25-01-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! சுறுசுறுப்பான
மாணவராகி நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவதற்கான முயற்சி
செய்யுங்கள், மந்தமான (சோம்பல்) மாணவராக ஆகக் கூடாது, யாருக்கு
முழு நாளும் உற்றார்-உறவினர்களின் நினைவு வருகின்றதோ அவர்கள்
மந்த புத்தியுடைவர்கள்.
கேள்வி:
சங்கமயுகத்தில் அனைவரையும் விட
அதிர்ஷ்டசாலி என யாரைக் கூறுவோம்?
பதில்:
யார் தனது உடல், மனம், செல்வம்
அனைத்தையும் பயனுடையதாக ஈடுபடுத்தினார்களோ மேலும்
ஈடுபடுத்துகின்றனரோ அவர்களே அதிர்ˆடசாலிகள். சிலர் மிகவும்
கஞ்சத்தனமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு அதிர்ஷ்டத்தில் இல்லை
என புரிந்துக் கொள்ளப்படுகிறது. வினாசம் எதிரில் இருக்கிறது,
நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என அவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
தந்தை இப்பொழுது நேரில் வந்திருக்கிறார், நாம் நம்முடைய
அனைத்தையும் நன்கு பலனளிக்கும் படியாகப் பயன்படுத்த வேண்டும்,
தைரியமாக இருந்து நிறைய பேருடைய பாக்கியத்தை உருவாக்குவதற்கு
நிமித்தமாக வேண்டும் என அதிர்டசாலி குழந்தைகள் அறிகின்றனர்.
பாடல்:
அதிர்ஷ்டத்தை உருவாக்கிக்கொண்டு
வந்திருக்கிறேன்.......
ஓம் சாந்தி.
இங்கு குழந்தைகள் நீங்கள் அதிர்ஷ்டத்தை உருவாக்கிக்
கொண்டிருக்கிறீர்கள். கீதையில் ஸ்ரீ கிருஷ்ணருடைய பெயரை எழுதி
மேலும் பகவான் வாக்கியம் நான் உங்களுக்கு இராஜயோகத்தை
கற்றுத்தருகிறேன் என சொல்லப்படுகிறது. இப்பொழுது கிருஷ்ண பகவான்
வாக்கியம் என்பது இல்லை, இந்த ஸ்ரீ கிருஷ்ணர் என்பது
இலட்சியமாகக் கூறப்படுகிறது, பிறகு சிவபகவான் வாக்கியம்: அதாவது
நான் உங்களை இராஜாவுக்கெல்லாம் இராஜாவாக ஆக்கு கிறேன். ஆகவே
முதலில் கிருஷ்ணர் அவசியம் இளவரசனாக ஆகின்றார், மற்றபடி
கிருஷ்ண பகவான் வாக்கியம் என்பது இல்லை. கிருஷ்ணர் என்பது
குழந்தைகளாகிய உங்களுடைய இலட்சியமாகும், இது பாடசாலையாக
இருக்கிறது. பகவான் கற்பிக்கின்றார், நீங்கள் அனைவரும் இளவரசன்-
இளவரசியாக ஆகின்றீர்கள். தந்தை கூறுகின்றார், மீண்டும் ஸ்ரீ
கிருஷ்ணர் ஆவதற்காக நான் பல பிறவிகளின் கடைசி நேரத்தில்
உங்களுக்கு இந்த ஞானத்தைக் கூறுகின்றேன். இந்த பாடசாலையில்
ஆசிரியராக சிவபாபா இருக்கிறார்,
ஸ்ரீ கிருஷ்ணர் அல்ல. தெய்வீகமான தர்மத்தை சிவபாபா மட்டுமே
உருவாக்குகின்றார். நாங்கள் அதிர்ஷ்டத்தை உருவாக்குவதற்காக
இங்கு வந்துள்ளோம் என குழந்தைகள் கூறுகின்றீர்கள். நாம் பரம
பிதா பரமாத்மாவிடமிருந்து அதிர்ஷ்டத்தை உருவாக்க வந்துள்ளோம்
என ஆத்மா அறிந்துள்ளது, இது தான் இளவரசன்- இளவரசியாக ஆவதற்கான
அதிர்ஷ்டமாகும், இராஜயோகம் அல்லவா! சிவபாபா மூலமாக முதன்
முதலில் இராதை-கிருஷ்ணர் என்ற சொர்க்கத்தின் இரண்டு இலைகள்
உருவாகின்றது. இந்த சித்திரங்கள் மிகவும் சரியாகப் புரிய
வைப்பதற்காக உருவாக்கப் பட்டுள்ளது. கீதையின் ஞானத்தின்
மூலமாகவே அதிர்ஷ்டம் உருவாகின்றது. அதிர்ஷ்டம் விழிப்படைந்து
இருந்தது, பிறகு துண்டிக்கப்படுகிறது. பல பிறவிகளின் கடைசியில்
நீங்கள் முற்றிலும் தமோபிரதானமாக ஆகி விட்டீர்கள்; இப்பொழுது
மீண்டும் இளவரசராக ஆக வேண்டும். முதலில் இராதை-கிருஷ்ணராக
ஆவார்கள் பிறகு அவர்களின் இராஜ்யம் நடக்கும். ஒருவர் மட்டும்
இருக்க முடியாதல்லவா! சுயம்வரத்திற்குப் பிறகு இராதை-
கிருஷ்ணரிலிருந்து இலட்சுமி- நாராயணராக ஆவார்கள். நரனிலிருந்து
இளவரசராக, நாராயணராக ஆவது ஒரே விசயம் தான். இந்த
இலட்சுமி-நாராயணர் சொர்க்கத்தின் எஜமானராக இருந்தார்கள் என
குழந்தைகள் நீங்கள் புரிந்துள்ளீர்கள், சங்கமயுகத்தில் தான்
அவசியம் ஸ்தாபனை ஏற்பட வேண்டும், எனவே சங்கம யுகத்தை
புருஷோத்தமயுகம் எனக் கூறப்படுகிறது. ஆதிசனாதன தேவி-தேவதா
தர்மம் ஸ்தாபனை யாகும், மற்ற தர்மங்கள் வினாசமாகி விடும்.
சத்யுகத்தில் ஒரேயொரு தர்மம் மட்டுமே இருந்தது, அந்த வரலாறு,
பூகோளம் மீண்டும் ஏற்படும், மீண்டும் சொர்க்கத்தின் ஸ்தாபனை
ஏற்படும். அங்கு இலட்சுமி-நாராயணருடைய இராஜ்யம் இருந்தது,
பரிஸ்தானாக (தேவதைகள் வசிப்பிடமாக) இருந்தது, இப்பொழுது உலகம்
சுடுகாடாக ஆகிவிட்டது. அனைவரும் காம விகாரம் என்ற நெருப்பில்
எரிந்து விட்டனர். சத்யுகத்தில் நீங்கள் மாளிகையை
உருவாக்கினீர்கள். பூமியின் அடியில் இருந்து தங்கத்தால் ஆன
துவாரகை அல்லது இலங்கை மேல் நோக்கி வெளிப்படும் என்பதில்லை,
துவாரகை உருவாகும், அங்கு இலங்கை இருக்காது. பொற்கால உலகம் என
இராம இராஜ்யம் கூறப்படுகிறது. உண்மையான தங்கம் இருந்தது,
அவையனைத்தும் கொள்ளையடிக் கப்பட்டது. பாரதம் எவ்வளவு செல்வந்த
நாடாக இருந்தது, இப்பொழுது அனைத்தையும் இழந்து விட்டது என
நீங்கள் புரிய வைப்பீர்கள், இந்த வார்த்தையை எழுதுவதில் தவறு
ஏதுமில்லை. சத்யுகத்தில் ஒரே ஒரு தர்மம் இருந்தது, அங்கு மற்ற
எந்தவொரு தர்மமும் (மதம்) இருக்க முடியாது என உங்களால் புரிய
வைக்க முடியும். இது எப்படி முடியும், தேவதைகள் மட்டுமா
இருப்பார்கள்? என சிலர் கேட்கின்றனர். அநேக விதமான வழிமுறைகள்,
வேறுபாடுகள் இருக்கின்றன. ஒருவர் வழி இன்னொருவரோடு
ஒத்துப்போவதிவில்லை, எவ்வளவு அதிசயமாக இருக்கிறது, எவ்வளவு
நடிகர்கள் இருக்கின்றார்கள். இப்பொழுது சொர்க்கத்தின் ஸ்தாபனை
ஏற்படுகிறது, நாம் சொர்க்கவாசியாக ஆகின்றோம், இந்த நினைவு
இருந்தால் சதா முக மலர்ச்சி யோடு இருப்பீர்கள், குழந்தைகள்
உங்களுக்கு மகிழ்ச்சி இருக்க வேண்டும். உங்களுடைய இலட்சியம்
உயர்ந்தது அல்லவா! நாம் மனிதனிலிருந்து தேவதையாக,
சொர்க்கவாசியாக ஆகின்றோம். இதனையும் பிராமண குழந்தைகள் நீங்கள்
மட்டுமே அறிந்துள்ளீர்கள், அதாவது சொர்க்கத்தின் ஸ்தாபனை ஏற்படு
கிறது. இதனையும் சதா நினைவு செய்ய வேண்டும், ஆனால் மாயா
அடிக்கடி மறக்க வைக்கின்றது. அதிர்ஷ்டம் இல்லையெனில் திருத்திக்
கொள்வதில்லை. பொய் பேசும் பழக்கம் அரைக்கல்பமாக இருந்து விட்டது,
அது இன்னும் நீங்கவில்லை. பொய் சொல்வதைக் கூட பெருமையாக
நினைக்கின்றனர். இதனையும் விட வில்லையெனில் அதிர்ஷ்டம்
இல்லையென்று புரிய வைக்கப்படுகிறது. அவர்கள் பாபாவையும் நினைவு
செய்வ தில்லை. முழுமையாக பற்றுதலை விட்டால் தான் நினைவும்
செய்ய முடியும். முழு உலகத் திலிருந்து வைராக்கியம் வேண்டும்.
உற்றார்- உறவினர்களைப் பார்த்தும் பார்க்காமல் இருக்க வேண்டும்,
அவர்கள் அனைவரும் நரகவாசிகள், சுடுகாட்டுவாசிகள்; இவர்கள்
அனைவரும் அழிந்துவிடுவார்கள். இப்பொழுது நாம் வீடு திரும்ப
வேண்டும். எனவே சுகதாமம், சாந்தி தாமத்தை மட்டுமே நினைவு செய்ய
வேண்டும். நாம் நேற்று சொர்க்கவாசியாக இருந்தோம், இராஜ்யம்
செய்தோம், அதனை இழந்து விட்டோம், மீண்டும் நாம் இராஜ்யத்தை
அடைகின்றோம். பக்திமார்க்கத்தில் எவ்வளவு தலை வணங்கினோம்,
செல்வத்தை வீண் செலவு செய்தோம், கதறி அழுதோம், ஆனாலும் ஒன்றும்
கிடைக்கவில்லை என குழந்தைகள் புரிந்துள்ளீர்கள். ஆத்மா
வேண்டுகிறது- பாபா வாருங்கள், சுக தாமத்திற்கு அழைத்துச்
செல்லுங்கள், கடைசியில் துக்கம் அதிகமானதால் நினைவு
செய்கின்றனர்.
இப்பொழுது இந்த பழைய உலகம் முடிந்தாக வேண்டும். நீங்கள் இதனைப்
பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள். இப்பொழுது இது நம்முடைய
கடைசி பிறவியாக இருக்கிறது. இந்த நேரத்தில் தான் நமக்கு முழு
ஞானமும் கிடைக்கிறது, ஞானத்தை முழுமையாக தாரணை செய்ய வேண்டும்.
நிலநடுக்கம் போன்றவை திடீரென்று ஏற்படுகிறதல்லவா! இந்தியா,
பாகிஸ்தான் பிரிவினையின் போது எத்தனை பேர் இறந்திருப்பார்கள்!
குழந்தைகள் உங்களுக்கு ஆரம்பம் முதல் கடைசி வரை எல்லாம்
தெரிந்திருக்கிறது. மேலும் என்ன நடக்கப் போகிறதோ அதுவும்
தெரிந்து விடும். ஒரு சோமநாதர் கோவில் மட்டும் தங்கத்தால்
இருக்கவில்லை, நிறைய கோவில்கள், மாளிகைகள் அனைத்தும் தங்கத்தால்
ஆக்கப்பட்டதாக இருந்தது. பிறகு என்ன ஆனது, எப்படி மறைந்தது?
நில நடுக்கத்தில் பூமியில் புதைந்து மீண்டும் வெளியே வர
முடியுமா என்ன? உள்ளுக்குள் அனைத்தும் சென்று விட்டால் பிறகு
என்ன ஆகும்? நாளடைவில் உங்களுக்குத் தெரியவரும். தங்கத்தாலான
துவாரகை சென்று விட்டது என கூறிகின்றனர். நாடகப்படி அவை
பூமிக்கடியில் சென்று விட்டது, மீண்டும் சக்கரம் சுழலும் போது
மேலே வரும் என இப்பொழுது நீங்கள் கூறுவீர்கள், இருந்தாலும்
மீண்டும் உருவாக்கப்பட வேண்டும். இந்தச் சக்கரத்தை புத்தியில்
சிந்தனை செய்து மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்க வேண்டும். இந்த
சித்திரத்தை பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும், இந்த பேட்ஜ்
மிகவும் சேவைக்குத் தகுதியானதாகும். ஆனாலும் இந்த சேவையை யாரும்
செய்ய வில்லை. குழந்தைகள் நீங்கள் இரயிலில் கூட நிறைய சேவை
செய்ய முடியும், ஆனால் இரயிலில் நாங்கள் என்ன சேவை செய்தோம்?
என யாரும் ஒருபொழுதும் எழுதி அனுப்பவில்லை. மூன்றாம் வகுப்பில்
சென்றாலும் சேவை செய்ய முடியும். யாரெல்லாம் கல்பத்திற்கு
முன்பாக புரிய வைத்தார்களோ, யார் மனிதனிலிருந்து தேவதையாக
ஆனார்களோ அவர்களே புரிந்து கொள்வார்கள், மனிதனிலிருந்து
தேவதையாக ஆவதன் மகிமையும் செய்யப்படுகிறது. மனிதனி லிருந்து
கிறிஸ்துவராக, சீக்கியராக என்று சொல்லப்படுவதில்லை.
மனிதனிலிருந்து தேவதையாக ஆனார்கள், அதாவது ஆதிசனாதன தேவி-தேவதை
தர்மம் ஸ்தாபனை செய்யப்பட்டது. மற்றபடி அனைவரும் தனது
தர்மத்தில் சென்று விடுவார்கள். கல்ப மரத்தில் எந்ததெந்த தர்மம்
இருக்கிறது, மீண்டும் எப்பொழுது ஸ்தாபனையாகும்? என
காட்டப்பட்டிருக்கிறது. தேவதைகள் இந்துவாக ஆகிவிட்டார்கள்.
இந்துவிலிருந்து பிறகு வெவ்வெறு மதத்திற்கு மாறி விட்டார்கள்.
யாரெல்லாம் தனது உயர்ந்த தர்மம், கர்மத்தை விட்டுவிட்டு வேறு
மதங்களுக்குச் சென்று விட்டார்களோ அவர்களும் திரும்பி
வருவார்கள். பிற்காலத்தில் சிறிதளவு புரிந்து கொண்டு பிரஜைகளாக
வருவார்கள். தேவி-தேவதா தர்மத்தில் அனைவரும் வர முடியாதல்லவா!
அனைவரும் தனது தர்மத்தின் பிரிவுகளில் செல்வார்கள். உங்களுடைய
புத்தியில் அனைத்து விசயங்களும் இருக் கின்றன. உலகத்தில்
என்னென்ன செய்து கொண்டிருக்கிறார்கள், தானியங்களை உருவாக்கு
வதற்கு எவ்வளவு ஏற்பாடுகள் செய்கின்றனர், பெரிய பெரிய
எந்திரங்களை ஈடுபடுத்தியும் ஒன்றும் கிடைக்கவில்லை. உலகம் தமோ
பிரதானமாக ஆகத்தான் வேண்டும். ஏணியில் இருந்து கீழே இறங்கித்
தான் ஆக வேண்டும். நாடகத்தில் எது பதிவாகி உள்ளதோ அது நடந்து
கொண்டே இருக்கும், பிறகு புதிய உலகத்தின் ஸ்தாபனை ஏற்படும்
அறிவியல் மூலம் இப்பொழுது எதனை கற்றுக் கொண்டிருக்கிறார்களோ,
இதில் இன்னும் குறுகிய காலங்களில் மிகவும் திறமைசாலியாக
ஆவார்கள். இதன் மூலம் அங்கு மிகவும் நல்ல நல்ல பொருட்கள்
உருவாகும், இந்த விஞ்ஞானம் அங்கு சுகத்தை கொடுப்பதாக இருக்கும்.
இங்கு சுகம் குறைவாக இருக்கிறது, துக்கம் அதிகமாக இருக்கிறது.
இந்த அறிவியல் சாதனங்கள் வருவதற்கு எவ்வளவு ஆண்டுகள் ஆனது?
இதற்கு முன் மின்சாரம், எரிவாயு போன்றவை இல்லை, இப்பொழுது
எப்படி ஆகிவிட்டது என பாருங்கள். அங்கு இந்த அறிவியலை கற்றுக்
கொண்டு செல்வார்கள், மிகவும் வேகமாக காரியங்கள் நடக்கும். இங்கு
கூட எவ்வளவு பெரிய கட்டிடங்களை உருவாக்குகின்றனர், அனைத்தும்
தயாராக இருக்கிறது. எவ்வளவு அடுக்கு மாளிகைகளை
உருவாக்குகின்றனர், அங்கு இவ்வாறு இருக்காது, அங்கு
அனைவருக்கும் தனித்தனி வயல்வெளிகள் இருக்கும். வரிகள்
விதிக்கப்படாது. அங்கு அளவற்ற செல்வங்கள் இருக்கும்.
நிலப்பரப்பு அதிகமாக இருக்கும். நதிகள் எல்லாம் இருக்கும்.
மற்றபடி கால்வாய் போன்றவை இருக்காது. பிற்காலத்தில் வாய்க்கால்
முதலானவற்றை தோண்டி பயன்படுத்தினார்கள்.
நமக்கு இப்பொழுது இரண்டு இஞ்ஜின் கிடைத்திருக்கிறது என்ற
மகிழ்ச்சி குழந்தைகள் உங்கள் மனதில் இருக்கிறது. மலைமேல் ஏறும்
இரயிலுக்கு இரண்டு இஞ்ஜின் பொருத்தப்படுகிறது. குழந்தைகள்
நீங்களும் தனது விரலைக் கொடுக்கின்றீர்கள், ஆனாலும் நீங்கள்
குறைவானவர்களே இருக்கின்றீர்கள், உங்களுக்குத் தான் மகிமையும்
செய்யப்படுகிறது. நாம் ஈஸ்வரிய உதவியாளராக இருக்கின்றோம் என
நீங்கள் அறிந்துள்ளீர்கள், ஸ்ரீமத் படி நடந்து சேவை
செய்கின்றோம். பாபாவும் சேவை செய்ய வந்திருக்கிறார். ஒரு
தர்மத்தை ஸ்தாபனை செய்து, அநேக தர்மங்களை வினாசம் செய்ய
வைக்கின்றார், சிறிது காலத்திற்குப் பிறகு நீங்கள் நிறைய
குழப்பங்களைக் காண்பீர்கள். யுத்தம் செய்து எங்காவது அணுகுண்டு
வீசி விடக்கூடாது என இப்பொழுது பயப்படுகின்றனர். யுத்தம்
மிகவும் நடக்கிறது, அடிக்கடி தங்களுக்குள் சண்டையிடுகின்றனர்.
பழைய உலகம் முடியத் தான் வேண்டும் என குழந்தைகள்
அறிந்துள்ளீர்கள், பிறகு நாம் தன்னுடைய வீட்டிற்குச் செல்வோம்
இப்பொழுது 84 பிறவிச் சக்கரம் முடிகின்றது. அனைவரும் சேர்ந்து
வீட்டிற்குத் திரும்புவோம். குழந்தைகளில் ஒரு சிலருக்கு தான்
இந்த நினைவு அடிக்கடி வருகின்றது. நாடக அனுசாரப்படி
சுறுசுறுப்பான மற்றும் மந்தமான மாணவர்கள் இருக்கின்றார்கள்.
சுறுசுறுப் பானவர்கள் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி
பெறுவார்கள். மந்தமான மாணவர்கள் முழு நாளும் சண்டையிடுவது,
சச்சரவுகளில் செல்வார்கள், தந்தையை நினைவு செய்யாமல், முழு
நாளும் உற்றார்-உறவினர்களையே அதிகம் நினைவு செய்வார்கள். இங்கு
அனைத்தையும் மறந்தாக வேண்டும். நான் ஆத்மா, இந்த சரீரம் எனும்
வால் தொங்கிக் கொண்டிருக்கிறது. நாம் கர்மாதீத் நிலை அடையும்
போது இந்த வால் விலகி விடும். கர்மாதீத் நிலை அடைந்தால் சரீரம்
அழிந்து விடும், நாம் கருப்பான நிலையிலிருந்து அழகான நிலையடைய
வேண்டும் என்ற கவலை இருக்கிறது. அதற்காக முயற்சி செய்ய
வேண்டுமல்லவா! கண்காட்சியில் மிகவும் முயற்சி செய்கின்றீர்கள்.
மகேந்திரன் (போபால்) எவ்வளவு தைரியமாக செய்து காட்டினார்.
தனியாக இருந்து எவ்வளவு முயன்று கண்காட்சி செய்தார்.
உழைப்பிற்கான பலன் கிடைக்குமல்லவா! ஒருவர் மூலமாக எவ்வளவு
அதிசயம் ஏற்பட்டது, எவ்வளவு பேருக்கு நன்மை செய்தார். உற்றார்-
உறவினார்களின் உதவியின் மூலம் எவ்வளவு காரியம் செய்தார்
அதிசயமல்லவா! தங்களுடைய செல்வத்தை இந்த காரியத்தில்
பயன்படுத்துங்கள், செல்வத்தை வைத்து என்ன செய்வீர்கள்? என
உற்றார்-உறவினர்களுக்குப் புரிய வைத்தார். தைரியமாக சென்டரை
உருவாக்கினார், இதனால் எவ்வளவு பேருக்கு பாக்கியம் ஏற்பட்டது.
இவ்வாறு 5-6 நபர்கள் உருவானால் எவ்வளவு சேவை நடைபெறும். சிலர்
மிகவும் கஞ்சத்தனமாக இருக்கின்றனர், பிறகு அவர்களுக்கு
அதிர்ஷ்டம் இல்லையென புரிந்து கொள்ளப்படுகிறது, வினாசம் எதிரில்
இருக்கிறது, நாமும் ஏதாவது செய்வோம் என்பது புரியவில்லை.
இப்பொழுது மனிதர்கள் ஈஸ்வரன் பெயரில் தானம் செய்தாலும் எதுவும்
கிடைப்பதில்லை. சொர்க்கத்தின் இராஜ்யத்தை கொடுப்பதற்காக ஈஸ்வரன்
இப்பொழுது வந்திருக்கிறார். தானம்,புண்ணியம் செய்வோருக்கு
எதுவும் கிடைக்காது. சங்கம யுகத்தில் யார் தனது உடல், மனம்,
செல்வம் அனைத்தையும் பயனுள்ள வகையில் மற்றும் பயன்படுத்து
கின்றனரோ அவர்கள் தான் அதிர்ஷ்டசாலி. அதிர்ஷ்டம் இல்லையெனில்
புரிந்து கொள்ளமாட்டார்கள். அவர்களும் பிராமணர்கள், நாமும்
பிராமணர்களாக இருக்கின்றோம். நாம் பிரஜாபிதா பிரம்மாகுமார்-
குமாரிகள், இவ்வளவு பேர் பிராமணர்களாக இருக்கின்றனர். அவர்கள்
சரீர வம்சாவளி, நீங்கள் வாய் வழி வம்சாவளி. சிவஜெயந்தி
சங்கமயுகத்தில் நடைபெறுகிறது. இப்பொழுது சொர்க்கத்தை உருவாக்கு
வதற்கு மன்மனாபவ எனும் மந்திரத்தை தந்தை தருகின்றார். நீங்கள்
என்னை நினைவு செய்தால் தூய்மையாகி தூய்மையான உலகத்தில்
எஜமானராக ஆவீர்கள். இவ்வாறு யுக்தியோடு நோட்டீஸ் தயார் செய்ய
வேண்டும். உலகில் நிறையபேர் இறக்கின்றனர் அல்லவா! அங்கு சென்று
நோட்டீஸ் கொடுக்க வேண்டும். தந்தை வரும்பொழுது பழைய உலகம்
முடிந்து பிறகு சொர்க்கத்தின் கதவுகள் திறக்கப்படும். இப்பொழுது
சுகதாமத்திற்குச் செல்ல வேண்டுமானால் அதற்கான மந்திரம்
மன்மனாபவ. அவ்வாறு நல்ல தரமான பேப்பரில் நோட்டீஸ் தயார் செய்து
அனைவரிடமும் இருக்க வேண்டும். மயான பூமியிலும் நோட்டீஸ்
கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு சேவையில் ஆர்வம் வேண்டும்.
சேவைக்காக யுக்திகள் நிறைய தரப்படுகிறது, இவற்றை நன்றாக எழுதிக்
கொள்ள வேண்டும். இலட்சியம் எழுதப்பட்டிருக்கிறது.
புரியவைப்பதற்கு நல்ல யுக்தி வேண்டும் நல்லது
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்துக்
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீக தந்தையின் நமஸ்காரம்
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. கர்மாதீத் நிலையை அடைவதற்காக இந்த சரீரத்தை மறக்க வேண்டும்,
ஒரு தந்தையைத் தவிர எந்தவொரு உற்றார்-உறவினர்களின் நினைவும்
வராமல் இருக்க முயற்சி செய்ய வேண்டும்.
2. ஸ்ரீமத்படி ஈஸ்வரிய உதவியாளராக வேண்டும். தன்னுடைய உடல்,
மனம், பொருளை நல்ல முறையில் பயன்படுத்தி உயர்ந்த அதிர்ஷ்டத்தை
உருவாக்க வேண்டும்.
வரதானம்:
கர்மவினைப்பயனாக வரும் சூழ்நிலையின் கவர்ச்சியையும் கூட
முடிவடையச் செய்யக்கூடிய சம்பூரண நஷ்டமோஹா (மோகத்தை வென்றவர்)
ஆகுக.
இப்பொழுது வரை இயற்கை மூலம் உருவாகியிருக்கும் சூழ்நிலைகள்
மனோநிலையை தன் பக்கம் கொஞ்சம் கொஞ்சம் கவர்ச்சி செய்கிறது.
அனைத்தையும் விட அதிகமாக - தன்னுடைய தேகத்தின் கணக்குவழக்கு,
கர்மவினைப்பயன் ரூபத்தில் வரக்கூடிய சூழ்நிலைகள் தன் பக்கம்
கவர்ச்சி செய்கிறது - எப்பொழுது இந்தக் கவர்ச்சியும்
முடிவடையுமோ, அப்பொழுதே சம்பூரண நஷ்டமோஹா நிலையை அடைந்ததாகச்
சொல்லமுடியும். தேகத்தினுடைய மற்றும் தேகத்தின் உலகத்தினுடைய
எந்தவொரு சூழ்நிலையும் ஸ்திதியை அசைக்க முடியாத நிலையே சம்பூரண
நிலை ஆகும். எப்பொழுது அப்படிப்பட்ட நிலை அடைவீர்களோ, அப்பொழுதே
ஒரு நொடியில் தன்னுடைய மாஸ்டர் சர்வசக்திவான் சொரூபத்தில்
சகஜமாக நிலைக்க முடியும்.
சுலோகன்:
தூய்மை என்ற விரதம் அனைத்தையும் விட சிரேஷ்டமான சத்திய நாராயண
விரதம் ஆகும் - இதில் தான் அதீந்திரிய சுகம் நிறைந்திருக்கிறது.
தன்னுடைய சக்திசாலி மனதின் மூலம் சகாஷ் கொடுக்கும் சேவை
செய்யுங்கள்
மனதின் சேவை எல்லையற்ற சேவை ஆகும். எந்தளவு நீங்கள் மனதின்
மூலம், பேச்சின் மூலம் சுயம் உதாரணம் ஆகுவீர்களோ, அப்பொழுதே
உதாரணத்தைப் பார்த்து தானாகவே கவர்ச்சி ஏற்படும். எந்தவொரு
ஸ்தூல காரியம் செய்யும்பொழுதும் மனதின் மூலம் அதிர்வலைகளைப்
பரப்பும் சேவை செய்யுங்கள். எவ்வாறு ஒரு வியாபாரி கனவிலும் கூட
தன்னுடைய வியாபாரத்தைப் பார்ப்பாரோ, அதுபோல் உங்களுடைய வேலை -
உலக நன்மை செய்வதாகும். இதுவே உங்களுடைய தொழில் ஆகும். இந்தத்
தொழிலை நினைவில் வைத்து சதா சேவையில் பிஸியாக இருங்கள்.