25-07-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே, குட்டிக்கர்ண விளையாட்டை நினைவு செய்யுங்கள், இந்த விளையாட்டில் முழு சக்கரத்தின், பிரம்மா மற்றும் பிராமணர்களின் இரகசியம் அடங்கியிருக்கிறது.

கேள்வி:
சங்கமயுகத்தில் பாபாவிடமிருந்து அனைத்து குழந்தைகளுக்கும் என்ன ஆஸ்தி கிடைக்கிறது?

பதில்:
ஈஸ்வரிய புத்தியினுடைய ஆஸ்தி. ஈஸ்வரனுக்குள் என்ன குணம் இருக்கிறதோ அதை நமக்கு ஆஸ்தியாக கொடுக்கின்றார். நம்முடைய புத்தி வைரத்தைப் போல தங்கமாக ஆகிக் கொண்டிருக்கிறது. இப்போது நாம் பிராமணராகி பாபாவிடமிருந்து மிகப் பெரிய பொக்கிஷத்தை எடுத்துக் கொண்டிருக்கின்றோம், அனைத்து குணங்களாலும் நம்முடைய பையை நிரப்பிக் கொண்டிருக்கிறோம்.

ஓம் சாந்தி.
இன்று சத்குருவார் (வியாழக்கிழமை), பிரகஸ்பதிவார் ஆகும். நாட்களில் கூட சில நாட்கள் உத்தமமான நாட்களாக இருக்கிறது. பிரகஸ்பதியின் நாளை உயர்ந்ததாக சொல்கின்றனர் அல்லவா! பிரகஸ்பதி அதாவது விருட்சபதி நாளில் பள்ளி அல்லது கல்லூரிக்குச் செல்கின்றனர். இந்த மனித படைப்பு என்ற மரத்தினுடைய விதை ரூபம் தந்தை ஆவார் மற்றும் அவர் அகால மூர்த்தி ஆவார் என்று இப்போது குழந்தை களாகிய நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். நீங்கள் அகால மூர்த்தி தந்தையினுடைய அகால மூர்த்தி குழந்தைகளாக இருக்கிறீர்கள். இது எவ்வளவு சகஜ மானது. நினைவு தான் கடினமானது ஆகும். நினைவின் மூலம் தான் விகர்மங்கள் விநாசம் ஆகிறது. நீங்கள் தூய்மையற்ற நிலையிலிருந்து தூய்மை யாகிறீர்கள். குழந்தைகளாகிய உங்கள் மீது அழிவற்ற எல்லையற்ற திசை (அதிர்ஷ்டம்) இருக்கிறது என்று பாபா புரிய வைக்கின்றார். ஒன்று எல்லைக்குட்பட்ட திசை, மற்றொன்று எல்லைக்கப்பாற்பட்ட திசையாகும். பாபா விருட்சபதி ஆவார். விருட்சத்திலிருந்து (கல்ப மரத்திலிருந்து) முதலில் பிராமணர்கள் வெளிப்படுகின்றனர். நான் விருட்சபதி சத்-சித்-ஆனந்த சொரூபம் ஆவேன் என்று பாபா சொல்கின்றார். பிறகு ஞானக்கடல், அமைதிக்கடல்.... என்று மகிமை பாடுகின்றார் கள். சத்யுகத்தில் தேவி தேவதைகள் அனைவரும் அமைதிக்கடலாக, தூய்மை கடலாக இருக்கின்றனர் என்று நீங்கள் தெரிந்திருக் கிறீர்கள். பாரதம் சுகம்-சாந்தி-தூய்மையின் கடலாக இருந்தது, உலகத்தின் அமைதி என்று அதை சொல்லப்படுகிறது. நீங்கள் பிராமணர்கள் ஆவீர்கள். உண்மையில் நீங்கள் கூட அகால மூர்த்திகள் ஆவீர்கள், ஒவ்வொரு ஆத்மாவும் தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறது. இவை யனைத்தும் சைத்தன்ய மான (உயிரோட்டமுடைய) அழிவற்ற சிம்மாசனம் ஆகும். புருவ மத்தியில் அகால மூர்த்தி ஆத்மா அமர்ந்திருக் கிறது, இதை நட்சத்திரம் என்றும் சொல்லப் படுகிறது. விருட்சபதி விதை ரூபமான தந்தையை ஞானக்கடல் என்று சொல்கின்றனர், ஆக அவர் கண்டிப்பாக வர வேண்டியிருக்கும். முதன் முதலில் பிராமணர்கள் வேண்டும், அதாவது பிரஜாபிதா பிரம்மாவின் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள். ஆக கண்டிப்பாக மம்மாவும் வேண்டும். குழந்தை களாகிய உங்களுக்கு மிகவும் நல்ல முறையில் புரிய வைக்கின்றேன். இது குட்டிக்கர்ண விளையாட்டு விளையாடுவது போலாகும். அதனுடைய அர்த்தம் கூட புரிய வைக்கப் பட்டிருக்கிறது. விதை ரூபமான சிவபாபா, பிறகு பிரம்மா ஆவார். பிரம்மா மூலமாக பிராமணர்கள் படைக்கப்பட்டனர். நாம் தான் பிராமணர்கள், நாம் தான் தேவதைகள்....... என்று இந்த நேரம் நீங்கள் சொல்கிறீர்கள். முதலில் நாம் சூத்திர புத்தி உடையவர்களாக இருந்தோம். இப்போது மீண்டும் பாபா புருஷோத்தம புத்தி உடையவர்களாக ஆக்குகின்றார். வைரத்தை போல தங்க புத்தியாக ஆக்குகின்றார். இந்த குட்டிக்கர்ணத்தின் இரகசியத்தைக் கூட புரிய வைக்கின்றார். சிவபாபாவும் இருக்கின்றார், பிரஜா பிதா மற்றும் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகள் முன்னால் அமர்ந்திருக் கின்றனர். இப்போது நீங்கள் எவ்வளவு விசால புத்தியுடையவர்களாக ஆகின்றீர்கள்! பிராமணனி லிருந்து பிறகு தேவதை ஆகின்றீர்கள். இப்போது நீங்கள் ஈஸ்வரிய புத்தியுடையவர்களாக ஆகின்றீர்கள். ஈஸ்வரனுக்குள் என்ன குணம் இருக்கிறதோ அது உங்களுக்கு ஆஸ்தியாக கிடைக்கின்றது. புரிய வைக்கும்போது இதை மறந்து விடக் கூடாது. பாபா ஞானக்கடல் நம்பர் ஒன் ஆவார். அவரை ஞானேஸ்வர் என்று சொல்லப்படுகிறது. ஞானம் சொல்லக்கூடியவர் ஈஸ்வரன் ஆவார். ஞானத்தின் மூலம் சத்கதி ஏற்படுகிறது. ஞானம் மற்றும் யோகத்தின் மூலம் தூய்மை யற்றவர்களை தூய்மையாக்குகின்றார். பாரதத்தின் பழமையான இராஜயோகம் மிகவும் பிரபலமானது, ஏனெனில் இரும்பு யுகம் தங்க யுகமாக மாறுகின்றது. ஹடயோகம் மற்றும் இராஜயோகம் என்று யோகம் இரண்டு விதமாக இருக்கிறது என்பதும் புரிய வைக்கப் பட்டிருக்கிறது. ஹடயோகம் எல்லைக்குட்பட்டது மற்றும் இராஜயோகம் எல்லைக்கப்பாற்பட்டது. அவர்கள் எல்லைக்குட்பட்ட சந்நியாசிகள் மற்றும் நீங்களோ எல்லைக்கப் பாற்பட்ட சந்நியாசிகள் அவர்கள் வீடு வாசலை விடுகின்றனர், நீங்கள் முழு உலகத்தையும் சந்நியாசம் செய் கின்றீர்கள். இப்போது நீங்கள் பிரஜாபிதா பிரம்மாவின் குழந்தைகள் ஆவீர்கள். இது மிகச் சிறிய புதிய மரமாகும். பழையதிலிருந்து புதியதாக மாற்றம் அடைந்து கொண்டிருக்கின்றோம் என்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். நாற்று நடப்பட்டுக் கொண்டி ருக்கிறது. நாம் கூட குட்டிக்கர்ணம் விளையாடிக் கொண்டிருக்கிறோம். நாம் தான் பிராமணர்கள், பிறகு நாம் தான் தேவதைகள். தான் (சோ) என்ற வார்த்தையை கண்டிப்பாக பயன்படுத்த வேண்டும். வெறும் நாம் என்பது கிடையாது. நாம் தான் சூத்திரர்களாக இருந்தோம், நாம் தான் பிராமணர்களாக ஆகின்றோம்....... இந்தக் குட்டி கர்ணத்தை முற்றிலும் மறக்கக் கூடாது. இது முற்றிலும் சகஜமானது ஆகும். நாம் 84 பிறவிகள் எப்படி எடுக்கின்றோம், எப்படி ஏணிப்படியில் இறங்குகின்றோம், பிராமணனாகி எப்படி ஏணிப் படியில் ஏறுகின்றோம், பிராமணனிலிருந்து தேவதை ஆகின்றோம் என்பதை சின்ன சின்னக் குழந்தைகளுக்கு கூட புரிய வைக்க முடியும்.

இப்போது பிராமணனாகி மிகப் பெரிய பொக்கிஷத்தை அடைந்து கொண்டிருக்கிறோம், பையை (புத்தி) நிரப்பிக் கொண்டிருக்கிறோம். ஞானக்கடல் என்று சங்கரை சொல்ல முடியாது. அவர் பையை நிரப்புவ தில்லை. ஓவியக்காரர்கள் அப்படி வரைந்து விட்டார்கள். சங்கரின் விஷயமே கிடையாது. இந்த விஷ்ணு மற்றும் பிரம்மா இங்கே (ஞானம்) உள்ள விஷயம் ஆகும். லட்சுமி நாராயணனின் தம்பதி ரூபத்தை மேலே காட்டியிருக்கின்றனர். இது இவருடைய (பிரம்மாவுடைய) கடைசி பிறவியாகும். முதன் முதலில் இவர் விஷ்ணு, பிறகு 84 பிறவிகள் எடுத்த பின் இப்படி (பிரம்மா) ஆகின்றார். இவருடைய பெயரை நான் பிரம்மா என்று வைத்திருக்கின்றேன். அனைவருடைய பெயரும் மாற்றப்பட்டு விட்டது, ஏனென்றால் சந்நியாசம் செய்து விட்டார் களல்லவா! சூத்திரனிலிருந்து பிராமணன் ஆனதும் பெயர் மாறி விடுகிறது. பாபா மிக ரமணீகரமான பெயர்களை வைத்திருக்கின்றார். ஆக இப்போது நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள், விருட்சபதி இந்த ரதத்தில் அமர்ந்திருக்கின்றார் என்று பார்க்கின்றீர்கள். இது அவருடைய (சிவபாபா) அழிவற்ற சிம்மாசனமாகும், இவருடைய (பிரம்மா) சிம்மாசனமும் இது தான். இந்த ஆசனத்தை அவர் கடனாக எடுத்திருக்கின்றார். சிவபாபாவுக்கு அவருக்கென்று சிம்மாசனம் (புருவமத்தி) கிடைப்பதில்லை. நான் இந்த ரதத்தில் அமர்ந்திருக்கின்றேன், புரிய வைக்கின்றேன் என்று சொல்கின்றார். நான் உங்களுடைய தந்தையாக இருக்கின்றேன், பிறப்பு இறப்பில் வருவதில்லை, நீங்கள் தான் பிறப்பு இறப்பில் வருகின்றீர்கள். நானும் பிறப்பு இறப்பில் வந்து விட்டால் உங்களை தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக யார் மாற்றுவார்கள்? அப்படி ஆக்குபவர் வேண்டுமல்லவா! ஆகையால் தான் என்னுடைய பாகம் இப்படி இருக்கிறது. ஏ! பதீதபாவனரே வாருங்கள் என்று என்னை அழைக்கவும் செய்கின்றார்கள். ஆத்மாக்கள் துக்கமாக இருக்கின்ற காரணத்தினால் நிராகார் சிவபாபாவை ஆத்மாக்கள் அழைக்கின்றனர். வந்து தூய்மை யற்றவர்களை தூய்மையாக்குங்கள் என்று பாரதவாசி ஆத்மாக்கள் தான் அழைக்கின்றனர். சத்யுகத்தில் நீங்கள் மிகவும் தூய்மையானவர்களாக சுகமானவர்களாக இருந்தீர்கள், ஒருபோதும் என்னை அழைக்கவில்லை. உங்களை சுகமானவர்களாக்கி பிறகு நான் வானபிரஸ்த நிலையில் சென்று அமர்ந்து விடுகின்றேன் என்று பாபாவே சொல்கின்றார். அங்கே என்னுடைய அவசியமே இல்லை.பக்தி மார்க்கத்தில் என்னுடைய பாகம் இருக்கிறது, பிறகு அரைக்கல்பத்திற்கு என்னுடைய பாகம் இருக்காது. இது முற்றிலும் சகஜமானது ஆகும். இதில் யாருக்கும் கேள்வி எழ முடியாது. துக்கத்தில் அனைவரும் நினைக்கின்றனர்...... என்று பாடல் கூட இருக்கிறது. சத்யுகம் திரேதா யுகத்தில் பக்தி மார்க்கம் நடப்பதே இல்லை. அதை ஞானமார்க்கம் என்றும் சொல்ல மாட்டோம். ஞானமோ சங்கமயுகத்தில் தான் கிடைக்கிறது. இதன்மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்கான பலன் அடைகின்றீர்கள். வரிசைக்கிரமமான தேர்ச்சி அடைகின்றார்கள், தோல்வி கூட அடைகிறார்கள். உங்களுடைய இந்த யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. எந்த ரதத்தில் பாபா அமர்ந்திருக்கிறாரோ அவர் வெற்றி அடைகின்றார் என்பதை நீங்கள் பார்க்கின்றீர்கள். பிறகு நெருக்கமான குழந்தைகள் கூட வெற்றி அடைந்து விடுகின்றனர். குமாரக்கா தாதி (பிரகாஷ்மணி தாதி) இன்னும் பலர் கண்டிப்பாக வெற்றி அடைவார்கள். பலரை தனக்குச் சமமாக மாற்றுகின்றார்கள். இது குட்டிகர்ண விளையாட்டு என்று குழந்தைகள் புத்தியில் பதிய வைக்க வேண்டும். சிறிய குழந்தைகள் கூட இதை புரிந்துக் கொள்ள முடியும். ஆகையால் குழந்தைகளுக்கும் புரிய வையுங்கள் என்று பாபா சொல்கின்றார். அவர்களுக்கும் பாபாவிடமிருந்து ஆஸ்தி அடைய உரிமை இருக்கிறது. நிறைய விஷயம் ஒன்றும் கிடையாது. கொஞ்சமாக இந்த ஞானத்தை புரிந்து கொண்டாலும், அது அழிவது கிடையாது. அவர்கள் கண்டிப்பாக சொர்க்கத்திற்கு வந்து விடுவார்கள். கிறிஸ்துவால் ஸ்தாபனை செய்யப்பட்ட கிறிஸ்தவ தர்மம் எவ்வளவு பெரியது! இந்த தேவி தேவதா தர்மம் அனைத்தையும் விட முதலாவதாக பெரிய தர்மமாக இருக்கிறது. இது இரண்டு யுகங்களுக்கு நடக்கிறது, ஆக இந்த தர்மத்தினுடைய மக்கள் எண்ணிக்கைக் கூட பெரியதாக இருக்க வேண்டும். ஆனால் ஹிந்து என்று சொல்லி விட்டார்கள். முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றும் சொல்கின்றார்கள். பிறகு ஹிந்து என்று ஏன் சொல்கிறார்கள்! மாயை புத்தியை முற்றிலுமாகக் கெடுத்து விட்டது. ஆக இப்படிப்பட்ட நிலை ஏற்பட்டு விட்டது. மாயையை வெற்றியடைவது ஒன்றும் கடினமான விஷயம் கிடையாது என்று பாபா சொல்கின்றார். நீங்கள் ஒவ்வொரு கல்பமும் வெற்றி அடைகின்றீர்கள். நீங்கள் சேனைகள் அல்லவா! இந்த விகாரங்கள் என்ற இராவணன் மீது வெற்றி அடைவதற்காக நமக்கு பாபா கிடைத் திருக்கின்றார்.

உங்கள் மீது இப்போது பிரகஸ்பதி திசை (தசா) இருக்கிறது. பாரதத்தின் மீது தான் திசை (பார்வை) ஏற்படுகிறது. இப்போது ராகு திசையாக இருக்கிறது. பாபா விருட்சபதி வரும்போது கண்டிப்பாக பாரதத்தில் பிரகஸ்பதி திசை ஏற்படும். இதில் அனைத்தும் வந்து விடுகிறது. நமக்கு நோயற்ற உடல் கிடைக்கிறது என்று குழந்தைகள் தெரிந்திருக்கிறீர்கள். அங்கே மரணத்தின் பெயர் கூட இருக்காது. அது அமரலோகம் அல்லவா! இன்னார் இறந்து விட்டார் என்று கூட சொல்ல மாட்டார்கள். மரணம் என்ற பெயரே கிடையாது, ஒரு சரீரத்தை விட்டு இன்னொரு சரீரம் எடுக்கின்றார்கள். சரீரம் எடுப்பது மற்றும் விடுவதில் மகிழ்ச்சி தான் இருக்கும். மறைந்தார் என்ற விஷயமே கிடையாது. உங்கள் மீது இப்போது பிரகஸ்பதி திசை இருக்கிறது. அனைவர் மீதும் பிரகஸ்பதி திசை ஏற்பட முடியாது. பள்ளியில் கூட சிலர் தேர்ச்சி அடைகின்றார்கள் சிலர் தேர்ச்சி அடைவதில்லை. இது கூட பள்ளிக்கூடம் ஆகும். நாங்கள் இராஜயோகம் கற்கின்றோம் என்று நீங்கள் சொல்வீர்கள், சொல்லிக் கொடுக்கக் கூடியவர் யார்? எல்லைக்கப்பாற்பட்ட தந்தை. ஆக எவ்வளவு மகிழ்ச்சி இருக்க வேண்டும், இதில் வேறு எந்த விஷயமும் கிடையாது. தூய்மை தான் முக்கியமான விஷயமாகும். ஹே! குழந்தைகளே, தேகத்தின் கூடவே அனைத்து சம்மந்தங் களையும் விட்டு என் ஒருவனையே நினைவு செய்யுங்கள் என்று எழுதப்பட்டிருக்கிறது. இது கீதையின் வார்த்தையாகும். இந்த கீதையின் பாகம் நடந்து கொண்டிருக்கிறது. இதிலும் கூட மனிதர்கள் அப்படி-இப்படி மாற்றி எழுதி விட்டனர். மாவில் கொஞ்சம் உப்பு இருக்கிறது. இது எவ்வளவு சகஜமான விஷயமாகும். குழந்தைகள் கூட இதை புரிந்து கொள்ள முடியும். பிறகும் கூட ஏன் மறந்து போய் விடுகின்றீர்கள்? பாபா நீங்கள் வந்ததும் நாங்கள் உங்களுடையவர்களாக ஆகி விடுவோம் என்று பக்தி மார்க்கத்தில் கூட சொன்னார்கள். நாங்கள் உங்களுடையவர்களாக மாறி உங்களிடமிருந்து முழுமை யான ஆஸ்தி எடுப்போம். பாபாவினுடையவராக ஆவதே ஆஸ்தி எடுப்பதற்காகத்தான் ஆகும். தத்தெடுக்கப் படுகிறார்கள், ஆக நமக்கு பாபாவிடமிருந்து என்ன கிடைக்கும் என்று தெரிந்திருக்கிறார்கள். நீங்கள் கூட தத்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். நாம் பாபாவிடமிருந்து உலகத்தின் இராஜ்யம், எல்லைக்கப் பாற்பட்ட ஆஸ்தியை பெறுகின்றோம் என்று நீங்கள் தெரிந்திருக்கின்றீர்கள். மற்ற எதிலும் பற்று வைக்கமாட்டீர்கள். லௌகீக தந்தை இருக் கிறார் என்றால் அவரிடம் என்ன இருக்கும் அதிக பட்சம் போனால் இலட்ச ரூபாய் இருக்கும். இந்த எல்லைக்கப்பாற்பட்ட ஆஸ்தியை கொடுக்கின்றார்.

குழந்தைகளாகிய நீங்கள் அரைக்கல்பமாக பொய்யான கதைகளை கேட்டுக் கொண்டே வந்தீர்கள், இப்போது உண்மையான கதையை பாபாவிடமிருந்து கேட்கிறீர்கள். ஆக அப்படிப்பட்ட பாபாவை நினைவு செய்ய வேண்டும். கவனத்துடன் பாபா சொல்வதைக் கேட்க வேண்டும். நாம் தான் - என்பதன் அர்த்தத்தையும் புரிய வைக்க வேண்டும். ஆத்மா தான் பரமாத்மா என்று மனிதர்கள் சொல்லி விடுகிறார்கள். இந்த 84 பிறவிகளின் கதையை யாரும் சொல்ல முடியாது. தந்தை நாய், பூனை அனைத்திலும் இருக்கிறார் என்று சொல்கிறார்கள். பாபாவுக்கு நிந்தனை செய்கிறார்கள் அல்லவா! இது கூட நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. யார் மீதும் குற்றம் சொல்வதற்கில்லை.. நாடகமே அப்படி உருவாக்கப் பட்டிருக்கிறது. உங்களை யார் ஞானத்தின் மூலம் தேவதையாக மாற்றுகின்றாரோ அவரையே நீங்கள் நிந்தனை செய்ய ஆரம்பித்து விடுகிறீர்கள். நீங்கள் அப்படிப் பட்ட குட்டிக்கர்ண விளையாட்டு விளையாடு கின்றீர்கள். இந்த நாடகம் கூட உருவாக்கப்பட்டிருக் கிறது. பிறகு நான் வந்து உங்களுக்கு உபகாரம் செய்கின்றேன். உங்கள் மீது கூட தவறு இல்லை, இது விளையாட்டு என்று தெரிந்து இருக்கின்றேன். உங்களுக்கு கதைகளை புரிய வைக்கின்றேன். இவை உண்மையிலும் உண்மையான கதைகளாகும், இதன்மூலம் நீங்கள் தேவதைகளாக ஆகின்றீர்கள். பக்தி மார்க்கத்தில் நிறைய கதைகளை உருவாக்கி விட்டார்கள், ஆனால் எந்தக் குறிக்கோளும் இல்லை. அவையனைத்தும் கீழே விழுவதற்கு தான் ஆகும். அந்த பள்ளிக் கூடங்களில் கல்வி கற்கின்றனர், பிறகும் சரீர நிர்வாகத்திற்காக குறிக்கோள் இருக்கிறது. பண்டிதர்கள் தன்னுடைய சரீர நிர்வாகத்திற்காக கதைகளை அமர்ந்து சொல்கின்றார்கள். மனிதர்கள் அவர்களுக்கு முன்னால் பைசா வைக்கின்றனர், ஆனால் எந்த பலனும் இல்லை. உங்களுக்கு இப்போது ஞான இரத்தினம் கிடைக்கிறது, இதன் மூலம் நீங்கள் புதிய உலகத்தின் எஜமானர் ஆகின்றீர்கள். இங்கே ஒவ்வொரு பொருளும் புதியதாக இருக்கும். வைர வைடூரியங்கள் போன்ற அனைத்தும் புதியதாக இருக்கும். மற்ற அனைத்து விஷயங்களையும் விட்டு குட்டிகர்ண விளையாட்டை இப்போது நினைவு செய்யுங்கள் என்று பாபா சொல்கின்றார். ஏழை மக்கள் கூட குட்டிகர்ண விளையாட்டு விளையாட தீர்த்த ஸ்தலங்களுக்குச் செல்கின்றார்கள். சிலர் நடந்து கூட போகின்றார்கள். இப்போதோ மோட்டார், விமானம் போன்றவைகள் கூட இருக்கின்றன. ஏழைகளோ அதில் செல்ல முடியாது. மிகவும் சிரத்தையுடையவர்கள் நடந்து கூட செல்கின்றனர். நாளுக்கு நாள் அறிவியலின் மூலம் மிகுந்த சுகம் கிடைத்துக் கொண்டே போகிறது. இது அல்பகால சுகம் ஆகும், விழுந்து விட்டால் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டு விடுகின்றது. இந்த பொருட்கள் மூலம் அல்பகால சுகம் கிடைக்கின்றது. மற்றபடி கடைசியில் மரணம் தான் இருக்கிறது. அது அறிவியலாகும். உங்களுடையது அமைதியாகும். பாபாவை நினைவு செய்வதன் மூலம் அனைத்து நோய்களும் முடிந்து போய் விடுகிறது, நோயற்றவர்களாக ஆகி விடுகின்றார்கள். சத்யுகத்தில் சதா ஆரோக்கியமாக இருந்தார்கள் என்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். இந்த 84 பிறவி சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. நீங்கள் எனக்கு நிந்தனை செய்து விட்டீர்கள், தன்னைத் தானே அடித்துக் கொண்டீர்கள் என்று பாபா ஒரேயொரு முறை வந்து புரிய வைக்கின்றார். நிந்தனை செய்து செய்து நீங்கள் சூத்திரபுத்தி உடையவர்களாக ஆகி விட்டீர்கள். தலைவனை நினைத்தால் சுகம் கிடைக்கும். அதாவது மன்மனாபவ என்று சீக்கிய மக்கள் கூட சொல் கின்றார்கள். இரண்டு வார்த்தைகள் இருக்கின்றன. மற்றபடி நிறைய தலையை உடைத்து கொள்வதற்கு அவசியமே இல்லை. இதைக்கூட பாபா வந்து புரிய வைக்கின்றார். தலைவனை நினைவு செய்வதன் மூலம் உங்களுக்கு 21 பிறவிகளுக்கான சுகம் கிடைக்கிறது என்று இப்போது புரிந்து கொள்கின்றீர்கள். பாபா கூட அதற்கான வழியை சொல்கின்றார். ஆனால் முழுமையான வழியை தெரிந்து கொள்வதில்லை. நினைத்து நினைத்து சுகத்தை அடையுங்கள். சத்யுகத்தில் நோய் போன்ற துக்கத்தின் எந்த விஷயமும் கிடையாது என்று குழந்தைகளாகிய நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள். இது சாதாரண விஷயமாகும். அதை சத்யுகம் தங்கயுகம் (கோல்டன் ஏஜ்) என்று சொல்லப்படுகிறது. இதை கலியுகம் இரும்பு யுகம்(அயர்ன் ஏஜ்) என்று சொல்லப்படுகிறது. சிருஷ்டி சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது. எவ்வளவு நன்றாக புரிய வைக்கப்படுகிறது. இது குட்டிகர்ண விளையாட்டாகும். இப்போது நீங்கள் பிராமணனாக இருக்கின்றீர்கள், பிறகு தேவதை யாக ஆவீர்கள். இந்த விஷயங்களை நீங்கள் மறந்து விடுகின்றீர்கள். குட்டிகர்ண விளையாட்டு நினைவில் இருந்தால் இந்த ஞானம் முழுமையும் நினைவில் இருக்கும். இப்படிப்பட்ட பாபாவை நினைவு செய்து இரவில் தூங்கச் செல்ல வேண்டும். பிறகும் கூட நாங்கள் பாபாவை மறந்து விடுகின்றோம் என்று சொல்கின்றார்கள். மாயை அடிக்கடி மறக்க வைத்து விடுகின்றது. உங்களுடைய சண்டையே மாயைக்கூடத்தான் ஆகும். பிறகு அரைக்கல்பம் நீங்கள் அதன்மீது இராஜ்யம் செய்கின்றீர்கள். விஷயங்களை சகஜமாக பாபா சொல்கின்றார். இதன் பெயரே சகஜ ஞானம், சகஜ நினைவு ஆகும். பாபாவை மட்டும் நினைவு செய்யுங்கள், வேறு என்ன சிரமம் கொடுக்கின்றார்! பக்தி மார்க்கத்திலோ நீங்கள் மிகவும் சிரமப்பட்டீர்கள். பகவானுடைய பார்வைக்காக தலையை வெட்டக்கூட தயாராகி விடுகின்றார் கள். காசி கல்வெட்டில் சென்று உயிர் துறக்கின்றனர். யார் நிச்சயபுத்தியுடன் செய்கிறார்களோ அவர்களுடைய பாவக் கர்மங்கள் விநாசம் ஆகிறது. பிறகு மீண்டும் புதிய கணக்கு ஆரம்பமாகும். மற்றபடி என்னிடம் அவர்கள் வருவதில்லை. என்னுடைய நினைவின் மூலம் தான் பாவக்கர்மங்கள் விநாசம் ஆகிறதே தவிர, தற்கொலை செய்து கொள்வதனால் அல்ல. என்னிடம் யாரும் வந்தடைவதில்லை. இது எவ்வளவு சகஜமான விஷயம். இந்த குட்டிகர்ண விளையாட்டை வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் கூட நினைவில் வைக்க வேண்டும். நல்லது.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே!

தாரணைக்கான முக்கிய சாரம்:
(1) விருட்சபதி பாபாவிடமிருந்து சுகம்-சாந்தி-தூய்மைக்கான ஆஸ்தியை பெறுவதற்கான தன்னை தான் அகால மூர்த்தி ஆத்மா என்று புரிந்து பாபாவை நினைவு செய்ய வேண்டும். ஈஸ்வர்ய புத்தியுடையவராக மாற வேண்டும்.

(2) பாபாவிடமிருந்து உண்மையான கதையைக் கேட்டு மற்றவர்களுக்கு சொல்ல வேண்டும். மாயையை வென்றவர் ஆவதற்காக தனக்கு சமமாக ஆக்கக்கூடிய சேவையை செய்ய வேண்டும். நாம் கல்ப கல்பத்திற்கான வெற்றியாளர்கள், பாபா நம் கூட இருக்கின்றார் என்பது புத்தியில் இருக்க வேண்டும்.

வரதானம்:
பலமற்றதிலிருந்து பலவான் ஆகி, அசம்பவத்தை சம்பவமாக்கும் தைரியமான ஆத்மா ஆவிர்களாக !

தைரியமுடைய குழந்தைகளுக்கு பாபா உதவி செய்வார். இந்த வரதானத்தின் ஆதாரத்தினால் தைரியத்திற்கான, முதல் உறுதியான எண்ணம் வைத்தீர்கள், நாம் தூய்மையாவோம் மேலும் பாபாவின் பல மடங்கு உதவி கிடைக்கின்றது, ஆத்மாக்களாகிய நீங்கள் அனாதி, ஆதியில் பவித்ரமானவர்கள், அனேக முறை பவித்ரமாகி உள்ளீர்கள். மற்றும் பவித்ரமாகி கொண்டிருக் கின்றீர்கள். அனேக முறையின் எண்ணத்தினால் சக்திசாலியாகி விட்டீர்கள். பலமற்றதிலிருந்து எவ்வளவு பலசாலியாக மாறியுள்ளீர்கள், உலகத்தை தூய்மையாக்கி காட்டுவோம் என்று உறுதிமொழி செய்கிறீர்கள், ரிஷி, முனி, மகான் ஆத்மாக்கள் குடும்பத்தில் தூய்மையாக இருப்பது கடினம் என புரிந்துள்ளனர். அவர்களுக்கு நீங்கள் மிகவும் (சுலபமானது) சகஜமானது என்று கூறுகின்றீர்கள்.

சுலோகன்:
விரதம் இருப்பது என்றால் உறுதியான எண்ணத்தில் இருப்பது, உண்மையான பக்தன் விரதத்தை ஒருபோதும் கைவிடமாட்டார்.