இனிமையான குழந்தைகளே! நீங்கள்
சரீரத்திலிருந்து விடுபட்டு தந்தையிடம் செல்ல வேண்டும். நீங்கள்
உடலை கூடவே எடுத்துச் செல்ல மாட்டீர்கள். ஆகையால் உடலை மறந்து
ஆத்மாவைப் பாருங்கள்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் உங்கள்
ஆயுளை யோக பலத்தின் மூலமாக அதிகரிப்பதற்காக முயற்சி ஏன்
செய்கிறீர்கள்?
பதில்:
ஏனெனில் தந்தையின் மூலமாக இந்த
பிறவியிலேயே அனைத்தும் தெரிந்து கொள்வோம் என்று உங்கள் மனதில்
இருக்கிறது. தந்தையின் மூலமாக அனைத்தையும் கேட்க வேண்டும்.
ஆகையால் யோக பலத்தின் மூலமாக ஆயுளை அதிகரிக்க முயற்சி
செய்கிறீர்கள். இப்பொழுது தான் உங்களுக்கு தந்தையிடமிருந்து
அன்பு கிடைக்கிறது. இது போன்று அன்பு பிறகு முழு கல்பத்திலும்
கிடைக்காது. மற்றபடி யார் சரீரத்தை விட்டு சென்று விட்டார்களோ
அதற்கு டிராமா என்று சொல்லலாம்; அவர்களுக்கு இவ்வளவு தான்
நடிப்பு இருந்தது.
ஓம் சாந்தி.
குழந்தைகள் பல பிறவிகளாக மற்ற சத்சங்கங்களுக்கு
சென்றிருக்கிறீர்கள்; மேலும் இங்கும் வந்துள்ளீர்கள். உண்மையில்
இதற்கும் கூட சத்சங்கம் என கூறப்படுகிறது. உண்மையான சங்கத்தில்
சேருபவர்கள் நன்றாக இருப்பார்கள். குழந்தைகளுடைய மனதில்
வருகிறது நாம் முதலில் பக்திமார்க்கத்தின் சத்சங்கங்களுக்கு
சென்றிருந்தோம். இப்பொழுது இங்கு அமர்ந்துள் ளோம். இரவு பகல்
வித்தியாசம் தெரிகிறது. இங்கு முதன் முதலில் தந்தையின் அன்பு
கிடைக் கிறது. பிறகு தந்தைக்கு குழந்தைகளின் அன்பு கிடைக்கிறது.
இப்பொழுது இந்த பிறவியில் உங்களுக்கு மாற்றம் ஏற்பட்டுக்
கொண்டிருக்கிறது. குழந்தைகள் தெரிந்து கொண்டீர்கள் நாம் ஆத்மா
இவ்வுடல் அல்ல. உடல் சொல்லாது நான் ஆத்மா என்று, ஆத்மா தான்
என்னுடைய உடல் என்று கூறமுடியும். குழந்தைகள் புரிந்துக்
கொண்டீர்கள் பல பிறவியாக அந்த சாது, சன்நியாசிகளிடம்
சென்றுவந்தோம்., இன்று இது நாகரீகம் ஆகிவிட்டது. சாயிபாபா,
மேகர் பாபா..... அவர்களும் கூட மனிதர்களே. மனிதர்களின் அன்பில்
சுகம் ஏற்படுவதில்லை. இப்பொழுது குழந்தைகளுடையது ஆன்மீக அன்பு.
இரவுக்கும் பகலுக்குமுள்ள வித்யாசம் உள்ளது. இங்கு உங்களுக்கு
அறிவு கிடைக்கிறது. அங்கு முட்டாள்களாக உள்ளனர். இப்பொழுது
நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள் பாபா வந்து படிப்பு சொல்லிக்
கொடுக்கிறார். அவர் அனைவருக்கும் தந்தையாவார். ஆண் மற்றும் பெண்
அனைவரும் தன்னை ஆத்மா என புரிந்து கொள்கிறார்கள். ஏ, குழந்தைகளே!
என்று தந்தையும் அழைக்கின்றார்; குழந்தைகளும் அதற்கு பதில்
கூறுவார்கள். இது தந்தை மற்றும் குழந்தைகளின் சந்திப்பாகும்.
இது அப்பா மற்றும் பிள்ளைகளின், ஆத்மா மற்றும் பரமாத்மாவின்
சந்திப்பு ஒரு முறை தான் நிகழ்கிறது என்று குழந்தைகளுக்குத்
தெரியும். குழந்தைகள் பாபா, பாபா என்று
சொல்லிக்கொண்டேயிருப்பார்கள். பாபா என்ற வார்த்தை மிக இனிமையாக
உள்ளது. தந்தை என்று சொல்வதால் தான் சொத்து நினைவிற்கு வருகிறது.
இதை சிறு குழந்தைகள் புரிந்து கொள்ள முடியாது. இங்கு நாம்
தந்தையிடம் வந்துள்ளோம் என்று தெரிந்து கொண்டிருக் கின்றீர்கள்.
ஏ! குழந்தைகளே என்று பாபா கூறுகின்றார், இதில் அனைத்து
குழந்தைகளும் வந்து விடுகின்றனர். அனைத்து ஆத்மாக்களும் (மூல
வதனம்) வீட்டிலிருந்து இங்கு நடிப்பதற்காக வருகின்றார்கள். யார்
எப்பொழுது நடிக்க வருகிறார்கள் என்பதும் கூட புத்தியில்
இருக்கிறது. அனைவருடைய பிரிவும் தனித் தனியாக இருக்கின்றது,
அங்கிருந்து தான் வருகின்றனர். பிறகு கடைசியில் அனைவரும் அவரவர்
பிரிவிற்குச் சென்றுவிடுகின்றனர். இது அனைத்தும் கூட டிராமாவில்
நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. தந்தை யாரையும் அனுப்புவ தில்லை.
தானாகவே இந்த நாடகம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரும்
அவரவருடைய தர்மத்தில் வந்து கொண்டிருக் கின்றனர். புத்த தர்மம்
ஸ்தாபனையாகவில்லை என்றால் யாரும் அந்த தர்மத்திற்கு வரமாட்டார்
கள். முதன் முதலில் சூரிய வம்சம், சந்திரவம்சத்தை சேர்ந்தவர்கள்
வருகின்றார்கள். யார் தந்தையிடம் நல்ல முறையில்
படிக்கின்றார்களோ அவர்கள் வரிசைக்கிரமத்தில் சூரியவம்சம்
மற்றும் சந்திரவம்சத்தில் பிறவி எடுக்கிறார்கள். அங்கு
விகாரத்திற்கான விஷயம் இல்லை. யோக பலத்தினால் ஆத்மா
கர்ப்பத்தில் வந்து பிரவேசிக்கிறது. அவர்கள் புரிந்து
கொள்வார்கள் என்னுடைய ஆத்மா இந்த உடலில் சென்று; பிரவேசமாகப்
போகிறது. என்னுடைய ஆத்மா யோக பலத்தினால் இவ்வுடலை எடுக்கும்
என்று வயதானவர்கள் புரிந்து கொள்கிறார்கள். என்னுடைய ஆத்மா
இப்பொழுது மறுபிறவி எடுக்கிறது. என்னிடம் குழந்தை
வந்திருக்கிறது என அவருடைய தந்தையும் புரிந்து கொள்கிறார்.
குழந்தையினுடைய ஆத்மா வந்துகொண்டு இருக்கிறது; இதன் காட்சி கூட
கிடைக்கிறது. நான் சென்று இன்னொரு உடலில் பிரவேசம் ஆகின்றேன்
என்று அவர்களும் புரிந்து கொள்கிறார்கள். இது போன்ற எண்ணமும்
எழுகிறதல்லவா! அவசியம் அந்த இடத்திற்காக சட்டம் இருக்கிறது.
குழந்தை எந்த வயதில் உருவாகும், அங்கு அனைத்தும் சரியாக
நடக்கிறது அல்லவா!
அதையும் போகப்போக தெரிந்து கொள்வீர்கள். அனைத்தும்
தெரியவரும், அந்த மாதிரி கிடையாது இங்கிருப்பது போல் 15-20
வருடத்திலேயே குழந்தை இருக்காது. இல்லை, அங்கு ஆயுள் 150 வருடம்
இருக்கிறது. ஆகையால் குழந்தை எப்பொழுது வரும் என்றால் எப்பொழுது
பாதி வாழ்க்கைக்கு சிறது முன் இருக்குமோ, அப்பொழுது குழந்தை
பிறக்கிறது. ஏனெனில் அங்கு ஆயுள் அதிகமாக இருக்கிறது. ஒன்று ஆண்
குழந்தையாக இருக்கும், பிறகு பெண் குழந்தை யாகவும் பிறக்கிறது,
சட்டம் இருக்கிறது முதலில் ஆண் குழந்தை. பிறகு பெண்ணின் ஆத்மா
வருகிறது. விவேகம் சொல்கிறது முதலில் ஆண் குழந்தை பிறக்க
வேண்டும். முதலில் ஆண் பிறகு பெண். 8-10 வருடம் கழித்து
பிறக்கும். போகப் போக குழந்தைகளாகிய உங்களுக்கு அனைத்துக்
காட்சிகளும் கிடைக்கும். எப்படி அங்குள்ள பழக்க வழக்கங்கள்
இருக்கிறதோ இந்த அனைத்து புது உலகத்தின் விஷயங்களை தந்தை
அமர்ந்து புரிய வைக்கிறார். தந்தை தான் புது உலகத்தை
படைக்கக்கூடியவராக இருக்கிறார். பழக்க வழக்கங்களையும் கூட
கண்டிப்பாகக் கூறுவார். போகப் போக நிறைய சொல்வார் அதிகமாக
காட்சியும் கிடைத்துக் கொண்டேயிருக்கும். குழந்தை எவ்வாறு
பிறக்கும் என்றெல்லாம் இவை ஒன்றும் புதிய விசயம் அல்ல.
நீங்கள் அந்த மாதிரியானதொரு இடத்திற்கு செல்கிறீர்கள். அங்கு
கல்ப கல்பமாக செல்ல வேண்டி யிருக்கிறது. வைகுண்டம் அருகில்
வந்து விட்டது. இப்பொழுது முற்றிலும் அருகாமையில் வந்தடைந்து
விட்டீர்கள். எந்த அளவு நீங்கள் ஞான யோகத்தில் உறுதியாகிக்
கொண்டே இருக்கிறீர்களோ, ஒவ்வொரு விஷயமும் உங்களுக்கு
அருகாமையில் தெரியவரும். பல முறை நீங்கள் நடித்திருக்கிறீர்கள்,
எதையெல்லாம் கூடவே எடுத்துச் செல்வீர்கள் என்பதை இப்பொழுது
நீங்கள் புரிந்து கொண்டீர்கள். அங்கு என்ன பழக்க வழக்கம்
இருக்கும், அனைத்தும் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
ஆரம்பத்தில் உங்களுக்கு அனைத்து காட்சிகளும் கிடைத்தது. அந்த
சமயத்தில் தந்தை மற்றும் இராஜ்யத்தைப் பற்றி படித்திருந்தீர்கள்;
பிறகு கடைசியில் கூட அவசியம் உங்களுக்கு காட்சிகள் கிடைக்கும்.
தந்தை அமர்ந்து என்ன கூறுகிறாரோ அவையனைத்தும் பார்க்கக்கூடிய
விருப்பம் ஏற்படும். உடலை விட்டுச் செல்லக்கூடாது. அனைத்தையும்
பார்த்து விட்டுதான் செல்ல வேண்டும் என புரிந்து கொள்வீர்கள்.
இதில் ஆயுளை அதிகரிக்க யோக பலம் தேவை. பாபா என்னென்ன சொல்கிறாரோ
அவையனைத்தையும் பார்க்க வேண்டும். யார் முதலிலேயே
சென்றுவிட்டார்களோ அவர்களைப் பற்றி சிந்திக்கத் தேவையில்லை. அது
டிராமா வினுடைய பாகமாக உள்ளது. அதிர்ஷ்டத்தில் இல்லை - அதிகமான
அன்பை பாபாவிடமிருந்து பெற வேண்டும்; ஏனெனில் எந்தளவு நீங்கள்
சேவை செய்யக்கூடியவர்களாக மாறுகிறீர்களோ அந்த அளவு மிக மிக
அன்பானவர்களாகிறீர்கள். எந்த அளவிற்கு சேவை செய்கிறீர்களோ,
எந்த அளவு பாபாவை நினைவு செய்கிறீர்களோ அது நினைவை
உறுதியாக்கிக் கொண்டேயிருக்கும். உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி
ஏற்படும். இப்பொழுது நீங்கள் ஈஸ்வரிய குழந்தையாகிக்
கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் ஆத்மாக்கள் என்னுடன் இருந்தீர்கள்
இல்லையா என்று பாபா சொல்கிறார். பக்தி மார்க்கத்தில்
முக்திக்காக மிகவும் முயற்சி செய்கிறார்கள். ஜீவன் முக்தியைப்
பற்றித் தெரியாது. இது மிக அன்பான ஞானமாகும். மிகுந்த அன்பு
இருக்கிறது. தந்தை தந்தை யாகவும் இருக்கிறார், ஆசிரியராகவும்
இருக்கிறார், சத்குருவாகவும் இருக்கிறார். யார் உண்மை யிலும்
உண்மையான சுப்ரீம் தந்தையாக இருக்கிறாரோ அவர் நம்மை 21
ஜன்மத்திற்கு சுகதாமம் அழைத்துச் செல்கிறார். ஆத்மா தான்
துக்கமடைகிறது. சுக துக்கத்தை ஆத்மா தான் உணர்கிறது. பாவ ஆத்மா
புண்ணிய ஆத்மா என்று சொல்லப்படுகிறது. அனைத்து
துன்பத்திலிருந்தும் நம்மை விடுவிப்பதற்காக தந்தை வந்துள்ளார்.
இப்பொழுது குழந்தைகள் நீங்கள் எல்லைக்கு அப்பாற் பட்டதில்
செல்ல வேண்டும். அங்கு அனைவரும் சுகமுடையவராக இருப்பார்கள்.
முழு உலகமும் சுகமுடையதாகிவிடும். டிராமாவில் யாருக்கு என்ன
பார்ட் இருக்கிறதோ அதையும் நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள்.
நீங்கள் எவ்வளவு குஷியில் இருக்கிறீர்கள். நம்மை
சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வதற்காக பாபா வந்திருக்கிறார்.
அனைத்து ஆத்மாக்களையும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வார்.
தந்தை தைரியம் கொடுக்கின்றார் - இனிமையிலும் இனிமையான
குழந்தைகளே! நான் உங்களை அனைத்து துன்பத்தி லிருந்தும்
விடுவிக்க வந்திருக்கிறேன். ஆகையால் இந்த மாதிரியான தந்தையிடம்
எவ்வளவு அன்பு இருக்க வேண்டும்;. அனைத்து சம்மந்தங்களும்
உங்களுக்கு துக்கம் கொடுத்தது. இவர்கள் துக்கம் தரக்கூடிய
மனிதர்கள். நீங்கள் துக்கமுடைய வராக இருக்கிறீர்கள்.
துக்கமுடைய விஷயத்தைத் தான் கேட்டு வந்திருக்கிறீர்கள்.
இப்பொழுது தந்தை அனைத்து விஷயங்களையும் புரியவைத்துக்
கொண்டிருக்கிறார். அனேக முறை புரியவைத்திருக்கிறார் மற்றும்
சக்கரவர்த்தி இராஜாவாக ஆக்கியிருக்கிறார். தந்தை நம்மை அந்த
மாதிரி சொர்க்கத்திற்கு அதிபதியாக மாற்றுகிறார்; அவர் மீது
எவ்வளவு அன்பு இருக்க வேண்டும். ஒரு தந்தையைத் தான் நீங்கள்
நினைவு செய்கிறீர்கள். ஒரு தந்தையைத் தவிர வேறு யாரிடமும் உறவு
இல்லை. ஆத்மாக்களுக்குத்தான் புரியவைக்க வேண்டியிருக்கிறது.
நாம் சுப்ரீம் தந்தை யினுடைய குழந்தைகளாக இருக்கின்றோம்.
இப்பொழுது எப்படி நமக்கு வழி கிடைத்திருக்கிறதோ, பிறகு
மற்றவருக்கும் கூட சுகத்தின் வழியைச் சொல்ல வேண்டும்.
உங்களுக்கு அரைக் கல்பத்திற் காக மட்டும் சுகம் கிடையாது.
முக்கால் கல்பத்திற்கு சுகம் கிடைக்கிறது. உங்களிடம் கூட நிறைய
பேர் அர்ப்பணம் ஆகிறார்கள். ஏனென்றால் நீங்கள் தந்தையினுடைய
செய்தியை சொல்லி அனைவரையும் துக்கத்திலிருந்து
விடுவிக்கிறீர்கள்.
இவருக்கு (பிரம்மாவிற்கு) கூட இந்த ஞானம் உயர்ந்த (சுப்ரீம்)
தந்தையிடமிருந்து கிடைத்திருக்கிறது என்பதை நீங்கள் புரிந்து
கொண்டீர்கள். இவர் பிறகு நமக்கு செய்தி கொடுக் கிறார். பிறகு
நாம் மற்றவர்களுக்கு செய்தியைக் கொடுப்போம். தந்தையினுடைய
அறிமுகத்தைக் கொடுத்து அறியாமை தூக்கத்திலிருந்து எழுப்பிக்
கொண்டிருக்கிறீர்கள். பக்தி அறியாமை என்று சொல்லப்படுகிறது.
ஞானம் மற்றும் பக்தி தனித்தனியானது. ஞானக்கடல் தந்தை
குழந்தைகளாகிய உங்களுக்கு ஞானத்தை கற்றுக் கொடுத்துக்
கொண்டிருக்கிறர்ர். பாபா ஒவ்வொரு 5000 வருடத்திற்கும் பிறகு
வந்து நம்மை எழுப்புகிறார் என்பது உங்கள் மனதில் வருகிறது.
நம்முடைய தீபத்தில் எண்ணெய் சிறிதளவு தான் இருந்து
கொண்டிருக்கிறது. ஆகையால் இப்பொழுது மீண்டும் ஞான நெய் ஊற்றி
ஏற்றி வைக்கிறார். எப்பொழுது பாபாவை நினைவு செய்கிறோமோ
அப்பொழுது நம்முடைய ஆத்ம தீபம் பிரகாசிக்கிறது. பாபாவினுடைய
நினைவினால் ஆத்மாவில் படிந்திருக்கக்கூடிய கறை நீங்கிவிடுகிறது.
இதில் தான் மாயாவினுடைய சண்டை நடக்கிறது. மாயா அடிக்கடி மறக்க
வைக்கிறது. மேலும் கறை நீங்கு வதற்கு பதிலாக படிந்துவிடுகிறது.
மாறாக எந்தளவு நீங்கியிருந்ததோ அதைவிட அதிகமாக படிந்துவிடுகிறது.
பாபா கூறுகிறார்: குழந்தைகளே! என்னை நினைவு செய்தால் தான் கறை
நீங்கும் இதில் கடின முயற்சி தேவை.. சரீரத்தினுடைய கவர்ச்சி
இருக்கக் கூடாது. ஆத்மா அபிமானி யாகுங்கள். நாம் ஆத்மாவாக
இருக்கின்றோம். பாபாவிடம் உடலுடன் செல்ல முடியாது. சரீரத்
திலிருந்து விடுபட்டு தான் செல்ல வேண்டும். ஆத்மாவைப்
பார்ப்பதினால் கறை நீங்கிவிடுகிறது, சரீரத்தைப் பார்ப்பதினால்
கறை படிகிறது. சில சமயம் கறை படிகிறது, சில சமயம் நீங்கி
விடுகிறது. இது நடந்து கொண்டேயிருக்கிறது. சில சமயம் கீழே, சில
சமயம் மேலே - மிகுந்த நாசுக்கான பாதையாகும். இந்த மாதிரி நடந்து
நடந்து கடைசியில் கர்மாதீத் நிலையை அடைகிறீர்கள். முக்கியமாக
ஒவ்வொரு விஷயத்திலும் கண்கள் தான் ஏமாற்றத்தைக் கொடுக்கிறது.
ஆகையால் சரீரத்தைப் பார்க்காதீர்கள். நம்முடைய புத்தி
சாந்திதாம் - சுகதாமத்தின் நினைவில் நிலைத்திருக்க வேண்டும்.
தெய்வீக குணங்களையும் தாரணை செய்ய வேண்டும். உணவு கூட சுத்தமாக
சாப்பிட வேண்டும்; தேவதைகளினுடையது தூய்மையான உணவாகும்.
வைஷ்ணவர் என்ற வார்த்தை விஷ்ணுவிலிருந்து வந்திருக்கிறது.
தேவதைகள் ஒருபொழுதும் அசுத்தமான பொருட்களை சாப்பிடமாட்டார்கள்.
விஷ்ணுவினுடைய கோவிலும் இருக்கிறது. அவர் தான் நரன் -
நாராயணனாகவும் இருக்கிறார். இப்பொழுது லட்சுமி - நாராயணன்
சாகாரியாக (பூவுட-ல்) இருக்கின்றார்கள். அவர்களுக்கு நான்கு
கரங்கள் இருக்க முடியாது. ஆனால் பக்தி மார்க்கத்தில்
அவர்களுக்கு கூட நான்கு கரங்களை கொடுத்திருக்கின்றனர்.
எல்லையற்ற அறியாமை என்று இதற்கு தான் சொல்லப்படுகிறது. நான்கு
கரங்களை உடைய எந்த மனிதரும் இருக்க முடியாது என்று புரிந்து
கொள்வதில்லை. சத்யுகத்தில் இரண்டு கைகள் உடையவர்கள் தான்
இருப்பார்கள். பிரம்மாவிற்குக் கூட இரண்டு கைகள் தான்
இருக்கிறது. பிரம்மாவினுடைய மகள் சரஸ்வதி பிறகு அவரையும்
ஒன்றாக இணைத்து நான்கு கரங்களை கொடுத்திருக்கின்றனர். இப்பொழுது
சரஸ்வதி பிரம்மாவின் மனைவி கிடையாது. இவர் பிரஜா பிதா
பிரம்மாவின் மகளாக இருக்கிறார். எந்த அளவு குழந்தைகளை
தத்தெடுத்து இருக்கிறாரோ அந்த அளவு அவருடைய கரங்கள்
அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. பிரம்மாவிற்குத்தான் 108 என
கைகள் சொல் கின்றனர். விஷ்ணு அல்லது சங்கருக்கு அவ்வாறு சொல்வது
கிடையாது. பிரம்மாவினுடைய கரங்கள் நிறைய பேர் இருக்கின்றனர்.
பக்தி மார்க்கத்தில் எதையும் புரிந்து கொள்வதில்லை. பாபா வந்து
குழந்தைகளுக்குப் புரியவைக்கின்றார். பாபா வந்து நம்மை
புத்திசாலியாக மாற்றிவிட்டார் என்று நீங்கள் கூறுகின்றீர்கள்.
மனிதர்கள் கூறுகிறார்கள், நாங்கள் சிவனுடைய பக்தர்களாக
இருக்கின்றோம். நல்லது நீங்கள் சிவனை என்னவென்று புரிந்து
கொண்டிருக்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் புரிந்து கொண்டிருக்
கிறீர்கள். சிவபாபா அனைத்து ஆத்மாக்களின் தந்தையாக
இருக்கின்றார்; ஆகையால் அவரை பூஜை செய்கின்றனர். முக்கியமான
விஷயம் பாபா கூறுகின்றார்: என்னை மட்டும் நினைவு செய்யுங்கள்.
ஏ! பதீதபாவனா வந்து எங்களை தூய்மையாக்குங்கள் என்று நீங்கள்
கூப்பிட்டீர்கள். அனைவரும் அழைத்துக் கொண்டிருக்கின்றனர் -
பதீதபாவன சீதா ராம். இவர் கூட பாடிக்கொண்டு இருந்தார். பாபா
அவரே வந்து எனக்குள் பிரவேசம் செய்வார் என்று பாபாவிற்கு (பிரம்மாவிற்கு)
கொஞ்சம் கூட தெரியாமல் இருந்தது. எவ்வளவு அதிசயமாக இருக்கிறது,
ஒருபொழுதும் சிந்தனையில் கூட இல்லாமல் இருந்தது. இங்கு என்ன
நடக்கிறது என்று முதலில் ஆச்சரியம் ஏற்பட்டது. நான் யாரைப்
பார்த்துக் கொண்டிருந்தேனோ அவரிடமிருந்து ஆன்மீக ஈர்ப்பு
ஏற்பட்டது. இங்கு என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. சிவபாபா
கவர்ந்து இழுத்தார். அவர் முன்பாக அமர்ந்தவர்களும் தியானத்தில்
சென்றுவிட்டனர்; (தெய்வீக காட்சியைக் கண்டார்) ஆச்சரியப்பட்டனர்.
இது என்ன இவ்வாறு என்று? இந்த விஷயங்களை எல்லாம் புரிந்து
கொள்வதற்காக மீண்டும் தனிமை தேவைப்பட்டது. அப்பொழுது
வைராக்கியம் ஏற்பட்டது - எங்கே செல்வது? நல்லது பனாரஸ்
செல்கிறேன். இது அவருடைய (பாபா) கவர்ச்சியாக இருந்தது.
இவருக்கும் சாட்சாத்காரம் செய்வித்தவுடன், இவ்வளவு பெரிய
தொழிலையெல்லாம் விட்டுவிட்டார். பனாரசுக்கு ஏன் செல்கின்றார்?
என்று, பாவம் மற்றவர் களுக்கு என்ன தெரியும்? பிறகு அங்கே
தோட்டத்திற்குச் சென்றிருக்கிறார். அங்கே பென்சிலை கையில்
எடுத்து சுவரின் மீது சக்கரம் வரைந்து கொண்டிருந்தார் பாபா
என்ன செய்வித்துக் கொண்டிருந்தார்! எதுவுமே தெரியாமல் இருந்தது.
இரவில் தூக்கம் வந்துவிட்டது. எங்கேயோ பறந்து செல்கிறேன் என்று
நினைத்தார். பிறகு அந்த மாதிரி கீழே வந்த பிறகும் என்ன
நடக்கிறது என்று எதுவும் தெரியாது. ஆரம்பத்தில் எவ்வளவு
காட்சிகள ஏற்பட்டது. குழந்தைகள் உட்கார்ந்தபடியே தியானத்தில்
சென்றனர். நீங்கள் எவ்வளவு நிறைய (காட்சிகளைப்) பார்த்தீர்கள்.
நாங்கள் எதைப் பார்த்தோமோ அதை நீங்கள் பார்க்கவில்லை
என்றுநீங்கள் சொல்வீர்கள். ஆக, கடைசியில் கூட பாபா அதிகமான
காட்சிகளைக் காண வைப்பார். ஏனென்றால் அருகாமையில் சென்று
கொண்டிருப்பீர்கள். நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட
செல்லமான குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்தே