23-04-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! இப்போது நாடகம்
முடிவடைகின்றது. வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும்.
கலியுகக் கடைசிக்குப் பிறகு சத்யுகம் மறுபடியும் வரும். இந்த
இரகசியத்தை அனைவருக்கும் புரிய வையுங்கள்.
கேள்வி:
ஆத்மா பாகத்தை நடித்து-நடித்தே
களைத்துப்போனது. களைப்பிற்கான முக்கியக் காரணம் என்ன?
பதில்:
அதிக பக்தி செய்து, அநேகக்
கோவில்கள் கட்டி, பணம் செலவழித்தாயிற்று. அடி வாங்கி-வாங்கி
சதோபிரதான ஆத்மா தமோபிரதானமாக ஆகி விட்டது. தமோபிரதானமாக ஆகி
விட்ட காரணத்தால் தான் துக்கம் அடைந்துள்ளது. ஏதாவதொரு
விசயத்தால் ஒருவர் சலிப்படைந்து விடும் போது களைப்பாகி
விடுகிறது. இப்போது, அனைத்துக் களைப்பையும் போக்குவதற்காக பாபா
வந்துள்ளார்.
ஓம் சாந்தி.
ஆன்மிகத் தந்தை வந்து குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார்.
அவருடைய பெயர் என்ன? சிவா. இங்கே அமர்ந்திருக்கிறீர்கள் என்றால்
குழந்தைகளுக்கு நல்லபடியாக நினைவு இருக்க வேண்டும். இந்த
டிராமாவில் அனைவருக்கும் என்ன பாகம் உள்ளதோ, அது அனைத்துமே
இப்போது முடிவடைகின்றது. நாடகம் முடிவடையப் போகிறதென்றால்
நடிகர்கள் அனைவருமே இப்போது நமது பாகம் முடிடையப் போகிற தென்பதை
உணாந்திருக்கிறார்கள். இப்போது வீட்டுக்குச் செல்ல வேண்டும்.
குழந்தைகளாகிய உங்களுக்கும் பாபா இப்போது புரிய வைத்துள் ளார்.
இந்தப் புரிதல் வேறு யாருக்குமே கிடையாது. இப்போது பாபா உங்களை
புத்திசாலி களாக ஆக்கியிருக்கிறார். குழந்தைகளே, இப்போது நாடகம்
முடிவடைகின்றது, இப்போது புதிதாக சக்கரம் சுற்ற ஆரம்பமாகின்றது.
புது உலகத்தில் சத்யுகம் இருந்தது. இப்போது பழைய உலகத்தில்
இந்தக் கலி யுகத்தின் கடைசிநேரம். இவ்விஷயங்களை நீங்கள் தான்
அறிவீர்கள். உங்களுக்குத் தான் தந்தை கிடைத்துள்ளார். புதிதாக
யாரேனும் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கும் இதைப் புரிய
வைக்க வேண்டும் - இப்போது நாடகம் முடிவடைகின்றது, கலியுகக்
கடைசிக்குப் பிறகு சத்யுகம் திரும்பவும் வந்தாக வேண்டும்.
இப்போது இவ்வளவு அநேகம் பேர் உள்ளனர் என்றால் இவர்கள் அனைவரும்
தங்களின் வீட்டுக்குத் திரும்பிச் சென்றாக வேண்டும். இப்போது
நாடகம் முடிவடை கின்றது. இதன் மூலம் மனிதர்கள் பிரளயம் வரும்
என்று புரிந்து கொள்கின்றனர். இப்போது பழைய உலகத்தின் விநாசம்
எப்படி ஏற்படுகிறது என்று நீங்கள் அறிவீர்கள். பாரதமோ அவிநாசி
கண்டம். பாபாவும் இங்கே தான் வருகிறார். மற்ற அனைத்துக்
கண்டங்களும் அழிந்து போகும். இந்தச் சிந்தனைகள் வேறு யாருடைய
புத்தியிலும் வர முடியாது. பாபா குழந்தைகளாகிய உங்களுக்குப்
புரிய வைக்கிறார், இப்போது நாடகம் முடிவடைகின்றது, இது மீண்டும்
பழையபடி ஆரம்பமாகும். முன்பு நாடகம் என்ற பெயர் கூட உங்கள்
புத்தியில் இல்லாதிருந்தது. இது சிருஷ்டி நாடகம், இதில் நாம்
நடிகர்கள் என்று ஒரு பேச்சுக்காக சொல்லி வைத்தனர். முன்பு நாம்
சொல்லும் போது சரீரம் என உணர்ந்திருந்தோம். இப்போது பாபா
சொல்கிறார், தங்களை ஆத்மா என உணருங்கள் மற்றும் பாபாவை நினைவு
செய்யுங்கள். இப்போது நாம் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல
வேண்டும். அது இனிமையான வீடு. (பரந்தாமம்) அந்த நிராகாரி
உலகத்தில் ஆத்மாக்கள் நாம் வசிக்கிறோம். இந்த ஞானம் எந்த ஒரு
மனிதரிடமும் இல்லை. இப்போது நீங்கள் சங்கம யுகத்தில்
இருக்கிறீர்கள் இப்போது நாம் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று
. நீங்கள் அறிவீர்கள். பழைய உலகம் அழிந்ததென்றால் பக்தியும்
முடிந்தது. முதல்-முதலில் யார் வருகிறார்கள், எப்படி இந்த
தர்மங்கள் நம்பர்வார் வருகின்றன-இவ்விஷயங்கள் எந்த ஒரு
சாஸ்திரத்திலும் கிடையாது. இந்தத் தந்தை புது விஷயங்களைப்
புரிய வைக்கிறார். இதை வேறு யாராலும் புரிய வைக்க முடியாது.
பாபாவும் ஒரே ஒரு தடவை வந்து புரிய வைக்கிறார். ஞானக்கடலாகிய
பாபா வருவதே ஒரு தடவை தான், அதுவும் புதிய உலகின் ஸ்தாபனை
மற்றும் பழைய உலகின் விநாசம் செய்ய வேண்டிய சமயத்தில். பாபாவின்
நினைவோடு கூடவே இந்தச் சக்கரமும் புத்தியில் இருக்க வேண்டும்.
இப்போது நாடகம் முடிவடைகின்றது. நாம் வீட்டுக்குச் செல்கிறோம்.
பார்ட் நடித்து-நடித்தே களைத்துப் போனோம். பணமும் செலவழித்தோம்,
பக்தி செய்து-செய்தே நாம் சதோபிர தானத்திலிருந்து தமோபிரதானமாக
ஆகி விட்டோம். உலகமே பழையதாக ஆகி விட்டது. நாடகம் பழையது எனச்
சொல்வார்களா? நாடகமோ ஒருபோதும் பழையதாக ஆவதில்லை. நாடகமோ
என்றும் புதியதாகவே உள்ளது. இது நடந்து கொண்டே இருக்கிறது.
மற்றப்படி உலகம் பழையதாக ஆகிறது. நடிகர்கள் நாம் தமோபிரதான
துக்கம் நிறைந்தவர்களாக ஆகி விடுகிறோம். களைத்துப் போகிறோம்.
சத்யுகத்தில் களைத்துப் போவதில்லை. எந்த விஷயத்திலும் களைத்துப்
போவதற் கான அல்லது சலிப்படைவதற்கான தேவை இல்லை. இங்கோ அநேக
விதமான துன்பங்கள் காணப்படுகின்றன. நீங்கள் அறிவீர்கள், இந்தப்
பழைய உலகம் அழிந்துவிடப் போகின்றது. உறவினர் முதலான எந்த ஒரு
நினைவும் வரக் கூடாது. ஒரு தந்தையை மட்டுமே நினைவு செய்ய
வேண்டும். இதன் மூலம் தான் விகர்மங்கள் விநாசமாகும்.
விகர்மங்கள் விநாசமாவதற் கான வேறு எந்த ஓர் உபாயமும் கிடையாது.
கீதையிலும் கூட மன்மனாபவ என்ற சொல் உள்ளது. ஆனால் அர்த்தத்தை
யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லை. பாபா சொல்கிறார், என்னை
நினைவு செய்யுங்கள், ஆஸ்தியை நினைவு செய்யுங்கள். நீங்கள்
உலகத்தின் வாரிசாக, அதாவது எஜமானர்களாக இருந்தீர்கள். இப்போது
நீங்கள் உலகத்தின் வாரிசாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். ஆகவே
எவ்வளவு குஷி இருக்க வேண்டும்! இப்போது நீங்கள் சோழியில்
இருந்து வைரமாக ஆகிக் கொண்டிருக்கிறீர்கள். இங்கே நீங்கள்
வந்திருப்பதே பாபாவிடம் இருந்து ஆஸ்தி பெறுவதற் காக. நீங்கள்
அறிவீர்கள், எப்போது கலைகள் குறைந்து விடுகின்றனவோ, அப்போது
பூக்களின் தோட்டம் வாடிப் போகின்றது. இப்போது நீங்கள் பூக்களின்
தோட்டமாக ஆகிறீர்கள். சத்யுகம் தோட்டம் என்றால் எவ்வளவு அழகாக
உள்ளது! பிறகு கொஞ்சம்-கொஞ்சமாகக் கலைகள் குறைந்து கொண்டே
போகின்றன. இரண்டு கலைகள் குறைந்தன என்றால் தோட்டம் வாடிப் போனது.
இப்போதோ முள் நிறைந்த காடாக ஆகி விட்டுள்ளது. இப்போது நீங்கள்
அறிவீர்கள், உலகத்திற்கு எதுவுமே தெரியாது. இந்த ஞானம்
உங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கிறது. இது புதிய
உலகத்திற்கான புதிய ஞானம். புதிய உலகம் ஸ்தாபனை ஆகின்றது.
ஸ்தாபனை செய்பவர் பாபா. வந்து சொர்க்கத்தைப் படையுங்கள் என்று
அவரைத் தான் நினைவு செய்கின்றனர். சுகதாமத்தை
உருவாக்குவீர்களானால் நிச்சயமாக துக்க உலகம் விநாசமாகும்
இல்லையா? பாபா தினந்தோறும் புரிய வைத்துக் கொண்டே இருக்கிறார்.
அதை தாரணை செய்து பிறகு மற்றவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும்.
முதல்-முதலிலோ முக்கிய விஷயத்தைப் புரிய வைக்க வேண்டும்-
நம்முடைய தந்தை யார்? அவரிடமிருந்து நாம் ஆஸ்தி பெற வேண்டும்.
பக்தி மார்க்கத்திலும் காட் ஃபாதர் எனச் சொல்லி நினைவு
செய்கின்றனர்-எங்களது துக்கத்தைப் போக்கி சுகம் கொடுங்கள். ஆக,
குழந்தைகளாகிய உங்களுடைய புத்தியிலும் கூட நினைவு இருக்க
வேண்டும். பள்ளிக்கூடத்தில் மாணவர்களின் புத்தியில் ஞானம்
உள்ளது, வீடு-வாசல் பற்றிய நினைவு அல்ல. மாணவ வாழ்க்கையில்
வேலை-தொழில்கள் பற்றிய விஷயங்கள் இருப்ப தில்லை. படிப்பு தான்
நினைவிலிருக்கும். இங்கோ பிறகு கர்மங்களை செய்து கொண்டே, இல்லற
விவகாரங்களில் இருந்தவாறே இந்தப் படிப்பைப் படியுங்கள் என பாபா
சொல்கிறார். அவ்வாறின்றி சந்நியாசிகளைப் போல் வீடு-வாசலை விட்டு
விடுங்கள் எனச் சொல்வதில்லை. இது இராஜ யோகமாகும். இது இல்லற
மார்க்கம். உங்களுடையது ஹடயோகம் என்று சந்நியாசிகளுக்கும் கூட
நீங்கள் சொல்ல முடியும். நீங்கள் (சந்நியாசிகள்) வீடு-வாசலை
விட்டு விடுகிறீர்கள், இங்கே அந்த விஷயம் கிடையாது.. இந்த உலகமே
எப்படி அழுக்காக உள்ளது! இதில் என்ன ஈடுபாடு இருக்கும்? ஏழைகள்
முதலானோர் எப்படி இருக்கிறார்கள்? பார்க்கும் போதே இதன் மீது
வெறுப்பு வருகின்றது. வெளியிலிருந்து பார்வையாளர்கள்
வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு மிக நல்ல-நல்ல இடங்களைக்
காண்பித்து விடுகின்றனர். ஏழைகள் முதலானோர் எப்படி அழுக்கில்
இருந்து கொண்டிருக்கிறார்கள் - அதையெல்லாம் காட்டுவதில்லை.
இதுவோ நரகமே தான். அதிலும் வேறுபாடோ அதிகம் இல்லையா?
பணக்காரர்கள் எங்கே வசிக்கின்றனர், ஏழைகள் எங்கே வசிக் கின்றனர்!
கர்மங்களின் கணக்கு தான் இல்லையா? சத்யுகத்தில் இதுபோன்ற
அழுக்கு இருக்க முடியாது. அங்கேயும் வேறுபாடோ உள்ளது இல்லையா?
சிலர் தங்கத்தால் மாளிகை உருவாக்குவார்கள். சிலர் வெள்ளியாலும்
சிலர் செங்கலாலும் கட்டுவார்கள். இங்கோ எத்தனை கண்டங்கள் உள்ளன!
ஓர் ஐரோப்பியக் கண்டமே எவ்வளவு பெரியது! அங்கோ (சத்யுகத்தில்)
நாம் மட்டுமே இருப்போம். இதுவும் கூட புத்தியில் இருக்குமானால்
எவ்வளவு மகிழ்ச்சி நிறைந்த மனநிலை இருக்கும்! மாணவர்களின்
புத்தியில் படிப்பு தான் நினைவிருக்கும் - தந்தை மற்றும் ஆஸ்தி.
இதுவோ புரிய வைக்கப்பட்டுள்ளது, இன்னும் கொஞ்சம் சமயமே உள்ளது.
அவர்களோ இலட்சக் கணக்கான- ஆயிரக் கணக்கான வருடங்கள் எனச் சொல்லி
விடுகின்றனர். இங்கோ விஷயமே 5000 வருடங்களுக்கானது தான்.
குழந்தைகள் நீங்கள் புரிந்து கொள்ள முடியும், இப்போது நமது
இராஜதானியின் ஸ்தாபனை ஆகிக் கொண்டிருக்கிறது. மற்றபடி முழு
உலகமும் அழிந்து போகும். இது படிப்பு இல்லையா? புத்தியில் இது
நினைவு இருக்க வேண்டும்-நாம் மாணவர்கள், நமக்கு பகவான் படிப்பு
சொல்லித் தருகிறார். அப்போதும் எவ்வளவு குஷி இருக்கும்! இது ஏன்
மறந்து போகிறது? மாயா மிகவும் சக்தி வாய்ந்தது. அது மறக்கடித்து
விடுகின்றது. பள்ளிக் கூடத்தில் மாணவர்கள் அனைவரும் படித்துக்
கொண்டுள்ளனர். அனைவரும் அறிந்துள்ளனர், நமக்கு பகவான் கற்றுத்
தருகிறார். அங்கோ அநேக விதமாகக் கல்வி கற்றுத்தரப் படுகின்றது.
அநேக ஆசிரியர்கள் உள்ளனர். இங்கோ (சங்கமயுகத்தில்) ஒரே ஓரு
ஆசிரியர். ஒரே படிப்பு. மற்றபடி உதவியாளர்களான ஆசிரியர்களோ
அவசியம் வேண்டும். பள்ளிக்கூடம் ஒன்று தான். மற்றப்படி கிளைகள்
அநேகம் உள்ளன. கற்பிப்பவர் ஒரு தந்தை தான். தந்தை வந்து அனை
வருக்கும் சுகம் தருகிறார். நீங்கள் அறிவீர்கள்,
அரைக்கல்பத்திற்கு நாம் சுகமாக இருப்போம். ஆக, இந்தக் குஷியும்
இருக்க வேண்டும் - சிவபாபா நமக்குக் கற்றுத் தருகிறார். சிவபாபா
சொர்க்கத்தின் படைப்பைப் படைக்கின்றார். நாம் சொர்க்கத்தின்
எஜமானராக ஆவதற்காகப் படிக்கிறோம். எவ்வளவு குஷி உள்ளுக்குள்
இருக்க வேண்டும்! அந்த மாணவர்களும் கூட சாப்பிட்டுக் கொண்டும்
அருந்திக் கொண்டும் வீட்டின் அனைத்து காரியங்களையும்
செய்கின்றனர். ஆம், யாராவது ஹாஸ்டலில் உள்ளனர் என்றால்
படிப்பின் மீது அதிக கவனம் இருக்கும். சேவை செய்வதற்காகப் பெண்
குழந்தைகள் வெளியில் தங்குகின்றனர். எப்படி-எப்படி மனிதர்கள்
எல்லாம் அங்கே வருகின்றனர்! இங்கோ நீங்கள் எவ்வளவு பாதுகாப்பாக
இருக்கிறீர்கள்! யாரும் உள்ளே பிரவேசிக்க முடியாது. இங்கே
யாருடைய சங்கமும் கிடையாது. பதீதர்களுடன் பேச வேண்டிய தேவை
கிடையாது. நீங்கள் யாருடைய முகத்தையும் பார்க்க வேண்டிய
தேவையும் கிடையாது. பிறகும் கூட வெளியில் வசிப்பவர்கள் வேகமாகச்
சென்று விடுகின்றனர். எப்படிப் பட்ட அதிசயம்! வெளியில் தங்கி
இருப்பவர்கள் எத்தனைப் பேருக்குப் படிப்பித்து,, தங்களுக்குச்
சமமாக ஆக்கி அழைத்து விருகின்றனர்! பாபா சமாச்சாரத்தைக்
கேட்கிறார் - எப்படி நோயாளிகளை அழைத்து வந்திருக்கிறீர்கள்?
யாராவது மிகவும் மோசமான நோயாளிகள் என்றால் அவர்கள் 7 நாள்
பட்டியில் வைக்கப்படுகிறார்கள். இங்கே எந்த ஒரு சூத்திரரையும்
அழைத்து வரக் கூடாது. இந்த மதுபன், பிராமணர்களாகிய உங்களுடைய
கிராமம் போன்றது. இங்கே தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு
அமர்ந்து புரிய வைக்கிறார். உலகத்திற்கு எஜமானர் ஆக்குகிறார்.
யாராவது சூத்திரர் களை அழைத்து வருவார்களானால் வைப்ரேஷனைக்
கெடுத்து விடுவார்கள். குழந்தைகளாகிய உங்களுடைய நடத்தையும்
மிகவும் இராயலாக (மேலானதாக) இருக்க வேண்டும்.
இன்னும் போனால் உங்களுக்கு அதிக சாட்சாத்காரம் ஆகிக் கொண்டே
இருக்கும் - அங்கே என்னென்ன இருக்கும்? மிருகங்களும் கூட
எவ்வளவு நல்ல-நல்லதாக இருக்கும்! அனைத்தும் நல்ல பொருட்களாக
இருக்கும். சத்யுகத்தின் எந்த ஒரு பொருளும் இங்கே இருக்க
முடியாது. உங்களுடைய புத்தியில் உள்ளது, நாம்
சொர்க்கத்திற்காகப் பரீட்சை பாஸ் செய்து கொண்டி ருக்கிறோம்.
எவ்வளவு படிக்கிறோமோ, அவ்வளவு பிறகு மற்றவர்களுக்கும் கற்றுக்
கொடுப்போம். ஆசிரியராகி மற்றவர்களுக்கு வழி சொல்கின்றனர்.
அனைவரும் ஆசிரியர்கள். அனைவருக்கும் கற்றுக் கொடுக்க வேண்டும்.
முதல்-முதலிலோ தந்தையின் அறிமுகம் கொடுத்து, சொல்ல வேண்டும் -
தந்தையிடமிருந்து இந்த ஆஸ்தி கிடைக்கின்றது. கீதையை பாபா
சொல்லியிருக் கிறார். கிருஷ்ணர் பாபாவிடம் ஞானம் கேட்டு இந்தப்
பதவி பெற்றுள்ளார். பிரஜாபிதா பிரம்மா இருக்கிறார் என்றால்
பிராமணர்களும் கூட இங்கே வேண்டும். பிரம்மாவும் சிவபாபாவிடம்
படித்துக் கொண்டே இருக்கிறார். இப்போது நீங்கள் விஷ்ணுபுரி
செல்வதற்காகப் படிக்கிறீர்கள். இது உங்களுடைய அலௌகிக வீடு.
லௌகிக், பரலௌகிக், பிறகு அலௌகிக். புது விசயம் இல்லையா? பக்தி
மார்க்கத்தில் ஒருபோதும் பிரம்மாவை நினைவு செய்வதில்லை. பிரம்மா
பாபா எனச் சொல்வதற்கு யாருக்கும் தோன்றுவதில்லை.
துக்கத்திலிருந்து விடுவியுங்கள் என்று சிவபாபாவை நினைவு
செய்கின்றனர். இவர் பரலௌகிக் தந்தை. இவர் (பிரம்மா) பிறகு
அலௌகிக். இவரை நீங்கள் சூட்சுமவதனத்திலும் பார்க்கிறீர்கள்.
பிறகு இங்கேயும் பார்க்கிறீர்கள். லௌகிக் தந்தை யையோ இங்கே
பார்க்க முடியும். பரலௌகிக் தந்தையையோ பரலோகத்தில் தான்
பார்க்க இயலும். இவர் (பிரம்மா) பிறகு அலௌகிக அற்புதமான தந்தை.
இந்த அலௌகிகத் தந்தையை அறிந்து கொள்வதில் குழம்பிப் போகின்றனர்.
சிவபாபாவைப் பற்றியோ நிராகார் எனச் சொல்வார்கள். நீங்கள்
சொல்வீர்கள், அவர் ஒரு புள்ளியாக இருக்கிறார். அவர்களோ (பக்தியில்)
அகண்ட ஜோதி அல்லது பிரம்மம் எனச் சொல்லி விடுகின்றனர். அநேக
வழிமுறைகள் உள்ளன. உங்களுக்கோ ஒரே வழிமுறை. ஒருவர் மூலமாக பாபா
வழிமுறை தரத் தொடங்கினார், பிறகு எவ்வளவு விருத்தி ஆகின்றது!
ஆக, குழந்தைகள் உங்கள் புத்தியில் இருக்க வேண்டும் - நமக்கு
சிவபாபா படிப்பு சொல்லித் தந்து கொண்டிருக்கிறார்.
பதீதத்திலிருந்து பாவனமாக்கிக் கொண்டி ருக்கிறார். இராவண
இராஜ்யத்தில் நிச்சயமாக பதீதம் தமோபிரதானமாக ஆகியே தீர வேண்டும்.
பெயரே பதீத உலகம். அனைவரும் துக்கம் நிறைந்தவர்களாகவும் உள்ளனர்.
பாபா, எங்கள் துக்கத்தைப் போக்கி சுகம் கொடுங்கள் என்று அதனால்
தான் பாபாவை நினைவு செய்கின்றனர். குழந்தைகள் அனைவருக்கும்
தந்தை ஒருவர் தான். அவரோ அனைவருக்கும் சுகம் தருவார் இல்லையா?
புது உலகத்திலோ சுகத்தின் மேல் சுகம். மற்ற அனைவரும்
சாந்திதாமத்தில் இருப்பார்கள். இது புத்தியில் இருக்க வேண்டும்
- இப்போது நாம் சாந்திதாமத்திற்குப் போகப் போகிறோம். எவ்வளவு
அருகில் வந்து கொண்டே இருக்கிறீர்களோ, அப்போது இன்றைய உலகம்
என்பதென்ன, நாளைய உலகம் என்னவாக இருக்கும்? அனைத்தையும்
பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். சொர்க்கத்தின் இராஜபதவியை
அருகில் பார்த்துக் கொண்டே இருப்பீர்கள். ஆக, குழந்தைகளுக்கு
முக்கிய விசயத்தைப் புரிய வைக்கிறார் - புத்தியில் இது
நினைவிருக்க வேண்டும், அதாவது நாம் பள்ளிக்கூடத்தில்
அமர்ந்துள்ளோம். சிவபாபா இந்த இரதத்தில் சவாரி செய்து
வந்துள்ளார், நமக்குப் படிப்பு சொல்லித் தருவதற்காக. இவர்
பாகீரதம். பாபாவும் ஒரு முறை தான் அவசியம் வருவார்.
பாகீரதத்தின் பெயர் என்ன என்பது கூட யாருக்கும் தெரியாது.
இங்கே குழந்தைகள் நீங்கள் எப்போது பாபாவின் முன்னிலையில்
அமர்கிறீர்களோ, அப்போது புத்தியில் நினைவிருக்க வேண்டும், பாபா
வந்து விட்டார் - நமக்கு சிருஷ்டிச் சக்கரத்தின் இரகசியத்தைச்
சொல்லிக் கொண்டிருக்கிறார். இப்போது நாடகம் முடிவடைகின்றது,
இப்போது நாம் வீட்டுக்குச் செல்ல வேண்டும். இதை புத்தியில்
வைப்பது எவ்வளவு சுலபம்! ஆனால் இதையும் கூட நினைவு செய்ய
முடிவதில்லை. இப்போது சக்கரம் முடிவடைகின்றது. இப்போது நாம்
மீண்டும் புதிய உலகிற்கு வந்து பாகத்தை நடிக்க வேண்டும். பிறகு
நமக்குப் பின்னால் யார் யார் வருவார்கள். இந்தச் சக்கரம்
முழுவதும் எப்படிச் சுற்றுகிறது, உலகம் எப்படி விருத்தி
யடைகின்றது என்று நீங்கள் அறிவீர்கள். புதியதிலிருந்து பழையதாக,
பிறகு பழையதிலிருந்து புதியதாக ஆகின்றது. விநாசத்திற்கான
ஏற்பாடுகளையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். இயற்கை
சேதங்களும் நடைபெறப் போகின்றன. இவ்வளவு வெடிகுண்டுகளைத்
தயாரித்து வைத்துள்ளனர் என்றால் பயன்படுத்து வதற்காகத் தான்
இல்லையா? வெடிகுண்டுகளால் தான் இவ்வளவு (அழிவிற்கான) வேலை
நடைபெறும். அதனால் மனிதர்கள் சண்டையிடுவதற்குத் தேவை
இல்லாமற்போகும். சேனைகளைப் பிறகு (பயன் படுத்தாமல்)
விடுவித்துக் கொண்டே செல்வார்கள். வெடிகுண்டுகளை மட்டும் வீசிக்
கொண்டே செல்வார்கள். பிறகு இவ்வளவு மனிதர் களும் வேலையை
விட்டுச் சென்று விடுவார்கள். அப்போது பட்டினியால் செத்துப்
போவார்கள் இல்லையா? இவை அனைத்தும் நடக்கப் போகின்றன. பிறகு
சிப்பாய் முதலானவர்கள் என்ன செய்வார்கள்? நிலநடுக்கங்கள் நடந்து
கொண்டே இருக்கும். வெடிகுண்டுகள் விழுந்து கொண்டே இருக்கும்.
ஒருவர் மற்றவரைக் கொன்று கொண்டே இருப்பார்கள். இரத்த ஆறு ஓடும்
நாடகமோ நடக்கப் போகிறது இல்லையா? ஆக, இங்கே எப்போது வந்து
அமர்கிறீர்களோ, இந்த விஷயங்களைப் பற்றிச் சிந்தனை செய்ய
வேண்டும். சாந்திதாமம், சுகதாமத்தை நினைவு செய்து கொண்டே
இருங்கள். மனதைக் கேளுங்கள், நமக்கு என்ன நினைவிருக்கிறது?
பாபாவின் நினைவு இல்லையென்றால் நிச்சயமாக புத்தி எங்கோ
அலைகின்றது. விகர்மங்களும் விநாசமாகாது. பதவியும் குறைந்து
போகும். நல்லது, பாபாவின் நினைவு நிற்கவில்லை என்றால்
சக்கரத்தைப் பற்றிச் சிந்தனை செய்தாலும் கூட குஷி அதிகரிககும்.
ஆனால் ஸ்ரீமத் படி நடப்பதில்லை, பாப்தாதாவின் மனதில் இடம்
பிடிக்க முடியாது, சேவை செய்யவில்லையென்றால் அநேகருக்குத்
தொந்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். சிலரோ அநேகரைத்
தங்களைப் போல் ஆக்கி, பாபாவிடம் அழைத்து வருகின்றனர். ஆக, பாபா
அதைப் பார்த்துக் குஷி அடைகின்றார். நல்லது.
இனிமையிலும் இனிமையான தேடிக்கண்டெடுக்கப் பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமாகிய பாப்தாதாவின் அன்பு நினைவு
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே!
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) சதா மகிழ்ச்சியாக இருப்பதற்காக புத்தியில் படிப்பு மற்றும்
படிப்பைச் சொல்லித் தரும் பாபாவின் நினைவு இருக்க வேண்டும்.
உண்ணும் போதும் அருந்தும் போதும் காரியங்கள் அனைத்தையும் செய்து
கொண்டும் படிப்பின் மீது முழு கவனம் செலுத்த வேண்டும்.
2) பாப்தாதாவின் மனதில் இடம் பிடிப்பதற்கு ஸ்ரீமத் படி அநேகரைத்
தங்களைப் போல் ஆக்குகிற சேவை செய்ய வேண்டும். யாரையும்
துன்பமடையச் செய்யக் கூடாது.
வரதானம்:
அசரீரி நிலையின் இஞ்செக்ஷன் மூலம் மனதைக் கட்டுப்படுத்தக்
கூடிய ஒருமுகத் தன்மை உள்ளவர் ஆகுக.
தற்காலத்தில் எப்படி ஏதாவது கட்டுப்பாட்டில் வருவதில்லை என்றால்
மிகவும் தொந்தரவுக் குள்ளாகி விடுகிறார்கள். ஆவேசப்
படுகிறார்கள். அல்லது பைத்தியமாகி விடுகிறார்கள். எனவே
அவர்களுக்கு அத்தகைய ஓர் இஞ்செக்ஷன் போட்டு விடுகிறார்கள் -
அதனால் அவர்கள் அமைதி யாகி விடுகிறார்கள். அது போல் சங்கல்ப
சக்தி உங்கள் கட்டுப்பாட்டில் வருவதில்லை என்றால் அசரீரி
நிலையின் இஞ்செக்ஷன் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு சங்கல்ப சக்தி
வீணாகிப் போகாது. சுலபமாக ஒருமுகத்தன்மை அமைந்து விடும். ஆனால்
புத்தியின் லகானை பாபாவிடம் கொடுத்துவிட்டுப் பிறகு திரும்ப
எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் மனம் வீண் முயற்சியில் போட்டு
விடுகிறது. இப்போது வீண் முயற்சியில் இருந்து விடுபடுங்கள்.
சுலோகன்:
தனது மூதாதையர் (பூர்வஜ்) சொரூபத்தை ஸ்மிருதியில் வைத்து
அனைத்து ஆத்மாக்கள் மீதும் இரக்கம் கொள்ளுங்கள்.
அவ்யக்த இஷாரா : இணைந்த ரூபத்தின் ஸ்மிருதி மூலம் சதா
வெற்றியாளர் ஆகுங்கள்
எப்படி சரீரம் மற்றும் ஆத்மா இரண்டும் இணைந்து
காரியமாற்றுகின்றனவோ, அது போல் கர்மம் மற்றும் யோகம் இரண்டும்
இணைந்திருக்க வேண்டும். கர்மம் செய்யும் போது நினைவு மறக்கக்
கூடாது. மற்றும் நினைவு செய்யும் போது கர்மம் மறக்கக் கூடாது.
ஏனென்றால் உங்கள் டைட்டிலே கர்மயோகி. கர்மம் செய்யும் போது
நினைவில் இருப்பார்கள். சதா விலகியும் அன்பான வராகவும்
இருப்பார்கள். லேசாகவும் இருப்பார்கள். ஞானம் நிறைந்தவராக
இருப்பதுடன் சக்திசாலி ஸ்டேஜில் இருப்பார்கள். ஞானம் நிறைந்தவர்
மற்றும் சக்தி நிறைந்தவர் - இந்த இரண்டு ஸ்டேஜ்களும் இணைந்த
நிலையில் இருக்க வேண்டும். அப்போது ஸ்தாபனையின் காரியம் தீவிர
வேகத்துடன் நடைபெறும்.