02.07.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நினைவின் மூலமே உங்கள் மின்கலங்கள்;; சக்தியேற்றப்பட்டு, ஆத்மாக்களான நீங்கள் சக்தியைப் பெற்று, சதோபிரதான் ஆகுவீர்கள். ஆகவே, நினைவு யாத்திரையில் விசேட கவனம் செலுத்துங்கள்.

பாடல்:
ஒரேயொரு தந்தை மீதே அன்பு வைத்திருக்கின்ற குழந்தைகளின் அடையாளங்கள் எவை?

பதில்:
1) உங்களுக்கு ஒரேயொரு தந்தை மீதே அன்பு இருக்குமானால், தந்தையின் ஒரு கணப் பார்வை உங்களை அப்பால் கொண்டு செல்லும். 2) நீங்கள் முற்றிலும் பற்றை அழிப்பவராக இருப்பீர்கள். 3) எல்லையற்ற தந்தையின் அன்பின் மதிப்பை உணர்பவர்களால், வேறு எவருடைய அன்பிலும் அகப்பட்டுக் கொள்ள முடியாது. 4) அவர்களது புத்திகள் பொய்யான பூமியின் போலி மனிதர்களிலிருந்து அகற்றப்படுகின்றன. அழிவற்றதாகுகின்ற அத்தகைய ஓர் அன்பைத் தந்தை உங்களுக்கு இப்பொழுது கொடுக்கிறார். அதன்பின்னர். சத்திய யுகத்தில், நீங்கள் ஒருவருடனொருவர் மிகுந்த அன்புடன் வாழ்வீர்கள்.

ஓம் சாந்தி.
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஒரேயொரு தடவையே எல்லையற்ற தந்தையின் அன்பைப் பெற்றுக் கொள்கிறீர்கள். அத்துடன், பக்தி மார்க்கத்திலும் இந்த அன்பை நீங்கள் பெருமளவில் நினைவுகூருகிறீர்கள். பாபா, எனக்கு வேண்டியதெல்லாம் உங்கள் அன்பேயாகும். தாயும் தந்தையும் நீங்களே! எனக்கு எல்லாமே நீங்கள் தான்! ஒரேயொருவரிடமிருந்து மட்டுமே அரைச் சக்கர காலத்திற்கு நீங்கள் அன்பைப் பெறுகின்றீர்கள். உங்கள் இந்த ஆன்மீக அன்பைப் பற்றிய புகழ் எல்லையற்றதாகும். தந்தையே குழந்தைகளாகிய உங்களை அமைதி தாமத்தின் அதிபதிகளாக்குபவர். இப்பொழுது நீங்கள் துன்ப பூமியில் இருக்கிறீர்கள். அனைவரும் துன்பத்திலும், அமைதியின்மையிலும் கதறி அழுகிறார்கள். அவர்கள் உரியவர்கள் ஆகுவதற்கு பிரபுவோ அல்லது அதிபதியோ இல்லை, இதனாலேயே அவர்கள் பக்தி மார்க்கத்தில் அவரை நினைவுசெய்கிறார்கள். ஆனாலும், பக்தி மார்க்கத்திற்கென்று ஒரு நிச்சயிக்கப்பட்ட காலப் பகுதியாக அரைச் சக்கர காலம் இருக்கிறது. தந்தை அந்தர்யாமி (ஒவ்வொருவருக்குள்ளேயும் இருப்பதை அறிந்தவர்) அல்ல என்று குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒவ்வொருவருக்குள்ளேயும் என்ன இருக்கிறதென்று அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் தந்தைக்கு இல்லை. அதற்கென்று எண்ணங்களை வாசிப்பவர்கள் இருக்கிறார்கள். அந்தக் கலையை அவர்கள் கற்று வைத்திருக்கிறார்கள். இங்கே அப்படியல்ல. தந்தை இங்கே வருகிறார். தங்கள் பாகங்கள் முழுவதையும் நடிப்பவர்கள் தந்தையும், குழந்தைகளுமேயாவர். உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கிறதென்றும், அதில் குழந்தைகள் எவ்வாறு தங்கள் பாகங்களை நடிக்கிறார்கள் என்றும் தந்தைக்குத் தெரியும். ஆனால், ஒவ்வொருவருக்குள்ளேயும் என்ன இருக்கிறதென்று அவர் அறிந்தவரல்ல. ஒவ்வொருவருக்குள்ளேயும் விகாரங்களே இருக்கின்றன என்று நேற்றிரவும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. மனிதர்கள் மிகவும் அழுக்கானவர்கள். தந்தை வந்து, உங்களை அழகிய மலர்களாக்குகிறார். ஒரேயொரு தடவையே குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் அன்பைப் பெறுகின்றீர்கள். அவ்வன்பு அழிவற்றதாகி விடுகிறது. அங்கே, நீங்கள் ஒருவர் மீது ஒருவர் அளவற்ற அன்பு வைத்திருப்பீர்கள். இப்பொழுது நீங்கள் பற்றை வென்றவர்களாகுகிறீர்கள். சத்தியயுக இராச்சியமானது பற்றை வென்ற ராஜா, ராணி, பிரஜைகளுடைய இராச்சியம் என்று கூறப்படுகிறது. அங்கே எவரும் அழுவதேயில்லை; அங்கே, துன்பம் என்னும் குறிப்பே இல்லை. பாரதத்தில் உண்மையாகவே, ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம் அனைத்தும் இருந்ததென்று குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இப்பொழுது அது இல்லை. ஏனெனில், இது இராவண இராச்சியம். அதில் அனைவரும் துன்பத்தை அனுபவம் செய்வதனால், தந்தையை நினைவுசெய்கிறார்கள்: வந்து, எங்களுக்குச் சந்தோஷத்தையும், அமைதியையும் கொடுங்கள்! எங்கள் மீது கருணை காட்டுங்கள்! எல்லையற்ற தந்தை கருணை மிக்கவர். இராவணனோ கருணையற்றவன்; அவனே உங்களுக்குத் துன்பப் பாதையையே காட்டுகிறான். மனிதர்கள் அனைவரும் துன்பப் பாதையையே பின்பற்றுகிறார்கள். காம விகாரமே எல்லாவற்றிலும் பார்க்க மிகவும் அதிகத் துன்பத்தைக் கொடுக்கிறது. இதனாலேயே தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, காம விகாரத்தை வெல்லுங்கள், நீங்கள் உலகத்தையே வென்றவர்களாகுவீர்கள். இந்த இலக்ஷ்மியும், நாராயணனும் உலகத்தை வென்றவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். உங்களுக்கு முன்னால் இலக்கும், குறிக்கோளும் இருக்கின்றன. மக்கள் ஆலயங்களுக்குச் சென்றாலும், அவர்களில் எவரது சரிதையையும் இவர்கள் அறியார்கள். இது அவர்கள் பொம்மைகளை வைத்து வழிபாடு செய்வதைப் போலவே இருக்கின்றது. அவர்கள் தேவியரை வழிபாடு செய்கிறார்கள். அவர்களை உருவாக்கி, அலங்கரித்து, நைவேத்தியம் படைப்பதையெல்லாம் செய்கிறார்கள். ஆனால், அந்தத் தேவியர் எதையுமே உண்பதில்லை. பிராமணப் பூசகர்களே அவற்றை உண்கிறார்கள். இவர்கள் தேவியரை உருவாக்கி, பராமரித்து, பின்பு அழித்து விடுகிறார்கள். அது குருட்டு நம்பிக்கை எனப்படுகிறது. அத்தகைய விடயங்கள் சத்திய யுகத்தில் இல்லை. கலியுகத்திலேயே இந்தச் சம்பிரதாயங்கள் அனைத்தும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் முதலாக நீங்கள் சிவபாபாவை மாத்திரம் வழிபாடு செய்கிறீர்கள். அது கலப்படமற்ற, நேர்மையான வழிபாடு எனப்படுகின்றது. அதனையடுத்து, கலப்படமான வழிபாடும் இருக்கிறது. ‘பாபா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதால், நீங்கள் ஒரு குடும்பத்தின் நறுமணத்தைப் பெறுகிறீர்கள். நீங்களும் இவ்வாறு கூறுகிறீர்கள்: தாயும் தந்தையும் நீங்களே! எங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்ற, உங்கள் கருணையால் நாங்கள் அளவில்லாத சந்தோஷத்தை அடைகின்றோம். நீங்களே தாயும் தந்தையும் என்று நீங்களும் கூறுகின்றீர்கள். எங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்ற உங்கள் கருணையால் நாங்கள் பெரும் சந்தோஷத்தைப் பெறுகிறோம். ஆரம்பத்தில் நீங்கள் அசரீரி உலகத்தில் இருந்தீர்கள் என்பதை உங்கள் புத்திகள் நினைவுசெய்கின்றன. அங்கிருந்து, நீங்கள் இங்கே வந்து, உங்கள் பாகங்களை நடிப்பதற்காகச் சரீரங்களைப் பெற்றீர்கள். முதலில் நாங்கள் தெய்வீகமான ஓர் ஆடையை அணிகிறோம், அதாவது, நாங்கள் தேவர்கள் என்று அழைக்கப்படுகிறோம். அதன்பின்னர் நாங்கள் சத்திரிய, வைசிய, சூத்திர குலங்களுக்குள் சென்று, எங்கள் பல்வேறு பாகங்களை நடிக்கின்றோம். ஆரம்பத்தில் உங்களுக்கு இந்த விடயங்கள் தெரிந்திருக்கவில்லை. இப்பொழுது பாபா வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய ஞானத்தைக் கொடுக்கிறார். எவ்வாறு அவர் இந்தச் சரீரத்தில் பிரவேசிக்கிறார் என்ற தனது சொந்த ஞானத்தையும் உங்களுக்குக் கொடுத்துள்ளார். இவர் தனது 84 பிறவிகளைப் பற்றி அறிந்;திருக்கவில்லை. நீங்களும் அவற்றை அறிந்;திருக்கவில்லை. சியாம்சுந்தர் என்பதன் இரகசியம் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த ஸ்ரீ கிருஷ்ணரே புதிய உலகின் முதல் இளவரசராகவும், இராதை இரண்டாமவராகவும் இருக்கிறார்கள். இருவருக்கும் இடையில் சில வருட வித்தியாசம் இருக்கிறது. உலகின் ஆரம்பத்தில் இவரே முதலாமவர் என்று கூறப்படுகிறார். இதனாலேயே அனைவரும் ஸ்ரீ கிருஷ்ணரை நேசிக்கிறார்கள். அவர் மாத்திரமே சியாம்சுந்தர் என்று அழைக்கப்படுகிறார். சுவர்க்கத்தில் அனைவருமே அழகானவர்கள். ஆனால் இப்பொழுது சுவர்க்கம் எங்கே இருக்கிறது? சக்கரம் தொடர்ந்து சுழல்கிறது. இலங்கையும், துவாரகையும் கடலுக்கடியில் சென்று விட்டன என்று அவர்கள் கூறுவதைப் போல, சுவர்க்கம் கடலில் மூழ்கி விடவில்லை; இல்லை. இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கிறது. இந்தச் சக்கரத்தை அறிந்துகொள்வதால், நீங்கள் உலக அதிபதிகளாக, பூகோள ஆட்சியாளர்களான, சக்கரவர்த்திகள், சக்கரவர்த்தினியராக ஆகுகின்றீர்கள். பிரஜைகளும் தங்களை உலக அதிபதிகளாகவே கருதிக் கொள்வார்கள். இது எங்கள் இராச்சியம் என்றே அவர்களும் கூறுகின்றனர். பாரத மக்கள், இது எங்கள் இராச்சியம் என்று கூறுகிறார்கள். அது பாரதம் என்றே அழைக்கப்படுகிறது. இந்துஸ்தான் என்ற பெயர் தவறானது. உண்மையில் ஆதி சனாதன தேவ தர்மமே இருக்கின்றது. எவ்வாறாயினும்;, அவர்கள் தங்கள் தர்மத்திலும் கர்மத்திலும் சீரழிந்தமையால், அவர்களால் தங்களைத் தேவதேவியர்கள் என்று அழைத்துக் கொள்ள முடியவில்லை. இதுவும் நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டிருக்கின்றது. இல்லாவிட்டால், தந்தை எவ்வாறு வந்து, மீண்டும் ஒருமுறை தேவ தர்மத்தை ஸ்தாபிப்பார்? ஆரம்பத்தில் நீங்கள் இவ்விடயங்களை அறிந்திருக்கவில்லை. ஆனால், இப்பொழுது தந்தை வந்து, உங்களுக்கு விளங்கப்படுத்தியிருக்கிறார். அவர் அத்தகைய இனிமையான பாபா, இருந்தும் அவரை நீங்கள் மறந்து விடுகின்றீர்கள்! பாபாவே அனைவரிலும் அதி இனிமையானவர். எவ்வாறாயினும், இராவண இராச்சியத்தில் அனைவருமே உங்களுக்குத் துன்பத்தைத் தவிர, வேறெதையுமே கொடுப்பதில்லை. இதனாலேயே நீங்கள் எல்லையற்ற தந்தையை நினைவுசெய்கிறீர்கள். நீங்கள் அனைவரும் பக்தர்கள். நீங்கள் பின்வருமாறு கூறிக் கொண்டே அவர் நினைவிலே அன்புக் கண்ணீர் சொரிகின்றீர்கள்: ஓ அன்பிக்கினியவரே! மணவாட்டிகளை எப்பொழுது நீங்கள் வந்து சந்திப்பீர்கள்? பக்தர்கள் அனைவரதும் கணவர் கடவுளேயாவார். கடவுள் வந்து, உங்கள் பக்தியின் பலனை உங்களுக்குக் கொடுக்கிறார். அவர் உங்களுக்குப் பாதையைக் காட்டி, விளங்கப்படுத்துகிறார்: இது 5000 வருடங்கள் கொண்ட நாடகம். மனிதர் எவருக்குமே படைப்பவரைப் பற்றியோ அல்லது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியோ தெரியாது. ஆன்மீகத் தந்தைக்கும், ஆன்மீகக் குழந்தைகளுக்கும் மாத்திரமே இது தெரியும். மனிதர் எவருக்குமே இது தெரியாது. தேவதேவியருக்குமே இது தெரியாது. ஆன்மீகத் தந்தைக்கு மாத்திரமே இது தெரியும். அவர் இங்கமர்ந்திருந்து, தனது குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார். வேறெந்தச் சரீரதாரியிடமும் படைப்பவரையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியும் பற்றிய இந்த ஞானம் இருக்க முடியாது. ஆன்மீகத் தந்தையிடம் மாத்திரம் இந்த ஞானம் இருக்கிறது. அவர் மாத்திரமே ஞான ஞானேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். உங்களை இராஜ ராஜேஸ்வரர்கள் (அரசர்களுக்கு அரசர்) ஆக்குவதற்காக ஞான ஞானேஸ்வரர் உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். இதனாலேயே இது இராஜயோகம் என்று அழைக்கப்படுகிறது. ஏனைய அனைத்தும் ஹத்தயோகமாகும். அவ்வாறான ஹத்தயோகிகளின் உருவங்கள் பல இருக்கின்றன. பிற்காலத்தில் சந்நியாசிகள் வரும்பொழுது, அவர்கள் ஹத்தயோகம் கற்பிக்கிறார்கள். விரிவாக்கம் பெருமளவில் இடம்பெற்றிருக்கும்பொழுது, அவர்கள் ஹத்தயோகம் போன்றவற்றைக் கற்பிக்கிறார்கள். தந்தை விளங்கப்படுத்தியிருக்கிறார்: நான் சங்கம யுகத்திலேயே வருகிறேன். நான் வந்து, ஓர் இராச்சியத்தை ஸ்தாபிக்கிறேன். அவர் இங்கேயே ஸ்தாபனையை மேற்கொள்கின்றார். சத்திய யுகத்தில் அல்ல. சத்தியயுக ஆரம்பத்தில் அங்கே இராச்சியம் இருக்கின்றது. ஆகவே, நிச்சயமாகச் சங்கம யுகத்திலேயே ஸ்தாபனை இடம்பெறுகிறது. இங்கே இந்தக் கலியுகத்தில் அனைவரும் பூஜிப்பவர்கள். சத்திய யுகத்தில் அனைவருமே பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள். உங்களை அவ்வாறு பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குவதற்கே தந்தை வருகிறார். உங்களைப் பூஜிப்பவர்கள் ஆக்குபவன் இராவணனே. இவ்விடயங்கள் அனைத்தையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இதுவே எல்லாவற்றிலும் அதியுயர்ந்த கல்வி. அந்த ஆசிரியரைப் பற்றி எவருக்குமே தெரியாது. அவர் பரம தந்தையும், ஆசிரியரும், சற்குருவும் ஆவார். எவருக்குமே இது தெரியாது. தந்தையே வந்து, தன்னை முழுமையாக அறிமுகம் செய்கிறார். அவரே குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பித்து, அதன்பின்னர் உங்களைத் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்கிறார். எல்லையற்ற தந்தையிடமிருந்து நீங்கள் அன்பைப் பெறுவதால், வேறு எவரது அன்பையும் விரும்புவதில்லை. இந்நேரத்தில், இது பொய்யான பூமியாகும். மாயை பொய்யானது, சரீரங்களும் பொய்யானவை, உலகம் முழுவதுமே பொய்யானது. இப்பொழுது பாரதம் பொய்மையின் பூமியாக இருக்கிறது. பின்பு, சத்திய யுகத்தில் அது சத்திய பூமியாக இருக்கும். பாரதம் ஒருபொழுதும் அழிக்கப்படுவதில்லை. எல்லையற்ற தந்தை வந்து, குழந்தைகளாகிய உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இரகசியங்களை விளங்கப்படுத்தி, அனைவருக்கும் சற்கதி அளிக்கும் இடமாகிய இதுவே அனைத்திலும் அதிமகத்துவம் வாய்ந்த யாத்திரைத் தலம் ஆகும். இது மிகவும் மகத்தான யாத்திரைத் தலமாகும். பாரதத்தின் புகழ் எல்லையற்றதாகும். எவ்வாறாயினும், பாரதம் உலகின் அதிசயம் என்பதைக் குழந்தைகளாகிய உங்களால் மாத்திரமே புரிந்துகொள்ள முடியும். அவை அனைத்தும் மாயையின் உலக ஏழு அதிசயங்களேயாகும். கடவுளின் அதிசயம் ஒன்றே ஒன்று தான் இருக்கிறது. தந்தை ஒரேயொருவர். அவரது அதிசயமான சுவர்க்கமும் ஒன்றேயொன்று. அது வைகுந்தமாகிய, சுவர்க்கம் எனப்படுகிறது. அதன் உண்மையான பெயர் ஒன்றேயொன்று. அதுவே சுவர்க்கம். இது நரகம். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே சக்கரம் முழுவதிலும் சுற்றி வருபவர்கள். நாங்கள் பிராமணர்கள், பின்பு நாங்கள் தேவர்களாகுகிறோம். மேலேறும் ஸ்திதியும், கீழிறங்கும்; ஸ்திதியும் இருக்கின்றன. மேலேறும் ஸ்திதியால் அனைவருக்கும் நன்மையுள்ளது. உலகில் அமைதியும், சந்தோஷமும் ஏற்பட வேண்டும் என்று விரும்புபவர்கள் பாரத மக்களேயாவர். சுவர்க்கத்தில், சந்தோஷம் மாத்திரமே இருக்கிறது; துன்பம் என்னும் குறிப்பே இல்லை. அது கடவுளின் இராச்சியம் எனப்படுகிறது. சத்திய யுகத்தில் சூரிய வம்சம் இருக்கிறது, அதனையடுத்து, இரண்டாந் தரத்தில் சந்திர வம்சம் இருக்கிறது. நீங்கள் ஆஸ்திகர்களாகவும், அவர்கள் நாஸ்திகர்களாகவும் இருக்கிறார்;கள். நீங்கள் பிரபுவுக்கும் அதிபதிக்கும் உரியவர்களாகி, தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவதற்கு முயற்சி செய்கிறீர்கள். உங்களுக்கு மாயையுடன் மறைமுகமான யுத்தம் உள்ளது. தந்தை இரவிலேயே வருகிறார். சிவனின் இரவாகிய, சிவராத்திரி இருக்கின்றபொழுதிலும், மக்கள் சிவனது இராத்திரி என்பதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. பிரம்மாவின் இரவு முடிவடைந்து, பகல் ஆரம்பமாகுகிறது. கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் வாசகங்களைப் பற்றி அவர்கள் பேசுகின்றனர், இவை கடவுள் சிவனுடைய வாசகங்கள் ஆகும். இப்பொழுது யார் கூறுவது சரியானது? ஸ்ரீ கிருஷ்ணர் முழுமையாக 84 பிறவிகளையும் எடுப்பவர். தந்தை கூறுகிறார்: நான் வந்து, ஒரு சாதாரண பழைய சரீரத்தில் பிரவேசிக்கிறேன். இவருக்குத் தனது சொந்தப் பிறவிகளைப் பற்றியே தெரியாது. பல பிறவிகளின் இறுதியில் இவர் தூய்மையற்றவர் ஆகும்பொழுது, நான் தூய்மையற்ற உலகிற்குள் வந்து, தூய்மையற்ற இராச்சியத்தில் பிரவேசிக்கிறேன். தூய்மையற்ற உலகில் பல இராச்சியங்கள் இருக்கின்றன. தூய உலகத்திலோ ஒரேயொரு இராச்சியமே இருக்கின்றது. அந்தக் கணக்கு இருக்கிறது. பக்தி மார்க்கத்தில் அவர்கள் தீவிரமாகப் பக்தி செய்து, தங்களை தலைகளை வெட்டவும் தயாராகும்பொழுது, அவர்களது ஆசைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. எவ்வாறாயினும், அதில் எதுவுமேயில்லை. அது தீவிர பக்தி எனப்படுகிறது. இராவண இராச்சியம் ஆரம்பமாகிய முதல் மக்கள் பக்தியின் சம்பிரதாயங்களைக் கற்றுத் தொடர்ந்தும் கீழிறங்கி வந்திருக்கிறார்கள். வியாச பகவான் சமயநூல்களை உருவாக்கினார் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்கள் என்னவெல்லாம் எழுதியிருக்கிறார்கள் என்று பாருங்கள்! குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது ஞானத்தினதும், பக்தியினதும் இரகசியங்களைப் புரிந்துகொண்டுள்ளீர்கள். இவ் விளக்கங்கள் அனைத்தும்; ஏணியினதும், விருட்சத்தினதும் படத்தில் இருக்கின்றன. அதில் 84 பிறவிகளும் காட்டப்பட்டிருக்கின்றன. அனைவரும் 84 பிறவிகள் எடுப்பதில்லை. ஆரம்பத்திலிருந்தே வருபவர்கள் முழுமையாக 84 பிறவிகளையும் எடுக்கிறார்கள். இந்த நேரத்திலேயே உங்களுக்கு இந்த ஞானம் கிடைக்கிறது. அதன் பின்னர் இது உங்கள் வருமானத்தின் மூலாதாரமாகி விடுகிறது. 21 பிறவிகளுக்கு நீங்கள் எதையுமே அடைவதற்கென்று முயற்சி எடுக்கத் தேவையில்லாத அளவுக்கு அங்கே எதற்குமே குறைவிருக்காது. அது உலக அதிசயமான, தந்தையின் ஒரேயொரு சுவர்க்கம் என்று குறிப்பிடப்படுகிறது. அதன் பெயரே வைகுந்தம் என்பதாகும். தந்தை உங்களை அதற்கு அதிபதிகளாக்குகிறார். அவர்கள் அந்த அதிசயங்களைக் காட்டுகிறார்கள். ஆனால், தந்தையோ உங்களை அதற்கெல்லாம் அதிபதிகளாக்குகிறார். இதனாலேயே தந்தை இப்பொழுது கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். ஒவ்வொரு கணமும் என்னையே நினைவுசெய்வதன் மூலம் சந்தோஷத்தை அடையுங்கள். உங்கள் சரீரத்தின் வலி, வேதனை அனைத்தும் அகற்றப்பட்டு, ஜீவன்முக்தி அந்தஸ்தை அடைவீர்கள். தூய்மையாகுவதற்கு, உங்களுக்கு நினைவு யாத்திரை அத்தியாவசியமானதாகும். மன்மனாபவ ஆகுங்கள். உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்கள் இலக்கை நோக்கி இட்டுச் செல்லும். அமைதி தாமம் முக்தியென்றே குறிப்பிடப்படுகிறது. ஆனால், சற்கதியானது இங்கேயே பெற்றுக் கொள்ளப்படுகிறது. சற்கதிக்கு எதிராகச் சீரழிவு உள்ளது. உங்களுக்கு இப்பொழுது தந்தையையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியும் தெரியும். நீங்கள் தந்தையின் அன்பைப் பெற்றுக் கொள்கிறீர்கள். தந்தை உங்களைத் தனது ஒரு கணப் பார்வையினால் அப்பால் அழைத்துச் செல்கிறார். அவர் நேரடியாக வந்து, உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். இதிலே தூண்டுதல் என்பதற்கு இடமில்லை. தந்தை உங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கிறார். இந்த முறையில் நினைவுசெய்வதால், ஒரு மின்கலத்திற்குச் சக்தியேற்றப்படுவது போல், உங்களுக்குச் சக்தி கிடைக்கும். இது ஒரு மோட்டார். இதன் மின்கலம் இப்பொழுது மந்தமாகி விட்டது. இப்பொழுது உங்கள் புத்தியின் யோகத்தைச் சர்வசக்திவான் தந்தையுடன் இணைத்துக் கொள்வதனால். நீங்கள் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவதுடன். உங்கள் மின்கலமும் சக்தியேற்றப்படும். தந்தையே வந்து, அனைவருடைய மின்கலங்களுக்கும் சக்தியேற்றுகிறார். ஒரெயொரு தந்தையே சர்வசக்திவான் அவார். தந்தை மாத்திரமே இங்கிருந்து, இந்த இனிமையான விடயங்கள் அனைத்தையும் உங்களுக்குக் கூறுகிறார். பிறவிபிறவியாக நீங்கள் பக்தி மார்க்கத்துச் சமயநூல்களைக் கற்றுக் கொண்டிருந்தீர்கள். இப்பொழுது தந்தை சகல சமயங்களைச் சேர்ந்தவர்களுக்கும் ஒரேயொரு விடயத்தையே கூறுகிறார். அவர் கூறுகிறார்: உங்களை ஆத்மாக்கள் என்று கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். என்னை நினைவு செய்வது குழந்தைகளாகிய உங்கள் கடமையாகும். இதையிட்டுக் குழப்பம் அடைதல் என்னும் கேள்விக்கே இடமில்லை. ஒரேயொரு தந்தையே தூய்மையாக்குபவர். நீங்கள் அனைவரும் தூய்மையாகியதும் அனைவரும் வீடு திரும்புவார்கள். இந்த ஞானம் அனைவருக்கும் உரியது. இது இலகு இராஜயோகமும், இலகு ஞானமும் ஆகும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சர்வசக்திவான் தந்தையுடன் உங்கள் புத்தியின் யோகத்தை இணைப்பதன் மூலம், உங்கள் மின்கலத்திற்குச் சக்தியேற்றுங்கள். ஆத்மாவைச் சதோபிரதான் ஆக்குங்கள். ஒருபொழுதும் நினைவு யாத்திரையைப் பற்றிக் குழப்பமடைய வேண்டாம்.

2. இந்தக் கல்வியைக் கற்று, உங்கள் மீது கருணை காட்டுங்கள். தந்தையைப் போல், அன்புக் கடலாகுங்கள். தந்தையின் அன்பு அழிவற்றது. அதைப் போல், அனைவர் மீதும் உண்மையான அழிவற்ற அன்பு கொண்டிருங்கள். பற்றை வென்றவராகுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் இனிய அனுபவங்களைக் கொண்டிருப்பதற்கு உங்கள் புரிந்துணர்வுச் சக்தியைப் பயன்படுத்தி, சதா சக்திவாய்ந்த ஆத்மா ஆகுவீர்களாக.

புரிந்துணர்வுச் சக்தியானது உங்களை மிகவும் இனிமையான அனுபவங்களைப் பெறுமாறு செய்கின்றது. சிலசமயங்களில் உங்களைத் தந்தையின் கண்களின் இரத்தினமாக அனுபவம் செய்யுங்கள், அதாவது, உங்களைத் தந்தையின் கண்களில் அமிழ்ந்திருக்கும் ஒரு மேன்மையான புள்ளியாக அனுபவம் செய்யுங்கள். சிலசமயங்களில், நெற்றியின் மத்தியில் பிரகாசிக்கும் ஓர் இரத்தினமாக இருங்கள். சிலசமயங்களில் உங்களைப் பிரம்மாவின் கரமான, தந்தை பிரம்மாவின் ஒத்துழைக்கின்ற வலது கரமாக அனுபவம் செய்யுங்கள். சிலசமயங்களில் உங்களை ஓர் அவ்யக்த தேவதை ரூபமாக அனுபவம் செய்யுங்கள். உங்களுடைய புரிந்துணர்வுச் சக்தியை அதிகரிப்பதால், நீங்கள் சக்திவாய்ந்தவர்கள் ஆகுவீர்கள். அப்பொழுது நீங்கள் உங்களில் ஒரு சிறிய கறையைப் பார்த்தாலும் அதனை மாற்றுவீர்கள்.

சுலோகம்:
அனைவர் இதயத்திலிருந்தும் தொடர்ந்தும் ஆசீர்வாதங்களைப் பெறுங்கள், உங்கள் முயற்சிகள் இலகுவானவை ஆகும்.