03-02-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே - ஆத்மா எனும் ஜோதியில் ஞானம் - யோகம் எனும் நெய்யை ஊற்றினீர்கள் என்றால் ஜோதி எரிந்து கொண்டேயிருக்கும், ஞானம் மற்றும் யோகத்தின் வித்தியாசத்தை நல்ல விதத்தில் புரிந்து கொள்ள வேண்டும்

கேள்வி:
பாபாவினுடைய காரியம் தூண்டுதல்களின் மூலம் நடக்க முடியாது, அவர் இங்கு வரத்தான் வேண்டும் ஏன்?

பதில்:
ஏனென்றால் மனிதர்களுடைய புத்தி முற்றிலும் தமோபிரதானமாக இருக்கிறது. தமோபிர தான புத்தி தூண்டுதல்களைப் புரிந்து கொள்ள முடியாது. பாபா வருகின்றார் ஆகையினால் தான் ஆகாய சிம்மாசனத்தை விட்டு வாருங்கள்......... என்று பாடப்பட்டுள்ளது

பாடல்:
ஆகாய சிம்மாசனத்தை விட்டு வாருங்கள்......

ஓம் சாந்தி.
பக்தர்கள் பாடலை உருவாகியுள்ளார்கள். இதனுடைய அர்த்தம் எவ்வளவு நன்றாக இருக்கிறது. ஆகாய சிம்மாசனத்தை விட்டு வாருங்கள் என்று சொல்கிறார்கள். ஆகாயம் என்பது இதுவாகும். இது வசிப்பதற்கான இடமாகும். ஆகாயத்திலிருந்து எந்த பொருளும் வருவதில்லை. ஆகாய சிம்மாசனம் என்று சொல்கிறார்கள். ஆகாய தத்துவத்தில் நீங்கள் இருக்கின்றீர்கள் மற்றும் பாபா மகாதத்துவத்தில் இருக்கின்றார். அதனை பிரம்மம் அல்லது மகாதத்துவம் என்று சொல் கிறார்கள், அங்கே ஆத்மாக்கள் இருக்கின்றன. பாபாவும் கண்டிப்பாக அங்கிருந்து தான் வருவார். யாராவது வருவார்கள் அல்லவா. வந்து எங்களுடைய ஜோதியை ஏற்றுங்கள் என்று சொல் கிறார்கள். குருடனின் மகன் குருடன் மற்றும் கண்ணுடையவர்களின் மகன் கண்ணுடையவன் என்று சொல்லப்படுகிறது. திருதராஷ்டிரன் மற்றும் யுத்திஷ்டர் என்ற பெயர்களை காட்டுகிறார்கள். இப்போது இராவணனுடைய குழந்தைகளாவர். மாயை எனும் இராவணன் அல்லவா. அனை வருக்கும் இராவணனுடைய புத்தியாகும், இப்போது உங்களுடையது ஈஸ்வரிய புத்தியாகும். பாபா இப்போது உங்களுடைய புத்தியின் பூட்டை திறந்து கொண்டிருக்கின்றார். இராவணன் பூட்டை பூட்டி விடுகின்றான். யாரும் எந்த விசயத்தையும் புரிந்து கொள்ளவில்லை என்றால் கல் புத்தி என்று சொல்கிறார்கள். பாபா இங்கே வந்து ஜோதியை ஏற்றுவார் அல்லவா. தூண்டுதலின் மூலம் காரியம் நடக்குமா என்ன. சதோபிரதானமாக இருந்த ஆத்மாவின் சக்தி இப்போது குறைந்து விட்டது. தமோபிரதானமாக ஆகி விட்டது. ஒரேயடியாக மங்கிப் போய் விட்டது. மனிதர்கள் யாராவது இறந்து விட்டார்கள் என்றால் அவர்களுக்காக தீபம் ஏற்றுகிறார்கள். ஏன் தீபம் ஏற்றுகிறார்கள்? தீபம் அணைந்து விட்டால் இருட்டாகி விடக்கூடாது என்பதற்காக ஜோதியை ஏற்றுகிறார்கள். இங்கே ஜோதி ஏற்றுவதின் மூலம் அங்கே எப்படி வெளிச்சம் ஏற்படும்? எதையும் புரிந்து கொள்வதில்லை. இப்போது நீங்கள் கூர்மையான புத்தியுடையவர்களாக ஆகின்றீர்கள். நான் உங்களை தூய்மையான புத்தியுடையவர்களாக மாற்றுகின்றேன் என்று பாபா கூறுகின்றார். ஞானம் எனும் நெய் ஊற்றுகின்றேன். இது கூட புரிய வைக்க வேண்டிய விசயமாகும். ஞானம் மற்றும் யோகம் தனிப்பட்டதாகும். யோகத்தை ஞானம் என்று சொல்ல முடியாது. பகவான் வந்து என்னை நினைவு செய்யுங்கள் என்ற ஞானத்தை கொடுத்திருக்கின்றார் அல்லவா என்று சிலர் புரிந்து கொள்கிறார்கள். ஆனால் இதை ஞானம் என்று சொல்ல முடியாது. இங்கே தந்தை மற்றும் குழந்தைகளாவர். இவர் நம்முடைய பாபா என்பதை குழந்தைகள் தெரிந்துள்ளார்கள், இதில் ஞானத்தினுடைய விசயங்கள் என்று சொல்ல முடியாது. ஞானம் என்பது விஸ்தாரமானதாகும். இது நினைவு மட்டுமே ஆகும். என்னை நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார் அவ்வளவு தான். இது பொதுவான விசயமாகும். இதனை ஞானம் என்று சொல்லப்படுவதில்லை. குழந்தை பிறவி எடுத்தது என்றால் கண்டிப்பாக தந்தையை நினைவு செய்யும் அல்லவா. ஞானத்தின் விஸ்தாரம் இருக்கிறது. என்னை நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார் - இது ஞானம் அல்ல. நாம் ஆத்மாக்கள், நம்முடைய தந்தை பரம் ஆத்மா, பரமாத்மா என்பதை நீங்கள் தாங்களே தெரிந்துள்ளீர்கள். இதனை ஞானம் என்று சொல்ல முடியுமா என்ன? பாபாவை அழைக்கிறார்கள். ஞானம் என்பது நாலேட்ஜ் ஆகும், சிலர் எம். ஏ. படிக்கிறார்கள், சிலர் பி. ஏ. படிக் கிறார்கள், எவ்வளவு அதிகமான புத்தகங்கள் படிக்க வேண்டியிருக்கிறது. நீங்கள் என்னுடைய குழந்தைகள் என்று பாபா கூறுகின்றார், நான் உங்களுடைய தந்தையாக இருக்கின்றேன். என்னிடத்திலேயே யோகம் ஈடுபடுத்துங்கள் அதாவது நினைவு செய்யுங்கள். இதனை ஞானம் என்று சொல்ல முடியாது. நீங்கள் குழந்தைகளாகவே இருக்கின்றீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் ஒருபோதும் வினாசம் ஆவதே இல்லை. யாராவது இறந்து விட்டார்கள் என்றால், அவருடைய ஆத்மாவை அழைக்கிறார்கள், அந்த சரீரம் அழிந்து விட்டது. ஆத்மா எப்படி உணவை சாப்பிடும்? ஆனால் இவையனைத்தும் பக்தி மார்க்கத்தின் வழக்கங்களாகும். நாம் சொல்வதால் அந்த பக்தி மார்க்கம் நின்றுவிடும் என்பது கிடையாது. அது நடந்து கொண்டுதான் வருகிறது. ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு விட்டு மற்றொன்றை எடுக்கிறது.

குழந்தைகளுடைய புத்தியில் ஞானம் மற்றும் யோகத்தின் வித்தியாசம் தெளிவாக இருக்க வேண்டும். என்னை நினைவு செய்யுங்கள் என்று பாபா சொல்கிறாரே, இது ஞானம் இல்லை. பாபா டைரக்ஷன் கொடுக்கின்றார், இதை யோகம் என்று சொல்லப்படுகிறது. சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது என்பது தான் ஞானம் ஆகும். யோகம் என்றால் நினைவு ஆகும். குழந்தைகளின் கடமை தந்தையை நினைவு செய்வதாகும். அது லௌகீகம், இது பரலௌகீகமாகும். என்னை நினைவு செய்யுங்கள் என்று பாபா கூறுகின்றார். எனவே ஞானம் தனிப்பட்ட பொருளாகி விட்டது. ஸ்தூல தந்தையை நினைவு செய்யுங்கள் என்று குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டியிருக்கிறதா என்ன. பிறந்தவுடனேயே தந்தையின் நினைவு இருக்கிறது. இங்கே தந்தையின் நினைவை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. இதில் உழைப்பு தேவைப்படுகிறது. தங்களை ஆத்மா என்று புரிந்து பாபாவை நினைவு செய்யுங்கள் - இது மிகவும் உழைப்பிற்கான காரியமாகும். ஆகையினால் தான் யோகம் நிற்பதில்லை என்று பாபா கூறுகின்றார். பாபா நினைவு மறந்து விடுகிறது என்று குழந்தைகள் எழுதுகிறார்கள். ஞானம் மறந்து விடுகிறது என்று சொல்வதில்லை. ஞானம் மிகவும் சகஜமானதாகும். நினைவை ஞானம் என்று சொல்லப்படுவதில்லை, இதில் மாயையின் புயல் நிறைய வருகிறது. சிலர் ஞானத்தில் மிகவும் கூர்மையானவர்களாக இருக்கலாம், நன்றாக முரளி எடுப்பார்கள் ஆனால் எவ்வளவு நேரம் நினைவு செய்கிறீர்கள்? என்ற சார்ட் வையுங்கள் என்று பாபா கூறுகின்றார். பாபாவிற்கு நினைவினுடைய சார்ட்டை யதார்த்தமான விதத்தில் உருவாக்கிக் காட்டுங்கள் என்று கூறுகின்றார். நினைவினுடைய விசயம் தான் முக்கியமானதாகும். வந்து தூய்மையாக்குங்கள் என்று தூய்மையற்றவர்கள் தான் அழைக்கிறார்கள். தூய்மையாகும் விசயம் தான் முக்கியமானதாகும். இதில் தான் மாயையின் தடை ஏற்படுகிறது. சிவபகவானுடைய மகாவாக்கியம் - நினைவில் அனைவரும் அரைகுறையாக இருக்கிறார்கள். நல்ல நல்ல குழந்தை கள் முரளியை நன்றாக நடத்துகிறார்கள் ஆனால் நினைவில் முற்றிலும் பலவீனமாக இருக்கிறார்கள். யோகத்தின் மூலம் தான் விகர்மங்கள் வினாசம் ஆகிறது. யோகத்தின் மூலம் கர்மேந்திரியங்கள் முற்றிலும் அமைதியாகி விட முடியும். ஒரு பாபாவைத் தவிர வேறு யாரும் நினைவிற்கு வரக்கூடாது, எந்த சரீரமும் நினைவிற்கு வரக்கூடாது. இந்த முழு உலகமும் அழியப்போகிறது என்பதை ஆத்மா தெரிந்திருக்கிறது, இப்போது நாம் நம் வீட்டிற்குச் செல்கிறோம். பிறகு இராஜ்யத்தில் வருவோம். இது எப்போதும் புத்தியில் இருக்க வேண்டும். என்ன ஞானம் கிடைக்கிறதோ அது ஆத்மாவில் இருக்க வேண்டும். பாபா யோகேஷ்வரன் ஆவார், அவர் நினைவை கற்றுக் கொடுக்கின்றார். உண்மையில் ஈஸ்வரனை யோகேஷ்வரன் என்று சொல்ல முடியாது. நீங்கள் யோகேஷ்வரர்கள் ஆவீர்கள். ஈஸ்வரனான தந்தை என்னை நினைவு செய்யுங் கள் என்று கூறுகின்றார். இந்த நினைவை கற்றுக் கொடுப்பவர் ஈஸ்வரன் பாபா ஆவார். அந்த நிராகார தந்தை சரீரத்தின் மூலம் வந்து கூறுகின்றார். குழந்தைகளும் சரீரத்தின் மூலம் கேட்கிறார்கள். நிறைய பேர் யோகத்தில் அரைகுறையாக இருக்கிறார்கள். முற்றிலும் நினைவு செய்வதே இல்லை. பிறவி-பிறவிகளுக்குமான பாவங்கள் அனைத்தினுடைய தண்டனைகளை அனுபவிப்பார்கள். யார் இங்கே வந்த பிறகு பாவம் செய்கிறார்களோ, அவர்கள் இன்னும் நூறு மடங்கு தண்டனை அனுபவிப்பார்கள். அதிகம் ஞானத்தை பேசிக் கொண்டே இருக்கிறார்கள், யோகம் முற்றிலும் இல்லை, ஆகையினால் பாவம் அழிவதில்லை, அரைகுறையாகவே நின்று விடுகிறது, ஆகையினால் உண்மையிலும் உண்மையான 8 மணிகளின் மாலை தான் உருவாகிறது. 9 ரத்தினங்கள் பாடப்படுகிறது. 108 ரத்தினங்கள் என்று எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா. 108 ரத்தினங்களினால் எந்த பொருளும் உருவாக்கப்படுவதில்லை. நிறைய பேர் இந்த விசயங் களை முழுமையாகப் புரிந்து கொள்வதில்லை. நினைவை ஞானம் என்று சொல்லப்படுவதில்லை. ஞானம் என்று சிருஷ்டி சக்கரத்தைச் சொல்லப்படுகிறது. சாஸ்திரங்களில் ஞானம் இல்லை, அந்த சாஸ்திரங்கள் பக்தி மார்க்கத்தினுடையவைகளாகும். நான் இவற்றின் மூலம் கிடைப்பதில்லை என்று பாபாவே கூறுகின்றார். சாதுக்கள் போன்ற அனைவரையும் கடைத்தேற்ற நான் வருகின்றேன். அவர்கள் பிரம்மத்தோடு ஐக்கியமாக வேண்டும் என்று புரிந்து கொள்கிறார்கள். பிறகு நீர்குமிழியின் உதாரணம் கொடுக்கிறார்கள். நீங்கள் இப்போது அப்படி கூறுவதில்லை. ஆத்மாக்களாகிய நாம் பாபாவின் குழந்தைகள் என்பதை நீங்கள் தெரிந்துள்ளீர்கள். என்னை மட்டும் நினைவு செய்யுங்கள் என்ற வார்த்தை கூட சொல்கிறார்கள் ஆனால் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. நாம் ஆத்மாக்கள் என்று சொல்லி விடுகிறார்கள் ஆனால் ஆத்மா என்றால் என்ன, பரமாத்மா என்றால் என்ன என்ற ஞானம் முற்றிலும் இல்லை. இதை பாபா தான் வந்து கூறுகின்றார். ஆத்மாக்களாகிய நம்முடைய வீடு அது என்பதை இப்போது நீங்கள் தெரிந்துள்ளீர் கள். அங்கே முழு மரமும் இருக்கிறது. ஒவ்வொரு ஆத்மாவிற்கும் அதனதனுடைய நடிப்பு கிடைத் திருக்கிறது. சுகத்தை அளிப்பது யார், துக்கத்தை அளிப்பது யார் என்பது கூட யாருக்கும் தெரிய வில்லை.

பக்தி என்பது இரவு, ஞானம் என்பது பகலாகும். 63 பிறவிகள் நீங்கள் ஏமாற்றம் அடைகிறீர்கள். பிறகு ஞானம் கொடுக்கின்றேன் எனும்போது எவ்வளவு நேரம் ஆகிறது? ஒரு வினாடி ஆகும். ஒரு வினாடியில் ஜீவன்முக்தி என்பது பாடப்பட்டுள்ளது. இவர் உங்களுடைய தந்தை அல்லவா, அவர் தான் தூய்மையற்றவர்களை தூய்மையாக்குபவர் ஆவார். அவரை நினைவு செய்வதின் மூலம் நீங்கள் தூய்மையாக ஆகி விடுவீர்கள். சத்யுகம், திரேதா, துவாபர, கலியுகம் என்று இந்த சக்கரம் இருக்கிறது. பெயரைக் கூட தெரிந்துள்ளார்கள் ஆனால் நேரத்தைப் பற்றி யாருக்கும் தெரியாத அளவிற்கு கல் புத்தியாக இருக்கிறார்கள். கருமையான கலியுகம் என்பதையும் புரிந்துள்ளார்கள். கலியுகம் இன்னும் கூட நடந்தது என்றால் இன்னும் காரிருளாகி விடும் ஆகை யினால் தான் கும்பகர்ண உறக்கத்தில் உறங்கிக் கொண்டிருந்தார்கள் வினாசமாகி விட்டது என்று பாடப்பட்டுள்ளது. கொஞ்சம் ஞானம் கேட்டால் கூட பிரஜைகளாகி விடுகிறார்கள். இந்த லஷ்மி - நாராயணன் எங்கே, பிரஜைகள் எங்கே! படிப்பிக்கக் கூடியவர் ஒருவரே ஆவார். ஒவ்வொருவருக்கும் அவரவருடைய அதிர்ஷ்டமாகும். சிலர் புலமை பெற்று விடுகிறார்கள், சிலர் தேர்ச்சி பெறுவதில்லை. இராமருக்கு ஏன் வில் அடையாளம் கொடுத்திருக்கிறார்கள்? ஏனென்றால் தேர்ச்சி பெறவில்லை. இது கூட கீதை பாடசாலையாகும், சிலர் எந்த மதிப்பெண்ணும் எடுக்க தகுதியற்றவர்களாக இருக்கிறார்கள். நான் ஆத்மா புள்ளியாக இருக்கின்றேன், பாபாவும் புள்ளியாக இருக்கின்றார், இப்படி அவரை நினைவு செய்ய வேண்டும். யார் இந்த விசயத்தைக் கூட புரிந்து கொள்ள வில்லையானால், அவர்கள் என்ன பதவி அடைவார்கள்! நினைவில் இல்லாத காரணத் தினால் அதிக நஷ்டம் ஏற்பட்டுவிடுகிறது. நினைவினுடைய பலம் நிறைய அதிசயத்தை செய்கிறது, கர்மேந்திரியங்கள் முற்றிலும் அமைதியாக, குளிர்ச்சியாகி விடுகிறது. ஞானத்தின் மூலம் அமைதியாகாது, யோக பலத்தின் மூலம் அமைதியாகி விடும். வந்து எங்களுக்கு அந்த கீதையின் ஞானத்தை சொல்லுங்கள் என்று பாரதவாசிகள் அழைக்கிறார்கள், இப்போது யார் வருவார்கள்? கிருஷ்ணருடைய ஆத்மா இங்கே இருக்கிறது. யாரை அழைக்கிறார்களோ, அவர்கள் சிம்மாசனத்தில் அமருகிறார்களா என்ன! நாங்கள் கிறிஸ்துவின் ஆத்மாவை நினைவு செய்கிறோம் என்று சொல்கிறார்கள், அட அவர் இங்கே தான் இருக்கிறார். கிறிஸ்துவின் ஆத்மா இங்கே தான் இருக்கிறது, அவர் திரும்பிச் செல்ல முடியாது என்பது மனிதர்களுக்குத் தெரிவதில்லை. லஷ்மி - நாராயணன், முதல் நம்பரில் வருபவர்களே முழுமையான 84 பிறவிகளை எடுப்பார்கள் என்றால் மற்றவர்கள் எப்படி திரும்பிச் செல்ல முடியும். இவையனைத்தும் கணக்கு அல்லவா. மனிதர்கள் என்னவெல்லாம் சொல்கிறார்களோ, அனைத்தும் பொய்யாகும். அரைக்கல்பம் பொய்யான கண்டம், அரைக்கல்பம் உண்மையான கண்டமாகும். இந்த சமயத்தில் அனைவரும் நரகவாசிகள், பிறகு சொர்க்கவாசிகளாகவும் பாரதவாசிகள் தான் ஆகிறார்கள் என்பதை ஒவ்வொருவருக்கும் புரிய வைக்க வேண்டும். மனிதர்கள் எவ்வளவு வேத சாஸ்திரங்கள், உப நிடதங்கள் போன்றவற்றை படிக்கிறார்கள், இவற்றின் மூலம் முக்தியை அடைவார்களா என்ன? இறங்கியே ஆக வேண்டும். ஒவ்வொரு பொருளும் சதோ, ரஜோ, தமோ நிலையில் கண்டிப்பாக வருகிறது. புதிய உலகம் என்று எதை சொல்லப்படுகிறது, என்ற ஞானம் யாரிடமும் இல்லை. இதை பாபா முன்னால் அமர்ந்து புரிய வைக்கின்றார். தேவி-தேவதா தர்மத்தை யார் எப்போது ஸ்தாபனை செய்தது? பாரதவாசிகளுக்கு எதுவுமே தெரிவதில்லை. எனவே பாபா புரிய வைக்கின்றார் - ஞானத்தில் எவ்வளவு தான் நன்றாக இருந்தாலும் யோகத்தில் நிறைய குழந்தைகள் தேர்ச்சி பெறுவதில்லை. யோகம் இல்லையென்றால் விகர்மங்கள் வினாசம் ஆகாது, உயர்ந்த பதவியை அடைய மாட்டார்கள். யார் யோகத்தில் தீவிரமாக இருக்கிறார்களோ, அவர்கள் தான் உயர்ந்த பதவியை அடைவார்கள். அவர்களுடைய கர்மேந்திரியங்கள் முற்றிலும் குளிர்ச்சியாகி விடுகிறது. தேகத்தின் கூடவே அனைத்தையும் மறந்து ஆத்ம-அபிமானியாக ஆகி விடுகிறார்கள். நாம் அசரீரியாக இருக்கிறோம், இப்போது வீட்டிற்குச் செல்கிறோம். இப்போது இந்த சரீரத்தை விட வேண்டும் என்று எழும்போதும்-அமரும்போதும் புரிந்து கொள்ளுங்கள். நாம் நடிப்பை நடித்தோம், இப்போது வீட்டிற்குச் செல்கிறோம். எப்படி பாபாவினிடத்தில் ஞானம் இருக்கிறதோ அப்படி ஞானம் என்னவோ கிடைத்திருக்கிறது, அவர் யாரையும் நினைவு செய்ய வேண்டியதில்லை. குழந்தைகளாகிய நீங்கள் தான் நினைவு செய்ய வேண்டும். பாபாவை ஞானக்கடல் என்று சொல்லப்படுகிறது. யோகத்தை கடல் என்று சொல்ல முடியாது அல்லவா. சக்கரத்தின் ஞானத்தை சொல்கிறார் மற்றும் தன்னுடைய அறிமுகத்தைக் கொடுக்கிறார். நினைவை ஞானம் என்று சொல்லப் படுவதில்லை. குழந்தைகளுக்கு தானாகவே நினைவு வந்து விடுகிறது. நினைவு செய்து தான் ஆக வேண்டும், இல்லையென்றால் எப்படி ஆஸ்தி கிடைக்கும்? தந்தை இருக்கின்றார் என்றால் கண்டிப்பாக ஆஸ்தி கிடைக்கிறது. மீதம் இருப்பது ஞானம். நாம் எப்படி 84 பிறவிகள் எடுக்கிறோம், தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக, சதோபிரதானத்திலிருந்து தமோபிர தானமாக எப்படி ஆகின்றோம் என்பதை பாபா புரிய வைக்கின்றார். இப்போது பாபாவின் நினைவின் மூலம் சதோபிரதானமாக ஆக வேண்டும். ஆன்மீகக் குழந்தை களாகிய நீங்கள் ஆன்மீக தந்தையிடம் வந்துள்ளீர்கள், அவருக்கு சரீரத்தின் ஆதாரம் வேண்டும் அல்லவா. நான் வயதான சரீரத்தில் பிரவேசிக்கின்றேன் என்று கூறுகின்றார். இருப்பதும் வானப்பிரஸ்த சரீர மாகும். இப்போது பாபா வருகின்றார் ஆகையினால் தான் முழு உலகத்திற்கும் நன்மை ஏற்படு கிறது. இது பாக்கியசாலி ரதமாகும், இதன்மூலம் எவ்வளவு சேவை நடக்கிறது. எனவே இந்த சரீரத்தின் உணர்வை விடுவதற்கு நினைவு தேவை. இதில் ஞானத்தின் விசயம் இல்லை. அதிகம் நினைவை கற்றுக் கொடுக்க வேண்டும். ஞானம் மிகவும் சகஜமானதாகும். சிறிய குழந்தை கூட சொல்லி விடும். மற்றபடி நினைவில் தான் உழைப்பு இருக்கிறது. ஒருவருடைய நினைவே இருக்க வேண்டும், இதைத் தான் கலப்படமில்லாத நினைவு என்று சொல்லப்படுகிறது. யாருடைய சரீரத்தையாவது நினைவு செய்தால் அது கலப்பட நினைவாகும். நினைவின் மூலம் அனைவரை யும் (அனைத்தையும்) மறந்து அசரீரியாக ஆக வேண்டும். நல்லது!

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக் குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1) நினைவினுடைய பலத்தின் மூலம் தங்களுடைய கர்மேந்திரியங்களை குளிர்ச்சியாக, அமைதியாக்க வேண்டும். முழுமையாக தேர்ச்சி பெறுவதற்காக யதார்த்தமான முறையில் பாபாவை நினைவு செய்து தூய்மையாக ஆக வேண்டும்.

2) எழும்போதும்-அமரும்போதும் இப்போது நாம் இந்த பழைய சரீரத்தை விட்டு விட்டு திரும்பி வீட்டிற்குச் செல்ல வேண்டும் என்பது புத்தியில் இருக்க வேண்டும். எப்படி பாபாவினிடத்தில் அனைத்து ஞானமும் இருக்கிறதோ, அதுபோல் மாஸ்டர் ஞானக்கடலாக ஆக வேண்டும்.

வரதானம்:
இணைந்த சொரூபத்தின் நினைவு மூலமாக உயர்ந்த மனோ நிலையெனும் ஆசனத்தில் அமர்ந்து சதா சம்பன்னமாகுக

சங்கமயுகத்தில் சிவசக்தியெனும் இணைந்த சொரூபத்தில் நிலைத்திருப்பதால் நடக்காத காரியமும் நடந்தேரும். இதுவே அனைத்திலும் உயர்ந்த சொரூபமாகும். இந்த சொரூபத்தில் நிலைபெறுவதால் சம்பன்னபவ எனும் வரதானம் கிடைத்து விடுகிறது. பாப்தாதா குழந்தைகள் அனைவருக்கும் சதா சுகமெனும் ஆசனத்தில் அமர்த்துகின்றார். சதா இதே ஆசனத்தில் அமர்ந்திருந்தால் அதீந்திரிய சுகமெனும் ஊஞ்சலில் ஆடிக் கொண்டேயிருப்பீர்கள். மறதி எனும் சம்ஸ்காரமே மறைந்து போகும்.

சுலோகன்:
சக்தி வாய்ந்த உள்ளுணர்வு மூலமாக ஆத்மாக்களை யோகியவானாக, யோகிகளாக மாற்றுங்கள்.

அவ்யக்த சமிக்ஞை - ஏகாந்தப்பிரியர் ஆகுங்கள், ஒற்றுமை மற்றும் ஏகாக்ரதாவை (மனமும், புத்தியும் ஒரு நிலை பெறுதல்) தனதாக்குங்கள்

ஏற்றுக் கொள்ளும் சக்தி இருந்தால் தான் ஒருவழியில் செல்லும் நிலை உருவாகும். வேற்றுமையை உள்ளடக்கி ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் நெருங்கி வரும்போதே அனை வருக்கும் உதாரணமாவீர்கள். பிராமண பரிவாரத்தின் சிறப்பம்சமே வேற்றுமையில் ஒற்றுமை காண்பது. இந்த ஒற்றுமையின் அதிர்வலையே முழு உலகிலும் ஒரு தர்மம், ஒரு இராஜ்யம் ஸ்தாபனை செய்யும். எனவே கவனம் கொடுத்து வேற்றுமையை களைந்து ஒற்றுமையை கொண்டு வாருங்கள்.