01.06.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 21.10.2005 Om Shanti Madhuban
சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகுவதற்கான திகதியை நிச்சயம் செய்து, நேரத்திற்கு ஏற்ப என்றும் தயார் ஆகுங்கள்.
இன்று, பாப்தாதா எங்கும் உள்ள குழந்தைகளான உங்கள் எல்லோருடைய மூன்று ரூபங்களையும் பார்த்தார். எப்படி நீங்கள் தந்தையின் விசேடமான மூன்று உறவுமுறைகளையும் நினைக்கிறீர்களோ, அதேபோல், பாபா குழந்தைகளான உங்களின் மூன்று ரூபங்களையும் பார்த்து மகிழ்ச்சி அடைகிறார். உங்களின் மூன்று ரூபங்களையும் நீங்கள் அறிவீர்கள்தானே? இந்த வேளையில் குழந்தைகளான நீங்கள் எல்லோரும் பிராமண ரூபத்தில் இருக்கிறீர்கள். பிராமணர்களின் இறுதி ஸ்திதி, தேவதை ஸ்திதியாகும். தேவதைகளே பின்னர் தேவதேவியர்கள் ஆகுகிறார்கள். எல்லாவற்றிலும் அதி விசேடமானது இந்த நிகழ்கால பிராமண வாழ்க்கை ஆகும். பிராமண வாழ்க்கை விலைமதிப்பற்றது. பிராமண வாழ்க்கையின் சிறப்பியல்பானது தூய்மை ஆகும். தூய்மையே பிராமண வாழ்க்கையின் நிஜம் ஆகும். தூய்மையே பிராமண வாழ்க்கையின் தனித்துவ ஆளுமை ஆகும். தூய்மையே சந்தோஷத்தினதும் அமைதியினதும் தாய். எந்தளவிற்கு உங்களிடம் தூய்மை உள்ளதோ, அதற்கேற்ப உங்களின் வாழ்க்கையில் இயல்பான முறையில் சந்தோஷமும் அமைதியும் இருப்பதுடன் அது உங்களின் சுபாவம் ஆகிவிடும். தூய ஆத்மாக்களின் இலட்சியம், பிராமணர்களில் இருந்து தேவர்கள் ஆகுவது அல்ல. ஆனால், முதலில் தேவதைகள் ஆகிப் பின்னர் தேவதைகளில் இருந்து தேவர்கள் ஆகுவதாகும். எனவே, பிராமணர்கள் தேவதைகள் ஆகுவார்கள். தேவதைகள் தேவதேவியர்கள் ஆகுவார்கள். பாப்தாதா குழந்தைகளான உங்களின் இந்த மூன்று ரூபங்களையும் பார்க்கிறார். உங்களின் மூன்று ரூபங்களும் உங்கள் எல்லோரின் முன்னாலும் வருகிறதா? அவை வருகின்றனவா? நீங்கள் ஏற்கனவே பிராமணர்கள் ஆகிவிட்டீர்கள். இப்போது உங்களின் இலட்சியம், தேவதைகள் ஆகுவதாகும். இது உங்களின் இலட்சியம்தானே? நீங்கள் நிச்சயமாக தேவதைகள் ஆகவேண்டும். ஒரு தேவதையின் எத்தனை சிறப்பியல்புகள் உங்களின் வாழ்க்கையில் புலப்படுகின்றன எனச் சோதித்துப் பாருங்கள். தேவதை என்றால் இந்தப் பழைய உலகிற்கும் பழைய சம்ஸ்காரங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் அற்றவர் என்று அர்த்தம். தேவதை என்றால், பிரச்சனைகளின் போது இலேசாகவும் ஒளியாகவும் இருப்பவர் என்று அர்த்தம் அல்ல. ஆனால், உங்களின் எண்ணங்கள், வார்த்தைகள், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளில் சதா இலேசாகவும் ஒளியாகவும் இருத்தல் - இலேசாக இருத்தல். நீங்கள் இலேசான விடயங்களையா அல்லது சுமையாக இருப்பனவற்றையா விரும்புகிறீர்கள்? நீங்கள் எதை விரும்புகிறீர்கள்? நீங்கள் இலேசான விடயங்களையே விரும்புகிறீர்கள், அப்படித்தானே? தேவதை என்றால் எல்லோராலும் நேசிக்கப்படுபவர், அத்துடன் எல்லோருடனும் பற்றற்று இருப்பவர். வெகு சிலர் மட்டுமன்றி, எல்லோராலும் நேசிக்கப்படுபவர், எல்லோரில் இருந்தும் பற்றற்று இருப்பவர். அன்பாக இருப்பது மட்டுமல்ல, எந்தளவிற்கு நீங்கள் அன்பாக இருக்கிறீர்களோ, அந்தளவிற்குப் பற்றற்றவராகவும் இருப்பீர்கள். தேவதை ஒருவரின் அடையாளம், நீங்கள் எல்லோராலும் நேசிக்கப்படுவீர்கள். யார் உங்களைப் பார்த்தாலும், யார் உங்களைச் சந்தித்தாலும் யார் உங்களுடன் உறவுமுறையில் அல்லது தொடர்பில் வந்தாலும் நீங்கள் தமக்குச் சொந்தமானவர்கள் என்றே அவர்கள் உணர்வார்கள். தந்தையுடன் எல்லோரும் அவர் தமக்குச் சொந்தமானவர் என உணர்வதைப் போன்றதாகும்.உங்களுக்கு இந்த அனுபவம் இருக்கிறதுதானே? அதேபோல், ஒரு தேவதை என்றால், எல்லோரும் உங்களைத் தமக்குச் சொந்தமாக உணர்வார்கள். சொந்தமான உணர்வு இருக்க வேண்டும். ஏனென்றால், நீங்கள் இலேசாக இருக்கும்போது, இந்த இலேசான தன்மை உங்களை எல்லோராலும் நேசிக்கச் செய்கிறது. பிராமணக் குடும்பத்தினர் முழுவதும் நீங்கள் அவர்களுக்குச் சொந்தமானவர் என உணர வேண்டும். எந்தவிதமான பாரமும் இருக்கக் கூடாது. ஏனென்றால், ஒரு தேவதை என்றால் இலேசாகவும் ஒளியாகவும் இருப்பவர் என்று அர்த்தம். ஒரு தேவதை என்றால் எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள், உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளில் எல்லையற்றவர் என்று அர்த்தம். எந்தவிதமான எல்லைகளும் இருக்கக்கூடாது. ‘எல்லோரும் என்னுடையவர்கள், நான் எல்லோருக்கும் சொந்தமானவன்’. எங்கே சொந்தம் என்ற மகத்தான உணர்வு இருக்கிறதோ, அங்கே இலேசான தன்மை காணப்படும். சம்ஸ்காரங்களிலும் இலேசான தன்மை காணப்படும். எனவே, நீங்கள் எத்தனை சதவீதம் தேவதை ஸ்திதியை அடைந்து விட்டீர்கள் எனச்சோதித்துப் பாருங்கள். எப்படிச் சோதிப்பது என உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சோதிப்பவர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் செய்பவர்களும் ஆகவேண்டும். பாராட்டுக்கள்.
பாப்தாதாவின் தூய ஆசை என்னவென்றால், இப்போது காலத்தைப் பார்க்கும்போது, தங்களை மகாராத்திகள் எனக் கருதுபவர்கள் 95 சதவீதமான ஸ்திதியைக் கொண்டிருக்க வேண்டும். அது அப்படித்தானே இருக்க வேண்டும்? (ஒருவர் தான் 98 சதவீதம் கொண்டிருப்பார் எனச் சொன்னார்) பாராட்டுக்கள்! ஒரு குலாப் ஜாமூன் சாப்பிடுங்கள். ஏனென்றால் நீங்கள் நிச்சயமாக அப்படி ஆகவேண்டும் என்பதை உங்களால் பார்க்க முடியும். அத்துடன் உங்களுக்கும் அது தெரியும். நீங்கள் அப்படி ஆகுவீர்கள் என்பதல்ல. நீங்கள் அப்படி ஆகவேண்டும். ‘நான் அப்படி ஆகுவேன், அது நடக்கும், அதைப் பற்றிப் பார்ப்போம், நான் முயற்சி செய்கிறேன்’. இப்போது இந்த மொழியை மாற்றுங்கள். உங்களிடம் என்ன எண்ணங்கள் உள்ளனவோ, அதில் எத்தனை சதவீதம் நம்பிக்கையும் வெற்றியும் உள்ளன எனச் சோதித்துப் பாருங்கள். இப்போது உங்களின் சோதனையின் வேகத்தைத் தீவிரமாக்குங்கள். எல்லாவற்றுக்கும் முதலில் சோதித்துப் பின்னர் செயல்படுங்கள். உங்களுக்குள் என்ன எண்ணங்கள் ஏற்பட்டாலும் எத்தகைய வார்த்தைகளைப் பேசினாலும் உங்களின் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் என்ன நடந்தாலும் அது ஓகே என்பதாக இருக்கக்கூடாது. இல்லை. விவிஐபி களுக்கு எவ்வளவு சோதனைகளைச் செய்வார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே? எல்லாவற்றையும் முதலில் சோதித்த பின்னரே அவர்கள் அதில் அடி எடுத்து வைப்பார்கள். எனவே, இப்போது இரண்டு மணிநேரத்தின் பின்னர் அல்லது நான்கு மணிநேரத்தின் பின்னர் சோதிப்பதாக இருக்கக்கூடாது. முதலில் சோதித்துப் பின்னர் ஓரடி எடுத்து வையுங்கள். ஏனென்றால், நீங்களே இந்த உலக நாடகத்தின் விவிஐபி இனர். இன்றுள்ள விஐபி இனர் ஒரேயொரு பிறவிக்கு மட்டுமே. அதுவும் குறுகிய காலத்திற்கு மட்டுமே. ஆனால் பிராமணர்களான நீங்கள், தேவதைகள் ஆகப் போகின்றவர்கள், விவிஐபி இனர். உங்களுக்கு விரும்பிய அளவிற்கு பல ‘வி’ களை உங்களால் அதில் போட்டுக் கொள்ள முடியும். பாருங்கள், உங்களுக்கு முன்னால் ஒரு ‘வி’ என்பதைத் தொடர்ந்து போடுங்கள். வழிபடப்படுகின்ற உங்களின் சொந்த விக்கிரகங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஓகே, நீங்கள் ஆலயங்களைப் பார்த்திருக்காமல் இருக்கலாம். ஆனால் நீங்கள் புகைப்படங்களில் பார்த்திருப்பீர்கள். இப்போதும் அவற்றுக்கு அதிகளவு மதிப்பு உள்ளது. அவர்கள் பெரிய, பெரிய ஆலயங்களைக் கட்டுகிறார்கள். ஆனால் உங்களின் படங்களோ மூன்று அடி மட்டுமே. எனவே, உங்களுக்கு அதிகளவு மதிப்பு உள்ளது. உங்களின் உயிரற்ற விக்கிரகங்களுக்கும் மதிப்பு வழங்கப்படுகிறது. அவை மதிக்கப்படுகின்றன, அல்லவா? உங்களின் விக்கிரகங்களின் தரிசனத்தைக் காண பல வரிசைகள் காணப்படுகின்றன. நீங்கள் இத்தகைய உயிர்வாழும் விவிஐபி இனர். எனவே, ஓர் அடி எடுத்து வைப்பதற்கு முன்னர் சோதியுங்கள். எதையாவது செய்த பின்னர் நீங்கள் சோதித்தால், அந்த அடி கடந்துவிடும். அந்த அடி மீண்டும் உங்களின் கைகளில் வரமாட்டாது. அறியாமைப் பாதையிலும் அவர்கள் கூறுகிறார்கள்: ‘எதையும் கவனமாகக் கருத்தில் கொண்ட பின்னரே செய்யுங்கள்’. அதைச் செய்த பின்னர் சிந்திக்காதீர்கள். முதலில் சிந்தித்துப் பின்னர் செயலாற்றுங்கள். எனவே, உங்களின் சுய மரியாதை ஆசனத்தில் அமர்ந்திருங்கள். நீங்கள் உங்களின் நிலையில் இருந்தால், எதிர்ப்பு இருக்காது. நீங்கள் உங்களின் நிலையில் இல்லாதபோதே மாயையின் எதிர்ப்பு ஏற்படுகிறது. எனவே, இப்போது பாப்தாதாவிற்கு ஒரு கேள்வி எழுகிறது. எல்லோருடைய இலட்சியமும் சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகுவதே. இதுதான் உங்களின் இலட்சியமா அல்லது நீங்கள் சிறிதளவு மட்டுமே இப்படி ஆகவிரும்புகிறீர்களா? இது உங்களின் இலட்சியமா? இது எல்லோருடைய இலட்சியமாக இருந்தால், உங்களின் கைகளை உயர்த்துங்கள். நீங்கள் சம்பூரணம் ஆக விரும்புகிறீர்கள். நல்லது. ‘எப்போது?’ நீங்கள் மக்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்தானே? ஆசிரியர்களும் மாணவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். உங்களின் இலட்சியம் என்ன? எனவே, இன்று, பாப்தாதா குறிப்பாக ஆசிரியர்களான உங்களிடம் கேட்கிறார். ஞானத்தில் 30 வருடங்கள் இருப்பவர்கள் இங்கே இருக்கிறார்கள். எனவே, 30 வருடங்கள் ஞானத்தில் இருப்பவர்கள் நாளை ஒன்றுகூடி ஒரு நிகழ்ச்சியைச் செய்யட்டும். நீங்கள் பல சந்திப்புக்களை நடத்தினீர்கள். நீங்கள் சந்திப்புக்கள், அமர்வுகள், சந்திப்புகள், அமர்வுகள் எனச் செய்வதை பாப்தாதா தொடர்ந்தும் பார்க்கிறார். எவ்வாறாயினும், நீங்கள் எப்போதும் சம்பூரணம் ஆகுவீர்கள் என்பதைப் பற்றி ஒரு சந்திப்பை நடத்துங்கள். ஏனைய விழாக்களுக்கு எல்லாம் நீங்கள் திகதியை நிச்சயம் செய்கிறீர்கள். இந்த நாளில் இந்த நிகழ்ச்சி உள்ளது. அப்படி என்றால் இதற்கு ஒரு திகதி இல்லையா? உங்களுக்கு எத்தனை வருடங்கள் வேண்டும் என பாபாவிற்குச் சொல்லுங்கள். ஏன்? பாப்தாதா ஏன் இதை உங்களிடம் கேட்கிறார்? ஏனென்றால், இயற்கையும் தந்தையிடம் எப்போது தான் அழிவை ஏற்படுத்துவது எனக் கேட்கிறது. எனவே, பாப்தாதா என்ன பதில் சொல்லட்டும்? பாப்தாதா குழந்தைகளான உங்களிடம்தானே கேட்க முடியும், இல்லையா? எப்போது? இன்றைய விசேடமான தலைப்பு: ‘எப்போது?’ இரட்டை வெளிநாட்டவர்கள் இங்கே அமர்ந்திருக்கிறார்கள். எனவே, நீங்கள் இரட்டை முயற்சி செய்வீர்கள்தானே? அற்புதங்களைச் செய்யுங்கள். வெளிநாட்டவர்களே, உதாரணங்கள் ஆகுங்கள். அவ்வளவுதான். பிராமணக் குடும்பத்திற்கும் உலகிற்கும் முன்னால் சம்பூரணமாகவும் முழுமையாகவும் ஆகுங்கள். சகல சக்திகளாலும் சகல நற்குணங்களாலும் நிரம்பியவர் ஆகுவதெனில் முழுமையானவர் ஆகுவதாகும். நீங்கள் எல்லோரும் இந்த நான்கிலும் முழுமை அடைய வேண்டும்: எண்ணங்கள், வார்த்தைகள், உறவுமுறைகள், தொடர்புகள். இந்த நான்கில் ஏதாவது ஒன்றில் நீங்கள் பலவீனமாக இருந்தால், உங்களை முழுமையானவர் எனச் சொல்ல முடியாது. நீங்கள் நான்கு விடயங்களையும் நினைவு செய்கிறீர்கள்தானே? எண்ணங்கள், வார்த்தைகள், உறவுமுறைகள், தொடர்புகள். செயல்கள் அனைத்தும் இதில் அடங்கி உள்ளன. நான்கு விடயங்களிலும். உங்களின் எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் நீங்கள் நன்றாக இருந்து, உங்களின் உறவுமுறைகளிலும் தொடர்புகளிலும் சிறிது பின்தங்கி இருப்பதாக இருக்கக்கூடாது. நீங்கள் யாருக்கு முன்னால் சென்றாலும், யாருடன் உங்களுக்குத் தொடர்பு இருந்தாலும் நீங்கள் தமக்குச் சொந்தமானவர்கள் என்பதை அவர்கள் அனுபவம் செய்ய வேண்டும். உங்களுக்குச் சொந்தமான ஒருவரின் மீது நீங்கள் உரிமையுடன் நடந்து கொள்வீர்கள். மற்றவர்களுடன் அந்தளவு இலேசான தன்மை இருக்காது. அவர்களுடன் நீங்கள் சிறிது பாரமாக உணர்வீர்கள். ஆனால் உங்களுக்குச் சொந்தம் என உணர்பவர்களுடன் இலேசான தன்மை காணப்படும். அதனால் எல்லோருடனும் இலேசாக இருங்கள். உங்களின் சொந்தப் பிராந்தியத்தில் அல்லது உங்களின் சொந்த நிலையத்தைச் சேர்ந்தவர்களுடன் மட்டும் நீங்கள் இலேசாக இருப்பதாக இருக்கக்கூடாது. இல்லை. உங்களின் சொந்த பிராந்தியத்தில் அல்லது உங்களின் சொந்த நிலையத்தில் மட்டும் நீங்கள் இலேசாக இருந்தால், எப்படி உங்களால் உலகத்துக்கே ராஜா ஆகமுடியும்? உங்களால் உலக உபகாரி ஆகவும் முடியாது, உலகத்துக்கே ராஜா ஆகவும் முடியாது. ராஜா என்றால் சிம்மாசனத்தில் அமர்பவர் என்று மட்டும் அர்த்தம் அல்ல. ஓர் இராச்சியத்தில், அதன் அரச குடும்பத்திற்கும் இராச்சிய உரிமை உள்ளது. எனவே, ‘எப்போது?’ என்ற கேள்விக்கு நீங்கள் பதில் சொல்வீர்கள்தானே? நீங்கள் சந்திப்பைச் செய்வீர்களா? சந்தித்து இதை முடிவு செய்யுங்கள். இது ஓகேயா? அச்சா.
நீங்கள் எல்லோரும் நன்றாக இருக்கிறீர்களா? இதைச் செய்ய வேண்டும், நிச்சயமாக இப்படி ஆகவேண்டும் என்ற உற்சாகம் உங்களுக்குள் இருக்கிறதா? பாப்தாதா உங்களுக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் வழங்குகிறார். உங்களிடம் ஊக்கமும் உற்சாகமும் இருப்பதை மாயை காணும்போது, அவள் எதையாவது செய்வாள். ஏனென்றால், அவளின் இறுதிக் கணங்களும் இப்போது நெருங்கி வருகின்றன. அதனால் அவள் தனது ஆயதங்கள் எல்லாவற்றையும் பயன்படுத்தி, உங்களுக்கு எப்படிப்பட்ட பராமரிப்பைக் கொடுப்பாள் என்றால், உங்களுக்கு அது மாயையின் பராமரிப்பா அல்லது அவை மாயையின் வழிகாட்டல்களா அல்லது தந்தையின் வழிகாட்டல்களா என்று தெரியாமல் இருக்கும். நீங்கள் அவற்றைக் கலந்து விடுவீர்கள். நீங்கள் தேவதைகள் ஆகுவதிலும் உங்களின் முயற்சிகளிலும் உள்ள பிரதானமான தடை என்னவென்றால் பொதுவான இரண்டு வார்த்தைகள் ஆகும். அவை கஷ்டமானவை அல்ல. எல்லோரும் அவற்றை அடிக்கடி பயன்படுத்துகிறார்கள். அவை என்ன? ‘நான்’ மற்றும் ‘எனது’. இதற்கான மிக இலகுவான வழிமுறை ஒன்றை பாப்தாதா முன்னரும் உங்களுக்குக் கூறியுள்ளார். இந்த ‘நான்’ மற்றும் ‘எனது’ என்பவற்றை மாற்றுங்கள். உங்களுக்கு அது நினைவிருக்கிறதா? பாருங்கள், ‘நான்’ என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தும்போது, அந்த வேளையில் ‘நான் ஓர் ஆத்மா’ என்பதை உங்களுக்கு முன்னால் கொண்டு வாருங்கள். ‘நான்’ என்ற வார்த்தையை நீங்கள் சொன்ன உடனேயே ஆத்மாவின் ரூபத்தை உங்களின் முன்னால் கொண்டு வாருங்கள். வெறுமனே ‘நான்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துங்கள். ஆனால், ‘நான் ஓர் ஆத்மா’ எனப் பயன்படுத்துங்கள். இதை நடைமுறையில் உங்களின் விழிப்புணர்வில் கொண்டு வாருங்கள். ‘நான்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்திய பின்னர், எப்போதும் ஆத்மா என்பதைச் சேர்த்துக் கொள்ளுங்கள். நான் ஓர் ஆத்மா. நீங்கள் ‘எனது’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது, ‘எனது பாபா’ என முதலில் சொல்லுங்கள். எனது கைக்குட்டை, எனது சாரி, எனது இது..... எவ்வாறாயினும், ‘எனது பாபா’ என்பதே முதலாவது. ‘எனது’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும் போது, பாபா உங்களின் முன்னால் வருவார். ‘நான்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது, ஆத்மா உங்களின் முன்னால் வருவார். இதை உங்களின் சுபாவமாகவும் இயல்பானதாகவும் ஆக்குங்கள். இது இலகுவானதுதானே? அல்லது, இது கஷ்டமா? ‘நான் ஓர் ஆத்மா’ என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்த நேரத்தில் நீங்கள் அதை நம்புவதில்லை. அதை நீங்கள் 100 வீதம் அறிவீர்கள். ஆனால், அதை சதவீதத்திலேயே நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்கள். சரீர உணர்வு இயல்பானதாக இருக்கும்போது, நீங்கள் ஒரு சரீரம் என நீங்கள் நினைக்க வேண்டுமா? நீங்கள் அதை இயல்பாகவே நினைக்கிறீர்கள்தானே? அதனால் ‘நான்’ என்ற வார்த்தை உங்களின் உதடுகளை அடைய முன்னர் உங்களின் எண்ணங்களில் தோன்றுகிறதுதானே? எனவே, உங்களின் எண்ணங்களில் ‘நான்’ என்ற வார்த்தை வரும்போது, ஆத்மாவின் ரூபம் உடனடியாக உங்களின் முன்னால் வரவேண்டும். இதைப் பயிற்சி செய்வது இலகுவானதுதானே? ‘நான்’ என்று மட்டும் சொல்லாதீர்கள். ஆனால் அதனுடன் கூடவே ஆத்மா என்றும் சொல்லுங்கள். அப்போது அது உறுதி ஆகிவிடும். இது உறுதியானதுதானே? நீங்கள் இன்னொருவரைப் பெயரால் கூப்பிட்டாலும் இதைச் செய்வீர்கள். ‘நான் ஓர் ஆத்மா’. ஆத்மாக்களின் உலகம், பாப்தாதா ஆவார். ஆத்மாவின் சம்ஸ்காரங்கள், ஒரு பிராமணராக இருந்து தேவதை ஆகுவதும் தேவதை ஒரு தேவர் ஆகுவதும் ஆகும். எனவே, நீங்கள் என்ன செய்வீர்கள்? இது உங்களின் மனங்களின் அப்பியாசம். தற்காலத்தில், மருத்துவர்களும் உங்களை தேகாப்பியாசம் செய்யச் சொல்கிறார்கள். தேகாப்பியாசம். எனவே, இந்தப் பயிற்சியைச் செய்யுங்கள். நான் ஓர் ஆத்மா. எனது பாபா. ஏனென்றால், நாடகத்திற்கேற்ப, காலத்தின் வேகத்தைக் குறைக்க வேண்டும். உண்மையில், படைப்பவர் வேகமாக இருக்க வேண்டும், படைப்பு அல்ல. ஆனால், தற்போதைய நேரத்திற்கேற்ப, காலம் வேகமாகச் செல்கிறது. இயற்கை எப்போதும் தயாராக இருக்கிறது. அது அதன் உத்தரவிற்காகக் காத்திருக்கிறது. நாடகத்தின் நேரம் அந்தக் கட்டளைகளைக் கொடுக்கும், அப்படித்தானே? ஸ்தாபனையைச் செய்பவர்கள், என்றும் தயாராக இல்லாவிட்டால், விநாசத்தின் பின்னர் பிரளயம் இடம்பெறுமா? பிரளயம் ஏற்படுமா? அல்லது, விநாசத்தின் பின்னர் நிச்சயமாக ஸ்தாபனை இடம்பெறப் போகிறதா? எனவே, ஸ்தாபனைக்குக் கருவிகளாக இருப்பவர்கள், இப்போது காலத்திற்கேற்ப என்றும் தயாராக இருக்க வேண்டும். இதையே பாப்தாதா காண விரும்புகிறார். தந்தை பிரம்மா அர்ஜூனன் ஆகினார். அவர் ஓர் உதாரணம் ஆகினார்தானே? ஆகவே, இந்த முறையில் தந்தை பிரம்மாவைப் பின்பற்றுபவர்கள் என்ன ஆகுவார்கள்? உங்களைப் பாருங்கள், அத்துடன் காலத்தையும் பாருங்கள்.
பாப்தாதா முன்னரும் உங்களுக்குக் கூறியுள்ளார் - தற்சமயம், பிராமண ஆத்மாக்களான நீங்கள் எல்லோரும் தேவதைகளாக ஆக இருப்பதனால், ஒரு கருவியாக இருக்கும் உணர்வையும் அத்துடன் பணிவான உணர்வுகளையும் கொண்டிருக்க வேண்டும். இந்த இரண்டு வார்த்தைகளையும் நீங்கள் கீழ்க்கோடிட வேண்டும். இதைச் செய்வதன் மூலம், ‘நான்’ என்ற சரீர உணர்வு முடிவிற்கு வந்துவிடும். ‘எனது’ என்ற உணர்வும் முடிந்துவிடும். நான் பணிவான சுபாவத்தைக் கொண்டதொரு கருவி. எந்தளவிற்கு நீங்கள் பணிவாக ஆகுகிறீர்களோ, அந்தளவிற்கு அதிக மரியாதையை நீங்கள் பெறுவீர்கள். ஏனென்றால், பணிவானவர்கள் எல்லோராலும் நேசிக்கப்படுவார்கள். நீங்கள் நேசிக்கப்படும்போது, இயல்பாகவே நீங்கள் மரியாதையைப் பெறுவீர்கள். எனவே, பணிவான ஒரு கருவி, அத்துடன் நல்லாசிகள். நல்லாசிகள் மற்றும் தூய உணர்வுகள் என்ற இரண்டு விடயங்கள் இருக்கும்போது, நீங்கள் ஒரு கருவியாகவும் பணிவாகவும் இருப்பதுடன் எல்லோருக்காகவும் நல்லாசிகளையும் தூய உணர்வுகளையும் கொண்டிருப்பீர்கள். ஒருவர் எத்தகையவராக இருந்தாலும் பணிவான கருவியாக இருப்பதும் நல்லாசிகளும் எத்தகைய சூழலை உருவாக்கும் என்றால், உங்களின் அதிர்வலைகளால் மற்ற நபர் மாறுவார். சில குழந்தைகள் இதயபூர்வமாக உரையாடிச் சொல்கிறார்கள்: ‘நான் ஒரு மாதம் நல்லாசிகள் கொடுத்தேன், எனினும் அவர் மாறவே இல்லை’. அதன்பின்னர் அவர்கள் களைப்படைந்து, மனச்சோர்வு அடைகிறார்கள். அந்த அப்பாவி, உதவியற்ற நபரின் மனோபாவமும் பார்வையும் கல்லைப் போன்றது. எனவே, நிச்சயமாக அதற்குச் சிறிது காலம் எடுக்கும். ஓகே, உதாரணமாக, அவர் மாறவில்லை. அப்போது, குறைந்தபட்சம் உங்களை நீங்கள் ஓகே யாக வைத்திருங்கள். குறைந்தபட்சம் உங்களின் சொந்த நிலையில் இருங்கள். நீங்கள் ஏன் மனச்சோர்வு அடைகிறீர்கள்? மனச்சோர்வு அடையாதீர்கள். ஓகே, அவர் மாறவில்லை. ஆனால் அத்துடன்கூடவே, நீங்கள் உங்களையும் மாற அனுமதிக்கக் கூடாது. அந்த நிலையில், மனச்சோர்வு அடைவது என்றால், அவர் அதிக சக்திசாலி, அவர் உங்களை மாற்றிவிட்டார் என்றே அர்த்தம். நீங்கள் ஏன் உங்களின் சுயமரியாதை ஆசனத்தை விட்டு நீங்குகிறீர்கள்? ‘ஏன்?’ என்ற வீணான எண்ணங்கள் எதுவும் வரக்கூடாது. ‘ஏன்?’ என நீங்கள் சொன்ன உடனேயே, வீணான எண்ணங்களுக்கான கதவைத் திறந்து விடுகிறீர்கள். அந்தக் கதவு பின்னர் மிகுந்த சிரமத்துடனேயே பூட்டப்படுகிறது. ஆகவே, ‘ஏன்?’ என்பதைப் பற்றிச் சிந்திக்காதீர்கள். கருணை நிறைந்தவராகித் தொடர்ந்து அதிர்வலைகளைப் பரப்புங்கள். நீங்கள் ஏன் உங்களின் ஆசனத்தை விட்டு நீங்கி, மனச்சோர்வு அடைகிறீர்கள்? நீங்கள் உங்களின் நிலையை விட்டுக் கீழே வரக்கூடாது என்பதை நினைவில் வைத்திருங்கள். ஏனென்றால், அப்போது அதிகளவில் எதிர்ப்பு ஏற்படும். மனிதர்களிடம் இருந்து எதிர்ப்பு, சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்களின் எதிர்ப்பு, யோசனைகளின் எதிர்ப்பு ஏற்படும். இதனாலேயே, நீங்கள் உங்களின் நிலையில் இருக்க வேண்டும். எனவே, நீங்கள் நாளை என்ன செய்வீர்கள்? உங்களுக்கு நினைவிருக்கிறதா? பாப்தாதா உங்களை நேசிக்கிறார். அதனால் நீங்கள் எல்லோரும் தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர்கள் ஆகவேண்டும் என அவர் நினைக்கிறார். தந்தையின் முன்னால் எந்த எதிர்ப்பும் வரவில்லையா? தந்தை பிரம்மாவின் முன்னால் எந்த எதிர்ப்பும் வரவில்லையா? மாயையிடம் இருந்து எதிர்ப்பு, ஆத்மாக்களிடம் இருந்து எதிர்ப்பு, அத்துடன் இயற்கையிடம் இருந்தும் எதிர்ப்பு இருந்தன. எனினும் தந்தை பிரம்மா தனது நிலையை விட்டு நீங்கினாரா? அவர் நீங்கவில்லைத்தானே? அப்படித்தானே அவர் ஒரு தேவதை ஆகினார்? இப்போது, ஒருவர் மற்றவரையும் அத்துடன் உங்களையும் தேவதைகளாகக் கருதிய வண்ணம் செயல்படுங்கள்: நான் ஒரு தேவதை, எல்லோரும் தேவதைகள். எனக்குப் பழைய உலகுடனும் பழைய சம்ஸ்காரங்களுடனும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அத்துடன் இந்த பிராமணர்களுடனும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அவை அனைத்தும் முடிந்துவிட்டன. எல்லோரையும் இந்தப் பார்வையுடன் பாருங்கள்: இவர் ஒரு தேவதை, அவர் ஒரு தேவதை. இந்தச் சூழலைப் பரப்புங்கள். அச்சா.
இப்போது சகல சக்திகளாலும் நிரம்பியவராகி, உலகிலுள்ள ஆத்மாக்களுக்கு இத்தகைய சக்திவாய்ந்த கதிர்களை ஒரு விநாடிக்குப் பரப்புங்கள். அதன் மூலம் உங்களின் சக்திகளின் அதிர்வலைகள் முழு உலகிற்கும் பரப்பப்படும். (மரண அமைதி). அச்சா.
எங்கும் உள்ள தேவதைகள் ஆகப் போகின்ற பிராமணக் குழந்தைகள் எல்லோருக்கும் சுய புரிந்துணர்வுடன் எப்போதும் தங்களைச் சோதித்து மாற்றிக் கொள்பவர்களுக்கும் தந்தை பிரம்மாவைப் பின்பற்றும் கீழ்ப்படிவான குழந்தைகளுக்கும் சேவை செய்வதுடன் இலேசாகவும் ஒளியாகவும் சதா இருந்தவண்ணம் முயற்சி செய்யும் தேவதை ஆத்மாக்களுக்கும் சதா தமது நிலை எனும் ஆசனத்தில் இருப்பதன் மூலம் சகல எதிர்ப்புக்களையும் முடித்துவிடும் மாஸ்ரர் சர்வசக்திவான் குழந்தைகளுக்கும் நெருக்கமாக இருப்பதுடன் சங்கமயுகத்தின் நடைமுறைப் பலனை அனுபவம் செய்யும் குழந்தைகளுக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் நமஸ்தேயும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் எல்லோருக்கும் நலம் விரும்புவர் ஆகுவதுடன் உங்களுக்காகவும் சாதகமான எண்ணங்களைக் கொண்டிருப்பதன் மூலம் வெளிப்படுத்தலுக்கான நேரத்தை நெருக்கமாகக் கொண்டு வருவீர்களாக.நீங்கள் செய்யும் சேவையின் வெற்றிக்கான அடிப்படை, நல்லாசிகளுக்கான மனோபாவத்தைக் கொண்டிருப்பதாகும். ஏனென்றால், உங்களின் இந்த மனோபாவம், மற்றவர்கள் அதைக் கிரகிப்பதற்கும் மேலும் அறிந்து கொள்வதற்குமான சக்தியை அதிகரிக்கும். இந்த முறையில் வார்த்தைகளால் சேவை செய்வது இலகுவாக வெற்றி நிறைந்தவர் ஆக்கும். தனக்காக சாதகமான எண்ணங்களைக் கொண்டிருக்கும் ஓர் ஆத்மா எப்போதும் மாயையால் பாதிக்கப்படாதவராக இருப்பார். அத்துடன் எவரின் பலவீனங்களைக் கிரகிப்பதில் இருந்து அல்லது எவரால் அல்லது எந்தவொரு உடமையால் கவரப்படுவதில் இருந்து பாதுகாப்பாக இருப்பார். நீங்கள் இந்த இரண்டு ஆசீர்வாதங்களையும் உங்களின் நடைமுறை வாழ்க்கையில் கடைப்பிடிக்கும்போது, வெளிப்படுத்துகைக்கான நேரம் வந்துவிடும்.
சுலோகம்:
உங்களின் எண்ணங்களையும் அர்ப்பணியுங்கள், பலவீனங்கள் அனைத்தும் இயல்பாகவே உங்களை விட்டு நீங்கிவிடும்.அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். அகநோக்கில் இருங்கள்.
இறைவனின் அன்பை அனுபவம் செய்வதற்கு, அகநோக்கில் இருக்கின்ற, உங்களின் சரீரத்தில் இருந்து பற்றற்று இருக்கின்ற பயிற்சியை அதிகரித்து, ஆத்ம உணர்வு ஸ்திதியில் ஸ்திரமாக இருங்கள். சதா அகநோக்குக் குகையில் இருங்கள். நீங்கள் தொடர்ந்து இந்தப் பழைய உலகின் சூழலுக்கு அப்பால் செல்வீர்கள். நீங்கள் சூழலால் பாதிக்கப்பட மாட்டீர்கள்.