27-01-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்
இனிமையான குழந்தைகளே! எப்பொழுது உங்களது
நிலை கர்மாதீத நிலையாக ஆகிவிடுகிறதோ அப்பொழுது விஷ்ணுபுரிக்குச்
சென்றுவிடுவீர்கள், மதிப்புடன் தேர்ச்சி பெறும் குழந்தைகள் தான்
கர்மாதீத நிலை அடைகின்றனர்.
கேள்வி:
இரண்டு தந்தைகளும் குழந்தைகளாகிய
உங்களுக்காக என்ன முயற்சி செய்கின்றனர்?
பதில்:
குழந்தைகள் சொர்க்கத்திற்கு
தகுதியானவர்களாக ஆக வேண்டும். அனைத்து குணங்கள் நிறைந்தவர்களாக,
16 கலைகளிலும் சம்பூர்ணமானவர்களாக ஆக்குவதற்கான முயற்சி
பாப்தாதா இருவரும் செய்கின்றனர். இது உங்களுக்கு இரண்டு இன்ஜின்
கிடைப்பது போன்றதாகும். நீங்கள் அப்படிப்பட்ட ஆச்சரியமான
படிப்பு படிக்கிறீர்கள், இதன் மூலம் நீங்கள் 21 பிறவிகளுக்கான
இராஜ்யத்தை அடைகிறீர்கள்.
பாடல்:
குழந்தைப் பருவத்தை மறந்து
விடாதீர்கள் .......
ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிய, செல்லக் குழந்தைகள் பாடலைக் கேட்டீர்கள்.
நாடகப்படி இப்படிப்பட்ட பாடல் தேர்ந்தெடுக்கப்பட்டிர
ுக்கிறது.
சினிமாப் பாடலை வைத்து இவர்கள் முரளி நடத்துகின்றனர் என்று
நினைத்து மனிதர்கள் குழப்பமடைகின்றனர். இது எந்த வகையான ஞானம்?
சாஸ்திரம், வேதம், உபநிடதம் போன்றவைகளை விட்டு விட்டனர்,
இப்பொழுது பாடலை வைத்து முரளி நடத்துகின்றனர். நாம் எல்லையற்ற
தந்தையினுடையவர்களாக ஆகியிருக்கிறோம், அவர் மூலமாக அதீந்திரிய
சுகம் அடைகிறோம் என்பது குழந்தைகளாகிய உங்களது புத்தியில் இருக்
கிறது. இப்படிப்பட்ட தந்தையை மறக்கக் கூடாது. தந்தையின்
நினைவின் மூலம் தான் ஜென்ம ஜென்மங்களின் பாவங்கள் எரிந்து
விடும். நினைவை விட்டு விட்டு பாவங்கள் இருந்து விடும்படி யாக
இருக்கக் கூடாது. பிறகு பதவி குறைந்து விடும். இப்படிப்பட்ட
தந்தையை நல்ல முறையில் நினைவு செய்வதற்கான முயற்சி செய்ய
வேண்டும். நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது எனில் ஒருவரையொருவர்
நினைவு செய்வர். உங்களுக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருக்கிறது,
பிறகு நீங்கள் எப்பொழுது கர்மாதீத நிலை அடைவீர்களோ அப்பொழுது
விஷ்ணுபுரிக்கு செல்வீர்கள். இப்பொழுது சிவபாபாவும்
இருக்கின்றார். பிரஜாபிதா பிரம்மா பாபாவும் இருக்கின்றார்.
இரண்டு இன்ஜின்கள் கிடைத்திருக்கின்றன - ஒன்று நிராகாரி,
மற்றொன்று சாகாரி. இருவரும் குழந்தை களை சொர்க்கத்திற்குத்
தகுதியானவர் களாக ஆக்குவதற்கான முயற்சி செய்கின்றனர். சர்வ
குணங்கள் நிறைந்தவர்கள், 16 கலைகளில் முழுமையானவர்களாக ஆக
வேண்டும். இங்கு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இது எந்த
சாஸ்திரங்களிலும் கிடையாது. இந்த படிப்பு மிகவும்
ஆச்சரியமானதாகும் - எதிர்கால 21 பிறவிகளுக்கானது. மற்ற
படிப்புகள் மரண உலகத்திற்கானது, இந்த படிப்பு அமரலோகத்திற்கானது.
அதற்காக இங்கேயே படிக்க வேண்டும் அல்லவா! எதுவரை ஆத்மா
தூய்மையாக ஆகவில்லையோ அதுவரை சத்யுகத்திற்குச் செல்ல முடியாது.
ஆகையால் தந்தை சங்கமயுகத்தில் வருகின்றார், இது புருஷோத்தம
கல்யாணகாரி யுகம் என்று கூறப்படு கிறது. இதில் தான் நீங்கள்
சோழியி-ருந்து வைரம் போன்று ஆகிறீர்கள். ஆகையால் ஸ்ரீமத் படி
நடந்து கொண்டே இருங்கள். ஸ்ரீ ஸ்ரீ என்று சிவபாபா தான்
கூறப்படுகின்றார். மாலையின் பொருளும் குழந்தைகளுக்குப் புரிய
வைக்கப்பட்டிருக்கிறது. மேலே மலராக சிவபாபா இருக்கின்றார்.
பிறகு மொட்டுக்களாக யுகல் இருக்கின்றனர். இல்லற மார்க்கம்
அல்லவா! பிறகு மணிகள் அதாவது வெற்றி அடையக் கூடியவர்கள். இதையே
ருத்ர மாலையாக பிறகு விஷ்ணு மாலையாக ஆகிறது. இந்த மாலையின்
பொருளை யாரும் அறியவில்லை. குழந்தைகளாகிய நீங்கள்
சோழியிலிருந்து வைரமாக ஆக வேண்டும் என்று தந்தை அமர்ந்து புரிய
வைக்கின்றார். 63 பிறவிகளாக நீங்கள் தந்தையை நினைவு செய்து
வந்தீர்கள். நீங்கள் இப்பொழுது ஒரு நாயகனுக்கு நாயகிகளாக
இருக்கிறீர்கள். ஒரு பகவானின் பக்தர்களாக அனைவரும் இருக்
கின்றனர். பதிகளுக்கெல்லாம் பதியானவர், தந்தைகளுக்கெல்லாம்
தந்தையானவர் அவர் ஒருவர் தான். குழந்தைகளாகிய உங்களை
இராஜாவிற்கெல்லாம் இராஜாவாக ஆக்குகின்றார். தான் ஆவது கிடையாது.
தந்தை அடிக்கடி புரிய வைக்கின்றார் - தந்தையின் நினைவின் மூலம்
தான் உங்களது பல பிறவிகளின் பாவங்கள் பஸ்பமாகும். ஆத்மாவில்
எதுவும் ஒட்டாது (நிர்லேப்) என்று சாது, சந்நியாசிகள் கூறி
விட்டனர். நல்ல சம்ஸ்காரமோ கெட்டதோ ஆத்மா தான் எடுத்துச்
செல்கிறது என்று தந்தை புரிய வைக்கின்றார். எங்கு பார்த்தாலும்
பகவானே பகவான் தான், இவை அனைத்தும் பகவானின் லீலைகள் என்று
அவர்கள் கூறி விட்டனர்.. விகார மார்க்கத்தில் முற்றிலுமாக
அசுத்தம் ஆகிவிடுகின்றனர். இப்படிப்பட்டவர்களின் வழிப்படி
இலட்சக்கணக்கான மனிதர்கள் நடந்து கொண்டிருக்கின்றனர். இதுவும்
நாடகத்தில் பதிவாகியிருக்கிறது. எப்பொழுதும் புத்தியில் மூன்று
தாமங்களை (இடங்களை) நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் - ஆத்மாக்கள்
வசிக்கும் இடமாகிய சாந்திதாமம். எதற்காக நீங்கள் முயற்சி செய்து
கொண்டிருக்கிறீர்களோ அந்த சுகதாமம், அரைக் கல்பத்திற்குப் பிறகு
ஆரம்பமாகிறது துக்கதாமம். சொர்க்கத்தை ஸ்தாபனை செய்யும் இறை
தந்தை என்று பகவான் கூறப்படுகின்றார். அவர் நரகத்தை ஸ்தாபனை
செய்வது கிடையாது. நான் சுகதாமத்தைத் தான் ஸ்தாபனை செய்கிறேன்
என்று தந்தை கூறுகின்றார். மற்றபடி இது வெற்றி மற்றும்
தோல்விக்கான விளையாட்டாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது
ஸ்ரீமத் படி நடந்து மாயை என்ற இராவணனின் மீது வெற்றி
அடைகிறீர்கள். மீண்டும் அரைக்கல்பத்திற்குப் பிறகு இராவண
இராஜ்யம் ஆரம்பமாகிறது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது யுத்த
மைதானத்தில் இருக்கிறீர்கள். இதை புத்தியில் தாரணை செய்ய
வேண்டும், பிறகு மற்றவர்களுக்கும் புரிய வைக்க வேண்டும்.
கண்ணில்லாதவர்களுக்கு ஊன்றுகோலாகி வீட்டிற்கான வழியைக் கூற
வேண்டும். ஏனெனில் அனைவரும் அந்த வீட்டை மறந்து விட்டனர். இது
ஒரு நாடகம் என்றும் கூறுகின்றனர். ஆனால் இதன் ஆயுள் இலட்சம்,
பல ஆயிரம் ஆண்டுகள் என்று கூறிவிட்டனர். இராவணன் உங்களை எவ்வளவு
குருடர்களாக ஆக்கி விட்டது என்பதை தந்தை புரிய வைக்கின்றார்.
ஞானக் கண் இல்லாதவர் களாக ஆக்கிவிட்டது. இப்பொழுது தந்தை
அனைத்து விசயங்களையும் புரிய வைத்துக் கொண்டிருக்கின்றார்.
தந்தை தான் ஞானம் நிறைந்தவர் என்று கூறப்படுகின்றார்.
ஒவ்வொருவரின் உள்ளத்தையும் அறிந்தவர் என்பது இதன் பொருள்
கிடையாது. இதை மாயா ஜாலம் செய்பவர்கள் கற்றிருக்கின்றனர்,
உங்களது உள்ளத்தின் விசயங்களைக் கூறிவிடுகின்றனர். ஞானம்
நிறைந்தவர் என்பதன் பொருள் இது கிடையாது. இது ஓரு தந்தையின்
மகிமை ஆகும். அவர் ஞானக் கடலானவர், ஆனந்தத்தின் கடலானவர். அவர்
அந்தர்யாமி (மனதிற்குள் இருக்கும் விசயங்களை அறிந்தவர்) என்று
மனிதர்கள் கூறிவிட்டனர். அவர் ஆசிரியராக இருக்கின்றார், நமக்கு
கற்பிக்கின்றார் என்பதை இப்பொழுது குழந்தைளாகிய நீங்கள்
புரிந்திருக்கிறீர்கள். அவர் ஆன்மீக தந்தையாகவும் இருக்கின்றார்,
ஆன்மீக சத்குருவாகவும் இருக்கின்றார். அங்கு உலகாய ஆசிரியர்கள்,
குருக்கள் இருப்பர், அதுவும் தனித்தனியாக இருப்பர். மூவரும்
ஒருவராக இருக்க முடியாது. சிலருக்கு தந்தை ஆசிரியராகவும்
இருக்கலாம். குருவாக இருக்க முடியாது. இருப்பினும் அவர்கள்
மனிதர்கள் தான். இங்கு அந்த சுப்ரீம் ஆத்மா, பரம்பிதா பரமாத்மா
கற்பிக்கின்றார். ஆத்மாவை பரமாத்மா என்று கூறுவது கிடையாது.
இதையும் யாரும் புரிந்து கொள்வது கிடையாது. பரமாத்மா
அர்ஜூணனுக்கு சாட்சாத்காரம் செய்வித்த பொழுது-போதும்,
நிறுத்துங்கள், போதும் நிறுத்துங்கள் என்று அவர் கூறினார்,
இந்த அளவு ஒளியை என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
இதையெல்லாம் கேட்கின்ற பொழுது பரமாத்மா மிகவும் தேஜோ மயமானவர்
என்று புரிந்து கொண்டோம். முன்பு பாபாவிடம் வந்த பொழுது
சாட்சாத்காரத்தில் சென்று விட்டனர். போதும் நிறுத்துங்கள்,
மிகவும் தேஜோமயமாக இருக்கிறது, என்னால் சகிக்க முடியவில்லை
என்று கூறினர். எதைக் கேட்டீர்களோ அதுவே புத்தியில் பாவனையாக
இருந்து விடுகிறது. யார் எந்த பாவனையுடன் நினைவு செய்கிறார்களோ
நான் அவர்களது பாவனைகளை நிறைவேற்றுவேன் என்று தந்தை
கூறுகின்றார். யாராவது கணேசரின் பூஜாரியாக இருந்தால்
அவர்களுக்கு கணேசரின் சாட்காத்காரம் செய்விப்பேன்.
சாட்சாத்காரம் ஏற்பட்டதும் முக்திதாமத்திற்குச் சென்று
விட்டதாக நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு கிடையாது,
முக்திதாமத்திற்கு யாரும் செல்ல முடியாது. நாரதரின் உதாரணமும்
இருக்கிறது. அவர் பக்த சிரோமணி என்று பாடப்படுகின்றார். நான்
இலட்சுமியை திருமணம் செய்து கொள்ளலாமா என்று அவர் கேட்டதும்
தனது முகத்தை பார்த்துக் கொள் என்று கூறப்பட்டது. பக்த மாலையும்
இருக்கிறது. பெண்களில் மீரா மற்றும் ஆண்களில் நாரதரும்
முக்கியமானவர்கள் என்று பாடப்பட்டிருக்கிறது. இங்கு ஞானத்தில்
முக்கிய சிரோமணியாக விளங்குபவர் சரஸ்வதி ஆவார். வரிசைக்கிரமம்
இருக்கிறது அல்லவா!
மாயையிடம் எச்சரிக்கையாக இருங்கள் என்று தந்தை புரிய
வைக்கின்றார். மாயை அவ்வாறு தலைகீழான காரியங்களை செய்வித்து
விடுகிறது. பிறகு கடைசியில் மிகவும் அழ வேண்டி யிருக்கும் -
பகவான் வந்திருந்தார், நான் ஆஸ்தி அடையாமல் இருந்து விட்டேனே
என்று பட்சாதபப்பட வேண்டி யிருக்கும். பிறகு பிரஜைகளிலும்
வேலைக்காரன், வேலைக்காரிகளாக ஆவார்கள். கடைசியில் படிப்பு
முடிவடைந்து விடும், பிறகு அதிகமாக பட்சாதாபம் அடைய
வேண்டியிருக்கும். ஆகையால் தந்தை முன் கூட்டியே புரிய வைத்து
விடுகின்றார் - கடைசியில் பட்சாதபப்படக் கூடாது. எந்த அளவிற்கு
தந்தையை நினைவு செய்கிறோமோ அந்த யோக அக்னியின் மூலம் பாவங்கள்
அழிந்து விடும். ஆத்மா சதோ பிரதானமாக இருந்தது, பிறகு அதில்
கறைகள் படிந்து படிந்து தமோ பிரதானமாக ஆகிவிட்டது. தங்கம்,
வெள்ளி, தாமிரம், இரும்பு ..... பெயர்கள் இருக்கிறது அல்லவா!
இப்பொழுது இரும்பு யுகத்திலிருந்து நீங்கள் மீண்டும் தங்க
யுகத்திற்குச் செல்ல வேண்டும். தூய்மையாகாமல் ஆத்மாக்கள் செல்ல
முடியாது. சத்யுகத்தில் தூய்மை இருந்ததால் அமைதி, சுகம்
இருந்தது. இங்கு தூய்மை இல்லாததால் அமைதி, சுகம் இல்லை. இரவு
பகல் வித்தியாசம் இருக்கிறது. ஆக இந்த குழந்தைப் பருவத்தை
மறந்து விடாதீர்கள் என்று தந்தை புரிய வைக்கின்றார். தந்தை
தத்தெடுத்திருக்கின்றார் அல்லவா! பிரம்மாவின் மூலம்
தத்தெடுக்கிறார். இது தத்தெடுப்பதாகும். பெண்ணை
தத்தெடுக்கின்றனர். பிறகு குழந்தைகள் படைக்கப்படுகின்றனர்.
பெண்ணை படைப்பு என்று கூறுவது கிடையாது. இந்த தந்தையும்
தத்தெடுக்கின்றார் - யாரை கல்பத்திற்கு முன்பு
தத்தெடுத்திருந்தேனோ நீங்கள் அதே குழந்தைகள் ஆவீர்கள்.
தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தான் தந்தை யிடமிருந்து
ஆஸ்தி கிடைக்கிறது. உயர்ந்ததிலும் உயர்ந்த தந்தையிடமிருந்து
உயர்ந்ததிலும் உயர்ந்த ஆஸ்தி கிடைக் கிறது. அவர் பகவான், பிறகு
இரண்டாம் நம்பரில் இருப்பது சத்யுகத்தின் எஜமானர்களாகிய
இலட்சுமி நாராயணன். இப்பொழுது நீங்கள் சத்யுகத்திற்கு
எஜமானர்களாக ஆகிக் கொண்டிருக் கிறீர்கள். இப்பொழுது சம்பூரணம்
ஆகவில்லை, ஆகிக் கொண்டிருக்கிறீர்கள்.
தான் பாவனம் ஆகி மற்றவர்களை பாவனம் ஆக்க வேண்டும், இது தான்
உண்மையான ஆன்மீக சேவையாகும். நீங்கள் இப்பொழுது ஆன்மீக சேவை
செய்கிறீர்கள். ஆகையால் நீங்கள் மிகவும் உயர்ந்தவர்கள். சிவபாபா
பதீதமானவர்களை பாவனம் ஆக்குகின்றார். நீங்களும் பாவனம்
ஆக்குகிறீர்கள். இராவணன் எவ்வளவு அசுத்த புத்தியுடையவர்களாக
ஆக்கிவிட்டது! இப்பொழுது தந்தை மீண்டும் தகுதியானவர்களாக ஆக்கி
உலகிற்கு எஜமானர்களாக ஆக்குகின்றார். இப்படிப் பட்ட தந்தையை
பிறகு கல், முள்ளில் இருக்கின்றார் என்று எப்படிக் கூற முடியும்?
தந்தை கூறுகின்றார் - இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.
கல்பத்திற்குப் பிறகு மீண்டும் இவ்வாறே நடைபெறும். இப்பொழுது
நாடகப்படி உங்களுக்குப் புரிய வைப்பதற்காக நான் வந்திருக்
கிறேன். இதில் சிறிதும் வித்தியாசம் ஏற்பட முடியாது. ஒரு விநாடி
கூட தந்தை தாமதப்படுத்த முடியாது. எவ்வாறு தந்தை அவதாரம்
செய்கிறாரோ அதே போன்று குழந்தைகளாகிய நீங்களும் மறு பிறவி
எடுக்கிறீர்கள், நீங்கள் பிறவி எடுத்திருக்கிறீர்கள். ஆத்மா
இங்கு வந்து சாகாரத்தில் நடிப்பு நடிக்கிறது. இது தான் அவதாரம்
என்று கூறப்படுகிறது. மேலிருந்து நடிப்பு நடிப்பதற்காக கீழே
வருகிறது. தந்தைக்கும் தெய்வீகமாக, அலௌகீக பிறப்பாகும். தந்தை
தானே கூறுகின்றார் - நான் இயற்கையை ஆதாரமாக எடுக்க
வேண்டியிருக்கிறது. நான் இந்த உட-ல் பிரவேசம் செய்கின்றேன். இது
எனது நிர்ணயிக்கப்பட்ட உடலாகும். இது மிகப் பெரிய அதிசயமான விளை
யாட்டாகும். இந்த நாடகத்தில் ஒவ்வொருவரின் நடிப்பும்
பதிவாகியிருக்கிறது, அதை நடித்துக் கொண்டே இருக்கிறது. 21
பிறவிகளுக்கான நடிப்பையும் இவ்வாறே நடிப்பீர்கள். உங்களுக்கு
தெளிவான ஞானம் கிடைத்திருக்கிறது, அதுவும் வரிசைக்கிரமமாக.
மகாரதிகளை பாபா மகிமை செய்கின்றார் அல்லவா! பாண்டவர்களுக்கும்,
கௌரவர்களுக்கும் யுத்தம் நடந்ததாகக் காண்பித்திருக்கின்றனர்,
இவைகள் ஜோடிக்கப்பட்ட விசயங்களாகும். அவர்கள் ஸ்தூல இரட்டை
அகிம்சாதாரிகள், நீங்கள் ஆன்மீக இரட்டை அகிம்சாதாரிகள் என்பதை
இப்பொழுது நீங்கள் புரிந்திருக்கிறீர்கள். இராஜ்யம் அடைவதற்காக
நீங்கள் எவ்வாறு அமர்ந்திருக்கிறீர்கள் - பாருங்கள்! தந்தையின்
நினைவின் மூலம் விகர்மங்கள் விநாசம் ஆகும் என்பதை அறிவீர்கள்.
இதே ஆர்வத்துடன் இருக்கிறீர்கள். முயற்சி அனைத்தும் நினைவு
செய்வதில் தான் இருக்கிறது, அதனால் பாரதத்தின் பழமையான யோகா
என்று பாடப்பட்டிருக்கிறது. அந்த அயல்நாட்டினரும் பாரதத்தின்
இந்த பழமையான யோகம் கற்றுக் கொள்ள விரும்புகின்றனர்.
சந்நியாசிகள் நமக்கு இந்த யோகத்தைக் கற்பிப்பார்கள் என்று
நினைக்கின்றனர். உண்மையில் அவர்கள் எதையும் கற்றுக் கொடுப்பது
கிடையாது. அவர்களது சந்நியாசம் ஹடயோகத்திற்கானது. நீங்கள்
இல்லற மார்க்கத்தைச் சார்ந்தவர்கள். ஆரம்பத்திலிருந்தே உங்களது
இராஜ்யம் இருந்தது. இப்பொழுது கடைசியாக இருக்கிறது. இப்பொழுது
பஞ்சாயத்து இராஜ்யம் இருக்கிறது. உலகில் காரிருள் அதிகமாக
இருக்கிறது. இரத்தம் சிந்தும் விளையாட்டு நடைபெறும் என்பதை
நீங்கள் அறிவீர்கள். இதை ஒரு விளையாட்டாகக் காண்பிக்கின்றனர்,
இது எல்லையற்ற விசயமாகும், எவ்வளவு உயிர்சேதம் மற்றும் கொலைகள்
ஏற்படும்! இயற்கை சீற்றங்கள் நிகழும். அனைவருக்கும் மரணம்
ஏற்படும். இது தான் இரத்த ஆறு என்று கூறப்படுகிறது. இதைப்
பார்ப்பதற்கும் மிகுந்த தைரியம் தேவை. பயப்படுபவர்கள் உடனேயே
மயங்கி விடுவர். இதற்கு பயமற்ற நிலை அதிகம் தேவை. நீங்கள்
சிவசக்திகள் அல்லவா! சிவபாபா சர்வசக்தி வாய்ந்தவர், நாம்
அவரிடமிருந்து சக்திகளை அடைகிறோம், பதீதத்திலிருந்து பாவனம்
ஆவதற்கான யுக்தியை தந்தை தான் கூறுகின்றார். தந்தை முற்றிலும்
எளிய வழிக் கூறுகின்றார் - குழந்தைகளே! நீங்கள் சதோ பிரதானமாக
இருந்தீர்கள், இப்பொழுது தமோ பிரதானமாக ஆகிவிட்டீர்கள்.
இப்பொழுது என்னை நினைவு செய்தால் நீங்கள் பதீதத்திலிருந்து
பாவனம், சதோ பிரதானமாக ஆகிவிடுவீர்கள் என்று தந்தை கூறுகின்றார்.
ஆத்மாவானது தந்தையிடத்தில் (யோகா) நினைவின் தொடர்பு வைக்கும்
பொழுது தான் பாவங்கள் அழியும். தந்தை தான் அதிகாரமுள்ளவராக
இருக்கின்றார். விஷ்ணுவின் நாபியிலிருந்து பிரம்மா வெளி
வந்ததாக சித்திரங்களில் காண்பிக்கின்றனர். அவர் மூலமாக அனைத்து
சாஸ்திரங்கள், வேதங்களின் சாரத்தை புரிய வைத்தார்.
பிரம்மாவிலிருந்து விஷ்ணு, விஷ்ணுவிலிருந்து பிரம்மா ஆகின்றார்
என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். பிரம்மாவின் மூலம்
ஸ்தாபனை செய்கின்றார், பிறகு எதை ஸ்தாபனை செய்தாரோ அதை அவசியம்
பாலனையும் செய்வார் அல்லவா! இவை அனைத்தும் நல்ல முறையில் புரிய
வைக்கப்படுகிறது, யார் புரிந்து கொண்டார்களோ அவர்களுக்கு இந்த
எண்ணம் அவசியம் இருக்கும் - இந்த ஆன்மீக ஞானம் அனைவருக்கும்
எப்படி கொடுப்பது? என்னிடத்தில் செல்வம் இருக்கிறது எனில் நான்
ஏன் சென்டர் திறக்கக் கூடாது? தந்தை கூறுகின்றார் - கட்டிடத்தை
வாடகைக்கும் எடுத்துக் கொண்டு அதில் மருத்துவமனை மற்றும்
பல்கலைக்கழகம் திறவுங்கள். யோகாவின் மூலம் முக்தி, ஞானத்தின்
மூலம் ஜீவன்முக்தி. இரண்டு ஆஸ்திகள் கிடைக்கின்றன. இதற்கு 3 அடி
நிலம் கிடைத்தால் போதும், வேறு எதுவும் வேண்டாம். இறை தந்தையின்
பல்கலைக்கழகம் திறவுங்கள். விஷ்வ வித்யாலயம் அல்லது
பல்கலைக்கழகம் இரண்டும் ஒன்று தான். இது மனிதனை தேவதையாக ஆக்கக்
கூடிய மிகப் பெரிய பல்கலைக்கழகமாகும். உங்களுக்கு எப்படி
வருமானம் கிடைக்கிறது? என்று கேட்கின்றனர். அட! பி,கு - க்களின்
தந்தைக்கு இவ்வளவு குழந்தைகள் இருக்கின்றனர், நீங்கள் கேட்க
வந்து விட்டீர்கள்! விளம்பரப் பலகையில் என்ன எழுதப்பட்டிருக்
கிறது? என்பதைப் பாருங்கள். மிகவும் ஆச்சரியமான ஞானம் ஆகும்.
தந்தையும் ஆச்சரியமானவர் அல்லவா! உலகிற்கு எஜமானர்களாக நீங்கள்
எப்படி ஆகிறீர்கள்? சிவபாபாவை ஸ்ரீ ஸ்ரீ என்று கூறுகிறோம்.
ஏனெனில் உயர்ந்ததிலும் உயர்ந்தவர் அல்லவா! இலட்சுமி நாராயணனை
ஸ்ரீ இலட்சுமி, ஸ்ரீ நாராயணன் என்று கூறுகிறோம். இவை அனைத்தும்
நல்ல முறையில் தாரணை செய்ய வேண்டிய விசயங்களாகும். நான்
உங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறேன் என்று தந்தை கூறுகின்றார்.
இது தான் உண்மையிலும் உண்மையான அமரக் கதையாகும். ஒரே ஒரு
பார்வதிக்கு மட்டும் அமரக் கதை கூறியிருக்கமாட்டார். எவ்வளவு
மனிதர்கள் அமர்நாத்திற்கு செல்கின்றனர்! குழந்தைகளாகிய நீங்கள்
புத்துணர்வு அடைவதற்காக தந்தையிடம் வருகிறீர்கள். பிறகு
அனைவருக்கும் புரிய வைக்க வேண்டும், சென்று அனைவரையும்
புத்துணர்வு அடையச் செய்ய வேண்டும், சென்டர் திறக்க வேண்டும்.
தந்தை கூறுகின்றார் - 3 அடி இடத்திலும் மருத்துவமனை மற்றும்
பல்கலைக்கழகம் திறந்து கொண்டே சென்றால் பலருக்கு நன்மை ஏற்படும்.
இதில் எந்த செலவும் கிடையாது. ஆரோக்கியம், செல்வம் மற்றும்
மகிழ்ச்சி ஒரு விநாடியில் கிடைத்து விடுகிறது. குழந்தை
பிறக்கிறது, வாரிசாக ஆகிவிடுகிறது. உங்களுக்கும் நிச்சயம்
ஏற்படுகிறது, பிறகு உலகிற்கு எஜமானர்களாக ஆகிவிடு கிறீர்கள்.
பிறகு முயற்சி தான் ஆதாரமாக இருக்கிறது. நல்லது.
இனிமையிலும் இனிய, தேடிக் கண்டெடுக்கப்பட்ட செல்லக்
குழந்தைகளுக்கு தாய் தந்தையுமான பாப்தாதாவின் அன்பு நினைவுகள்
மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத்
தந்தையின் நமஸ்தே.
தாரணைக்கான முக்கிய சாரம்:
1) இரத்த ஆறு ஓடும் கடைசிக் காட்சியைப் பார்ப்பதற்காக மிக மிக
பயமற்றவர்களாக, சிவசக்திகளாக ஆக வேண்டும். சர்வசக்திவான்
தந்தையின் நினைவின் மூலம் சக்திகளை அடைய வேண்டும்.
2) தூய்மையாகி, தூய்மையாக்கக் கூடிய ஆன்மீக சேவை செய்ய வேண்டும்.
இரட்டை அகிம்சாதாரிகளாக ஆக வேண்டும். குருடர்களுக்கு
ஊன்றுகோலாகி அனைவருக்கும் வீட்டிற்கான வழியைக் கூற வேண்டும்.
வரதானம்:
நான் எனது என்பதை அழித்து சமநிலை மற்றும் முழுமைத் தன்மையை
அனுபவம் செய்யும் உண்மையான யோகி ஆகுக !
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு எண்ணமும் பாபா பாபா என்ற நினைவே
இருக்கட்டும். நான் அழிந்தே போகட்டும். நான் என்பதேயில்லையெனில்
எனது என்பதுமில்லை எனது சுபாவம், எனது சம்ஸ்காரம், எனது வேலை,
எனது பெயர், எனது புகழ்...... எப்போது இவ்வாறான நான், எனது
முடிவு பெறுமோ அதுவே சமநிலை மற்றும் முழுமையாகும். இந்த நான்
எனது என்பதை செய்யும் தியாகமே அனைத்திலும் மிக சூட்சுமமான
தியாகம். இந்த நான் எனும் குதிரையை அஸ்வமேத வேள்வியில் ஸ்வாகா
செய்யுங்கள். அப்போதே இறுதி நிலை வரும், வெற்றி முழக்கம்
முழங்கும்.
சுலோகன்:
ஆம் செய்கிறேன் என்று ஒத்துழைப்பு கரம் நீட்டுவதே
ஆசீர்வாதங்களெனும் மாலை அணிவதாகும்.
தனது சக்திவாய்ந்த மனோ நிலை மூலமாக ஒளி தரும் சேவை செய்க
நிரந்தரமாக ஒரே சீரான மனோநிலையில் இருக்கும் பயிற்சி இருக்கும்
போதே மனதால் ஒளி தர முடியும். இதற்காக முதலில் வீண் எண்ணங்களை
சுத்தமான எண்ணங்களாக மாற்றியமையுங்கள். பிறகு மாயை மூலமாக
வருகின்ற பல்வேறு விதமான தடைகள் யாவும் ஈஸ்வரிய அன்பின்
ஆதாரத்தால் முடித்து விடுங்கள். ஒரு தந்தையின்றி வேறு
யாருமில்லை எனும் பாடத்தில் மூலமாக ஒரு முகத்தின் ஏகாக்ரதா
சக்தியை அதிகப்படுத்துங்கள்.