08.05.25

இன்றைய சிந்தனைக்கு

பணிவுத்தன்மை

பணிவுத்தன்மையின் சக்தி கோபத் தீயை தணிக்கின்றது.

சிந்திக்க வேண்டிய கருத்து:

கோபமாக இருப்பவர்களிடம் நாமும் கோபமாக  நடந்துக்கொள்ளும்போது,     ஏற்கனவே  மோசமாக உள்ள சூழ்நிலையை நாம் மேலும் பெரிதாக்குவதோடு, நாமும் கூட தாழ்ந்துவிடுகின்றோம்  – ஏனென்றால், தீயின் மீது நீரை ஊற்றுகின்ற சக்தி நமக்குள் இருக்கின்றது. 

செயல்முறை:

இன்று, என்னுடைய வார்த்தைகள் அல்லது செயல்கள் கோபமாக இருக்கும் வேறு ஒருவருடைய வார்த்தை அல்லது சைகையை சந்தித்தால், நான் கோபமாக செயல்படமாட்டேன்.  நான் பொறுமையை வளர்த்துக்கொண்டு பணிவுத்தன்மையை கிரகித்துக்கொள்வேன். இதுவே கோபமான உணர்வுகளை நீக்குவதற்கான வழியாகும். மேலும் இது என்னுடைய அதிக சக்திவாய்ந்த சுயத்தை வெளிக்கொண்டுவர அனுமதிக்கின்றது.