02.06.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    18.01.20     Om Shanti     Madhuban


தந்தை பிரம்மாவைப் போன்று, உங்களின் தியாகம், தவம், சேவையின் அதிர்வலைகளை உலகிற்குப் பரப்புங்கள்.


இன்று, சக்திவாய்ந்த பாப்தாதா தனது சக்திவாய்ந்த குழந்தைகளைப் பார்க்கிறார். இன்று, இது நினைவு தினமும் அத்துடன் சக்தி தினமும் ஆகும். இன்று, சகல சக்திகளின் உயிலும் குழந்தைகளிடம் ஒப்படைக்கப்பட்ட தினமாகும். உலகில், பல வகையான உயில்கள் உள்ளன. ஆனால், தந்தை பிரம்மா தான் தந்தையிடமிருந்து பெற்ற சகல சக்திகளையும் குழந்தைகளுக்கு உயிலாக வழங்கினார். வேறு யாராலும் இத்தகைய அலௌகீக உயிலை எழுத முடியாது. தந்தை பௌதீக ரூபத்தில் தனது கருவியாகத் தந்தை பிரம்மாவை ஆக்கினார். தந்தை பிரம்மா குழந்தைகளான உங்களுக்கு, ‘நீங்கள் கருவிகள் ஆகுவீர்களாக’ என்ற ஆசீர்வாதத்தைத் தனது உயிலாக எழுதினார்;. இந்த உயிலானது, குழந்தைகளான நீங்கள் இலகுவாகச் சகல சக்திகளையும் அனுபவிக்கச் செய்கிறது. உங்களின் சொந்த முயற்சிகளினூடாகச் சக்திகளை அனுபவம் செய்வது ஒரு விடயம். இன்னொன்று, இறைவனின் உயிலினூடாகச் சகல சக்திகளையும் பெறுதல். இது இறைவனிடமிருந்து பெறுகின்ற ஒரு பரிசாகும். இறைவனின் ஆசீர்வாதம் ஆகும். இறைவனின் ஆசீர்வாதங்களே உங்களை முன்னேறச் செய்கின்றன. நீங்கள் ஓர் ஆசீர்வாதத்தைப் பெறும்போது, உங்களின் முயற்சிகளில் சிரமப்பட வேண்டியதில்லை. இறைவனே உங்களை ஒரு கருவி ஆக்குவதனால், இலகுவாகவும் இயல்பாகவும் நீங்கள் முன்னேறுகிறீர்கள். அந்த வேளையில், பாபாவின் முன்னால் வெகு சிலரே இருந்தார்கள். எவ்வாறாயினும், விசேடமான குழந்தைகளான உங்களுக்கு பாப்தாதாவினால் இந்த உயில் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக அது பிரம்மாபாபாவினால் வழங்கப்பட்டுள்ளது. தந்தையால் இந்த உயிலைப் பெற்றுள்ள குழந்தைகள் - ஆதி இரத்தினங்களும் சேவையில் கருவிகளாக இருந்த குழந்தைகளும் - தாம் பெற்ற உயிலை மிக நன்றாகப் பயன்படுத்தியதை பாப்தாதா கண்டார். இந்த உயிலால்தான் பிராமணக் குடும்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. குழந்தைகளான உங்களின் சிறப்பியல்பால், இந்த வளர்ச்சி இடம்பெற வேண்டியுள்ளது. அது தொடர்ந்து வளரும்.

பாப்தாதா குழந்தைகளான உங்களில் இரண்டு சிறப்பியல்புகளைப் பார்க்கிறார் - கருவிகளாக ஆக்கப்பட்ட குழந்தைகளின் சிறப்பியல்பு, சகபாடிகளாக இருப்பவர்களின் சிறப்பியல்பு. இது மிக நன்றாக உள்ளது. அந்தச் சிறப்பியல்புகள் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அவற்றை நினைக்கிறீர்களா? நீங்கள் ஸ்தாபனையின் ஆதி இரத்தினங்களாக இருந்தாலென்ன, அல்லது சேவையின் இரத்தினங்களாக இருந்தாலென்ன, உங்களின் ஒன்றுகூடலுக்குள் உள்ள ஒற்றுமை என்ற முதலாவது சிறப்பியல்பானது மிக, மிக நன்றாக இருந்தது. உங்களில் எவருக்கேனும் உங்களின் எண்ணங்களில், ‘ஏன்? என்ன? அல்லது எப்படி?’ என்ற கேள்விகள் சிறிதளவேனும் இருக்கவில்லை. உங்களின் இரண்டாவது சிறப்பியல்பு என்னவென்றால், உங்களில் எவராயினும் எதையாவது பரிந்துரைக்கும்போது, மற்றவர் அதை ஏற்றுக் கொள்வார். இதுவே மேலதிக சக்திகளின் உயிலின் சூழலின் சிறப்பியல்பாகும். இதனாலேயே, கருவி ஆத்மாக்களான உங்களால் எங்கும் ‘பாபா, பாபா’ என்பதை மட்டுமே பார்க்க முடிகிறது.

அந்த வேளையில் கருவிகளாக இருந்த குழந்தைகளுக்கு, பாப்தாதா தனது இதயபூர்வமாக மிகுந்த அன்பை வழங்குகிறார். எப்படியும் அங்கு தந்தையின் அற்புதம் இருந்தது. ஆயினும், குழந்தைகளான உங்களின் அற்புதமும் எதிலும் குறைந்ததல்ல. அந்த வேளையில் ஒன்றுகூடலில் இருந்த ஒற்றுமை, எல்லோரும் ஒற்றுமையாக இருந்தமை, இன்றும் சேவையை நன்றாக முன்னேறச் செய்கிறது. ஏன்? கருவி ஆத்மாக்களான உங்களின் அத்திவாரம் பலமானதாக இருந்தது. ஆகவே, இன்றும் பாப்தாதா குழந்தைகளான உங்களின் அற்புதத்தின் புகழைப் பாடுகிறார். எங்கும் உள்ள குழந்தைகள் அன்பு மாலைகளை பாபாவிற்கு இடுகிறார்கள். தந்தையோ குழந்தைகளான உங்களின் அற்புதங்களின் பாடல்களைப் பாடுகிறார். இவை அனைத்தும் நீண்ட காலத்திற்குத் தொடரப் போகிறது என நீங்கள் எப்போதாவது நினைத்தீர்களா? இப்போது எவ்வளவு காலம் ஆகிவிட்டது? எல்லோருடைய வாயில் இருந்தும் இதயத்தில் இருந்தும், நாங்கள் வீட்டுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற ஒலியே வெளிப்பட்டது. எவ்வாறாயினும், அவ்யக்த ரூபத்தினூடான சேவை இன்னமும் இடம்பெற வேண்டியுள்ளது என்பதை பாப்தாதா அறிவார். சாகார் நாட்களில் இத்தகைய பெரிய மண்டபத்தை நீங்கள் கட்டினீர்களா? அந்த வேளையில் பாபாவின் ஆழமாக நேசிக்கப்படும் இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகள் வந்திருந்தார்களா? இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகள் அவ்யக்த பராமரிப்பின் மூலமே தமது அலௌகீகப் பிறப்பை எடுக்க வேண்டியிருந்தது. இன்னமும் பல குழந்தைகள் வரவுள்ளார்கள். இதனாலேயே, தந்தை பிரம்மா தனது பௌதீக சரீரத்தை நீக்க வேண்டியிருந்தது. இரட்டை வெளிநாட்டுக் குழந்தைகளான உங்களுக்கு இந்த அவ்யக்த பராமரிப்பைப் பெறத் தகுதிவாய்ந்தர்களாக இருக்கிறோம் என்ற போதை இருக்கிறதா?

தந்தை பிரம்மாவின் துறவறம் குறிப்பாக நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், தந்தை பிரம்மாவின் துறவறமும் குழந்தைகளான உங்களின் பாக்கியமும் நாடகத்தில் எழுதப்பட்டுள்ளன. முதன்மையான துறவறத்திற்குத் தந்தை பிரம்மா உதாரணம் ஆகினார். துறவறம் என்றால், உங்களிடம் எல்லாம் இருக்கும்போதும், எல்லாவற்றையும் துறத்தல் என்று அர்த்தம். காலத்திற்கும் பிரச்சனைகளுக்கும் ஏற்ப துறத்தல், மேன்மையான துறவறம் ஆகாது. ஆரம்பத்தில் இருந்தே, பிரம்மாபாபாவிடம் சரீரம், மனம், செல்வம், உறவுகள் என அனைத்தும் இருந்தன. எனினும் அவர் எல்லாவற்றையும் துறந்தார். அவர் தனது சரீரத்தையும் துறந்தார். அவரிடம் சகல சௌகரியங்களும் இருந்தபோதும், பழைய கட்டடத்திலேயே அவர் வசித்தார். வசதிகள் எல்லா இடங்களில் இருந்தும் வரத்தொடங்கின. அவர் எல்லாவற்றையும் பயன்படுத்தக்கூடியதாக இருந்தபோதும், அவர் தனது ஆன்மீக முயற்சிகளில் மிகவும் உறுதியாக இருந்தார். பிரம்மா செய்த அந்தத் தவம், குழந்தைகளான உங்கள் எல்லோருடைய பாக்கியத்தையும் உருவாக்கியது. நாடகத்தின்படி, பிரம்மா மட்டுமே இத்தகைய துறவறத்திற்கான உதாரணமாக விளங்கினார். இந்தத் துறவறமே, எண்ணத்தின் சக்தியால் சேவை செய்யும் அவரின் விசேடமான பாகத்தை உருவாக்கியது. இதனாலேயே, புதிய குழந்தைகள் துரித முன்னேற்றம் அடைகிறார்கள். ஆகவே, தந்தை பிரம்மாவின் துறவறத்தின் கதையை நீங்கள் கேட்டீர்களா?

குழந்தைகளான நீங்கள் பிரம்மாவின் தவத்தின் பலனைப் பெறுகிறீர்கள். அவரின் தவத்தின் ஆதிக்கம், மதுவன பூமியில் கலந்துள்ளது. அந்தக் குழந்தைகளும் அவருடன் இருக்கிறார்கள். அந்தக் குழந்தைகளின் தவமும் இருந்தன. எவ்வாறாயினும், தந்தை பிரம்மாவே கருவியாக இருந்தார் என்றே சொல்ல முடியும். பிராமணக் குழந்தைகளும் அத்துடன் தவபூமியான மதுவனத்திற்கு வருகின்ற எவருமே, இங்குள்ள சூழலும் அதிர்வலைகளும் தங்களை இலகுயோகிகள் ஆக்கியுள்ளதை அனுபவம் செய்கிறார்கள். இங்கே யோகம் செய்வதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டியதில்லை. ஏனென்றால், உங்களின் யோகம் இலகுவாக இணைக்கப்படுகிறது. என்ன வகையான ஆத்மாக்கள் இங்கே வந்தாலும், அவர்கள் நிச்சயமாக ஏதாவதொன்றை அனுபவம் செய்கிறார்கள். அவர்கள் இந்த ஞானத்தைப் புரிந்து கொள்ளாமல் போகலாம். ஆனால், நிச்சயமாக ஆன்மீக அன்பையும் அமைதியையும் அனுபவம் செய்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக வீடு திரும்பியதும் ஏதாவதொரு வகையான மாற்றத்தைச் செய்ய வேண்டும் எனக் கருதுகிறார்கள். இந்த விளைவானது, பிரம்மாவினதும் பிராமணக் குழந்தைகளினதும் தவத்தினாலேயே ஆகும். இத்துடன்கூடவே, அவர் என்ன முறையில் சேவை செய்தார் எனப் பாருங்கள். எப்படிப் பல்வகைப்பட்ட சேவைகளைச் செய்வது எனக் குழந்தைகளுக்கு அவர் நடைமுறையில் செய்து காட்டினார். நீங்கள் இப்போது அந்தப் பல்வகை வழிமுறைகளையும் அதிகளவில் பயன்படுத்துகிறீர்கள். எப்படிக் குழந்தைகளான நீங்கள் தந்தை பிரம்மாவின் தியாகம், தவம், சேவையின் பலனைப் பெறுகிறீர்களோ, அதேபோல், குழந்தைகளான நீங்களும் இந்த உலகிற்கு உங்களின் தியாகம், தவம், சேவையின் அதிர்வலைகளைப் பரப்ப வேண்டும். எப்படி விஞ்ஞானம் அதன் விளைவை நடைமுறையில் காட்டுகிறதோ, அப்படியே, விஞ்ஞானத்தைப் படைக்கின்ற மௌன சக்தியும் வெளிப்படுத்தப்பட வேண்டும். இப்போது மௌன சக்தியை நடைமுறையில் வெளிப்படுத்த வேண்டிய நேரமாகும். மிக விரைவாக மௌன சக்தியின் அதிர்வலைகளைப் பரப்புவதற்கான வழிமுறையானது, உங்களின் மனங்களையும் புத்திகளையும் ஒருமுகப்படுத்துவதே ஆகும். இப்போது ஒருமுகப்படுத்துகின்ற இந்தப் பயிற்சியானது அதிகரிக்க வேண்டும். உங்களின் ஒருமுகப்படுத்தும் சக்தியால் மட்டுமே அந்தச் சூழலை உருவாக்க முடியும். குழப்பம் ஏற்படும்போது, சக்திவாய்ந்த அதிர்வலைகளை உருவாக்க முடியாது.

இன்று, அதிகளவு ஒருமுகப்படுத்தும் சக்தி தேவைப்படுவதை பாப்தாதா கண்டார். குழந்தைகளான நீங்கள் எல்லோரும் உங்களின் சகோதர, சகோதரிகளின் துன்பமான சூழ்நிலைகளை மாற்றுகின்ற திடசங்கற்பமான எண்ணத்தைக் கொண்டிருக்க வேண்டும். அவர்களுக்கான இந்தக் கருணை உங்களின் இதயங்களில் இருந்து வெளிப்பட வேண்டும். விஞ்ஞானத்தின் சக்தியால் இத்தகைய குழப்பத்தை உருவாக்கக்கூடியதாக இருக்கும்போது, பிராமணர்களான நீங்கள் எல்லோரும் உங்களின் மௌன சக்தியாலும், உங்களின் கருணை உணர்வுகளாலும் உங்களின் எண்ணங்களாலும் அந்தக் குழப்பத்தை மாற்ற முடியாதா? நீங்கள் இதைச் செய்ய வேண்டியிருப்பதனால், இது நிகழ வேண்டியிருப்பதனால், நீங்கள் இதில் விசேட கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் முப்பாட்டனாரின் குழந்தைகளான இருப்பதனால், எல்லோருமே உங்களின் வம்ச விருட்சத்தின், உங்களின் குடும்பத்தின் கிளைகள் ஆவார்கள். நீங்களே உங்களின் பக்தர்களின் இஷ்ட தெய்வங்கள் ஆவீர்கள். இஷ்ட தெய்வங்களாக இருக்கும் போதை உங்களுக்கிருக்கிறதா? உங்களின் பக்தர்கள் உங்களை அழைக்கிறார்கள். உங்களுக்கு அவர்கள் அழைப்பது கேட்கிறதா? ‘ஓ இஷ்ட தெய்வமே!’ என அவர்கள் அழைக்கிறார்கள். எவ்வாறாயினும், நீங்கள் அவர்கள் அழைப்பதைக் கேட்கிறீர்கள், ஆனால் அதற்கு உங்களால் பதில் அளிக்க முடியாதா? ஆகவே, பாப்தாதா இப்போது உங்களுக்குக் கூறுகிறார்: ‘ஓ பக்தர்களின் இஷ்ட தெய்வங்களே, இப்போது அவர்களின் அழைப்பைக் கேளுங்கள்! அவர்கள் சொல்வதை மட்டும் கேளாமல், அவர்களுக்கு ஒரு பதில் அளியுங்கள்.’ அவர்களுக்கு நீங்கள் என்ன பதில் சொல்வீர்கள்? மாற்றத்திற்கான சூழலை உருவாக்குவதன் மூலம் நீங்கள் பதில் அளிப்பீர்கள். அவர்களுக்கு உங்களிடமிருந்து எந்தவிதப் பதிலும் கிடைக்காததால், அவர்கள் கவனக்குறைவானவர்கள் ஆகுகிறார்கள். அவர்கள் உங்களை அழைத்துவிட்டுப் பின்னர் மௌனம் ஆகிவிடுகிறார்கள்.

ஒவ்வொரு பணிக்கும் தந்தை பிரம்மாவிடம் இருந்த உற்சாகத்தை நீங்கள் எல்லோரும் கண்டீர்கள். ஆரம்பத்தில், அவர் உற்சாகமாக சாவியைத் தேடினார். இப்போதும், தந்தை பிரம்மா, அந்தச் சாவியால் வீட்டின் வாயில்களைத் திறக்கும்படி சிவத்தந்தையிடம் கேட்டுக் கொண்டிருக்கிறார். எவ்வாறாயினும், குறைந்தபட்சம் பாபாவுடன் சேர்ந்து செல்பவர்கள் தயாராக வேண்டும். அவர் தனியாக என்ன செய்வார்? ஆகவே, நீங்கள் இப்போது பிரம்மாபாபாவுடன் சேர்ந்து செல்ல இருக்கிறீர்கள்தானே? அல்லது, நீங்கள் அவருக்குப் பின்னால் செல்லப் போகின்றீர்களா? நீங்கள் பிரம்மாபாபாவுடன் சேர்ந்தே செல்லப் போகின்றீர்கள், அப்படித்தானே? ஆகவே, பிரம்மாபாபா உங்களிடம் கேட்கும்படி தந்தையிடம் கூறுகிறார்: தந்தை குழந்தைகளான உங்களுக்குச் சாவியைக் கொடுத்தால், நீங்கள் என்றும் தயார் ஆகிவிடுவீர்களா? நீங்கள் என்றும் தயாராக இருக்கிறீர்களா? அல்லது, வெறுமனே தயாராக இருக்கிறீர்களா? எப்போதும் தயார் நிலையில் இல்லையா? எப்போதும் தயாராக இருங்கள். தியாகம், தவம், சேவை என்ற மூன்று பரீட்சைகளையும் எதிர்கொள்ள நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? தந்தை பிரம்மா புன்னகை செய்கிறார். ஏனென்றால், நீங்கள் அன்புக்கண்ணீர் சிந்தினீர்கள். தந்தை பிரம்மா அந்தக் கண்ணீரைத் தனது இதயத்தில் முத்துக்களாகச் சேர்த்து வைத்தாலும், நிச்சயமாக அவருக்கு இந்த எண்ணம் தோன்றுகிறது: நீங்கள் எல்லோரும் எப்போது என்றும் தயாராக ஆகுவீர்கள்? நீங்கள் ஒரு திகதியைக் கொடுக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒருவராவது, ‘நான் எப்போதும் தயாராகவே இருக்கிறேன்’ எனச் சொல்ல வேண்டும். குறைந்தபட்சம் உங்களின் சகபாடிகளை உருவாக்குங்கள்! அல்லது, உங்களின் சகபாடிகளைப் பின்னால் விட்டுவிட்டு, நீங்கள் மட்டும் போகப் போகின்றீர்களா? ஆனால், ‘பிரம்மாபாபாவும் எங்களை விட்டுச் சென்றுவிட்டாரே!’ என நீங்கள் சொல்லக்கூடும். எவ்வாறாயினும், அவர் இந்தப் படைப்பை உருவாக்க வேண்டியுள்ளது. துரித வளர்ச்சிக்கான பொறுப்பு அவருக்கு இருக்கிறது. நீங்கள் எல்லோரும் என்றும் தயாராக இருக்கிறீர்களா? உங்களில் ஒருவர் மட்டுமல்ல, ஆனால் நீங்கள் எல்லோரும் எப்போதும் தயார் நிலையில் இருக்கிறீர்களா? பாபா தனியே போவாரா அல்லது உங்கள் எல்லோரையும் தன்னுடன் அழைத்துச் செல்வாரா? நீங்கள் எல்லோரும் எப்போதும் தயாராக இருக்கிறீர்களா? என்றும் தயாரா அல்லது நீங்கள் அப்படி ஆகுவீர்களா? பேசுங்கள்! குறைந்தபட்சம், 900000 ஒன்றாகச் செல்ல வேண்டும். இல்லாவிட்டால், நீங்கள் யாரை ஆளுவீர்கள்? நீங்கள் உங்களையே ஆளுவீர்களா? குழந்தைகளான உங்கள் எல்லோருக்காகவும் பிரம்மாபாபா கொண்டிருக்கும் தூய விருப்பம் என்னவென்றால், என்றும் தயாராக இருப்பதுடன், மற்றவர்களையும் என்றும் தயாராக ஆக்குங்கள் என்பதேயாகும்.

இன்று, விசேடமான, ஆதி இரத்தினங்களும் சேவையின் ஆதி இரத்தினங்களும் சூட்சும வதனத்திற்கு வந்திருந்தார்கள். முன்னோடிக் குழுவைச் சேர்ந்தவர்கள், தாம் தயார் எனச் சொல்கிறார்கள். அவர்கள் எதற்குத் தயாராக இருக்கிறார்கள்? அவர்கள் சொல்கிறார்கள்: வெளிப்படுத்தலுக்கான முரசுகளை அடியுங்கள். அதன்மூலம், எங்களை வெளிப்படுத்த முடியும். அத்துடன் புதிய உலகப் படைப்பிற்கு எம்மால் கருவிகள் ஆகமுடியும். நாம் புதிய உலகைப் படைப்பவர்களை அழைத்துக் கொண்டிருக்கிறோம். எல்லாமே இப்போது உங்களில்தான் தங்கியுள்ளது. முரசுகளை அடியுங்கள்! முரசுகளை அடித்து, ‘அவர் வந்துவிட்டார், அவர் வந்துவிட்டார்!’ என அறிவியுங்கள். இத்தகைய முரசுகளை எப்படி அடிப்பது என உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் அவற்றை அடிக்க வேண்டும். தந்தை பிரம்மா இப்போது அதற்கான திகதியை உங்களிடம் கேட்கிறார். ஒரு திகதி இல்லாமல் உங்களால் எதையும் செய்ய முடியாது என நீங்கள் எல்லோரும் சொல்கிறீர்கள். ஆகவே, இதற்கு ஒரு திகதியை நிர்ணயம் செய்யுங்கள். உங்களால் அப்படி ஒரு திகதியை நிர்ணயம் செய்ய முடியுமா? ஒரு திகதியை நிர்ணயம் செய்யும்படி தந்தை உங்களிடம் கேட்கிறார். ‘அதை இன்றே செய்யுங்கள்!’ எனத் தந்தை சொல்கிறார். நீங்கள் கருத்தரங்குக்காக ஒரு திகதியை நிர்ணயம் செய்கிறீர்கள். எனவே, இதற்காக ஒரு கருத்தரங்கு வையுங்கள். வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒரு திகதியை நிர்ணயம் செய்ய முடியுமா? நீங்கள் ஒரு திகதியை நிர்ணயம் செய்வீர்களா? ஆமா அல்லது இல்லையா? அச்சா. தாதி ஜான்கியிடமிருந்து ஆலோசனை பெற்று இதைச் செய்யுங்கள். அச்சா.

பாப்தாதாவிற்கு மிகவும் நெருக்கமான மிகவும் அன்பான, பற்றற்ற எல்லா இடங்களிலுமுள்ள குழந்தைகளுக்கு. குழந்தைகளான நீங்கள் எல்லோரும் அன்பிலே உங்களை மறந்திருப்பதுடன், முற்றிலும் அன்பிலே திளைத்திருப்பதை பாப்தாதா பார்க்கிறார். நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பதுடன், ஒரு சந்திப்பைக் கொண்டாடும் ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் வெகு தொலைவில் இல்லை. நீங்கள் பாபாவின் கண்களின் முன்னாலும் இல்லை. ஆனால், அவரின் கண்களில் கலந்துள்ளீர்கள். இந்த முறையில் பாபாவுடன் தனிப்பட்ட சந்திப்பைக் கொண்டாடும் குழந்தைகளுக்கு, அன்பிலே தங்களை மறந்திருக்கும் தமது அவ்யக்த ரூபத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு, தந்தையைப் போல், சதா தமது தியாகம், தவம், சேவையின் அத்தாட்சியைக் கொடுக்கும் தகுதிவாய்ந்த குழந்தைகளுக்கு, சதா தமது ஒருமுகப்படுத்தும் சக்தியால் உலகையே மாற்றுகின்ற, உலகை - மாற்றும் குழந்தைகளுக்கு, தந்தையைப் போல் தீவிர முயற்சிகளைச் செய்வதனால் சதா பறக்கின்ற டபிள் லைற் குழந்தைகளுக்கு, பாப்தாதாவிடமிருந்து அதிக, அதிக, அதிகளவு அன்பும் நினைவும் நமஸ்காரமும்.

இராஜஸ்தானில் இருந்து வந்திருக்கும் சேவாதாரிகளுக்கு: சேவை செய்வதற்கான மிக நல்லதொரு வாய்ப்பு இராஜஸ்தானுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. எப்படி உங்களுடைய இடத்திற்கு இராஜஸ்தான் (இராஜாக்களின் இடம்) என்ற பெயர் உள்ளதோ, அப்படியே, இப்போது அத்;தகைய தரமுள்ள ஆத்மாக்கள் வெளிப்பட வேண்டும். பிரஜைகள் அல்ல. ஆனால் இராஜ குடும்பத்து அரசர்கள் இப்போது வெளிப்பட வேண்டும். பெயர் இராஜஸ்தான் என்று இருப்பதைப் போல், நல்ல தரமான சேவையைச் செய்யக்கூடிய அரச ஆத்மாக்கள் வெளிப்படுவார்கள். அங்கே அரசர்கள் யாராவது மறைந்திருக்கிறார்களா? அல்லது, இன்னமும் அவர்கள் முகில்களின் பின்னால் இருக்கிறார்களா? வர்த்தகர்களுக்குச் சேவை செய்வதில் விசேட கவனம் செலுத்துங்கள். அமைச்சர்களும் செயலாளர்களும் எப்போதும் மாறிக் கொண்டே இருப்பார்கள். ஆனால் வியாபாரிகளால் தந்தையுடன் இந்த வியாபாரம் செய்வதில் முன்னேற முடியும். நீங்கள் வியாபாரிகளுக்குச் சேவை செய்யும்போது, அவர்களின் குடும்பத்தில் உள்ள பெண்களாலும் இலகுவாக வரமுடியும். பெண்களால் இங்கே தனியே வரமுடியாது. ஆனால், குடும்பத்தின் தூண் வரும்போது, அந்தக் குடும்பம் இயல்பாகவே தொடர்ந்தும் படிப்படியாக வளரும். இதனாலேயே, இராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள் நல்ல தரமான ஆத்மாக்களை வெளிப்படச் செய்ய வேண்டும். இத்தகைய ஆத்மாக்கள் அங்கே இல்லை எனச் சொல்லாதீர்கள். நீங்கள் அவர்களைத் தேட வேண்டும். ஏனென்றால் அவர்கள் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களுக்காக நேரத்தைச் செலவிட வேண்டும். அவர்கள் எப்போதும் பிஸியாகவே இருப்பார்கள். நீங்கள் அவர்களை நெருக்கமாகக் கொண்டு வருவதற்கு ஏதாவது வழிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும். மற்றும்படி, ஏனைய அனைத்தும் நன்றாகவே உள்ளன. நீங்கள் சேவை செய்வதற்கான நல்லதொரு வாய்ப்பைப் பெற்றுள்ளீர்கள். ஒவ்வொரு பிராந்தியமும் இந்த வாய்ப்பைப் பெறுகிறார்கள். இது நெருக்கமாக வருவதற்கும் ஆசீர்வாதங்களைப் பெறுவதற்குமான மிக நல்லதொரு வழிமுறையாகும். எல்லோரும் உங்களைப் பார்க்கிறார்களோ இல்லையோ, எல்லோரும் உங்களை அறிந்துள்ளார்களோ இல்லையோ, அது பரவாயில்லை. ஏனென்றால், நீங்கள் மிக நல்ல சேவை செய்யும்போது, இயல்பாகவே ஆசீர்வாதங்கள் உங்களுக்குக் கிடைக்கும். அந்த ஆசீர்வாதங்கள் மிக விரைவாக உங்களை வந்தடையும். ஏனென்றால், அவை இதயபூர்வமான ஆசீர்வாதங்கள் ஆகும். இதனாலேயே, அவை விரைவாக உங்களின் இதயங்களைத் தொடுகின்றன. பாப்தாதா கூறுகிறார்: எல்லாவற்றிலும் இலகுவான முயற்சி என்னவென்றால், ஆசீர்வாதங்களைக் கொடுப்பதும் ஆசீர்வாதங்களைப் பெறுவதுமே ஆகும். உங்களின் ஆசீர்வாதக் கணக்கானது நிரம்பியிருக்கும்போது, மாயாவால் உங்களைக் குழப்ப முடியாது. ஏனென்றால், உங்களின் கணக்கு நிரம்பியிருக்கும். நீங்கள் சேமிப்பின் சக்தியைப் பெறுவீர்கள். ஆகவே, சந்தோஷமாக இருப்பதுடன் ஏனைய எல்லோரையும் சந்தோஷப்படுத்துங்கள். ஒவ்வொருவரின் சுபாவத்தின் இரகசியத்தைக் கற்று, எல்லோரையும் சந்தோஷப்படுத்துங்கள். இவர்களுக்கு எப்போதும் சந்தோஷமே இல்லை எனச் சொல்லாதீர்கள். நீங்களே அவர்களின் இரகசியங்களை அறிந்து கொள்ள வேண்டும். அவர்களின் நாடியைப் பிடித்துப் பாருங்கள். பின்னர் அவர்களுக்கு ஆசீர்வாதங்கள் என்ற மருந்தைக் கொடுங்கள். அப்போது எல்லாமே இலகுவாகிவிடும். இது ஓகேயா, இராஜஸ்தான்? இராஜஸ்தானின் ஆசிரியர்களே, எழுந்து நில்லுங்கள்! நீங்கள் செய்த சேவைக்குப் பாராட்டுக்கள். இலகுவாக முயற்சி செய்து, தொடர்ந்தும் எல்லோருக்கும் ஆசீர்வாதங்களைக் கொடுங்கள். பெறுவதைப் பற்றி நினைக்காதீர்கள். ஆனால், தொடர்ந்து கொடுங்கள். நீங்கள் தொடர்ந்து பெறுவீர்கள். கொடுப்பதென்றால், பெறுவதாகும். இது ஓகேயா? இது இப்படி இருக்கிறதுதானே? நீங்கள் அருள்பவரின் குழந்தைகள். யாராவது ஒருவர் உங்களுக்குக் கொடுக்கும்போது, நீங்கள் எதையாவது கொடுப்பீர்கள் என நினைக்காதீர்கள். நீங்கள் ஓர் அருள்பவராகத் தொடர்ந்து கொடுக்க வேண்டும். அப்போது இயல்பாகவே நீங்கள் பெறுவீர்கள்;

இந்தக் கல்பத்தில் முதல் தடவையாக இங்கே வந்திருப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! பொதுவாக, இங்கே உள்ள அரைவாசிப் பேர் முதல் தடவையாக வந்திருப்பவர்கள், அரைவாசிப் பேர் முன்பும் வந்திருப்பவர்கள். அச்சா, பக்கங்களிலும் பின்னாலும் அமர்ந்திருப்பவர்களே, நீங்கள் எல்லோரும் இலகு யோகிகளா? நீங்கள் இலகு யோகிகள் என்றால், ஒரு கையை உயர்த்துங்கள்!

விடை பெறும் வேளையில்: (பிரதானமான சிவலிங்கங்கள் இருக்கும் ஆலயங்களுக்கான யாத்திரையின் செய்தி பாப்தாதாவிற்கு வழங்கப்பட்டது). எல்லா இடங்களிலும் யாத்திரைகளைப் பற்றிய செய்திகள், அவ்வப்போது பாப்தாதாவிற்கு வந்து கொண்டேயிருக்கின்றன. நீங்கள் எல்லோரும் அதிகளவு ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் உங்களின் சேவைக்கான பாகங்களை நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்களின் பக்தர்களிடமிருந்து நீங்கள் ஆசீர்வாதங்களைப் பெறுகிறீர்கள். அந்த பக்தர்கள், தமது பக்தியை முடித்ததும், பாபாவின் செய்தியைப் பெறும்போது, செய்தி கொடுக்கப்பட்டவர்களில் யார் எனது குழந்தைகள் ஆகுகிறார்கள் என்பதை உங்களால் பார்க்க முடியும். மிக நல்ல சேவை நடக்கிறது. ஏனென்றால், இந்த சேவைக்காக நீங்கள் உருவாக்கியுள்ள வழிமுறை, எல்லோரையும் மிக நன்றாகக் கவர்கிறது. இதன் பலனாக, என்ன வகையான ஆத்மாக்கள் வெளிப்படுகிறார்கள் என நாம் பார்ப்போம். பக்தர்களும் உங்களிடமிருந்து திருஷ்டியையும் அறிமுகத்தையும் பெறுவது மிக நல்ல விடயமே. இப்போது, எதிர்காலத்திலும், தொடர்ந்து அவர்களுக்குச் சேவை செய்து, அவர்களை முன்னேறச் செய்யுங்கள். இந்தச் சேவையைக் களைப்பற்ற முறையில் செய்பவர்கள், மிக நல்ல சேவையைச் செய்கிறார்கள். குழந்தைகளான உங்கள் எல்லோருக்கும் அன்பும் நினைவுகளும். பாப்தாதா தொடர்ந்து உங்களை அவதானிக்கிறார். வெற்றி உங்களின் பிறப்புரிமையே!

மொரிஸியஸ் நிலையம், பிரதம மந்திரியிடமிருந்து தேசிய ஒற்றுமைக்கான விருதைப் பெற்றிருந்தது. மொரிஸியஸ் அவர்களின் விஐபி களுடன் மிக நல்ல தொடர்பில் இருக்கிறார்கள். நீங்கள் அவர்களில் நல்லதொரு ஆதிக்கத்தை ஏற்படுத்துகிறீர்கள். இதனாலேயே, உங்களின் மறைமுகமான சேவைக்கான பலனை நீங்கள் பெற்றுள்ளீர்கள். உங்களுக்கு விசேடமான பாராட்டுக்கள்! அச்சா.

ஆசீர்வாதம்:
நீங்கள் ஒவ்வொரு மூச்சிலும் நினைவிற்கும் சேவைக்கும் இடையில் ஒரு சமநிலையைப் பேணுவதன் மூலம் சதா சந்தோஷமாக இருந்து ஆசீர்வாதங்களைப் பெறுவீர்களாக.

உங்களின் நினைவின் இணைப்பானது சதா தொடர்பில் இருப்பதற்கு நீங்கள் கவனம் செலுத்துவதைப் போல், சேவைக்கான இணைப்பும் சதா தொடர்பில் இருக்க வேண்டும். ஒவ்வொரு மூச்சிலும் நினைவும் சேவையும் இருக்க வேண்டும். இதுவே ஒரு சமநிலையைப் பேணுதல் எனப்படும். இந்தச் சமநிலையால், நீங்கள் சதா ஆசீர்வாதங்களை அனுபவம் செய்வதுடன், நீங்கள் அந்த ஆசீர்வாதங்களால் பராமரிக்கப்படுகிறீர்கள் என்ற ஒலியானது உங்களின் இதயங்களில் இருந்து வெளிப்படும். நீங்கள் கடினமாக உழைப்பதில் இருந்து அல்லது போராடுவதில் இருந்து விடுபடுவீர்கள். ‘என்ன? ஏன்? எப்படி?’ என்ற எந்தவிதமான கேள்விகளில் இருந்தும் நீங்கள் விடுபட்டு, சதா சந்தோஷமாக இருப்பீர்கள். அப்போது வெற்றி உங்களின் பிறப்புரிமை என்பதை நீங்கள் அனுபவம் செய்வீர்கள்.

சுலோகம்:
தந்தையிடமிருந்தும் உங்களிடமிருந்தும் உங்களின் சகபாடிகளிடமிருந்தும் ஒரு விருதைப் பெறுவதற்கு, தடைகளில் இருந்து விடுபட்டிருக்கும் சான்றிதழ் உங்களிடம் இருக்க வேண்டும்.