01.07.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, சாந்திதாமமே தூய ஆத்மாக்களின் வீடாகும். நீங்கள் அந்த வீட்டிற்குச் செல்ல வேண்டுமாயின், முழுமையாகத் தூய்மையாகுங்கள்.

பாடல்:
குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் தந்தை என்ன உத்தரவாதம் அளிக்கின்றார்?

பதில்:
இனிய குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தண்டனையை அனுபவம் செய்யாது எனது வீட்டிற்குச் செல்வீர்கள் என நான் உத்தரவாதம் அளிக்கின்றேன். உங்களின் இதயத்தை ஒரேயொரு தந்தையுடன் இணைத்துக் கொள்ளுங்கள். இப்பழைய உலகைப் பார்த்தும் பார்க்காதிருங்கள். இந்த உலகில் வாழும்போதே எவ்வாறு தூய்மையாக இருப்பது என நடைமுறைப்படுத்திக் காட்டுங்கள், பாபா நிச்சயமாக உங்களுக்கு உலக இராச்சியத்தை வழங்குவார்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களிடம் வினவுகின்றார்: தந்தை குழந்தைகளாகிய உங்களைத் தனது வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார் என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே, உங்களுக்கு வீடு செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருக்கின்றதா? அதுவே சகல ஆத்மாக்களினதும் வீடாகும். இங்கு, சரீர ஆத்மாக்கள் அனைவரினதும் வீடு ஒன்றல்ல. தந்தை வந்துள்ளார் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் தந்தையை இங்கு வருமாறு அழைத்தீர்கள்: எங்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லுங்கள்! அதாவது சாந்திதாமத்திற்கு. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: உங்கள் இதயத்தையே கேட்டுப் பாருங்கள், ஓ ஆத்மாக்களே, எவ்வாறு நீங்கள் தூய்மையற்;ற நிலையில் வீடு திரும்ப முடியும்? நீங்கள் நிச்சயமாகத் தூய்மையாக வேண்டும். இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப வேண்டும். அவர் வேறு எதனையும் உங்களுக்குக் கூறவில்லை. பக்தி மார்க்கத்தில் நீங்கள் நீண்ட காலமாகப் பெருமளவு முயற்சி செய்;தீர்கள். அது எதற்காக? முக்திக்காக ஆகும். எனவே, தந்தை இப்பொழுது உங்களிடம் வினவுகின்றார்: நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என உணர்கின்றீர்களா? குழந்தைகள் பதிலளிக்கின்றனர்: பாபா, அதற்காகவே நாங்கள் நீண்ட காலம் பக்தி செய்தோம். சகல மனித ஆத்மாக்களும் திரும்ப அழைத்துச் செல்லப்பட வேண்டும் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் தூய்மையாகி வீடு திரும்ப வேண்டும். தூய ஆத்மாக்களே இங்கு முதலில் வருகின்றனர். தூய்மையற்ற ஆத்மாக்களால் வீட்டில் வசிக்க முடியாது. பில்லியன்கணக்கான ஆத்மாக்கள் அனைவரும் நிச்சயமாக வீடு திரும்ப வேண்டும். அந்த வீடு அமைதி தாமம் என்றும் ஓய்வு ஸ்திதி என்றும் அழைக்கப்படுகின்றது. ஆத்மாக்களாகிய நாங்கள் தூய்மையாகி, தூய சாந்திதாமத்திற்குச் செல்ல வேண்டும், அவ்வளவே! இது மிக இலகுவான விடயமாகும். அது ஆத்மாக்களின் தூய சாந்திதாமம் ஆகும். மற்றையது சரீரதாரி ஆத்மாக்களாகிய மனிதர்களின் சந்தோஷதாமம் ஆகும். இதுவோ சரீரதாரி ஆத்மாக்களின் தூய்மையற்ற துன்ப பூமியாகும். இதனையிட்டுக் குழப்பமடையத் தேவையில்லை. சகல தூய ஆத்மாக்களும் சாந்தி தாமத்திலே வசிக்கின்றனர். அது ஆத்மாக்களின் விகாரமற்ற, அசரீரியான தூய உலகமாகும். இது தூய்மையற்ற சரீரதாரிகளின் பழைய உலகமாகும், அனைவரும் தூய்மையற்றவர்களாகவே உள்ளனர். தந்தை ஆத்மாக்களாகிய உங்களைத் தூய்மையாக்கி, தூய உலகமாகிய சாந்திதாமத்திற்கு அழைத்துச் செல்வதற்காக இப்பொழுது வந்துள்ளார். பின்னர் இராஜயோகம் கற்பவர்கள் தூய சந்தோஷதாமத்திற்குச் செல்வார்கள். இது மிக இலகுவானது. இதில், நீங்கள் எதனையிட்டும் சிந்திக்க வேண்டியதில்லை. நீங்கள் புரிந்துகொள்வதற்கு உங்கள் புத்தியைப் பயன்படுத்த வேண்டும். ஆத்மாக்களாகிய எங்களின் தந்தை எங்களைத் தூய சாந்திதாமத்திற்கு அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளார். நாங்கள் அங்கு செல்வதற்கான பாதையை மறந்துவிட்டோம். தந்தை இப்பொழுது எங்களுக்குக் காட்டியுள்ளார். நான் வந்து, ஒவ்வொரு கல்பத்திலும் உங்களுக்குக் கூறுகின்றேன்: ஓ குழந்தைகளே, சிவபாபாவாகிய என்னை நினைவு செய்யுங்கள். ஒரேயொரு சற்குருவே அனைவருக்கும் ஜீவன் முக்தியை அருள்பவர். அவர் மாத்திரமே வந்து, குழந்தைகளாகிய உங்களுக்குச் செய்தியை, அதாவது, நீங்கள் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். நீங்கள் அரைக்கல்பமாக பெருமளவு பக்தி செய்து, அதிகளவு துன்பத்தையும் அடைந்துவிட்டீர்கள். செலவு செய்ததினால் நீங்கள் ஏழ்மை நிலையை அடைந்துள்ளீர்கள். ஆத்மாக்கள் சதோபிரதானிலிருந்து தமோபிரதானாகிவிட்டார்கள். இத்தகைய சில விடயங்கள் புரிந்துகொள்ளப்பட வேண்டும். இப்பொழுது நீங்கள் வீடு திரும்ப விரும்புகின்றீர்களா, இல்லையா? ஆம், பாபா, நாங்கள் நிச்சயமாக வீடு திரும்ப விரும்புகின்றோம். அது எங்களின் இனிமையான மௌன வீடாகும். நீங்கள் இப்பொழுது உண்மையிலேயே தூய்மையற்றவர்களாக உள்ளீர்கள் என்பதையும், இதனாலேயே உங்களால் வீடு திரும்ப முடியாதுள்ளது என்பதையும் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்களின் பாவங்கள் அழிக்கப்படும். நான் இதே செய்தியையே ஒவ்வொரு கல்பத்திலும் உங்களுக்குக் கொடுக்கின்றேன். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள், ஏனெனில், இச்சரீரம் அழியப்போகின்றது. ஆத்மாக்கள் எவ்வாறாயினும் வீடு திரும்ப வேண்டும். அது அசரீரி உலகம் என அழைக்கப்படுகின்றது. அசரீரி ஆத்மாக்கள் அனைவரும் அங்கேயே வசிக்கின்றனர். அதுவே ஆத்மாக்களின் வீடாகும். அசரீரியான தந்தையும் அங்கேயே வசிக்கின்றார். தந்தை இறுதியில் வருகின்றார். ஏனெனில், அவர் அனைவரையும் திரும்ப வீட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும். எந்தவொரு தூய்மையற்ற ஆத்மாவும் இங்கு இருக்கமாட்டார்;. இதில் குழப்பமடைதல், அல்லது சிரமப்படுதல் என்ற கேள்விக்கே இடமில்லை. மக்கள் பாடுகின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே, வந்து, எங்களைத் தூய்மையாக்கி உங்களுடன் திரும்ப அழைத்துச் செல்லுங்கள்! அவரே அனைவரதும் தந்தையாவார். பின்னர், நாங்கள் புதிய உலகில் எங்கள் பாகங்களை நடிப்பதற்காக வரும்போது, வெகு சிலரே அங்கு வசிப்பார்கள். பில்லியன் கணக்கான ஆத்மாக்கள் அனைவரும் எங்கு சென்று வசிப்பார்கள்? சத்தியயுகத்தில் மனித ஆத்மாக்கள் வெகு சிலரே இருந்தார்கள் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். விருட்சம் சிறிதாக இருந்து, பின்னர் வளர்ந்தது. விருட்சத்தில் எண்ணற்ற, பல்வேறு வகையான சமயங்கள் உள்ளன. அது கல்ப விருட்சம் என அழைக்கப்படுகின்றது. நீங்கள் எதையும் புரிந்துகொள்ளாவிட்டால், பாபாவிடம் வினவலாம். சிலர் கூறுகின்றனர்: பாபா, கல்பத்தின் காலப்பகுதி 5000 வருடங்கள் என்பதை நாங்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்? தந்தை உண்மையையே உங்களுக்குக் கூறுகின்றார். சக்கரத்தின் கணக்குப் பற்றியும் அவர் உங்களுக்குக் கூறியிருக்கின்றார். தந்தை இச்சக்கரத்தின் சங்கமயுகத்தில் வந்து, தேவ இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றார், அது இப்பொழுது இல்லை. சத்தியயுகத்தில், பின்னர் ஒரேயொரு தேவ இராச்சியமே இருக்கும். இந்நேரத்தில், அவர் படைப்பவரினதும், படைப்பினதும் ஞானத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு சக்கரத்திலும் சங்கமயுகத்திலேயே வருகின்றேன். நான் புதிய உலகை ஸ்தாபிக்கின்றேன். பழைய உலகம் முடிவடைய வேண்டும். நாடக நியதிக்கேற்ப, புதிய உலகம் பழையதாகுகின்றது, பழைய உலகம் புதியதாகுகின்றது. இது சுவஸ்திகாவில் நான்கு சம பாகங்களாகக் காட்டப்படுகின்றது. எனினும், அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. பக்தி மார்க்கத்தில், அவர்கள் தொடர்ந்தும் பொம்மைகளுடன் விளையாடுவது போன்றுள்ளது. பல படங்கள் உள்ளன. தீபாவளியன்று, அவர்கள் அவற்றைக் கடைகளில் விஷேடமாகத் தொங்கவிடுவார்கள். பல படங்கள் உள்ளன. இப்பொழுது ஒரேயொரு சிவபாபாவும், குழந்தைகளாகிய நீங்களுமே இருக்கின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். நீங்கள் இங்கு வருகின்றீர்கள், பின்னர் இலக்ஷ்மி நாராயணனின் இராச்சியமும், அதன் பின்னர் இராமர் சீதையின் இராச்சியமும் உள்ளன. அதன் பின்னரே ஏனைய சமயங்கள் வருகின்றன. குழந்தைகளாகிய உங்களுக்கு அவற்றுடன் தொடர்பு இல்லை. அவர்கள் தங்கள் சொந்த நேரத்தில் வருகின்றனர், பின்னர் அனைவரும் வீடு திரும்ப வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். இந்த முழு உலகமும் அழிக்கப்பட வேண்டும். இனியும் இங்கிருப்பதில் என்ன அர்த்தமுள்ளது? உங்கள் இதயங்கள் இவ்வுலகத்துடன் இணைக்கப்படவில்லை. நீங்கள் ஒரேயொரு அன்பிற்கினியவருடனேயே உங்கள் இதயத்தை இணைக்க வேண்டும். அவர் கூறுகின்றார்: உங்கள் இதயத்தை என்னுடன் மாத்திரம் தொடர்புபடுத்துங்கள், நீங்கள் தூய்மையாகுவீர்கள். பெருமளவு காலம் கடந்துவிட்டது, இன்னமும் சொற்ப காலமே எஞ்சியுள்ளது. காலம் கடந்துகொண்டேயிருக்கின்றது. நீங்கள் யோகத்தில் இருக்காவிட்டால், இறுதியில் அதிகளவு வருந்த நேரிடும். உங்களுக்குத் தண்டனை கிடைப்பதுடன், அந்தஸ்தும் குறைக்கப்படும். நீங்கள் உங்கள் வீட்டை விட்டு வந்து எவ்வளவு காலமாகிவிட்டது என்பதை இப்பொழுது அறிவீர்கள். மக்கள் வீட்டிற்குச் செல்வதற்காக பெருமளவு பிரயத்தனம் செய்கின்றார்கள். நீங்கள் வீட்டில் தந்தையைச் சந்திப்பீர்கள். சத்தியயுகத்தில் நீங்கள் அவரைச் சந்திக்கமாட்டீர்கள். முக்தி தாமத்திற்குச் செல்வதற்காக மக்கள் பெருமளவு முயற்சி செய்கின்றார்கள். அது பக்தி மார்க்கம் எனப்படுகின்றது. நாடகத்திற்கேற்ப, பக்தி மார்க்கம் இப்பொழுது முடிவடைகின்றது. நான் இப்பொழுது உங்களை வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்வதற்காக வந்துள்ளேன். நான் நிச்சயமாக உங்களைத் திரும்ப அழைத்துச் செல்வேன். ஒருவர் எந்தளவிற்குத் தூய்மையாகுகின்றாரோ, அந்தளவிற்கு உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோரிக்கொள்வார். இதில் குழப்பமடைதல் என்ற கேள்விக்கே இடமில்லை. தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள், நீங்கள் தண்டனை அனுபவிக்காது வீடு திரும்புவீர்கள் என நான் உத்தரவாதம் அளிக்கின்றேன். நினைவின் மூலமாக உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் என்னை நினைவு செய்யாவிட்டால், தண்டனை அனுபவிக்க நேரிடும், அத்துடன் உங்கள் அந்தஸ்தும் அழிக்கப்;படும். நான் ஒவ்வொரு 5000 வருடங்களிலும் வந்து, உங்களுக்கு இதனை விளங்கப்படுத்துகின்றேன். நான் உங்கள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்காக எண்ணற்ற தடவைகள் வந்தள்ளேன். குழந்தைகளாகிய நீங்களே வெற்றி, தோல்வி என்ற பாகங்களை நடிக்கின்றீர்கள். பின்னர், நான் உங்களைத் திரும்ப அழைத்துச் செல்வதற்காக வருகின்றேன். இது தூய்மையற்ற உலகமாகும். இதனாலேயே மக்கள் பாடுகின்றனர்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! நாங்கள் விகாரம் நிறைந்த பாவிகள், வந்து எங்களை விகாரமற்றவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் ஆக்குங்கள்! இது விகாரம் நிறைந்த உலகமாகும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது முற்றிலும் விகாரமற்றவர்கள் ஆகவேண்டும். தாமதமாக வருபவர்கள், தண்டனையை அனுபவித்துவிட்டே சுவர்க்கத்திற்குச் செல்வார்கள். இதனாலேயே அவர்கள் இரு கலைகள் குறைவாக உள்ள உலகத்திற்கே செல்வார்கள். அவர்களை முற்றிலும் தூய்மையானவர்கள் என அழைக்க முடியாது. இதனாலேயே நீங்கள் இப்பொழுது முழு முயற்சி செய்ய வேண்டும். உங்கள் அந்தஸ்து குறைக்கப்படுவதாக இருக்கக்கூடாது. அது இராவண இராச்சியமாக இல்லாவிட்டாலும், அந்தஸ்து வரிசைக்கிரமமாகவே உள்ளது. ஓர் ஆத்மாவில் கலப்படம் கலக்கப்படும்போது, அவர் அதற்கேற்ற சரீரத்தையே பெறுகின்றார். ஆத்மா சத்தியயுகத்தவரிலிருந்து திரேதாயுகத்தவர் ஆகுகின்றார். ஆத்மாவினுள் வெள்ளிக் கலப்படம் கலக்கப்பட்டு, பின்னர் நாளுக்கு நாள் அசுத்தமான கலப்படம் கலக்கப்படுகின்றது. தந்தை உங்களுக்கு மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றார். உங்களுக்கு ஏதாவது விளங்காவிட்டால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள்! தந்தை 84 பிறவிகளின் சக்கரத்தைச் சுற்றி வந்தவர்களுக்கே விளங்கப்படுத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் இவரின் 84 பிறவிகளின் இறுதியிலேயே இவரினுள் பிரவேசிக்கின்றேன். அவர் பின்னர் முதலாம் இலக்கத்திற்குச் செல்லவேண்டும். முதலாம் இலக்கத்தவராக இருந்தவரே இப்பொழுது இறுதி இலக்கத்தவராக இருக்கின்றார். தனது பல பிறவிகளின் இறுதியில் தூய்மையற்றவராகி உள்ளவரே முதலாவதாக வருகின்றார். தூய்மையாக்குபவராகிய நான் அவரின் சரீரத்தில் மாத்திரமே பிரவேசிக்கின்றேன். நான் அவரைத் தூய்மையாக்குகின்றேன். நான் உங்களுக்கு மிகத் தெளிவாக விளங்கப்படுத்துகின்றேன். தந்தை கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள், உங்கள் பாவங்கள் எரிக்கப்படும். நீங்கள் கீதை ஞானத்தை அதிகளவில் செவிமடுத்து, அதனை மற்றவர்களுக்கும் உரைத்தீர்கள். எனினும், அதன் மூலமாக நீங்கள் ஜீவன் முக்தியைப் பெறவில்லை. பல சந்நியாசிகள் சமய நூல்களை உங்களுக்கு மிக இனிமையாக உரைத்திருக்கின்றார்கள். அந்த ஒலியைக் கேட்டு பல முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடுகின்றார்கள். அது செவிகளுக்கு இனிமையானது. பக்தி மார்க்கம் வெறுமனே செவிகளுக்கு இனிமை கொடுப்பது மாத்திரமேயாகும். இங்கு, ஆத்மாக்கள் தந்தையை நினைவு செய்ய வேண்டும். பக்தி மார்க்கம் இப்பொழுது முடிவடைகின்றது. தந்தை கூறுகின்றார்: நான் வேறு எவருமே அறிந்திருக்காத ஞானத்தை உங்களுக்குக் கொடுப்பதற்காகவே வந்துள்ளேன். நான் மாத்திரமே ஞானக்கடல் ஆவேன். கியான் என்பது ஞானம் எனப்படுகின்றது. நான் உங்களுக்கு அனைத்தையும் கற்பிக்கின்றேன். நான் 84 பிறவிகளின் சக்கரத்தையும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். உங்களிடம் முழு ஞானமும் உள்ளது. நீங்கள் பௌதீக உலகிலிருந்து சூட்சுமலோகத்தைக் கடந்து, அசரீரி உலகிற்குச் செல்கின்றீர்கள். எல்லாவற்றிற்கும் முதலில், இலக்ஷ்மி நாராயணனின் வம்சம் உள்ளது. அங்கு விகாரமுள்ள குழந்தைகள் எவரும் இல்லை. அங்கு, இராவண இராச்சியம் இல்லை. அனைத்தும் யோக சக்தியினாலேயே நிகழ்கின்றது. ஒரு குழந்தை இப்பொழுது கர்ப்ப மாளிகையொன்றில் பிரவேசிப்பார் என்ற காட்சியொன்றை நீங்கள் பெறுவீர்கள். அவர் சந்தோஷமாகவே பிரிவார். இங்கு, மக்கள் பெருமளவில் அழுது புலம்புகின்றார்கள்! இங்கு, நீங்கள் கர்ப்பச் சிறைக்குள் செல்கின்றீர்கள். அங்கு, அழுது புலம்புதல் என்ற கேள்விக்கே இடமில்லை. பாம்பின் உதாரணத்தைப் போன்று, சரீரம் நிச்சயமாக மாற்றப்பட வேண்டும். எவ்வாறாயினும், இதில் குழப்பமடைதல் என்ற கேள்விக்கே இடமில்லை. பல கேள்விகள் கேட்கவேண்டிய அவசியமில்லை. நீங்கள் தூய்மையாகுவதற்கான முயற்சியில் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். தந்தையை நினைவு செய்வது சிரமமாக உள்ளதா? நீங்கள் தந்தையின் முன்னால் அமர்ந்திருக்கின்றீர்கள். உங்கள் தந்தையாகிய நான், சந்தோஷம் என்ற ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கின்றேன். இந்த இறுதிப் பிறவியில் உங்களால் நினைவில் நிலைத்திருக்க முடியாதா? குழந்தைகளாகிய நீங்கள் இங்கு இருக்கும்போது இதனை மிக நன்றாகப் புரிந்துகொள்கின்றீர்கள். எனினும், நீங்கள் வீட்டிற்குச் சென்று, உங்கள் மனைவியின் முகம் போன்றவற்றைப் பார்த்ததும்…. மாயை உங்களை உண்டுவிடுகின்றாள். தந்தை கூறுகின்றார்: எவர்மீதும் பற்றைக் கொண்டிருக்காதீர்கள். அவையனைத்தும் நிச்சயமாக அழிக்கப்படும். நீங்கள் ஒரேயொரு தந்தையையே நினைவு செய்ய வேண்டும். நடக்கும் போதும், உலாவித் திரியும்போதும், தந்தையையும், உங்கள் இராச்சியத்தையும் நினைவு செய்யுங்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். சத்தியயுகத்தில் இறைச்சி போன்ற அழுக்கான பொருட்கள் இல்லை. தந்தை கூறுகின்றார்: விகாரங்களையும் துறந்துவிடுங்கள். நான் உங்களுக்கு உலக இராச்சியத்தைக் கொடுக்கின்றேன். அதில் அதிகளவு வருமானம் உள்ளது. எனவே, நாங்கள் ஏன் தூய்மையாக இருக்கக்கூடாது? ஒரு பிறவியில் தூய்மையாக இருப்பதால், நீங்கள் மிகப்பெரிய வருமானத்தைச் சம்பாதித்துக் கொள்கின்றீர்கள். நீங்கள் ஒன்றாக வாழலாம், ஆனால் ஞான வாள் உங்களுக்கிடையில் இருக்க வேண்டும். நீங்கள் தூய்மையாக இருப்பதை நடைமுறைப்படுத்திக காட்டினால், அனைவரிலும் அதியுயர்ந்த அந்தஸ்தைப் பெறுவீர்கள். ஏனெனில், நீங்கள் பின்னர் பிறப்பிலிருந்தே பிரம்மச்சாரிகளாக இருப்பீர்கள். ஞானமும் தேவைப்படுகின்றது. நீங்கள் மற்றவர்களையும் உங்களைப் போன்று ஆக்கவேண்டும். நீங்கள் ஒன்றாக வாழ்ந்தாலும் தூய்மையாக இருக்கின்றீர்கள் என்பதைச் சந்நியாசிகளுக்கு நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும். அப்பொழுது, உங்களிடம் மகத்தான சக்தி இருப்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள். தந்தை கூறுகின்றார்: இந்த ஒரு பிறவியில் தூய்மையாக இருப்பதன் மூலம், நீங்கள் 21 பிறவிகளுக்கு உலக அதிபதிகள் ஆகுவீர்கள். நீங்கள் அத்தகைய பெரிய பரிசைப் பெறுகின்றீர்கள். எனவே, எவ்வாறு தூய்மையாக இருப்பது என்பதை நீங்கள் ஏன் நடைமுறைப்படுத்திக் காட்டக்கூடாது? சொற்ப காலமே எஞ்சியுள்ளது. ஓலி தொடர்ந்து கொண்டேயிருக்கும். அது பத்திரிகைகளிலும் அச்சிடப்படும். நீங்கள் ஒத்திகைகளைப் பார்த்திருக்கின்றீர்கள். ஒரு அணுகுண்டால் என்ன நிகழ்ந்துவிட்டது எனப் பாருங்கள்! இப்பொழுதும் மக்கள் இன்னமும் வைத்தியசாலைகளில் இருக்கின்றார்கள். தற்காலத்தில், எவ்வித சிரமமுமின்றி, அனைவரும் உடனடியாகவே அழிக்கப்படத்தக்க அத்தகைய குண்டுகளை அவர்கள் தயாரிக்கின்றார்கள். இந்த ஒத்திகைகள் இடம்பெற்று, பின்னர் அதுவே இறுதிக்கட்டமாகிவிடும். மக்கள் உடனடியாகவே மரணிக்கின்றார்களா இல்லையா என அவர்கள் பரிசீலித்துப் பார்ப்பார்கள். பின்னர், அவர்கள் வேறு வழிமுறைகளைக் கண்டறிவார்கள். வைத்தியசாலைகள் எதுவுமே இருக்கமாட்டாது. மற்றவர்களுக்குச் சேவை செய்வதற்கு யார் இருப்பார்கள்? உங்களுக்கு உணவு கொடுப்பதற்கு பிராமணர்கள் போன்ற எவருமே இருக்கமாட்டார்கள். குண்டு போடப்பட்டதும், அனைத்தும் அழிக்கப்பட்டுவிடும். அனைத்தும் பூகம்பங்களினால் புதைந்துவிடும். அதற்கு நேரம் எடுக்காது. இங்கு சன நெருக்கடி உள்ளது. சத்தியயுகத்தில் வெகு சிலரே இருப்பார்கள். அவர்கள் அனைவரும் எவ்வாறு பின்னர் அழிக்கப்படுவார்கள்? நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்போது என்ன நிகழும் என்பதைப் பார்க்க முடியும். ஆரம்பத்தில் 900,000 பேர் இருப்பார்கள். நீங்களே பக்கிரிகள் (சமய துறவிகள்) நீங்கள் பிரபுவை நேசிக்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் அனைத்தையும் துறந்து, உங்களை ஆத்மாக்களாகக் கருதுகின்றீர்கள். தந்தை அத்தகைய பக்கிரிகளை நேசிக்கின்றார். சத்தியயுகத்தில் சிறிய விருட்சமே இருக்கும். பாபா பல விடயங்களை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். சகல நடிகர்களும் அழிவற்ற ஆத்மாக்கள். அவர்கள் தங்களின் சொந்தப் பாகங்களை நடிப்பதற்காகவே இங்கு வருகின்றனர். நீங்கள் தந்தையின் மாணவர்களாகி, கற்பதற்காகவே ஒவ்வொரு கல்பத்திலும் வருகின்றீர்கள். பாபா உங்களைத் தூய்மையாக்கி, தன்னுடன் அழைத்துச் செல்வார் என்பதை நீங்கள் அறிவீர்கள். நாடகத்திற்கேற்ப, பாபா அனைவரையும் நிச்சயமாக திரும்ப வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்குக் கட்டுப்பட்டிருக்கின்றார். இதனாலேயே பாண்டவ சேனை என்ற பெயர் உள்ளது. பாண்டவர்களாகிய நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? நீங்கள் முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்றே, தந்தையிடமிருந்து உங்கள் இராச்சிய பாக்கியத்தை நீங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப, வரிசைக்கிரமமாகப் பெற்றுக்கொள்கின்றீர்கள். அச்;;;;;சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையால் நேசிக்கப்படுவதற்கு, முழுமையான ஆண்டிகள் ஆகுங்கள். உங்கள் சரீரத்தை மறந்து, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுவதே ஓர் ஆண்டி ஆகுதல் என்பதாகும். தந்தையிடமிருந்து மிகப் பெரிய பரிசைப் பெறுவதற்கு, முற்றிலும் தூய்மையாகுவது எவ்வாறு என்பதைச் செய்துகாட்டுங்கள்.

2. நீங்கள் வீடு திரும்ப வேண்டும் என்பதால், உங்கள் இதயத்தைப் பழைய உலகுடன் இணைக்காதீர்கள்.. உங்கள் இதயத்தை ஒரேயொரு அன்பிற்கினியவருடன் மாத்திரம் இணைத்துக்கொள்ளுங்கள். தந்தையையும், இராச்சியத்தையும் நினைவு செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் பிராமண வாழ்;க்கையில் ஒன்றிணைந்திருப்பதன் மூலம் சதா மலர்ச்சியான மற்றும் கவனமான மனோநிலையைக் கொண்டிருப்பவர் ஆகுவீர்களாக.

எந்தவொரு சூழ்நிலையிலும் உங்களின் சந்தோஷமான மனோநிலை மாறுமாக இருந்தால், அதை நிரந்தரமான சந்தோஷம் என்று அழைக்க முடியாது. உங்களின் பிராமண வாழ்க்கையில் சதா மலர்ச்சியான மற்றும் கவனமான மனோநிலையைக் கொண்டிருங்கள். உங்களின் மனோநிலை மாறக்கூடாது. உங்களின் மனோநிலை மாறும்போது, இன்று உங்களின் மனோநிலை இப்படி இருப்பதனால் உங்களுக்கு ஏகாந்தம் தேவை என நீங்கள் சொல்வீர்கள். நீங்கள் தனியாக இருந்தால் உங்களின் மனோநிலை மாறும். சதா ஒன்றிணைந்தவராக இருங்கள். உங்களின் மனோநிலை மாறாது.

சுலோகம்:
ஒரு பண்டிகையைக் கொண்டாடுவதென்றால், நினைவிற்கும் சேவைக்குமான உற்சாகத்தைக் கொண்டிருத்தல் என்று அர்த்தம்.