ஓம் சாந்தி.
இன்று பாப்தாதா தன்னுடைய தூய்மையான மகிழ்ச்சியான
அன்னப்பறவைகளின் சபையில் வந்திருக்கின்றார்கள்.
நாலாபுறங்களிலும் தூய்மையான அன்னப்பறவைகள் தென்பட்டுக்கொண்டு
இருக்கின்றார்கள். தூய்மையான அன்னப்பறவைகளின் விசேஷத்தன்மைகளை
அனைவரும் நல்ல முறையில் அறீவீர்கள். சதா தூய்மையான
மகிழ்ச்சியான அன்னப்பறவை என்றால் தூய்மையான மற்றும் சுத்தமான
உள்ளம் கொண்டிருப்பவர். அப்பேற்பட்ட தூய்மையான அன்னப்பறவைகளிடம்
தூய்மையான மற்றும் சுத்தமான உள்ளம் இருக்கும் காரணத்தினால்
ஒவ்வொரு சுபமான ஆசையும் சகஜமாக நிறைவேறுகிறது. சதா திருப்தியான
ஆத்மாவாக இருக்கின்றார்கள். சிரேஷ்ட சங்கல்பம் செய்ததும்
நிறைவேறிவிடும். உழைக்க வேண்டியது இருக்காது. ஏன்? தூய்மையான
உள்ளம் உடையவர்களே, பாப்தாதாவிற்கு அனைவரையும் விட
பிரியமானவர்கள், அன்பிற்குரியவர் கள் மற்றும் நெருக்கமானவர்கள்
ஆவார்கள். தூய்மையான உள்ளம் உடையவர்கள் சதா பாப்தாதா வின் இதய
சிம்மாசனதாரியாக இருக்கின்றார்கள், அவர்களுடைய அனைத்து சிரேஷ்ட
சங்கல்பங் களும் நிறைவேறுவதன் காரணத்தினால் உள்ளுணர்வில்,
பார்வையில், பேச்சில், சம்பந்தம் தொடர்பில் சரளத்தன்மையும்,
தெளிவும் ஒரே மாதிரியாகத் தென்படுகின்றன. உள்ளம், புத்தி,
பேச்சு ஒன்றுபோல் இருப்பது தான் சரளத்தன்மையின் அடையாளம் ஆகும்.
உள்ளத்தில் ஒன்று, பேச்சில் மற்றொன்று - இது சரளத்தன்மையின்
அடையாளம் கிடையாது. சரள சுபாவம் உடையவர்கள் சதா பணிவுள்ளம்
உடையவர்களாக (நிர்மான்சித்), அகங்காரமற்றவர்களாக (நிரகங்காரி),
தன்னல மற்றவர்களாக (நிர்ஸ்வார்த்தி) இருக்கின்றார்கள்.
தூய்மையான அன்னப்பறவையின் விசேஷத் தன்மை - சரளமான உள்ளம்,
சரளமான பேச்சு, சரளமான உள்ளுணர்வு, சரளமான திருஷ்டி ஆகும்.
பாப்தாதா இந்த வருடத்தில் அனைத்து குழந்தைகளிடமும் இரண்டு
விசேஷத்தன்மைகளை நடத்தை மற்றும் முகத்தில் பார்க்க
விரும்புகின்றார்கள். அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்று
அனைவரும் கேட்கின்றீர்கள் அல்லவா! இந்த சீசன் முடிந்த பிறகு
விசேஷமாக என்ன செய்ய வேண்டும்? அடுத்து என்ன நடக்க வேண்டும்!
அடுத்து என்ன செய்ய வேண்டும்! என்று அனைவரும் யோசிக்கின்றீர்கள்
அல்லவா. சேவை ஷேத்திரத்திலோ அவரவர் சக்திக்கேற்ப பெரும்பான்மை
யினர் மிகவும் நல்ல முன்னேற்றம் செய்திருக்கின்றீர்கள்,
முன்னேறி இருக்கின்றீர்கள். மிகவும் நல்லது, மிகவும் நல்லது,
மிகவும் நல்லது என்று பாப்தாதா இந்த முன்னேற்றத்திற்காக
வாழ்த்துக்களும் கொடுக்கின்றார்கள். கூடவே ரிசல்ட்டில் ஒரு
விசயத்தைப் பார்த்தார்கள், அதை சொல்லட்டுமா என்ன? டீச்சர்ஸ் -
அதை சொல்லட்டுமா, இரட்டை அயல்நாட்டினரே - அதை சொல்லட்டுமா?
பாண்டவர்களே - அதை சொல்லட்டுமா? கையை உயர்த்துங்கள் அப்பொழுதே
கூறுவோம், இல்லையென்றால் கூறமாட்டோம். (அனைவரும் கையை
உயர்த்தினர்) மிகவும் நல்லது. ஒரு விசயம் என்ன பார்க்கப்பட்டது?
இன்று வதனத்தில் பாப்தாதா தங்களுக்குள் உரையாடல் செய்தார்கள்,
எப்படி உரையாடல் செய்வார்கள்? இருவரும் எவ்வாறு ஒருவருக்
கொருவர் உரையாடல் செய்வார்கள்? எவ்வாறு இங்கே இந்த உலகத்தில்
நீங்கள் மோனோஆக்டிங் (ஒருவரே இருவராக நடிப்பது) செய்கின்றீர்கள்
அல்லவா! மிகவும் நல்ல நல்ல மோனோஆக்டிங் செய்கின்றீர்கள்.
உங்களுடைய சாகார உலகத்திலோ ஒரு ஆத்மா இரண்டு பாகத்தை
நடிக்கின்றார் கள் மற்றும் பாப்தாதா இரண்டு ஆத்மாக்கள் ஒரு
சரீரத்தில் உள்ளனர். வித்தியாசம் இருக்கிறது அல்லவா! இது
மிகவும் வேடிக்கையாôன விசயம் ஆகும்.
எந்த விசயத்தைப் பற்றி இன்று வதனத்தில் பாப்தாதா உரையாடல்
செய்தார்கள்? பிரம்மா பாபாவிற்கு என்ன உற்சாகம் இருந்தது?
என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். நல்ல முறையில் அறிவீர்களா?
சீக்கிரத்திலும் சீக்கிரமாக நடக்க வேண்டும் என்ற இந்த உற்சாகம்
பிரம்மா பாபாவிற்கு இருந்தது. விநாசம் அல்லது மாற்றம் செய்வது
என்பது ஒரு கைதட்டல் கூட அல்ல, ஒரு சொடக்கு போடுவதற்கான விசயம்
ஆகும், ஆனால், நீங்கள் முதலில் 108 அல்ல, பாதி மாலையை
உருவாக்கிக் கொடுங்கள் என்று சிவபாபா பிரம்மா பாபாவிடம்
கூறினார். பிரம்மா பாபா என்ன பதில் கூறியிருப்பார்? கூறுங்கள்.
(தயாராகிக் கொண்டு இருக்கின்றார்கள்) நல்லது - பாதி மாலை கூட
தயார் ஆகவில்லையா? முழு மாலையின் விசயத்தை விடுங்கள், பாதி மாலை
தயார் ஆகிவிட்டதா? (அனைவரும் சிரித்துக் கொண்டிருக்கின்றனர்)
சிரிப்பது என்றால் ஏதோ உள்ளது என்பதாகிறது! பாதி மாலை தயாராக
உள்ளது என்று யார் கூறுகின்றீர்களோ, அவர்கள் ஒரு கையை
உயர்த்துங்கள். தயாராக உள்ளதா? மிகவும் குறைவானவர்களே உள்ளனர்.
ஆகிக் கொண்டிருக்கின்றோம் என்று யார் புரிந்திருக்கின்றீர்களோ,
அவர்கள் கை உயர்த்துங்கள். பெரும்பான்மையினர் ஆகிக்கொண்டு
இருக்கின்றோம் என்று கூறுகின்றனர் மற்றும் குறை வானவர்கள்
ஆகிவிட்டோம் என்று கூறுகின்றனர். தயார் ஆகிவிட்டோம் என்று யார்
கையை உயர்த்தினீர்களோ, அவர்கள் தங்களுடைய பெயரை எழுதிக்
கொடுக்க வேண்டும் என்று பாப்தாதா கூறுகின்றார்கள். நல்ல விசயம்
அல்லவா! பாப்தாதா தான் பார்ப்பார்கள் வேறு எவரும்
பார்க்கமாட்டார்கள், மறைந்துவிடும். அப்படிப்பட்ட நல்ல
நம்பிக்கையான இரத்தினங்கள் யார் யார் உள்ளனர் என்பதை பாப்தாதா
பார்ப்பார்கள். அப்பேற்பட்டவர்கள் இருக்க வேண்டும் என்று
பாப்தாதாவும் நினைக்கின்றார்கள். ஆகவே, இவர்களிடம் இருந்து
பெயரைப் பெறவேண்டும், இவர்களுடைய புகைப்படத்தை எடுங்கள்.
பிரம்மா பாபா என்ன பதில் அளித்தார்கள்? நீங்கள் அனைவரும்
கூட நல்ல நல்ல பதில் அளித்தீர்கள். நீங்கள் சொடக்கு போடும்
நேரம் தான், அவர்கள் தயார் ஆகிவிடுவார்கள் என்று பிரம்மா பாபா
கூறினார். இது நல்ல விசயம் தானே! முழு மாலையும் தயார்
ஆகிவிட்டதா? என்று சிவபாபா கேட்டார். பாதி மாலைக்கான பதிலோ
கிடைத்துவிட்டது, முழு மாலைக்காக கேட்டார். அதற்கு சிறிது சமயம்
வேண்டும் என்று கூறினார். இந்த உரையாடல் நடந்தது. ஏன் சிறிது
சமயம் வேண்டும்? உரையாடலிலோ கேள்வி பதில் தான் நடைபெறும் அல்லவா!
ஏன் சிறிது சமயம் வேண்டும்? என்ன விசேஷத்தன்மை குறைவாக உள்ள
காரணத்தினால் பாதி மாலை தடைபட்டு நிற்கிறது? நாலாபுறங்களிலும்
உள்ள குழந்தைகள் - ஒவ்வொரு ஏரியா ஏரியாவாக எமர்ஜ் செய்து கொண்டே
சென்றார், எவ்வாறு உங்களுடைய ஜோன் உள்ளது அல்லவா, அதுபோலவே
ஒவ்வொரு ஜோனை (மண்டலம்) அல்ல, ஜோனோ மிக மிகப் பெரியதாக
இருக்கிறது அல்லவா! எனவே, ஒவ்வொரு விசேஷமான நகரத்தை எமர்ஜ்
செய்து கொண்டே சென்றார்கள் மற்றும் அனைவருடைய முகத்தைப்
பார்த்துக் கொண்டே சென்றார்கள், பார்த்துக் கொண்டிருக்கும்
பொழுதே பிரம்மா பாபா, ஒரு விசேஷத்தன்மையை இப்பொழுது
சீக்கிரத்திலும் சீக்கிரமாக அனைத்து குழந்தைகளும் தாரணை
செய்தார்கள் என்றால் மாலை தயார் ஆகிவிடும் என்று கூறினார்.
என்ன விசேஷத்தன்மை? இதையே கூறினார்கள் - சேவையில் முன்னேற்றம்
செய்துள்ளீர்கள், சேவை செய்து முன்னேறி இருக்கின்றீர்கள்
நன்றாக முன்னேறி இருக்கின்றீர்கள், ஆனால், ஒரு விசயத்தின்
சமநிலை குறைவாக உள்ளது. படைப்பதிலும் நன்றாக முன்னேறி
உள்ளீர்கள், ஆனால், படைப்பின் கூடவே பணிவும் இருக்க வேண்டும்
என்பதுவே அந்த விசயம் ஆகும். படைப்பு மற்றும் பணிவு.
மாத்திரையில் (எழுத்தில்) வேறுபாடு உள்ளது. ஆகையினால், படைப்பு
மற்றும் பணிவு ஆகிய இரண்டின் சமநிலையில் வித்தியாசம்
இருக்கின்றன. சேவையின் முன்னேற்றத்தில் பணிவிற்கு பதிலாக
ஆங்காங்கே, சில நேரங்களில் சுய அபிமானம் கூட கலப்படம்
ஆகிவிடுகின்றது. எந்தளவு சேவையில் முன்னேறுகின்றீர்களோ, அந்தளவு
விருத்தியில், திருஷ்டியில், பேச்சில், நடத்தையில் பணிவு
தென்பட வேண்டும், இந்த சமநிலை இப்பொழுது மிகவும் அவசியமாக
உள்ளது. இப்பொழுது வரை எந்தளவு அனைத்து சம்பந்தம் தொடர்பில்
உள்ளவர்களிடம் இருந்து ஆசீர்வாதங்கள் கிடைக்க வேண்டுமோ, அந்த
ஆசீர்வாதங்கள் கிடைக்க வில்லை. மேலும், ஒருவர் எவ்வளவு தான்
முயற்சி செய்தாலும், அது நல்லது தான், ஆனால், முயற்சியின் கூடவே
ஒருவேளை ஆசீர்வாதங்களின் கணக்கு சேமிப்பு ஆகவில்லை எனில் வள்ளல்
தன்மையின் நிலை, கருணை உள்ளம் உடையவராகும் நிலையின் அனுபவம்
ஏற்படாது. சுயமுயற்சி மற்றும் அதன் கூடவே பாப்தாதா மற்றும்
பரிவாரத்தில் சிறியவர்கள் மற்றும் பெரியவர்களின் ஆசீர்வாதங்கள்
- இது அவசியம் ஆகும். இந்த ஆசீர்வதாங்களை, இந்த புண்ணியத் தின்
கணக்கை சேமிப்பு செய்ய வேண்டும். இது மதிப்பெண்களில் கூடுதலாக
சேரும். எவ்வளவு வேண்டுமானாலும் சேவை செய்யுங்கள், தன்னுடைய
சேவையின் ஆர்வத்தில் முன்னேறிக் கொண்டே செல்லுங்கள், ஆனால்,
சேவையின் கூடவே பணிவு மற்றும் நட்புடன் பழகும் சுபாவம் ஆகிய
இந்த விசேஷத் தன்மைகளை அனைத்து குழந்தைகளிடத்திலும் பாப்தாதா
பார்க்க விரும்பு கின்றார்கள். இந்த புண்ணியத்தின் கணக்கு
சேமிப்பு ஆகவேண்டியதும் மிக மிக அவசியமானது ஆகும். பிறகு, நானோ
மிகுந்த சேவை செய்தேன், நான் இதைச் செய்தேன், நான் அதைச்
செய்தேன், நான் இதைச் செய்தேன், ஆனால், என்னுடைய நம்பர் ஏன்
பின்னால் உள்ளது? என்று கேட்கக் கூடாது. ஆகையினால், நிகழ்கால
சமயம் இந்த புண்ணியத்தின் கணக்கை அதிகப்படியாக சேமிப்பு
செய்யுங்கள் என்று பாப்தாதா முன்னதாகவே சமிக்ஞை கொடுக்கின்றார்
கள். இவர்களே இப்படித் தான், இவர்கள் மாறமாட்டார்கள் என்று
நினைக்காதீர்கள். உங்களால் இயற்கையை மாற்ற முடிகிறது, இயற்கையை
அனுசரித்துச் செல்வீர்கள் அல்லவா, பிராமண ஆத்மாவை அனுசரித்துச்
செல்ல முடியாதா என்ன? எதிர்ப்பவர்களை அனுசரித்துச் செல்லுங்கள்
- இதுவே படைப்பு மற்றும் பணிவின் சமநிலை ஆகும். கேட்டீர்களா!
இறுதியில் வீட்டுப்பாடம் கொடுப்போம் அல்லவா! ஏதாவது
வீட்டுப்பாடம் கிடைக்கும் அல்லவா! பாப்தாதா அடுத்து வரக்கூடிய
சீசனில் வருவார், ஆனால்.... நிபந்தனை போடுவார். பாருங்கள்,
சாகார பாகத்தின் நடிப்பும் நடந்தது, அவ்யக்த பாகத்தின்
நடிப்பும் நடந்தது, இவ்வளவு சமயம் அவ்யக்த பார்ட் நடக்கும்
என்பதை கனவிலும் கூட நினைக்கவில்லை. இரண்டு பாகங்களும்
நாடகத்தின் அனுசாரம் நடந்தன. இப்பொழுது ஏதாவது நிபந்தனை போட
வேண்டுமா அல்லது வேண்டாமா! உங்கள் கருத்து என்ன? இதுபோலவே
நடந்து கொண்டு இருக்குமா என்ன? ஏன்? இன்று வதனத்தில்
நிகழ்ச்சியைப் பற்றி கேட்டார்கள். இந்த நாடகத்தின் பாகம் எதுவரை
நடக்கும்? ஏதாவது தேதி உள்ளதா? என்ற இந்த உரையாடலும்
பாப்தாதாவிடையே நடந்தது. (டெஹரடூன் ப்ரேம் சகோதரியிடம்)
ஜாதகத்தை சொல்லுங்கள், எதுவரை நடக்கும்? எதுவரை நடக்கும்? என்ற
இந்தக் கேள்வி இப்பொழுது எழுந்துள்ளது. ஆனால் . . . என்பதற்காக
ஆறு மாதங்களோ உள்ளன அல்லவா! ஆறு மாதங்களுக்குப் பிறகு தான்
அடுத்த சீசன் ஆரம்பமாகிறது. எனவே, பாப்தாதா ரிசல்ட்
பார்ப்பதற்கு விரும்புகிறார்கள். உள்ளம் தூய்மையாக இருக்க
வேண்டும், உள்ளத்தில் எவ்வித பழைய சமஸ்காரத்தினுடைய, அபிமானம்,
அவமானத்தினுடைய உணர்வின் கறை இருக்கக் கூடாது.
பாப்தாதாவிடம் உள்ளத்தின் சித்திரத்தை படம் பிடிக்கக்கூடிய
இயந்திரம் உள்ளது. இங்கே எக்ஸ்ரேயில் இந்த ஸ்தூல இதயம்
தெரிகிறது அல்லவா. வதனத்தில் உள்ளத்தின் சித்திரம் மிகவும்
தெளிவாகத் தெரியும். பலவிதமான சிறிய, பெரிய கறை மற்றும்
தளர்ச்சி தெளிவாகத் தெரிகின்றது.
இன்று ஹோலி கொண்டாட வந்திருக்கின்றீர்கள் அல்லவா! கடைசி
முறையாக இருக்கும் காரணத்தால் முதலில் வீட்டுப்பாடத்தை
சொல்லிவிட்டோம், ஆனால், ஹோலி கொண்டாடுவது என்றால் நடந்து
முடிந்தவைக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று ஹோலியின்
அர்த்தத்தைப் பிறருக்கு கூறுகின்றீர்கள். ஹோலி கொண்டாடுவது
என்றால் உள்ளத்தில் எந்தவொரு சிறிய அல்லது பெரிய கறை இருக்கக்
கூடாது, முற்றிலும் உள்ளம் தூய்மையாக இருப்பது, சர்வ பிராப்தி
சம்பன்னமாக இருப்பது என்பதாகும். பாப்தாதாவிற்கு குழந்தைகள்
மீது அன்பு இருக்கும் காரணத்தினால் ஒரு விசயம் பிடிப்பதில்லை
என்று பாப்தாதா முன்பே கூறியிருக்கின்றார்கள். அது - அதிகமாக
உழைக்கின்றீர்கள். ஒருவேளை, உள்ளம் தூய்மையாக இருந்தது என்றால்
உழைப்பு இருக்காது, உள்ளத்தை கொள்ளை கொள்பவர் (திலாராம்)
உள்ளத்தில் நிறைந்திருப்பார் மற்றும் நீங்கள் திலாராமின்
உள்ளத்தில் நிறைந்திருப்பீர்கள். உள்ளத்தில் தந்தை
நிறைந்திருக்கின்றார். எப்படிப்பட்ட ரூபத்திலும் மாயா, சூட்சும
ரூபத்திலோ, இராயல் ரூபத்திலோ, பெரிய ரூபத்திலோ, எப்படிப்பட்ட
ரூபத்திலும் மாயா வரமுடியாது. கனவிலும், சங்கல்பத்திலும் கூட
மாயா வரமுடியாது. எனவே, உழைப்பிலிருந்து விடுபட்டவர்
ஆகிவிடுவீர்கள் அல்லவா! மனதளவிலும் கூட உழைப்பிலிருந்து
விடுப்பட்ட நிலையை பாப்தாதா பார்க்க விரும்புகின்றார்கள்.
உழைப்பிலிருந்து விடுபட்டவர்கள் தான் ஜீவன்முக்தியின் அனுபவம்
செய்ய முடியும். ஹோலி கொண்டாடுவது என்றால் உழைப்பிலிருந்து
விடுபட்டு, ஜீவன்முக்தியின் அனுபவத்தில் இருப்பது ஆகும்.
இப்பொழுது பாப்தாதா மனதின் சக்தி மூலம் சேவையை சக்திசாலியாக
ஆக்குவதற்கு விரும்புகின்றார்கள். வார்த்தைகள் மூலம் சேவை
நடந்து கொண்டிருக்கிறது, நடந்து கொண்டே யிருக்கும், ஆனால்,
இதில் சமயம் எடுக்கிறது. சமயம் குறைவாக உள்ளது, சேவை
இப்பொழுதும் நிறைய உள்ளது. நீங்கள் அனைவரும் ரிசல்ட்டை
கூறினீர்கள். இப்பொழுது வரை 108 மணி மாலையைக் கூட உருவாக்க
முடியவில்லை. 16 ஆயிரம், 9 இலட்சம் - இதுவோ மிகவும் தூரம்
ஆகிவிட்டது. இதற்காக வேகமான விதி தேவை. முதலில் தன்னுடைய மனதை
சிரேஷ்டமாக, சுத்தமானதாக ஆக்குங்கள், ஒரு நொடி கூட வீணானதில்
செல்லக்கூடாது. இப்பொழுது வரை பெரும்பான்மையானோரிடம் வீணான
சங்கல்பத்தின் சதவிகிதம் இருக்கிறது. அசுத்தம் இல்லை, ஆனால்,
வீணானது இருக்கின்றது. ஆகையினால், மனதின் சேவை தீவிர வேகத்தில்
நடைபெற வில்லை. இப்பொழுது ஹோலி கொண்டாடுவது என்றால் மனதை
வீணானதில் இருந்தும் கூட தூய்மையானதாக ஆக்குவது.
ஹோலி கொண்டாடினீர்களா? கொண்டாடுவது என்றால் ஆகுவது.
உலகத்தினரோ வித விதமான நிறங்களினால் ஹோலி கொண்டாடுகின்றனர்,
ஆனால், பாப்தாதா அனைத்து குழந்தைகளின் மீதும் தெய்வீக
குணங்களின், தெய்வீக சக்திகளின், ஞான ரோஜாவின் நிறத்தை தூவிக்
கொண்டிருக் கின்றார்கள்.
இன்று வதனத்தில் இன்னும் ஒரு சமாச்சாரம் நடைபெற்றது. ஒன்று
உரையாடல் நடந்தது என்பதைக் கூறிவிட்டோம். மற்றொன்று உங்களுடைய
நல்ல நல்ல சேவைக்குத் துணையாக இருந்தவர்கள், யாரெல்லாம்
அட்வான்ஸ் பார்ட்டியில் சென்றுவிட்டார்களோ, அவர்களும் இன்று
வதனத்தில் ஹோலி கொண்டாடும் நாளாக இருந்தது. உங்கள் அனைவருக்கும்
கூட எப்பொழுதாவது ஏதாவது வாய்ப்பு கிடைக்கும்பொழுது அவர்களுடைய
நினைவு வருகிறது அல்லவா. தன்னுடைய தாதிகளுடைய, தோழிகளுடைய,
பாண்டவர்களுடைய நினைவு வருகிறது அல்லவா! அட்வான்ஸ் பார்ட்டி
மிகப் பெரிய குழுவாகிவிட்டது. ஒருவேளை பெயரைச் சொன்னால் அனேகர்
உள்ளனர். வதனத்தில் இன்று அனைத்து விதமான ஆத்மாக்களும் ஹோலி
கொண்டாட வந்திருந்தார்கள். அனைவரும் அவரவர் முயற்சியின்
பிராப்தியின் அனுசாரம் வெவ்வேறு பாகம் ஏற்று நடித்துக்
கொண்டிருந்தார்கள். அட்வான்ஸ் பார்ட்டியின் பாகம் இப்பொழுது வரை
மறைமுகமாக உள்ளது. அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்
என்று நீங்களும் யோசிக்கின்றீர்கள் அல்லவா? சம்பூரணம் ஆகி
தெய்வீகப் பிறப்பு மூலம் புதிய சிருஷ்டிக்கு நிமித்தம் ஆகுங்கள்
என்று அவர்கள் உங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அனைவரும் தன்னுடைய பாகத்தில் மகிழ்ச்சியாக இருக்கின்றார்கள்.
நாம் சங்கமயுகத்தில் இருந்து வந்திருக்கின்றோம் என்ற நினைவு
அவர்களுக்கு இல்லை. தெய்வீகத்தன்மை உள்ளது, தூய்மை உள்ளது,
பரமாத்ம அன்பு உள்ளது, ஆனால் ஞானம் தெளிவாக எமர்ஜ் (வெளிப்பட
வில்லை) ஆகவில்லை. விடுபட்டதன்மை உள்ளது, ஆனால், ஒருவேளை ஞானம்
எமர்ஜ் ஆகி விட்டால் அனைவரும் மதுபனிற்கு ஓடி வந்துவிடுவார்கள்
அல்லவா! ஆனால், இவர்களுடைய பாகம் தனிப்பட்டதாக உள்ளது,
ஞானத்தின் சக்தி உள்ளது. சக்தி குறையவில்லை. நிரந்தரமாக
நியமப்படியான வீட்டின் சூழ்நிலை, தாய் தந்தையின் திருப்தியான
மனநிலை மற்றும் ஸ்தூல சாதனங்கள் ஆகிய அனைத்தும் கிடைத்துள்ளன.
நியமத்தில் மிகவும் உறுதியாக உள்ளனர். வரிசைக்கிரமமாக
இருக்கின்றார்கள், ஆனால், விசேஷ ஆத்மாக்கள் உறுதியாக
இருக்கின்றார்கள். நம்முடைய முந்தைய பிறப்பு மற்றும் மறுபிறப்பு
மகானாக இருந்தது மற்றும் இருக்கும் என்பதை உணர்கின்றார்கள்.
பெரும்பான்மையானோரின் தோற்றம் கூட இராயல் குடும்பத்தின்
திருப்தியான ஆத்மாக்களாக, நிறைந்திருக்கும் ஆத்மாக்களாக,
மகிழ்ச்சியான ஆத்மாக்களாக மற்றும் தெய்வீக குணங்கள் நிறைந்த
ஆத்மாக்களாகத் தென்படுகின்றார்கள். இதுவே அவர்களுடைய வரலாறு,
ஆனால், வதனத்தில் என்ன நடந்தது? ஹோலி எப்படி கொண்டாடினார்கள்?
ஹோலியில் வெவ்வேறு வண்ணங்களுடைய, பல வண்ணப் பொடிகளுடைய தட்டுகளை
நிறைத்து வைக் கின்றார்கள். எவ்வாறு பல வண்ணப் பொடிகள் உள்ளனவோ,
அதுபோல் வதனத்தில் கூட மிகவும் சூட்சுமமான ஜொலிக்கக் கூடிய
வைரங்கள் இருந்தன. ஆனால், கனமானதாக இல்லை, எவ்வாறு பொடியை
கையில் எடுத்தால் இலேசாக இருக்கிறது அல்லவா. அதுபோல் விதவிதமான
நிறம் கொண்ட வைரங்களால் தட்டுகள் நிறைந்திருந்தன. எப்பொழுது
அனைவரும் வந்துவிட்டார்களோ, அப்பொழுது வதனத்தின் சொரூபம் எப்படி
இருந்தது, அதை அறிவீர்களா? ஒளி நிறைந்ததாக இருக்கின்றது அல்லவா!
பார்த்திருக்கிறீர்கள் அல்லவா! ஒளியினுடைய பிரகாசமயமான சரீரமோ
ஏற்கனவே ஜொலித்துக் கொண்டிருக்கின்றது. பாப்தாதா அனைவரையும்
அவர்களுடைய சங்கமயுக சரீரத்தில் எமர்ஜ் செய்தார்கள். எப்பொழுது
சங்கமயுக சரீரத்தில் எமர்ஜ் ஆனார்களோ, அப்பொழுது
ஒருவருக்கொருவர் சந்திக்கத் துவங்கிவிட்டார்கள். அட்வான்ஸ்
பார்ட்டியின் பிறப்பினுடைய விசயங்களை மறந்துவிட்டனர் மற்றும்
சங்கமயுகத்தின் விசயங்கள் எமர்ஜ் ஆகிவிட்டன. சங்கமயுகத்தின்
விசயங்களை எப்பொழுது ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டார் களோ,
அப்பொழுது எவ்வளவு மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள் என்பதை நீங்கள்
புரிந்திருப்பீர்கள். மிகவும் மகிழ்ச்சியோடு ஒருவருக்கொருவர்
கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டிருந்தார்கள். பாப்தாதா கூட
பார்த்தார்கள் - இவர்கள் மிகுந்த ஆனந்தத்தை அனுபவித்துக்
கொண்டிருக் கின்றார்கள், எனவே, இவர்களை சந்திக்க விட்டுவிடுவோம்.
தங்களுக்குள் அவரவர் வாழ்க்கையின் அனேக கதைகளை ஒருவருக்கொருவர்
சொல்லிக் கொண்டிருந்தார்கள், பாபா அப்படி சொன்னார், பாபா எனக்கு
அன்பு கொடுத்தார், அறிவுரை வழங்கினார், பாபா அப்படி
கூறுகின்றார், பாபா - பாபா, பாபா - பாபா தான் இருந்தது. கொஞ்ச
நேரத்திற்குப் பிறகு என்ன ஆயிற்று? அனைவருடைய சமஸ்காரங்களைப்
பற்றியும் உங்களுக்குத் தெரியும். இந்தக் குழுவில் அனைவரையும்
விட இரமணீகரமானவராக யார் இருந்தார்கள்? (தீதி மற்றும் சந்திரமணி
தாதி) தீதி முதலில் எழுந்தார்கள். சந்திரமணி தாதியினுடைய கையைப்
பிடித்தார்கள், நடனமாட ஆரம்பித்து விட்டார்கள். மேலும், தீதி
இங்கே போதையில் சென்றுவிடுவார்கள் அல்லவா, அதுபோல் போதையில்
நன்றாக நடனமாடினார்கள். மம்மாவை நடுவில் நிற்க வைத்து அவர்களைச்
சுற்றி வட்டமாக நின்று கொண்டார்கள், ஒருவருக்கொருவர்
கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடி னார்கள், நிறைய
விளையாடினார்கள், மேலும், பாப்தாதாவும் பார்த்து பார்த்து
மிகவும் புன்னகைத்துக் கொண்டேயிருந்தார்கள். ஹோலி
கொண்டாடுவதற்கு வந்தார்கள், மேலும், விளையாடவும் செய்தார்கள்.
கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அனைவரும் பாப்தாதாவின் கரங்களுக்குள்
அடங்கிவிட்டார்கள் மற்றும் அனைவரும் முழுவதுமாக அன்பில் மூழ்கி
விட்டார்கள். அதற்கு பிறகு, பாப்தாதா அனைவரின் மீதும் -
விதவிதமான வண்ணங்களில் வைரங்கள் இருந்தன, மிகவும் சிறியதாக
இருந்தன, எவ்வாறு ஒரு பொருளின் துகள்கள் இருக்கும் அல்லவா,
அதுபோல் இருந்தன. ஆனால், ஜொலிப்போ மிகுதியாக இருந்தது, அவற்றை
பாப்தாதா அனைவரின் மீதும் தூவினார்கள். சரீரமும் ஜொலித்துக்
கொண்டிருந்தது அல்லவா, அதன் மீது இந்த விதவிதமான வண்ண வைரங்கள்
ஒட்டியதால் அனைவரும் மிகவும் அலங்கரிக்கப்பட்டது போல்
ஆகிவிட்டார்கள். சிகப்பு, மஞ்சள், பச்சை . . . ஏழு நிறங்கள்
என்று சொல்கின்றார்கள் அல்லவா. ஏழு நிறங்களும் இருந்தன.
அனைவரும் மிகவும் ஜொலித்துக் கொண்டிருந்தார்கள், சத்யுகத்திலும்
கூட அப்பேற்பட்ட ஆடை இருக்காது. அனைவரும் ஏற்கனவே ஆனந்தத்தில்
இருந்தார்கள். பிறகு, ஒருவர் மீது ஒருவர் வைரங்களைத் தூவ
ஆரம்பித்துவிட்டார்கள். இரமணீகரமான சகோதரிகளும் நிறைய பேர்
இருந்தார்கள் அல்லவா. மிக மிக ஆனந்தமாகக் கொண்டாடினார்கள்.
ஆனந்தத்திற்குப் பிறகு என்ன நடக்கும்? பாப்தாதா முன்கூட்டியே
அனைவருக்கும் போக் ஊட்டிவிட்டார்கள், நீங்களோ நாளை போக்
வைப்பீர்கள் அல்லவா. ஆனால், பாப்தாதா மதுபனுடைய,
சங்கமயுகத்தினுடைய விதவிதமான போக்கை அனைவருக்கும்
ஊட்டிவிட்டார்கள். அதிலும் விசேஷமாக ஹோலியினுடைய போக் எது? (ஜிலேபி)
நீங்கள் ரோஜா மலரையும் கூட எண்ணெயில் பொரிக்கின்றீர்கள் அல்லவா.
விதவிதமான சங்கமயுகத்தின் போக்கை ஊட்டிவிட்டார்கள். உங்களுக்கு
முன்னதாகவே அவர்கள் போக்கை சாப்பிட்டு விட்டார்கள், உங்களுக்கு
நாளை கிடைக்கும். நல்லது. நன்றாகக் கொண்டாடினார்கள், நடனமாடி
னார்கள், பாடினார்கள். அனைவரும் இணைந்து ஆஹா பாபா, என்னுடைய
பாபா, இனிமையான பாபா என்ற பாடல் பாடினார்கள். எனவே, ஆடினார்கள்,
பாடினார்கள், சாப்பிட்டார்கள் மற்றும் இறுதியாக என்ன நடக்கிறது?
வாழ்த்து கொடுத்தல் மற்றும் விடைபெறுதல். நீங்களும் கொண்டாடி
னீர்களா அல்லது கேட்க மட்டும் செய்தீர்களா? ஆனால், முதலில்
இப்பொழுது ஃபரிஷ்தா ஆகி பிரகாசமயமான உடல் தரித்தவர்களாக
ஆகிவிடுங்கள். ஆக முடியுமா அல்லது முடியாதா? பெரிய சரீரமாக
உள்ளதா? இல்லை. நொடியில் ஜொலிக்கக்கூடிய டபுள் லைட் சொரூபம்
ஆகிவிடுங்கள். ஆகமுடியுமா? முற்றிலுமே ஃபரிஷ்தா. (பாப்தாதா
அனைவரையும் டிரில் செய்ய வைத்தார்கள்)
இப்பொழுது தன் மீது விதவிதமான நிறங்கள் கொண்ட
ஜொலிக்கக்கூடிய வைரங்களை சூட்சும சரீரத்தின் மீது தூவுங்கள்
மற்றும் சதா அப்பேற்பட்ட தெய்வீக குணங்களின் நிறம், சக்திகளின்
நிறம், ஞானத்தின் நிறத்தை தன் மீது பூசிக்கொண்டே இருங்கள்.
மேலும், அனைத்தையும் விட பெரிய நிறமான பாப்தாதாவினுடைய
தொடர்பின் நிறத்தில் சதா வண்ணமயமாக இருங்கள். அப்பேற்பட்ட அமரர்
ஆகுங்கள். நல்லது.
அப்பேற்பட்ட உள்நாடு, வெளிநாட்டினுடைய ஃபரிஷ்தா சொரூப
குழந்தைகளுக்கு, சதா சுத்தமான உள்ளம், பிராப்தி நிறைந்த
குழந்தைகளுக்கு, உண்மையான ஹோலி கொண்டாடக்கூடிய அதாவது
அர்த்தத்துடன் சித்திரத்தை பிரத்யட்ச ரூபத்தில்
கொண்டுவரக்கூடிய குழந்தைகளுக்கு, சதா படைப்பு மற்றும் பணிவில்
சமநிலையோடு இருக்கக்கூடிய குழந்தைகளுக்கு, சதா ஆசீர்வாதங் களின்
புண்ணிய கணக்கை சேமிப்பு செய்யக்கூடிய குழந்தைகளுக்கு மிக மிக
பலகோடி மடங்கு அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.