03.07.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, கலங்கிதார் (இகழப்பட்டு, பின்னர் பூஜிக்கத் தகுதிவாய்ந்தவராகியவர்) ஆகுவதற்கு, உங்களின் ஸ்திதியை ஆட்ட, அசைக்க முடியாததாக ஆக்கிக் கொள்ளுங்கள். எந்தளவிற்கு உங்களுக்கெதிராகக் குற்றஞ் சாட்டப்படுகின்றதோஇ அந்தளவிற்கு நீங்கள் கலங்கிதார் ஆகுவீர்கள்.

பாடல்:
தந்தையின் கட்டளை என்ன? எந்தப் பிரதான கட்டளையைப் பின்பற்றுவதன் மூலம் குழந்;தைகளாகிய நீங்கள் இதய சிம்மாசனத்தில் அமர்ந்துகொள்கின்றீர்கள்?

பதில்:
தந்தையின் கட்டளை: இனிய குழந்தைகளே, நீங்கள் எவருடனும் எவ்வித முரண்பாடுகளையும் கொண்டிருக்கக்கூடாது. அமைதியாக இருங்கள். நீங்கள் கூறுவதை எவராவது விரும்பாவிட்டால், மௌனமாக இருங்கள். ஒருவரையொருவர் தொந்தரவு செய்யாதீர்கள். உங்களுக்குள் தீய ஆவிகள் எதுவும் இல்லாதபோதே, நீங்கள் பாப்தாதாவின் இதய சிம்மாசனத்தில் அமர முடியும். நீங்கள் கசப்பான வார்த்தைகளைப் பேசாதுவிட்டால், இனிமையாகப் பேசுவது உங்கள் வாழ்க்கை முறையாகிவிடும்.

ஓம் சாந்தி.
கடவுள் பேசுகின்றார்: நீங்கள் ஆத்ம உணர்வுடையவராக இருப்பீர்களாக! இதுவே நிச்சயமாக முதலாவதாகக் கூறப்பட வேண்டும். இது குழந்தைகளாகிய உங்களுக்கு ஓர் எச்சரிக்கையாகும். தந்தை கூறுகின்றார்: நான் “குழந்தாய், குழந்தாய்” என்று கூறும்போது ஆத்மாவையே பார்க்கின்றேன். சரீரம் ஒரு பழைய சப்பாத்தாகும். அது சதோபிரதான் ஆக முடியாது. நீங்கள் சத்தியயுகத்தில் சதோபிரதான் சரீரங்களைப் பெறுவீர்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது சதோபிரதான் ஆகுகின்றீர்கள். ஆனால் உங்கள் சரீரங்கள் அதே பழைய சரீரங்களேயாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் இப்பொழுது உங்களைச் சீர்திருத்திக்கொள்ள வேண்டும். நீங்கள் தூய்மையாக வேண்டும். சத்தியயுகத்தில் நீங்கள் தூய சரீரங்களைப் பெறுவீர்கள். ஆத்மாவைத் தூய்மையாக்குவதற்கு, ஒரேயொரு தந்தையை நினைவு செய்யுங்கள். தந்தையும் ஆத்மாக்களாகிய உங்களையே பார்க்கின்றார். அவர் உங்களைப் பார்ப்பதனால் மாத்திரம் ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாக மாட்டீர்கள். நீங்கள் எந்தளவிற்குத் தந்தையை நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்குத் தொடர்ந்தும் தூய்மையாகுவீர்கள். அது உங்கள் கடமையாகும். நீங்கள் தந்தையை நினைவு செய்வதன் மூலம் சதோபிரதான் ஆகவேண்டும். தந்தை அதற்கான வழியைக் காட்டுவதற்காக வந்துள்ளார். இச்சரீரம் இறுதி வரை பழையதாகவே இருக்கும். இவை ஆத்மாவுடன் தொடர்புபட்டிருக்கும் வெறும் பௌதீக அங்கங்களேயாகும். ஓர் ஆத்மா அழகானவராகும்போது, அவர் நற்செயல்களைச் செய்கின்றார். அங்கே பறவைகளும், விலங்குகளும் மிக நல்லவை. இங்கே, பறவைகள் மனிதர்களைக் கண்டதும் பறந்துவிடுகின்றன. அங்கு, நல்ல பறவைகள் ஓர் ஒழுங்கு முறையில் உங்களைச் சுற்றி வட்டமிட்டுப் பறக்கும். அவை உங்கள் வீட்டிற்கு வந்து, வீட்டை அசுத்தம் செய்துவிட்டுப் பறந்து செல்பவையாக இருக்கமாட்டாது. இல்லை, அது ஒழுக்கம் நிறைந்த உலகமாகும். நீங்கள் மேலும் முன்னேறிச் செல்லும்போது, அனைத்தினது காட்சிகளையும் காண்பீர்கள். இப்பொழுது பெருமளவு இடைவெளி உள்ளது. சுவர்க்கத்தின் புகழ் எல்லையற்றதாகும். தந்தையின் புகழ் எல்லையற்றது என்பதால், தந்தையின் சொத்துக்களின் புகழும் எல்லையற்றதேயாகும். குழந்தைகளாகிய நீங்கள் மிகுந்த போதை கொண்டிருக்க வேண்டும். தந்தை கூறுகின்றார்: நான் சேவை செய்யும் ஆத்மாக்களை நினைவு செய்கின்றேன். அவர்கள் இயல்பாகவே நினைவு செய்யப்படுகின்றார்கள். மனமும், புத்தியும் ஆத்மாவிலேயே உள்ளன. நீங்கள் முதற்தரமான சேவை செய்கின்றீர்களா அல்லது இரண்டாம் தரமான சேவை செய்கின்றீர்களா என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். இவையனைத்தையும் நீங்கள் வரிசைக்கிரமமாகவே புரிந்துகொள்கின்றீர்கள். சிலர் அருங்காட்சியகங்களைக் கட்டிவிட்டு, ஜனாதிபதி, கவர்னர் போன்றோரிடம் செல்கின்றனர். அவர்கள் நிச்சயமாக மிக நன்றாக அவர்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். ஒவ்வொருவரும் தங்கள் சொந்த நற்பண்புகளைக் கொண்டிருக்கின்றனர். ஒருவர் சிறந்த பண்புகளைக் கொண்டிருக்கும்போது கூறப்படுகின்றது: அவர் மிகுந்த நற்பண்புடையவர். சேவாதாரிகள் எப்பொழுதும் மிகவும் இனிமையாகவே பேசுவார்கள். அவர்களால் ஒருபோதும் கசப்பான வார்த்தைகளைப் பேச முடியாது. கசப்பாகப் பேசுபவர்களில் தீய ஆவிகள் உள்ளன. சரீர உணர்வே அதில் முதலாம் இலக்கத்திற்குரியது. அதனைத் தொடர்ந்து, ஏனைய தீய ஆவிகள் பிரவேசிக்கின்றன. மக்கள் மிகவும் தீய நடத்தையைக் கொண்டிருக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: அந்த அப்பாவிகளைக்; குறைகூற முடியாது. நீங்கள் முன்னைய கல்பத்தில் செய்த அதே முயற்சியையே செய்யவேண்டும். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள், அப்பொழுது முழு உலகமும் படிப்படியாக உங்கள் கரங்களினுள் (கட்டுப்பாட்டிற்குள்) வந்துவிடும். இது நாடகச் சக்கரமாகும். அது நேரத்தை உங்களுக்கு மிகச் சரியாகக் கூறுகின்றது. சொற்ப காலமே எஞ்சியுள்ளது. அவர்கள் ஒரு நாட்டிற்குச் சுதந்திரத்தைக் கொடுக்கும்போது, அந்நாட்டை இரண்டாகப் பிளவுபடுத்திவிடுகின்றார்கள். பின்னர், அவர்கள் தங்கள் மத்தியில் தொடர்ந்தும் சண்டையிடுகின்றார்கள். அல்லாவிடில், அவர்களின் போர்க்கருவிகள் போன்றவற்றை யார் வாங்குவார்கள்? அதுவும் அவர்களின் வியாபாரமேயாகும். நாடகத்திற்பேற்ப, அது அவர்களின் புத்திசாலித்தனமாகும். அவர்கள் இங்கும் அனைத்தையும் துண்டு துண்டாகப் பிரித்துவிட்டார்கள். ஒரு பகுதியினர் கூறுகின்றனர்: இந்தக்காணி சரியாகப் பகிர்ந்தளிக்கப்படாததால், இந்த நிலத்துண்டை நாங்கள் பெறவேண்டும். அந்தப் பக்கத்தில் அதிகளவு நீர் பாய்வதுடன், அதிகளவு நிலப்பகுதியும் உள்ளது, இந்தப் பக்கத்திலோ சிறிதளவு நீரே உள்ளது. அவர்கள் இவ்விதமாகத் தங்கள் மத்தியில் சண்டையிடுகின்றனர். பின்னர், உள்நாட்டு யுத்தம் ஏற்படுகின்றது. பெருமளவு சண்டை இடம்பெறுகின்றது. நீங்கள் தந்தையின் குழந்தைகளாகும்போது, அவதூறுகளையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் இப்பொழுது கலங்கிதார் ஆகுகின்றீர்கள் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். பாபாவைப் போன்றே நீங்களும் அவதூறு செய்யப்படுகின்றீர்கள். நீங்கள் உலகின் அதிபதிகளாகுன்றீர்கள் என்பது அந்த அப்பாவிகளுக்குத் தெரியாதென்பதை நீங்கள் அறிவீர்கள். 84 பிறவிகளின் விடயம் மிக இலகுவானது. நீங்களே பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர்களாகி, பின்னர் பூஜிக்கப்படுகின்றீர்கள். ஒருவரின் புத்தியால் எதனையும் கிரகிக்க முடியாதுவிடின், அது நாடகத்தில் அவரது பாகம் எனப்படுகின்றது. அதற்கு எவராலும் என்ன செய்ய முடியும்? நீங்கள் எவ்வளவுதான் உங்கள் தலையை மோதிக்கொண்டாலும், அவரால் மேலே ஏற முடியாது. அவர் முயற்சி செய்யத் தூண்டப்படுகின்றார், எனினும் அவருக்கு அதற்கான பாக்கியம் இல்லை. ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அனைவரும் அதற்குத் தேவைப்படுகின்றனர். நீங்கள் இவ்விதமாகச் சிந்தித்து, மௌனமாக இருக்க வேண்டும். எவருடனும் எவ்வித முரண்பாடும் இருக்கக்கூடாது. நீங்கள் அன்புடன் விளங்கப்படுத்த வேண்டும்: “அவ்வாறு செய்யாதீர்கள். நீங்கள் அவ்வாறு செய்தால் உங்கள் அந்தஸ்து மேலும் குறைந்துவிடும்.” ஆத்மாவே செவிமடுக்கின்றார். சிலவேளைகளில், நீங்கள் எவருக்காவது நல்லதைக் கூறினாலும் அவர் அமைதியற்றவராகிவிடுவார். அச்சந்தர்ப்பத்தில், நீங்கள் அவரைத் தனியாக விட்டுவிட வேண்டும். ஒருவர் அத்தகையவராயின், அவர் மற்றவர்களையும் தொடர்ந்து தொந்தரவு செய்துகொண்டேயிருப்பார். அது இறுதிவரை தொடரும். நாளுக்கு நாள் மாயை மேலும், மேலும் கடுமையாகி விடுவாள். மாயையும் ஒரு மகாராத்தியாகி, மகாராத்திகளுடன் சண்டையிடுவாள். மாயையின் புயல்கள் வரும்போது, தந்தையை நினைவு செய்யும் பயிற்சியை விருத்தி செய்யுங்கள், நீங்கள் முற்றிலும் ஆட்ட அசைக்க முடியாதவராக இருப்பீர்கள். மாயை உங்களைத் தொந்தரவு செய்வாள் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். எனினும், நீங்கள் பயப்படக்கூடாது. கலங்கிதார் ஆகப்போகின்றவர்கள் அவதூறு செய்யப்படுவார்கள். எனினும், நீங்கள் அதனையிட்டுக் குழப்பமடையக்கூடாது. இது தூய்மைக்கான விடயம் என்பதால், பத்திரிகையாளர்கள் உங்களுக்கெதிராக எதனையும் அச்சிட முடியும். அப்பாவிகள் துன்புறுத்தப்படுவார்கள். அகசூர், பகசூர் என அசுரர்களின் பெயர்கள் உள்ளன. புத்னா, சூர்ப்பனகை போன்ற பெண் அசுரர்களின் (அரக்கிகள்) பெயர்களும் உள்ளன. முதலில், குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் புகழைக் கூற வேண்டும். எல்லையற்ற தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஆத்மாக்கள். தந்தையைத் தவிர வேறு எவராலும் இந்த ஞானத்தை உங்களுக்குக் கொடுக்க முடியாது. படைப்பவரினதும், படைப்பினதும் ஞானமே கல்வியாகும். இதன் மூலமாக நீங்கள் சுயதரிசன சக்கரதாரிகளாகவும், பூகோளத்தை ஆட்சி செய்பவர்களாகவும் ஆகுகின்றீர்கள். அணிகலன்களும் உங்களுக்குரியவையே. எனினும், பிராமணர்களாகிய நீங்கள் முயற்சியாளர்கள். இதனாலேயே இந்த அணிகலன்கள் விஷ்ணுவிற்குக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆத்மா என்றால் என்ன, பரமாத்மா என்றால் என்ன போன்ற விடயங்களை வேறு எவராலுமே உங்களுக்குக் கூறமுடியாது. ஆத்மா எங்கிருந்து வந்தார்? ஆத்மா எவ்வாறு சரீரத்தை விட்டு நீங்குகின்றார்? சிலவேளைகளில் கண்களினூடாக வெளியேறுவதாகவும், சிலவேளைகளில் நெற்றியினூடாக வெளியேறுவதாகவும், சிலவேளைகளில் மண்டையோட்டினூடாக வெளியேறுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். எவராலுமே இதனை அறிந்துகொள்ள முடியாது. ஆத்மா தந்தையின் நினைவிலிருந்தவாறு சரீரத்தை நீக்குவார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். நீங்கள் பெருமளவு சந்தோஷத்துடன் தந்தையிடம் செல்ல வேண்டும். பாம்பின் உதாரணத்தைப் போன்று, நீங்கள் பழைய சரீரத்தை சந்தோஷத்துடன் நீக்க வேண்டும். விலங்குகளிடம் உள்ள விவேகம் மனிதர்களிடம் இல்லை. அந்தச் சந்நியாசிகள் வெறுமனே அந்த உதாரணங்களைக் கொடுக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் பூச்சிகளை மாற்றுகின்ற ரீங்காரமிடும் வண்டுகளைப் போன்று ஆகவேண்டும். நீங்கள் மனிதப் பூச்சிகளாகி அவர்களை மாற்ற வேண்டும். நீங்கள் வெறுமனே உதாரணத்தைக் கொடுக்காது, நடைமுறையில் செய்துகாட்ட வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும். நீங்கள் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியைப் பெறுவதனால், உங்களுக்கு உள்ளார்ந்த சந்தோஷம் இருக்க வேண்டும். அந்த மக்கள் ஆஸ்தியைப் பற்றி அறியமாட்டார்கள். அனைவரும் அமைதியைப் பெறுகின்றனர். அனைவரும் அமைதி தாமத்திற்குச் செல்கின்றனர். தந்தையைத் தவிர வேறு எவராலுமே அனைவருக்கும் ஜீவன் முக்தியை அருள முடியாது. நீங்கள் இதனையும் விளங்கப்படுத்த வேண்டும்: “நீங்கள் துறவறப் பாதையைச் சேர்ந்தவர்கள், பிரம்ம தத்துவத்துடன் இரண்டறக் கலப்பதற்காக நீங்கள் முயற்சி செய்கின்றீர்கள். தந்தை இல்லறப் பாதையை உருவாக்குகின்றார். உங்களால் சத்தியயுகத்திற்குச் செல்ல முடியாது. உங்களால் இந்த ஞானத்தை எவருக்கும் விளங்கப்படுத்த முடியாது.” இது மிக ஆழமான விடயமாகும். முதலில், நீங்கள் மற்றவர்களுக்கு அல்பா, பீற்றா பற்றிய பாடத்தை விளங்கப்படுத்த வேண்டும். அவர்களிடம் கூறுங்கள்: உங்களுக்கு இரு தந்தையர் உள்ளனர்: ஒருவர் எல்லைக்குட்பட்டவர் (லௌகீகத் தந்தை), மற்றையவர் எல்லையற்ற ஒரேயொருவர் ஆவார். நீங்கள் ஒரு லௌகீகத் தந்தையிடம் விகாரத்தின் மூலமாகப் பிறப்பெடுக்கின்றீர்கள். பெருமளவு துன்பம் பெறப்படுகின்றது. சத்தியயுகத்தில் அளவற்ற சந்தோஷம் உள்ளது. அங்கு பிறப்பு வெண்ணெயைப் போன்று சீரானதாக இருக்கும். அங்கு துன்பத்திற்கான கேள்விக்கே இடமில்லை. அது சுவர்க்கம் எனப்படும். நீங்கள் எல்லையற்ற தந்தையிடமிருந்து எல்லையற்ற இராச்சியத்தின் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். முதலில் சந்தோஷமும், பின்னர் துன்பமும் உள்ளது. முதலில் துன்பமும், பின்னர் சந்தோஷமும் எனக் கூறுவது தவறாகும். புதிய உலகமே முதலில் ஸ்தாபிக்கப்படுகின்றது. பழைய உலகம் ஸ்தாபிக்கப்படுவதில்லை. எவராவது பழைய கட்டடத்தைக் கட்டுவார்களா? இராவணன் புதிய உலகில் இருக்க முடியாது. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் இவ்வழிமுறைகள் அனைத்தையும் உங்கள் புத்தியில் கொண்டிருக்க வேண்டும். எல்லையற்ற தந்தை உங்களுக்கு எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். அவர் எவ்வாறு அதனைக் கொடுக்கின்றார்? வாருங்கள், நாங்கள் அதனை உங்களுக்கு விளங்கப்படுத்துவோம். இதனை விளங்கப்படுத்துவதற்கான வழிமுறைகள் உங்களிடம் இருக்க வேண்டும். அத்துடன் துன்ப பூமியில் நிலவும் துன்பத்தின் வகைகளைப் பற்றிய காட்சியொன்றையும் அவர்களுக்குக் கொடுங்கள். இங்கு பெருமளவு துன்பம் உள்ளது! அது அளவற்றது. அதன் சரியான பெயர் துன்ப பூமி என்பதாகும். எவருமே இதனைச் சந்தோஷ பூமி என அழைக்க முடியாது. ஸ்ரீ கிருஷ்ணர் சந்தோஷ பூமியிலேயே இருக்கின்றார். ஸ்ரீகிருஷ்ணரின் ஆலயமும் சந்தோஷ பூமி என்றே அழைக்கப்படுகின்றது. அவர் சந்தோஷ பூமியின் அதிபதியாக இருந்தார். அவர் இப்பொழுதும் ஆலயங்களில் பூஜிக்கப்படுகின்றார். இந்த பாபா இப்பொழுது இலக்ஷ்மி, நாராயணனின் ஆலயத்திற்குச் செல்வாராயின், அவர் கூறுவார்: ஓஹோ! நான் அவ்வாறு ஆகப்போகின்றேன்! அவர் இப்பொழுது அவர்களைப் பூஜிப்பதில்லை. அவர் முதலாம் இலக்கத்தவராகுகின்றார். எனவே, இரண்டாவதாக அல்லது மூன்றாவதாக உள்ளவர்களை அவர் பூஜிக்கமாட்டார். நான் சூரிய வம்சத்தவராக ஆகுகின்றேன். மக்கள் இதனை அறியமாட்டார்கள். அவர்கள் அனைவரையும் கடவுள் என அழைக்கின்றனர். பெருமளவு இருள் சூழ்ந்துள்ளது! நீங்கள் மிக நன்றாக விளங்கப்படுத்துகின்றீர்கள். அதற்குக் காலம் எடுக்கும். முன்னைய கல்பத்தில் எடுத்த அதேயளவு காலமே எடுக்கும். எதற்குமே அவசரப்படக்கூடாது. உங்கள் தற்போதைய பிறவி வைரம் போன்றது. தேவர்களின் பிறவியை வைரம் போன்றது எனக் கூறமுடியாது. அவர்கள் இறை குடும்பத்தில் இல்லை. இது உங்கள் இறை குடும்பமாகும், அதுவோ உங்கள் தெய்வீகக் குடும்பமாகும். இவை அத்தகைய புதிய விடயங்களாகும். ஒரு மூடை மாவில் ஒரு துளி உப்பு இருப்பதைப் போன்றே கீதையில் உள்ளது. மக்கள் கிருஷ்ணரின் பெயரைப் புகுத்தியதன் மூலம் அத்தகையதோர் தவறைச் செய்துவிட்டனர். அவர்களிடம் கூறுங்கள்: நீங்கள் தேவர்களை தேவர்கள் என்றே அழைக்கின்றீர்கள். அப்படியாயின், கிருஷ்ணரை ஏன் கடவுள் என அழைக்கின்றீர்கள்? விஷ்ணு யார்? நீங்கள் இதனைப் புரிந்துகொள்கின்றீர்கள். மக்கள் எவ்வித ஞானமுமின்றி, தொடர்ந்து வழிபாடுகளைச் செய்கின்றனர். தேவர்களே அதி புராதனமானவர்கள். முன்னர் அவர்கள் சுவர்க்கத்தில் இருந்தார்கள். அனைவரும் சதோ, ரஜோ, தமோ நிலைகளினூடாகச் சென்றாக வேண்டும். இந்நேரத்தில், அனைவரும் தமோபிரதானாக உள்ளனர். குழந்தைகளாகிய உங்களுக்குப் பல கருத்துக்கள் விளங்கப்படுத்தப்படுகின்றன. நீங்கள் சின்னத்தை (‘பட்ஜ்’) உபயோகித்து, மிக நன்றாக விளங்கப்படுத்தலாம். நீங்கள் தந்தையையும், உங்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியரையும் நினைவு செய்ய வேண்டும். எவ்வாறாயினும், மாயையுடன் அத்தகையதோர் கயிறிழுத்தல் போட்டி இடம்பெறுகின்றது. மிகச் சிறந்த கருத்துக்கள் பல தொடர்ந்தும் வெளிப்படுகின்றன. நீங்கள் எதனையும் செவிமடுக்காவிட்டால், எவ்வாறு உங்களால் அக்கருத்துக்களை எடுத்துரைக்க முடியும்? பொதுவாக மகாராத்திகள் சுற்றுலாச் செல்லும்போது, அவர்கள் முரளியைத் தவறவிடுகின்றனர். அவர்கள் பின்னர் அதனை வாசிப்பதுமில்லை. அவர்கள் நிறைவாக இருக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நான் அத்தகைய ஆழமான விடயங்களை உங்களுக்குக் கூறுகின்றேன்! நீங்கள் அவற்றைச் செவிமடுத்துக் கிரகிக்க வேண்டும். நீங்கள் எதனையும் கிரகிக்காவிட்டால், பலவீனமாக இருப்பீர்கள். பல குழந்தைகள் ஞானக்கடலைக் கடைந்து, மிகச் சிறந்த கருத்துக்களைக் கூறுகின்றார்கள். அவர்கள் தங்கள் ஸ்திதிக்கேற்ப கருத்துக்களைப் பிரித்தெடுப்பதை பாபா பார்க்கின்றார். இவர் ஒருபோதுமே உரைக்காத கருத்துக்களை சேவாதாரிக் குழந்தைகளால் பிரித்தெடுக்கக்கூடியதாக உள்ளது. அவர்கள் சேவையில் ஈடுபட்டிருக்கின்றார்கள். பல நல்ல கருத்துக்கள் சஞ்சிகைகளிலும் பிரசுரிக்கப்படுகின்றன. எனவே, குழந்தைகளாகிய நீங்கள் உலகின் அதிபதிகளாகுகின்றீர்கள். தந்தை உங்களை மிக மேன்மையானவர்களாக்குகின்றார்! பாடலில் கூறப்படுகின்றது: முழு உலகமும் உங்கள் கரங்களில் (கட்டுப்பாட்டில்) இருக்கும். எவராலும் அதனை உங்களிடமிருந்து அபகரிக்க முடியாது. இலக்ஷ்மி, நாராயணன் உலகின் அதிபதிகளாக இருந்தார்கள். நிச்சயமாகத் தந்தையே அவர்களுக்கு அதனைக் கற்பித்திருக்க வேண்டும். அவர்கள் எவ்வாறு அந்த இராஜரீக அந்தஸ்தைப் பெற்றார்கள் என்பதை நீங்கள் விளங்கப்படுத்தலாம். ஆலய மதகுருமார் இதனை அறியமாட்டார்கள். நீங்கள் பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். கடவுள் சர்வவியாபி அல்ல என்பதையும் நீங்கள் விளங்கப்படுத்தலாம். அவர்களிடம் கூறுங்கள்: இந்த நேரத்தில், ஐந்து தீய ஆவிகளும் சர்வவியாபிகளாக உள்ளன. இந்த விகாரங்கள் ஒவ்வொருவரிலும் உள்ளன. மாயையின் ஐந்து தீய ஆவிகள் உள்ளன. மாயை சர்வவியாபி ஆவாள். கடவுளை சர்வவியாபகர் என நீங்கள் கூறுகின்றீர்கள். அது தவறாகும். கடவுள் எவ்வாறு சர்வவியாபியாக இருக்க முடியும்? அவர் உங்களுக்கு ஓர் எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கின்றார். அவர் முட்களை மலர்களாக்குகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்துவதற்குப் பயிற்சி செய்ய வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஒருவர் அமைதியின்மையைப் பரப்பினால், அல்லது உங்களுக்குப் பிரச்சனை கொடுத்தால், நீங்கள் மௌனமாக இருக்க வேண்டும். எதைப் பற்றியாவது எச்சரிக்கப்பட்ட பின்னரும் சிலர் தங்களைச் சீர்திருத்திக் கொள்ளாவிட்டால், அது அவர்களின் பாக்கியமே என்று மாத்திரமே உங்களால் கூறமுடியும். ஏனெனில், ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது.

2. ஞானக்கடலைக் கடைந்து, புதிய கருத்துக்களைப் பிரித்தெடுப்பதன் மூலம் சேவை செய்யுங்கள். தந்தை தினமும் உங்களுக்கு எடுத்துரைக்கின்ற ஆழமான விடயங்களை என்றுமே தவறவிடாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் தூய்மையை இலகுவாக உங்களின் ஆதியான, அநாதியான, விசேடமான நற்குணமாக ஆக்குவதன் மூலம் ஒரு பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மா ஆகுவீர்களாக.

பூஜிக்கத்தகுதிவாய்ந்த ஆத்மா ஆகுவதற்கான விசேடமான அடிப்படை தூய்மையாகும். எந்தளவிற்கு அதிகமாக சகல வகையான தூய்மையையும் நீங்கள் கிரகிக்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிகமாக நீங்கள் ஒவ்வொரு வழிமுறையிலும் பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர் ஆகுவீர்கள். ஆதியாகவும் அநாதியாகவும் தூய்மையை ஒரு விசேடமான நற்குணமாக ஒழுங்குமுறையுடன் ஏற்றுக் கொள்பவர்கள், ஒழுங்குமுறையாகப் பூஜிக்கப்படுவார்கள். தமது தூய மனோபாவம், தூய பார்வை, தூய அதிர்வலைகளை வைத்திருப்பதுடன் தமது கனவுகளிலேனும் துண்டிக்கப்படாத தூய்மையைக் கொண்டிருந்தவண்ணம், ஞானி மற்றும் அஞ்ஞானி (ஞானம் அற்றவர்கள்) ஆத்மாக்களுடன் தொடர்பில் வந்து, அவர்களின் உறவுமுறைகளையும் தொடர்புகளையும் சரியாக நிறைவேற்றுபவர்களே, ஒழுங்கு முறையுடன் பூஜிக்கப்படுவார்கள்.

சுலோகம்:
புற உலகில் வாழும்போது, ஓர் அவ்யக்த தேவதையாக சேவை செய்யுங்கள். அப்போது உலக நன்மை என்ற பணியானது துரித கதியில் நிறைவேறும்.