22-04-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே ! உங்களுடைய இந்த
நேரம் மிகவுமே விலை மதிப்பு வாய்ந்த தாகும். இதில் நீங்கள்
தந்தைக்கு முழுமையாக உதவி செய்பவராகுங்கள்.உதவி செய்யும்
குழந்தைகளே உயர்ந்த பதவி அடைகிறார்கள்.
கேள்வி:
(சர்விசபிள்) சேவை செய்யும்
குழந்தைகள் எந்த ஒரு சாக்குப்போக்கு கூற முடியாது?
பதில்:
"பாபா இங்கு வெப்பமாக இருக்கிறது.
இங்கு குளிராக உள்ளது. எனவே எங்களால் சேவை செய்ய முடியாது"
என்று சாக்கு போக்கினை சர்விசபிள் குழந்தைகள் கூற மாட்டார்கள்.
சிறிதளவு வெப்பமாக இருக்கிறது அல்லது குளிராக உள்ளது என்றால்,
பொறுமையற்றவராக ஆகி விடக் கூடாது. எங்களால் சகித்து கொள்ளவே
முடியாது என்பதல்ல. இந்த துக்க தாமத்தில் துக்கம், சுகம்,
வெப்பம், குளிர், நிந்தனை மற்றும் புகழ் அனைத்தையும் சகித்துக்
கொள்ள வேண்டும். சாக்குப் போக்கு கூறக் கூடாது.
பாடல்:
மனிதனே, பொறுமையைக்
கடைப்பிடிப்பாய்.. .. ..
ஓம் சாந்தி.
சுகம் மற்றும் துக்கம் என்று அழைக்கப்படுவது எது என்பதை
குழந்தைகள் தான் அறிந்துள்ளார்கள். இந்த வாழ்க்கையில் சுகம்
எப்பொழுது கிடைக்கிறது மற்றும் துக்கம் எப்பொழுது கிடைக்கிறது
என்பதை பிராமணர்களாகிய நீங்கள் மட்டுமே வரிசைக்கிரமமாக
முயற்சிக்கேற்ப அறிந்துள்ளீர்கள். இது இருப்பதே துக்கத்தின்
உலகமாக. இதில் சிறிது காலத்திற்கு துக்கம், சுகம், புகழ்,
நிந்தனை எல்லாமே சகித்து கொள்ள வேண்டி வருகிறது. இவை அனைத்தை
யும் கடந்து செல்ல வேண்டும். ஒரு சிலருக்கு கொஞ்சம் வெப்பம்
தாக்கினால் நாங்கள் குளிரான இடத்தில் இருப்போம் என்பார்கள்.
இப்பொழுது குழந்தைகளே வெப்பமான இடத்தில் அல்லது குளிர்
இருக்கும் இடத்தில் சேவை செய்ய வேண்டும் அல்லவா? இச்சமயம் இந்த
கொஞ்ச நஞ்சம் துக்கம் ஏற்பட்டாலும் கூட ஒன்றும் புதிய
விஷயமில்லை. இது இருப்பதே துக்கதாமமாக. இப்பொழுது
குழந்தைகளாகிய நீங்கள் சுகதாமத்திற்குச் செல்வதற்காக முழுமையான
(புருஷார்த்தம்) முயற்சி செய்ய வேண்டும். இது உங்களுடைய மிகவுமே
விலைமதிப்புள்ள நேர மாகும். இதில் சாக்குப் போக்கு எதுவும்
கூடாது. பாபா (சர்விசபிள்) சேவை செய்யக் கூடிய குழந்தைகளுக்குக்
கூறுகிறார். யார் சேவையை அறியாமலேயே இருக்கிறார்களோ, அவர்களோ
எதற்கும் பயனற்றவர்கள். இங்கு தந்தை வந்திருப்பதே பாரதத்தை
மட்டுமென்ன உலகத்தையே சுக தாமமாக ஆக்குவதற்கு. எனவே பிராமணக்
குழந்தைகள் தான் தந்தைக்கு உதவி செய்பவர் ஆக வேண்டும். தந்தை
வந்துள்ளார். எனவே அவருடைய வழிப்படி நடக்க வேண்டும். சொர்க்க
மாக இருந்த பாரதம் இப்பொழுது நரகமாக உள்ளது. அதை மீண்டும்
சொர்க்கமாக ஆக்க வேண்டும். இதுவும் இப்பொழுது தெரிய வந்துள்ளது.
சத்யுகத்தில் இந்த பவித்திர ராஜாக்களின் ராஜ்யம் இருந்தது.
மிகவும் சுகமுடையவர்களாக இருந்தார்கள். பிறகு (அபவித்திர)
தூய்மையற்ற ராஜாக்களும் ஆகிறார்கள். இறைவன் பெயரில் தான
புண்ணியம் செய்வதால் அவர்களுக்கும் பலன் கிடைக்கிறது. இப்பொழுது
நடப்பதே பிரஜைகளின் இராஜ்யம் (குடியரசு). ஆனால் இவர் களால்
ஒன்றும் பாரதத்தின் சேவை செய்ய முடியாது. பராதத்தினுடையதோ
அல்லது உலகத்தின் சேவையோ ஒரு எல்லையில்லாத தந்தை தான்
செய்கிறார். இப்பொழுது தந்தை குழந்தை களுக்குக் கூறுகிறார் -
இனிமையான குழந்தைகளே! இப்பொழுது என்னுடன் கூட உதவி செய்பவர்
ஆகுங்கள். எவ்வளவு அன்புடன் புரிய வைக்கிறார். (தேஹீ அபிமானி)
ஆத்ம உணர்வுடைய குழந்தைகள் புரிந்து கொள்கிறார்கள். (தேக
அபிமானி) தேக உணர்வுடையவர்கள் என்ன உதவி செய்ய முடியும்.
ஏனெனில் மாயையின் சங்கிலிகளில் மாட்டி இருக்கிறார்கள்.
இப்பொழுது எல்லோரையும் மாயையின் விலங்குகளிலிருந்து குருக்களின்
விலங்குகளிலிருந்து விடுவியுங்கள் என்று தந்தை டைரக்ஷன் (உத்தரவு)
அளித்துள்ளார். உங்களுடைய தொழிலே இதுவாகும். யார் எனக்கு நல்ல
உதவி செய்பவர்களாக ஆவோர்களோ, பதவியும் அவர்களே அடைவார்கள் என்று
தந்தை கூறுகிறார். நான் யாராக இருக்கிறேன், எப்படி இருக்கிறேன்,
சாதாரணமாக இருக்கும் காரணத்தால் என்னை முழுமையாக அறியாமல்
உள்ளார்கள் என்று சுயம் தந்தை நேரிடையாக கூறுகிறார். தந்தை
நம்மை உலகிற்கு அதிபதியாக ஆக்குகிறார் என்பதை அறியாமல்
உள்ளார்கள். இந்த இலட்சுமி நாராயணர் உலகிற்கு அதிபதியாக
இருந்தார்கள் என்பது கூட யாருக்குமே தெரியாது. இவர்கள் எப்படி
இராஜ்யத்தை அடைந்தார்கள் பின்னர் எப்படி இழந்தார்கள் என்பதை
இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். மனிதர்களோ முற்றிலுமே
அல்ப புத்தியினராக இருக்கிறார் கள். இப்பொழுது தந்தை அனைவருடைய
புத்தியின் பூட்டைத் திறப்பதற்காக, கல்புத்தி யிலிருந்து தங்க
புத்தியாக ஆக்குவதற்காக வந்துள்ளார். இப்பொழுது உதவி
செய்பவர்களாக ஆகுங்கள் என்று பாபா கூறுகிறார். முகம்மதியர்கள்
இறைத் தொண்டர்கள் (குதாயி கித்மத்கார்) என்று கூறுகிறார் கள்.
ஆனால் அவர்களோ உதவி செய்பவர்களாக ஆவதே இல்லை. குதா வந்து யாரை
பாவனமாக ஆக்குகிறாரோ அவர்களுக்குத் தான், இப்பொழுது மற்றவர்களை
தனக்கு சமானமாக ஆக்குங்கள், ஸ்ரீமத் படி நடங்கள்" என்று
கூறுகிறார். தந்தை வந்திருப்பதே தூய்மையான சொர்க்கவாசியாக
ஆக்குவதற்காக.
இது மரண உலகம் ஆகும் என்பதை பிராமண குழந்தைகளாகிய நீங்கள்
அறிந்துள்ளீர்கள். அமர்ந்தபடியே திடீரென்று அகால மரணம் ஆகிக்
கொண்டே இருக்கிறது. ஆக ஏன் நாம் முன் கூட்டியே உழைத்து தந்தை
யிடமிருந்து முழுமையான ஆஸ்தியைப் பெற்று நமது வருங்கால
வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடாது? மனிதர்களுக்கு
வானப்பிரஸ்த நிலை ஆகும் பொழுது இப்பொழுது பக்தியில் ஈடுபடலாம்
என்று நினைக்கிறார்கள். வானப்பிரஸ்த நிலை இல்லாதவரையும் நிறைய
பணம், செல்வத்தை சம்பாதிக்கிறார்கள். இப்பொழுது உங்கள்
அனைவருக்கும் இருப்பதே வானப்பிரஸ்த நிலை தான். பின் ஏன்
தந்தைக்கு உதவி செய்பவராக ஆகி விடக் கூடாது? நாம் தந்தைக்கு
உதவி செய்பவர்களாக ஆகிறோமா என்று நம் உள்ளத்தை நாமே கேட்க
வேண்டும். சர்விசபிள் (சேவை செய்யும்) குழந்தைகளோ
பிரசித்தமானவர்கள் ஆவார்கள். நல்ல உழைப்பு செய்கிறார்கள்.
யோகத்தில் இருப்பதன் மூலம் சேவை செய்ய முடியும். நினைவின்
பலத்தினால் தான் முழு உலகத்தைத் தூய்மையாக்க வேண்டும். முழு
உலகத்தை தூய்மையாக்க நீங்கள் கருவியாக ஆகி உள்ளீர்கள்.
உங்களுக்காக பிறகு தூய்மையான உலகம் கூட அவசியம் வேண்டும். எனவே
பதீதமான (தூய்மையற்ற) உலகத்தின் விநாசம் ஆக வேண்டி உள்ளது. தேக
அபிமானத்தை (தேக உணர்வை) விடுங்கள். ஒரு தந்தையை மட்டுமே நினைவு
செய்யுங்கள் என்று இப்பொழுது எல்லோருக்கும் இதையே கூறிக்
கொண்டிருங்கள். அவரே பதீத பாவனர் ஆவார். எல்லோரும் அவரைத் தான்
நினைக்கிறார்கள். சாது சந்நியாசிகள் ஆகியோர் கூட ஆள் காட்டி
விரலை மேல் நோக்கிக் காட்டி "பரமாத்மா ஒருவரே ஆவார். அவரே
அனைவருக்கும் சுகம் அளிப்பவர், இறைவன் அல்லது பரமாத்மா என்று
கூறி விடுகிறார்கள்". ஆனால் அவரை யாருமே அறியாம-ருக்கிறார்கள்.
ஒரு சிலர் விநாயகரை, ஒரு சிலர் ஆஞ்ச நேயரை மற்றொரு சிலர்
தங்களுடைய குருவை நினைவு செய்து கொண்டே இருக்கிறார்கள். அவர்கள்
எல்லோரும் பக்தி மார்க்கத்தினுடையவர்கள் ஆவார்கள் என்பதை
இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள். பக்தி மார்க்கம் கூட
அரைகல்பம் நடக்க வேண்டி உள்ளது. பெரிய பெரிய ரிஷி முனிவர்கள்
எல்லோருமே நேத்தி, நேத்தி (தெரியாது, அறியோம்) என்றபடியே
வந்துள்ளார்கள். படைப்பவர் மற்றும் படைப்பை நாம் அறியாமல்
உள்ளோம். அவர்கள் திரிகாலதரிசியாகவோ இல்லை என்று தந்தை
கூறுகிறார். விதை ரூபமானவர், ஞானக் கடலோ ஒரே ஒருவர் ஆவார். அவர்
வருவதும் பாரதத்தில் தான். சிவஜெயந்தியும் கொண்டாடுகிறார்கள்.
மேலும் கீதா ஜெயந்தி யும் கொண்டாடுகிறார்கள். எனவே கிருஷ்ணரை
நினைவு செய்கிறார்கள். சிவனையே அறியாம-ருக்கிறார்கள். பதீத
பாவனர் ஞானக் கடலோ நான் ஆவேன் என்று சிவபாபா கூறுகிறார்.
கிருஷ்ணருக்காகவோ கூற முடியாது. கீதையின் பகவான் யார்?இது
மிகவும் நல்ல படம் ஆகும். குழந்தைகளின் நன்மைக்காக தந்தை இந்தப்
படங்கள் ஆகியவற்றை தயார் செய்விக்கிறார். சிவபாபாவின் மகிமையோ
முழுமையாக எழுத வேண்டும். எல்லாமே இதை பொருத்தது ஆகும்.
மேலிருந்து வருபவர்கள் அனைவருமே தூய்மையாகவே இருப்பார்கள்.
தூய்மை ஆகாமல் யாருமே போக முடியாது. முக்கியமான விஷயமே
தூய்மையாக ஆவதற்கானது. அது இருப்பதே (பவித்திர தாமம்)
தூய்மையான இருப்பிடமாக. அங்கு அனைத்து ஆத்மாக்களும்
இருக்கிறார்கள். இங்கு நீங்கள் பாகத்தை நடித்து நடித்து
பதீதமாக (தூய்மையற்றவராக) ஆகி விட்டுள்ளீர்கள். யார்
எல்லோரையும் விட அதிகமாக பாவனமாக இருந்தார் களோ அவர்களே
பதீதமாக (தூய்மை யற்றவர்களாக) ஆகி விட்டுள்ளார்கள். தேவி தேவதா
தர்மத்தின் அடையாளமே மறைந்து விட்டுள்ளது தேவதா தர்மம் என்பதை
மாற்றி இந்து தர்மம் என்று பெயர் வைத்து விட்டுள்ளார்கள்.
நீங்கள் தான் சொர்க்கத்தின் இராஜ்யத்தைப் பெறுகிறீர்கள் மற்றும்
பிறகு இழக்கிறீர்கள். தோல்வி மற்றும் வெற்றிக்கான
விளையாட்டாகும். மாயையிடம் தோற்கும் பொழுது தோல்வி. மாயை யிடம்
வெற்றி அடையும் பொழுது வெற்றி. மனிதர்களோ இராவணனுடைய இவ்வளவு
பெரிய உருவத்தை எவ்வளவு செலவு செய்து அமைக்கிறார்கள். பிறகு ஒரே
நாளில் அழித்து விடுகிறார் கள். எதிரி அல்லவா? ஆனால் இதுவோ
பொம்மைகளின் விளையாட்டு ஆகிவிட்டது. சிவபாபா வினுடைய உருவத்தை
செய்து, அமைத்து பூஜை செய்து பிறகு உடைத்து விடுகிறார்கள். தேவி
களினுடைய உருவங்களைக் கூட இது போல செய்து, பிறகு மூழ்கடித்து
விடுகிறார்கள். எதுவுமே புரிந்து கொள்வதில்லை. இப்பொழுது
குழந்தைகளாகிய நீங்கள் இந்த உலகத்தின் சக்கரம் எப்படிச்
சுற்றுகிறது என்று இந்த எல்லையில்லாத சரித்திரம் பூகோளம் பற்றி
அறிந்துள்ளீர்கள். சத்யுகம் திரேதா பற்றி யாருக்குமே தெரியாது.
தேவதைகளின் படங்களைக் கூட நிந்தனைக்குரியதாக அமைத்து
விட்டுள்ளார்கள்.
தந்தை புரிய வைக்கிறார் - இனிமையான குழந்தைகளே ! உலகிற்கு
அதிபதியாக ஆவதற்கு தந்தை உங்களுக்குக் கூறியுள்ள பத்தியத்தை (கட்டுப்பாடு)
மேற்கொள்ளுங்கள். நினைவி-ருந்து உணவு தயாரியுங்கள். நினைவில்
இருந்து உட் கொள்ளுங்கள். என்னை நினைவு செய்தீர்கள் என்றால்
நீங்கள் மீண்டும் உலகிற்கு அதிபதியாக ஆகி விடுவீர்கள் என்று
சுயம் தந்தை கூறுகிறார். தந்தை கூட மீண்டும் வந்துள்ளார்.
இப்பொழுது முழுமையாக உலகிற்கு அதிபதி ஆக வேண்டும். ("ஃபாலோ ஃபாதர்
- மதர்") தாய் தந்தையைப் பின் பற்றுங்கள். தந்தை மட்டுமே
இருக்க முடியாது. சந்நியாசிகள் நாங்கள் எல்லோருமே ஃபாதர் (தந்தைகள்)
என்கிறார்கள். ஆத்மாவே பரமாத்மா !- இதுவோ தவறு ஆகி விடுகிறது.
இங்கு "மதர் ஃபாதர்" (தாய் தந்தை) இருவருமே (புருஷார்த்தம்)
முயற்சி செய்கிறார்கள். ஃபாலோ மதர் ஃபாதர் (தாய் தந்தையைப்
பின்பற்றுங்கள்) என்ற இந்த வார்த்தைகள் கூட இந்த இடத்தினுடையது
ஆகும். யார் உலகின் அதிபதியாக இருந்தார்களோ, தூய்மையாக
இருந்தார்களோ அவர்கள் இப்பொழுது எல்லாமே அபவித்திரமாக (தூய்மையற்ற
வராக) உள்ளார்கள் என்பதை இப்பொழுது நீங்கள் அறிந்துள்ளீர்கள்.
மீண்டும் பவித்திரமாக (தூய்மையாக) ஆகிக் கொண்டு இருக்கிறார் கள்.
நாம் கூட அவர்களுடைய ஸ்ரீமத்படி நடந்து இந்தப் பதவியை அடைகிறோம்.
அவர் இவர் மூலமாக டைரக்ஷன் (உத்தரவு) அளிக்கிறார். அதன்படி
நடக்க வேண்டும். பின்பற்ற செய்யவில்லை (பின்பற்றவில்லை) என்றால்
பாபா பாபா என்று மட்டுமே கூறி வாய் இனிக்குமாறு செய்கிறார்கள்.
(பின்பற்றுபவர்கள்) ஆனால் பின்பற்றுபவர்களைத் தான் நல்ல
குழந்தைகள் என்று கூறுவார்கள் அல்லவா? மம்மா பாபாவைப்
பின்பற்றுவதால் நாம் இராஜ்யத்தில் செல்வோம் என்று
அறிந்துள்ளீர்கள். இது புரிந்து கொள்ள வேண்டிய விஷயம். என்னை
நினைவு செய்தால் பாவங்கள் நீங்கும் என்று மட்டுமே தந்தை
கூறுகிறார். அவ்வளவே. மேலும் அனைவருக்கும் நீங்கள் எப்படி 84
பிறவிகள் எடுத்து எடுத்து, அபவித்திரமாக (தூய்மையற்றவராக) ஆகி
உள்ளீர்கள் என்பதைப் புரிய வையுங்கள். இப்பொழுது மீண்டும்
தூய்மையாக ஆக வேண்டும். எந்த அளவு நினைவு செய்வீர்களோ தூய்மை
ஆகிக் கொண்டே செல்வீர்கள். நிறைய நினைவு செய்பவர்கள் தான் புது
உலகத்தில் முதன் முதலில் வருவார்கள். பிறகு மற்றவர்களையும்
தனக்குச் சமானமாக ஆக்க வேண்டும். கண்காட்சியில் புரிய
வைப்பதற்காக மம்மா பாபா செல்ல முடியாது. வெளியிலிருந்து பெரிய
மனிதர் வருகிறார் என்றால் இவர் யார் வந்துள்ளார் என்று
பார்ப்பதற்காக எவ்வளவு பேர் மனிதர்கள் செல்கிறார்கள். இவரோ
எவ்வளவு மறைமுகமாக இருக்கிறார்!. நான் இந்த பிரம்மாவின் உடல்
மூலமாகப் பேசுகிறேன் என்று தந்தை கூறுகிறார். நான் தான் இந்தக்
குழந்தைக்குப் பெறுப்பாளி. சிவபாபா பேசுகிறார், அவரே
கற்பிக்கிறார் என்று நீங்கள் எப்பொழுதும் நினையுங்கள். நீங்கள்
சிவபாபா வைத் தான் பார்க்க வேண்டும். இவரைப் பார்க்கக் கூடாது.
தன்னை ஆத்மா என்று உணருங்கள் மற்றும் பரமாத்மா தந்தையை நினைவு
செய்யுங்கள். நாம் ஆத்மா ஆவோம். ஆத்மாவில் முழுமையான பாகம்
நிரம்பி உள்ளது. இந்த ஞானம் (நாலேஜ்) புத்தியில் சுற்றிக்
கொண்டே இருக்க வேண்டும். உலகியல் விஷயங்கள் மட்டுமே புத்தியில்
இருக்கிறது என்றால் ஒன்றுமே தெரியாது என்று பொருள். முற்றிலுமே
தாழ்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் இப்பேர்ப்பட்டவர்
களுக்கும் நன்மை செய்தே ஆக வேண்டும். சொர்க்கத்திற்குச்
செல்வார்கள். ஆனால் உயர்ந்த பதவி இருக்காது. தண்டனைகள் அடைந்து
விட்டுச் செல்வார்கள். உயர்ந்த பதவி எப்படி அடைவார்கள்
என்பதையும் தந்தை புரிய வைத்துள்ளார். ஒன்று சுயதரிசன சக்கரதாரி
ஆகுங்கள் மற்றும் ஆக்குங்கள். உறுதியான யோகியாக ஆகுங்கள்
மற்றும் ஆக்குங்கள். என்னை நினைவு செய்யுங்கள் என்று தந்தை
கூறுகிறார். நீங்கள் பிறகு கூறுகிறீர்கள், பாபா நாங்கள் மறந்து
விடுகிறோம்" என்று. வெட்கம் ஏற்படுவதில்லையா? நிறைய பேர்
உண்மையைக் கூறுவதே இல்லை. நிறைய பேர் மறந்து விடுகிறார்கள்.
யார் வந்தாலும் அவருக்கு தந்தையின் அறிமுகத்தைக் கொடுங்கள்
என்று தந்தை புரிய வைத்துள்ளார். இப்பொழுது 84ன் சக்கரம்
முடிவடைகிறது. திரும்பிச் செல்ல வேண்டும். இராமனும் சென்றார்,
இராவணனும் போய்விட்டார் .. .. .. இதனுடைய பொருள் கூட எவ்வளவு
சுலபமானது. அவசியம் சங்கமயுகமாக இருக்கும் பொழுது தான் இராமர்
மற்றும் இராவணனினுடைய பரிவாரம் இருக்கும். எல்லாமே அழிந்து போய்
விடும். மீதி குறைவானோர் இருப்பார்கள் என்பதையும்
அறிந்துள்ளீர்கள். எப்படி உங்களுக்கு இராஜ்யம் கிடைக்கும்
என்பதும் கூட இன்னும் போகப் போக எல்லாமே தெரிந்து போய் விடும்.
முன்கூட்டியே அனைத்தையும் கூற மாட்டார்கள் அல்லவா? பிறகு அது
நாடகமாக இருக்க முடியாது. நீங்கள் சாட்சியாக (பார்வையாளர்)
இருந்து பார்க்க வேண்டி உள்ளது. சாட்சாத்காரம் (காட்சிகள்)
ஆகிக் கொண்டே போகும். இந்த 84ன் சக்கரம் பற்றி உலகத்தில் யாரும்
அறியாமல் உள்ளார்கள்.
நாம் திரும்பிச் செல்கிறோம் என்பது இப்பொழுது குழந்தைகளாகிய
உங்களுடைய புத்தியில் உள்ளது. இராவண இராஜ்யத்திலிருந்து
இப்பொழுது விடுதலை கிடைக்கிறது. பிறகு நமது இராஜ்யத்தில்
வருவோம். மீதி ஒரு சில நாட்களே உள்ளன. இந்த சக்கரம் சுற்றிக்
கொண்டே இருக்கிறது அல்லவா? அநேக முறை இந்த சக்கரத்தை சுற்றி
வந்துள்ளீர்கள். எந்த கர்ம பந்தனத்தில் மாட்டி இருக்கிறீர்களோ
அதை மறந்து விடுங்கள் என்று இப்பொழுது தந்தை கூறுகிறார்.
இல்லறத்தில் இருந்தபடியே மறந்து கொண்டே செல்லுங்கள். இப்பொழுது
நாடகம் முடிவடைகிறது. நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும். இந்த
மகாபாரதப் போருக்குப் பின்னால் தான் சொர்க்க வாசல் திறக்கிறது.
எனவே கேட் வே டு ஹெவென்" (சொர்க்க வாசல்) என்ற இந்தப் பெயர்
மிகவும் நன்றாக உள்ளது என்று பாபா கூறியுள்ளார். போர்களே நடந்து
வந்துள்ளன என்று ஒரு சிலர் கூறுகிறார்கள். கூறுங்கள் -
ஏவுகணைகளின் யுத்தம் எப்பொழுது நடந்தது? இது ஏவு கணைகளின் கடைசி
யுத்தம் ஆகும். 5000 வருடங்களுக்கு முன்பு போர் மூண்டிருந்த
பொழுது இந்த வேள்வியும் (யக்ஞம்) இயற்றப்பட்டிருந்தது.
இப்பொழுது இந்தப் பழைய உலகத்தின் விநாசம் ஆகப் போகிறது. புதிய
இராஜ்யம் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது.
நீங்கள் இந்த அரசாட்சியைப் பெறுவதற்காக ஆன்மீகக் கல்வியைக்
கற்கிறீர்கள். உங்களுடைய தொழில் ஆன்மீகமானதாகும். உலகியல்
கல்வியோ உதவப் போவதில்லை. சாஸ்திரங்கள் கூட பயன்படாது. பின்
நாம் ஏன் இந்தத் தொழிலில் ஈடுபடக்கூடாது ! தந்தையோ உலகிற்கு
அதிபதி யாக ஆக்குகிறார். எனவே எந்த படிப்பில் ஈடுபட வேண்டும்
என்று சிந்திக்க வேண்டும். அவர்களோ கொஞ்சம் டிகிரி,
பட்டங்களுக்காகப் படிக்கிறார்கள். நீங்களோ இராஜ்யத்தை
அடைவதற்காகப் படிக்கிறீர்கள். எவ்வளவு இரவு பகலுக்கான
வித்தியாசம் உள்ளது. இந்த படிப்பை படிப்பதால் "கடலை" கூட
கிடைக்குமா இல்லையா என்பது தெரியாது. ஒருவருடைய சரீரம்
விடுபட்டு விட்டால் கடலையும் போய் விடும். இந்த சம்பாத்தியமோ
கூடவே செல்லக் கூடியது ஆகும். மரணம் தலை மீது உள்ளது. அதற்கு
முன்னதாக நாம் நமது முழு சம்பாத்தியம் செய்து கொண்டு விடுவோம்.
இந்த சம்பாத்தியம் செய்ய செய்ய உலகமே விநாசம் ஆகப் போகிறது.
உங்களது படிப்பு முடிவடையும் பொழுது தான் விநாசம் ஆகும். எல்லா
மனிதர்களின் கைப்பிடியில் கடலை மட்டுமே உள்ளது என்பதை நீங்கள்
அறிந்துள்ளீர்கள். அதைத் தான் குரங்கு போல பிடித்து கொண்டு
அமர்ந்துள்ளார்கள். இப்பொழுது நீங்கள் இரத்தினங்களைப் பெற்று
கொண்டிருக்கிறீர்கள். இந்த கடலைகளின் மீதுள்ள பற்றை விடுங்கள்.
நல்ல முறையில் புரிந்து கொள்ளும் பொழுது கடலைகளின் கைப்பிடியை
விட்டு விடுவார்கள். இதுவோ எல்லாமே சாம்பலாக ஆகப் போகிறது.
நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து
கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு
நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு
ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. ஆன்மீகப் படிப்பை படிக்க வேண்டும் மற்றும் படிப்பிக்க
வேண்டும். அழியாத ஞான இரத்தினங்களால் நமது கையை நிரப்பி கொள்ள
வேண்டும். கடலைகளுக்குப் பின்னால் நேரத்தை வீணாக்கக் கூடாது.
2. இப்பொழுது நாடகம் முடிவடைகிறது. எனவே சுயம் தங்களை
கர்மபந்தனத்திலிருந்து விடுவிக்க வேண்டும். சுய தரிசன சக்கரதாரி
ஆக வேண்டும் மற்றும் ஆக்க வேண்டும். (மதர் ஃபாதர்) தாய்
தந்தையைப் பின்பற்றி இராஜ்ய பதவிக்கு அதிகாரி ஆக வேண்டும்.
வரதானம்:
எண்ணத்தை கூட செக் செய்து வீணானவற்றின் கணக்கை முடித்து விடக்
கூடிய சிறந்த சேவாதாரி ஆவீர்களாக.
யாருடைய ஒவ்வொரு சங்கல்பமும் சக்திசாலியாக உள்ளதோ அவரே சிரேஷ்ட
சேவாதாரி ஆவார். ஒரு சங்கல்பம் கூட எங்குமே வீணாகி போய்
விடக்கூடாது. ஏனெனில் சேவாதாரி உலகம் என்ற மேடையில்
நடிப்பவர்கள். முழு உலகமே உங்களை காப்பி செய்கிறது. நீங்கள் ஒரு
எண்ணத்தை கூட வீண் செய்தீர்கள் என்றால் உங்களுக்காக மட்டும்
வீண் செய்ய வில்லை. ஆனால் அநேகருக்கு வீண் செய்ய கருவி ஆகி
விட்டீர்கள். எனவே இப்பொழுது வீணானவற்றின் கணக்கை முடித்து
விட்டு சிரேஷ்ட சேவாதாரி ஆகுங்கள்.
சுலோகன்:
சேவையின் வாயுமண்டலத்தின் கூடவே எல்லையில்லாத வைராக்கிய
உள்ளுணர்வின் வாயு மண்டலத்தை அமையுங்கள்.
அவ்யக்த சமிக்ஞை: கம்பைண்டு ரூபத்தின் நினைவினால் எப்பொழுதும்
வெற்றியாளர் ஆகுங்கள்.
சங்கமயுகம் இருப்பதே இணைந்து இருப்பதற்கான யுகம்.
தந்தையிடமிருந்து தனியாக ஆகி இருக்க முடியாது.
எக்காலத்திற்குமான தோழன் ஆவீர்கள். எப்பொழுதும் தந்தையின் கூட
இருப்பது என்றால் எப்பொழுதும் திருப்தியாக இருப்பது. தந்தை
மற்றும் நீங்கள் எப்பொழுதும் கம்பைண்டு ஆக இருக்கிறீர்கள்
என்றால் இணைந்திருப்பதின் சக்தி மிகவும் பெரியது ஆகும். ஒரு
காரியத்திற்கு பதிலாக ஆயிரம் காரியங்களை செய்ய முடியும்.
ஏனெனில் ஆயிரம் தோள்களை கொண்ட தந்தை உங்கள் கூடவே இருக்கிறார்.