31-03-2025 காலை முரளி ஓம் சாந்தி பாப்தாதா மதுபன்


இனிமையான குழந்தைகளே! நீங்கள் இப்பொழுது பழைய உலகத்தின் நுழை வாயிலிலிருந்து வெளியேறி சாந்திதாமம் மற்றும் சுகதாமத்திற்குச் சென்று கொண்டிருக்கிறீர்கள். தந்தை தான் முக்தி ஜீவன் முக்திக்கான வழி கூறுகிறார்.

கேள்வி:
நிகழ்காலத்தில் எல்லாவற்றையும் விட நல்ல செயல் எது?

பதில்:
மனம் சொல் செயல் மூலமாக குருடர்களுக்கு கைத்தடி ஆவது! எல்லாவற்றையும் விட நல்ல செயல் ஆகும். மனிதர்களுக்கு வீட்டிற்கான (முக்தி) மற்றும் ஜீவன் முக்திக்கான வழி கிடைத்து விடும் வகையில் அப்பேர்ப்பட்ட என்ன வார்த்தைகள் எழுதலாம் என்று குழந்தை களாகிய நீங்கள் ஞான மனனம் (சிந்தனைக் கடலை கடைதல்) செய்ய வேண்டும். இங்கு அமைதி மற்றும் சுகமான உலகத்திற்குச் செல்வதற்கான வழி கூறப்படுகிறது என்பதை மனிதர்கள் சுலபமாக புரிந்து கொள்ள வேண்டும்.

ஓம் சாந்தி.
மந்திரவாதியின் விளக்கு பற்றி கேள்விப்பட்டுள்ளீர்கள். அல்லாவுதீனின் விளக்கு அல்லது மந்திர வாதியின் விளக்கு என்னென்ன காண்பிக்கிறது. வைகுண்டம், சொர்க்கம், சுகதாமம். விளக்கிற்கு பிரகாசம் என்று கூறப்படுகிறது. இப்பொழுது இருள் தான் அல்லவா? இப்பொழுது இந்த பிரகாசத்தை வெளிப்படுத்துவதற்காக குழந்தைகள் கண்காட்சி, மேளா ஆகியவை நடத்துகிறார்கள். அதிகமான செலவு செய்கிறார்கள். தலையிலடித்துக் கொள்கிறார்கள். பாபா இதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று கேட்கிறார்கள். இங்கு மும்பைக்கு "கேட் வே ஆஃப் இந்தியா" என்று கூறு கிறார்கள். கப்பல்கள் முதலில் மும்பைக்குத் தான் வருகின்றன. டில்லியில் கூட இந்தியா கேட் உள்ளது. இப்பொழுது இது நம்முடையது. "கேட் ஆஃப் முக்தி ஜீவன் முக்தி "இரண்டு நுழை வாயில்கள் (கேட்ஸ்) உள்ளன அல்லவா? எப்பொழுதுமே இரண்டு நுழைவாயில்கள் இருக்கும். இன் (உள்ளே) மற்றும் அவுட் (வெளியே). ஒரு வாயில் வழியாக வருவது. மறு வழியாகச் செல்வது. இதுவும் அவ்வாறே. நாம் புதிய உலகத்திற்கு வருகிறோம். பிறகு பழைய உலகத் திலிருந்து வெளியேறி நமது வீட்டிற்கு சென்று விடுகிறோம். ஆனால் திரும்பி நாமாகவோ செல்ல முடியாது. ஏனெனில் வீட்டை மறந்து விட்டுள்ளோம். வழிகாட்டி (கைடு) வேண்டும். அவரும் நமக்குக் கிடைத்துள்ளார். அவர் வழியைக் கூறுகிறார். பாபா நமக்கு முக்தி ஜீவன் முக்தி, சாந்தி மற்றும் சுகத்தின் வழியைக் கூறுகிறார் என்பதை குழந்தைகள் அறிந்துள்ளார்கள். எனவே "கேட் ஆஃப் சாந்தி தாமம் சுகதாமம்" (சாந்தி தாமம் சுகதாமத்திற்கான நுழைவாயில்) என்று எழுதலாம். (சிந்தனைக் கடலைக் கடைதல்) ஞான மனனம் செய்ய வேண்டி உள்ளது அல்லவா? நிறைய சிந்தனைகள் எழுகின்றது - முக்தி ஜீவன் முக்தி என்று எதற்கு கூறப்படுகிறது என்பது கூட யாருக்குமே தெரியாது. அமைதி மற்றும் சுகமோ எல்லோருமே விரும்புகிறார்கள். சாந்தியும் வேண்டும். மேலும் பணம் செல்வமும் வேண்டும். அதுவோ சத்யுகத்தில் தான் இருக்கும். எனவே கேட் ஆஃப் சாந்தி தாமம் மற்றும் சுகதாமம் அல்லது கேட் ஆஃப் ப்யூரிட்டி, பீஸ், ப்ராஸ்பரிட்டி (தூய்மை, அமைதி மற்றும் சுகத்திற்கான நுழைவாயில்) என்று எழுதலாம். இதுவோ நல்ல வார்த்தைகள் ஆகும். மூன்றுமே இங்கு இல்லை. எனவே இது பற்றி பின் புரிய வைக்க வேண்டியும் இருக்கும். புது உலகத்தில் இவை எல்லாமே இருந்தது. புதிய உலகத்தினை ஸ்தாபனை செய்பவர் பதீத பாவனர் காட்ஃபாதர் ஆவார். எனவே அவசியம் நாம் இந்த பழைய உலகத்திலிருந்து வெளியேறி வீடு செல்ல வேண்டி இருக்கும். எனவே இது தூய்மை சுகம் சாந்திக்கான நுழைவாயில் ஆகிறது அல்லவா? பாபாவிற்கு இந்த பெயர் நல்லதாகப்படுகிறது. இப்பொழுது உண்மையில் அதை திறந்து வைக்கும் காரியத்தை சிவபாபா செய்கிறார். ஆனால் பிராமணர்களாகிய நம் மூலமாக செய்விக்கிறார். உலகத்தில் திறப்பு விழாக்களோ நிறைய நடந்து கொண்டு இருக்கின்றன அல்லவா? ஒருவர் மருத்துவ சாலையின் திறப்பு விழா நடத்துவார். ஒருவர் (யுனிவர்சிட்டி) பல்கலைக் கழகத்தின் திறப்பு விழா நடத்துவார். இதுவோ ஒரே ஒரு முறை நடக்கிறது. மேலும் இச்சமயத்தில் தான் நடக்கிறது. எனவே சிந்தனை செய்யப்படுகிறது. பிரம்மா பாபா வந்து திறந்து வைக்க வேண்டும் என்று குழந்தைகள் எழுதினார்கள். பாப்தாதா இருவரையும் அழைக்கலாம். நீங்கள் (பிரம்மா) வெளியில் எங்கும் செல்ல முடியாது என்று தந்தை கூறுகிறார். திறந்து வைப்பதற்காகச் செல்வது என்பது சட்டம் கிடையாது. விவேகம் ஏற்பது இல்லை. இதுவோ யார் வேண்டுமானாலும் திறந்து வைக்க முடியும். பத்திரிகைகளிலும் வரும் - பிரஜாபிதா பிரம்மா குமார் குமாரிகள் என்று பத்திரிகைகளிலும் வெளி வரும். இந்த பெயர் கூட மிகவும் நன்றாக உள்ளது அல்லவா? பிரஜாபிதாவோ அனைவரின் தந்தை ஆகி விட்டார். இது ஏதோ குறைவானதா என்ன? மேலும் பிறகு சுயம் தந்தை விழா நடத்துகிறார். செய்பவரும் செய்விப்பவரும் அவர் அல்லவா? நாம் சொர்க்கத்தின் ஸ்தாபனை செய்து கொண்டிருக்கிறோம் என்பது புத்தியில் இருக்க வேண்டும் அல்லவா? எனவே எவ்வளவு புருஷார்த்தம் (முயற்சி) செய்து ஸ்ரீமத்படி நடக்க வேண்டும். நிகழ்காலத்தில் மனம் சொல், செயல் மூலமாக எல்லாவற்றையும் விட நல்ல செயலோ ஒன்றே ஒன்று தான் - அதாவது குருடர்களுக்கு கைத்தடி ஆவது. "ஹே பிரபு! குருடர்களின் கைத்தடி" என்று பாடவும் செய்கிறார்கள். எல்லோரும் குருடர்களே. குருடர் களாக உள்ளார்கள். எனவே தந்தை வந்து கைத்தடி ஆகிறார். ஞானத்தின் மூன்றாவது கண் அளிக்கிறார். அதன் மூலம் நீங்கள் சொர்க்கத்தில் வரிசைக்கிரமமாக முயற்சிக்கேற்ப செல்கிறீர்கள். வரிசைக்கிரமமாகவோ இருக்கவே இருக்கிறார்கள். இது மிகவும் பெரிய எல்லை யில்லாத ஆஸ்பத்திரி மற்றும் யுனிவர்சிட்டி ஆகும். ஆத்மாக்களின் தந்தை பரமபிதா பரமாத்மா பதீத பாவனர் ஆவார் என்று புரிய வைக்கப்படுகிறது. நீங்கள் அந்த தந்தையை நினைவு செய்யுங்கள் பின் சுகதாமம் சென்று விடுவீர்கள். இது "ஹெல்" (நரகம்) ஆகும். இதை "ஹெவென்" (சொர்க்கம்) என்று கூறமாட்டார்கள். "ஹெவென்" - சொர்க்கத்தில் இருப்பது ஒரே ஒரு தர்மம் ஆகும். பாரதம் சொர்க்கமாக இருந்தது. வேறு எந்த தர்மமும் இருக்கவில்லை. இது மட்டும் நினைவில் இருந்தால் கூட இதுவும் மன்மனாபவ ஆகும். நாம் சொர்க்கத்தில் முழு உலகிற்கு அதிபதியாக இருந்தோம் - இவ்வளவு கூட நினைவிருப்பதில்லையா? நமக்கு தந்தை கிடைத்துள்ளார் என்பது புத்தியில் உள்ளது என்றால், அந்த குஷி இருக்க வேண்டும். ஆனால் மாயை கூட குறைவானது அல்ல. அப்பேர்ப்பட்ட தந்தையினுடையவராகி பிறகும் அந்த அளவு குஷியில் இருப்பதில்லை. மூச்சு திணறி கொண்டே இருக்கிறார்கள். மாயை அடிக்கடி மிகவுமே மூச்சு திணறுமாறு செய்கிறது. சிவபாபாவின் நினைவை மறக்குமாறு செய்து விடுகிறது. நினைவு நிலைப்பதில்லை என்று சுயம் அவர்களே கூறுகிறார்கள். தந்தை ஞானக் கடலில் மூழ்கி எழுமாறு செய்கிறார். மாயை பிறகு விகாரக் கடலில் மூழ்கி எழுமாறு செய்து விடுகிறது. மிகவும் மகிழ்ச்சியுடன் மூழ்கி எழ முற்பட்டு விடுகிறார்கள். சிவபாபாவை நினைவு செய்யுங்கள் என்று தந்தை கூறுகிறார். மாயை பிறகு மறக்கடிக்க வைக்கிறது. தந்தையை நினைவே செய்வதில்லை. தந்தையை அறியாமலேயே இருக்கிறார்கள் (துக்க ஹர்த்தா சுக கர்த்தா) துக்கத்தை நீக்கி சுகம் அளிப்பவரோ பரமபிதா பரமாத்மா ஆவார் அல்லவா? அவர் இருப்பதே துக்கத்தை நீக்குபவராக. அவர்கள் பிறகு கங்கையில் சென்று முழுக்கு போடுகிறார்கள். கங்கை பதீதபாவனி என்று நினைக்கிறார்கள். சத்யுகத்தில் கங்கையை துக்கத்தை தீர்ப்பவர், பாவத்தை நீக்குபவர் என்று கூற மாட்டார்கள். சாது சந்நியாசி ஆகிய எல்லோரும் நதிகளின் கரையோரத்தில் அமருகிறார்கள். கடற்கரையில் ஏன் அமருவதில்லை? இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் கடலின் கரையில் அமர்ந்துள்ளீர்கள். ஏராளமான குழந்தைகள் கடலிடம் வருகிறார்கள். பிறகு கடலிலிருந்து வெளிப்பட்ட இந்த சிறிய பெரிய நதிகள் கூட உள்ளன என்று நினைக்கிறார்கள். பிரம்மபுத்திரா, சிந்து மற்றும் சரஸ்வதி போன்ற பெயர்களும் வைக்கப்பட்டுள்ளன.

குழந்தைகளே நீங்கள் மனம், சொல், செயலில் மிக மிக கவனம் வைக்க வேண்டும் என்று தந்தை புரிய வைக்கிறார். ஒரு பொழுதும் நீங்கள் கோபத்தில் வரக் கூடாது. கோபம் முதலில் மனதில் வருகிறது. பிறகு பேச்சு மற்றும் செயலில் கூட வந்து விடுகிறது. இவை மூன்று ஜன்னல்கள் ஆகும். எனவே தந்தை புரிய வைக்கிறார் - இனிமையான குழந்தைகளே, வார்த்தைகளை அதிகமாகப் பயன்படுத்தாதீர்கள். அமைதியாக இருங்கள். பேச்சில் வந்து விட்டால் செய-ல் வந்து விடும். கோபம் முதலில் மனதில் வருகிறது. பிறகு பேச்சு, செயலில் வருகிறது. மூன்று ஜன்னல்களிலிருந்து வெளிப்படுகிறது. முதலில் மனதில் வரும். உலகத்தாரோ ஒருவருக்கொருவர் துக்கம் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். சண்டையிட்டு கொண்டே இருக்கிறார்கள். நீங்களோ யாருக்குமே துக்கம் கொடுக்கக் கூடாது. அப்பேர்ப்பட்ட எண்ணம் கூட வரக் கூடாது. (சைலன்ஸ்) அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. எனவே தந்தை வந்து சொர்க்கம் அல்லது சுகம் சாந்திக்கான (கேட்) நுழைவாயிலைக் கூறுகிறார். குழந்தைகளுக்குத் தான் கூறுகிறார். நீங்களும் மற்றவர்களுக்கு கூறுங்கள் என்று குழந்தைகளுக்குக் கூறுகிறார். தூய்மை சுகம் சாந்தி (ப்யூரிட்டி, பீஸ், ப்ராஸ்பரிட்டி) இருப்பது சொர்க்கத்தில். அங்கு எப்படி செல்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த மகாபாரத போர் கூட நுழைவாயிலை திறக்கிறது. பாபா வினுடைய ஞான மனனமோ (சிந்தனை கடலை கடைதல்) நடக்கிறது அல்லவா? என்ன பெயர் வைக்கலாம்? அதிகாலையில் சிந்தனைக் கடலைக் கடையும் பொழுது வெண்ணெய் வெளிப்படு கிறது. நல்ல கருத்துக்கள் வெளிப்படுகின்றன. அதனால் தான் பாபா கூறுகிறார், அதிகாலை எழுந்து தந்தையை நினைவு செய்யுங்கள். மேலும் "என்ன பெயர் வைக்கலாம் என்பது பற்றி விசார் சாகர் மத்தன் (சிந்தனை கடலை கடைதல்) செய்யுங்கள். சிந்தனை செய்ய வேண்டும். ஒரு சிலருடைய நல்ல சிந்தனையும் வெளிப்படுகிறது. பதீதர்களை (தூய்மையற்றவர்களை) பாவனமாக ஆக்குவது என்றால் நரகவாசியை சொர்க்கவாசியாக ஆக்குவது ஆகும் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்துள்ளீர்கள். தேவதைகள் பாவனமானவர்கள் ஆவார்கள். அதனால் தான் அவர்களுக்கு முன்னால் தலை வணங்குகிறார்கள். நீங்கள் இப்பொழுது யாருக்குமே தலை வணங்க முடியாது. சட்டம் கிடையாது. மற்றபடி யுக்தியுடன் நடக்க வேண்டி உள்ளது. சாதுக்கள் தங்களை உயர்ந்தவர் கள், தூய்மையானவர்கள் என்று நினைத்து கொள்கிறார்கள். மற்றவர்களை தூய்மையற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று நினைக்கிறார்கள். நாம் எல்லோரையும் விட உயர்ந்தவர்கள் ஆவோம் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள் என்றாலும் கூட யாராவது கை கூப்பினால் (ரெஸ்பாண்டு) பதிலுக்கு அவ்வாறே செய்ய வேண்டி இருக்கும். "ஹரி ஓம் தத் சத்" என்கிறார்கள் என்றால் நீங்களும் அவ்வாறே கூற வேண்டி இருக்கும். யுக்தியுடன் நடக்கவில்லை என்றால் அவர்கள் கைக்குள் வர மாட்டார்கள். மிகவுமே யுக்திகள் வேண்டும். சாவு தலை மீது வரும் பொழுது எல்லோரும் பகவானின் பெயரை எடுக்கிறார்கள். தற்காலத்தில் விபத்துக்களோ நிறைய ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். மெல்ல மெல்ல தீ பரவுகிறது. நெருப்பு வெளி நாட்டிலிருந்து ஆரம்பமாகும். பிறகு மெல்ல மெல்ல முழு உலகமே எரிந்து போய் விடும். கடைசியாக குழந்தைகளாகிய நீங்கள் தான் இருந்து விடுகிறீர்கள். உங்களுடைய ஆத்மா தூய்மையாக ஆகி விடும் பொழுது பிறகு உங்களுக்கு அங்கு புதிய உலகம் கிடைக்கிறது. உலகத்தினுடைய புதிய நுழைவாயில் குழந்தை களாகிய உங்களுக்குக் கிடைக்கிறது. நீங்கள் ஆட்சி புரிகிறீர்கள்.அல்லாவு
தீனின் விளக்கு கூட பிரசித்தமானது அல்லவா? நோட் இப்படி செய்யும் பொழுது அளவற்ற பொக்கிஷம் கிடைத்து விடுகிறது. சரியான விஷயம் தான். அல்லா அவல் தீன் சட்டென்று சமிக்ஞை மூலமாக சாட்சாத் காரம் செய்விக்கிறார் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள். நீங்கள் சிவபாபாவை மட்டும் நினைவு செய்தீர்கள் என்றால் எல்லாமே சாட்சாத்காரம் ஆகி விடும். தீவிர பக்தியினால் கூட சாட்சாத்காரம் ஆகிறது அல்லவா? இங்கு உங்களுக்கு லட்சியம் நோக்கத்தின் சாட்சாத்காரமோ (காட்சி) கிடைக்கவே கிடைக்கிறது. பிறகு நீங்கள் பாபாவை, சொர்க்கத்தை நிறைய நினைவு செய்வீர்கள். அடிக்கடி பார்த்து கொண்டே இருப்பீர்கள். யார் பாபாவின் நினைவில் மற்றும் ஞானத்தில் மூழ்கி இருப்பார்களோ அவர்களால் தான் கடைசியின் அனைத்து காட்சிகளையும் பார்க்க முடியும். மிகப் பெரிய குறிக்கோள் ஆகும். தன்னை ஆத்மா என்று உணர்ந்து தந்தையை நினைவு செய்வது சித்தி வீடு கிடையாது. மிகுந்த உழைப்பு உள்ளது. நினைவே முக்கியமானது ஆகும். எப்படி பாபா திவ்ய திருஷ்டியின் வள்ளலோ (திவ்ய திருஷ்டி தாதா) அதே போல சுயம் தனக்காக, திவ்ய திருஷ்டி தாதா ஆகி விடுவார்கள். எப்படி பக்தி மார்க்கத்தில் தீவிர வேகத்துடன் நினைவு செய்யும் பொழுது சாட்சாத்காரம் ஆகிறது. தங்களுடைய உழைப்பினால் திவ்ய திருஷ்டி தாதா (திவ்ய திருஷ்டியின் வள்ளல்) ஆகி விடுகிறார்கள். நீங்கள் கூட நினைவின் உழைப்பில் இருந்தீர்கள் என்றால் மிகவும் குஷியுடன் இருப்பீர்கள். மேலும் சாட்சாத்காரம் ஆகிக் கொண்டே இருக்கும். இந்த முழு உலகமே மறந்து போய் விடும். மன் மனா பவ ஆக ஆகி விடுவீர்கள். இனி என்ன வேண்டும்! யோக பலத்தினால் பின் நீங்கள் தங்களது சரீரத்தை விட்டு விடுகிறீர்கள். பக்தியில் கூட உழைப்பு உள்ளது. இதில் கூட உழைப்பு வேண்டும். உழைப்பிற்கான வழியை பாபா மிகவும் (ஃபர்ஸ்ட் கிளாஸ்) முதல் தரமானதாக கூறிக் கொண்டு இருக்கிறார். தன்னை ஆத்மா என்று உணருவதால் பிறகு தேக உணர்வே இருக்காது. "பாப் சமான்" - தந்தைக்குச் சமானமானவராக ஆகி விடுவீர்கள். சாட்சாத்காரம் செய்து கொண்டே இருப்பீர்கள். குஷியும் மிகுந்ததாக இருக்கும். தனது பெயர் ரூபத் திலிருந்தே தனிப்பட்டவர் ஆக வேண்டும். பிறகு மற்றவர்களுடைய பெயர் ரூபத்தை நினைவு செய்வதால் என்ன நிலைமை ஆகும்! ஞானமோ மிகவும் சுலபமானதாகும். பழமையான பாரதத்தின் யோகத்தில் தான் மாயா ஜாலம் உள்ளது. பிரம்ம ஞானிகள் கூட இவ்வாறு தான் சரீரம் விடுகிறார்கள் என்று பாபா புரிய வைத்துள்ளார். "நாம் ஆத்மா ஆவோம். பரமாத்மாவுடன் கலந்து விட வேண்டும்"". யாருமே கலந்து விடுவதில்லை. இருப்பது பிரம்ம ஞானியாக. அமர்ந்த படியே சரீரத்தை விட்டு விடுகிறார்கள் என்பதை பாபா பார்த்துள்ளார். வாயுமண்டலம் மிகவும் சாந்தமாக இருக்கும். ஆழ்ந்த அமைதி நிலவி விடுகிறது. அந்த ஆழ்ந்த அமைதி கூட யார் ஞான மார்க்கத்தில் இருக்கிறார்களோ, அமைதியாக இருக்கக் கூடியவர்களாக இருப்பார்களோ அவர் களுக்குத் தான் அனுபவம் ஆகும். மற்றபடி ஒரு சில குழந்தைகளோ இன்னுமே சிறு பிள்ளை களாக (பேபி) இருக்கிறார்கள். அடிக்கடி விழுந்து விடுகிறார்கள். இதில் மிக மிக மறைமுகமான உழைப்பு (முயற்சி) உள்ளது. பக்தி மார்க்கத்தின் உழைப்பு கண்கூடாகத் (பிரத்யட்சம்) தெரிகிறது. மாலையை உருட்டு. மூலையில் அமர்ந்து பக்தி செய்.... இங்கோ நடந்தாலும் சென்றாலும் நீங்கள் நினைவில் இருக்கிறீர்கள். நீங்கள் ராஜ்யத்தை எடுத்து கொண்டிருக்கிறீர்கள் என்பது யாருக்கும் தெரியாது. யோகத்தின் மூலமாகத் தான் முழு கணக்கு வழக்குகளையும் தீர்க்க வேண்டும். ஞானத்தினால் கணக்கு தீர்ந்து விடுமா என்ன?கணக்கு வழக்கு யோகத்தின் மூலமாகத் தான் தீர்க்க முடியும். கர்ம கணக்கு (வினைப்பயன்) நினைவினால் தான் முடிவுக்கு வரும். இது மறைமுகமானது. பாபா எல்லாமே மறைமுகமாக கற்பிக்கிறார்.

இனிமையிலும் இனிமையான காணாமல் போய் வெகுகாலம் கழித்து கண்டெடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு தாய் தந்தை பாப்தாதாவின் அன்பு நினைவுகள் மற்றும் காலை வணக்கம். ஆன்மீகக் குழந்தைகளுக்கு ஆன்மீகத் தந்தையின் நமஸ்காரம்.

தாரணைக்கான முக்கிய சாரம்:
1. மனம், சொல் மற்றும் செயலால் ஒரு பொழுதும் கோபப்படக் கூடாது. இந்த மூன்று ஜன்னல்களின் மீது மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். வார்த்தைகளை அதிகமாக பயன்படுத்தக் கூடாது. ஒருவருக்கொருவர் துக்கம் கொடுக்கக் கூடாது.

2. ஞானம் மற்றும் யோகத்தில் மூழ்கி இருந்து கடைசி காட்சிகளைப் பார்க்க வேண்டும். தனது அல்லது மற்றவர்களின் பெயர் ரூபத்தை மறந்து நான் ஆத்மா ஆவேன் என்ற இதே நினைவுடன் தேக உணர்வை நீக்கி விட வேண்டும்.

வரதானம்:
அன்பெனும் அம்பு மூலமாக அன்பால் காயத்தை ஏற்படுத்தி அன்பு மற்றும் பிராப்திகள் நிரம்பப் பெற்ற (லவ்லீன்) அன்பில் தோய்ந்த ஆத்மா ஆகுக !

லௌகீக வாழ்விலும் ஒருவர் எவரது அன்பிலாவது வசமாகிவிட்டால் முகம், கண்கள், வார்த்தைகள் யாவிலும் இவர் காதல் வசமானவர் (லவ்லீன்) என்பார்கள். அவ்வாறே மேடை மீது வரும்போது தன்னுள் இருக்கும் தந்தையின் அன்பெனும் ஆயுதத்தால் பிறரையும் காயப்படுத்து வார்கள். சொற்பொழிவிற்கான கருத்துக்களை சிந்திப்பது நினைப்பது இவை சொரூபமல்ல அன்பு மற்றும் பிராப்தியின் முழுமையான சொரூபம் லவ்லீன் சொரூபமாகும். அத்தாரிட்டியுடன் பேசும் போதே அதன் தாக்கம் ஏற்படும்.

சுலோகன்:
சம்பூரணம் (முழுமை) மூலமாக இறுதி நாளை அருகே கொண்டு வாருங்கள்.

அவ்யக்த சமிக்ஞை: சத்யமும், நாகரீகமும் தனது பண்பாக்குங்கள்.

ஏதோ ஒன்று உள்ளதாக எல்லோரும் புரிந்து கொண்டனர். ஆனால் இதுதான் மற்றும் இது ஒன்று தான். இந்த குழப்பத்திற்கான விடை கொடுங்கள். இப்போது இதுவும் உள்ளது, வேறொன்றும் உள்ளது என்று இதுவரையில் வந்து விட்டனர். ஆனால் இது ஒன்று தான், இப்போது அத்தகைய அம்பை வீசுங்கள். பூமி உருவாயிற்று மேலும் உருவாகிக் கொண்டேயிருக்கும். ஆனால் அஸ்தி வாரம், புதுமை, விதையாக விளங்குவது புதிய ஞானம், தன்னலமில்லா அன்பு, ஆன்மீக அன்பு இதையும் அனுபவம் செய்கிறார்கள் ஆனால் இப்போது அன்புடன் இணைந்து ஞானத்தின் அத்தாரிட்டியான ஆத்மாக்கள், சத்ய ஞானத்தின் அத்தாரிட்டி உள்ளது என்பதை ஊர்ஜிதம் செய்தாலே பிரத்யட்சம் ( வெளிப்பாடு) ஏற்படும்