02.06.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் அவரிடம் இருந்து தொலைவில் இருந்தாலும், நினைவில் நிலைத்திருக்கும் பொழுது அவரது (பாபாவின்) சகவாசத்தில் இருக்கின்றீர்கள். இந்த நினைவின் மூலமாக நீங்கள் அவரது சகவாசத்தை அனுபவம் செய்வதுடன் உங்கள் பாவங்களும் அழிக்கப்படுகின்றன.
கேள்வி:
மிகத் தொலைவான இடத்திலிருந்து வருகின்ற தந்தை குழந்தைகளாகிய உங்களைத் தொலைநோக்கு உடையவர்கள் ஆக்குவதற்கு என்ன ஞானத்தைக் கொடுக்கின்றார்?பதில்:
சக்கரத்தில் ஆத்மாக்கள் எவ்வாறு வெவ்வேறு குலங்களினுள் பிரவேசிக்கின்றார்கள் என்ற இந்த ஞானத்தைத் தொலைதூரவாசியான தந்தையால் மாத்திரமே உங்களுக்குக் கொடுக்க முடியும். நீங்கள் இப்பொழுது பிராமண குலத்திற்கு உரியவர்கள் என்பதை அறிவீர்கள். நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுவதற்கு முன்னர், சூத்திர குலத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள். அதற்கு முன்னர் வைசிய குலத்திற்கு உரியவர்களாக இருந்தீர்கள். மிகத்தொலைவான இடத்தில் வசிக்கின்ற தந்தை வந்து, குழந்தைகளாகிய உங்களைத் தொலைநோக்கு உடையவர்கள் ஆக்குவதற்கு இந்த முழு ஞானத்தையும் கொடுக்கின்றார்.பாடல்:
அன்பிற்கினியவருடன் இருப்பவர்கள் மீதே ஞான மழை பொழிகின்றது….ஓம் சாந்தி.
ஞானக்கடலுடன் இருப்பவர்கள் மீதே ஞான மழை பொழிகின்றது. நீங்கள் தந்தையுடன் இருக்கின்றீர்கள், அப்படித்தானே? நீங்கள் வெளிநாட்டிலோ அல்லது வேறு எங்கே இருந்தாலும், அவரது சகவாசத்திலேயே இருக்கின்றீர்கள். நீங்கள் அவரை நினைவு செய்கின்றீர்கள்தானே? அவருடைய நினைவில் நிலைத்திருக்கின்ற குழந்தைகள் எப்பொழுதும் அவருடனேயே உள்ளனர். இந்த நினைவில் நிலைத்திருப்பதால், நீங்கள் அவரது சகவாசத்தில் இருக்கின்றீர்கள், உங்களது பாவங்களும் அழிக்கப்படுகின்றன. பின்னர், விக்கிரமாஜீத்தின் (விகாரங்களை வென்றவர்) காலம் ஆரம்பம் ஆகுகின்றது. இராவண இராச்சியம் ஆரம்பமாகும் பொழுது, அது விக்கிரம் அரசனின் காலம் (பாவம் செய்யப்பட்ட காலம்) எனக் கூறப்படுகின்றது. ஒன்று விகாரங்களை வென்ற காலமும், மற்றையது விகாரங்கள் நிறைந்த காலமும் ஆகும். நீங்கள் இப்பொழுது பாவச்செயல்களை வென்றவர்கள் ஆகுகின்றீர்கள். பின்னர் நீங்கள் பாவச்செயல்கள் புரிபவர்களாக ஆகுவீர்கள். தற்பொழுது, அனைவரும் மகா பாவிகளாக உள்ளனர். எவருக்குமே தங்களது சொந்தச் சமயத்தைப் பற்றித் தெரியாது. இன்று, பாபா உங்களிடம் ஓர் எளிமையான கேள்வியைக் கேட்கின்றார்: தாங்கள் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்துக்கு உரியவர்கள் என்பது சத்திய யுக தேவர்களுக்குத் தெரியுமா? நீங்கள் உங்களை இந்து சமயத்துக்கு உரியவர்களாகக் கருதுவதையும், மற்றவர்கள் தாங்கள் கிறிஸ்தவ சமயத்தவர்கள் எனக் கூறுவதையும் போன்றே, அங்குள்ள தேவர்கள் தங்களைத் தேவ தர்மத்திற்கு உரியவர்களாகக் கருதுவார்களா? இது சிந்திக்க வேண்டிய விடயம். அங்கே எவரும் தாங்கள் இன்ன இன்ன சமயத்தவர் எனக் கருதும் வகையில் வேறு சமயங்கள் எதுவும் கிடையாது. இங்கே பல சமயங்கள் உள்ளன. ஆகவே, அவற்றிற்குக் கொடுக்கப்பட்டுள்ள வெவ்வேறு பெயர்களால் அவை இனங்காணப்படுகின்றன. அங்கே, ஒரேயொரு தர்மமே உள்ளது. இதனாலேயே அவர்கள் தாம் குறித்த ஒரு சமயத்துக்கு உரியவர்கள் எனக் கூறவேண்டிய தேவை அங்கே இல்லை. அங்கே அவர்களின் இராச்சியம் மட்டுமே இருப்பதால், அங்கே ஒரு தர்மம் இருப்பதையேனும் அவர்கள் அறிய மாட்டார்கள். நீங்கள் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்துக்கு உரியவர்கள் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். வேறு எவரும் தேவர்கள் என அழைக்கப்பட மாட்டார்கள். நீங்கள் தூய்மை அற்றிருப்பதால் உங்களைத் தேவர்கள் என்று அழைக்க முடியாது. தூய்மை ஆனவர்களை மாத்திரமே தேவர்கள் என அழைக்க முடியும். அங்கே, அவ்வாறு எதுவும் இல்லை. அவர்களை எவருடனும் ஒப்பிட முடியாது. நீங்கள் இப்பொழுது சங்கமயுகத்தில் இருக்கின்றீர்கள், ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதை நீங்கள் அறிவீர்கள். அங்கே, ஒரு தர்மம் மாத்திரமே உள்ளது. எனவே, எவ்வாறு சமயங்களைப் பற்றிய கேள்வி எழ முடியும்? மகா பிரளயம் இடம்பெறும் பொழுது எதுவுமே எஞ்சவில்லை என அவர்கள் கூறுவது தவறு எனக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. தந்தை இங்கே அமர்ந்திருந்து, எது சரி என்பதை விளங்கப்படுத்துகின்றார். சமயநூல்களில் பெரு வெள்ளம் காட்டப்பட்டுள்ளது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: பாரதம் தவிர்ந்த ஏனைய இடங்கள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கிவிடும். அத்தகைய பெரிய உலகத்திற்கான தேவை என்ன உள்ளது? பாரதத்தில் மாத்திரம் எத்தனை கிராமங்கள் உள்ளன எனப் பாருங்கள்! முதலில் அது ஒரு காடாக இருந்தது, பின்னர் சனத்தொகை தொடர்ந்தும் வளர்கின்றது. ஆதி சனாதன தேவிதேவதா தர்மத்துக்கு உரியவர்களான நீங்கள் மாத்திரமே அங்கே வசிக்கின்றீர்கள். இது பிராமணர்களான உங்கள் புத்தியில் உள்ளது. பாபா இவ்விடயங்களை நீங்கள் கிரகிப்பதற்குத் தூண்டுகின்றார். அதிமேலானவரான சிவபாபா யார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவர் ஏன் பூஜிக்கப்படுகின்றார்? அக் மலர்கள் போன்றவை ஏன் அவருக்குப் படைக்கப்படுகின்றன? அவர் அசரீரியானவர்தானே? அவர் பெயருக்கும் ரூபத்திற்கும் அப்பாற்பட்டவர் என அவர்கள் கூறுகின்றனர். ஆனால் பெயரோ அல்லது ரூபமோ அற்ற எதுவுமே இருக்க முடியாது. அப்படியாயின், அவர்கள் யாருக்கு மலர்களைப் படைக்கின்றார்கள்? அவரே முதலில் பூஜிக்கப்படுபவர். அவர் குறிப்பாக, பாரதக் குழந்தைகளுக்கும், பொதுவாக முழு உலகிற்கும் சேவை செய்வதால் அவருக்கு ஆலயங்கள் கட்டப்படுகின்றன. மனிதர்களுக்கே சேவை செய்யப்படுகின்றது, அப்படித்தானே? நீங்கள் இந்த நேரத்தில் உங்களைத் தேவ தர்மத்திற்கு உரியவர்கள் என அழைப்பதில்லை. நீங்கள் தேவர்களாக இருந்தீர்கள் என்பதையும், இப்பொழுது மீண்டும் ஒருமுறை அவ்வாறு ஆகுகின்றீர்கள் என்பதையும் முன்னர் அறிந்திருக்கவில்லை. தந்தை இப்பொழுது உங்களுக்கு இதனை விளங்கப்படுத்துகின்றார். எனவே, தந்தையைத் தவிர எவராலும் இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்க முடியாது என்பதை விளங்கப்படுத்துங்கள். அவர் மாத்திரமே ஞானம் நிறைந்தவரான, ஞானக்கடல் என அழைக்கப்படுகின்றார். எவருமே, ரிஷிகள் அல்லது முனிவர்கள்கூட படைப்பவரையோ அல்லது படைப்பையோ அறியார்கள் என்பது நினைவுகூரப்படுகின்றது. அவர்கள் “நேற்றி, நேற்றி” (அவர் இதுவுமல்ல, அதுவுமல்ல) எனக் கூறிவருகிறார்கள். சிறு குழந்தைகளுக்கு ஏதாவது ஞானம் இருக்கிறதா? அவர்கள் பெரிதாக வளரும் பொழுது, அவர்களின் புத்தி திறக்க ஆரம்பிக்கின்றது. பின்னர், வெளிநாடுகள் எங்கே இருக்கின்றன, ஏனையவை எங்கே இருக்கின்றன என்பவை அவர்களது புத்திகளில் புக ஆரம்பிக்கின்றன. அவ்வாறே, குழந்தைகளாகிய நீங்களும் இந்த எல்லையற்ற ஞானம் எதனையும் முன்னர் அறிந்திருக்கவில்லை. இவரும் கூறுகின்றார்: நான் சமயநூல்களைக் கற்ற பொழுதிலும், எதனையும் புரிந்து கொள்ளவில்லை. இந்த நாடகத்தில் மனிதர்கள் நடிகர்கள் ஆவர். முழு நாடகமும் இரு விடயங்களை அடிப்படையாகக் கொண்டது: பாரதத்தின் தோல்வியும், பாரதத்தின் வெற்றியும். சத்தியயுகத்தின் ஆரம்பத்தில், பாரதத்தில் தூய தர்மம் இருந்தது. இந்த நேரத்தில் சமயம் தூய்மை அற்றுள்ளது. அவர்கள் தூய்மை அற்றிருப்பதால், அவர்களால் தங்களைத் தேவர்கள் என அழைக்க முடியாது. இருந்த பொழுதிலும், மக்கள் இன்னமும் தங்களை ஸ்ரீ ஸ்ரீ என அழைக்கின்றனர். எவ்வாறாயினும், ஸ்ரீ என்றால் மேன்மையானவர் என்று அர்த்தம். தூய தேவர்களே மேன்மையானவர்கள் எனக் கூறப்படுகின்றனர். “கடவுள் மேன்மையான வாசகங்களைப் பேசுகின்றார்” எனக் கூறப்படுகின்றது. இப்பொழுது யார் ஸ்ரீ (மேன்மையானவர்)? தந்தையை நேரடியாகச் செவிமடுத்து மேன்மை ஆகியவர்களா, அல்லது தங்களைத் தாங்களே ஸ்ரீ ஸ்ரீ (இரட்டை மேன்மையானவர்) என அழைத்துக் கொள்பவர்களா? தந்தை பூர்த்தி செய்த பணியின் காரணமாக அவருக்கு வழங்கப்பட்ட பெயர்களால்கூட அவர்கள் தங்களை அழைக்கின்றார்கள். இவ்விடயங்கள் அனைத்தும் விபரங்கள். இருந்த பொழுதிலும், தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, தொடர்ந்தும் ஒரேயொரு தந்தையையே நினைவு செய்யுங்கள். இது மனதை நல்வழிப்படுத்தும் மந்திரமாகும். இராவணனை வெல்வதன் மூலம் நீங்கள் உலகை வென்றவர்கள் ஆகுகின்றீர்கள். மீண்டும் மீண்டும் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். பஞ்ச தத்துவங்களாலான இச்சரீரம் இங்கேயே உருவாக்கப்படுகின்றது. சரீரம் உருவாக்கப்படுகின்றது,பின்னர் அது நீக்கப்பட்டு,அதன்பின்னர் வேறொன்று உருவாக்கப்படுகின்றது. ஆனால் ஆத்மா அழிவற்றவர். சங்கமயுகத்தில், அழிவற்ற தந்தையால் அழிவற்ற ஆத்மாக்களாகிய உங்களுக்கு இப்பொழுது கற்பிக்கப்படுகின்றது. எத்தனை தடைகள் வந்தாலும் அல்லது எத்தனை மாயையின் புயல்கள் வந்தாலும் தொடர்ந்தும் தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள். நீங்கள் சதோபிரதானாக இருந்தீர்கள் என்பதையும் இப்பொழுது தமோபிரதான் ஆகிவிட்டீர்கள் என்பதையும் புரிந்து கொள்கின்றீர்கள். உங்கள் மத்தியிலும்கூட இந்த ஞானத்தை நீங்கள் வரிசைக்கிரமமாகவே புரிந்து கொள்கின்றீர்கள். நீங்களே முதலில் பக்தி செய்தவர்கள் என்பதைக் குழந்தைகளாகிய உங்களின் புத்தி புரிந்து கொள்கின்றது. முதலில் பக்தி செய்தவர்களே நிச்சயமாக சிவபாபாவிற்கு ஆலயங்களைக் கட்டியிருப்பார்கள். ஏனெனில், அவர்களே செல்வந்தர்களாக இருந்தவர்கள். பேரரசர்கள் இதைச் செய்வதைப் பார்த்து, ஏனைய அரசர்கள், பிரஜைகள் அனைவரும் அவ்வாறே செய்தனர். இவ்விடயங்கள் அனைத்தும் விபரங்கள். “ஒரு விநாடியில் ஜீவன்முக்தி” எனக் கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், விளங்கப்படுத்துவதற்குப் பல வருடங்கள் எடுக்கின்றன. இந்த ஞானம் இலகுவானது. நினைவு யாத்திரைக்கு எடுக்குமளவு நேரம் இந்த ஞானத்திற்குத் தேவையில்லை. மக்கள் அழைக்கின்றனர்: பாபா, வந்து, தூய்மையற்ற எங்களைத் தூய்மை ஆக்குங்கள். பாபா, எங்களை உலக அதிபதிகள் ஆக்குங்கள் என அவர்கள் அழைப்பதில்லை. அனைவரும் அழைக்கின்றனர்: எங்களைத் தூய்மை அற்றவரிலிருந்து தூய்மை ஆக்குங்கள். சத்தியயுகம் தூய உலகம் என அழைக்கப்படுகின்றது. இவ்வுலகம் தூய்மையற்ற உலகம் என அழைக்கப்படுகின்றது. அவர்கள் இவ்வுலகைத் தூய்மையற்றது என அழைத்தாலும், அவர்கள் தங்களைத் தூய்மை அற்றவர்கள் என்று கருதுவதில்லை. அவர்கள் தங்கள்மீது அந்தளவு விருப்பமின்மையைக் கொண்டிருப்பதில்லை. நீங்கள் மற்றவர்களால் தயாரிக்கப்பட்ட உணவை உண்ணாத பொழுது, அவர்கள் கேட்கின்றனர்: நாங்கள் தீண்டத் தகாதவர்களா? ஆ! ஆனால், “அனைவரும் தூய்மை அற்றவர்கள்” என நீங்கள்தான் கூறுகின்றீர்கள். நீங்கள் தூய்மை அற்றவர்கள் என்றும், தேவர்கள் தூய்மையானவர்கள் என்றும் நீங்களே கூறுகின்றீர்கள். எனவே, தூய்மை அற்றவர்களை நீங்கள் எவ்வாறு அழைப்பீர்கள்? நான் ஏன் அமிர்தத்தைத் துறந்து நஞ்சைப் பருகவேண்டும் என்பது நினைவுகூரப்படுகின்றது. நஞ்சு கொடியதுதானே? தந்தை கூறுகின்றார்: இந்த நஞ்சானது, அது ஆரம்பித்த காலம் முதல் மத்தியூடாக இறுதிவரை துன்பத்தையே விளைவிக்கின்றது. எவ்வாறாயினும், நீங்கள் அதை நஞ்சாகக் கருதுவதில்லை. மதுபானத்திற்கு அடிமையான ஒருவரால், மதுபானம் அருந்துவதை நிறுத்த முடியாததைப் போன்று, தீய பழக்கத்திற்கு அடிமையாகி, அதைக் கைவிட முடியாத ஒருவரைப் போன்று, நீங்களும் இருக்கின்றீர்கள். போர்வீரர்கள் களத்தினுள் இறங்கும் நேரத்தில், அவர்களுக்குப் போதை ஏற்றுவதற்காக மதுபானம் வழங்கப்படுகின்றது. பின்னர் அவர்கள் களத்திற்கு அனுப்பப்படுகின்றனர். ஒருமுறை அவர்கள் போதை அடைந்து விட்டால், அவ்வளவுதான்! அதைத்தான் தாங்கள் செய்யவேண்டும் என அவர்கள் உணர்கின்றார்கள். அவர்கள் மரணத்திற்கு அஞ்ச மாட்டார்கள். விமானிகள் குண்டுகளுடன் எங்காவது பறந்துசென்று, குண்டுகளுடன் வீழ்ந்து நொருங்கிப் போகின்றனர். ஏவுகணை யுத்தம் இடம்பெற்றதாக நினைவுகூரப்படுகின்றது. இப்பொழுது உங்களால் சரியான விடயங்களை நடைமுறையில் பார்க்க முடிகின்றது. முன்னர், அவர்கள் தங்களின் வயிற்றில் இருந்து ஏவுகணைகளை வெளிவரச் செய்து, இன்ன இன்னதைச் செய்தார்கள் என நீங்கள் வாசித்ததுண்டு. பாண்டவர்கள் யார், கௌரவர்கள் யார் என்பதை நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கின்றீர்கள். பாண்டவர்கள், சுவர்க்கவாசிகள் ஆகுவதற்காக தாங்கள் உயிர்வாழும் பொழுதே, தங்களுடைய சரீர உணர்வை இல்லாமல் செய்வதற்கு முயற்சி செய்தார்கள். நீங்கள் இப்பொழுது உங்கள் பழைய சப்பாத்துக்களை நீக்குவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் உங்கள் பழைய சப்பாத்தை நீக்கிவிட்டு, புதியதொன்றை எடுக்கப் போவதாகக் கூறுகின்றீர்கள். தந்தை தனது குழந்தைகளுக்கு மாத்திரமே விளங்கப்படுத்துகின்றார். தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் வருகின்றேன். எனது பெயர் சிவன். சிவனின் பிறந்ததினம் கொண்டாடப்படுகிறது. பக்தி மார்க்கத்தில் பல ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. அவருக்குப் பல பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இறைவியர்களுக்குக் கூட அத்தகைய பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த நேரத்திலேயே நீங்கள் பூஜிக்கப்படுகின்றீர்கள். நீங்கள் பூஜித்துவந்த ஒரேயொருவரே, இப்பொழுது உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்கு மாத்திரம் தெரியும். நாங்கள் பூஜித்து வந்த, இலக்ஷ்மி, நாராயணனாக இப்பொழுது நாங்கள் ஆகுகின்றோம். இந்த ஞானம் உங்கள் புத்தியில் உள்ளது. அதைத் தொடர்ந்தும் கடைந்து, மற்றவர்களுக்கும் கூறுங்கள். உங்களில் பலரால் இவ்விடயங்களைக் கிரகித்துக் கொள்ள முடியாமல் உள்ளது. பாபா கூறுகின்றார்: உங்களால் அதிகளவு கிரகிக்க முடியாவிட்டால் பரவாயில்லை. நீங்கள் நினைவில் இருப்பதைப் பயிற்சி செய்கின்றீர்கள்தானே? தொடர்ந்தும் தந்தையை மாத்திரமே நினைவு செய்யுங்கள். இந்த ஞானத்தைப் பேச முடியாதவர்கள், இங்கே அமர்ந்திருந்து, இந்த விடயங்களைக் கடைய வேண்டும். இங்கே, பந்தனங்களோ அல்லது சிக்கல்களோ இல்லை. நீங்கள் வீட்டில், உங்கள் குழந்தைகள் போன்றோரின் சூழலின் மத்தியில் இருப்பதால், உங்கள் போதை மறைந்து விடுகின்றது. உங்களுக்கு இங்கே படங்களும் இருக்கின்றன. எவருக்கும் இப்படங்களை விளங்கப்படுத்துவது மிகச் சுலபம். அந்த மக்கள் முழுக் கீதையையும் மனப்பாடம் செய்கின்றார்கள். சீக்கியரும் கிராந்தை மனப்பாடம் செய்கின்றனர். நீங்கள் எதை ஓத வேண்டும்? தந்தையை (அவரை நினைவு செய்தல்). பாபா, இவை முற்றிலும் புதிய விடயங்கள் என்றும் நீங்கள் கூறுகின்றீர்கள். இது மாத்திரமே நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருதி ஒரேயொரு தந்தையை நினைவுசெய்ய வேண்டிய நேரமாகும். 5000 வருடங்களுக்கு முன்னரும் இது உங்களுக்குக் கற்பிக்கப்பட்டது. இவ்வாறாக உங்களுக்கு இதை விளங்கப்படுத்தும் சக்தி வேறு எவரிடமும் இல்லை. ஒரேயொரு தந்தை மாத்திரமே ஞானக்கடல் ஆவார். வேறு எவருமே இவ்வாறிருக்க முடியாது. ஞானக்கடலாகிய, தந்தை மாத்திரமே உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இந்நாட்களில், இன்ன இன்ன அவதாரம் எனத் தங்களைக் கருதுகின்ற பலர் தோன்றி உள்ளனர். இதனாலேயே சத்தியத்தின் ஸ்தாபனைக்குப் பல தடைகள் ஏற்படுகின்றன. எவ்வாறாயினும் 'சத்தியப் படகு தள்ளாடினாலும், ஒருபொழுதும் மூழ்காது" என நினைவுகூரப்படுகிறது. குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தந்தையிடம் வந்துள்ளீர்கள். எனவே உங்கள் இதயங்களில் அதிகளவு சந்தோஷம் இருக்க வேண்டும். முன்னர், நீங்கள் யாத்திரைகள் சென்றபொழுது உங்களின் இதயத்தில் என்ன இருந்தது? இப்பொழுது, நீங்கள் இங்கே வருவதற்காக உங்கள் குடும்பத்தை விட்டு வருகின்ற பொழுது, எத்தகைய எண்ணங்களைக் கொண்டிருக்கின்றீர்கள்? நாங்கள் பாப்தாதாவிடம் செல்கின்றோம். தந்தையும் விளங்கப்படுத்தி உள்ளார்: நான் சிவபாபா என்றே அழைக்கப்படுகின்றேன். நான் பிரவேசித்திருப்பது பிரம்மாவிலேயே. வம்சாவளி விருட்சங்கள் உள்ளன. முதலில் பிராமணர்களின் வம்சாவளி விருட்சமும், பின்னர் தேவர்களின் வம்சாவளி விருட்சமும் உள்ளன. தொலைதூர வாசியான தந்தை, இப்பொழுது குழந்தைகளாகிய உங்களைத் தொலைநோக்கு உடையவர்கள் ஆக்குகின்றார். நீங்கள், முழுக் கல்பத்திலும் எவ்வாறு வெவ்வேறு குலங்களுக்குள் பிரவேசிக்கின்றீர்கள் என்பது ஆத்மாக்களாகிய உங்களுக்குத் தெரியும். தொலைநோக்குடைய தந்தையால் மாத்திரமே இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்க முடியும். இப்பொழுது நீங்கள் எவ்வாறு பிராமண குலத்துக்கு உரியவராக உள்ளீர்கள் என்பதையும், முன்னர் இந்த ஞானத்தைக் கொண்டிராத பொழுது எவ்வாறு சூத்திர குலத்துக்கு உரியவராக இருந்தீர்கள் என்பதையும் பற்றிச் சிந்தியுங்கள். அவர் உங்களது முப்பாட்டனார் ஆவார். நீங்கள் மகா சூத்திரர்களாகவும் மகா வைசியர்களாகவும் மகா சத்திரியர்களாகவும் இருந்தீர்கள். அதற்கு முன்னர் நீங்கள் மகா பிராமணர்களாக இருந்தீர்கள். வேறு எவராலுமன்றி, தந்தையால் மாத்திரமே இவ்விடயங்களை விளங்கப்படுத்த முடியும். இது தொலைநோக்குடைய ஞானம் எனப்படுகின்றது. தொலைதூர வாசியான தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு, தொலைதூர தேசத்தின் ஞானம் முழுவதையும் கொடுப்பதற்கு வந்துள்ளார். எங்களின் பாபா தொலை தூரத்திலிருந்து வந்து, இவரினுள் பிரவேசிக்கின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். இது ஓர் அந்நிய தேசமும், அந்நிய இராச்சியமும் ஆகும். சிவபாபாவுக்கென ஒரு சரீரம் கிடையாது. அவர் ஞானக்கடல் ஆவார். அவர் எங்களுக்குச் சுவர்க்க இராச்சியத்தைக் கொடுக்க வேண்டும். ஸ்ரீகிருஷ்ணரால் இதைச் செய்ய முடியாது. சிவபாபாவால் மாத்திரமே அதை வழங்க முடியும். ஸ்ரீகிருஷ்ணரை பாபா என அழைக்க முடியாது. தந்தையே உங்கள் இராச்சியத்தை உங்களுக்குக் கொடுக்கின்றார். உங்கள் தந்தையிடம் இருந்து மாத்திரமே (லௌகீகத்தில்) நீங்கள் ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். அந்த எல்லைக்குட்பட்ட ஆஸ்திகள் அனைத்தும் இப்பொழுது முடிவடையப் போகின்றன. நீங்கள் சத்திய யுகத்தில் உள்ள பொழுது, 21 பிறவிகளுக்கான உங்கள் ஆஸ்தியைச் சங்கமயுகத்தில் நீங்கள் கோரினீர்கள் என்பதை அறியமாட்டீர்கள். நீங்கள் அரைக் கல்பத்திற்கு, 21 பிறவிகளுக்கான உங்கள் ஆஸ்தியைக் கோருகின்றீர்கள் என்பதை இப்பொழுது அறிவீர்கள். உங்களுடைய ஆஸ்தி 21 சந்ததிகளுக்குத் தொடரும். அதாவது, உங்கள் முழு ஆயுட்காலத்துக்கும் தொடரும். உங்கள் சரீரம் பழையதாகும் பொழுது, ஒரு பாம்பு தனது பழைய தோலை நீக்கிவிட்டு, புதியதை எடுப்பது போன்று, நீங்களும் சரியான நேரத்தில் அதை நீக்குவீர்கள். எங்கள் பாகங்களை நடிக்கும் பொழுது, எங்களின் ஆடை பழையதாகி விட்டது. நீங்களே உண்மையான பிராமணர்கள். நீங்களே ரீங்காரமிடும் தேனீக்கள் எனக் குறிப்பிடப்படுபவர்கள். நீங்கள் பூச்சிகளை உங்களைப் போன்று பிராமணர்கள் ஆக்குகின்றீர்கள். பூச்சிகளை இங்கு அழைத்து வந்து, அவர்களுக்கு இந்த ஞானத்தை ரீங்காரமிடுமாறு உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. ரீங்காரமிடும் தேனீ இந்த ஞானத்தை ரீங்காரமிட்டதும், சில பூச்சிகளுக்கு இறக்கைகள் முளைக்கின்றன. ஏனையவை இறக்கின்றன. அந்த உதாரணங்கள் அனைத்தும் இந்த நேரத்தையே குறிக்கின்றன. அன்பிற்கினிய குழந்தைகளாகிய நீங்கள் கண்களின் ஒளிகள் என அழைக்கப்படுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: எனது கண்மணிகளே, நான் உங்களை எனக்கு உரியவர்கள் ஆக்கிவிட்டேன்! எனவே நீங்கள் என்னுடையவர்கள். அத்தகைய தந்தையை நீங்கள் எந்தளவிற்கு அதிகமாக நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். வேறு எவரையும் நினைவு செய்வதால் உங்கள் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. நீங்கள் வாழும்வரை, உங்கள் சரீர உணர்வை இல்லாமல் செய்வதற்கு முயற்சி செய்யுங்கள். உங்கள் பழைய சப்பாத்தில் நீங்கள் சிறிதளவேனும் பற்று வைத்திருக்கக் கூடாது.2. ஓர் உண்மையான பிராமணராகி, பூச்சிகளுக்கு இந்த ஞானத்தை ரீங்காரம் செய்து, அவர்களையும் உங்களைப் போன்ற பிராமணர்கள் ஆக்குங்கள்.
ஆசீர்வாதம்:
அமிர்த வேளையின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வதன் மூலம் மகா பாக்கியசாலியாகி இந்தத் திறந்த பொக்கிஷக் களஞ்சியத்தில் இருந்து உங்களின் மடிகளை நிரப்பிக் கொள்வீர்களாக.அமிர்த வேளையில், ஆசீர்வாதங்களை அருள்பவரின் மூலமும் பாக்கியத்தை அருள்பவரின் மூலமும் நீங்கள் விரும்பிய பாக்கிய ரேகையை உங்களால் வரைந்து கொள்ள முடியும். ஏனென்றால், அந்த வேளையில், கள்ளங்கபடமற்ற பிரபுவின் வடிவத்தில் அவர் அன்பினால் நிறைந்து இருக்கிறார். ஆகவே, ஓர் அதிபதியாகி, உங்களின் உரிமையைக் கோருங்கள். இந்தப் பொக்கிஷத்திற்கு பூட்டோ அல்லது சாவியோ கிடையாது. அந்த வேளையில், மாயையின் சாக்குப் போக்குகள் சொல்வதைக் கைவிட்டு, ஒரேயோர் எண்ணத்தைக் கொண்டிருங்கள்: நான் யாராக இருந்தாலும் நான் எத்தகையவனாக இருந்தாலும் நான் உங்களுடையவனே. உங்களின் மனதையும் புத்தியையும் தந்தையிடம் அர்ப்பணித்து விட்டு, இதய சிம்மாசனத்தில் அமர்ந்திருங்கள். அப்போது, தந்தையின் பொக்கிஷங்கள் அனைத்தையும் உங்களுடையதாக அனுபவம் செய்வீர்கள்.
சுலோகம்:
நீங்கள் செய்யும் சேவையில் ஏதாவது சுயநலம் கலந்திருந்தால், வெற்றியும் கலந்தே இருக்கும். எனவே, தன்னலமற்ற சேவையாளர் ஆகுங்கள்.அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியில் இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள்.
ஆத்ம உணர்வில் இருப்பதற்கு முயற்சி செய்யாத பிராமணர் எவரும் இல்லை. எவ்வாறாயினும், உங்களின் பௌதீக அங்கங்களிலும் பௌதீகப் புலன்கள் ஒவ்வொன்றிலும் முற்றிலும் வெற்றி பெறுவதற்குக் காரணமான சதா ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதற்கு, நீங்கள் சதோபிரதானாகவும் சுத்தமாகவும் ஆகவேண்டும். உங்களின் பழைய சம்ஸ்காரங்கள் மற்றும் உறவுகள் எல்லாவற்றுக்கும் முற்றிலும் மரணித்து வாழ்வதற்கு நீங்கள் அகநோக்கில் இருக்க வேண்டும். இந்த முயற்சியைச் செய்வதன் மூலமே நீங்கள் உங்களின் இலக்கத்தைப் பெறுவீர்கள்.