25-06-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நாம் ஆத்மா என்பதை மிக உறுதியாக நிச்சயம் செய்யுங்கள். ஆத்மா என்று உணர்ந்து ஒவ்வொரு செயலையும் ஆரம்பித்தீர்கள் என்றால் தந்தை நினைவிற்கு வருவார், பாவம் ஏற்படாது.

கேள்வி:
கர்மத்தை வென்ற நிலையை அடைவதற்காக ஒவ்வொருவரும் எந்த ஒரு முயற்சி செய்ய வேண்டும்? கர்மாதீத் நிலைக்கு அருகாமையில் வந்துள்ளோம் என்பதற்கான அடையாளம் என்ன?

பதில்:
கர்மத்தை வென்ற நிலையை அடைவதற்கு நினைவின் பலத்தினால் தங்களது கர்ம இந்திரியங்களை வசப்படுத்தும் முயற்சி செய்யுங்கள். நான் நிராகார ஆத்மா, நிராகார தந்தையின் குழந்தை என்ற அப்பியாசம் செய்யுங்கள். கர்ம இந்திரியங்கள் அனைத்தும் நிர்விகாரி ஆகிவிடும் வகையில் சக்திசா-யான உழைப்பு தேவை. அந்த அளவு கர்மாதீத் நிலைக்கு அருகாமையில் வரும்போது அனைத்து உறுப்புகளும் தணிந்ததாகவும், நறுமணமுடையதாகவும் ஆகிக் கொண்டே போகும். அவற்றி-ருந்து விகாரியான துர்நாற்றம் நீங்கி விடும். அதீந்திரிய சுகத்தின் அனுபவம் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

ஓம் சாந்தி.
சிவ பகவான் கூறுகிறார்: இது யாருக்காக என்பதை குழந்தைகளுக்கு கூற வேண்டிய தில்லை. சிவ பாபா ஞானத்தின் கடல் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். அவர் மனித சிருஷ்டியின் விதை ரூபமாக உள்ளார். எனவே அவர் அவசியம் ஆத்மாக்களிடம் தான் பேசுகிறார். சிவ பாபா கற்பிக்கிறார் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். பாபா என்ற வார்த்தை மூலமாக பரம ஆத்மாவைத்தான் பாபா என்று கூறுகிறோம் என்று அறிகிறார்கள். அனைத்து மனிதர்களும் அந்த பரம ஆத்மாவைத்தான் தந்தை என்று கூறுகிறார்கள். பாபா பரம்தாமத்தில் வசிக்கிறார் இந்த விஷயங்களை உறுதி செய்துக்கொள்ள வேண்டும். தன்னை ஆத்மா என்று உணர வேண்டும் மற்றும் இதை உறுதியாக நிச்சயம் செய்துக்கொள்ள வேண்டும். தந்தை என்ன கூறுகிறாரோ அதை ஆத்மா தான் தாரணை செய்கிறது. எந்த ஞானம் பரமாத்மாவிடம் உள்ளதோ அது ஆத்மாவிற் குள்ளும் வர வேண்டும். அது பின்னர் வாயால் வர்ணிக்கப்படுகிறது. ஆத்மா தான் பாடம் படிக்கிறது. ஆத்மா வெளியேறிவிட்டால் படிப்பு ஆகியவை எதுவும் அதற்கு தெரியாது. ஆத்மா சம்ஸ்காரம் எடுத்து சென்றது. அது மற்றொரு சரீரத்தில் அமர்ந்தது. எனவே முத-ல் தங்களை மிக உறுதியாக ஆத்மா என்று உணர வேண்டும். தேக அபிமானத்தை இப்பொழுது விட வேண்டி வரும். ஆத்மா கேட்கிறது. ஆத்மா தாரணை செய்கிறது. ஆத்மா இதில் இல்லை என்றால் சரீரம் அசையவே முடியாது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் பரம ஆத்மா, ஆத்மாக்களாகிய எங்களுக்கு ஞானம் அளித்துக் கொண்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். நாம் ஆத்மாக்கள் சரீரம் மூலமாக கேட்கிறோம் மற்றும் பரமாத்மா சரீரம் மூலமாக கூறிக் கொண்டிருக்கிறார். இதையே அடிக்கடி மறந்து விடுகிறீர்கள். தேகம் நினைவிற்கு வருகிறது. நல்லது அல்லது கெட்ட சம்ஸ்காரம் ஆத்மாவில் தான் உள்ளது என்பதையும் அறிந்துள்ளீர்கள். சாராயம், குடிப்பது, சீசீ விஷயங்கள் பேசுவது.. இதுவும் ஆத்மா செய்கிறது உறுப்புகள் மூலமாக. ஆத்மா தான் இந்த உறுப்புகள் மூலமாக இவ்வளவு பாகத்தை ஏற்று நடிக்கிறது. முத-ல் அவசியமாக ஆத்ம அபிமானி ஆக வேண்டும். தந்தை ஆத்மாக்களுக்குத் தான் கற்பிக்கிறார். ஆத்மா தான் பிறகு இந்த ஞானத்தை தன் கூடவே எடுத்துச் செல்லும். எப்படி அங்கு பரம ஆத்மா ஞானத்துடன் இருப்பாரோ அதே போல ஆத்மாக்களாகிய நீங்களும் பின் இந்த ஞானத்தை கூடவே எடுத்து செல்வீர்கள். நான் குழந்தைகளாகிய உங்களை இந்த ஞான சகிதம் அழைத்துச் செல்கிறேன். பிறகு ஆத்மாக்களாகிய நீங்கள் பார்ட்டில் வர வேண்டி உள்ளது. உங்களது பார்ட்டே புது உலகத்தில் பிராலப்தத்தை (பலனை) அனுபவிப்பது. ஞானம் பின்னர் மறந்து விடுகிறது. இவை எல்லாமே நல்ல முறையில் தாரணை செய்ய வேண்டும். முதன் முத-ல் நான் ஆத்மா என்பதை மிக மிக நன்றாக உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அநேகர் இதை மறந்து விடு கின்றனர். தனக்குத் தானே அதிக முயற்சி செய்ய வேண்டும். உலகிற்கு எஜமானர் ஆக வேண்டும் என்றால் உழைப்பு முயற்சி இன்றி ஆக முடியுமா என்ன? அடிக்கடி இந்த பாயிண்ட்டையே மறந்து விடுகிறார்கள் ஏனெனில் இது புது ஞானம் ஆகும். தங்களை ஆத்மா என்று மறந்து தேக அபிமானத்தில் வந்து விடும் பொழுது ஏதாவது பாவங்கள் ஏற்படுகின்றன. ஆத்ம அபிமானி நிலை ஆவதால் ஒருபோதும் பாவங்கள் ஏற்படாது. பாவங்கள் அழிந்து போய் விடும். பின் அரைக் கல்பம் எந்த பாவமும் ஆகாது எனவே நான் ஆத்மா படிக்கிறேன், தேகம் அல்ல என்ற இதை நிச்சயம் செய்துக் கொள்ள வேண்டும். இதற்கு முன்பு ஸ்தூல மனிதர்களின் வழி கிடைத்துக் கொண்டிருந் தது. இப்பொழுது தந்தை ஸ்ரீமத் அளித்துக் கொண்டிருக்கிறார். இது புது உலகிற்கான முற்றிலும் புதிய நாலேஜ் ஆகும். நீங்கள் எல்லோரும் புதியவர்களாக ஆகி விடுவீர்கள். இதில் குழம்புவதற் கான விஷயம் எதுவும் இல்லை. அநேக முறை நீங்கள் பழையதி-ருந்து புதியதாக, புதியதி-ருந்து பழையதாக ஆகிக் கொண்டே வந்துள்ளீர்கள். எனவே நல்ல முறையில் புருஷார்த்தம் (முயற்சி) செய்ய வேண்டும்.

நாம் ஆத்மா கர்ம இந்திரியங்கள் மூலம் இந்த காரியம் செய்கிறோம். அலுவலகம் ஆகியவற்றிலும் கூட தங்களை ஆத்மா என்று உணர்ந்து கர்ம இந்திரியங்கள் மூலம் காரியம் செய்து கொண்டே இருந்தீர்கள் என்றால் கற்பிக்கும் தந்தை அவசியம் நினைவிற்கு வருவார். ஆத்மா தான் தந்தையை நினைவு செய்கிறது. இதற்கு முன்பு கூட நான் பகவானை நினைவு செய்கிறேன் என்று கூறிக் கொண்டு இருந்தோம் தான். ஆனால் தங்களை சாகாரம் (சரீரம்) என்று நினைத்து நிராகாரமானவரை நினைவு செய்து கொண்டிருந்தோம். தங்களை நிராகார் என்று நினைத்து நிராகாரமானவரை ஒரு பொழுதும் நினைவு செய்து கொண்டிருக்க வில்லை. இப்பொழுது நீங்கள் தங்களை நிராகார் ஆத்மா என்று உணர்ந்து நிராகார் தந்தையை நினைவு செய்ய வேண்டும். இவை ஞான மனனம் செய்வதற்கான விஷயங்கள் ஆகும். ஒரு சிலர் நாங்கள் 2 மணி நேரம் நினைவு செய்கிறோம் என்று எழுதுகிறார்கள் தான். ஒரு சிலர் நாங்கள் எப்பொழுதும் சிவ பாபாவை நினைவு செய்கிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால் எப்பொழுதும் யாரும் நினைவு செய்ய முடியாது. அவ்வாறு நினைவு செய்து இருந்தால் முன் கூட்டியே கர்மாதீத் நிலையில் இருக்க வேண்டும். கர்மாதீத் நிலையோ மிகவும் கடின உழைப்பினால் ஆகிறது. இதில் எல்லா விகாரி கர்ம இந்திரியங்களும் வசப்பட்டு விடுகிறது. சத்யுகத்தில் எல்லா கர்ம இந்திரியங் களும் நிர்விகாரி ஆகி விடுகிறது. ஒவ்வொரு அங்கமும் நறுமணமுடையதாக ஆகி விடுகின்றன. இப்பொழுது துர்நாற்றமுடைய சீசீ உறுப்புக்கள் ஆகும். சத்யுகத்தினுடையதோ மிகவும் பிரியமான மகிமை ஆகும். அது ஹெவென், புது உலகம், வைகுண்டம் என்று கூறப்படுகிறது. அங்கு இருக்கும் தோற்றம், கிரீடம் ஆகியவை போல் இங்கு யாருமே அமைக்க முடியாது. நீங்கள் தியானத்தில் பார்த்து விட்டு வருகிறீர்கள் தான். ஆனால் இங்கு அதே போல அமைக்க முடியாது. அங்கு இயற்கையான அழகு இருக்கும். எனவே இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் நினைவினால் தான் தூய்மை ஆக வேண்டும். நினைவு யாத்திரை அதிகமாக செய்ய வேண்டும். இதில் மிகுந்த உழைப்பு உள்ளது. நினைவு செய்து செய்து கர்மாதீத் நிலையை அடைந்து விட்டீர்கள் என்றால் எல்லா கர்ம இந்திரியங்களும் தணிந்ததாக ஆகி விடும். ஒவ்வொரு உறுப்பும் மிகவும் நறுமணமுடையதாக ஆகி விடும். துர் நாற்றம் இருக்காது. இப்பொழுதோ எல்லா கர்ம இந்திரியங்களிலும் துர் நாற்றம் உள்ளது. இந்த சரீரம் எதற்கும் உதவாததாக உள்ளது. உங்களது ஆத்மா இப்பொழுது தூய்மை ஆகி கொண்டிருக்கிறது. சரீரம் தூய்மையாக ஆக முடியாது. உங்களுக்கு புது சரீரம் கிடைக்கும் பொழுதுதான் அது தூய்மையாக இருக்கும். அங்கு அங்கத்தில் (சரீரம்) நறுமணம் இருக்கும், இந்த மகிமை தேவதைகளினுடையது ஆகும். குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் குஷி இருக்க வேண்டும். தந்தை வந்துள்ளார் என்றால் குஷியின் எல்லை அளவு கடந்து இருக்க வேண்டும்.

என்னை நினைவு செய்தால் விகர்மங்கள் விநாசம் ஆகும் என்று தந்தை கூறுகிறார். கீதையின் வார்த்தைகள் எவ்வளவு தெளிவாக உள்ளன. பாபா இதுவும் கூறி இருக்கிறார்-யார் என்னுடைய பக்தர்களோ, கீதை பாராயணம் செய்பவர்களோ அவர்கள் அவசியம் கிருஷ்ணரின் பூசாரியாகவும் இருப்பார்கள். அதனால் தான் பாபா கூறுகிறார்: தேவதைகளின் பூசாரிகளுக்கு கூறுங்கள்: மனிதர்கள் சிவனுக்கு பூஜை செய்கிறார்கள் மற்றும் அவர் சர்வ வியாபி என்றும் கூறி விடுகிறார்கள். உயர்ந்த படிகளை ஏறி மேலே செல்கிறார்கள். சிவனின் கோவில் மேலே கட்டப் படுகிறது. சிவ பாபா கூட வந்து படிகள் பற்றி கூறுகிறார் அல்லவா? அவரது பெயர் உயர்ந்தது, இருப்பிட மும் உயர்ந்ததாகும். எவ்வளவு மேலே செல்கிறார்கள்! பத்ரிநாத், அமர் நாத், அங்கு சிவனின் கோவில் உள்ளது. உயர உயர (மேன்மை படுத்துவார்) உயர்த்துபவர் ஆவார். எனவே அவரது கோவிலைக் கூட மிக உயர்ந்ததாகவே அமைக்கிறார்கள். இங்கு குரு ஷிகர் கோவில் கூட உயர்ந்த மலையில் அமைக்கப் பட்டுள்ளது. உயர்ந்த தந்தை அமர்ந்து உங்களுக்கு கற்பிக் கிறார். சிவ பாபா வந்து கற்பிக்கிறார் என்று உலகத்தில் வேறு யாருக்கும் தெரியாது. அவர்களோ சர்வ வியாபி என்று கூறிவிடுகிறார்கள். இப்பொழுது உங்கள் முன்னால் இலட்சியம் கூட உள்ளது. இது உங்களது இலட்சியம் என்று தந்தையைத் தவிர வேறு யார் கூறுவார்? இதை தந்தை தான் குழந்தைகளாகிய உங்களுக்கு கூறுகிறார். நீங்கள் சத்திய நாராயணருடைய கதையைக் கேட்கிறீர்கள். அவர்களோ எது நடந்து முடிந்து விட்டுள்ளதோ அவற்றின் கதைகளை முன்னால் என்னென்ன ஆகியது என்று கூறுகிறார்கள். அது கதை என்று கூறப்படுகிறது. இது உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தை பெரியதிலும் பெரிய கதை கூறுகிறார். இந்த கதை உங்களை மிகவும் உயர்ந்ததாக ஆக்கக் கூடியது. இதை எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும் மற்றும் அநேகருக்கும் கூற வேண்டும். கதையை கூறுவதற்காகத்தான் நீங்கள் கண்காட்சி அல்லது மியூசியம் அமைக் கிறீர்கள். 5 ஆயிரம் வருடம் முன்னால் பாரதம் தான் இருந்தது. அதில் தேவதைகள் ஆட்சி புரிந்து கொண்டு இருந்தார்கள். இது உண்மையிலும் உண்மையான கதை. இதை வேறு யாரும் கூற முடியாது. இது உண்மையான கதை ஆகும். இதை சைதன்ய விருட்சபதியான தந்தை அமர்ந்து புரிய வைக்கின்றார். இதன் மூலம் நீங்கள் தேவதை ஆகிறீர்கள். இதில் தூய்மை என்பது முக்கியம் ஆகும். தூய்மை ஆகவில்லை என்றால் தாரணை ஆகாது. சிங்கத்தின் பாலுக்கு தங்க பாத்திரம் வேண்டும். அப்பொழுது தான் தாரணை செய்ய முடியும். இந்த காது கூட ஒரு பாத்திரத்தைப் போல ஆகும் அல்லவா? இது தங்க பாத்திரம் ஆக வேண்டும். இப்பொழுது கல்-னால் ஆனது ஆகும். தங்கத்தினுடையது ஆகும்பொழுது தான் தாரணை ஆக முடியும். மிக கவனத்துடன் கேட்க வேண்டும் மற்றும் தாரணை செய்ய வேண்டும். கதையோ சுலபமானது ஆகும். இது கீதையில் எழுதப்பட்டுள்ளது. அவர்கள் கதைகளைக் கூறி சம்பாத்தியம் செய்கிறாôகள். கேட்பவர்கள் மூலமாக அவர்களுக்கு வருமானம் கிடைத்து விடுகிறது. இங்கு உங்களுடையது கூட ஒரு சம்பாத்தியம் ஆகும். இரண்டு சம்பாத்தியமும் நடந்து கொண்டே இருக்கிறது. இரண்டு வியாபாரமும் உள்ளது. கற்பிக்கவும் செய்கிறார். மன்மனாபவ, தூய்மையாகுங்கள் என்று கூறுகிறார். இது போல வேறு யாரும் கூறுவதும் இல்லை. மன்மனா பவ ஆகி இருப்பதும் இல்லை எந்த ஒரு மனிதரும் இங்கு தூய்மையாக இருக்க முடியாது. ஏனெனில் விகாரத்தின் மூலம் பிறக்கிறார்கள். இராவண இராஜ்யம் க-யுக கடைசி வரை நடக்கும். அதில் தூய்மை ஆக வேண்டும். தூய்மையானவர்கள் என்று தேவதைகளுக்குத் தான் கூறப்படுகிறது. மனிதர்களுக்கு அல்ல. சந்நியாசி கூட மனிதர்கள் ஆவார்கள். அவர்களுடையது துறவற மார்க்கத்தின் தர்மம். என்னை நினைவு செய்தீர்கள் என்றால் நீங்கள் தூய்மையானவர் களாக ஆகிவிடுவீர்கள் என்று தந்தை கூறுகிறார். பாரதத்தில் இல்லற மார்க்கத்தினுடைய இராஜ்யம் தான் நடந்துள்ளது. துறவற மார்க்கத்தினருடன் உங்களுக்கு எந்த சம்மந்தமும் இல்லை. இங்கு கணவன் மனைவி இருவருமே தூய்மை ஆக வேண்டும். இரண்டு சக்கரங்களும் (சீராக) நடக்கிறது என்றால் சரியாக இருக்கும். இல்லாவிட்டால் சண்டை ஏற்பட்டு விடுகிறது. தூய்மை பற்றி தான் சண்டை நடக்கிறது. வேறு எந்த சத்சங்கத்திலும் தூய்மை காரணமாக சண்டை என்று ஒரு பொழுதும் கேள்விப் பட்டிருக்க முடியாது. இது ஒரே ஒரு முறை தந்தை வரும் பொழுது சண்டை ஏற்படுகிறது. தூய்மை ஒன்றும் இழக்கவில்லையே என்று தந்தையும் கேட்கிறார். ஏனெனில் காமம் மகா எதிரி ஆகும் அல்லவா? முற்றிலும் விழுந்து விடுகிறார்கள். இந்த காம விகாரம் எல்லோரையும் ஒரு காசுக்கும் உதவாததாக ஆக்கி உள்ளது. 63 பிறவிகள் நீங்கள் வைசியாலயத்தில் இருக்கிறீர்கள். இப்பொழுது தூய்மையாகி சிவாலயம் செல்ல வேண்டும் என்று தந்தை கூறுகிறார். இந்த ஒரு பிறவி தூய்மையாகுங்கள். சிவ பாபாவை நினைவு செய்தீர்கள் என்றால் சிவாலயமான சொர்க்கத்திற்குச் செல்வீர்கள். பிறகும் காம விகாரம் எவ்வளவு வ-மையாக உள்ளது. எவ்வளவு தொல்லைப்படுத்து கிறது? கவர்ச்சி ஏற்படுகிறது. கவர்ச்சியை நீக்கி விட வேண்டும். திரும்பிச் செல்ல வேண்டி இருக்கும் பொழுது அவசியம் தூய்மை ஆக வேண்டும். டீச்சர் உட்கார்ந்துக் கொண்டே இருப்பாரா என்ன? படிப்பு சிறிது காலம் நடக்கும் பாபா கூறி விடுகிறார். இது எனது ரதம் அல்லவா? ரதத்தின் ஆயுள் இவ்வளவு என்று கூறுவார்கள். நான் என்றும் அமரர் ஆவேன் என்று தந்தை கூறுகிறார். எனது பெயரே அமர் நாத் ஆகும். புனர் ஜென்மம் எடுப்பதில்லை அரைக் கல்பத்திற்காக அமரராக ஆக்குகிறார். பிறகு நீங்கள் புனர் ஜென்மம் எடுக்கிறீர்கள். எனவே இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் மேலே செல்ல வேண்டும். பிறகு முகம் இந்த பக்கமும் (சொர்க்கம்) கால்கள் அந்த பக்கமும் (நரகம்) போக வேண்டும். இந்த பக்கம் ஏன் நீங்கள் முகத்தை திருப்ப வேண்டும். கூறுகிறார்கள் : பாபா தவறு ஏற்பட்டு விட்டது. முகம் இந்த பக்கம் ஆகிவிட்டது என்று, அதாவது தலை கீழானவர் ஆகி விடுகிறார்கள்.

நீங்கள் தந்தையை மறந்து தேக அபிமானி ஆகிறீர்கள் அப்பொழுது தலை கீழானவர் (தவறானவர்) ஆகி விடுகிறீர்கள். தந்தை எல்லாமே கூறுகிறார். தந்தையிடமிருந்து சக்தி கொடு, பலம் கொடு என்று எதையும் கேட்க வேண்டியதில்லை. தந்தையோ யோக பலத்தினால் இவ்வாறு ஆக வேண்டும் என்று வழி கூறுகிறார். நீங்கள் யோக பலத்தினால் எவ்வளவு செல்வந்தர் ஆகிறீர்கள் என்றால் 21 பிறவிகள் ஒருபொழுதும் யாரிடமும் கேட்க வேண்டிய அவசியம் இருப்பதில்லை. இவ்வளவு நீங்கள் தந்தையிடம் பெறுகிறீர்கள். பாபாவோ ஏராளமான சம்பாத்தியம் செய்விக்கிறார் என்பதை உணர்ந்துள்ளீர்கள், எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறுகிறார். இந்த லட்சுமி நாராயணர் மிக உயர்ந்தவர் ஆவார்கள். எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் முழுமையாக படிக்கவில்லையென்றால் பிரஜையில் சென்று விடுவீர்கள். பிரஜை களையும் அவசியம் உருவாக்க வேண்டும். உங்களுடைய மியூசியம் போகப்போக அதிகமாக ஆகி விடும் மற்றும் உங்களுக்கு பெரிய பெரிய கூடங்கள் கிடைக்கும்; கல்லுôரிகள் கிடைக்கும், அங்கு நீங்கள் சேவை செய்வீர்கள். இந்த திருமணங்களுக்காக அமைக்கப்படும் கூடங்கள் (மண்டபம்) கூட உங்களுக்கு அவசியம் கிடைக்கும். நீங்கள் இவ்வாறு விளக்குவீர்கள். சிவ பகவான் கூறுகிறார்: நான் உங்களை இது போல தூய்மை ஆக்குகிறேன் என்பதை அறிந்து டிரஸ்டிகள் ஹால் கொடுத்து விடுவார்கள். கூறுங்கள்: பகவான் கூறுகிறார், காமம் மகா எதிரி ஆகும். அதனால் துக்கம் அடைந்துள்ளீர்கள். இப்பொழுது தூய்மை ஆகி தூய்மையான உலகம் செல்ல வேண்டும். உங்களுக்கு ஹால் கிடைத்துக் கொண்டே இருக்கும். பிறகு டூலேட் என்று கூறுவீர்கள். தந்தை கூறுகிறார்: நான் மீண்டும் நிரப்பிக் கொடுக்க வேண்டி இருக்கும் வகையில் இப்பொழுது சும்மாவே உங்களிடமிருந்து வாங்குவேனா என்ன? குழந்தைகளின் ஒவ்வொரு ரூபாய் மூலமாக சிறுதுளி குளமாக ஆகிறது. மற்றபடி அனைவருடையதும் மண்ணோடு சேரப் போகிறது. தந்தை எல்லோரை யும் விட பெரிய கணக்கு பார்ப்பவரும் ஆவார். பொற்கொல்லன், சலவை தொழிலாளி, சிற்பியும் ஆவார். நல்லது.

இனிமையிலும் இனிமையான வெகுகாலம் காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவு மற்றும் குட்மார்னிங். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. தந்தை கூறும் உண்மையிலும் உண்மையான கதையை கவனத்துடன் கேட்க வேண்டும் மற்றும் தாரணை செய்ய வேண்டும். தந்தையிடமிருந்து எதையும் வேண்டி கேட்கக் கூடாது. 21 பிறவிகளுக்கு தங்களது சம்பாத்தியத்தை சேமிப்பு செய்ய வேண்டும்.

2. வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். எனவே யோக பலத்தினால் சரீரத்தின் கவர்ச்சியை நீக்கி விட வேண்டும். கர்ம இந்திரியங்களை தணிந்ததாக ஆக்க வேண்டும். இந்த தேக உணர்வை விடுவதற்கான முயற்சி செய்ய வேண்டும்.

வரதானம்:
ஒரு இடத்தில் இருந்தபடியே அநேக ஆத்மாக்களின் சேவை செய்யக் கூடிய லைட்-மைட் (ஒளி மற்றும் சக்தியில்) நிறைந்தவர் ஆவீர்களாக.

எப்படி (லைட் ஹவுஸ்) கலங்கரை விளக்கம் ஒரு இடத்தில் இருந்தபடியே தூரதூரத்திற்கு சேவை செய்கிறது. அதே போல நீங்கள் அனைவரும் ஒரு இடத்தில் இருந்தபடியே அநேக ஆத்மாக்களின் சேவையின் பொருட்டு (நிமித்தம்) கருவியாக ஆகி விட முடியும்., இதில் லைட்-மைட் ஒளி மற்றும் சக்தியில் நிறைந்தவராக இருப்பதற்கான அவசியம் இருக்கிறது, அவ்வளவே. மனம் மற்றும் புத்தி எப்பொழுதும் வீணானவற்றை யோசிப்பதிலிருந்து விடுபட்டு இருந்தது என்றால், மன்மனாபவ என்ற மந்திரத்தின் சகஜமான சொரூபமாக இருந்தீர்கள் என்றால், மனமானது சுப பாவனை (சிரேஷ்ட) சிறந்த நல் விருப்பம், சிறந்த உள்ளுணர்வு, சிறந்த வைப்ரேஷன் (அதிர்வலை களில்) நிறைந்தவர்களாக இருந்தீர்கள் என்றால், உங்களால் இந்த சேவையை சுலபமாக செய்ய முடியும். இதுவே மனசா சேவை ஆகும்.

சுலோகன்:
இப்பொழுது பிராமண ஆத்மாக்களாகிய நீங்கள் மைட் (சக்திசாலி) ஆகுங்கள் மற்றும் மற்ற ஆத்மாக்களை மைக் (பேசக் கூடியவர்களாக) ஆக்குங்கள்.