவீர்கள். நாம் முதலில் சிரேஷ்டமாக
இருந்தோம். பிறகு (பிரஷ்டமாக) இழிந்தவர்களாக ஆகிறோம். இப்பொழுது
மீண்டும் சிறந்தவர்களாக (சிரேஷ்ட) ஆவதற்கான புருஷார்த்தம் (முயற்சி)
செய்து கொண்டிருக்கிறோம். தெய்வீக குணங்களை தாரணை செய்ய
வேண்டும். யாருக்குமே துக்கம் கொடுக்கக் கூடாது. அனைவருக்கும்
வழி கூறிக் கொண்டே செல்லுங்கள். என்னை நினைவு செய்தீர்கள்
என்றால் பாவங்கள் நீங்கி விடும் என்று தந்தை கூறுகிறார். பதீத
பாவனன் என்று நீங்கள் எனக்குத் தான் கூறுகிறீர்கள் அல்லவா?
பதீத பாவனர் எப்படி வந்து பாவனமாக ஆக்குகிறார் என்பது
யாருக்குமே தெரியாது. என் ஒருவனை நினைவு செய்யுங்கள் என்று
முந்தைய கல்பத்திலும் தந்தை கூறி இருந்தார். இது யோக அக்னி
ஆகும். இதனால் பாவங்கள் சாம்பலாகின்றன. துரு நீங்கி விடும்
பொழுது ஆத்மா பவித்திரமாக ஆகி விடுகிறது. தங்கத்தில் தான்
கலப்படம் செய்கிறார்கள். பிறகு நகையும் அவ்வாறே அமைகிறது.
ஆத்மாவில் எப்படி துரு படிந்துள்ளது. அதை நீக்க வேண்டும் என்பதை
இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுக்கு தந்தை புரிய வைத்துள்ளார்.
தந்தைக்குக் கூட குழந்தைகளாகிய உங்களை வந்து ஆத்ம
உணர்வுடையவர்களாக ஆக்கக் கூடிய பாகம் நாடகத்தில் அமைந்துள்ளது.
தூய்மையாகவும் ஆக வேண்டும். சத்யுகத்தில் நாம் வைஷ்ணவர் களாக
இருந்தோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். தூய்மையான
கிருஹஸ்த ஆசிரமம் இருந்தது. இப்பொழுது நாம் தூய்மையாக ஆகி
விஷ்ணுபுரிக்கு அதிபதி ஆகிறோம். நீங்கள் இரட்டை (டபுள்)
வைஷ்ணவர் ஆகிறீர்கள். உண்மையிலும் உண்மையான வைஷ்ணவர் நீங்கள்
ஆவீர்கள். அவர்கள் விகாரி வைஷ்ணவ தர்மத்தினர் ஆவார்கள். நீங்கள்
நிர்விகாரி வைஷ்ணவ தர்மத்தினர் ஆவீர்கள். இப்பொழுது ஒன்று
தந்தையை நினைவு செய்கிறீர்கள். அடுத்து, தந்தையிடம் பெற்ற
ஞானத்தை நீங்கள் தாரணையும் செய்கிறீர்கள். நீங்கள்
ராஜாக்களுக்கெல்லாம் ராஜா ஆகிறீர்கள். அந்த ராஜாக்கள் குறுகிய
காலத்திற்கு ஒரு பிறவிக்கு ஆகிறார்கள். உங்களுடைய ராஜ்யம் 21
தலைமுறை இருக்கும். அதாவது (ஃபுல் ஏஜ்) முழு ஆயுள் கடந்து
செல்கிறீர்கள். அங்கு ஒரு பொழுதும் அகால மரணம் ஏற்படாது.
நீங்கள் காலன் மீது வெற்றி அடைகிறீர்கள். நேரம் வரும் பொழுது
இப்பொழுது இந்தப் பழைய சட்டையை விடுத்து புதியது எடுக்க
வேண்டும் என்று புரிந்திருப்பீர்கள். உங்களுக்கு சாட்சாத்காரம்
ஆகும். குஷியின் வாத்தியம் ஒலித்துக் கொண்டே இருக்கும். தமோ
பிரதான சரீரத்தை விடுத்து சதோபிரதான சரீரத்தை எடுப்பது - இதுவோ
குஷியின் விஷயம் ஆகும். அங்கு சராசரி 150 வருடங்களின் ஆயுள்
இருக்கும். இங்கோ அகால மரணம் ஆகிக் கொண்டே இருக்கிறது.
ஏனென்றால் சிற்றின்பங்களை அனுபவிப் பவர்களாக (போகி)
இருக்கிறார்கள். எந்த குழந்தைகளினுடைய யோகம் சரியாக இருக்கிறதோ
அவர்களுடைய அனைத்து கர்ம இந்திரியங்களும் யோக பலத்தினால்
கட்டுப்பட்டு விடும். யோகத்தில் முழுமையாக இருக்கும் பொழுது
கர்ம இந்திரியங்கள் குளிர்ந்து விடுகிறது. சத்யுகத் தில்
உங்களுக்கு எந்த ஒரு கர்ம இந்திரியம் கூட ஏமாற்றம் தராது. கர்ம
இந்திரியங்கள் கட்டுப் பாட்டில் இல்லை என்று ஒரு பொழுதும் கூற
மாட்டார்கள். நீங்கள் மிகவும் உயர்ந்ததிலும் உயர்ந்த பதவியை
அடைகிறீர்கள். இதற்கு பிரகஸ்பதியின் (குரு) அவினாஷி தசை என்று
கூறப்படுகிறது. விருட்சபதி, மனித சிருஷ்டியின் விதை ரூபமாக
இருப்பவர் தந்தை ஆவார். விதை இருப்பது மேலே. அவரை நினைவு கூட
மேலே செய்கிறார்கள். ஆத்மா தந்தையை நினைவு செய்கிறார்.
எல்லையில்லாத தந்தை நமக்கு படிப்பிக்கிறார். அவர் அமரகதையை
கூறுவதற்காக வருவதும் ஒரு முறை தான் என்பதை குழந்தைகளாகிய
நீங்கள் அறிந்துள்ளீர்கள். அமர கதை என்று கூறினாலும் சரி,
சத்திய நாராயணரின் கதை என்று கூறினாலும் சரி, அந்த கதையின்
பொருளைக் கூட புரிந்து கொள்வதில்லை. சத்திய நாராயணரின்
கதையினால் நரனிலிருந்து நாராயணர் ஆகிறீர்கள். அமரகதையினாலே
நீங்கள் அமரராக ஆகிறீர்கள். பாபா ஒவ்வொரு விஷயத்தையும்
தெளிவாகப் புரிய வைக்கிறார். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. யோக பலத்தினால் தங்களது அனைத்து கர்ம இந்திரியங்களையும்
வசப்படுத்த வேண்டும். ஒரு விருட்சபதி தந்தையின் நினைவில்
இருக்க வேண்டும். உண்மையான வைஷ்ணவர் அதாவது தூய்மையாக ஆக
வேண்டும்.
2. அதிகாலை எழுந்து நான் ஆத்மா ஆவேன், சரீரம் அல்ல என்ற முதல்
பாடத்தை பக்குவப்படுத்த வேண்டும். நமது ஆன்மீக பாபா நமக்கு
கற்பிக்கிறார். இந்த துக்கமுடைய உலகம் இப்பொழுது மாற வேண்டி
உள்ளது. இது போல புத்தியில் முழு ஞானத்தின் நினைவு இருந்து
கொண்டே இருக்கட்டும்.
வரதானம்:
ஒவ்வொரு பொக்கிஷத்தையும் செய-ல் பயன்படுத்தி ஒவ்வொரு அடியிலும்
பன்மடங்கு வருமானம் சேமிப்பு செய்யும் பத்மாபதம் பாக்யசாலி
ஆகுக!
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு அடியும் வருமானம் சேமிப்பதற்கான
வரதானம் டிராமாவில் சங்கமயுக நேரத்திற்கே கிடைத்துள்ளது
அத்தகைய வரதானத்தை தன்னுள் சேமித்து பிறருக்கும் தானம்
செய்யுங்கள். அவ்வாறே எண்ணம், செல்வம், ஞானம் எனும்
பொக்கிஷங்களை செய-ல் ஈடுபடுத்தி பன்மடங்கு வருமானம் சேமியுங்கள்.
ஏனெனில் இந்த சமயத்தில் தான் ஸ்தூல செல்வத்தையும் ஈஸ்வர்
பெயரில் சமர்ப்பணம் செய்வதால் ஒவ்வொரு நயா பைசாவும் ரத்தினம்
போன்று மதிப்பு அதிகரிக்கின்றது. எனவே அனைத்து பொக்கிஷங்களையும்
தனக்காகவும் பிறருக்காகவும் சேவையில் பயன்படுத்துங்கள் அப்போதே
பத்மாபரம் பாக்யசாலி ஆவீர்கள்.
சுலோகன்:
எங்கே உளப்பூர்வமான அன்பு உள்ளதோ அங்கே அனைவரது ஒத்துழைப்பும்
சுலபமாக கிடைத்து விடும்.
அவ்யக்த சமிக்ஞை : ஆன்மீக நிலையிலிருக்கும் பயிற்சி செய்க
உள்முகமாகுக.
தேகத்தின் உள்ளிருக்கும் ஆத்மா தெள்ளத் தெளிவாக வெளியில்
தென்படும் வகையில் கண்ணாடி ஆகுங்கள். உங்களது ஆன்மீக வடிவம்
எதிரில் உள்ளவர்களுக்கும் தனது ஆன்மீக வடிவத்தை சாட்சாத்காரம்
செய்ய வேண்டும். இதனையே அவ்யக்த மற்றும் ஆன்மீக நிலையை அனுபவம்
செய்ய வைப்பதென சொல்லப்படும்.