25.05.25    காலை முரளி            ஓம் சாந்தி  04.09.2005      பாப்தாதா,   மதுபன்


அறிவுரையின் கூடவே மன்னிப்பு மற்றும் கருனையை தன்னுடையதாக ஆக்கிக் கொள்ளுங்கள். ஆசிர்வாதங்கள் கொடுங்கள். ஆசீர்வாதங்கள் பெற்றீர்கள் என்றால் உங்களுடைய வீடு ஆசிரமம் ஆகிவிடும்.

இன்று பாப்தாதா அனைத்து குழந்தைகளின் நெற்றியில் தூய்மையின் ரேகைகளை ஏனெனில் பிராமண வாழ்க்கையின் அஸ்திவாரமே தூய்மையாகும். தூய்மையின் ரேகைகள் என்னவாக இருக்கிறது, தெரிந்துள்ளீர்களா? தூய்மை அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கிறது. தூய்மை தான் சுகம், அமைதி, அன்பு, ஆனந்தத்தின் தாயாக இருக்கிறது. தூய்மை தான் மனித வாழ்க்கையின் உண்மையான அலங்காரம் ஆகும். தூய்மை இல்லையென்றால் மனித வாழ்க்கைக்கு மதிப்பே கிடையாது. தேவதைகளை பார்க்கிறீர்கள், தூய்மையாக இருக்கிறார்கள், ஆகையால் தான் மதிப்பிற் குரியவராகவும், பூஜைக்குரியவராகவும் இருக்கிறார்கள். தூய்மை தன்மை இல்லாத மனிதர்களின் நிலையை இந்த நேரத்தில் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பாப்தாதா பிராமண குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும்- தூய்மை ஆகுக, யோகி ஆகுக என்ற வரதானம் தந்திருக்கிறார். எந்த ஆத்மாவிடத்தில் தூய்மை இருக்கிறதோ, அவர்களின் நடத்தை, பாவனை, முகம் ஜொலிக்கும், ஆகையால் தூய்மை தான் வாழ்க்கையை உயர்ந்ததாக மாற்றக்கூடியதாக இருக்கிறது. உண்மை யில் உங்கள் அனைவரின் ஆதி (சத்யுகம்) சொரூபம் தூய்மைத் தன்மையாகும். அநாதி சொரூப மும் (பரந்தாமம்) தூய்மை தான். அப்படிப்பட்ட தூய்மையான ஆத்மாக்களின் விசேஷத்தன்மைகள் அவர்களுடைய வாழ்க்கையில் சதா தூய்மையின் பர்ஸ்னாலிட்டி (அழகுத்தன்மை) தென்படுகிறது. தூய்மையின் உண்மை, தூய்மையின் இராயல்ட்டி முகம் மற்றும் நடத்தையில் தென்படுகிறது. இந்த ரேகைகள் (கோடுகள்) வாழ்க்கையின் அலங்காரமாகும். உண்மை தன்மை என்பது - என்னுடைய அநாதி - ஆதி சொரூபமும் தூய்மை தான். இந்த நினைவு தான் சக்திசாலியாக மாற்றிவிடுகிறது. இராயல் தன்மை என்பது - தானும் சுயமரியாதையில் இருந்து ஒவ்வொரு வருக்கும் மரியாதை கொடுப்பதாகும். பர்ஸ்னாலிட்டி என்பது - சதா திருப்தியுடனும் மகிழ்ச்சி யுடனும் இருப்பதாகும். தானும் திருப்தியுடன் இருந்து, மற்றவர்களையும் திருப்திப்படுத்துவது. தூய்மையின் மூலம் தான் பிராப்திகளும் நிறையவே இருக்கிறது. பாப்தாதா குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் என்னென்ன பிராப்திகளை கொடுத்திருக்கிறார். அதை தெரிந்துள்ளீர்கள் அல்லவா. பல பொக்கிஷங்களின் மூலம் நிறைந்துள்ளது. ஒருவேளை பிராப்திகள் நினைவில் வைத்தீர்கள் என்றால் நிறைந்தவர் ஆகிவிடும்.

அனைத்தையும் விட முதலாவது பொக்கிஷம் - ஞானத்தின் பொக்கிஷம். இதனால் வாழ்ந்துக் கொண்டே துக்கம் அசாந்தியிலிருந்து விடுப்பட்டு விடுகிறோம். வீணான எண்ணங்கள், எதிர்மறை யான எண்ணங்கள், ஆசைகள், விகர்மத்திலிருந்து விடுப்பட்டு விடுகிறோம். ஒருவேளை ஏதாவது வீணான எண்ணம் மற்றும் ஆசையும் வருகிறது, எனவே ஞான பலத்தின் மூலம் வெற்றியாளர் ஆகிவிடுகிறீர்கள். இரண்டாவது பொக்கிஷம் - நினைவு, யோகா. இதன் மூலம் சக்திகளை பெறு கிறோம். மேலும் சக்திகளின் ஆதாரத்தின் மூலம் அனைத்து பிரச்சனைகளையும், அனைத்து தடை களையும் எளிதாக கடந்து விடலாம். மூன்றாவது பொக்கிஷம் - தாரணை, இதன் மூலம் அனைத்து குணங்களையும் அடைந்து விடுகிறோம். மேலும் நான்காவது பொக்கிஷம் - சேவை. சேவை செய்வதின் மூலம், யாருக்கு சேவை செய்கிறோம், அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கிறது. குஷியும் அடைகிறோம்.

இத்தனை பொக்கிஷங்கள் பாபாவிடமிருந்து குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் கிடைக் கிறது. பாபா அனைவருக்கும் ஒன்று போலவே தான் பொக்கிஷங்களை தருகிறார். சிலருக்கு குறைவாக, சிலருக்கு அதிகமாக கொடுப்பதில்லை. ஆனால் பெற்றுக் கொள்பவர்களில் வித்தியாசம் இருக்கிறது. ஒரு சில குழந்தைகள் பொக்கிஷங்களை அடைந்து, அதை சாப்பிடு கிறார்கள், அருந்துகிறார்கள், மகிழ்ச்சியடைகிறார்கள், மேலும் அந்த மகிழ்ச்சியிலேயே செலவழித்தும் விடுகிறார்கள். மேலும் ஒரு சில குழந்தைகள் சாப்பிடுகிறார்கள், அருந்துகிறார்கள், மகிழவும் செய்கிறார்கள், சேமிக்கவும் செய்கிறார்கள். மேலும் சில குழந்தைகள் காரியத்தில் பயன் படுத்தி அதிகரிக்கவும் செய்கிறார்கள். அதிகரிப்பதற்கான சாவி - பொக்கிஷங்களை தனக்காகவும் மற்றவர்களுக்காகவும் பயன்படுத்துவது. எதை பயன்படுத்துகிறோமோ, அது அதிகரிக்கும். இந்த விசேஷமான பொக்கிஷங்களை சேமித்துள்ளீர்களா என்று தன்னை தானே கேளுங்கள்? சேமித் துள்ளீர்களா? என்ன சொல்கிறீர்கள்? ஆமாவா அல்லது சிறிதளவு உள்ளதா? யாரிடம் எந்த பொக்கிஷம் சேமிப்பு ஆகியுள்ளதோ, அது சதா நிறைந்திருக்கும். ஏதாவது பொருள் நிறைந் திருக்கும் பொழுது பாருங்கள், குழப்பம் இருக்காது அல்லவா. ஒருவேளை நிறைந்திருக்க வில்லை யென்றால் குழப்பம் ஏற்படும், தடுமாற்றம் ஏற்படும். ஏதாவது பொருள் ஒருவேளை முழுமையாக நிறைந்திருக்கவில்லையென்றால் குழப்பம் ஏற்படும். அதனால் இங்கும் கூட ஒருவேளை அனைத்து பொக்கிஷங்களின் மூலம் நிறைந்திருக்கவில்லை என்றால் குழப்பம் ஏற்படும். பாபா வினுடைய பொக்கிஷம் என்னுடைய பிறப்புரிமை என்ற நஷா எப்பொழுதும் இருக்கும், பாபா கொடுக்கிறார், நீங்கள் பெற்றுக்கொள்கிறீர்கள் என்றால் அனைத்து பொக்கிஷமும் யாருடைய தாகும். உங்களுடையது தான் அல்லவா. எனவே யாரிடம் பொக்கிஷம் இருக்கிறதோ, அவர்கள் எந்தளவு நஷாவில் இருப்பார்கள்? எப்படி இராஜாவின் சின்னஞ்சிறு மகன் இராஜகுமார் ஆக ஆவார். பாபாவிடம் என்னென்ன பொக்கிஷம் இருக்கிறது என்பது தெரியாமலே இருக்கிறோம். ஆனால் பாபாவின் பொக்கிஷம் அனைத்தும் என்னுடைய பொக்கிஷம் ஆகும், மேலும் பொக்கிஷங் களின் குஷியில் இருக்க வேண்டும். ஒருவேளை குஷி குறைவாக இருக்கிறது என்றால் அதற்கான காரனம் என்ன? பாபா பொக்கிஷங்களை கொடுத்திருக்கிறார், கேட்டீர்களா. ஆனால் ஒன்று கேட்க மட்டும் செய்பவர்கள், இரண்டாமவர் உள்ளே கொண்டு செல்பவர்கள். யார் உள்வாங்குகிறார்களோ, அவர்கள் நஷாவில் இருப்பார்கள்.

இன்று புதுப்புது குழந்தைகளும் வந்திருக்கிறீர்கள். அதிர்ஷ்ட குழந்தைகளாகிய உங்களுக்கு பாக்கியத்தின் வாழ்த்துக்களை பாப்தாதா கொடுத்துக் கொண்டிருகிறார். தனது பாக்கியத்தை தெரிந்துக் கொள்ளுங்கள். தெரிந்து உள்ளீர்களா? பரமாத்ம அன்பு, அழிவற்ற அன்பு இது இந்த ஒரு ஜென்மத்திற்கு மட்டும் அல்ல, பல பிறவிகளுக்கு எப்பொழுதுமே அந்த அன்பு நிலையானதாக இருக்கும். ஏனெனில் இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் காலமானது, சங்கமயுகம் பாக்கியம் நிறைந்த யுகமாகும். சத்யுகத்தையும் கூட பாக்கியம் நிறைந்த யுகம் என்று சொல்லப் படுகிறது, ஆனால் தற்சமய சங்கமயுகமானது அதையும் (சத்யுகத்தையையும்) விட பாக்கியம் நிறைந்தது. ஏன்? இந்த சங்கமயுமத்தில் தான் பாபா மூலம் அகண்ட பாக்கியத்தின் வரதானம், ஆஸ்தியும் அடைகிறார்கள். எனவே அப்படிப்பட்ட சங்கமயுகத்தில், பாக்கியம் நிரைந்த நேரத்தில் நீங்கள் அனைவரும் தனது பாக்கியத்தை பெறுவதற்காக வந்து சேர்ந்துள்ளீர்கள். பாப்தாதா குழந்தைகளுக்காக மிகவும் எளிதான ஒரு முயற்சிக்கான விதியை சொல்கிறார் – எளிமை யானதை விரும்புகிறார்கள் அல்லவா. கடினமானதை விரும்புவதில்லை தானே. இந்த குழந்தை களுக்கு பாக்கியத்தின் சகஜமான விதி கிடைத்திருக்கிறது அல்லவா. கிடைத்திருக்கிறதா? அனைத்தையும் விட எளிதானது, வேறு எதுவும் செய்ய வேண்டாம், ஒரே ஒரு விஷயத்தை மட்டும் தான் செய்ய வேண்டும், ஒரு விஷயத்தை செய்ய முடியும் அல்லவா. ஆமாம் செய்யுங்கள் அல்லது செய்யாதீர்கள். ஆமாம் என்று சொல்லுங்கள். எனவே அனைத்தையும் விட சகஜமான விதி - அமிர்தவேளை யிலிருந்து யாரையெல்லாம் சந்திக்கிறீர்களோ, அவர்களிடமிருந்து ஆசீர்வாதங்கள் பெறுங்கள், ஆசீர்வாதங்களை கொடுங்கள். கோபப்படுபவர்கள் வந்தாலும் சரி, ஆனால் நீங்கள் அவர்களுக்கும் கூட ஆசீர்வதாங்களை கொடுங்கள், மேலும் ஆசீர்வாதங்களை பெறுங்கள், ஏனெனில் ஆசீர்வாதங்கள் தீவிர முயற்சிக்கான மிகவும் எளிதான யந்திரம் ஆகும். எப்படி அறிவியலில் இராக்கெட் இருக்கிறது அல்லவா. அது எந்தளவு விரைவாக செயல்களை செய்து முடித்து விடுகிறது, அது போல ஆசீர்வாதம் கொடுப்பது, மற்றும் ஆசீர்வாதம் எடுப்பது, இதுவும் கூட முன்னேறுவதற்கு ஒரு மிகவும் எளிதான சாதனமாக இருக்கிறது. அமிர்த வேளையில் பாபாவிடமிருந்து எளிதாக நினைவின் மூலம் ஆசீர்வாதங்களை பெறுங்கள், மேலும் முழு நாளும் ஆசீர்வாதங்களை கொடுங்கள்? ஆசீர்வாதங்களை பெறுங்கள். இதை செய்ய முடியுமா? செய்ய முடியுமென்றால் கையை உயர்த்துங்கள். யாராவது சாபம் தருகிறார்கள் என்றால் என்ன செய்வீர்கள்? உங்களை அடிக்கடி தொல்லை செய்கிறார்கள் என்றால்? சிந்தியுங்கள், நீங்கள் பரமாத்மாவின் குழந்தைகள், வள்ளலின் குழந்தைகளாக இருக்கிறீர்கள் அல்லவா? மாஸ்டர் வள்ளலாக இருக்கிறீர்கள். எனவே வள்ளலின் வேலை என்னவாக இருக்கிறது.? கொடுப்பதாகும். எனவே அனைத்தையும் விட நல்ல விசயமாக இருப்பது ஆசீர்வாதங்களை கொடுப்பதாகும். எப்படிப்பட்ட மனிதர்களாக இருந்தாலும் சரி, ஆனாலும் உங்களின் சகோதர - சகோதரிகளாக இருக்கிறார்கள். பரமாத்மாவின் குழந்தைகள், எனவே சகோதர சகோதரிகளாக இருக்கிறார்கள் அல்லவா. எனவே பரமாத்மாவின் குழந்தைகளாக இருக்கிறார்கள், என்னுடைய ஈஸ்வரிய சகோதரராக இருக்கிறார், ஈஸ்வரிய சகோதரியாக இருக்கிறார், அவர்களுக்கு என்ன தருவீர்கள்? சாபம் கொடுப்பீர்களா என்ன? பாபா என்றாவது சாபம் கொடுத்தாரா என்ன? கொடுப்பாரா? கொடுக் கிறாரா? ஆமாவா இல்லையா? சரி - இல்லை என்றாவது சொல்லுங்கள். மிகவும் குஷியாக இருக் கிறீர்கள், ஏன்? ஒருவேளை சாபம் கொடுப்பவர்களுக்கும் கூட நீங்கள் ஆசீர்வாதம் கொடுக்கிறீர்கள், அவர்கள் கொடுத்தாலும் சரி, கொடுக்க வில்லையென்றாலும் சரி, ஆனால் நீங்கள் ஆசீர்வாதங் களை தான் பெறுவீர்கள், அதனால் துக்கம் ஏன் ஏற்படுகிறது. வந்திருக்கக்கூடிய அனைத்து குழந்தைகளுக்கும் பாப்தாதா ஒரு வரதானம் கொடுக்கிறார் - வரதானத்தை நினைவில் வைத்தீர்கள் என்றால் சதா குஷியாக இருப்பீர்கள். வரதானத்தை சொல்லட்டுமா? கேட்கிறீர்களா.

வரதானம்: (ஆசீர்வாதம்) - ஒருவேளை யாராவது துக்கத்தை கொடுத்தாலும் கூட நீங்கள் துக்கத்தை எடுத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் கொடுக்கட்டும் ஆனால் நீங்கள் எடுக்க வேண்டாம். கொடுப்பவர்கள் கொடுக்கட்டும் எடுப்பவர்கள் எடுக்க வேண்டாம். ஒருவேளை அவர்கள் கெட்டுப் போன பொருளை தருகிறார்கள், துக்கம் கொடுக்கிறார்கள், அசாந்தி கொடுக்கிறார்கள், அவை கெட்ட பொருள் அலல்வா. உங்களுக்கு துக்கம் பிடித்திருக்கிறதா? பிடிக்கவில்லை அல்லவா. எனவே கெட்ட பொருள் ஆகிவிட்டது. எனவே கெட்ட பொருளை வாங்குவார்களா என்ன? யாராவது உங்களுக்கு கெட்டுப்போன பொருளை தருகிறார்கள் என்றால் நீங்கள் வாங்குவீர்களா என்ன? பெற்றுக் கொள்வீர்களா? பெறமாட்டீர்கள் இல்லையா. எனவே ஏன் பெற்றுக் கொள்கிறீர்கள்? பெறுகிறீர்கள் என்றால் வாங்கிவிட்டீர்கள் அல்லவா. ஒருவேளை துக்கத்தை பெற்றுவிட்டீர்கள் என்றால் துக்கம் அடைந்தது யார்? நீங்கள் துக்கம் அடைகிறீர்களா அல்லது அவர்கள் துக்கம் அடை கிறார்களா? பெறக்கூடியவர்கள் தான் அதிக துக்கம் அடைகிறார்கள். ஒருவேளை இப்பொழு திலிருந்து துக்கம் எடுக்கவில்லை என்றால் பாதியளவு துக்கம் உங்களை விட்டு சென்றுவிடும். பெறவே இல்லை அல்லவா. மேலும் நீங்கள் துக்கத்திற்கு பதிலாக அவர்களுக்கு சுகத்தை கொடுத்தால் ஆசீர்வாதங்கள் கிடைக்கும் அல்லவா. எனவே சுகமாகவும் இருக்கலாம், மற்றும் ஆசீர்வாதங்களின் பொக்கிஷமும் நிறைந்துவிடும். ஒவ்வொரு ஆத்மாவிற்கும், எப்படிப்பட்ட வர்களாக இருந்தாலும் நீங்கள் ஆசீர்வாதங்களை பெறுவீர்கள். சுப பாவணை (நல்ல உணர்வு), நல்ல விருப்பம் வையுங்கள். சில நேரங்களில் என்ன ஏற்படுகிறது? சிலர் அப்படிப்பட்ட (தலை கீழான) செயல் செய்யும் பொழுது, அறிவுரை தருவதற்கு முயற்சி செய்கிறோம். இதை சரி செய்கிறேன், அறிவுரை தருகிறேன், அறிவுரை கொடுங்கள், ஆனால் அறிவுரை தாருங்கள், ஆனால் அறிவுரை தருவதற்கான மிகவும் அனைத்தையும் விட உத்தமான விதி - மன்னிக்கும் சொரூபம் ஆகி அறிவுரை கொடுங்கள். அறிவுரை மட்டுமே கொடுத்துக் கொண்டு இருக்காதீர்கள், கருணை - மன்னிப்பு கொடுங்கள், அறிவுரை கொடுங்கள். இரண்டு வார்த்தைகளை நினைவில் வையுங்கள் - அறிவுரை மற்றும் மன்னிப்பு - கருணை. ஒருவேளை இரக்க மனமுடையவர் ஆகி, அவர்களுக்கு அறிவுரை கொடுத்தீர்கள் என்றால் உங்களுடைய அறிவுரை வேலை செய்யும். ஒருவேளை கருணை மனமுடையவர் ஆகி அறிவுரை வழங்க வில்லையென்றால், அறிவுரை ஒரு காதின் மூலம் கேட்பார்கள், மற்றொரு காதின் மூலம் வெளியே சென்றுவிடும். அறிவுரை தாரணை ஆகாது. அப்படி தான் இல்லையா? அனுபவம் இருக்கிறதா? நீங்கள் யாருக்கும் ஆசிரியர் ஆக வில்லை தானே? ஆசிரியர் (அறிவுரை) தருவது மிகவும் விரைவில் வந்துவிடுகிறது, ஆனால் மன்னிப்பதும் கூட சேர்ந்தே இருக்க வேண்டும். இப்பொழுதிலிருந்தே கருணை. கருணை காட்டு வதற்கான விதி சுப பாவணை, சுப விருப்பம். உண்மையான அன்பு கல்லையும் கூட தண்ணீராக மாற்றிவிடும் என்று கூறப்படுகிறது. அது போல தான் மன்னிக்கும் சொரூபம் ஆகி அறிவுரை கொடுப்பதின் மூலம் நீங்கள் எந்த செயலை விரும்புகிறீர்களோ, இவர்கள் செய்யமாட்டார்கள், இது நடைப்பெறாது, அது வெளிப்படையாக தென்படும். உங்களுடைய கருணை மனமுடைய அறிவுரையின் தாக்கம் அவர்களுடைய கொடூரமான இதயம் கூட மாறிவிடும். எனவே என்ன வரதானம் கிடைக்கிறது? துக்கத்தை தர வேண்டாம், துக்கத்தை எடுக்க வேண்டாம். பிடித்திருக் கிறதா? பிடித்திருக்கிறது என்றால் இப்பொழுது (துக்கத்தை) எடுக்க வேண்டாம். தவறு செய்ய வேண்டாம். பாபா துக்கத்தை கொடுக்காத பொழுது தந்தையை பின்பற்ற வேண்டும் அல்லவா? செய்துக் கொண்டுள்ளீர்களா. சில நேரங்களில் கொஞ்சம் திட்டி விடுகிறீர்களா/ திட்டாதீர்கள். கருணை காண்பியுங்கள். கருணையுடன் சேர்ந்து அறிவுரை தாருங்கள். அடிக்கடி ஒருவரை திட்டுவதால் மேலும் அந்த ஆத்மா எதிரி ஆகிவிடுவார்கள். வெறுப்பு வந்துவிடுகிறது. பரமாத்மா வின் குழந்தைகளாக இருக்கிறீர்கள் அல்லவா. எனவே எப்படி பாபா தூய்மையற்றவர்களையும் தூய்மையாக மாற்றக்கூடியவராக இருக்கிறார், அதனால் உங்களால் துக்கமானவர்களுக்கு சுகத்தை தர முடியாதா? இப்பொழுது ட்ரைல் (சோதனை) செய்து பாருங்கள், ட்ரைல் (சோதனை) செய்வீர்கள் அல்லவா. அதனால் முதலில் அறம் என்பது வீட்டில் இருந்து தொடங்க வேண்டும் (தன்னிட மிருந்து தொடங்க வேண்டும்). குடும்பத்தினர் யாராவது ஒருவேளை துக்கம் கொடுக்கிறார்கள் என்றால், ஆனாலும் துக்கத்தை எடுக்க வேண்டாம். ஆசீர்வாதம் கொடுங்கள், கருணை மனமுடையவர் ஆக வேண்டும். முதலில் வீட்டில் இருப்பவர்கள் மீது செய்யுங்கள். வீட்டின் தாக்கம் சுற்று சூழலில் ஏற்படும். சுற்றுப்புற சூழலின் தாக்கம் நாட்டிற்கு பரவும். ஒரு தேசத்தின் தாக்கம் உலகத்தில் பரவும். எளிதாக இருக்கிறது அல்லவா. தனது குடும்பத்தில் இருந்து ஆரம்பம் செய்யுங்கள். ஏனெனில் யாராவது வீட்டிலுள்ள ஒருவர் கோபப்பட்டால் வீட்டின் சூழல் எப்படி ஆகிறது என்பதை பாருங்கள். வீடாக இருக்கிறதா அல்லது போர் களமாக இருக்கிறதா? அந்த நேரம் பிடித்திருக்கிறதா? பிடிக்கவில்லை தானே.

உங்களுக்காகவும் கூட (இன்று வி.ஐ.பி.களுடன் சேர்ந்து மதுபனை சேர்ந்த சகோதர, சகோதரிகளும் அருகில் அமந்திருக்கிறார்கள்), அவரவர்களின் துணை புரிபவர்களுடன் (உதவி புரிபவர்களுடன்) அவர்களுடன் செயல்படுபவர்களுடன் துக்கத்தை கொடுக்க வேண்டாம், துக்கத்தை எடுக்கவும் வேண்டாம். ஆசீர்வாதங்களை கொடுக்க வேண்டும், ஆசீர்வாதங்களை பெற வேண்டும். ஒருவேளை அப்படிப்பட்ட நேரங்களில் நீங்கள் உரிமையோடு மனதார மேரா பாபா சொல்லுங்கள், பரமாத்ம தந்தை, மேரா பாபா .... என்றால் பகவான் சதா ஆஜாரி விடுவார் என்று பழமொழியும் இருக்கிறது. ஒருவேளை மனதார, உரிமையோடு அந்தமாதிரி சூழ்நிலையில் மேரா பாபா என்று சொன்னீர்கள் என்றால், பாபா வந்து விடுவார். ஏனென்றால் பாபா யாருக்காக இருக்கிறார்? குழந்தைகளுக்காகத் தான் இருக்கிறார். மேலும் உரிமையுள்ள குழந்தைகளுக்கு பாபா உதவி புரியாமல் இருக்க முடியாது. அசம்பவமானதாகும். எனவே மாற்றம் அடைந்து செல்ல வேண்டும். எப்படி வந்தீர்களோ, அப்படியே செல்ல வேண்டாம். மாற்றம் அடைந்து தான் செல்ல வேண்டும். ஏனெனில் இந்தளவு செலவு செய்து வந்துள்ளீர்கள், டிக்கெட் செலவு தானே. செலவும் செய்தீர்கள், நேரமும் கொடுத்தீர்கள், எனவே அதற்கான மதிப்பு வைப்பீர்கள் அல்லவா. எனவே மதிப்பு இருக்கிறது - சுயமாற்றதோடு முதலாவது வீட்டை மாற்றம் செய்து, அதன் பிறகு தேசத்தை, உலகை, மாற்றம் செய்ய வேண்டும். உங்களுடைய வீடு ஆசிரமம் ஆகிவிடும். வீடு அல்ல, ஆசிரமம் ஆக வேண்டும். எப்படியோ ஆசிரமம் என்று தான் சொல்லப்படுகிறது, இல்லற ஆசிரமம், ஆனால் இன்று ஆசிரமமாக இல்லை. ஆசிரமம் தனிப்பட்டது, வீடு தனிப்பட்டது. எனவே வீட்டை ஆசிரமமாக ஆக்க வேண்டும். ஆசீர்வாதம் கொடுக்க வேண்டும், பெற வேண்டும். இது ஆசிரமத்தின் செயல்பாடுகள். உங்களுடைய வீடு கோவில் ஆகிவிடும். கோவிலில் மூர்த்தி என்ன செய்துக் கொண்டிருக்கிறது? ஆசீர்வாதம் கொடுப்பதாகும் அல்லவா. மூர்த்தி (சிலை) க்கு முன்னால் சென்று என்ன சொல்கிறீகள்? ஆசீர்வாதம் கொடுங்கள். கருணை, கருணை என்று கேட்டு கதறிக்கொண்டு இருக்கிறார்கள். எனவே நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ஆசீர்வாதம். ஈஸ்வரிய அன்பை கொடுங்கள், ஆத்மீக அன்பு. சரீரத்திற்கான அன்பு அல்ல. ஆத்மீக அன்பு. இன்றைய அன்பானது சுயநலமான அன்பாக இருக்கிறது. உண்மையான மனதினுடைய அன்பு அல்ல. சுய நலம் இருக்கிறது என்றால் அன்பு கொடுக்கிறோம், சுயநலம் இல்லையென்றால் கண்டுகொள்வ தில்லை. எனவே நீங்கள் என்ன செய்வீர்கள்? ஆத்மீக அன்பை தர வேண்டும், ஆசீர்வாதம் தர வேண்டும், துக்கத்தை தர வேண்டாம், துக்கத்தை பெற வேண்டாம், உங்களுக்காக வாய்ப்பு கிடைத்திருப்பதை பாருங்கள். பாப்தாதாவும் கூட மகிழ்ச்சி அடைகிறார். யாரெல்லாம் வந்துள்ளீர் களோ, (பாரதத்தில் இருந்து 250 வி.ஐ.பி கள் அமைதி மாநாட்டிற்கு வந்துள்ளீர்கள்) இவர்களின் வீடுகள் ஆசிரமம் ஆகிவிடும் அல்லவா. ஆகிவிடும் அல்லவா? உறுதியாக?, சிறிதளவு உறுதித் தன்மை குறைவாக? யாரெல்லம் புரிந்து கொண்டு உள்ளீர்கள், என்ன நடந்தாலும் சரி, கொஞ்சம் சகித்துக் கொள்ள வேண்டிருந்தாலும் சரி, உள்ளடக்கும் சக்தியை செயலில் கொண்டு வர வேண்டிருக்கும், ஆனால் பொறுத்துக்கொள்ளும் சக்தியின் பலன் மிகவும் இனிமையாக இருக்கும். சகித்துக் கொள்ள வேண்டிருக்கிறது, ஆனால் பலன் மிக இனிமையாக இருக்கிறது. எனவே யார் உறுதியாக செய்கிறார்களோ, ஒவ்வொரு வீடும் சொர்க்கம் ஆக்குவோம், கோவில் ஆக்குவோம் ஆசிரமம் ஆக்குவோம். அவர்களெல்லாம் கையை உயர்த்துங்கள். மற்றவர்களை பார்த்து கையை உயர்த்த வேண்டாம், ஏனெனில் பாப்தாதா கணக்கு எடுப்பார் அல்லவா. பார்த்து கையை உயர்த்த வேண்டாம், உண்மையிலும் உண்மையான மனதின் கை, மனதார கையை உயர்த்துங்கள். நல்லது. தாதிமார்களே, இவர்களுக்கு இதற்காக என்ன பரிசு தருவீர்கள்? ஆமாம் என்று சொல்லுங்கள், தாதி இத்தனை கோவில்களை ஆகிவிட்டால் நீங்கள் அவர்களுக்கு என்ன பரிசு தருவீர்கள்? (தனது வீட்டை சேர்ந்தவர்களை அழைத்து வரவும்), இவர்கள் பரிசு அல்ல, இந்த வேலையை சொல்லப் படிருக்கிறது, (பாபா என்ன கட்டளை பிறப்பிக்கிறாரோ), பாருங்கள், பரிசு உங்களுக்கு கிடைத்து விடும். இது ஒன்றும் பெரிய விஷயமில்லை. ஆனால்,, ஆனால் என்பது இருக்கிறது? ஆனால் என்று சொல்கிறீர்கள். நீங்கள் (உங்கள் இடத்திற்கு) சென்ற பிறகு மாற்றம் செய்ய வேண்டும், மேலும் 15 நாட்களுக்கு பிறகு, மாதத்திற்கு பிறகு, தனது ரிசல்டை எழுத வேண்டும். யாரெல்லாம் ஒரு மாதத்திற்கு துக்கத்தை எடுக்காது, கொடுக்காது இருப்பீர்களோ அவர்களுக்கு நல்ல பரிசு கொடுப்போம், ஒருவேளை நீங்கள் வந்தீர்கள் என்றால் வாழ்த்துக்கள். ஒருவேளை வர முடிய வில்லையென்றால் செண்டருக்கு அனுப்புங்கள். நல்லது.

நாலா பக்கத்திலுமுள்ள உள்நாடு, வெளிநாட்டு குழந்தைகளின் நினைவு பாப்தாதாவிற்கு வந்து சேருகிறது, தொலைபேசி மூலமாக நினைவு அனுப்பினாலும் சரி, கடிதங்கள் மூலமாக அனுப் பினாலும் சரி, மனதின் மூலம் அனுப்பினாலும் சரி, பாப்தாதா அனைத்து குழந்தைகளுக்கும் பாரதம், மற்றும் வெளிநாட்டினருக்கு பிரதிபலனாக (ரிடர்னாக) ஆசீர்வாதம் மற்றும் அன்பு நினைவுகள் பல கோடிமடங்கு கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

நாலா பக்கத்திலுமுள்ள பரமாத்ம அன்பின் அதிகாரி குழந்தைகளுக்கு, நாலா பக்கமும் அனைத்து பொக்கிஷங்களில் நிரம்பிய, தடைகளற்ற, முடிவற்ற, வீணான எண்ணங்களற்று, இருக்கக் கூடிய சிரேஷ்ட ஆத்மாக்களுக்கு, கூடவே அனைத்தையும் மாற்றம் செய்யக்கூடிய மற்றும் செய்ய வைக்கக்கூடிய ஊக்கம் - உற்சாகத்தில் பறக்கக் கூடிய குழந்தைகளுக்கு, அதன் கூடவே பாப்தாதாவிற்கு உண்மையான மனதின் விஷயங் களை தரக்கூடிய உண்மையான இதயமுடைய குழந்தைகளுக்கு, விசேஷமாக திலாராம் ரூபத்தில், பாபாவின் ரூபத்தில், ஆசிரியர் ரூபத்தில், சத்குருவின் ரூபத்தில் பலமடங்கு அன்பு நினைவுகள் மற்றும் நமஸ்காரம்.

ஆசீர்வாதம்:
அலைந்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு சரியான குறிக்கோளை காட்டக்கூடிய சைத்தன்ய (உயிரோட்டமுள்ள) லைட் - மைட் ஹவுஸ் ஆகுக.

அலைந்துக் கொண்டிருக்கும் ஆத்மாக்களுக்கு சரியான குறிக்கோளை காட்டுவதற்காக சைதன்ய லைட் - மைட் ஹவுஸ் ஆகுங்கள். இதற்காக இரண்டு விஷயங்கள் மீது கவனத்தில் வையுங்கள் - 1. ஒவ்வொரு ஆத்மாவின் விருப்பத்தை பகுத்தறிவது, நாடியை தெரிந்துக் கொள்வதைத் தான் தகுதியுடைய மருத்துவர் என்று சொல்லப்படுகிறது. அதுபோல பகுத்தறிவும் சக்தியை சதா பயன்படுத்துவது. 2. சதா தன்னிடம் அனைத்து பொக்கிஷங்களின் அனுபவத்தை நிலையாக வைப்பது, சதா இந்த இலட்சியத்தை வைக்க வேண்டும், சொல்வது மட்டும் அல்ல. ஆனால் அனைத்து சம்மந்தங்களின், அனைத்து சக்திகளின் அனுபவம் செய்ய வைப்பதாகும்.

சுலோகன்:
மற்றவர்களை சரி செய்வதற்கு (கரைக்ஷன்) பதிலாக ஒரு பாபாவோடு சரியான கனைக்ஷன் வையுங்கள்.


அவ்யக்த சமிக்ஞை : ஆன்மீக கௌரவத்தையும் தூய்மையெனும் ஆளுமையையும் கையாளுங்கள்.

தனது உண்மையான சொரூபம் மற்றும் வரதான சொரூபம் சதா நினைவில் வைத்தீர்கள் என்றால் தூய்மையற்றத்தன்மை மற்றும் மறதியின் பெயர் அடையாளம் முடிந்து போய்விடும். மறதி அல்லது தூய்மையற்றத்தன்மை எப்படி இருக்கும். இப்பொழுது இதைப் பற்றி ஒன்றும் தெரியாதவர் ஆக வேண்டும், ஏனெனில் இந்த சம்ஸ்காரம் மற்றும் சொரூபம் நம்முடையதல்ல, இவை அனைத்தும் உங்களுடைய பூர்வ ஜென்மத்தினுடையது. இப்பொழுது நீங்கள் பிராமணர் களாக உள்ளீர்கள், அவை அனைத்தும் சூத்திரகளின் சம்ஸ்காரம் மற்றும் சொரூபமாகும், அதுபோல தன்னிடமிருந்து வேறுப்பட்ட அதாவது மற்றவர்களுடைய சம்ஸ்காரம் அனுபவம் ஆகும். இதைத் தான் - நியாரா ப்யாரா ( விடுப்பட்டவர் - அன்பானவர்) என்று சொல்லப்படும்