01.06.24

இன்றைய சிந்தனைக்கு

அமைதி:

அமைதியின் சொரூபமாக இருப்பதென்றால், அமைதியை அருள்வதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

உலகில் உள்ள மக்கள் அமைதியையும், சந்தோஷத்தையும் மட்டுமே விரும்புகின்றார்கள். நாம் சுயமாக அமைதியை அனுபவம் செய்யும்போது, நம்மால் மற்றவர்களுக்கும் அந்த அனுபவத்தை கொடுக்க முடியும். இயற்கையாகவே சந்தோஷம் அமைதியை பின்தொடர்கின்றது.

செயல்முறை:

நான், ஒவ்வொரு நாளும், ஒரு சில வினாடிகளை தனிமையில் செலவிடுவது அவசியம். இந்நேரத்தில், ஒரு சக்திவாய்ந்த எண்ணத்தில் என்னுடைய மனதை நிலைநிறுத்த நான் பயிற்சி செய்ய வேண்டும். மேலும், எனக்குள் இருக்கும் அமைதியின் அனுபவத்தை, மற்றவர்களும் உணருமாறு வெளிப்படுத்த நான் என்னை அனுமதிக்க வேண்டும். நான் மற்றவர்களை சந்திக்கும்போது  என்னுடைய உள்ளார்ந்த அமைதி, என் மனம் எதிர்மறையான எண்ணங்களிலிருந்து விலகியிருக்க உதவி செய்கின்றது. மேலும் மற்றவர்களும் எதிர்மறையான எண்ணங்கலிலிருந்து விடுபட்டிருப்பதை நான் காண்கின்றேன்.