09.05.25

இன்றைய சிந்தனைக்கு

சுய-கட்டுப்பாடு

உள்ளார்ந்த ஸ்திரத்தன்மையே உண்மையான வெற்றியாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

எப்பொழுதெல்லாம் அனைத்தும் நன்றாக நடைபெற்று வெற்றி தொடர்கின்றதோ, அப்போது நம்முடைய விஷயங்களில் மூழ்கி போகாது மேலெழுந்தவாறாக உணர்வதோடு, நிலையான மனநிலையில் இருப்பதும் சுலபமாக இருக்கின்றது. ஆனால், ஒரே ஒரு சவால் மட்டுமே இந்த நிலையான மனநிலையை கவிழ்க்க வல்லதாக உள்ளது. பயம் மற்றும் கவலை இதனை மேலும் பலவீனமடையச் செய்ய முடிகிறது.

செயல்முறை:

நான் எதிர்மறையான சூழ்நிலைகளுக்கு பதிலளிக்கும் விதத்தை மாற்றிக்கொள்வது அவசியம் – இன்று, முடிவுகள் என்னுடைய கட்டுபாட்டை மீறி இருப்பினும், அவற்றுக்கு நான் பதிலளிக்கும் விதத்தை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு என்னிடம் இருக்கிறது என என்னுள் நினைவு செய்வது அவசியம். இதை நான் அறிந்து கொண்ட உடனே, நான் சூழ்நிலைகளை கட்டுக்குள் கொண்டுவருவதோடு, என்னுடைய மனநிலையும் ஸ்திரதன்மைக்கு திரும்புகின்றது.