24-04-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! வைஜயந்தி (வெற்றி)
மாலையில் வருவதற்காக நிரந்தரமாக தந்தையை நினைவு செய்யுங்கள்,
தனது நேரத்தை வீணாக்காதீர்கள், படிப்பின் மீது முழுமையான கவனம்
வையுங்கள்.
கேள்வி:
தந்தை தனது குழந்தைகளிடம் என்ன
வேண்டுகோள் விடுக்கிறார்?
பதில்:
இனிமையான குழந்தைகளே! - நல்ல
விதமாக படித்துக் கொண்டே இருங்கள். தந்தையின் தாடிக்கு மரியாதை
வையுங்கள். தந்தையின் பெயர் கெட்டு விடும்படியான தீய காரியம்
செய்யா தீர்கள். சத்யமான தந்தை, சத்யமான ஆசிரியர், சத்யமான
குருவை ஒருபோதும் நிந்தனை செய்யா தீர்கள். தந்தை வேண்டுகோள்
விடுக்கிறார் உறுதி மொழி எடுங்கள் - படிப்பு படிக்கும் வரை
கண்டிப் பாக தூய்மையாக இருப்போம்.
பாடல்:
உங்களை அடைந்து நாங்கள் உலகை
அடைந்தோம். . .
ஓம் சாந்தி.
உங்களை அடைந்து முழு உலகின் இராஜ்யத்தை அடைகிறோம் என யார்
சொன்னது? இப்போது நீங்கள் மாணவர்களாகவும் இருக்கிறீர்கள் கூடவே
குழந்தைகளாகவும் இருக்கிறீர்கள். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை
குழந்தைகளாகிய நம்மை உலகின் எஜமானர்களாக ஆக்குவதற்காக
வந்துள்ளார் என நீங்கள் அறிவீர்கள். அவருக்கு முன்னால் நாம்
அமர்ந்துள்ளோம், மேலும் நாம் ராஜயோகம் கற்றுக் கொண்டிருக்கிறோம்
அதாவது உலகின் மகுடம் அணிந்த இளவரசன் - இளவரசி ஆவதற்காக நீங்கள்
இங்கே படிக்க வந்துள்ளீர்கள் அல்லது படிக்கிறீர்கள். இந்த பாடல்
பக்தி மார்க்கத்தில் பாடப்பட்டுள்ளது. நாம் உலகின் மஹாராஜா
மஹாராணி ஆகப் போகிறோம் என்பதை புத்தியின் மூலம் குழந்தைகள்
அறிவார்கள். தந்தை ஞானக் கடலாக இருப்பவர், மேலான (சுப்ரீம்)
ஆன்மீக ஆசிரியர் வந்து ஆத்மாக்களுக்கு படிப்பிக்கிறார். ஆத்மா
இந்த சரீரத்தின் கர்மேந்திரியங் களின் மூலம் தெரிந்துள்ளது -
நாம் தந்தையின் மூலம் உலகின் மகுடமணிந்த இளவரசன்-இளவரசி
ஆவதற்காக பாடசாலையில் அமர்ந்திருக்கிறோம். எவ்வளவு போதை இருக்க
வேண்டும். தனது ஆழ்மனதைக் கேளுங்கள் - இவ்வளவு போதை (பெருமிதம்)
மாணவர் களாகிய நமக்குள் உள்ளதா? இது புதிய விஷயம் ஏதும் இல்லை.
நாம் ஒவ்வொரு கல்பத்திலும் உலகின் கிரீடமணிந்த இளவரசன்-இளவரசி
ஆவதற்காக தந்தையிடம் வந்திருக்கிறோம். அந்த தந்தை, தந்தையாகவும்
இருக்கிறார், ஆசிரியராகவும் இருக்கிறார். தந்தை கேட்டால்
நாங்கள் சூரிய வம்சத்தின் மகுடமணிந்த இளவரசன்-இளவரசி அல்லது
முடிசூடிய இலட்சுமி நாராயணன் ஆவோம் என்று அனைவரும் கூறுகின்றனர்.
நாம் அந்த அளவு முயற்சி செய்கிறோமா என தனது மனதிற்குள்
கேளுங்கள். சொர்க்கத்தின் ஆஸ்தியைக் கொடுக்க வந்துள்ள
எல்லைக்கப்பாற்பட்ட தந்தை நமது தந்தை-ஆசிரியர்- குருவாகவும்
இருக்கிறார் எனும்போது கண்டிப்பாக ஆஸ்தியும் கூட அந்த அளவு
உயர்ந்ததிலும் உயர்ந்ததைக் கொடுப்பார். நாம் இன்று படிக்கிறோம்,
நாளை மகுடம் தரித்த இளவரசன்-இளவரசி ஆகப் போகிறோம் என்ற குஷி
அந்த அளவு இருக்கிறதா என பார்க்க வேண்டும். ஏனென்றால் இது
சங்கமயுகம் அல்லவா. இப்போது இக்கரையில் இருக்கிறீர் கள்,
அக்கரையில் இருக்கும் சொர்க்கத்திற்குச் செல்வதற்காகப்
படிக்கிறீர்கள். அங்கே அனைத்து குணங்களிலும் நிறைந்தவர்களாகவும்,
16 கலைகள் நிரம்பியவர்களாகவும் ஆகித்தான் செல்வோம். நாம் இந்த
அளவு தகுதி வாய்ந்தவர்களாக இருக்கிறோமா என தன்னிடம் கேட்டுக்
கொள்ள வேண்டும். பக்தராகிய ஒரு நாரதரின் விஷயம் அல்ல. நீங்கள்
அனைவரும் பக்தர்களாக இருந்தீர் கள், இப்போது தந்தை
பக்தியிலிருந்து விடுவிக்கிறார். நாம் தந்தையின் குழந்தைகள்
ஆகியிருக் கிறோம் - அவரிடமிருந்து ஆஸ்தியை எடுப்பதற்காக, உலகின்
மகுடம் அணியக் கூடிய இளவரசன் ஆவதற்காக வந்துள்ளீர்கள். தனது
இல்லற விஷயங்களில் இருங்கள் என்று தந்தை கூறுகிறார். வானபிரஸ்த
நிலையினருக்கு இல்லற விஷயங்களில் இருக்க வேண்டியதில்லை மற்றும்
குமார் குமாரிகள் கூட இல்லற விஷயங்களில் இல்லை. அவர்களுடையதும்
மாணவ வாழ்க்கை. பிரம்மச்சரியத்தில்தான் படிப்பு படிக்கின்றனர்.
இப்போது இந்த படிப்பு மிகவும் உயர்ந்தது, இதில் எப்போதும்
தூய்மையாக ஆகி இருக்க வேண்டும். அவர்கள் பிரம்மச்சரியத்தில்
படித்து விகாரத்தில் செல்கின்றனர். இங்கே நீங்கள்
பிரம்மச்சரியத்தில் இருந்து முழு படிப்பையும் படிக்கிறீர்கள்.
நான் தூய்மைக் கடல் என்று தந்தை கூறுகிறார், உங்களையும் அதுபோல்
ஆக்குகிறார். அரைக் கல்ப காலம் நாம் தூய்மையாக இருந்தோம் என்பதை
நீங்கள் அறிவீர்கள். தந்தையிடம் உறுதி மொழி கொடுத்திருந்தோம் -
பாபா நாங்கள் ஏன் தூய்மை அடைந்து தூய்மையான உலகின் எஜமான் ஆகக்
கூடாது. எவ்வளவு உயர்ந்த தந்தை, சாதாரண உடலில் இருக்கலாம்,
ஆனால் ஆத்மாவுக்கு போதை ஏறுகிறது அல்லவா. தந்தை தூய்மையாக்கு
வதற்காக வந்துள்ளார். நீங்கள் விகாரத்தில் சென்று சென்று
வேசியாலயத்தில் (விஷக்கட-ல்) வந்து விழுந்தீர்கள் என்று
கூறுகிறார். நீங்கள் சத்யுகத்தில் தூய்மையாக இருந்தீர்கள்.
இந்த ராதா கிருஷ்ணர் தூய்மையான இளவரசன் -இளவரசி அல்லவா. ருத்ர
மாலையையும் பாருங்கள், விஷ்ணுவின் மாலையையும் பாருங்கள். ருத்ர
மாலையே விஷ்ணுவின் மாலையாக ஆகும். வைஜெயந்தி மாலையில்
வருவதற்காக தந்தை புரிய வைக்கிறார் - முதலில் நிரந்தரமாக
தந்தையை நினைவு செய்யுங்கள், தனது நேரத்தை வீணடிக்காதீர்கள்.
இந்த சோழிகளுக்குப் பின்னால் குரங்குகளாக திரியாதீர்கள்.
குரங்குகள் கடலையை சாப்பிடும், இப்போது உங்களுக்கு தந்தை
இரத்தினங் களை கொடுத்துக் கொண்டி ருக்கிறார். பிறகு சோழிகள்
அல்லது கடலைக்குப் பின்னால் சென்றீர்கள் என்றால் என்ன நிலை
ஏற்படும். இராவணனுடைய சிறைக்குள்ளே சென்று விடுவீர்கள். தந்தை
வந்து இராவணனின் சிறையில் இருந்து விடுவிக்கிறார். தேகத்துடன்
சேர்த்து தேகத்தின் அனைத்து சம்மந்தங்களையும் புத்தியின் மூலம்
தியாகம் செய்யுங்கள் என்று சொல்கிறார். தன்னை ஆத்மா என
நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். நான் கல்பம் தோறும்
பாரதத்தில்தான் வருகிறேன் என்று பாபா கூறுகின்றார். பாரதவாசி
குழந்தைகளை உலகின் கிரீடமணிந்த இளவரசன்-இளவரசி ஆக்குகிறேன்.
எவ்வளவு சகஜமாக படிப்பிக்கிறார். 4-8 மணி நேரம் வந்து அமருங்கள்
என்றும் கூட எதுவும் சொல்வதில்லை. இல்லறவிஷயங்களில் இருந்தபடி
தன்னை ஆத்மா என புரிந்து கொண்டு என்னை நினைவு செய்தீர்கள்
என்றால் நீங்கள் தூய்மையற்றவரிலிருந்து தூய்மையானவராக ஆகி
விடுவீர்கள். விகாரத்தில் செல்பவர்கள் தூய்மையற்றவர் (பதிதர்)
என சொல்லப்படுகின்றனர். தேவதைகள் தூய்மையானவர்கள், ஆகையால்
அவர்களின் மகிமை பாடப்படுகிறது. அது அல்பகாலத்திற்கான விரல்
நகத்தளவு சுகம். காகத்தின் எச்சத்திற்கு சமமான சுகம் என்று
சன்னியாசிகள் சரியாகச் சொல்கின்றனர். தேவதைகளுக்கு எவ்வளவு
சுகம் இருக்கும் என்பது அவர்களுக்குத் தெரியாது. பெயரே சுகதாமம்.
இது துக்க தாமம். இந்த விஷயங்கள் பற்றி உலகில் யாருக்கும்
தெரியாது. தந்தைதான் வந்து ஒவ்வொரு கல்பமும் புரிய வைக்கிறார்.
ஆத்ம அபிமானியாக ஆக்குகிறார். தன்னை ஆத்மா என புரிந்து
கொள்ளுங்கள். நீங்கள் ஆத்மா, தேகம் அல்ல. தேகத்துக்கு நீங்கள்
எஜமான், தேகம் உங்கள் எஜமான் அல்ல. 84 பிறவிகள் எடுத்து எடுத்து
நீங்கள் இப்போது தமோபிர தானமாகி விட்டீர்கள். உங்களின் ஆத்மா
மற்றும் சரீரம் இரண்டும் தூய்மையிழந்து விட்டன. தேக அபிமானி
ஆனதால் உங்களால் பாவங்கள் ஏற்பட்டன. இப்போது நீங்கள் ஆத்ம
அபிமானி ஆக வேண்டும். என்னுடன் வீடு திரும்ப வேண்டும். ஆத்மா
மற்றும் தேகம் இரண்டையும் சுத்த மாக்குவதற்காக பாபா சொல்கிறார்
- மன்மனாபவ. தந்தை உங்களுக்கு இராவணனிடமிருந்து அரைக்கல்ப
காலத்திற்கு விடுதலை பெற்றுத் தந்திருந்தார். இப்போது மீண்டும்
பெற்றுத் தந்து கொண்டிருக்கிறார். அரைக்கல்பத்திற்கு நீங்கள்
சுதந்திரமாக இராஜ்யம் செய்யுங்கள். அங்கே 5 விகாரங்களின் பெயர்
இல்லை. இப்போது ஸ்ரீமத்படி நடந்து உயர்ந்தவர்களாக ஆக வேண்டும்.
எனக்குள் எந்த அளவு விகாரங்கள் உள்ளன என தனக்குத்தானே கேளுங்கள்.
ஒன்று என்னை மட்டும் நினைவு செய்யுங்கள், மேலும் சண்டை
சச்சரவில் ஈடுபடுவது முதலான எதுவும் செய்யக் கூடாது.
இல்லாவிட்டால் நீங்கள் எப்படி தூய்மையடைய முடியும்? நீங்கள்
இங்கே வந்ததே முயற்சி செய்து மாலையில் மணியாக
கோர்க்கபடுவதற்காக. தேர்ச்சி அடையாவிட்டால் பிறகு மாலையில்
கோர்க்கக் முடியாது. ஒவ்வொரு கல்பத்திற்கும் இராஜ்யத்தை இழந்து
விடுவீர்கள். பிறகு இறுதியில் மிகவும் வருந்த வேண்டியிருக்கும்.
அந்த படிப்பிலும் கூட ரெஜிஸ்டர் (பதிவேடு) இருக்கும்.
இலட்சணத்தையும் பார்ப்பார்கள். இதுவும் கூட படிப்பாகும்,
அதிகாலை எழுந்து நீங்களாக இதை படியுங்கள். பகலில் கர்மங்கள்
செய்யத்தான் வேண்டும். நேரம் கிடைக்கா விட்டால் மனிதர்களும்
கூட பக்தியை அதிகாலையில் செய்கின்றனர். இது ஞான மார்க்கம்.
பக்தியில் கூட பூஜை செய்தபடி இருக்கும்போதே பிறகு புத்தியில்
ஏதாவது ஒரு தேகதாரியின் நினைவு வந்து விடுகிறது. இங்கும் கூட
நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்கள், பிறகு தொழில் முதலானவை
நினைவுக்கு வந்து விடுகின்றன. எந்த அளவு தந்தையை நினைவு
செய்வீர்களோ, அந்த அளவு பாவங்கள் நீங்கியபடி இருக்கும்.
குழந்தைகளாகிய நீங்கள் முயற்சி செய்து செய்து முழுமையாக தூய்மை
அடைந்திடும்போது இந்த மாலை உருவாகி விடும். முயற்சியை
முழுமையாக செய்யாவிட்டால் பிரஜைகளில் சென்று விடுவீர்கள். நல்ல
விதமாக நினைவின் தொடர்பை ஏற்படுத்தி, படித்து, தனது மூட்டை
முடிச்சுகளை எதிர்காலத்திற்காக மாற்றல் செய்து விட்டீர்கள்
என்றால், அதன் பிரதிபலன் எதிர்காலத்தில் கிடைக்கும். ஈஸ்வரனின்
பெயரால் செய்தார்கள் என்றால் பின் அடுத்த பிறவியில் கிடைத்து
விடுகிறது அல்லவா. நான் நேரடியாக வருகிறேன் என்று இப்போது தந்தை
கூறுகிறார். இப்போது நீங்கள் செய்வது அனைத்தும் தனக்காக
செய்கிறீர்கள். மனிதர்கள் தான புண்ணியம் செய்கின்றனர், அது
மறைமுகமாக செய்வதாகும். இந்த சமயம் நீங்கள் தந்தைக்கு அதிகமாக
உதவி செய்கிறீர்கள். இந்த பணம் எல்லாமே அழிந்து விடும் என்பதை
நீங்கள் அறிவீர்கள். இதை விட நல்ல விதத்தில் தந்தைக்கு ஏன் உதவி
செய்யக் கூடாது. தந்தை எப்படி இராஜ்யத்தை ஸ்தாபனை செய்வார்?
படையோ, சேனை முதலானவையோ, ஆயுதம் முதலானவையோ எதுவும் இல்லை.
அனைத்தும் குப்தமாக உள்ளன. கன்யாவுக்கு வரதட்சணை கொடுக்கும்போது
ஒரு சிலர் குப்தமாக (மறைவாக) கொடுக்கின்றனர். பெட்டியை மூடி
சாவியை கையில் கொடுத்து விடு கின்றனர். சிலர் வெளியில் காட்டிக்
கொள்கின்றனர், சிலர் குப்தமாக கொடுக்கின்றனர். நீங்கள்
பிரியதர்ஷினிகள், உங்களை நான் உலகின் எஜமான் ஆக்குவதற்காக
வந்துள்ளேன். நீங்கள் குப்தமாக உதவி செய்கிறீர்கள்.
வெளிப்பகட்டு எதுவுமில்லை என ஆத்மா அறிந்துள்ளது. இது விகாரம்
நிறைந்த தூய்மையற்ற உலகம். சிருஷ்டி வளர்ச்சியடையத்தான்
வேண்டியுள்ளது. ஆத்மாக்கள் கண்டிப்பாக வரவேண்டியுள்ளது. இன்னும்
அதிகமானவர்கள் பிறவி எடுக்கத்தான் வேண்டியுள்ளது. இந்த
கணக்குப்படி பார்த்தால் தானியங்கள் தீர்ந்து போய் விடாது என்று
சொல்லவும் செய்கின்றனர். இவர்கள் அசுர புத்தியுள்ளவர்களாகவே
உள்ளனர். குழந்தைகளாகிய உங்களுக்கு இப்போது ஈஸ்வரிய புத்தி
கிடைத்துள்ளது. பகவான் கற்ப்பிக்கிறார் எனும்போது அவர் மீது
எவ்வளவு மரியாதை வைக்க வேண்டும்! எவ்வளவு படிக்க வேண்டும்.
படிப்பில் ஆர்வமற்ற குழந்தைகள் பலர் உள்ளனர். குழந்தைகளாகிய
உங்களுக்கு இது புத்தியில் இருக்க வேண்டுமல்லவா - நாம் பாபாவின்
மூலம் கிரீடம் அணியக் கூடிய இளவரசன் - இளவரசி ஆகிக்
கொண்டிருக்கிறோம். என் வழிப்படி நடந்து செல்லுங்கள், தந்தையை
நினைவு செய்யுங்கள் என பாபா இப்போது கூறுகிறார். நாங்கள் மறந்து
விடுகிறோம் என அடிக்கடி சொல்கின்றனர். நாங்கள் பாடத்தை மறந்து
விடுகிறோம் என்று மாணவர்கள் சொன்னால் ஆசிரியர் என்ன செய்வார்!
நினைவு செய்யாவிட்டால் பாவ கர்மங்கள் அழியாது. இவர்
தேர்ச்சியடையட்டும் என்று ஆசிரியர் அனைவருக்கும் கிருபை அல்லது
ஆசீர்வாதம் செய்வாரா? இங்கே இந்த ஆசீர்வாதம், கிருபையின் (இரக்கத்தின்)
விஷயம் இல்லை. படியுங்கள் என்று தந்தை சொல்கிறார். வேலை
தொழில்கள் அனைத்தும் செய்யுங்கள், ஆனால் கண்டிப்பாக படிக்க
வேண்டும். தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக வேண்டும்,
மற்றவர்களுக்கும் வழி காட்டுங்கள். நாம் தந்தையின் சேவையில்
எந்த அளவு ஈடுபட்டிருக்கிறோம் என இதய பூர்வமாக கேட்க வேண்டும்.
எவ்வளவு பேரை தனக்குச் சமமாக ஆக்குகிறோம்? திரிமூர்த்தி படம்
முன்னால் வைக்கப்பட்டுள்ளது. இவர் சிவபாபா, இவர் பிரம்மா. இந்த
படிப்பின் மூலம் இப்படி ஆகிறோம். பிறகு 84 பிறவிகளுக்குப் பிறகு
இப்படி ஆகப் போகிறோம். சிவபாபா பிரம்மாவின் உடலில் பிரவேசம்
செய்து பிராமணர்களை இப்படி ஆக்கிக் கொண்டிருக்கிறார். நீங்கள்
பிராமணர்களாக ஆகியிருக்கிறீர்கள். இப்போது தனது மனதுக்குள்
கேளுங்கள் - நாம் தூய்மையடைந்திருக்கிறோமா? தெய்வீக குணங்கள்
தாரணை செய்கிறோமா? பழைய தேகத்தை மறந்து விட்டோமா? இது பழைய
செருப்பு அல்லவா? ஆத்மா தூய்மையடைந்து விட்டால் செருப்பும் கூட
முதல் தரமானதாக கிடைக்கும். இந்த பழைய ஆடையை உதறி விட்டு புதிய
ஆடையை அணியப் போகிறோம். இந்த சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கும்.
இன்று பழைய செருப்பில் இருக்கிறோம், நாளை இந்த தேவதையாக ஆக
விரும்பு கிறோம். தந்தை மூலமாக எதிர்காலத்தில் அரைக்கல்ப
காலத்திற்கு உலகின் கிரீடமணிந்த இளவரசனாக ஆகிறோம். நம்முடைய
அந்த இராஜ்யத்தை யாரும் பறித்துக் கொள்ள முடியாது. ஆக தந்தையின்
ஸ்ரீமத்படி நடக்க வேண்டுமல்லவா. நாம் எந்த அளவு நினைவு
செய்கிறோம் என தன்னிடம் தானே கேளுங்கள். எந்த அளவு சுயதரிசன
சக்ரதாரி ஆகிறோம் மற்றும் ஆக்கு கிறோம்? யார் செய்கின்றனரோ
அவர்கள் அடைவார்கள். தந்தை தினம் தோறும் கற்பிக்கிறார்.
அனைவரிடமும் முரளி செல்கிறது. நல்லது, கிடைக்காமலும் போகலாம்,
7 நாட்களின் படிப்பு (கோர்ஸ்) கிடைத்து விட்டது அல்லவா,
புத்தியில் ஞானம் வந்து விட்டது. ஆரம்பத்தில் பட்டி உருவாகியது,
பிறகு சிலர் பக்குவமடைந்தனர், சிலர் பக்குவப்படாமல்
வெளியேறினார்கள். ஏனென்றால் மாயையின் புயல் வருகிறதல்லவா!. 6-8
மாதங்கள் தூய்மையாக இருந்து பிறகு தேக அபிமானத்தில் வந்து தன்னை
மாய்த்துக் கொள்கிறார்கள். மாயை துஷ்டத் தனமானது. அரைக்கல்பம்
மாயையிடம் தோல்வி அடைந்தீர்கள். இன்னமும் கூட தோல்வி
அடைந்தீர்கள் என்றால் பதவியும் அந்த அளவு இழந்து விடுவீர்கள்.
வரிசைக் கிரமமான பதவி நிறைய உள்ளன அல்லவா. சிலர் ராஜா-ராணி,
சிலர் பிரஜைகள், சிலருக்கு வைர வைடூரியத்தாலான மாளிகை.
பிரஜைகளிலும் கூட சிலர் மிகவும் பணக்காரராக இருக்கின்றனர்.
வைர-வைடூரியங்களாலான மாளிகைகள் இருக்கின்றன, இங்கும் கூட
பாருங்கள், பிரஜைகளிடமிருந்தும் கூட கடன் வாங்கு கின்றனர்
அல்லவா. ஆக பிரஜைகள் செல்வந்தர்களா, ராஜாவா? குருட்டு நகரத்தவர்...
இவை இப்போதைய விஷயங்கள் ஆகும். நாம் உலகின் மகுடதாரி இளவரசன்
ஆவதற்காக படிக்கிறோம் என்ற நிச்சயம் இப்போது குழந்தைகளாகிய
உங்களுக்கு இருக்க வேண்டும். நாம் வக்கீலாகவோ, இஞ்சினியராகவோ
ஆகப்போகிறோம் என்பதை எப்போதாவது பள்ளியில் மறக்கிறார்களா என்ன.
பலர் போகப்போக மாயையின் புயல் காற்று வீசுவதால் படிப்பைக் கூட
விட்டு விடுகின்றனர்.
தந்தை தனது குழந்தைகளிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றார் -
இனிமையான குழந்தைகளே! நல்ல விதமாக படித்தீர்கள் என்றால் நல்ல
பதவியை அடைவீர்கள். தந்தையின் தாடிக்கு மரியாதை வையுங்கள்.
நீங்கள் இப்படிப்பட்ட அழுக்கான காரியங்களை செய்தீர்கள் என்றால்
பெயரை கெடுத்து விடுவீர்கள். சத்தியமான தந்தை, சத்தியமான
ஆசிரியர், சத்குருவை நிந்திப் பவர்கள் உயர்ந்த பதவியை அடைய
முடியாது. இந்த சமயத்தில் நீங்கள் வைரத்திற்குச் சமமாக
ஆகிறீர்கள் எனும்போது சோழிகளுக்குப் பின்னால் போகக் கூடாது.
பாபாவிற்கு (பிரம்மா) காட்சி கிடைத்த போது உடனடியாக சோழிகளை
விட்டு விட்டார். அட, 21 பிறவிகளுக்கு இராஜ்யம் கிடைக்கிறது,
பிறகு இதை என்ன செய்யப் போகிறோம்! அனைத்தையும் கொடுத்து
விட்டார். நாம் உலகத்தின் இராஜ்யத்தை எடுத்துக் கொள்கிறோம்.
வினாசம் ஆக உள்ளது என்பதையும் அறிவீர்கள். இப்போது படிக்க
வில்லை என்றால் (டூ லேட்) மிகவும் தாமதமாகி விடும், வருந்த
வேண்டியிருக்கும். குழந்தைகளுக்கு அனைத்துமே காட்சிகளில்
தெரியும். ஓ பதீத பாவனரே வாருங்கள் என்று நீங்கள் அழைக்கவும்
செய்கிறீர்கள் என்று தந்தை கூறுகின்றார். இப்போது நான்
தூய்மையற்ற உலகில் உங்களுக்காக வந்திருக்கின்றேன் மேலும்
தூய்மையாகுங்கள் என்று உங்களுக்குச் சொல்கின்றேன். பிறகு
நீங்கள் அடிக்கடி அழுக்கில் விழுந்து விடுகிறீர்கள். நான்
காலனுக்கும் காலனாக இருக்கின்றேன். அனைவரையும் அழைத்துச்
செல்வேன். சொர்க்கத்திற்கு செல்வதற்காக தந்தை வந்து வழி
காட்டுகிறார். இந்த சிருஷ்டி சக்கரம் எப்படி சுற்றுகிறது என்ற
ஞானத்தை கொடுக்கிறார். கல்பத்திற்கு முன்பு யார் படித்தார்களோ,
அவர்கள் தான் வந்து படிப்பார்கள், அதுவும் கூட காட்சி யில்
தெரிந்தபடி இருக்கும். எல்லைக்கப்பாற்பட்ட தந்தை
வந்திருக்கின்றார், எந்த பகவானை சந்திப்பதற்காக இவ்வளவு பக்தி
செய்திருக்கிறோமோ, அவரே இங்கே வந்து பாடம் கற்றுத் தந்து
கொண்டிருக்கிறார் என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும். இப்படிப்பட்ட
பகவானாகிய தந்தையை நாம் சந்திப்போமே. (என்ற ஆர்வம் வேண்டும்)
ஒருவேளை நிச்சயம் இருந்தது என்றால், எவ்வளவு உற்சாகமாக
குஷியுடன் ஓடிவந்து சந்திப்பார் கள். ஏமாற்றத்தின் விஷயம் இல்லை.
தூய்மையடையாமல் படிக்காமல் பலர் இருக்கிறார்கள், பாபாவிடம்
செல்வோம் அவ்வளவு தான் என்று சுற்றித் திரிவதற்காகவும் வந்து
விடுகிறார்கள். தந்தை குழந்தைகளுக்குப் புரிய வைக்கிறார் -
குழந்தைகளாகிய நீங்கள் மறைமுகமாக உங்களுடைய இராஜ்யத்தை ஸ்தாபனை
செய்ய வேண்டும். தூய்மையடைந்தீர்கள் என்றால்
தமோபிரதானத்திலிருந்து சதோபிரதானமாக ஆவீர்கள். இந்த இராஜயோகத்தை
தந்தை தான் கற்பிக்கின்றார் மற்றபடி அவர்கள் ஹடயோகிகளாவர்.
தன்னை ஆத்மா என்று புரிந்து கொண்டு தந்தையாகிய என்னை நினைவு
செய்யுங்கள் என்று தந்தை கூறுகின்றார். நாம் எல்லைக்கப்
பாற்பட்ட தந்தையிடமிருந்து உலகின் கிரீடதாரி இளவரசனாக ஆவதற்கு
வந்திருக்கின்றோம் என்ற போதையில் இருக்க வேண்டும் மற்றும்
ஸ்ரீமத்படியும் நடக்க வேண்டும். மாயை புத்தியின் தொடர்பையே
துண்டிக்கக் கூடியதாக இருக்கிறது. தந்தை சக்திவாய்ந்தவர்
என்றால் மாயையும் கூட சக்தி வாய்ந்தது தான். அரைக்கல்பம் இராம
இராஜ்யம், அரைக்கல்பம் இராவண இராஜ்ய மாகும், இது கூட யாருக்கும்
தெரியவில்லை. நல்லது.
இனிமையிலும் இனிமையான காணாமல் போய் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாயும் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு
நினைவுகளும் காலை வணக்கமும். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்காரம்.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1. நாம் இன்று படிக்கிறோம் நாளை கிரீடம் அணிந்த இளவரசன் -
இளவரசியாக ஆகப்போகிறோம் என்ற போதை எப்போதும் இருக்க வேண்டும்.
நான் எப்படிப்பட்ட முயற்சி செய்கிறேன்? தந்தையிடம் எந்தளவு
மரியாதை வைத்துள்ளேன். படிப்பின் மீது ஆர்வம் இருக்கிறதா? என்று
தன்னுடைய ஆழ்மனதிடம் கேட்க வேண்டும்.
2. தந்தையின் காரியத்தில் மறைமுகமான உதவியாளர்களாக ஆக வேண்டும்.
எதிர்காலத் திற்காக தனது மூட்டை முடிச்சுகளை மாற்றல் செய்து
விட வேண்டும். சோழிகளுக்குப் பின்னால் நேரத்தை வீணாக்காமல்
வைரத்திற்குச் சமமாக ஆகக் கூடிய முயற்சி செய்ய வேண்டும்.
வரதானம்:
மனம் புத்தியை தன்வழியில் இருந்து விடுவித்து சூட்சும
வதனத்திற்கான அனுபவத்தை செய்யக்கூடிய டபுள் லைட் ஆகுக!
சங்கல்ப சக்தி மட்டுமின்றி அதாவது மனம் மற்றும் புத்தியை சதா
தன்வழியிலிருந்து காலியாக வைத்திருங்கள். அப்பொழுது இங்கு
இருந்தாலும் வதனத்தினுடைய அனைத்து காட்சிகள், உலகத் தில்
தெரியும் காட்சிகள் போன்று தெளிவாக அனுபவமாகும். இந்த
அனுபவத்திற்காக எந்த விதமான சுமையையும் தன் மீது வைக்காதீர்கள்,
அனைத்து சுமையையும் தந்தையிடம் கொடுத்து விட்டு டபுள் லைட்டாக
ஆகுங்கள். மனம் புத்தியினால் சதா சுத்த எண்ணங்களுக்கான உணவை
உட்கொள்ளுங்கள். ஒருபொழுதும் வீணான எண்ணங்கள் மற்றும் தீய
எண்ணங்களின் (விகல்பம்) அசுத்த உணவை சாப்பிடாதீர்கள். அப்பொழுது
சுமையிலிருந்து லேசாகி உயர்ந்த ஸ்திதிக்கான அனுபவத்தைச் செய்ய
முடியும்.
சுலோகன்:
வீணானவற்றுக்கு முற்றுப்புள்ளி (ஃபுல் ஸ்டாப்) வைத்து விடுங்கள்
மற்றும் சுகமான பாவனைக்கான சேமிப்பை (ஸ்டாக்) நிறைத்து
விடுங்கள்
அவ்யக்த பிரேரணை : - கம்பயிண்ட் ரூபத்தின் நினைவின் மூலம் சதா
வெற்றியாளர் ஆகுங்கள்.
போக போக எப்பொழுதாவது தோல்வி அல்லது கஷ்டமான அனுபவம் ஏற்பட்டால்
அதற்கான காரணம் வெறும் உதவியாளராக ஆகிவிடுகின்றீர்கள், இறை
உதவியாளராக ஆவதில்லை என்ப தாகும். இறைவனை அந்த உதவியில் இருந்து
பிரிக்க வேண்டாம். எனவே இணைந்த நிலை யிலிருந்து (கம்பையிண்ட்)
தனியாக ஏன் ஆக்குகிறீர்கள், சதா தன்னுடைய பெயரை (குதாயி
கித்மத்கார்) நினைவில் வையுங்கள். சேவையில் தானாக இறைவனுடைய
மந்திர தந்திரம் நிறைந்துவிடும்.