24.06.25 காலை முரளி
ஓம் சாந்தி பாப்தாதா,
மதுபன்
மாதேஸ்வரி அவர்களின் புண்ணிய நினைவு நாள் அன்று காலை வகுப்பில்
வாசிப்பதற்கான இனிமையான மஹா வாக்கியம்
பாடல்: என்னுடைய சிறிய இந்த உலகத்தை பார்...
இந்தப் பாடல் எந்த காலத்தில் பாடப்பட்டது. ஏனென்றால் இந்த
சங்கமயுக நேரத்தில் தான் நம் பிராமண குலத்தின் இந்த சிறியதான
உலகம் உள்ளது. இது நம்முடைய எப்படிப்பட்ட குடும்பம் என்பதனை
வரிசைக் கிரமமாக கூறுகிறீர்கள். நாம் பரம தந்தை பரமாத்மா
சிவனுடைய பேரக் குழந்தைகள், பிரம்மா சரஸ்வதியின் வாய்வழி ஞானம்
பெற்ற குழந்தைகள் ஆவோம். மற்றும் விஷ்ணு சங்கர் நம்முடைய
பெரியப்பாக்கள் ஆவார்கள். மேலும் நாமனைவரும் நமக்குள் சகோதரன்
சகோதரிகள் ஆவோம். இதுதான் நம்முடைய சிறியதான உலகம் ஆகும்.
இதற்குமேல் வேறு சம்பந்தங்கள் படைக்கப்படவே இல்லை. இந்த
நேரத்திற்கு இவ்வளவு தான் சம்பந்தங்கள் எனலாம். பாருங்கள் நமது
சம்பந்தம் எவ்வளவு பெரிய அதிகாரம் படைத்தவரோடு இருக்கின்றது.
நம்முடைய தாத்தாவாக இருக்கிறார் சிவன். அவருடைய பெயர் எவ்வளவு
உயர்ந்ததாக இருக்கிறது. அவர் முழு மனித உலகினுடைய விதை ரூபமாக
இருக்கிறார். அனைத்து ஆத்மக் களுக்கும் நன்மை செய்பவராக
இருக்கின்ற காரணத்தினால் அவருக்கு கூறப்படுகின்றது ஹர ஹர கள்ளம்
கபடமற்ற சிவன் மஹாதேவன் என்று. அவர் முழு உலகின் துக்கத்தை
நீக்கி சுகத்தை அளிப்பவர். அவர் மூலம் நமக்கு சுகம், சாந்தி,
பவித்திரதா இவற்றின் பெரிய உரிமை கிடைக் கின்றது. அமைதியில்
பிறகு வேறு கர்ம பந்தனங்களின் கணக்கு வழக்குகள் இருப்பதில்லை.
ஆனால் இந்த இரண்டு விஷயங்களும் (சுகம் சாந்தி)
பவித்ரத்தாவினுடைய ஆதாரத்தில் கிடைக் கிறது. எதுவரை தந்தையின்
வளர்ப்பின் முழுமையான ஆஸ்தி பெற்று தந்தையிடமிருந்து சான்றிதழ்
பெறவில்லையோ அதுவரை அந்த ஆஸ்தி(தேவதா நிலை) கிடைக்க முடியாது.
பாருங்கள் பிரம்மா மீது எவ்வளவு பெரிய காரியத்தின் பொறுப்பு
உள்ளது - அசுத்தம் நிறைந்த ஐந்து விகாரங்களின் அழுக்கு பட்டு
இருக்கும் அபவித்திர ஆத்மாக்களை தூய்மையாக மாற்று கிறார், அந்த
அலௌகீக காரியத்திற்கான பரிசு பிறகு சத்யுகத்தில் முதல் நம்பர்
ஸ்ரீ கிருஷ்ணர் பதவி கிடைக்கின்றது. இப்பொழுது பாருங்கள் அந்த
தந்தையோடு உங்களுடைய சம்பந்தம் எப்படிப்பட்டதாக இருக்கிறது!
எனவே எவ்வளவு கவலையற்ற நிலை மற்றும் குஷி இருக்க வேண்டும்.
இப்பொழுது ஒவ்வொருவரும் தன்னைத்தான் தனது இதயபூர்வமாக கேளுங்கள்
- நான் முழுமையாக அவருடையவராகி விட்டேனா?
எப்பொழுது பரமாத்மா தந்தை வந்திருக்கிறாரோ அப்பொழுது நாம்
அவரிடமிருந்து முழுமையான ஆஸ்தியை பெற்று விட வேண்டும் என்று
யோசிக்க வேண்டும் - மாணவர்களுடைய வேலையே முழுமையாக முயற்சி
செய்து ஸ்காலர்ஷிப் பெறுவதாகும். எனவே நாம் ஏன் முதல் நம்பரின்
லாட்டரியை ஜெயிக்க கூடாது! அது தான் வெற்றி மாலையில் வருவதாகும்.
மற்றபடி சிலர் கையில் இரண்டு லட்டுக்களை பிடித்து கொண்டு அமர்ந்
திருக்கிறார்கள், இவ்வுலகத்தின் எல்லைக் குட்பட்ட சுகத்தையும்
பெற வேண்டும் மற்றும் அங்கு சொர்க்கத்திலும் ஏதாவது சுகம்
பெறுவோம் - இப்படிப்பட்ட சிந்தனை உடையவருக்கு மத்திய நிலை
அல்லது தாழ்ந்த நிலை முயற்சியாளர் என்று கூறலாம், சர்வோத்தம
முயற்சியாளர் என்று கூற முடியாது. எப்பொழுது தந்தை கொடுப்பதில்
தயக்கம் காட்டுவதில்லையோ அப்பொழுது பெறுபவர்கள் ஏன்
தயங்குகிறீர்கள்? எனவே தான் குருநானக் அவர்கள் கூறியுள்ளார்,
பரமாத்மா வள்ளலாக இருக்கிறார், சக்தி மிக்க வராக இருக்கிறார்,
ஆனால் ஆத்மாக்களுக்கு (பரமாத்மாவிடமிருந்து) பெறுவதற்கான சக்தி
கூட இல்லை. இப்படி ஒரு பழமொழியும் இருக்கிறது - கொடுப்பவர்
கொடுத்து கொண்டே இருக்கிறார் ஆனால் பெறுபவர் களைப்படைந்து
விடுகிறார். உங்களது இதயத்தில் இந்த எண்ணம் வரலாம் - "நானும்
இந்த பதவியை அடைய வேண்டும்" என்று நான் ஏன் விரும்பக் கூடாது,
ஆனால் பாருங்கள், தந்தை எவ்வளவு முயற்சி செய்கிறார், இருந்தும்
மாயை எவ்வளவு தடையை கொண்டு வருகிறது, ஏன்? இப்பொழுது
மாயையினுடைய ராஜ்ஜியம் முடியப் போகின்றது. இப்பொழுது மாயை
அனைத்து சாரம்சத்தையையும் அழித்து விட்டது, அப்பொழுதுதான்
பரமாத்மா வருகிறார். அவரிடம் அனைத்து சாரம்சமும் நிறைந்து
இருக்கிறது. அவரிடம் அனைத்து சம்பந்தங் களினுடைய சுவை
கிடைக்கின்றது எனவே தான் தாயும் நீயே தந்தையும் நீயே...
இப்படிப்பட்ட அந்த பரமாத்மாவின் மகிமை பாடப்படுகின்றது, எனவே
இப்படிப்பட்ட உயர்ந்த சம்பந்தம் கிடைத்திருக்கும் இந்த
நேரத்திற்கு தான் அனைத்து அர்ப்பணமும்.
எனவே பரமாத்மாவோடு, 21 பிறவிகளுக்கான சுகத்தின் பலனை அளிக்கும்
இவ்வளவு முழுமை யான சம்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், இதுதான்
புருஷார்தத்தின் வெற்றி ஆகும். ஆனால் "21 பிறவிகளின்" இந்த
வார்த்தையை கேட்டு கவனக்குறைவாக இருந்து விடாதீர்கள். 21 பிறவி
களுக்காக இப்பொழுது முயற்சியும் செய்ய வேண்டும். 21
பிறவிகளுக்கு பிறகு தாழ்ந்து தான் செல்ல வேண்டும் எனும் பொழுது
அங்கு வெற்றி என்ன கிடைத்தது? என்று யோசிக்க வேண்டாம். ஆனால்
நாடகத்தில் ஆத்மாக்களுக்கான எந்த ஒரு மிக உயர்ந்த வெற்றி
நிச்சயிக்கப்பட்டு உள்ளதோ அது கிடைக்கத்தானே செய்யும். தந்தை
வந்து நம்மை சம்பூர்ண நிலைக்கு அழைத்து செல்கிறார், ஆனால் நாம்
தந்தையை மறந்து விடுகிறோம், அப்பொழுது அவசியம் தாழ்ந்து சென்று
விடுகிறோம். இதில் தந்தையின் மீது எவ்வித தவறும் கிடையாது.
இப்பொழுது குறை ஏற்பட்டுள்ளது என்றால் அது நாமாகிய
குழந்தைகளுடையது தான். சத்தியயுகம், திரேதா யுகத்தின் முழு
சுகமும் இந்த பிறவியின் (பிராமண பிறவி) முயற்சியின் ஆதாரத்தில்
படி தான் இருக்கிறது. அப்படியானால் தனது உயர்ந்த பார்ட்டை
நடிப்பதற்கான சம்பூர்ண முயற்சி ஏன் செய்ய மாட்டீர் கள்? முயற்சி
இல்லாமல் ஆஸ்தி எப்படி எடுக்க முடியும்? முயற்சியை மனிதர்கள்
எப்போதும் சுகத்திற்காகவே செய்கின்றார்கள். சுக
துக்கத்தி-ருந்து விலகியிருப்பதற்கான முயற்சியை யாரும்
செய்வதில்லை. நாடகத்தின் கடைசியில் பரமாத்மா வந்து அனைத்து
ஆத்மாக்களுக்கும் எச்சரிக்கை கொடுக்கின்றார், அனைத்தி-ருந்தும்
விடுபட்டு தூய்மை யாகுங்கள், இது தான் பரமாத்மாவின் காரியம்.
அவர் தனக்கான நேரத்தில் வந்து தானே கூறுகின்றார். இப்போது
ஆத்மாக்கள் மறுபடியும் பார்ட் ஏற்று நடிக்க வேண்டும் என்றால்
ஏன் உயர்ந்த பாகத்தை ஏற்று நடிக்கக்கூடாது.
மனித உலகத்தை சுகம் நிறைந்ததாக மாற்றக்கூடிய தந்தைக்கு தெரியும்,
மனித உலகம் எப்படி சுகம் நிறைந்ததாக மாறும் என்று? எதுவரை
ஆத்மாக்கள் தூய்மையாக மாறவில்லையோ அதுவரை உலகம் சுகம்
நிறைந்ததாக ஆக முடியாது எனவே அவர் வந்து முதன் முதலில்
ஆத்மாக்களை தான் தூய்மையாக்குகிறார். இப்பொழுது ஆத்மாவில் மாசு
(அபவித்திரம்) படிந்திருக் கிறது. முதலில் அந்த மாசுக்களை
நீக்க வேண்டும். பிறகு ஆத்மாவின் பலம் மூலம் ஒவ்வொரு
விஷயத்திலிருந்தும் அதனுடைய தமோபிரதான (தூய்மையற்ற) நிலை மாறி
சதோபிரதானமாக (தூய்மையான) மாறும், அதற்கு தான் கூறப்படுகிறது
அனைவரும் தங்க யுகத்திற்கு வந்து விட்டார்கள் என்று, அப்பொழுது
இந்த தத்துவங்கள் அனைத்தும் தங்க யுக நிலைக்கு வந்து விடும்.
ஆனால் முதலில் ஆத்மாவின் நிலை (பவித்ரமாக) மாறுகிறது. அப்பொழுது
ஆத்மாவை மாற்றுபவர் அதாவது ஆத்மாக்களை தூய்மையாக்குபவர் - அவர்
(தந்தை) தான் அதிகாரம் படைத்த வராக இருக்கிறார். நீங்கள்
பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் அல்லவா, இப்பொழுது உலகம் மாறி
கொண்டிருக்கிறது என்பதை. முதலில் தன்னை மாற்ற வேண்டும்,
எப்பொழுது நாம் சுயம் தன்னை மாற்றுகிறோமோ அப்பொழுது அதன்
அடிப்படையில் உலகம் மாறும். ஒருவேளை இதுவரை தனக்குள் எவ்வித
வித்தியாசம் வரவில்லை அதாவது தன்னைத்தான் மாற்றவில்லை என்றால்
பிறகு உலகம் எப்படி மாறும்? எனவே ஒவ்வொரு நாளும் தன்னை சோதனை
செய்யுங்கள். எப்படி கணக்கு வழக்கு அட்டவணை வைப்பவர்கள் இரவு,
இன்று எவ்வளவு சேமிப் பானது என்ற தமது கணக்குகளை
சரிபார்க்கின்றார்கள் அல்லவா? அனைவரும் தங்களது கணக்கு
வழக்குகள் வைக்கிறார்கள். அதேபோல் இங்கு தனது கணக்கு வழக்குகளை
வைத்திருங்கள் - முழு நாளில் எனக்கு எவ்வளவு லாபம் கிடைத்தது?
மேலும் எவ்வளவு நஷ்டமானது? ஒருவேளை நஷ்டத்தின் கணக்கு சிறிது
அதிகமாக இருந்தது என்றால் அடுத்த நாளுக்குகாக தனக்கு தானே
எச்சரிக்கை யோடு இருங்கள். இதேபோல் தன்மீது கவனம் வைப்பதன்
மூலம் நமது அனுகூலங்கள் (நன்மைகள்) அதிகமாகி, அதிகமாகி தனது
பதவி என்னவோ அதனை பிடித்து கொண்டே செல்வோம். எனவே இப்படிப்பட்ட
சோதனை மேற்கொண்டு சுயம் தன்க்குள் "நான் மாறி விட்டேன்" என்று
உணர வேண்டும். இப்படி கிடையாது - நாம் தேவதையாவோம், அது
பின்னால் ஆகத்தான் செய்வோம், இப்பொழுது எப்படி இருக்கிறேனோ
நன்றாகவே இருக்கிறேன்... இல்லை. இப்பொழுதிலிருந்தே அந்த தேவதா
சம்ஸ்காரத்தை உருவாக்க வேண்டும். இதுவரை அந்த ஐந்து
விகாரங்களுக்கு வசப்பட்ட சம்ஸ்காரம் இருந்து கொண்டிருந்தது.
இப்பொழுது தன்னை பார் அந்த விகாரங்களிலிருந்து விடுபட்டு சென்று
கொண்டிருக்கின்றேனா? என்னிடம் இந்த கோபம் போன்றவை இன்னும்
என்னவெல்லாம் இருந்ததோ அவை இப்பொழுது வெளியேறி சென்று
கொண்டிருக்கிறதா? பேராசை அல்லது மோகம் ஆகியன என்னவெல்லாம்
இருந்ததோ அந்த அனைத்து விகார சம்ஸ்காரங்களும் மாறி
கொண்டிருக்கிறது அல்லவா? ஒருவேளை மாறி கொண்டிருக்கிறீர்கள்,
விகாரங்கள் வெளியேறி சென்று கொண்டிருக்கிறது என்றால், சுயம்
நான் மாறிக்கொண்டி ருக்கிறேன் என்று புரிந்து கொள்ளுங்கள்.
ஒருவேளை வெளியேறவில்லை என்றால், நான் இன்னும் மாறவில்லை என்று
புரிந்து கொள்ளுங்கள். எனவே மாற்றத்தின் வித்தியாசம் உணர்வில்
வரவேண்டும். தனக்குள் மாற்றம் வர வேண்டும். இப்படி இருக்கக்
கூடாது - முழு நாளும் விகார கணக்கிலேயே சென்று கொண்டிருந்தது,
மற்றபடி நான் நல்லதொரு தானம், புண்ணியம் செய்தேன், அவ்வளவுதான்...
இல்லை. நம்முடைய கர்ம கணக்குகள் எப்படி சென்று கொண்டிருக்கிறதோ
அதில் நம்மை நாம் பராமரிக்க வேண்டும். இந்த அனைத்து கணக்கு
வழக்குகளின் அட்டவணை வைக்க வேண்டும் மற்றும் உறங்குவதற்கு முன்
10 - 15 நிமிடங்கள் தன்னைத்தான் சோதிக்க வேண்டும் முழு நாளும்
எப்படி கழிந்தது? என்று. பலர் குறித்து கொள்கிறார்கள் ஏனென்றால்
தலை மீது இருக்கும் கடந்த கால பாவ சுமை - அதனையும் அழிக்க
வேண்டும், அதற்காக தந்தையின் கட்டளை "என்னை நினைவு செய்"
என்பதாகும். அதிலும் நாம் எவ்வளவு நேரம் தந்தையின் நினைவுக்காக
கொடுத்தோம்? ஏனென்றால் இந்த சார்ட் வைப்பது மூலம் அடுத்த நாளில்
நாம் எச்சரிக்கையோடு இருப்போம். இப்படி எச்சரிக்கையோடு இருந்து
இருந்து பிறகு எச்சரிக்கை மிக்கவர் ஆகி விடுவோம். பிறகு நமது
கர்மம் நல்லதாகிக் கொண்டே செல்லும் மேலும் அப்படிப்பட்ட எந்த
ஒரு பாவமும் நடக்காது. இப்பொழுது பாவங்களிலிருந்து தான்
பாதுகாப்பாக இருக்க வேண்டும் அல்லவா. நல்லது இனிமையான
தாயினுடைய இனிமையிலும் இனிமையான குழந்தைகளுக்கு அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம்.
: சந்தேஷி சகோதரியின் சரீரம் மூலமாக சரஸ்வதி தாயோடு அவ்யக்த
பிரபுவினுடைய (பரமாத்மா தந்தை) சந்திப்பு மற்றும் உரையாடல்
மகளே ஸ்ரீ ராதே பார், உன்னிடம் யார் வந்திருக்கிறார்? எவ்வளவு
பெரிய சக்தி உன்னிடம் பேசிக் கொண்டிருக்கிறார். நான்
வந்திருப்பதன் ரகசியம் மூலம் நீ உன்னையும் தெரிந்து கொள்ள
முடியும். வந்திருப்பவருடைய நிலையின் கூடவே சுயத்தினுடைய நிலை
அதாவது பதவியையும் தெரிந்து கொள்ள முடியும்.ஹே ராதே மகளே, நீ
என்னுடைய வசீகரத்தை பார்க்க விரும்புகிறாய் அல்லவா! நான்
விரும்பினால் ஒரு வினாடியில் அழிவின் (பதீத உலகின்) காரியத்தை
செய்விக்க முடியும். ஆனால் அப்படி செய்வதில்லை ஏனென்றால் விராட
நாடகத்தின் அடிப்படையில் எந்தெந்த காரியங்கள் எவரெவர் மூலமாக
எப்படி நடக்க வேண்டும் என்று இருக்கின்றதோ அது அவசியம் நடக்கும்.
அழிவற்ற சட்டதிட்டங்களை தெரிந்திருக்கும் அவ்யக்த தந்தை தான்
அழிவற்ற சட்ட திட்டங்களுடைய அறிமுகத்தை இங்கு வந்து அளிக்கிறார்.
இந்த முழு உலகின் உடைய அழிவற்ற விளையாட்டு மேடையில் நடந்து
கொண்டிருக்கின்றது. நடைமுறையில் இந்த நாடகம் நடந்து முடிவதில்
நேரம் பிடிக்கின்றது. ஒருவேளை இத்தனை வருடங்களினுடைய விளையாட்டு
ஒரு வினாடியில் முழுமையடைய செய்து விட்டால் மீதமிருக்கும்
விளையாட்டு என்ன நடக்கும். எனவே என்னென்ன இன்னல்கள் எல்லாம்
எப்படி எப்படி பார்க்க வேண்டிய உள்ளதோ அதாவது சகித்துக் கொள்ள
வேண்டியுள்ளதோ அவை அதே ரீதியில் சீர்கேடான ரகசியம் மூலமாக
திரும்ப திரும்ப நடக்கின்றது. இந்த சீர்கேடான, திரும்பத்
திரும்ப நடக்கும் விஷயங்கள் அதனை ஹே அன்பான தாய் ராதே நீ
மட்டும் நான் பார்த்து எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறோம்.
இந்த விராட நாடகத்தின் அனைத்து பாகங்களும் பரீட்சித்து
பார்க்கக்கூடியவையாக உருவாக்கப் பட்டுள்ளது. இந்த விளையாட்டை
நடத்தக் கூடியவர் ஒருவேளை விரும்பினால் ஒரு வினாடியில் இந்த
நாடகத்தை விட்டு விட்டு பிறகு புதிய ரூபத்தில் ஆரம்பித்து
விடலாம். ஆனால் அப்படி செய்வதில்லை, ஏனென்றால் ஈஸ்வரனுக்கும்
கூட இப்படி சாதாரண ரீதியில் காரியத்தை நடத்த வேண்டி உள்ளது.
சுயம் சர்வ சக்திவான் நிராகாரி ஈஸ்வரன் சாகாரத்தில் உள்ளார்
ஆனால் சாதாரண வேஷத்தில் இருக்கிறார். இதுதான் கண்ணாமூச்சி
விளையாட்டு ஆகும். அதனை தெரிந் திருப்பவர் அனைத்தையும்
தெரிந்திருப்பவர் ஆவார்.
மகளே ஸ்ரீ ராதே அன்பான குழந்தைகளுக்கு இந்த சகித்து கொள்ளும்
மார்க்கத்தையும் அவசியம் நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்,
இருந்த பொழுதிலும் நான் விரும்பினால் என்னுடைய குழந்தைகளுக்காக
இதனை எளிதான மார்க்கமாகவும் (பாதையாக) ஆக்க முடியும். ஏனென்றால்
சாட்சத்காரம் செய்விக்கும் சாவி என்னிடம் உள்ளது. ஒருவேளை
ஏதாவது ஒரு செல்வந்தர் பக்தருக்கு ஏதாவது ஒரு தேவதையின்
சாட்ஷாத்காரம் செய்வித்தால் அவர் தன்னுடைய அனைத்து
செல்வத்தையும் கொண்டு வந்து யக்ஞத்தில் அர்ப்பணம் செய்து
விடுவார், ஏனென்றால் ஈஸ்வரன் அனைத்து செல்வந்தர்களுக்கெல்லாம்
செல்வந்தர் ஆவார். ஆனால் உங்களுடைய தந்தை விரும்புகிறார் நான்
என்னுடைய அன்பான ஏழை குழந்தைகளை இளவரசன் மற்றும் இளவரசியாக
ஆக்க வேண்டும். எனவே நீங்கள் இவை அனைத்தையும் சகித்துக் கொண்ட
பிறகே (புதிய உலகில்) சென்று இளவரசன் மற்றும் இளவரசியாக
ஆவீர்கள். தந்தை திரிந்திருக்கிறார் குழந்தைகள் இந்த சகித்துக்
கொள்ளும் மார்க்கத்தை அவசியம் நிர்ணயிக்க வேண்டும் ஏனென்றால்
சகித்துக் கொள்வது - இது ஈஸ்வரிய மற்றும் தெய்வீக குணம் ஆகும்.
இதில் தான் மகிழ்ச்சி நிறைந்திருக்கிறது. இந்த குணம் மூலம்
ஈஸ்வரிய சுகம் அனுபவம் ஆகிறது. சகித்துக் கொண்டே நீங்கள்
எவ்வளவு மகிழ்ச்சியில் இருக்கிறீர்கள் இது தான் மிகவும் ரகசியம்
மிக்க ஞானம் ஆகும். இப்படிப்பட்ட ஆசைகளற்ற யோகி தான்
நிரந்தரமான சுகத்தை அடைகின்றார்.
இப்பொழுது பரீட்சைகளின் நேரம் அருகில் வந்து சேர்ந்து விட்டது.
ஒவ்வொரு குழந்தையும் வரக்கூடிய பரீட்சைகளை முன்கூட்டியே எதிரில்
வைத்து அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு சென்று கொண்டிருக்க
வேண்டும். எந்த ஒரு குழந்தைக்கும் ஒருவேளை உணவு நீர் ஆகியவை
கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டாலும், சுயம் கவலையற்ற மகாராஜா ஆகி
வீற்றிருக்க வேண்டும். இப்படிப்பட்ட அழகான மனநிலையை பல காலமாக
தன்னுள் கொண்டிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும். ஒருவேளை
யாராவது அந்த நேரத்தில் தானாகவே சென்று விடுவேன் என்று
புரிந்திருந்தால் இப்படிப்பட்ட புரிதல் கொண்டிருப்பது
தனக்குத்தானே ஏமாற்றம் அளிப்பதாகும். எனவே முன்பிருந்தே
எச்சரிக்கையுடன் இருங்கள். என்னுடைய மிக அன்பான குழந்தைகளே
நினைவில் அமர்கிறீர்கள் தான் ஆனால் இதுவரை அந்த (நினைவின்)
ஒளியின் வீரியம் என்னுடைய வதனம் வரை வந்தடையவில்லை.
ஒவ்வொருவரும் எப்பொழுது ஒளி சொரூபமாக ஆகி அமர்ந்திருக்கிறீர்களோ
அப்பொழுது தான் அவரது யோகத்தின் சக்தி என்னுடைய வதனத் திற்கு
வரும் அப்பொழுதுதான் அந்த ஒவ்வொருவரின் சம்பூர்ண நிலையின் ஒளி
அவர்களுக்குள் பிரவேசம் ஆகும். அந்த நேரத்தில் தான் பிறகு
சக்திகளின் மகிமை வெளிப்படும். எனவே ஒவ்வொருவரும் தன்னுடைய
நம்பிக்கையில் ஸ்திரமாக இருக்க வேண்டும், அதிலிருந்து நானே கூட
கீழிறக்கினாலும் (நம்பிக்கை எனும் இருக்கையில் இருந்து) இறங்க
வைக்க முடியாது. உயர்ந்த மதிப்பிற்குரிய சக்தி ராதே சக்திகள்
ஞானம் யோக பலத்திலும் மற்றும் வாய் மூலமாக ஞான முரளியை
வாசிப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும். நீ உனது ஒரே சீரான
ஈஸ்வரிய பார்வை மூலம் ஒவ்வொருவருக்கும் சக்தி அளித்து உனது
இனிமையான வீணை மூலம், "நான் யார்" மற்றும் "என்னுடைய தந்தை யார்"
எனும் அறிமுகம் அளிக்க வேண்டும். எப்படி பிரம்மாவில் பகவான்
பிரத்யக்க்ஷம் ஆனாரோ, அதாவது இந்த கடைசி நேரத்தில் ஆசூரிய
உலகத்தை அழித்து நமது சத்திய தேசமான தேவதா உலகிற்கு அழைத்து
சென்று கொண்டிருக்கிறார்.
ஹே மகளே ராதே - எப்பொழுது ஒவ்வொருவருடைய மனநிலையின் தன்மை
தீபத்தின் பிரகாசமான ஒளியைப் போல் ஸ்திரமாக மாறுகின்றதோ
அப்பொழுது மறைமுகமான கடைசி பிரேரணைகளை கண்டு பிடித்து கொண்டு
தன்னுடைய காரியத்தை முழுமையான ரீதியில் வெற்றி அடைய செய்ய
முடியும். எவ்வளவு ஞானத்தின் அடிப்படையில் மனநிலையின் தன்மை
இருக்கின்றதோ அவ்வளவு பிரேரணைகளை புரிந்து கொள்ள முடியும்.
எவ்வளவு இந்த மனநிலை யின் தன்மை தொடர்ச்சியாக சீராக
இருக்கின்றதோ அவ்வளவு சம்பூர்ண பிரேரணைகளை கண்டறிய முடியும்.
ஆஹா மகளே ராதே என்னுடைய சொரூபத்தை தான் சற்றே பார். குழந்தைகள்
என்னுடைய சொரூபத்தை பார்க்க முடியாதா என்ன?அகண்ட ஜோதி
தத்துவத்திலிருந்து வந்திருந்து நான் சாக்ஷாத் பிரவேசம் (பிரம்மாவினுள்)
செய்து பேசுகிறேன் என்பதை. என் மூலமாகத்தான் இவ்வனைத்து
சாக்ஷாத்காரங்களும் ஏற்படுகிறது ஏனென்றால் நான் தான் அனைவருடைய
அடிப்படை தொகுப்பு. பார், பிரக்ருதிக்கு நடுவே ஜொலிக்கின்றது
ஞான ஒளி. குழந்தைகள் இந்த சிந்தனையை மட்டும் செய்யுங்கள். ஆஹா!
எவரை முழு உலகமே அழைத்து கொண்டிருக் கிறதோ, அவர், சுயம்
சர்வசக்திவான் ஈஸ்வரன், இங்கு யக்ஞத்தில் நாமாகிய
குழந்தைகளுக்கு முன்பு வந்து அமர்ந்திருக்கிறார். அவரது
குளுமையான மடியில் அமரும் பொழுது இருதயம் (மனம்) அமைதியாகி
விடுகிறது. இப்பொழுது படைப்புகளை படைப்பவர் கிடைத்துவிட்டார்
எனும்பொழுது அவரை விட்டுவிட்டு அவரது படைப்புக்களுக்கு பின்னால்
ஏன் செல்ல வேண்டும். உயர்ந்ததிலும் உயர்ந்த அதிகாரம் படைத்த
அனைத்து சக்திகளுக்கும் சுயம் எஜமானர், அவரிடமிருந்து அனைத்து
சக்திகளும் வெளிப்பட்டுள்ளது - இந்த அறிமுகத்தில் வந்து
விட்டாய் எனும் பொழுது பிறகு இந்த மடியை விட்டுவிடுவது
முடியாதது ஆகிவிடும். எப்பொழுது ஒரு படைப்பவர் - அவரது அறிமுகம்
கிடைக்கிறதோ, அப்பொழுது தான் புரியும் இவர் யார் என்பது.
புரிந்ததா மதிப்பிற்குரிய உயர்ந்த ராதே நல்லது.
ஆசீர்வாதம்:
எப்பொழுதும் அதீந்திரிய சுகத்தின் ஊஞ்சலில் ஊஞ்சலாடி
கொண்டிருக்கும் சங்கமயுகத்தின் சர்வ அலௌகீக பிராப்திகளில்
நிறைந்தவர் ஆகுக.
எந்த குழந்தை அலௌகீக பிராப்திகளில் (பலன்கள், பொக்கிஷங்கள்)
எப்பொழுதும் நிறைந்தவராக இருக் கிறாரோ அவர் அதீந்திரிய
சுகத்தின் ஊஞ்சலில் ஊஞ்சலாடிக் கொண்டிருக்கிறார். எப்படி
செல்லமான குழந்தையை ஊஞ்சலில் வைத்து ஊஞ்சலாட்டுகிறார்களோ
அதேபோல் அனைத்து பிராப்திகளில் நிறைந்த பிராமணர்களின் ஊஞ்சல்
அதீந்திரிய சுகத்தின் ஊஞ்சலாகும். இந்த ஊஞ்சலில் எப்பொழுதும்
ஊஞ்சலாடி கொண்டிரு. ஒரு பொழுதும் தேக அபிமானத்தில் வர கூடாது.
எவர் ஊஞ்சலிலிருந்து இறங்கி தரையில் பாதத்தை வைக்கிறாரோ அவர்
மாசுபட்டு விடு கிறார். உயர்ந்திலும் உயர்ந்த தந்தையின்
தூய்மையான குழந்தை எப்பொழுதும் அதீந்திரிய சுகத்தின் ஊஞ்சலில்
ஊஞ்சலாடுகிறார், மண்ணில் பாதத்தை வைக்க முடியாது.
சுலோகன்:
"நான் தியாகி" - இந்த அபிமானத்தின் தியாகம் தான் உண்மையான
தியாகம் ஆகும்.
அவ்யக்த சமிக்ஞை : ஆன்மீக நிலையிலிருக்கும் பயிற்சி செய்க
உள்முகமாகுக
எப்பொழுது சுயம் தன்னை அழிவற்ற ஆத்மா என்று புரிந்து கொள்கிறாயோ
அப்பொழுது அகால மரணத்திலிருந்து, காலனிடமிருந்து மற்றும்
அனைத்து பிரச்சனைகளிலிருந்தும் பாதுகாப்பாக இருக்க முடியும்.
மனரீதியான சிந்தனைகள், மனரீதியான சூழ்நிலைகளை அகற்றுவதற்கான ஒரே
ஒரு சாதனம் தன்னுடைய இந்த பழைய உடலின் உணர்வை அழிப்பது ஆகும்.
தேக அபிமானத்தை அழிப்பதன் மூலம் அனைத்து வித சூழ்நிலைகளும்
அழிந்துவிடும்.