29-06-2024 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! தேகம் உட்பட என்னவெல்லாம் தெரிகிறதோ, இவையனைத்தும் அழியக் கூடியது, ஆத்மாக்களாகிய நீங்கள் இப்போது வீட்டிற்குத் திரும்ப வேண்டும் ஆகையினால் பழைய உலகத்தை மறந்து விடுங்கள்"

கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் எந்த வார்த்தைகளின் மூலம் பாபாவின் செய்தியை சொல்ல முடியும்?

பதில்:
எல்லையற்ற தந்தை எல்லையற்ற ஆஸ்தியை கொடுப்பதற்காக வந்துள்ளார் என்று சொல்லுங்கள். இப்போது எல்லைக்குட்பட்ட ஆஸ்திக்கான நேரம் முடிந்து விட்டது, அதாவது பக்திக்கான நேரம் முடிந்து விட்டது. இப்போது இராவண இராஜ்யம் முடிகிறது. உங்களை 5 விகாரங்கள் எனும் இராவணனின் சிறையிலிருந்து விடுவிப்பதற்காக பாபா வந்திருக்கின்றார். இது புருஷோத்தம சங்கமயுக மாகும், இதில் நீங்கள் முயற்சி செய்து தெய்வீக குணமுடையவர்களாக ஆக வேண்டும். புருஷோத்தம சங்கமயுகத்தை மட்டும் புரிந்து கொண்டால் கூட ஸ்திதி (மனோ நிலை) உயர்ந்ததாக ஆகும்.

ஓம் சாந்தி.
ஆன்மீக குழந்தைகள் இப்போது என்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்? அவிபச்சாரி (ஒருவருடைய) நினைவில் அமர்ந்து கொண்டிருக்கின்றீர்கள். ஒன்று அவிபச்சாரி நினைவு, மற்றொன்று விபச்சாரி (பல கடவுள்களை நினைப்பது) நினைவாகும். அவிபச்சாரி நினைவு அல்லது அவிபச்சாரி பக்தி தொடங்கும் போது முதலில் அனைவரும் சிவனின் பூஜை செய்கிறார் கள். உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான் அவர் தான். அவர் தந்தையாகவும் இருக்கின்றார், ஆசிரியராக வும் இருக்கின்றார். கற்பிக்கின்றார். என்ன கற்பிக்கின்றார்? மனிதனிலிருந்து தேவதையாக மாற்று கின்ற படிப்பை கற்பிக்கின்றார். தேவதையிலிருந்து மனிதனாக ஆவதற்கு, குழந்தைகளாகிய உங்களுக்கு 84 பிறவிகளாயிற்று. பிறகு மனிதனிலிருந்து தேவதையாக ஆவதற்கு ஒரு வினாடி யாகிறது. நாம் பாபாவின் நினைவில் அமர்ந்திருக்கின்றோம், என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார் கள். அவர் நம்முடைய ஆசிரியராகவும் இருக்கின்றார், சத்குருவாகவும் இருக்கின்றார். ஒருவருடைய நினைவிலேயே இருங்கள், என்று யோகம் கற்றுக் கொடுக்கின்றார். அவரே கூறுகின்றார், ஹே, ஆத்மாக்களே!, ஹே, குழந்தைகளே!, தேகத்தின் அனைத்து உறவுகளையும் விடுங்கள், இப்போது திரும்பிச் செல்ல வேண்டும். இந்த பழைய உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. இப்போது இது இருக்கப்போவதில்லை. பழைய உலகத்தின் அழிவிற்காகத் தான் இந்த ஏவுகணை கள் போன்றவை உருவாக்கப்பட்டுள்ளன. இயற்கையின் சீற்றங்களும் உதவி செய்யும். கண்டிப்பாக வினாசம் ஆகத்தான் வேண்டும். நீங்கள் புருஷோத்தம சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். இதை ஆத்மா தெரிந்திருக்கிறது. இப்போது நாம் திரும்பிக் கொண்டிருக்கிறோம். ஆகையினால் தான் பாபா கூறுகின்றார்: இந்த பழைய உலகம், பழைய தேகத்தை கூட விட வேண்டும். தேகம் உட்பட இந்த உலகத்தில் என்னவெல்லாம் தெரிகிறதோ, இவையனைத்தும் அழியக்கூடியதாகும். சரீரம் கூட அழியக் கூடியதாகும். இப்போது ஆத்மாக்களாகிய நாம் வீட்டிற்குத் திரும்ப வேண்டும். திரும்பி செல்லாமல் புதிய உலகத்தில் வர முடியாது. இப்போது நீங்கள் புருஷோத்தமர்களாக ஆவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள். இந்த தேவதைகள் புருஷோத்தமர்கள். அனைவரிலும் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் நிராகார தந்தையாவார். பிறகு மனித சிருஷ்டியில் வந்தோம் என்றால் இங்கே உயர்ந்தவர்கள் தேவதைகளாவர். அவர்களும் மனிதர்கள் தான், ஆனால் தெய்வீக குணமுடையவர்களாவர். பிறகு அவர்களே தான் அசுர குணமுடையவர்களாக ஆகின்றார் கள். இப்போது அசுர குணத்திலிருந்து தெய்வீக குணத்திற்குச் செல்ல வேண்டும். சத்யுகத்திற்குச் செல்ல வேண்டும். யார்? குழந்தைகளாகிய நீங்கள். குழந்தைகளாகிய நீங்கள் படித்துக் கொண்டிருக்கின்றீர்கள், மற்றவர்களுக்கும் கற்பிக்கின்றீர்கள். பாபாவின் செய்தியை மட்டும் கொடுக்க வேண்டும். எல்லையற்ற தந்தை எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கவந்துள்ளார். இப்போது எல்லைக்குட் பட்ட ஆஸ்தி முடிகிறது.

அனைத்து மனிதர்களும் 5 விகாரங்கள் எனும் இராவணனின் சிறையில் இருக்கிறார்கள், என்று பாபா புரிய வைத்திருக்கிறார். அனைவரும் துக்கத்தைத் தான் அடைகிறார்கள். காய்ந்த ரொட்டி கிடைக்கிறது. பாபா வந்து அனைவரையும் இராவணனின் சிறையிலிருந்து விடுவித்து எப்போதும் சுகமுடைய வர்களாக மாற்றுகின்றார். பாபாவைத் தவிர வேறு யாரும் மனிதனை தேவதையாக மாற்ற முடியாது. நீங்கள் இங்கே மனிதனிலிருந்து தேவதையாக மாறுவதற்கு அமர்ந்திருக் கின்றீர்கள். இப்போது கலியுகமாகும். நிறைய தர்மங்களாகி விட்டன. குழந்தைகளாகிய உங்களுக்கு படைப்பவர் மற்றும் படைப்பினுடைய அறிமுகத்தை பாபா அவரே அமர்ந்து கூறு கின்றார். நீங்கள் ஈஸ்வரன், பரமாத்மா, என்று மட்டும் தான் சொன்னீர்கள். அவர் தந்தையாகவும் இருக்கின்றார், ஆசிரியராகவும் இருக்கின்றார், குருவாகவும் இருக்கின்றார், என்பது உங்களுக்குத் தெரியாது. அவரை சத்குரு என்று சொல்லப்படுகிறது. அகாலமூர்த்தி (இறப்பற்றவர்) என்று சொல்லப்படுகிறது. உங்களை ஆத்மா மற்றும் ஜீவன், என்று சொல்லப்படுகிறது. அந்த அகால மூர்த்தி இந்த சரீரம் (பிரம்மாவின் சரீரத்தில்) எனும் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கின்றார். அவர் பிறவி எடுப்பதில்லை. எனவே அந்த அகாலமூர்த்தி பாபா குழந்தைகளுக்குப் புரிய வைக்கின்றார் -- எனக்கென்று ரதம் கிடையாது, நான் குழந்தைகளாகிய உங்களை எப்படி தூய்மை யாக்குவேன்! எனக்கு ரதம் வேண்டும் அல்லவா. அகாலமூர்த்திக்கும் சிம்மாசனம் வேண்டும். அழிவற்ற சிம்மாசனம் மனிதர்களுக்கு இருக்கிறது, வேறு யாருக்கும் கிடையாது. உங்கள் ஒவ்வொரு வருக்கும் சிம்மாசனம் வேண்டும். அழிவற்ற மூர்த்தியான ஆத்மா இங்கே வீற்றிருக்கிறது. அவர் அனைவருக்கும் தந்தையாக இருக்கின்றார், அவரை மகாகாலன் என்று சொல்லப்படுகிறது, அவர் மறுபிறவியில் வருவதில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் மறுபிறவியில் வருகின்றீர்கள். நான் கல்பத்தின் சங்கமயுகத்தில் தான் வருகின்றேன். பக்தியை இரவு என்றும், ஞானத்தை பகல், என்றும் சொல்லப்படுகிறது. இதை நன்றாக நினைவு செய்யுங்கள். முக்கியமானது இரண்டு விஷயங்களாகும்-- அல்ஃப் மற்றும் பே, அதாவது தந்தை மற்றும் ஆஸ்தியாகும். பாபா வந்து இராஜ்யத்தைக் கொடுக்கின்றார் மேலும் இராஜ்யத்திற்காக கற்பிக்கின்றார். ஆகையினால் இதை பாடசாலை என்று சொல்லப்படுகிறது. பகவானுடைய மகாவாக்கியம், பகவான் நிராகாரமானவராக இருக்கின்றார். அவருக்கும் கூட நடிக்க பாகம் இருக்க வேண்டும். அவர் உயர்ந்ததிலும் உயர்ந்த பகவான். அவரை அனைவரும் நினைவு செய்கிறார்கள். பக்திமார்க்கத்தில் நினைவு செய்யாத மனிதர்கள் இருக்க மாட்டார்கள், என்று பாபா கூறுகின்றார். ஹே, பகவான்! ஹே விடுவிப்பவரே, ஓ! இறை தந்தையே என்று அனைவரும் முழுமனதோடு அழைக்கிறார்கள், ஏனென்றால் அவர் அனைத்து ஆத்மாக்களுக்கும் தந்தையாக இருக்கின்றார், கண்டிப்பாக எல்லையற்ற சுகத்தைத் தான் கொடுப்பார். எல்லைகுட்பட்ட தந்தை எல்லைக்குட்பட்ட சுகத்தைக் கொடுக்கின்றார். யாருக்கும் தெரிய வில்லை. இப்போது பாபா வந்திருக்கின்றார், கூறுகின்றார் -- குழந்தைகளே, மற்ற தொடர்புகளைத் துண்டித்து விட்டு தந்தையாகிய என் ஒருவனை நினைவு செய்யுங்கள். தேவி-தேவதைகளாகிய நீங்கள் புதிய உலகத்தில் இருக்கின்றீர்கள், என்பதையும் பாபா கூறியிருக் கின்றார். அங்கே அளவற்ற சுகம் இருக்கிறது. அந்த சுகத்தை அளவிடமுடியாது. புதிய வீட்டில் எப்போதும் சுகம் இருக்கிறது, பழையதில் துக்கம் இருக்கிறது. ஆகையினால் தான் பாபா குழந்தைகளுக்காக புதிய வீட்டை உருவாக்குகின்றார். குழந்தைகளின் புத்தியின் தொடர்பு புதிய வீட்டிற்குச் சென்று விடுகிறது. இது (இங்குள்ளது) எல்லைக்குட்பட்ட விஷயமாகும். இப்போது எல்லையற்ற தந்தை புதிய உலகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றார். பழைய உலகத்தில் என்னவெல்லாம் பார்க்கின்றீர்களோ, அவை சுடுகாடாக ஆகப்போகிறது, இப்போது சொர்க்கம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. நீங்கள் சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள். கலியுகத்தின் பக்கமும் பார்க்கலாம், சத்யுகத்தின் பக்கமும் பார்க்கலாம். நீங்கள் சங்கமயுகத்தில் சாட்சியாக இருந்து பார்க்கின்றீர்கள். கண்காட்சியில் அல்லது அருங்காட்சியகத்தில் வருகிறார்கள் என்றால் அங்கேயும் சங்கமத்தில் நிற்க வைத்து விடுங்கள். இந்தப்பக்கம் கலியுகம், அந்தப்பக்கம் சத்யுகம். நாம் இடையில் இருக்கின்றோம். பாபா புதிய உலகத்தை ஸ்தாபனை செய்கின்றார். அங்கே மிகவும் குறைந்த மனிதர்களே இருக்கிறார்கள், வேறு எந்த தர்மத்தைச் சேர்ந்தவர்களும் வருவதில்லை. நீங்கள் மட்டுமே முதல்-முதலில் வருகின்றீர்கள். இப்போது நீங்கள் சொர்க்கத் திற்கு செல்ல முயற்சி செய்து கொண்டிருக்கின்றீர்கள். தூய்மையாவதற்காகத் தான் என்னை அழைத்தீர்கள், ஹே பாபா, எங்களை தூய்மையாக்கி தூய்மையான உலகத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். சாந்திதாமத்திற்கு அழைத்துச் செல்லுங்கள், என்று சொல்லவில்லை. பரந்தாமம் இனிமையான வீடு என்று சொல்லப்படுகிறது. இப்போது நாம் வீட்டிற்குச் செல்ல வேண்டும், அதனை முக்திதாமம் என்று சொல்லப்படுகிறது, அதற்காகத் தான் சன்னியாசிகள் போன்றோர் அதற்கான படிப்பைக் கொடுக்கின்றார்கள். அவர்கள் சுகதாமத்தின் ஞானம் கொடுக்க முடியாது. அவர்கள் விடுதலை மார்க்கத்தைச் சேர்ந்தவர்களாவர். எந்தெந்த தர்மம் எவ்வெப்போது வருகிறது, என்று குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கப்பட்டுள்ளது. மனித சிருஷ்டி எனும் மரத்தில் முதல்-முதல் அடித்தளம் உங்களுடைய தாகும். விதையை விருக்ஷபதி என்று சொல்லப்படுகிறது. பாபா கூறுகின்றார், விருக்ஷபதியாகிய நான் மேலே இருக்கின்றேன். எப்போது மரம் ஒரேயடியாக உளுத்துப்போய்விடுகிறதோ, அப்போது நான் தேவதா தர்மத்தை ஸ்தாபனை செய்ய வருகின்றேன். ஆலமரம் மிகவும் அதிசயமான மரமாகும். ஆதாரம் இல்லாமல் மற்ற மரம் முழுவதும் நிற்கிறது. இந்த எல்லையற்ற மரத்தில் கூட ஆதி சனாதன தேவி- தேவதா தர்மம் இல்லை. மற்ற அனைத்து தர்மங்களும் நிற்கின்றன.

நீங்கள் மூலவதனவாசிகளாக இருந்தீர்கள். இங்கே நடிப்பை நடிக்க வந்துள்ளீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் முழு சக்கரமும் நடிப்பை நடிக்கக் கூடியவர்கள். ஆகையினால் அதிகபட்சம் 84 பிறவிகள், குறைந்த பட்சம் ஒரு பிறவியாகும். மனிதர்கள் 84 லட்சம் பிறவிகள், என்று சொல்லி விட்டார்கள். அது கூட யாருக்கு இருக்கும் என்பதை கூட புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் 84 பிறவிகள் எடுக்கின்றீர்கள், என்று பாபா வந்து குழந்தைகளாகிய உங்களுக்குப் புரிய வைக்கின்றார். முதல்-முதலில் நீங்கள் என்னிடமிருந்து காணாமல் போய் விடுகிறீர்கள். சத்யுக தேவதைகள் தான் முதலில் இருக்கிறார்கள். அந்த ஆத்மாக்கள் எப்பொழுது இங்கே நடிப்பை நடிக்கிறார்களோ, அப்பொழுது மற்ற ஆத்மாக்கள் எங்கே சென்று விடுகின்றன? இதைக் கூட நீங்கள் தெரிந்துள்ளீர்கள் -- மற்ற அனைத்து ஆத்மாக்களும் சாந்தி தாமத்தில் இருக்கிறார்கள். எனவே சாந்திதாமம் தனியானது அல்லவா? மற்றபடி உலகம் இது தான் ஆகும். நடிப்பு இங்கே நடிக்கிறார்கள். புதிய உலகத்தில் சுகத்தின் நடிப்பு, பழைய உலகத்தில் துக்கத்தின் நடிப்பு நடிக்க வேண்டியுள்ளது. இது சுகம் மற்றும் துக்கத்தின் விளையாட்டாகும். அது இராம இராஜ்யமாகும். சிருஷ்டி சக்கரம் எவ்வாறு சுற்றுகிறது என்பதை உலகத்தில் எந்த மனிதனும் தெரிந்திருக்க வில்லை. படைப்பவரைப் பற்றியும் தெரிந்திருக்கவில்லை, படைப்பினுடைய முதல், இடை, கடைசியைப் பற்றியும் தெரிந்திருக்கவில்லை. ஒரு பாபாவைத் தான் ஞானக்கடல் என்று சொல்லப்படுகிறது. படைப்பவர் மற்றும் படைப்பினுடைய முதல், இடை, கடைசியின் ஞானம் எந்த சாஸ்திரத்திலும் இல்லை. நான் உங்களுக்குக் கூறுகின்றேன். பிறகு இது மறைந்து விடுகிறது. சத்யுகத்தில் இது இருப்பதில்லை. பாரதத்தின் பழமையான இராஜயோகம் என்று தான் பாடப்பட்டிருக்கிறது. பாட்டில் கூட இராஜயோகத்தின் பெயர் வருகிறது. பாபா உங்களுக்கு இராஜயோகத்தை கற்றுக் கொடுத்து இராஜ்யத்தின் ஆஸ்தியை கொடுக்கின்றார். மற்றபடி படைப்பிடமிருந்து ஆஸ்தி கிடைக்க முடியாது. ஆஸ்தி படைப்பவர் தந்தையிடமிருந்து தான் கிடைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் படைப்பவன், குழந்தைகளைப் படைக்கின்றான். அவன் எல்லைக்குட்பட்ட பிரம்மா, இவர் எல்லையற்ற பிரம்மா ஆவார். அவர் நிராகார ஆத்மாக்களின் தந்தை, அவர் லௌகீக தந்தையாவார். பிறகு இவர் பிரஜாபிதா ஆவார். பிரஜாபிதா எப்போது இருக்க வேண்டும். சத்யுகத்திலா? இல்லை. புருஷோத்தம சங்கமயுகத்தில் இருக்க வேண்டும். சத்யுகம் எப்போது வருகிறது, என்பது கூட மனிதர்களுக்குத் தெரியாது. அவர்கள் சத்யுகம், கலியுகம் போன்றவற்றை இலட்சக் கணக்கான ஆண்டுகளாக்கி விட்டார்கள். ஒரு யுகம் 1250 ஆண்டுகள், என்று பாபா புரிய வைக்கின்றார். 84 பிறவிகளின் கணக்கு கூட வேண்டும் அல்லவா. நாம் எப்படி இறங்குகின்றோம், என்று ஏணிப்படியின் கணக்கு கூட வேண்டுமல்லவா?. முதல்-முதலில் அடித்தளத்தில் தேவி-தேவதைகள் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பிறகு இஸ்லாமியர்களும், பௌத்தர்களும் வருகிறார்கள். பாபா மரத்தின் இரகசியத்தையும் புரிய வைத்திருக்கின்றார். பாபாவைத் தவிற வேறு யாரும் கற்றுத் தர முடியாது. இந்த படம் போன்றவற்றை எவ்வாறு உருவாக்கினீர்கள், என்று உங்களை கேட்பார்கள்? யார் கற்றுக் கொடுத்தது? பாபா எங்களுக்கு காட்சியில் காட்டினார், பிறகு நாங்கள் இங்கே உருவாக்குகின்றோம் என்று சொல்லுங்கள். பிறகு பாபா தான் இந்த ரதத்தில் (பிரம்மாவின் சரீரத்தில்) வந்து இப்படி-இப்படியெல்லாம் செய்யுங்கள், என்று சரி செய்கின்றார். அவரே சரி செய்கின்றார்.

கிருஷ்ணரை ஷ்யாம்-சுந்தர் என்று சொல்கிறார்கள், ஆனால் ஏன் அப்படி சொல்லப்படுகிறது? என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள முடியவில்லை. இவர் வைகுண்டத்தின் எஜமானராக இருந்தார், அப்போது தூய்மையாக இருந்தார், பிறகு கிராமத்துச் சிறுவனாக மாறினார், ஆகை யினால் அவரையே ஷ்யாம்-சுந்தர் என்று சொல்கிறார்கள். இவர் தான் முதலில் வருகின்றார், அவர் தான் இப்படி ஆகின்றார் (தத்தத்வம்). இந்த லஷ்மி-நாராயணனுடைய இராஜ்யம் நடக்கிறது. ஆதி சனாதன தேவி-தேவதா தர்மத்தை யார் ஸ்தாபனை செய்தது? இது கூட யாருக்கும் தெரியவில்லை. பாரதம் என்பதையும் மறந்து இந்துஸ்தானத்தில் வசிப்பவர்கள் இந்துக்கள், என்று சொல்லி விட்டார்கள். நான் பாரதத்தில் தான் வருகின்றேன். பாரதத்தில் தேவதைகளின் இராஜ்யம் இருந்தது, அது இப்போது மறைந்து விட்டது. நான் மீண்டும் ஸ்தாபனை செய்ய வருகின்றேன். முதல்-முதலில் ஆதி சனாதன தேவி-தேவதா தர்மம் தான் இருக்கிறது. இந்த மரம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. புதிய-புதிய இலைகள், மடாலயங்கள் பின்னால் வரும்போது அழகாகி விடுகிறது. பிறகு கடைசியில் மரம் உளுத்துப் போன நிலையை அடையும் போது பிறகு நான் வருகின்றேன். யதா யதாகி......... ஆத்மா தன்னையும் தெரிந்திருக்கவில்லை, பாபாவையும் தெரிந்திருக்கவில்லை. தன்னையும் திட்டிக் கொள்கிறது, பாபா மற்றும் தேவதைகளையும் கூட திட்டிக்கொண்டிருக்கிறது. தமோபிரதானமாக, எதுவும் புரியாததாக ஆகும் போது நான் வருகின்றேன். பழைய உலகத்தில் தான் வர வேண்டியுள்ளது. நீங்கள் மனிதர்களுக்கு உயிர்தானம் கொடுக்கின்றீர்கள் அதாவது மனிதனிலிருந்து தேவதையாக மாற்றுகின்றீர்கள். அனைத்து துக்கங் களிலிருந்தும் விலக்கி விடுகிறீர்கள், அதுவும் அரைக்கல்பத்திற்காகும். வந்தே மாதரம், என்று புகழ் கூட இருக்கிறது அல்லவா. எந்த தாய்மார்கள், யாரை வந்தனம் செய்கிறார்கள்? தாய்மார்களாகிய நீங்கள் முழு சிருஷ்டியையும் சொர்க்கமாக மாற்றுகின்றீர்கள். ஆண்களும் இருக்கிறார்கள், ஆனால் பெரும்பாலும் தாய்மார்கள், ஆகையினால் பாபா தாய்மார்களை மகிமை பாடுகின்றார். பாபா வந்து உங்களை அந்தளவிற்கு மகிமைக்கு தகுதியானவர்களாக மாற்றுகின்றார். நல்லது!

"இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு-நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்"

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. அளவற்ற சுகங்கள் நிறைந்த உலகத்திற்கு செல்வதற்காக சங்கமத்தில் நிற்க வேண்டும். சாட்சியாக இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டே புத்தியின் தொடர்பை புதிய உலகத்தில் ஈடுபடுத்த வேண்டும். இப்போது நாம் வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருக் கின்றோம், என்பது புத்தியில் இருக்க வேண்டும்.

2. அனைவருக்கும் உயிர் தானம் கொடுக்க வேண்டும், மனிதனிலிருந்து தேவதையாக மாற்றும் சேவை செய்ய வேண்டும். எல்லையற்ற தந்தையிடம் படித்து மற்றவர்களுக்கு படிப்பிக்க வேண்டும். தெய்வீக குணத்தை தாரணை செய்ய வேண்டும், மற்றவர்களையும் செய்விக்க வேண்டும்.

வரதானம்:
சதா சிரேஷ்டமான நேரத்தின் அனுசாரம் சிரேஷ்டமான கர்மம் செய்துகொண்டே ஆஹா! ஆஹா! என்ற பாடல் பாடக்கூடிய பாக்கியவான் ஆத்மா ஆகுக.

இந்த சிரேஷ்டமான நேரத்தில் சதா சிரேஷ்டமான கர்மம் செய்து கொண்டே ஆஹா! ஆஹா என்ற பாடலைப் பாடிக்கொண்டே இருங்கள். ஆஹா! எனது சிரேஷ்டமான கர்மா மற்றும் ஆஹா! சிரேஷ்டமான கர்மம் செய்ய கற்றுக் கொடுக்கும் பாபா. எனவே, சதா ஆஹா! ஆஹா! என்ற பாடல் பாடுங்கள். ஒருபோதும் தவறுதலாகக் கூட துக்கத்தின் காட்சியைப் பார்த்ததும் அய்யோ என்ற வார்த்தை வெளிப்படக் கூடாது. ஆஹா! நாடகம் ஆஹா! மற்றும் ஆஹா! பாபா ஆஹா!. கனவிலும் கூட வராத பாக்கியமானது வீட்டில் இருந்தவண்ணமே கிடைத்துவிட்டது. இதே பாக்கியத்தின் போதையில் இருங்கள்.

சுலோகன்:
மனம், புத்தியை சக்திசாலி ஆக்கிவிட்டீர்கள் என்றால், எந்தவொரு பிரச்சனையிலும் ஆடாத அசையாதவராக இருப்பீர்கள்.