31-05-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! உயிருள்ளவரையும்
கற்க வேண்டும் மற்றும் கற்பிக்க வேண்டும். குஷி மற்றும்
பதவிக்கான ஆதாரம் படிப்பு ஆகும்.
கேள்வி:
சேவையில் வெற்றி பேற வேண்டும்
என்றால் எந்த ஒரு முக்கிய குணம் வேண்டும்?
பதில்:
சகிப்புத் தன்மையின் குணம்.
ஒவ்வொரு விஷயத்திலும் சகிப்பு தன்மை உடையவராகி தங்களுக்குள்
குழுவை அமைத்துக் கொண்டு சேவை செய்யுங்கள். சொற்பொழிவாகிய
நிகழ்ச்சி களை ஏற்பாடு செய்து வாருங்கள். மனிதர்களை
உறக்கத்திலிருந்து எழுப்புவதற்காக அநேக ஏற்பாடுகள் வெளிவரும்.
யார் அதிர்ஷ்டசாலி ஆகக் கூடியவர்களோ அவர்கள் படிப்பைக் கூட
ஆர்வத்துடன் படிப்பார்கள்.
பாடல்:
நாம் அந்த வழிகளில் நடக்க
வேண்டும்.. .. .. ..
ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் என்ன சிந்தனை செய்து கொண்டு மதுபனுக்கு
வருகிறீர்கள்? யாரிடம்? (பாப்தாதாவிடம்) இது புதிய விஷயமாகும்.
பாப்தாதாவிடம் படிக்கச் செல்கிறோம். அதுவும் பாப்தாதா இருவரும்
சேர்ந்து இருக்கிறார்கள். அதிசயம் ஆகும் அல்லவா? நீங்கள் (வண்டர்ஃபுல்)
அதிசயமான தந்தையின் குழந்தைகள் ஆவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள்
கூட படைப்பவர் மற்றும் படைப்பின் முதல் இடை கடையை அறியாமால்
இருந்தீர்கள். இப்பொழுது அந்த படைப்பவர் மற்றும் படைப்பை
நீங்கள் வரிசைக்கிரமமாக முயற்சிக் கேற்ப அறிந்துள்ளீர்கள்.
எந்த அளவு அறிந்து உள்ளீர்களோ மற்றும் எந்த அளவு யாருக்காவது
புரிய வைக்கிறீர்களோ அந்த அளவு குஷி மற்றும் வருங்கால பதவி
கிடைக்கும். அடிப்படை விஷயமே இப்பொழுது நாம் படைப்பவர் மற்றும்
படைப்பின் முதல் இடை கடையை அறிந்துள்ளோம். பிராமண பிராமணி
களாகிய நாம் மட்டுமே அறிந்துள்ளோம். உயிருள்ளவரையும் நாம் பி.கே.
ஆவோம் மற்றும் சிவபாபாவிடமிருந்து முழு உலகத்தின் ஆஸ்தியைப்
பெற்று கொண்டிருக்கிறோம் என்று தனக்குத் தானே நிச்சயம் செய்து
கொள்ள வேண்டும். முழுமையாக படிக்கிறார்களோ அல்லது குறைவாகப்
படிக்கிறார்களோ அந்த விஷயம் தனி. பிறகும் அறிந்துதானே
இருக்கிறீர்கள் இல்லையா? நாம் அவருக்குக் குழந்தைகள் ஆவோம்.
பிறகு படிப்பது அல்லது படிக்காமல் இருப்பது என்ற கேள்வி
எழுகிறது. அதற்கேற்ப தான் பதவி கிடைக்கும். மடியில் வந்ததுமே
நாம் இராஜ்யத்திற்கு உரிமையாளர் ஆகி விடுவோம் என்ற நிச்சயமோ
ஆகும் அல்லவா? பிறகு படிப்பில் கூட இரவு பகலுக்கான வித்தியாசம்
ஏற்பட்டு விடுகிறது. ஒரு சிலரோ நல்ல முறையில் கற்கிறார்கள்
மற்றும் படிப்பிக்கிறார்கள். அவர்களுக்கு வேறு எதுவும் தோன்றவே
தோன்றாது. கற்க வேண்டும் மற்றும் கற்பிக்க வேண்டும் அவ்வளவே!
இது கடைசிவரையும் நடக்கும் (ஸ்டூடண்ட் லைஃப்) மாணவ வாழ்க்கையில்
ஒன்றும் கடைசி வரை படிப்பு இருப்பதில்லை. குறிப்பிட்ட கால அளவு
இருக்கும். நீங்களோ உயிருள்ளவரையும் கற்க வேண்டும் மற்றும்
கற்பிக்க வேண்டும். எத்தனை பேருக்கு படைப்பவரான தந்தையின்
அறிமுகம் கொடுக்கிறோம் என்று நம்மையே கேட்க வேண்டும். மனிதர்களோ
மனிதர்கள் தான். பார்க்கும் பொழுது எந்த ஒரு வித்தியாசமும்
இருப்பது இல்லை. சரீரத்தில் வித்தியாசம் இல்லை. இது உள்ளுக்குள்
புத்தியில் படிப்பு ஒலித்துக் கொண்டே இருக்கும். யார் எந்த அளவு
படிக்கிறார்களோ அந்த அளவு அவருக்கு குஷியும் இருக்கும். நாம்
புது உலகிற்கு அதிபதி ஆவோம் என்பது உள்ளுக்குள் உணர்வு
இருக்கும். இப்பொழுது நாம் சொர்க்க வாசலுக்குச் செல்கிறோம்.
நமக்குள் எவ்வளவு வித்தியாசம் வந்துள்ளது என்று தங்களது
உள்ளத்தை எப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருங்கள். தந்தை நம்மை
தன்னுடையவராக ஆக்கி உள்ளார். எப்படி இருந்த நாம் எப்படி ஆகிறோம்?
எல்லாமே படிப்பைப் பொருத்ததாகும். படிப்பினால் மனிதர்கள்
எவ்வளவு உயர்ந்தவர்களாக ஆகிறார்கள். அதுவோ எல்லாமே குறுகிய கால
ஒரு கணத்திற்கான பதவி ஆகும். அதில் எதுவுமே இல்லை. எதற்குமே
உதவாதது போல. இலட்சணங்கள் எதுவுமே இல்லாமல் இருந்தது. இப்பொழுது
இந்தப் படிப்பினால் எவ்வளவு உயர்ந்தவர் ஆகிறீர்கள். முழு கவனம்
(அட்டென்ஷன்) படிப்பின் மீது வைக்க வேண்டும். யாருடைய
அதிர்ஷ்டத்தில் இருக்கிறதோ அவர்களுடைய மனம் படிப்பில்
ஈடுபடுகிறது. மற்றவர் களையும் கல்விக்காக பல்வேறு வகைகளில்
புருஷார்த்தம் (முயற்சி) செய்வித்துக் கொண்டே இருக்கிறார்.
அவர்களுக்கு கற்பித்து வைகுண்டத்திற்கு அதிபதி ஆக்கி விட
வேண்டும் என்று மனம் விரும்புகிறது. மனிதர்களை
உறக்கத்திலிருந்து எழுப்புவதற்காக எவ்வளவு தலை யிலடித்துக்
கொண்டே இருக்கிறார். மேலும் அடித்துக் கொண்டே இருப்பார்கள்.
இந்தக் கண்காட்சி ஆகியவையோ ஒன்றும் இல்லை. இன்னும் போகப்போக,
புரிய வைப்பதற்காக வேறு ஏற்பாடு களும் வெளி வரும். இப்பொழுது
தந்தை பாவனமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார். எனவே தந்தையின்
அறிவுரை மீது (அட்டென்ஷன்) கவனம் வைக்க வேண்டும். ஒவ்வொரு
விஷயத் திலும் சகிப்புத் தன்மை உடையவராக ஆகவும் வேண்டும்.
தங்களுக்குள் ஒன்று சேர்ந்து குழு அமைத்து சொற்பொழிவு (புரோகிராம்)
நிகழ்ச்சிகள் வைக்க வேண்டும். ஒரு அல்ஃப் தந்தை பற்றி நீங்கள்
2 மணி நேரம் சொற்பொழிவு நிகழ்த்தலாம். ஒரு அல்ஃப் - தந்தை பற்றி
கூட நாம் மிகவும் நன்றாகப் புரிய வைக்க முடியும். உயர்ந்ததிலும்
உயர்ந்த பகவான் யார்? ஒரு அல்ஃப் தந்தையை நினைவு செய்வதால் குஷி
இருக்கும் என்பதையும் நீங்கள் அறிந்துள்ளீர்கள். குழந்தைகளுக்கு
நினைவு யாத்திரையில் (அட்டென்ஷன்) கவனம் குறைவாக உள்ளது. (அல்ஃப்)
தந்தையை நினைவு செய்வது இல்லை என்றால் அவசியம் நஷ்டம்
ஏற்படுகிறது. எல்லாமே நினைவைப் பொருத்ததாகும். நினைவு செய்வதால்
ஒரேயடியாக ஹெவென் சொர்க்கத்திற்குச் சென்று விடுகிறார்கள்.
நினைவை மறப்பதாலேயே விழுந்து விடுகிறார்கள். இந்த விஷயங்களை
வேறு யாரும் புரிந்து கொள்ள முடியாது. சிவபாபாவையோ அறியாமலே
இருக்கிறார்கள். ஒருவர் எவ்வளவு தான் ஆடம்பரமாக பூஜை செய்தாலும்
சரி, நினைவு செய்தாலும் சரி, பிறகும் புரியாமல் உள்ளார்கள்.
உங்களுக்கு தந்தையிடமிருந்து மிகப் பெரிய சொத்து கிடைக்கிறது.
பக்தி மார்க்கத்தில் கிருஷ்ணருடைய தரிசனம் ஆக வேண்டும்
என்பதற்காக எவ்வளவு தலையிலடித்துக் கொள்கிறார் கள். நல்லது.
தரிசனம் ஆகியது பிறகு என்ன? நன்மையோ எதுவும் ஆகவில்லை. உலகம்
பாருங்கள் எந்த விஷயங்களில் நடந்து கொண்டிருக் கிறது! நீங்கள்
கரும்பு இரசம் பருகிக் கொண்டிருப்பது போல உள்ளீர்கள். மற்ற
எல்லோரும் பக்தி மார்க்கத்தின் தோலை (சக்கை) உறிஞ்சியபடியே கீழே
இறங்கிக் கொண்டே செல்கிறார்கள். இப்பொழுது நீங்கள் கரும்புச்
சாறைக் குடித்து வயிறு நிரம்ப அரைக் கல்பத்திற்கு சுகத்தை
அடைகிறீர்கள். இப்பொழுது தந்தை எவ்வளவு அன்புடன் (புருஷார்த்தம்)
முயற்சி செய்விக்கிறார். ஆனால் அதிர்ஷ்டத்தில் இல்லை என்றால் (அட்டென்ஷன்)
கவனம் கொடுப்பதில்லை. சுயம் தாங்களும் கவனம் (அட்டென்ஷன்)
கொடுப்ப தில்லை. மற்றவர்களுக்கும் கொடுக்க விடுவதில்லை. சுயம்
தாங்களும் அமிருதம் பருகுவது இல்லை, அமிருதம் பருக விடுவதும்
இல்லை. நிறைய பேருடைய நடவடிக்கைகள் இவ்வாறுதான் உள்ளன. ஒருவேளை
முழுமையாக படிப்பதில்லை, கருணையுள்ளம் உடையவர் ஆவதில்லை தான்.
ஒருவருக்கும் நன்மை செய்வதில்லை என்றால் அவர்கள் என்ன பதவியை
அடைவார்கள்? கற்பவர்கள் மற்றும் கற்பிப்பவர்கள் எவ்வளவு
உயர்ந்த பதவியை அடைகிறார்கள்! படிக்க வில்லை என்றால் என்ன பதவி
கிடைக்கும் என்பது கூட இனி முன்னால் போகப் போக (ரிஸல்ட்)
முடிவுகள் பற்றி தெரிய வந்து விடும். பிறகு நினைப்பார்கள் -
உண்மையில் பாபா நமக்கு எவ்வளவு (வார்னிங்) எச்சரிக்கை கொடுத்து
கொண்டிருந்தார். இங்கு அமர்ந்துள்ளீர்கள் - நாம் எல்லையில்லாத
தந்தையிடம் அமர்ந்துள்ளோம் என்பது புத்தியில் இருக்க வேண்டும்.
அவர் மேலிருந்து வந்து நமக்கு இந்த சரீரத்தின் மூலமாக முந்தைய
கல்பத்தைப் போலவே கற்பிக் கிறார். இப்பொழுது மீண்டும் நாம்
தந்தைக்கு முன்னால் அமர்ந்துள்ளோம். அவருடன் கூடவே நாம் செல்ல
வேண்டி உள்ளது. விட்டு விட்டு போகப் போவதில்லை. தந்தை நம்மை
கூடவே அழைத்துச் செல்வார். இந்த பழைய உலகம் அழிந்து போய் விடும்.
இந்த விஷயங்கள் வேறு யாருக்கும் தெரியாது. இனி போகப் போக
தெரிந்து கொண்டு விடுவார்கள். உண்மையில் பழைய உலகம் முடியப்
போகிறது. எதுவுமே கிடைக்கப் போவதில்லை. இந்த விஷயங்கள் வேறு
யாருக்குமே தெரியாது. டூ லேட் (மிகவுமே தாமதம்) ஆகி விடும்.
கணக்கு வழக்கை முடித்து விட்டு அனைவரும் திரும்பிச் செல்ல
வேண்டும். இதுவும் (ஸென்ஸிபிள்) அறிவுள்ள குழந்தைகள் மட்டுமே
அறிந்திருப்பார்கள். யார் சேவையில் ஆஜராக இருக்கிறார்களோ
அவர்களே குழந்தைகள் ஆவார்கள். தாய் தந்தையரைப் பின்
பற்றுகிறார்கள். எப்படி தந்தை ஆன்மீக சேவை செய்கிறாரோ அவ்வாறே
நீங்கள் செய்ய வேண்டும். ஒரு சில குழந்தைகளுக்கு இந்த ஈடுபாடு
அமைந்து இருக்கும். அவர்களுக்கு பாபா மகிமை செய்கிறார். அவர்கள்
போல ஆக வேண்டும். எல்லோ ருக்குமே (டீச்சர்) ஆசிரியர்
கிடைக்கிறார்கள். இங்கும் எல்லோரும் வருகிறார்கள். இங்கோ பெரிய
டீச்சர் அமர்ந்துள்ளார். தந்தையை நினைவே செய்யவில்லை என்றால்
எப்படி திருந்துவார்கள். ஞானமோ மிகவும் சுலபமாகும். 84
பிறவிகளின் சக்கரம் எவ்வளவு எளிதானது! ஆனால் எவ்வளவு
தலையிலடித்துக் கொள்ள வேண்டி உள்ளது!. தந்தை எவ்வளவு சுலபமான
விஷயத்தைப் புரிய வைக்கிறார்! தந்தை மற்றும் 84ன் சக்கரத்தை
நினைவு செய்தீர்கள் என்றால் படகு கரையேறி விடும். இந்த செய்தியை
அனைவருக்கும் அளிக்க வேண்டும். நான் எந்த அளவிற்கு செய்தியை
வழங்கும் தூதராகி உள்ளேன் என்று தங்களது மனதையே கேளுங்கள்.
எந்த அளவிற்கு அநேகரை எழுப்புவீர்களோ அந்த அளவிற்கு பரிசு
கிடைக்கும். ஒரு வேளை நான் எழுப்புவதில்லை என்றால் அவசியம்
எங்கோ உறங்கி இருக்கிறேன். பிறகு எனக்கு அந்த அளவிற்கு உயர்ந்த
பதவியோ கிடைக்காது. மாலையில் உங்களுடைய முழு நாளின் கணக்கை
எடுத்துப் பாருங்கள் என்று பாபா தினமும் கூறுகிறார். சேவையில்
கூட இருக்க வேண்டும். அடிப்படை விஷயமே தந்தையின் அறிமுகத்தை
அளிப்பது. தந்தை தான் பாரதத்தை சொர்க்கமாக அமைத்திருந்தார்.
இப்பொழுது நரகமாக உள்ளது. மீண்டும் சொர்க்கமாக ஆகும். சக்கரமோ
சுற்ற வேண்டி உள்ளது. தமோபிர தான நிலையிலிருந்து சதோபிரதானமாக
ஆக வேண்டும். தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால் விகாரங்கள்
நீங்கிக் கொண்டே போகும். சத்யுகத்தில் மிகவும் குறைவாகவே
இருப்பார் கள். பிறகு இராவண இராஜ்யத்தில் எவ்வளவு விருத்தி
ஆகிறது.! சத்யுகத்தில் 9 இலட்சம் இருப்பார்கள். பிறகு மெல்ல
மெல்ல விருத்தி அடைவார்கள். யார் முதலில் தூய்மையாக
இருந்தார்களோ அவர்களே பிறகு (பதீதமாக) தூய்மையற்றவர்களாக
ஆகிறார்கள். சத்யுகத்தில் தேவதைகளினுடைய தூய்மையான இல்லற
மார்க்கம் இருந்தது. அவர்களே பிறகு (அபவித்திர) தூய்மையற்ற
இல்லறத்தார்களாக ஆகி விட்டுள்ளார்கள். நாடகப்படி இந்த சக்கரம்
சுற்றவே வேண்டி உள்ளது. இப்பொழுது மீண்டும் நீங்கள் தூய்மையாக
இல்லற மார்க்கத்தினராக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். தந்தை தான்
வந்து (பவித்திரமாக) தூய்மையாக ஆக்குகிறார். என்னை நினைவு
செய்தீர்கள் என்றால் விகர்மங்கள் விநாசம் ஆகும் (பாவங்கள்
நீங்கும்) என்று கூறுகிறார். நீங்கள் அரைக்கல்பம் தூய்மையாக
இருந்தீர்கள். பிறகு இராவண இராஜ்யத்தில் நீங்கள் பதீதமாக ஆகி
உள்ளீர்கள். இதுவும் நீங்கள் இப்பொழுது புரிந்துள்ளீர்கள். நாம்
கூட முற்றிலுமே (வர்த் நாட் எ பென்னி) ஒரு காசுக்கும்
உதவாதவர்களாக ஆகி இருந்தோம். இப்பொழுது எவ்வளவு ஞானம்
கிடைத்துள்ளது. அதன் மூலமாக எப்படி இருந்த நாம் எப்படி ஆகிறோம்.
மற்றபடி இப்பொழுது இருக்கும் இத்தனை தர்மங்களும் அழிந்து விடப்
போகிறது. மிருகங்கள் இறப்பது போல எல்லோரும் இறந்து விடுவார்கள்.
எப்படி பனி விழும் பொழுது எத்தனை மிருகங்கள், பட்சிகள் ஆகியவை
இறந்து விடுகின்றன. இயற்கை சேதங்கள் கூட வரும். இவை எல்லாமே
அழிந்து போய் விடும். இவர்கள் எல்லோரும் இறந்து விட்டது போலவே
தான். இந்தக் கண்களால் பார்க்கும் எதுவும் மீண்டும் இருக்காது.
புது உலகத்தில் முற்றிலுமே குறைவாக இருப்பார்கள். இந்த ஞானம்
உங்களுடைய புத்தியில் உள்ளது. ஞானக்கடலான தந்தை உங்களுக்கு
ஞானத்தின் ஆஸ்தியை அளித்துக் கொண்டிருக்கிறார். முழு உலகத்தில்
குப்பையே குப்பையாக உள்ளது என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள்
நாம் கூட குப்பையில் அழுக்காக ஆகி இருந்தோம். பாபா
குப்பையிலிருந்து வெளி யேற்றி இப்பொழுது எவ்வளவு அழகாக ஆக்கிக்
கொண்டிருக்கிறார்! நாம் இந்த சரீரத்தை விடுவோம். ஆத்மா
தூய்மையாக ஆகி விடும்.
தந்தை அனைவருக்கும் ஒரே மாதிரியாகத் தான் கல்வியைக்
கற்பிக்கிறார். ஆனால் அநேகருடைய புத்தி முற்றிலுமே ஜடமாக உள்ளது.
எதுவுமே புரிந்து கொள்ள முடியாமல் உள்ளார்கள். இதுவும்
நாடகத்தில் பொருந்தி உள்ளது. இவர்களுடைய அதிர்ஷ்டத்தில் இல்லை
என்றால் நான் கூட என்ன தான் செய்ய முடியும் என்று தந்தை
கூறுகிறார். நானோ அனைவருக்கும் ஒரே மாதிரி தான் கற்பிக்கிறேன்.
படிப்பவர்கள் வரிசைக்கிரமமாக உள்ளார்கள். ஒரு சிலர் நல்ல
முறையில் புரிந்து கொண்டு பிறகு புரிய வைக்கிறார்கள்.
மற்றவர்களுடைய வாழ்க்கையையும் வைரம் போல ஆக்குகிறார்கள். ஒரு
சிலர் அவ்வாறு ஆக்குவதே இல்லை. தலைகீழான அகங்காரம் எவ்வளவு
இருக்கிறது.! விஞ்ஞானிகளுக்கு விஞ்ஞானத்தின் கர்வம் எவ்வளவு
இருக்கிறது. வெகுதூரமாகச் சென்று ஆகாயத்தையும் கடலையும்
பார்க்க விரும்புகிறார் கள். இதில் எந்த ஒரு நன்மையுமே இல்லை
என்று தந்தை கூறுகிறார். வீணாக விஞ்ஞானத்தின் கர்வம்
கொண்டவர்கள் தங்கள் மூளையைக் கெடுத்து கொண்டிருக்கிறார்கள்.
மிக அதிக சம்பளம் அவர்களுக்குக் கிடைக்கிறது. எல்லாவற்றையும்
வீணடித்துக் கொண்டே இருக்கிறார்கள். அப்படி இன்றி தங்க துவாரகை
ஏதோ கீழிருந்து மேலே எழும்பி வரும் என்பதல்ல. இதுவோ நாடகத்தின்
சக்கரம் ஆகும். அது சுற்றிக் கொண்டே இருக்கிறது. பிறகு நாம்
நம்முடைய நேரம் வரும் பொழுது போய் நமது அரண்மனைகள் ஆகியவற்றை
புது உலகத்தில் அமைப்போம். என்ன, இப்படியே தான் மீண்டும்
வீடுகளை கட்டுவார்களா என்று ஒரு சிலர் ஆச்சரியப்படுகிறார்கள்!
கண்டிப்பாக, நீங்கள் இதே போல மீண்டும் தங்க மாளிகைகள்
கட்டுவீர்கள் என்று தந்தை காண்பிக்கிறார். அங்கோ நிறைய தங்கம்
இருக்கும். இப்போது கூட ஒரு சில இடங்களில் தங்க மலைகள் நிறைய
உள்ளன. ஆனால் தங்கத்தை எடுக்க முடிவதில்லை. புது உலகத்திலோ
தங்கத்தினுடைய சுரங்கங்கள் ஏராளமாக இருந்தன. அவை அழிந்து போய்
விட்டன. இப்பொழுது வைரத்தின் விலை கூட பாருங்கள் எவ்வளவு ஆகி
விட்டது. இன்றைக்கு இவ்வளவு விலை, நாளைக்கு கற்கள் போல ஆகி
விடும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவுமே அதிசயமான
விஷயங்களைக் கூறுகிறார். மேலும் சாட்சாத்காரம் கூட
செய்விக்கிறார். குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியில் இப்பொழுது
இது தான் இருக்க வேண்டும் - ஆத்மாக்களாகிய நாம் நமது வீட்டை
விட்டு விட்டு 5 ஆயிரம் வருடங்கள் ஆகி விட்டன. அந்த
வீட்டிற்குத் தான் முக்திதாமம் என்று கூறுகிறார்கள். பத்தி
மார்க்கத்தில் முக்திக்காக எவ்வளவு தலையிலடித்துக்
கொள்கிறார்கள்!. ஆனால் தந்தை யைத் தவிர வேறு யாரும் முக்தி
அளிக்க முடியாது, கூட அழைத்து செல்ல முடியாது என்பதை இப்பொழுது
நீங்கள் புரிந்துள்ளீர்கள். இப்பொழுது குழந்தைகளாகிய உங்களுடைய
புத்தியில் புதிய உலகம் உள்ளது. இந்தச் சக்கரம் சுற்ற வேண்டி
உள்ளது என்பதை அறிந்துள்ளீர்கள். நீங்கள் வேறு எந்த
விஷயங்களிலும் போக வேண்டியது இல்லை. தந்தையை நினைவு செய்ய
வேண்டும். அவ்வளவே. தந்தையை நினைவு செய்தீர்கள் என்றால்
விகர்மங்கள் விநாசம் ஆகும் என்பதையே அனைவருக்கும் கூறிக் கொண்டே
இருங்கள். தந்தை உங்களை சொர்க்கத்திற்கு அதிபதியாக ஆக்கி
இருந்தார் அல்லவா? நீங்கள் எனக்கு சிவஜெயந்தி கூட
கொண்டாடுகிறீர்கள். எவ்வளவு வருடங்கள் ஆகியது? 5 ஆயிரம்
வருடங்களின் விஷயமாகும். நீங்கள் சொர்க்கவாசியாக ஆகி
இருந்தீர்கள். பின் 84ன் சக்கரம் சுற்றி வந்துள்ளீர்கள்.
இதுவும் நாடகம் அமைக்கப்பட்டுள்ளது. நான் வந்து உங்களுக்கு
இந்த சிருஷ்டி சக்கரத்தைப் பற்றி புரிய வைக்கிறேன். இப்பொழுது
குழந்தைகளாகிய உங்களுக்கு மிகவும் நல்ல முறையில் நினைவிற்கு
வந்துள்ளது. நாம் எல்லோரையும் விட உயர்ந்த பாகம் ஏற்று
நடிப்பவர்கள் ஆவோம். நமது பாகம் பாபாவுடன் கூட உள்ளது. நாம்
பாபாவின் ஸ்ரீமத் படி பாபாவின் நினைவில் இருந்து மற்றவர்களையும்
தனக்குச் சமானமாக ஆக்குகிறோம். யார் முந்தைய கல்பத்தில்
இருந்தார்களோ அவர்களே ஆகி விடுவார் கள். சாட்சியாகி (பார்வையாளர்)
பார்த்துக் கொண்டே இருப்பார். மேலும் புருஷார்த்தம் (முயற்சி)
கூட செய்வித்து கொண்டே இருப்பார். எப்பொழுதும் ஊக்கத்துடன்
இருப்பதற்காக தினமும் தனிமையில் அமர்ந்து தனக்குத் தானே
உரையாடுங்கள். சிறிது காலம் இந்த (அசாந்தமான) அமைதியற்ற
உலகத்தில் இருப்போம். பிறகோ அசாந்தியின் பெயரே இருக்காது.
மனதிற்கு எப்படி அமைதி கிடைக்க முடியும் என்று யாரும் வாயால்
கூற முடியாது. அமைதிக்காகத் தான் செல் கிறார்கள். ஆனால்
அமைதியின் கடலோ ஒரு தந்தையே ஆவார். வேறு யாரிடமும் இந்தப்
பொருள் கிடையாது. அப்படியும் குழந்தைகளாகிய உங்களுடைய
புத்தியில் ஒலித்து கொண்டே இருக்க வேண்டும் - படைப்பவர் மற்றும்
படைப்பை அறிந்து கொள்வது - இது ஞானம் ஆகும். அது சாந்திக்காக.
அது சுகத்திற்காக. சுகம் ஏற்படுவது செல்வத்தினால். பனம் இல்லை
என்றால் மனிதன் பயனில்லாதவன் ஆவான். பணத்திற்காக மனிதர்கள்
எவ்வளவு பாவம் செய்கிறார்கள். தந்தை ஏராளமான செல்வம்
அளித்துள்ளார். சொர்க்கம் தங்கம் நிறைந்தது. நரகம் கற்கள்
நிறைந்தது. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு, தாய் தந்தை பாப்தாதாவின்
அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நேரத்தை ஒதுக்கி தனிமையில் தன்னிடம் தானே உரையாடி தன்னை
ஊக்கத்தில் எடுத்து வர வேண்டும். தனக்கு சமானமாக ஆக்கும்
சேவையுடன் கூடவே சாட்சியாகி (பார்வை யாளர்) ஒவ்வொருவருடைய
பாகத்தையும் பார்ப்பதற்கான அப்பியாசம் (பயிற்சி) செய்ய வேண்டும்.
2. தந்தையை நினைவு செய்து தன்னைத் தானே திருத்திக் கொள்ள
வேண்டும். நான் தூதர் ஆகி உள்ளேனா? எத்தனை பேரை தனக்கு சமானமாக
ஆக்குகிறேன் என்று நமது மனதையே கேட்க வேண்டும்.
வரதானம்:
உயர்ந்த முயற்சியின் மூலம் இறுதி முடிவில் (பைனல் ரிசல்ட்)
முதல் நம்பர் பெறக்கூடிய பறக்கும் பறவை ஆகுக.
பைனல் ரிசல்ட்டில் முதல் நம்பர் பெறுவதற்காக - 1. மனதினுடைய
அழிவற்ற வைராக்கியத்தின் மூலம் கடந்து போன விஷயங்கள்,
சம்ஸ்காரங்கள் என்ற விதையை எரித்து விடுங்கள். 2. அமிர்த
வேளையிலிருந்து இரவு வரை ஈஸ்வரிய நியமங்கள் மற்றும் மரியாதைகளை
சதா பின்பற்றக் கூடிய விரதம் எடுங்கள். 3. மனதின் மூலம்,
வார்த்தைகளின் மூலம், சம்மந்தம் மற்றும் தொடர்பு மூலம் நிரந்தர
மகாதானி ஆகி, புண்ய ஆத்மாவாகி தானம் புண்ணியம் செய்துக் கொண்டே
இருங்கள். எப்பொழுது அப்படிப்பட்ட சிரேஷ்ட ஹை ஜம்ப்
செய்யக்கூடிய முயற்சி செய்யும் பொழுது தான் பறக்கும் பறவை ஆகி
பைனல் ரிசல்ட்டில் நம்பர் ஒன் ஆக முடியும்.
சுலோகன்:
உள்ளுணர்வு மூலம் வாயுமண்டலத்தை சக்திசாலியாக ஆக்குவது தான்
கடைசி முயற்சி மற்றும் சேவையாகும்.
அவ்யக்த சமிக்ஞை : ஆன்மீக கௌரவத்தையும் தூய்மையெனும்
ஆளுமையையும் கையாளுங்கள்.
விசேஷ ஆத்மாக்கள் மற்றும் மகான் ஆத்மாக்களை தேசத்தின் மற்றும்
உலகத்தின் தனித்துவம் வாய்ந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது.
தூய்மையின் பர்ஸ்னாலிட்டி அதாவது ஒவ்வொரு செயலிலும் மகான் தன்மை
மற்றும் விசேஷம் நிறைந்ததாக இருக்கிறது. ஆன்மீக பர்ஸ்னாலிட்டி
உடைய ஆத்மாக்கள் தனது எனர்ஜி, நேரம், எண்ணம் வீணாக இழக்க
மாட்டார்கள், பயன்படுத்து வார்கள். அப்படிப்பட்ட
பர்ஸ்னாலிட்டியுடையவர்கள் ஒருபொழுதும் சின்ன சின்ன விஷயங்களில்
தனது மனம் புத்தியை செலவிடமாட்டார்கள்.