25-06-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தந்தை உங்களுக்கு புதிய உலகத்திற்காக இராஜயோகம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார், ஆகையால் இந்தப் பழைய உலகத்தின் விநாசமும் ஆக வேண்டியுள்ளது.

கேள்வி:
மனிதர்களிடம் எந்த ஒரு நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது, இருந்தாலும் அதன் மூலம் கூட எந்த பிராப்தியும் ஏற்படுவதில்லை?

பதில்:
மனிதர்களுக்குள் பகவானை நினைவு செய்வது பழக்கமாகவே ஆகியுள்ளது, ஏதாவது விஷயம் நடந்து விட்டது என்றால் ஓ, பகவானே! என்று சொல்லி விடுகின்றனர். முன்னால் சிவலிங்கம் (நினைவில்) வந்து விடுகிறது. ஆனால் சரியான அறிமுகம் இல்லாததால் பிராப்தி ஏற்படுவதில்லை. பிறகு சுகமும் துக்கமும் அவர் தான் கொடுக்கிறார் என சொல்லி விடுகின்றனர். குழந்தைகளாகிய நீங்கள் இப்போது அப்படி சொல்வதில்லை.

ஓம் சாந்தி.
படைப்பவர் என சொல்லப்படக் கூடிய தந்தை, எதைப் படைக்கின்றார்? புதிய உலகைப் படைப்பவர். புதிய உலகம் சொர்க்கம் அல்லது சுகதாமம் என சொல்லப்படுகிறது, பெயரைச் சொல்கிறார்கள், ஆனால் புரிந்து கொள்வதில்லை. கிருஷ்ணருடைய கோவிலைக் கூட சுகதாமம் என சொல்கின்றனர். இப்போது அது சிறிய கோவிலாக ஆகிவிட்டது. கிருஷ்ணரோ உலகத்திற்கு எஜமானாக இருந்தார். எல்லைக்கப்பாற்பட்ட எஜமானை எல்லைக்குட்பட்ட எஜமான் போல ஆக்கி விடுகின்றனர். கிருஷ்ணரின் சின்னஞ்சிறு கோவிலை சுகதாமம் என சொல்கின்றனர். அவர் உலகின் எஜமானனாக இருந்தார் என்பது புத்தியில் வருவதில்லை. பாரதத்தில் வசிப்பவராகத் தான் இருந்தார். உங்களுக்கும் முன்பு எதுவும் தெரியாமல்தான் இருந்தது. தந்தைக்கு அனைத்தும் தெரியும், அவர் சிருஷ்டியின் முதல், இடை, கடைசி பற்றி அறிந்தவர் ஆவார். இப்போது குழந்தை களாகிய நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள், பிரம்மா, விஷ்ணு, சங்கரன் யார் என்பது கூட உலகில் யாருக்கும் தெரியாது. சிவன் உயர்ந்தவரிலும் உயர்ந்த பகவான் ஆவார். நல்லது, பிறகு பிரஜாபிதா பிரம்மா எங்கிருந்து வந்தார்? மனிதராகத்தான் இருக்கிறார். பிரஜாபிதா பிரம்மா கண்டிப்பாக இங்குதான் தேவை அல்லவா! அவரிட மிருந்து பிராமணர்கள் பிறக்க (உருவாக) வேண்டும். பிரஜாபிதா என்றாலே வாயின் மூலம் தத்தெடுப்பவர், நீங்கள் வாய்வழி வம்சாவளி ஆவீர்கள். தந்தை எப்படி பிரம்மாவை தன்னவராக ஆக்கி வாய்வழி வம்சாவளியை உருவாக் கினார் என்பதை இப்போது நீங்கள் அறிவீர்கள், இவருக்குள் பிரவேசமும் ஆனார், பிறகு இவர் என்னுடைய குழந்தையும் ஆவார் எனக்கூறினார். பிரம்மாவின் பெயர் எப்படி ஏற்பட்டது, எப்படிப் பிறந்தார் என்பதை நீங்கள் அறிவீர்கள், இது வேறு யாருக்கும் தெரியாது. பரமபிதா பரமாத்மா உயர்ந்த வரிலும் உயர்ந்தவர் என மகிமை மட்டும் பாடுகின்றனர், ஆனால் உயர்ந்தவரிலும் உயர்ந்த தந்தை என்பது யாருடைய புத்தியிலும் வருவதில்லை. அனைத்து ஆத்மாக்களாகிய நம் தந்தை அவர். அவரும் கூட புள்ளி வடிவத்தில்தான் இருக்கிறார், அவருக்குள் சிருஷ்டியின் முதல், இடை, கடைசி யின் ஞானம் உள்ளது. இந்த ஞானமும் கூட உங்களுக்கு இப்போது கிடைத்துள்ளது. முன்னர் இந்த ஞானம் உங்களிடம் கொஞ்சமும் இருக்கவில்லை. மனிதர்கள் பிரம்மா, விஷ்ணு, சங்கரன் என்று மட்டும் சொல்லியபடி இருக்கின்றனர், ஆனால் கொஞ்சமும் தெரிந்து கொள்வதில்லை. ஆக அவர்களுக்குத்தான் புரிய வைக்க வேண்டும். இப்போது நீங்கள் புத்திசாலிகளாக ஆகி இருக்கிறீர் கள். தந்தை ஞானக்கடல் எனத் தெரிந்துள்ளீர்கள், அவர் நமக்கு ஞானத்தை சொல்கிறார், படிப்பிக் கிறார். இந்த இராஜயோகமே சத்யுகத்தின் புதிய உலகத்திற்காக எனும்போது கண்டிப்பாக பழைய உலகம் விநாசமாக வேண்டியுள்ளது. அதற்காகவே இந்த மகாபாரதச் சண்டை. அரைக்கல்ப காலமாக நீங்கள் பக்தி மார்க்கத்தின் சாஸ்திரங்களைப் படித்து வந்தீர்கள். இப்போது தந்தையிட மிருந்து நேரடியாகக் கேட்கிறீர்கள். தந்தை சாஸ்திரம் எதுவும் சொல்வதில்லை. ஜபம், தபம் செய்வது, சாஸ்திரம் முதலானவைகளைப் படிப்பது என இவையனைத்தும் பக்தியாகும். இப்போது பக்தர்களுக்கு பக்தியின் பலன் தேவை ஏனென்றால் முயற்சி செய்வதே பகவானை சந்திப்பதற் காகத்தான். ஆனால் ஞானத்தின் மூலம் சத்கதி கிடைக்கிறது. ஞானமும் பக்தியும் ஒன்றாக நடக்க முடியாது. இப்போது பக்தியின் இராஜ்யம்தான் உள்ளது. அனைவரின் வாயிலிருந்தும் ஓ! இறை தந்தையே என்பது தான் வெளிப்படும். தந்தை, நான் சிறிய புள்ளியாக இருக்கிறேன் என தனது அறிமுகத்தைக் கொடுத்தார் என இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். புள்ளியாகிய எனக்குள் அனைத்து ஞானமும் நிரம்பியுள்ளது. ஆத்மாவில்தான் ஞானம் இருக்கிறது. அவர் பரமபிதா பரமாத்மா என அழைக்கப்படுகிறார் என இப்போது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். அவர் பரம ஆத்மா அதாவது உயர்ந்தவரிலும் உயர்ந்த பதீத பாவன தந்தைதான் சுப்ரீம் (உயர்ந்தவர்) அல்லவா! மனிதர்கள் ஓ பகவானே என சொன்னார்கள் என்றால் சிவலிங்கம் தான் நினைவில் வரும். அதுவும் சரியான விதத்தில் வருவதில்லை. பகவானை நினைவு செய்ய வேண்டும், பகவான் தான் சுகமும் துக்கமும் கொடுக்கிறார் என்பது ஒரு பழக்கமாக ஆகி விட்டது. இப்போது குழந்தைகளாகிய நீங்கள் அப்படி சொல்வதில்லை. தந்தை சுகத்தை வழங்கும் வள்ளல் என நீங்கள் அறிவீர்கள். சத்யுகத்தில் சுகதாமம் இருந்தது. அங்கே துக்கத்தின் பெயர் இருக்க வில்லை. கலியுகத்தில் இருப்பதே துக்கம், இங்கே சுகத்தின் பெயரே இல்லை. உயர்ந்தவரிலும் உயர்ந்தவர் பகவான், அவர் அனைத்து ஆத்மாக் களின் தந்தை. ஆத்மாக்களுக்கு தந்தையும் இருக்கிறார் என்பதும் கூட யாருக்கும் தெரியாது, நாம் அனைவரும் சகோதரர்கள் என்று கூட சொல்கின்றனர். ஆக அனைவரும் ஒரு தந்தையின் குழந்தைகளாக உள்ளனர் அல்லவா! சிலரோ சொல்லி விடுகின்றனர் - அவர் சர்வவியாபியாக (எங்கும் நிறைந்தவராக) உள்ளார் - உனக்குள்ளும் இருக்கிறார், எனக்குள்ளும் இருக்கிறார். . . அட, நீங்கள் ஆத்மாவாக இருக்கிறீர்கள், இது உங்களுடைய சரீரம், பிறகு மூன்றாவதாக ஒரு பொருள் எப்படி இருக்க முடியும்? ஆத்மாவை பரமாத்மா என எப்படி சொல்ல முடியும்? ஜீவாத்மா என சொல்லப்படுகிறது. ஜீவ பரமாத்மா என சொல்லப்படுவதில்லை. பிறகு பரமாத்மா சர்வவியாபியாக எப்படி ஆக முடியும்? தந்தை எங்கும் நிறைந்தவர் என்றால் பிறகு அனைவருமே தந்தை என ஆகிவிடும், தந்தையிடமிருந்து தந்தைக்கு ஆஸ்தி கிடைக்காது. தந்தையிடமிருந்து குழந்தைதான் ஆஸ்தி எடுக்கிறார். அனைவரும் தந்தை என எப்படி ஆக முடியும்? இவ்வளவு சிறிய விசயம் கூட யாருக்கும் புரிவதில்லை. ஆகவே தந்தை சொல்கிறார் - குழந்தைகளே, நான் இன்றிலிருந்து 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு உங்களை எவ்வளவு புத்திசாலிகளாக ஆக்கி இருந்தேன். நீங்கள் எப்போதும் ஆரோக்கியம், செல்வம் நிறைந்தவர்களாக புத்திசாலிகளாக இருந்தீர்கள். இதை விட அதிக புத்திசாலிகளாக யாரும் இருக்க முடியாது. உங்களுக்கு இப்போது கிடைக்கும் அறிவு பிறகு அங்கே (சத்யுகத்தில்) இருக்காது. அங்கே நாம் மீண்டும் இறங்கி விடுவோம் என்பது தெரிந்திருக்காது. அது தெரிந்திருந்தால் பிறகு சுகத்தின் உணர்வே வராது. இந்த ஞானம் பிறகு மறைந்து விடுகிறது. இந்த நாடகத்தின் ஞானம் இப்போது உங்களுடைய புத்தியில் மட்டும்தான் உள்ளது. பிராமணர்கள் தான் அதிகாரிகளாக இருக்கின்றனர். நாம் இப்போது பிராமண வர்ணத்தவர்கள் என்பது உங்களுடைய புத்தியில் உள்ளது. பிராமணர்களுக்குத்தான் தந்தை ஞானம் சொல்கிறார். பிராமணர்கள் பிறகு அனைவருக் கும் சொல்கின்றனர். பகவான் வந்து சொர்க்கத்தை ஸ்தாபனை செய்தார், இராஜயோகம் கற்றுத் தந்தார் என பாடலும் உள்ளது. பாருங்கள், கிருஷ்ண ஜயந்தி கொண்டாடுகின்றனர், கிருஷ்ணர் வைகுண்டத் தின் எஜமானாக இருந்தார் என்று புரிந்து கொள்கின்றனர், ஆனால் உலகின் எஜமானாக இருந்தார் என்பது புத்தியில் வருவதில்லை. அவருடைய இராஜ்யம் இருந்தபோது வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை. அவருடைய இராஜ்யம்தான் முழு உலகிலும் இருந்தது. அது யமுனைக் கரையில் இருந்தது. இப்போது உங்களுக்கு இதை புரிய வைத்துக் கொண்டிருப் பவர் யார்? பகவானுடைய மஹாவாக்கியம். மற்றபடி வேத சாஸ்திரங்கள் முதலானவைகளை சொல்பவர்கள் பக்தி மார்க்கத்தவர்கள். இங்கேயோ பகவான் தானே உங்களுக்கு சொல்லிக் கொண்டிருக்கிறார். நாம் புருஷோத்தமர் ஆகிக் கொண்டிருக்கிறோம் என்று இப்போது புரிந்துள்ளீர் கள். நாம் சாந்தி தாமத்தில் வசிப்பவர்கள், பிறகு நாம் வந்து 21 பிறவிகளின் பலனை அனுபவிக்கப் போகிறோம் என்பது உங்களுக்குத்தான் புத்தியில் உள்ளது.

குழந்தைகளாகிய நீங்கள் குஷியில் திளைத்திருக்க வேண்டும் - எல்லைக்கப்பாற்பட்ட பாபா சிவபாபா நமக்கு படிப்பித்துக் கொண்டிருக்கிறார், அவர் ஞானக்கடல், சிருஷ்டியின் முதல், இடை, கடைசியைப் பற்றி அறிந்தவர். இப்படிப்பட்ட பாபா நமக்காக வந்துள்ளார் என்றால் குஷியில் குதூகலம் ஏற்படுகிறது. பாபா நாங்கள் உங்களை எங்கள் வாரிசு ஆக்கிக் கொண்டோம் என்று பாபாவுக்கு சொல்கின்றனர். தந்தை குழந்தைகள் மீது பலியாகிவிடுகிறார். குழந்தைகள் பிறகு சொல்கின்றனர் - பகவானே நீங்கள் வரும்போது நாங்கள் உங்கள் மீது பலியாவோம் அதாவது குழந்தையாக ஆக்கிக் கொள்வோம். இவர் கூட தனது குழந்தைகளைத்தான் வாரிசு களாக்குகிறார். பாபாவை எப்படி வாரிசு ஆக்குவது? இதுவும் கூட ஆழமான விஷயம் ஆகும். தனது அனைத்தை யும் பரிமாற்றம் செய்து கொள்வது என்பது புத்தியின் வேலையாகும். ஏழைகள் உடன் பரிமாற்றம் செய்து கொள்வார்கள், செல்வந்தர்கள் செய்வது கடினம். முழுமையான முறையில் ஞானம் எடுக்காதவரை அது கடினமே. அந்த அளவு தைரியம் இருக்காது. ஏழைகளோ உடனே சொல்லி விடுகின்றனர் - பாபா நாங்கள் உங்களைத்தான் வாரிசு ஆக்குவோம். எங்களிடம் என்னதான் இருக்கிறது? வாரிசு ஆக்கிக் கொண்டு பிறகு தனது சரீர நிர்வாகத்தையும் செய்ய வேண்டும். வெறும் டிரஸ்டி எனப் புரிந்து கொண்டு இருக்க வேண்டும். பல யுக்திகளை சொன்னபடி இருக்கிறார். தந்தை இதை மட்டும் பார்க்கிறார் - எந்த பாவ கர்மத்திலும் பணத்தை வீணாக செலவழிப்பதில்லைதானே? மனிதர்களை புண்ணிய ஆத்மா ஆக்குவதில் பணத்தை ஈடுபடுத்து கின்றனரா? சேவையும் விதிப்படி செய்கின்றனரா? இதை முழுமையாக சோதனையிடுவார், பிறகு அனைத்து வழிகளும் கூறுவார். இவர் கூட (பிரம்மா) தொழில் செய்யும்போது ஈஸ்வரனின் பெயரால் தனியாக எடுத்து வைத்தார் அல்லவா. அது மறைமுகமாக இருந்தது. இப்போது தந்தை நேரடியாக வந்துள்ளார். நாம் என்னவெல்லாம் செய்கிறோமோ அதற்கு பலனை ஈஸ்வரன் அடுத்த பிறவியில் கொடுப்பார் என மனிதர்கள் புரிந்து கொள்கின்றனர். யாராவது ஏழையாக துக்கம் மிக்கவர்களாக இருந்தால் கர்மமே அப்படிப்பட்டதாக செய்திருப்பார் எனப் புரிந்து கொள்வார்கள். நல்ல கர்மம் செய்திருந்தால் சுகம் மிக்கவர்களாக இருப்பர். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு கர்மங்களின் கதியைப் பற்றி புரிய வைக்கிறார், இராவண இராஜ்யத்தில் உங்களின் அனைத்து கர்மங்களும் பாவகர்மங்களாகத்தான் ஆகி விடுகின்றன. சத்யுகம், திரேதா யுகங்களில் இராவணனே இல்லை ஆகையால் அங்கே எந்த கர்மமும் பாவ கர்மமாக ஆவதில்லை. இங்கே செய்யும் நல்ல கர்மங்களுக்கு அல்ப காலத்திற்கு சுகம் கிடைக்கிறது. என்றாலும் கூட ஏதாவது வியாதி, பிரச்னைகள் இருக்கவே செய்கின்றன, ஏனென்றால் அல்ப காலத்தின் சுகமாக உள்ளது. இந்த இராவண இராஜ்யமே முடியவுள்ளது என்று இப்போது பாபா சொல்கிறார். இராம இராஜ்யத்தை சிவபாபா ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறார்.

இந்த சக்கரம் எப்படி சுழல்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். பாரதம்தான் பிறகு ஏழையாகி விடுகிறது. பாரதம் இன்றிலிருந்து 5 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சொர்க்கமாக இருந்தது, இந்த லட்சுமி நாராயணரின் இராஜ்யம் இருந்தது. முதலில் சிம்மாசனம் இவர்களுடையதாக இருந்து வந்தது. கிருஷ்ணர் இளவரசராக இருந்து பிறகு சுயம்வரம் ஆனபோது ராஜா ஆகினார். நாராயணர் என்ற பெயர் ஏற்பட்டது. இதையும் கூட நீங்கள் இப்போது புரிந்து கொள்ளும்போது உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படுகிறது. பாபா நீங்கள் படைப்பவர் மற்றும் படைப்பின் அனைத்து ஞானத்தையும் சொல்கிறீர்கள். நீங்கள் எங்களுக்கு எவ்வளவு உயர்வான படிப்பை படிப்பிக்கிறீர்கள். பலியாகி விடுவேன், நான் ஒரு சிவபாபாவைத் தவிர வேறு யாரையும் நினைவு செய்யக் கூடாது என்ற எண்ணம் வருகிறது. கடைசி வரை படிக்க வேண்டும் என்றால் கண்டிப்பாக ஆசிரியரை நினைவு செய்ய வேண்டும். பள்ளியில் ஆசிரியரை நினைவு செய்கின்றனர் அல்லவா! அந்தப் பள்ளிகளில் எத்தனையோ ஆசிரியர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு ஆசிரியர் என தனித்தனியாக இருக்கின்றனர். இங்கே ஒரே ஒரு ஆசிரியர்தான் இருக்கிறார். எவ்வளவு அன்பானவர். தந்தை அன்பானவர், ஆசிரியர் அன்பானவர், . . முன்னர் பக்தி மார்க்கத்தில் குருட்டு நம்பிக்கையுடன் நினைவு செய்து கொண்டிருந் தோம். இப்போது நேரடியாக தந்தை படிப்பிக்கிறார் எனும்போது எவ்வளவு குஷி ஏற்பட வேண்டும்! ஆனாலும் பாபா மறந்து விடுகிறோம் என்று சொல்கின்றனர். என் புத்தி ஏன் நினைவு செய்வதில்லை எனத் தெரியவில்லை என்று சொல் கின்றனர். ஈஸ்வரனின் கதியும் வழியும் தனிப்பட்டது என பாடவும் செய்கின்றனர். பாபா உங்களுடைய கதி மற்றும் சத்கதியின் வழி மிகவும் அதிசயமானது. இப்படிப்பட்ட தந்தையை நினைவு செய்ய வேண்டும். மனைவி தனது கணவரின் குணத்தைப் பாடுகிறார் அல்லவா! மிகவும் நல்லவர், இது இது எல்லாம் அவருடைய சொத்துக்கள், இப்படியெல்லாம் சொல்லி உள்ளுக்குள் குஷிப்படுகிறார். இவரோ பதிகளுக்கெல்லாம் பதி, தந்தையருக்கெல்லாம் தந்தை. இவர் மூலம் நமக்கு சுகம் கிடைக்கிறது. மற்ற அனைவரிடமிருந்தும் துக்கம் கிடைக்கிறது. ஆம், ஆசிரியரின் மூலம் சுகம் கிடைக்கிறது ஏனென்றால் படிப்பின் மூலம் வருமானம் ஏற்படுகிறது. எப்போதும் வானபிரஸ்தத்தில் குருவைப் பின்பற்றுகின்றனர். நான் வானபிரஸ்தத்தில் வந்துள்ளேன் என தந்தையும் கூறுகிறார். இவரும் (பிரம்மா) வானபிரஸ்தி, நானும் வானபிரஸ்தி. என்னுடைய இந்தக் குழந்தைகள் அனைவரும் வானபிரஸ்திகள். தந்தை, ஆசிரியர், குரு மூவரும் ஒன்றாக உள்ளனர். தந்தை ஆசிரியராகவும் ஆகிறார், பின் குரு ஆகி உடன் அழைத்துச் செல்கிறார். அந்த ஒரு தந்தையுடையதுதான் மகிமையாகும். இந்த விஷயங்கள் வேறு எந்த சாஸ்திரங்கள் முதலான வற்றிலும் இல்லை. பாபா அனைத்து விஷயங்களையும் மிகவும் நல்ல முறையில் புரிய வைக்கிறார். இதை விட உயர்ந்த ஞானம் எதுவும் இல்லை, அதனை அறிய வேண்டிய அவசியமும் இல்லை. நாம் அனைத்தையும் அறிந்து கொண்டு உலகின் எஜமான் ஆகி விடுகிறோம், அதனை விட இன்னும் அதிகமாக என்ன செய்யப் போகிறோம்? குழந்தைகளின் புத்தியில் இது இருந்தால் அப்போது குஷியில் மற்றும் அதே நினைவில் இருப்போம். புண்ணிய ஆத்மா ஆவதற்காக நினைவில் கண்டிப்பாக இருக்க வேண்டும். மாயையின் தர்மம் (கடமை) உங்களுடைய யோகத்தை (நினைவை) தடுக்கிறது. யோகத்தில் தான் மாயை தடைகளை ஏற்படுத்துகிறது. மறந்து விடுகின்றனர். மாயையின் புயல்கள் நிறைய வருகின்றன. இதுவும் நாடகத்தில் பதிவாகியுள்ளது. அனைவரையும்விட முன்னால் இவர் (பிரம்மா) இருக்கிறார் எனும்போது இவருக்கு அனைத்து அனுபவங்களும் ஏற்படுகின்றன. எப்போது என்னிடம் வருகின்றனரோ அப்போது நான் அனைவருக்கும் புரிய வைப்பேன் அல்லவா! இந்த மாயையின் புயல்கள் அனைத்தும் வரும். பாபாவிடமும் கூட வருகின்றன. உங்களுக்கும் வரும். மாயையின் புயல்களே வராமல், நினைவிலேயே மூழ்கி இருந்தால் கர்மங்களை வென்ற நிலை ஏற்பட்டு விடும். பிறகு நாம் இங்கே இருக்க முடியாது. கர்மங்களை வென்ற நிலை ஏற்பட்டு விட்டால் பிறகு அனைவரும் சென்று விடுவார்கள். சிவனின் ஊர்வலம் பாடப்பட்டுள்ளது அல்லவா! சிவபாபா வந்தார் எனில் ஆத்மாக்களாகிய நாம் அனைவரும் சென்று விடுவோம். சிவபாபா வருவதே அனைவரையும் அழைத்துச் செல்வதற்காக. சத்யுகத்தில் இவ்வளவு ஆத்மாக்கள் இருப்பதில்லை. நல்லது

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. சிவபாபாவை தனது வாரிசாக ஆக்கிக் கொண்டு அனைத்தும் பரிமாற்றம் செய்து கொள்ள வேண்டும். வாரிசாக ஆக்கிக் கொண்டு சரீர நிர்வாகமும் செய்ய வேண்டும், டிரஸ்டி எனப் புரிந்து கொண்டு இருக்க வேண்டும். பணத்தை எந்த பாவ கர்மத்திலும் ஈடுபடுத்தக் கூடாது.

2. சுயம் ஞானக்கடல் பாபா நம்மைப் படிப்பித்துக் கொண்டிருக்கிறார் என்று உள்ளுக்குள் குஷியில் குதூகலம் ஏற்பட வேண்டும். புண்ணிய ஆத்மா ஆவதற்காக நினைவில் இருக்க வேண்டும். மாயையின் புயல்களால் பயப்படக்கூடாது.

வரதானம்:
சத்தியதாவின் ஆதாரத்தில் ஒரு தந்தையைப் பிரத்தியட்சம் செய்யக்கூடிய, பயமற்ற, அத்தாரிட்டி ஆகுக.

சத்தியதா தான் பிரத்தியட்சதாவுக்கான ஆதாரமாகும். பாபாவைப் பிரத்தியட்சம் செய்வதற்காக, பயமற்ற மற்றும் அத்தாரிட்டி சொரூபம் ஆகிப் பேசுங்கள். சங்கோஜத்துடன் அல்ல. எப்போது அநேக வழிமுறைகளைப் பின்பற்றுவோர், ஒரு விஷயத்தை மட்டும் ஏற்றுக் கொள்கிறார்களோ, அதாவது நம் அனைவரின் தந்தை ஒருவர் மற்றும் அவர் தாம் இப்போது காரியம் செய்து கொண்டிருக்கிறார். நாம் அனைவரும் அந்த ஒருவரின் குழந்தைகள். ஒருவர் மற்றும் இந்த ஒன்று தான் யதார்த்தம் ஆக, வெற்றிக்கொடி ஏற்றப்பட்டு விடும். இந்த சங்கல்பத்துடன் முக்திதாம் செல்வீர்கள் மற்றும் பிறகு எப்போது அவரவர் பார்ட்டை நடிக்க வருகிறீர்களோ, அப்போது முதலில் இந்த சம்ஸ்காரம் இமர்ஜ் ஆகும் - கடவுள் ஒருவரே - இது தான் பொன்னுலகத்தின் ஸ்மிருதி.

சுலோகன்:
சகித்துக் கொள்வது தான் தனது சக்தி ரூபத்தைப் பிரத்தியட்சம் செய்வதாகும்.

அவ்யக்த இஷாரா - ஆத்மிக ஸ்திதியில் நிலைத்திருப்பதற்கான அப்பியாசம் செய்யுங்கள், உள்முக நோக்குள்ளவர் ஆகுங்கள்

எப்படி இந்த தேகம் தெளிவாகத் தெரிகின்றதோ, அது போல் தனது ஆத்ம சொரூபம் தெளிவாகத் தென்பட வேண்டும். அதாவது அனுபவத்தில் வர வேண்டும். நெற்றியில், அதாவது புத்தியின் ஸ்மிருதி மற்றும் திருஷ்டி மூலம் ஆத்மிக சொரூபம் தவிர வேறெதுவும் தென்படக் கூடாது. அல்லது ஸ்மிருதியில் வரக் கூடாது. அது போல் நிரந்தர தபஸ்வி ஆகுங்கள். அப்போது ஒவ்வோர் ஆத்மாவுக்காகவும் நன்மையின் சுப சங்கல்பம் உருவாகும். யாரேனும் தங்களின் சம்ஸ்கார-சுபாவத்தின் வசமாகி உங்கள் புருஷார்த்தத்தில் பரீட்சைக்கு நிமித்தம் ஆகி இருந்தாலும், அவருக்காகவும் நன்மையின் சங்கல்பம் உருவாக வேண்டும்.