02.07.24

இன்றைய சிந்தனைக்கு

அமைதி

அமைதியான மனதினால் துல்லியமாக தீர்மானம் செய்ய முடியும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

ஒரு சவாலில் துல்லியமான தீர்மானம் செய்ய வேண்டிய பொழுதுபதற்றமடையும் போக்கு நம்மிடம் உள்ளது. அனேகமான எதிர்மறை எண்ணங்கள் நம் மனதில் தோன்றுகிறது. அந்த மனநிலையில் நாம் எடுக்கும் முடிவுகள் தவறாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

செயல்முறை:

சவால்மிக்க  சூழ்நிலைகளில் முடிவு எடுப்பதற்கு முன்நான் என்னுடைய மனதை அமைதியான நிலையில் வழிநடத்துவது அவசியம். இதை செயல்படுத்துவதற்குஎனக்கு நீண்ட நாள் பயிற்சி தேவைப்படுகிறது – சூழ்நிலையானது என்னுடைய நடவடிக்கைகளின் வேகத்தை அதிகரிக்க தூண்டும் போதும்கூட, வெகு நாட்களுக்கு மனதிற்கு அளிக்கும் பயிற்சியானது, மிகவும் சவாலான சூழ்நிலைகளிலும் மனதை அமைதியாக வைத்திருக்க உதவி செய்கிறது.