23-09-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! ஒவ்வொரு
விசயத்திலும் யோகபலத்தின் மூலம் காரியம் செய்யுங்கள், பாபாவிடம்
எதையும் கேட்க வேண்டிய விசயம் இல்லை, நீங்கள் ஈஸ்வரிய
குழந்தைகளாவீர்கள் ஆகையினால் எந்தவொரு அசுர காரியத்தையும்
செய்யாதீர்கள்
கேள்வி:
உங்களுடைய இந்த யோக பலத்தின்
அற்புதம் என்ன?
பதில்:
இந்த யோகபலத்தின் மூலம் தான்
உங்களுடைய அனைத்து கர்மேந்திரியங்களும் வசமாகி விடுகிறது. யோக
பலமில்லாமல் நீங்கள் தூய்மையாக ஆக முடியாது. யோகபலத்தின் மூலம்
தான் முழு உலகமும் தூய்மையாக ஆகிறது ஆகையினால் தூய்மையாவதற்காக
அல்லது உணவை சுத்தமாக்குவதற்காக நினைவு யாத்திரையில் இருங்கள்.
யுக்தியோடு நடந்து கொள்ளுங் கள். பணிவோடு பேசுங்கள்.
ஓம் சாந்தி.
ஆன்மீக தந்தை ஆன்மீக குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார்.
ஆன்மீக தந்தை வந்து சொர்க்கம் அல்லது புதிய உலகத்தை எப்படி
ஸ்தாபனை செய்கின்றார் என்பது உலகத்தில் யாருக்கும் தெரியாது.
யாருமே தெரிந்திருக்கவில்லை. நீங்கள் தந்தையிடம் எந்தவிதமான
வேண்டுதல்களையும் வைக்க தேவையில்லை. பாபா அனைத்தையும் புரிய
வைக்கின்றார். எதையும் கேட்பதற்கான அவசியமும் இருப்பதில்லை,
அனைத்தையும் தானாகவே புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். நான்
ஒவ்வொரு கல்பமும் வந்து இந்த பாரத கண்டத்தில் என்ன செய்ய
வேண்டும் என்பதை நான் தெரிந்திருக்கின்றேன், நீங்கள்
தெரிந்திருக்கவில்லை என்று பாபா கூறுகின்றார். தினம்-தினம்
புரிய வைத்துக் கொண்டே இருக்கின்றார். யாரும் ஒரு வார்த்தை
கேட்க வில்லை என்றாலும் கூட புரிய வைத்துக் கொண்டே
இருக்கின்றார். சாப்பிடுவது-பானங்கள் அருந்துவது போன்றவற்றில்
கஷ்டமாக இருக்கிறது என்று சில சமயங்களில் கேட்கிறார்கள். இது
புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். ஒவ்வொரு விசயத்திலும்
யோகபலத்தின் மூலம் காரியம் செய்யுங்கள் என்று பாபா சொல்லி
விட்டார், நினைவு யாத்திரையின் மூலம் காரியம் செய்யுங்கள்,
எங்கு வேண்டுமானாலும் செல்லுங்கள் ஆனால் முக்கியமான விசயம்
பாபாவை கண்டிப்பாக நினைவு செய்ய வேண்டும். வேறு எந்தவொரு அசுர
காரியத்தையும் செய்யக் கூடாது. நாம் ஈஸ்வரிய குழந்தைகள், அவர்
அனைவருக்கும் தந்தை, அனைவருக்குமான படிப்பினையை (ஞானக் கல்வி)
இவர் ஒருவர் தான் கொடுப்பார். குழந்தைகளே சொர்க்கத்திற்கு
எஜமானர்களாக ஆக வேண்டும் என்று பாபா படிப்பினை (அறிவுரை)
கொடுக்கின்றார். இராஜ்யத்தில் கூட பதவி இருக்கிறது அல்லவா.
ஒவ்வொரு வருடைய முயற்சியின் அனுசாரம் பதவி இருக்கிறது. குழந்தை
கள் முயற்சி செய்ய வேண்டும் மேலும் பலனையும் குழந்தைகள் தான்
அடைய வேண்டும். முயற்சி செய்ய வைக்க பாபா வருகின்றார். பாபா
எப்போது வருவார், வந்து என்ன செய்வார், எங்கே அழைத்துச்
செல்வார் என்பது போன்ற எதையும் நீங்கள் தெரிந்திருக்க வில்லை.
நாடகத் தின் திட்டப்படி நீங்கள் எங்கிருந்து வீழ்கின்றீர்கள் (தரம்
குறைகிறது) என்பதை பாபா தான் வந்து புரிய வைக்கின்றார்.
ஒரேயடியாக உச்சியிலிருந்து விழுகிறீர்கள். நாம் யார் என்பது
கொஞ்சம் கூட புத்தியில் வருவதில்லை. இப்போது உணருகிறீர்கள்
அல்லவா. பாபா வந்து என்ன செய்வார் என்பது உங்களுக்கு கனவிலும்
வந்ததில்லை. நீங்களும் எதையும் தெரிந்திருக்கவில்லை. இப்போது
பாபா கிடைத்திருக்கின்றார் எனும்போது இப்படிப்பட்ட தந்தைக்கு
பலியாக வேண்டும் என்பதை புரிந்து கொள்கிறீர்கள். பதிவிரதை பெண்
இருக்கின்றார் என்றால் முழுமையாக கணவனுக்குப் பலியாகி
விடுகிறார் அல்லவா. சிதை ஏறுவதற்கும் கூட பயப்படுவதில்லை.
எவ்வளவு தைரியம் இருக்கிறது. முன்பு அதிகம் சிதை ஏறி
விடுவார்கள். இங்கே பாபா அப்படிப் பட்ட கஷ்டம் எதையும்
கொடுப்பதில்லை. பெயர் என்னவோ ஞான சிதை என்பதாகும் ஆனால் எரிவது
போன்ற விசயம் எதுவும் இல்லை. வெண்ணெயிலிருந்து முடியை எடுப்பது
போல் முற்றிலும் சுலபமாகப் புரிய வைக்கின்றார். உண்மையில்
பிறவி-பிறவிகளுக்குமான சுமை தலை யில் இருக்கிறது என்பதை
குழந்தைகள் புரிந்துக்கொள்கிறார்கள். ஒரு அஜாமிலன் மட்டும்
இல்லை. ஒவ்வொரு மனிதனும் ஒருவர்-மற்றவரை விட அதிக அஜாமிலனாக
இருக்கிறார்கள். கடந்த பிறவியில் என்னென்ன செய்தார்கள் என்பது
மனிதர்களுக்கு என்ன தெரியும். பாவம் தான் செய்தோம் என்பதை
இப்போது நீங்கள் புரிந்துள்ளீர்கள், உண்மையில் ஒருவர் கூட
புண்ணிய ஆத்மா இல்லை. அனைவரும் பாவாத்மாக்களே ஆவர். புண்ணியம்
செய்தால் புண்ணிய ஆத்மாக் களாக ஆகி விடுவார்கள். புண்ணிய
ஆத்மாக்கள் சத்யுகத்தில் இருக்கிறார்கள். யாராவது மருத்துவமனை
போன்றவைகளை கட்டினார்கள் என்றால் அதனாலென்ன ஆகிவிடும்! ஏணிப்படி
இறங்குவதிலிருந்து காக்கப்படுவார்களா என்ன. ஏறும் கலை ஆவதில்லை
அல்லவா. வீழ்ந்து கொண்டே தான் செல்கிறார்கள். வாழ்ந்து கொண்டே
அவரிடம் (தந்தையிடம்) பலியாகும் அளவிற்கு மிகவும் அன்பானவர்
ஆவார் ஏனென்றால் பதிகளுக் கெல்லாம் பதியாக இருக்கின்றார்,
தந்தைகளுக்கெல்லாம் தந்தை அனைவரிலும் உயர்ந்தவராவார்.
இப்போது தந்தை குழந்தைகளை விழிக்கச் செய்து கொண்டிருக்கின்றார்.
யார் சொர்க்கத்திற்கு எஜமானர்களாக ஆக்குகின்றாரோ அப்படிப்பட்ட
பாபா எவ்வளவு சாதாரணமாக இருக்கின்றார். ஆரம்பத்தில் குழந்தைகள்
நோய்வாய்ப்பட்ட போது பாபா அவரே குழந்தைகளுக்கு சேவை செய்தார்.
அகங்காரம் எதுவும் இல்லை. பாப்தாதா உயர்ந்ததிலும் உயர்ந்தவர்
ஆவார். எப்படிப்பட்ட கர்மத்தையும் இவரின் (பிரம்மா) மூலம்
செய்ய வைப்பேன் அல்லது செய்வேன் என்று பாபா கூறுகின்றார்.
இருவருமே ஒன்றாகி விடுகிறார்கள். பாபா என்ன செய்கின்றார், தாதா
என்ன கர்மம் செய்கின்றார் என்று தெரிகிறதா என்ன?
கர்மம்-அகர்மம்-விகர்மத்தின் நிலையை பாபா தான் வந்து புரிய
வைக்கின்றார். பாபா மிகவும் உயர்ந்தவர். மாயையின் தாக்கமும்
எவ்வளவு இருக்கிறது. இப்படி (தவறான காரியங்களை) செய்யாதீர்கள்
என்று ஈஸ்வரன் தந்தையே சொன்னாலும் கேட்பதே இல்லை. பகவான்
கூறுகின்றார் - இனிமையான குழந்தைகளே, இந்த காரியத்தைச்
செய்யாதீர்கள், இருந்தாலும் தலைகீழான காரியங்களைக் செய்து
விடுகிறார்கள். தலைகீழான காரியங்களுக்குத் தான் தடை செய்வார்
அல்லவா. ஆனால் மாயையும் மிகவும் பலம் வாய்ந்ததாகும். மறந்தும்
கூட பாபாவை மறக்கக் கூடாது. எது வேண்டுமானாலும் செய்யுங்கள்,
அடித்துக் கொள்ளுங்கள், கொட்டிக் கொள்ளுங்கள் ஆனால் பாபாவை
மறக்கக் கூடாது. இப்படி எதையும் பாபா செய்வதில்லை ஆனால் இது
கடைசியாக (எல்லை மீறும் போது) சொல்லப் படுகிறது. உங்களுடைய
வாசலை ஒருபோதும் விடமாட்டோம் என்று பாடல் கூட இருக்கிறது. என்ன
வேண்டுமானாலும் சொல்லுங்கள். வெளியில் என்ன தான் உள்ளது (கிடைப்பதற்கு)
வேறெங்கு தான் செல்வது என்று புத்தியும் சொல்கிறது. பாபா
இராஜ்யத்தை கொடுக்கின்றார் பிறகு எப்போதுமே கிடைக்காது. அடுத்த
பிறவியில் ஏதாவது கிடைக்கும் என்று இருக்கிறதா என்ன? இல்லை.
இந்த பரலௌகீக தந்தை உங்களை எல்லையற்ற சுகதாமத்திற்கு எஜமானர்
களாக மாற்றுகின்றார். குழந்தைகள் தெய்வீக குணங்களையும் தாரணை
செய்ய வேண்டும், அதற்கும் பாபா வழி சொல்கிறார். தங்களுடைய
போலிஸ் போன்ற தொழிலையும் செய்யுங்கள், இல்லையென்றால் டிஸ்மிஸ்
செய்து விடுவார்கள். தங்களுடைய காரியத்தை செய்யத் தான் வேண்டும்,
கண்களை காட்ட (கோபத்தை வெளிப்படுத்த) வேண்டியிருக்கிறது.
எவ்வளவு முடியுமோ அன்பால் காரியத்தை செய்யுங்கள். இல்லையென்றால்
யுக்தியோடு கண்களால் கோபத்தைக் காட்டுங்கள். கைகளை பயன்படுத்தக்
கூடாது. பாபாவிற்கு எவ்வளவு அதிகமான குழந்தைகள் இருக்கிறார்கள்.
பாபாவிற்கு கூட குழந்தைகளைப் பற்றி கவலை இருக்கிறது அல்லவா.
முக்கியமான விசயம் தூய்மையாக இருப்பதாகும். பிறவி-பிறவிகளாக
நீங்கள் அழைத்தீர்கள் அல்லவா - ஹே தூய்மையற்றவர்களை
தூய்மையாக்குபவரே வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என்று
அழைத்தீர்கள் அல்லவா. ஆனால் அர்த்தம் எதையும் புரிந்து கொள்ள
வில்லை.அழைக்கிறார்கள் என்றால் கண்டிப்பாக தூய்மையற்றவர்கள்
தானே. இல்லையென்றால் அழைப்பதற்கு அவசியம் இல்லை. பூஜைக்கும்
அவசியம் இல்லை. அபலைகளான உங்களுக்கு எவ்வளவு கொடுமைகள்
நடக்கிறது, பொருத்துக் கொள்ளத் தான் வேண்டும் என்று பாபா புரிய
வைக்கின்றார். யுக்திகளையும் கூறிக்கொண்டிருக்கிறார். மிகவும்
பணிவோடு நடந்து கொள்ளுங் கள். நீங்களே பகவான் எனும்போது பிறகு
ஏன் வேண்டுகிறீர்கள்? என்று கேளுங்கள். காப்பு (தாலி)
கட்டும்போது - நான் உன்னுடைய கணவன், கடவுள், குரு அனைத்தும்
என்று சொல்கிறீர்கள், இப்போது நான் தூய்மையாக இருக்க
விரும்புகிறேன் எனும்போது ஏன் தடுக்கிறீர்கள். பகவானை
தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் என்று சொல்லப்படுகிறது
அல்லவா. தாங்களே தூய்மையாக்குபவர் ஆகி விடுங்கள். இப்படி
அன்போடு பணிவோடு பேச வேண்டும். கோபப் பட்டால் மலர்களை தூவுங்கள்.
அடிக்கிறார்கள் பிறகு வருத்தமும் படுகிறார்கள். குடிக்கிறார்
கள் என்றால் போதை ஏறிவிடுகிறது. தங்களை பேரரசன் என்று
நினைத்துக் கொள்கிறார்கள். எனவே இந்த விஷம் (விகாரம்) கூட
அப்படிப்பட்ட ஒரு பொருள் கேட்கவே கேட்காதீர்கள். பச்சாதாபப்
படுகிறார்கள் ஆனால் பழக்கமாகி விடுகிறது என்றால் விலகுவதே இல்லை.
ஓரிரு முறை விகாரத்தில் சென்றார்கள் என்றால், அவ்வளவு தான் போதை
ஏறிவிடுகிறது பிறகு விழுந்து கொண்டே இருப்பார்கள். எப்படி போதை
பொருள் போதையூட்டுகிறதோ, விகாரமும் அதுபோலவே ஆகும். இங்கே அதிக
உழைப்பு இருக்கிறது. யோகபலமில்லாமல் யாருமே கர்மேந்திரியங்களை
வசப்படுத்த முடியாது. அனைத்தும் உங்களுடைய யோகபலத்தின் அற்புதமே
ஆகும், ஆகையினால் தான் புகழ் இருக்கிறது, வெளி நாடுகளிலிருந்து
யோகம் கற்றுக் கொள்ள வருகிறார்கள். அமைதியாக
அமர்ந்திருப்பார்கள். வீடு வாசலிலிருந்து விலகி சென்று
விடுகிறார்கள். அது அரைக்கல்பத்திற்கான செயற்கையான அமைதியாகும்.
உண்மையான அமைதியைப் பற்றி யாருக்கும் தெரியாது. பாபா
கூறுகின்றார் குழந்தைகளே, உங்களுடைய சுயதர்மமே அமைதி, இந்த
சரீரத்தின் மூலம் நீங்கள் கர்மம் செய்கிறீர்கள். சரீரத்தை
எடுக்காத வரை ஆத்மா அமைதியாக இருக்கிறது. பிறகு எங்கேயாவது
சென்று பிரவேசிக்கிறது. இங்கே சிலர் சூட்சும சரீரத்தோடு அலை
கிறார்கள். அது சூட்சும உடலாக இருக்கிறது, சில துக்கம்
கொடுக்கக் கூடியதாக இருக்கிறது, சில நல்லவைகளாக இருக்கிறது,
இங்கே கூட சில மனிதர்கள் நன்மை செய்யக் கூடியவர்களாக
இருக்கிறார்கள் அவர்கள் யாருக்கும் துக்கம் கொடுப்பதில்லை.
சிலர் அதிகம் துக்கம் கொடுக் கிறார்கள். சிலர் சாதுவாக
மகாத்மாக்களைப் போல் இருக்கிறார்கள்.
இனிமையிலும் இனிமையான செல்லக் குழந்தைகளே நீங்கள் 5 ஆயிரம்
ஆண்டுகளுக்குப் பிறகு வந்து சந்தித்துள்ளீர்கள் என்று பாபா
புரிய வைக்கின்றார். எதை அடைவதற்காக? உங்களுக்கு என்ன கிடைக்க
வேண்டும் என்று பாபா கூறியுள்ளார். பாபா தங்களிடமிருந்து என்ன
கிடைக்கும், என்ற கேள்விக்கு இடமே இல்லை. தாங்கள் சொர்க்கத்தை
ஸ்தாபனை செய்யும் இறை தந்தை யாவீர்கள். புதிய உலகத்தை படைப்பவரா
வீர்கள். எனவே கண்டிப்பாக தங்களிடமிருந்து இராஜ்யம் தான்
கிடைக்கும். கொஞ்சம் புரிந்து கொண்டு சென்றார்கள் என்றால்
கண்டிப்பாக சொர்க்கத்திற்கு வந்து விடுவார்கள் என்று பாபா
கூறுகின்றார். நான் சொர்க்கத்தை ஸ்தாபனை செய்ய வந்துள்ளேன்.
பெரியதிலும் பெரிய ஆசாமி பகவான் மற்றும் பிரஜாபிதா பிரம்மா ஆவர்.
விஷ்ணு யார் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். வேறு யாருக்கும்
தெரியாது. நாங்கள் இவருடைய வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்று
நீங்கள் சொல்வீர்கள், இந்த லஷ்மி-நாராயணன் சத்யுகத்தில்
இராஜ்யம் செய்கிறார்கள். இந்த சக்கரம் போன்றவை உண்மையில்
விஷ்ணுவிற்கானதா என்ன? இந்த அலங்காரம் பிராமணர்களாகிய
நம்முடையதாகும். இப்போது இந்த ஞானம் இருக்கிறது. சத்யுகத்தில்
இந்த ஞானத்தைப் புரிய வைப்பார்களா என்ன. இப்படிப்பட்ட விசயங்களை
சொல்வ தற்கு யாரிடத்திலும் சக்தி இல்லை. நீங்கள் இந்த 84
பிறவிகளின் சக்கரத்தை தெரிந்துள்ளீர்கள். இதனுடைய அர்த்தத்தை
யாரும் புரிந்துக் கொள்ள முடியாது. குழந்தைகளுக்கு தந்தை புரிய
வைத்திருக்கிறார். குழந்தைகள் புரிந்துக் கொண்டார்கள், நமக்கு
இந்த அலங்காரங்கள் அழகாகவே இல்லை. நாம் இப்போது படிப்பினை (ஸ்ரீமத்)
அடைந்து கொண்டிருக்கிறோம். முயற்சி செய்து கொண்டிருக்கிறோம்.
பிறகு தேவதைகளாக ஆகி விடுவோம். சுயதரிசன சக்கரத்தை
சுற்றி-சுற்றி நாம் தேவதைகளாக ஆகி விடுவோம். சுயதரிசனம் என்றால்
படைப்பவர் மற்றும் படைப் பினுடைய முதல்-இடை-கடைசியை தெரிந்துக்
கொள்வதாகும். முழு உலகத்திலும் இந்த சிருஷ்டி யின் சக்கரம்
எப்படி சுற்றுகிறது என்பதை யாரும் புரிய வைக்க முடியாது. பாபா
எவ்வளவு சகஜமாக்கி புரிய வைக்கின்றார் - இந்த சக்கரத்தின் ஆயுள்
இவ்வளவு அதிகமாக இருக்க முடியாது. இத்தனை மனிதர்கள்
இருக்கிறார்கள் என்று மனித சிருஷ்டியின் விசயங்களையே
சொல்லப்படுகிறது. ஆமை எத்தனை, மீன்கள் போன்றவைகள் எத்தனை என்று
சொல்ல முடியுமா என்ன, இது மனிதர்களுடைய விசயமே ஆகும்.
உங்களிடமும் கேள்வி கேட்கிறார்கள், பாபா அனைத்தையும் சொல்லிக்
கொண்டே இருக்கிறார். அதன்மீது முழு கவனம் கொடுக்க வேண்டும்.
யோக பலத்தின் மூலம் நீங்கள் உலகத்தை தூய்மையாக்குகின்றீர்கள்
எனும்போது யோகபலத்தின் மூலம் உணவை சுத்தமாக்க முடியாதா என்று
பாபா புரிய வைத்திருக்கிறார். நல்லது, நீங்கள் அப்படி (யோக
பலமுள்ளவர்களாக) ஆகியுள்ளீர்கள். பிறகு நீங்கள் யாரையாவது
தங்களுக்கு சமமாக மாற்றியுள்ளீர்களா? தந்தை வந்துள்ளார்
மீண்டும் சொர்க்கத்தின் ஆஸ்தியை கொடுப்பதற் காக என்று
குழந்தைகளாகிய நீங்கள் இப்போது புரிந்து கொள்கிறீர்கள். எனவே
இதை மறுக்கக் கூடாது. உலக இராஜ்யத்தை மறுத்தீர்கள் என்றால்
முடிந்தது. பிறகு குப்பை தொட்டியில் போய் கிடப்பீர்கள். இந்த
முழு உலகமுமே குப்பையாகும். எனவே இதை குப்பை தொட்டி என்றே
சொல்ல முடியும். உலகத்தின் நிலையைப் பாருங்கள் என்னவாக
இருக்கிறது. நாம் உலகத்திற்கு எஜமானர்களாக ஆகின்றோம் என்பதை
நீங்கள் தெரிந்துள்ளீர்கள். சத்யுகத்தில் ஒரே இராஜ்யம் இருந்தது
என்பது யாருக்கும் தெரியவில்லை, ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
தங்களுடைய கர்வம் இருக்கிறது எனும்போது கொஞ்சமும் கேட்பதில்லை,
இவையனைத்தும் தங்களுடைய கற்பனை என்று சொல்லி விடுகிறார்கள்.
கற்பனை யினால் தான் இந்த சரீரம் போன்றவை உருவாக்கப் பட்டுள்ளது.
அர்த்தம் எதையும் புரிந்து கொள்வதில்லை. இது ஈஸ்வரனுடைய கற்பனை,
ஈஸ்வரன் எதை விரும்புகிறாரோ அப்படி ஆகின்றது, இது அவருடைய
விளையாட்டு என்று சொல்லி விடுகிறார்கள். அப்படி பேசுகிறார்கள்,
கேட்கவே கேட்காதீர்கள். பாபா வந்துள்ளார் என்பதை குழந்தைகளாகிய
நீங்கள் இப்போது தெரிந்துள்ளீர்கள். பாபா ஒவ்வொரு 5 ஆயிரம்
ஆண்டுகளுக்கு பிறகும் நாங்கள் தங்களிடமிருந்து ஆஸ்தியை
எடுக்கின்றோம், நாங்கள் இப்போது சொர்க்கத்தின் இராஜ்யத்தை
அடைவதற்கு வந்துள்ளோம் என்று வயதானவர்கள் கூட சொல்கிறார்கள்.
அனைத்து நடிகர்களுக்கும் அவரவருடைய நடிப்பு இருக்கிறது என்பதை
நீங்கள் தெரிந்துள்ளீர்கள். ஒருவருடைய நடிப்பு மற்றவரோடு சேராது.
பிறகு நீங்கள் இதே பெயர் ரூபத்தில் இதே நேரத்தில்
தந்தையிடமிருந்து ஆஸ்தியை அடைய முயற்சி செய்வீர்கள். எவ்வளவு
அளவற்ற வருமானமாக இருக்கிறது. கொஞ்சம் ஞானத்தைக் கேட்டால் கூட
சொர்க்கத்தில் வந்து விடுவார்கள் என்று பாபா சொல்கிறார். ஆனால்
ஒவ்வொரு மனிதனும் உயர்ந்தவர்களாக மாறுவதற்காகவே முயற்சி
செய்கிறார்கள் அல்லவா. எனவே முயற்சி தான் முதலாவதாகும். நல்லது!
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) எப்படி பாபா குழந்தைகளுக்கு சேவை செய்கிறாரோ, எந்த
அகங்காரமும் இல்லை, அதுபோல் தந்தையை பின்பற்ற வேண்டும்.
பாபாவினுடைய ஸ்ரீமத்படி நடந்து உலக இராஜ்யத்தை அடைய வேண்டும்,
மறுக்கக் கூடாது.
2) தந்தைகளுக்கெல்லாம் தந்தை, பதிகளுக்கெல்லாம் பதியாக இருக்கக்
கூடிய உயர்ந்தவர், மிகவும் அன்பானவருக்கு வாழ்ந்து
கொண்டிருக்கும் போதே பலியாக வேண்டும். ஞான சிதையில் அமரவேண்டும்.
ஒருபோதும் தவறுதலாகக் கூட பாபாவை மறந்து தலைகீழான காரியத்தை
செய்யக் கூடாது.
வரதானம்:
குஷிகளின் குறையாத கஜானாக்களில் நிரம்பி இருக்கக்கூடிய சதா
கவலையற்ற சக்கரவர்த்தி ஆவீர்களாக.
குஷிகளின் கடல் மூலமாக தினமும் குஷியின் குறையாத பொக்கிஷம்
கிடைக்கிறது. எனவே எப்பேர்ப்பட்ட நிலையிலும் குஷி மறைந்து போக
முடியாது. அப்படி இன்றி சொத்து என்ன ஆகுமோ, பரிவாரம் என்ன ஆகுமோ
என்று எப்பேர்ப்பட்ட விசயத்திலும் கவலை ஏற்பட முடியாது.
பரிவர்த்தனை தான் ஆகும் அல்லவா! பழைய உலகத்தில் எவ்வளவு தான்
சிரேஷ்டமானதாக இருந்தாலும் சரி, ஆனால் எல்லாமே பழையதே தான்
ஆகும். எனவே கவலையில்லாதவர் ஆகி விட்டீர்கள். எது நடக்குமோ
நன்றாகவே நடக்கும். பிராமணர்களை பொறுத்த வரை எல்லாமே நல்லது
தான்.எதுவும் தீயது கிடையாது. உங்களிடம் எப்பேர்ப்பட்ட அரசாட்சி
இருக்கிறது என்றால் அதை யாருமே பறிக்க முடியாது.
சுலோகன்:
இந்த உலகத்தை ஒரு அலௌகிக விளையாட்டு என்றும் நிலைமைகளை
விளையாட்டு சாமான்கள் என்றும் கருதி நடந்தீர்கள் என்றால்
ஒருபோதும் நிராசை அடைய மாட்டீர்கள்.
அவ்யக்த சமிக்ஞை: இப்போது ஈடுபாடெனும் அக்னியை மூட்டி யோகத்தை
ஜூவாலா ரூபமாக்குங்கள்.
லாஸ்ட் ஸோ ஃபாஸ்ட் புருஷார்த்தம்- ஜுவாலா ரூபத்தினுடைதுதான்
மீதமிருக்கிறது. பாண்டவர் கள் காரணமாக யாதவர்கள் நின்று
விட்டுள்ளார்கள்.பாண்டவர்களுடைய சிரேஷ்ட பெருமை, ஆன்மீக
பெருமையின் ஸ்திதி, யாதவர்களின் குழப்பமுடைய நிலையை முடித்து
விடும். எனவே உங்களுடைய ஷான் பெருமை மூலமாக பரேஷான்
குழப்பமுடைய ஆத்மாக்களுக்கு அமைதி மற்றும் நிம்மதியின் வரதானம்
கொடுங்கள். ஜுவாலா சொரூபம் என்றால் லைட் ஹவுஸ் மற்றும் மைட்
ஹவுஸ் ஸ்திதியை புரிந்து கொண்டு இதே ஸ்திதியில் இருங்கள்.