17.06.24

இன்றைய சிந்தனைக்கு

நம்பிக்கை:

கவலையிலிருந்து விடுபட்டு இருப்பது என்பது சரியான தீர்வுகளை காண்பதாகும்.

சிந்திக்க வேண்டிய கருத்து:

நாம் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றபொழுதெல்லாம், இயற்கையாகவே நாம் கவலைப்பட ஆரம்பிக்கின்றோம். இக்கவலை மிக அதிகமான எதிர்மறை எண்ணங்களுக்கு வழிவகுக்கும். மனமானது மட்டுமீறிய அளவிற்கு அதில் ஈடுபட்டிருப்பதால், நம்மால் தீர்வும் காண முடியவில்லை, அதே சமயம் கவலைப்படுவதையும் நிறுத்த முடியவில்லை.

செயல்முறை:

தீர்வை கண்டுபிடிப்பதற்கான ஒரே வழி மனதை கவலையிலிருந்து விடுபட்டு வைத்திருப்பதாகும். இதை செய்வதற்கு, என்னிடம் ஒரு தீர்வு உள்ளது என்றும் அதை நான் கண்டுபிடிப்பேன் என்றும் நம்பிக்கை கொள்வது அவசியம். இவ்வாறு மனதை சுதந்திரமாக வைத்திருப்பது, என்னுடைய உள்ளுணர்வை சீர்ப்படுத்துகிறது. அதனால் என்னால் தன்னிச்சையாகவே சரியான முடிவை எடுக்க முடிகிறது.