26-06-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! "நமது பாக்கியமானது பல மடங்காக இருக்கின்றது, பதீத பாவன் தந்தையின் குழந்தைகளாக நாம் ஆகியிருக்கின்றோம், அவரிடமிருந்து நமக்கு எல்லைற்ற சுகத்திற்கான ஆஸ்தி கிடைக்கின்றது என்ற போதையில் சதா இருங்கள்.

கேள்வி:
குழந்தைகளாகிய உங்களுக்கு எந்த தர்மத்தினரிடமும் வெறுப்பு அல்லது கோபம் ஏற்பட முடியாது. ஏன்?

பதில்:
ஏனெனில் நீங்கள் விதை மற்றும் மரத்தை அறிந்திருக்கின்றீர்கள். இந்த மனித சிருஷ்டி யானது எல்லையற்ற மரமாக இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இதில் ஒவ்வொருவருக்கும் அவரவர்களுக்கென்று நடிப்பு இருக்கின்றது. நாடகத்தில் ஒருபொழுதும் நடிகர்கள் ஒருவருக் கொருவர் வெறுப்படைய மாட்டார்கள். நாம் இந்த நாடகத்தில் ஹீரோ ஹீரோயின் நடிப்பு நடித்திருக்கின்றோம். நாம் என்ன சுகத்தை அடைந்திருந்தோமோ அதை வேறு யாரும் அடைய முடியாது. முழு உலகின் மீதும் இராஜ்யம் செய்யக் கூடியவர்கள் நாம் என்ற குஷி உங்களுக்கு அதிகமாகவே இருக்கின்றது.

ஓம் சாந்தி.
ஓம்சாந்தி என்று கூறியதும் குழந்தைகளாகிய உங்களுக்கு என்ன ஞானம் கிடைத்திருக் கின்றதோ அது முழுவதும் புத்தியில் வர வேண்டும். தந்தையின் புத்தியிலும் என்ன மாதிரியான ஞானம் இருக்கின்றது? இது மனித சிருஷ்டிக்கான மரம், இதனை கல்ப விருட்சம் என்றும் கூறுகின்றனர், அது எப்படி உருவானது? எவ்வாறு வளர்க்கப்படுகின்றது? பிறகு எப்படி விநாசம் ஆகின்றது? போன்ற முழுவதும் புத்தியில் வர வேண்டும். ஜடமான மரம் இருப்பது போன்று இது சைத்தன்ய மரமாகும். விதையும் சைத்தன்யமானவர். அவர் சத்தியமானவர், சைத்தன்யமானவர் என்று அவரது மகிமை பாடுகின்றனர், அதாவது மரத்தின் முதல், இடை, கடையின் ரகசியத்தைப் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார். அவரது தொழிலைப் பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. பிரஜாபிதா பிரம்மாவின் தொழிலையும் அறிய வேண்டும் அல்லவா! பிரம்மாவை யாரும் நினைவு செய்வதில்லை, அறிந்திருக்கவும் இல்லை. அஜ்மீரில் பிரம்மாவின் கோயில் உள்ளது. திரிமூர்த்தி சித்திரத்தை உருவாக்கும் பொழுது அதில் பிரம்மா, விஷ்ணு, சங்கர் உள்ளனர். பிரம்ம தேவதாய நமஹ என்று கூறுகின்றனர். இந்த நேரத்தில் பிரம்மாவை தேவதை என்று கூற முடியாது என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கின்றீர்கள். எப்பொழுது சம்பூர்ணம் ஆகின்றாரோ அப்பொழுது தான் தேவதை என்று கூற முடியும். சம்பூர்ணம் ஆன பின்பு சூட்சுமவதனத்திற்குச் சென்று விடுகின்றார்.

உங்களது தந்தையின் பெயர் என்ன? என்று பாபா யாரிடத்தில் கேட்கின்றார்? ஆத்மாவிடத்தில். நமது பாபா என்று ஆத்மா கூறுகின்றது. யார் கூறியது? என்று அறியாதவர்களால் கேள்வி கேட்க முடியாது. அனைவருக்கும் இரண்டு தந்தைகள் உள்ளனர் என்பதை குழந்தைகள் இப்பொழுது அறிந்து கொண்டீர்கள். ஞானத்தை ஒரே ஒரு தந்தை தான் கொடுக்கின்றார். இது சிவபாபாவின் ரதம் என்பதை குழந்தைகள் நீங்கள் புரிந்திருப்பீர்கள். பாபா இந்த ரதத்தின் மூலம் நமக்கு ஞானம் கூறுகின்றார். ஒன்று லௌகீக பிரம்மா பாபாவின் ரதமாக இது இருக்கின்றது, மற்றொன்று ஆன்மீகத் தந்தையின் ரதமாகவும் இருக்கின்றது. அந்த ஆன்மீகத் தந்தையின் மகிமை என்ன வெனில் சுகக் கடலானவர், அமைதிக் கடலானவர்.......முதலில் அவர் எல்லையற்ற தந்தையானவர், அவர் மூலமாக எல்லையற்ற ஆஸ்தி கிடைக்கின்றது என்பது புத்தியில் இருக்கும். தூய்மையான உலகிற்கு எஜமானர்களாக ஆகின்றோம். பதீத பாவனரே வாருங்கள் என்று நிராகாரமானவரை அழைக்கின்றோம். ஆத்மா தான் அழைக்கின்றது. தூய்மையான ஆத்மாவாக இருக்கின்றபொழுது அழைப்பது கிடையாது. தூய்மை இல்லாமல் இருப்பதால் தான் அழைக்கின்றது. பதீத பாவன் தந்தை இப்பொழுது இந்த சரீரத்தில் வந்திருக்கின்றார் என்பதை உங்களது ஆத்மா அறிந்திருக் கின்றது. நான் அவருடையவராக ஆகியிருக்கின்றேன் என்பதை மறந்து விடக் கூடாது. இது சௌபாக்கியம் மட்டுமின்றி பல மடங்கு பாக்கியத்திற்கான விசயமாகும். பிறகு அப்படிப்பட்ட தந்தையை ஏன் மறக்க வேண்டும்? இந்த நேரத்தில் தந்தை வந்திருக்கின்றார் - இது புது விசயமாகும். சிவஜெயந்தி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகின்றது. ஆக கண்டிப்பாக அவர் ஒரே ஒரு முறை தான் வருகின்றார். லெட்சுமி நாராயணன் சத்யுகத்தில் இருந்தனர். இந்த நேரத்தில் கிடையாது. அவர்கள் மறுபிறப்பு எடுத்திருப்பர் என்பதை புரிய வைக்க வேண்டும். 16 கலைகளிலிருந்து 14, 12 கலைகளில் வந்திருப்பர். இது உங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. புது உலகைத் தான் சத்யுகம் என்று கூறப்படுகின்றது. அங்கு அனைத்தும் புதியதாகவே இருக்கும். தேவதா தர்மம் என்ற பெயரும் பாடப்பட்டிருக்கின்றது. அதே தேவதைகள் விகார மார்க்கத்தில் செல்கின்ற பொழுது புதியவர்கள் மட்டுமின்றி, தேவதைகள் என்றும் கூற முடியாது. நாம் அவர்களது வம்சத்தினர்கள் என்று யாரும் கூறுவதில்லை. ஒருவேளை தன்னை அவர்களது வம்சத்தினர்கள் என்று நினைத்தால், அவர்களை மகிமையும், தன்னை நிந்தனையும் ஏன் செய் கின்றனர்? மகிமைகள் செய்கின்ற பொழுது அவர்களை தூய்மையானவர்கள் என்றும், தன்னை அசுத்தமானவர், தூய்மையற்றவர் என்றும் உணருகின்றனர். தூய்மையாக இருந்து தூய்மை இழந்தவர்களாக ஆகின்றனர், மறுபிறப்பு எடுக்கின்றனர். முதன் முதலில் யார் தூய்மையாக இருந்தார்களோ அவர்களே பிறகு தூய்மை இல்லாமல் ஆகின்றனர். தூய்மையுடன் இருந்து இப்பொழுது தூய்மை இழந்தவர்களாக ஆகியிருக்கின்றோம் என்பதை நீங்கள் அறிந்திருக் கின்றீர்கள். நீங்கள் பள்ளியில் படிக்கின்றீர்கள். அதில் வரிசைக்கிரமம் முதல், இரண்டாம் வகுப்பு என்பது ஏற்படுகின்றது.

நமக்கு தந்தை கற்பிக்கின்றார் என்பதை குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது அறிந்திருக் கின்றீர்கள். அதனால் தான் வருகின்றீர்கள் அல்லவா! இல்லையெனில் இங்கு வர வேண்டிய அவசியம் என்ன இருக்கின்றது? இவர் குருவோ, மகாத்மாவோ, மகாபுருஷரோ கிடையாது. இது ஒரு சாதாரண மனித சரீரமாகும், அதுவும் மிகப் பழையதாகும். பல பிறப்பின் கடைசியில் நான் இவரில் பிரவேசிக்கின்றேன். வேறு எந்த மகிமையும் இவருக்குக் கிடையாது. இவரிடத்தில் பிரவேச மாவதால் இவருக்கு பெயர் ஏற்படுகின்றது. இல்லையெனில் பிரஜாபிதா பிரம்மா எங்கிருந்து வருவார்? மனிதர்கள் கண்டிப்பாக குழப்பமடைகின்றனர் அல்லவா! தந்தை உங்களுக்கு புரிய வைத்திருக்கின்றார், அதனால் தான் நீங்கள் மற்றவர்களுக்குப் புரிய வைக்கின்றீர்கள். பிரம்மாவின் தந்தை யார்? பிரம்மா, விஷ்ணு, சங்கர் - இவர்களைப் படைக்கக் கூடியவர் சிவபாபா. புத்தி மேலே சென்று விடுகின்றது. இவர்கள் பரந்தாமத்தில் இருக்கக் கூடிய பரம்பிதா பரமாத்மாவின் படைப்புகள் ஆவர். பிரம்மா, விஷ்ணு, சங்கரின் தொழில்கள் தனித்தனியானவை. யாராவது 3, 4 பேர் சேர்ந்திருப்பர், ஆனால் அவர்களின் தொழில்கள் தனித் தனியானதாக இருக்கும். ஒவ்வொரு வரின் பாகமும் தனித் தனியானதாக இருக்கும். இத்தனை கோடி ஆத்மாக்களில் ஒருவரது பாகத்தைப் போன்று மற்றொருவருக்கு கிடைக்காது. இந்த அதிசயமான விசயம் புரிய வைக்கப்படுகின்றது. எவ்வளவு மனிதர்கள் உள்ளனர்! இப்பொழுது சக்கரம் முடிவடைகின்றது. கடைசி அல்லவா! அனைவரும் திரும்பிச் செல்வார்கள். சக்கரம் திரும்பவும் சுற்ற வேண்டும். இந்த அனைத்து விசயங்களையும் தந்தை விதவிதமான முறையில் புரிய வைத்துக் கொண்டிருக் கின்றார், புது விசயமல்ல. கல்பத்திற்கு முன்பும் புரிய வைத்திருந்தேன் என்று கூறுகின்றார். மிகவும் அன்பான தந்தையாக இருக்கின்றார், இப்படிப்பட்ட தந்தையை மிக அன்புடன் நினைவு செய்ய வேண்டும். நீங்கள் தந்தையின் மிக அன்பான குழந்தைகள் அல்லவா! தந்தையை நினைவு செய்து வந்திருக்கின்றீர்கள். முன்பு அனைவரும் ஒருவரை மட்டுமே பூஜை செய்தீர்கள். வேறுபாட்டிற்கான விசயமே கிடையாது. இப்பொழுது எவ்வளவு வேறுபாடுகள் உள்ளன! இவர் இராமரின் பக்தராக இருக்கின்றார், இவர் கிருஷ்ணரின் பக்தராக இருக்கின்றார். இராமரின் பக்தர் சாம்பிராணி போடுகின்ற பொழுது கிருஷ்ண பக்தர் மூக்கைப் பொத்திக் கொள்கின்றார். இப்படிப் பட்ட சில விசயங்கள் சாஸ்திரங்களில் உள்ளன. நமது பகவான் உயர்ந்தவர் என்று அவர்கள் கூறுவர், இவர்கள் நமது பகவான் தான் உயர்ந்தவர் என்று கூறுகின்றனர், இரண்டு பகவான் என்று நினைத்து விடுகின்றனர். ஆக தவறாக இருக்கின்ற காரணத்தினால் அனைவரும் தவறான காரியத்தையே செய்து கொண்டிருக்கின்றனர்.

தந்தை புரிய வைக்கின்றார் - குழந்தைகளே! பக்தி பக்தி தான், ஞானம் ஞானம் தான். ஞானக் கடலானவர் ஒரே ஒரு தந்தை மட்டுமே. மற்றபடி அவர்கள் அனைவரும் பக்தியின் கடலாக உள்ளனர். ஞானத்தின் மூலம் சத்கதி ஏற்படுகின்றது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் ஞானவான்களாக ஆகியிருக்கின்றீர்கள். தந்தை உங்களுக்கு தனது மற்றும் முழு சக்கரத்தின் அறிமுகத்தையும் கொடுத்திருக்கின்றார். வேறு யாரும் அதை கொடுக்க முடியாது. ஆகையால் தந்தை கூறுகின்றார் - குழந்தைகளாகிய நீங்கள் சுயதரிசன சக்கரதாரிகளாக இருக்கின்றீர்கள். பரம்பிதா பரமாத்மா ஒரே ஒருவரே. மற்ற அனைவரும் குழந்தைகள் தான். பரம்பிதா என்று யாரும் தன்னை கூறிக் கொள்ள முடியாது. நல்ல புத்திசாலியாக உள்ள மனிதர்கள் இது மிகப் பெரிய நாடகம் என்பதை உணருகின்றனர். இதில் அனைத்து நடிகர்களும் அழிவற்ற பாகத்தை நடிக்கின்றனர். அந்த சிறிய நாடகம் அழியக் கூடியதாகும், இது அநாதி, அழிவற்றதாகும். ஒருபொழுதும் முடியப் போவது கிடையாது. இவ்வளவு சிறிய ஆத்மாவிற்கு சரீரத்தை எடுத்து நடிப்பது பிறகு விட்டு விடுவதற்கான மிகப் பெரிய பாகம் கிடைத்திருக்கின்றது. இந்த விசயங்கள் எந்த சாஸ்திரங்களிலும் கிடையாது. ஒருவேளை இவருக்கு வேறு எந்த ஒரு குருவாவது கூறியிருந்தால் அவருக்கு மற்ற சீடர்கள் (பின்பற்றக் கூடியவர்கள்) ச்ர்ப்ப்ர்ஜ்ங்ழ்ள்) இருப்பார்கள் அல்லவா! பின்பற்றக் கூடியவர் ஒருவர் மட்டும் இருந்து என்ன செய்ய! பின்பற்றக் கூடியவர் என்றாலே முழுமையாக பின்பற்ற வேண்டும். இவரது ஆடையானது அது போன்று கிடையாது. சீடர் என்று யார் கூறுவர்? இவர் தந்தையாக இருந்து படிப்பு கற்பிக்கின்றார். தந்தையைத் தான் பின்பற்ற வேண்டும். திருமண ஊர்வலம் நடக்கின்றதல்லவா! சிவனின் ஊர்வலம் என்றும் கூறு கின்றனர். இது நமது ஊர்வலம் என்று பாபா கூறுகின்றார். நீங்கள் அனைவரும் பக்தைகளாக இருக்கின்றீர்கள். நான் பகவான். நீங்கள் அனைவரும் நாயகிகள், உங்களை அலங்கரித்து அழைத்துச் செல்வதற்காக பாபா வந்திருக்கின்றார். ஆக எவ்வளவு குஷியாக இருக்க வேண்டும்! இப்பொழுது நீங்கள் சிருஷ்டியின் முதல், இடை, கடையை அறிந்திருக்கின்றீர்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்து செய்து தூய்மையாக ஆகிவிடுகின்றீர்கள் என்றால் தூய இராஜ்யம் கிடைக்கின்றது. நான் வருவதே கடைசியில் தான் என்று தந்தை புரிய வைக்கின்றார். தூய்மை யான உலகை ஸ்தாபனை செய்வதற்காக மற்றும் தூய்மையற்ற உலகை விநாசம் செய்வதற்காக வாருங்கள் என்று என்னை அழைக்கின்றீர்கள், ஆகையால் தான் மகா காலன் என்றும் கூறு கின்றீர்கள். மகா காலனுக்கும் கோயில் உள்ளது. காலனின் கோயிலை பார்க்கின்றீர்கள் அல்லவா! சிவனை காலன் என்று கூறுவீர்கள் அல்லவா! வந்து தூய்மைபடுத்துங்கள் என்று அழைக் கின்றீர்கள். ஆத்மாக்களை அழைத்துச் செல்கின்றார். எல்லையற்ற தந்தை அளவற்ற ஆத்மாக் களை அழைத்துச் செல்வதற்காக வந்திருக்கின்றார். காலனுக்கெல்லாம் மகா காலன், அனைத்து ஆத்மாக்களையும் தூய்மையாக்கி, மணம் வீசும் மலர்களாக்கி அழைத்துச் செல்கின்றார். மணம் வீசும் மலர்களாக ஆகிவிட்டால் பிறகு தந்தை மடியில் அமர்த்திக் கொண்டு அழைத்துச் செல்வார். ஒருவேளை தூய்மையாக ஆக வில்லையெனில் தண்டனை அடைய வேண்டி யிருக்கும். வித்தியாசம் உள்ளதல்லவா! பாவம் இருந்தால் பிறகு தண்டனை அடைய வேண்டியிருக்கும். பதவியும் அவ்வாறே கிடைக்கும். ஆகையால் தந்தை புரிய வைக்கின்றார் - இனிமையிலும் இனிமையான குழந்தைகளே! மிக மிக இனிமையானவர்களாக ஆகுங்கள். கிருஷ்ணர் அனைவருக் கும் இனிமையானவராக இருக்கின்றார் அல்லவா! எவ்வளவு அன்பாக தூங்க வைக்கின்றனர், தியானத்தில் சிறிய கிருஷ்ணரைப் பார்த்ததும் உடனே எடுத்து மடியில் அமர்த்தி அன்பு செலுத்து கின்றனர். வைகுண்டத்திற்கு சென்று விடுகின்றனர். அங்கு கிருஷ்ணரை சைத்தன்ய ரூபத்தில் பார்க்கின்றனர். உண்மையில் வைகுண்டம் வந்து கொண்டிருக்கின்றது என்பதை குழந்தைகள் நீங்கள் இப்பொழுது அறிந்திருக்கின்றீர்கள். நாம் எதிர்காலத்தில் இவ்வாறு ஆவோம். ஸ்ரீ கிருஷ்ணரை களங்கப்படுத்திருக்கின்றனர், அவையனைத்தும் தவறாகும். குழந்தைகளாகிய உங்களுக்கு முதலில் போதை ஏற்பட வேண்டும். ஆரம்பத்தில் அதிக சாட்சாத்காரம் (தெய்வீக காட்சி) ஏற்பட்டது. பிறகு கடைசியிலும் அதிகமாக ஏற்படும். ஞானம் மிகவும் ரமணீகரமாக (மன மகிழ்ச்சி அளிப்பதாக) இருக்கின்றது. மிகவும் குஷியுடன் இருக்க வேண்டும். பக்தியில் எந்த குஷியும் இருப்பது கிடையாது. ஞானத்தில் எவ்வளவு குஷியிருக்கின்றது என்று பக்தியில் உள்ளவர்களால் சிறிது கூட புரிந்து கொள்ள முடியாது. ஆக குழந்தைகளாகிய உங்களுக்கு முதலில் இந்த போதை இருக்க வேண்டும். இந்த ஞானத்தை தந்தையைத் தவிர வேறு எந்த ரிஷி, முனி போன்றவர்களால் தர முடியாது. லௌகீக குருக்களால் யாருக்கும் முக்தி, ஜீவன் முக்திக்கான வழி காண்பிக்க முடியாது. எந்த மனிதனும் குருவாக ஆக முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். ஆத்மாக்களே, குழந்தைகளே, நான் உங்களுக்குப் புரிய வைக்கின்றேன் என்று கூற முடியாது. தந்தைக்கு "குழந்தைகளே, குழந்தைகளே என்று கூறக் கூடிய வழக்கம் இருக்கின்றது. இவர்கள் எனது படைப்புகள் என்பதை அறிந்திருக் கின்றார். இந்த தந்தையும் கூறுகின்றார் - நான் அனைவரையும் படைக்கக் கூடியவன். நீங்கள் அனைவரும் சகோதர, சகோதரர்கள். அவருக்கும் நடிப்பு கிடைத்திருக்கின்றது, எப்படி கிடைத்தது? என்பதை அமர்ந்து புரிய வைக்கின்றார். ஆத்மா வில் தான் அனைத்து நடிப்பும் நிறைந்திருக்கின்றது. யாரெல்லாம் மனிதர்களாக பிறவி எடுத்தாலும் 84 பிறப்புகளில் ஒருபொழுதும் ஒரே மாதிரியான முகம் கிடைக்காது. சிறிதாவது கண்டிப்பாக மாறும். தத்துவங்களும் சதோ, ரஜோ, தமோவாக ஆகிக் கொண்டே இருக்கின்றது. ஒவ்வொரு பிறப்பின் முகமும் ஒன்று மற்றொன்றுடன் சேராது. இதுவும் புரிந்து கொள்ள வேண்டிய விசயமாகும். தந்தை தினமும் புரிய வைக்கின்றார் - இனிமையான குழந்தைகளே! தந்தையின் மீது ஒருபொழுதும் சந்தேகத்தைக் கொண்டு வராதீர்கள். சந்தேகம் மற்றும் நம்பிக்கை இரண்டு வார்த்தைகள் உள்ளதல்லவா! தந்தை என்றாலே தந்தை தான். இதில் சந்தேகம் ஏற்பட முடியாது. என்னால் தந்தையை நினைவு செய்ய முடியாது என்று குழந்தையினால் கூற முடியாது. யோகா வருவதில்லை என்று நீங்கள் அடிக்கடி கூறுகின்றீர்கள். யோகா என்ற வார்த்தை சரியானதாக இல்லை. நீங்கள் ராஜரிஷிகளாக இருக்கின்றீர்கள். "ரிஷி என்ற வார்த்தை தூய்மைக் கானதாகும். நீங்கள் ராஜரிஷிகள் எனில் கண்டிப்பாக தூய்மையாக இருப்பீர்கள். சிறிது விசயத்தில் தோல்வியடைந்து விட்டாலும் பிறகு இராஜ்யம் கிடைக்காது. பிரஜைகளாகச் சென்று விடுவீர்கள். மிகவும் நஷ்டம் ஏற்பட்டு விடுகின்றது. வரிசைக்கிரமமான பதவி இருக்கின்றதல்லவா! ஒருவரது பதவியைப் போன்று மற்றொருவருக்குக் கிடைக்காது. இது எல்லையற்ற ஏற்கெனவே உருவாக்கப் பட்ட நாடகமாகும். தந்தையைத் தவிர வேறு யாரும் புரிய வைக்க முடியாது. விதை மற்றும் மரத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். மனித சிருஷ்டியானது மரம் போன்று இருக்கின்றது, இதற்கு ஆலமரத்திற்கான உதாரணம் மிகவும் சரியானதாகும். நமது ஆதி சநாதன தேவி தேவதா தர்மத்தின் வேரானது இப்பொழுது மறைந்து விட்டது என்று உங்களது புத்தியும் கூறுகின்றது. மற்ற அனைத்து மரத்தின் கிளைகள் போன்றவைகள் உள்ளன. நாடகப்படி இவையனைத்தும் ஏற்பட்டு ஆக வேண்டும். இதில் வெறுப்பு ஏற்படுவது கிடையாது. நாடகத்தில் நடிகர்களுக்குள் வெறுப்பு ஏற்படுமா என்ன? நீங்கள் பதீதமாக (அழுக்காக) ஆகி விட்டீர்கள், இப்பொழுது சுத்த மானவர்களாக ஆக வேண்டும் என்று தந்தை கூறுகின்றார். உங்களைப் போன்று சுகத்தைக் கண்டவர்கள் வேறு யாரும் கிடையாது. நீங்கள் ஹீரோ, ஹீரோயின் களாக இருக்கின்றீர்கள். உலகை இராஜ்யம் ஆளக் கூடியவர்கள் என்கின்ற பொழுது அளவற்ற குஷியிருக்க வேண்டும். பகவான் கற்பிக்கின்றார். தொடர்ந்து (தங்ஞ்ன்ப்ஹழ்) படிக்க வேண்டும். அந்த அளவிற்கு குஷி யுடனும் இருக்க வேண்டும். எல்லையற்ற தந்தை நமக்கு படிப்பிக்கின்றார். இராஜயோகத் தையும் தந்தை தான் கற்பிக்கின்றார். எந்த சரீரதாரியும் கற்பிக்க முடியாது. ஆத்மாக்களுக்கு தந்தை கற்பிக்கின்றார், ஆத்மா தான் தாரணை செய்கின்றது. ஒரே ஒரு முறை தந்தை நடிப்பு நடிப்பதற்காக வருகின்றார். ஆத்மாவும் நாடகப்படி நடிக்க வந்து ஒரு சரீரத்தை விட்டு விட்டு மற்றொன்றை எடுக்கின்றது. ஆத்மாக்களுக்கு தந்தை கற்பிக்கின்றார். தேவதைகளுக்கு கற்பிக்க மாட்டார். அங்கு தேவதைகள் தான் கற்பிப்பார்கள். சங்கமயுகத்தில் புருஷோத்தமர்களாக ஆகுவதற்கு தந்தை தான் கற்பிக்கின்றார். நீங்கள் தான் படிக்கின்றீர்கள். இந்த சங்கமயுகத்தில் மட்டும் தான் நீங்கள் புருஷோத்தமர்களாக ஆகின்றீர்கள். சத்தியமானவர்களாக ஆக்கக் கூடியவர், சத்யுகத்தை ஸ்தாபனை செய்யக் கூடியவர் ஒரே ஒரு சத்தியமான பாபா ஆவார். நல்லது.

இனிமையிலும் இனிய செல்லக் குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. சங்கமயுகத்தில் நேரடியாக பகவானிடமிருந்து படிப்பு படித்து ஞானவான், ஆஸ்திக்குரியவர் களாக ஆக வேண்டும் மேலும் மற்றவர்களையும் உருவாக்க வேண்டும். ஒருபொழுதும் தந்தை மற்றும் படிப்பின் மீது சந்தேகம் வரக் கூடாது.

2. தந்தைக்குச் சமமாக அன்பானவர்களாக ஆக வேண்டும். பகவான் நம்மை அலங்கரித்துக் கொண்டிருக்கின்றார் என்ற குஷியில் இருக்க வேண்டும். எந்த நடிகரின் மீதும் வெறுப்பு அல்லது கோபப்படக் கூடாது. ஒவ்வொருவருக்கும் இந்த நாடகத்தில் மிகச் சரியான பாகம் இருக்கின்றது.

வரதானம்:
சேவைகளின் ஈடுபாட்டில் இருந்து கொண்டு இடையிடையில் ஏகாந்தவாசி ஆகக்கூடிய அந்தர்முகி (உள்முக நோக்குள்ளவர்) ஆகுக.

அமைதியின் சக்தியைப் பிரயோகம் செய்வதற்கு அந்தர்முகி மற்றும் ஏகாந்தவாசி ஆவதற்கான அவசியம் உள்ளது. குழந்தைகள் அநேகர் சொல்கிறார்கள் -- அந்தர்முகி ஸ்திதியை அனுபவம் செய்வதற்கு அல்லது ஏகாந்தவாசி ஆவதற்காக சமயமே கிடைப்பதில்லை. ஏனென்றால் சேவை யின் ஈடுபாடு, வார்த்தை சக்தியின் ஈடுபாடு மிகவும் அதிகமாகி விட்டுள்ளது. ஆனால் இதற்காக சேர்ந்தாற்போல் அரைமணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் ஒதுக்குவதற்கு பதிலாக இடையிடையில் சிறிது நேரம் கூட ஒதுக்குவீர்களானால் சக்திசாலி ஸ்திதி உருவாகி விடும்.

சுலோகன்:
பிராமண வாழ்க்கையில் யுத்தம் செய்வதற்கு பதிலாக மகிழ்ச்சி கொண்டாடுவீர்களானால் கடினமானதும் கூட சுலபமாகி விடும்.