05.06.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்களே பிரபுவினதும் அதிபதியினதும் குழந்தைகளும், இளவரசர்கள் ஆகப் போகின்றவர்களும் ஆவீர்கள். எனவே, நீங்கள் எதன் மீதும் ஆசை கொள்ளவோ அல்லது எதனையும் எவரிடமும் கேட்கவோ கூடாது.

பாடல்:
ஆரோக்கியமாக இருப்பதற்கு நீங்கள் எதனில் தங்கியிருக்கக் கூடாது?

பதில்:
உலகாயச் சௌகரியங்களில் தங்கியிருப்பதனால், தாங்கள் ஆரோக்கியமாக இருப்பார்கள் எனச் சில குழந்தைகள் எண்ணுகிறார்கள். எவ்வாறாயினும், தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, நீங்கள் இங்குள்ள, உலகாயச் சௌகரியங்கள் மீது எந்த ஆசையையும் கொண்டிருக்கக்கூடாது. உலகாயச் சௌகரியங்கள் உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்காது. உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு, நீங்கள் நினைவு யாத்திரையில் நிலைத்திருக்க வேண்டும். சந்தோஷப் போஷாக்கைப் போல வேறு எந்தப் போஷாக்கும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. சந்தோஷமாகவும் போதையுடனும் இருங்கள். தாதிசி ரிஷி செய்ததைப் போன்று யக்ஞத்திற்கு உங்கள் எலும்புகளைக் கொடுங்கள். அப்பொழுது உங்கள் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

ஓம் சாந்தி.
தந்தையே கரன்கரவன்கார் என அழைக்கப்படுகிறார். நீங்களே பிரபுவினதும் அதிபதியினதும் குழந்தைகள். இவ்வுலகில் அதியுயர்ந்த பதவியை நீங்கள்; கொண்டிருக்கின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் பிரபுவினதும் அதிபதியினதும் குழந்தைகள், பிரபுவினதும் அதிபதியினதும் வழிகாட்டல்களைப் பின்பற்றுவதனால், நீங்களே உங்கள் இராச்சிய பாக்கியத்தை மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கின்றீர்கள் என்னும் போதையைக் கொண்டிருக்க வேண்டும். இது எவரினது புத்தியிலும் இருப்பதில்லை. பாபா இதனைச் சகல நிலையங்களிலுமுள்ள குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் கூறுகின்றார். பல நிலையங்கள் உள்ளன. பல குழந்தைகள் இங்கு வருகின்றார்கள். பாபாவின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால், மீண்டும் ஒருமுறை நீங்கள் அமைதியும் சந்தோஷமும் உள்ள இராச்சியத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்பது உங்கள் அனைவரினதும் புத்தியில் சதா இருக்க வேண்டும். சந்தோஷமும் அமைதியும் என்ற இரு வார்த்தைகளை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் அதிகளவு ஞானத்தைப் பெறுகின்றீர்கள். ஆதலால் உங்கள் புத்தி மிகவும் பரந்ததாகவும், எல்லையற்றதாகவும் இருக்க வேண்டும். குறுகிய புத்தியினால் இங்கு எவ்விதப் பயனும் இல்லை. உங்களைப் பிரபுவினதும் அதிபதியினதும் ஒரு குழந்தை எனக் கருதினால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நாள் முழுவதும் தந்தையை நினைவுசெய்யாத பலர் உள்ளனர். பாபா கூறுகின்றார்: ஏன் உங்கள் புத்தி மந்தமாகுகிறது? ஸ்ரீமத்தின் அடிப்படையில் தங்கள் தேவ இராச்சியத்தைத் தாங்கள் ஸ்தாபிக்கின்றார்கள் என்பது நிலையத்திற்குச் செல்கின்ற குழந்தைகள் பலரின் புத்தியில் இருப்பதில்லை. அப்போதையும் பிரகாசமும் உள்;ர இருக்க வேண்டும். முரளியைச் செவிமடுக்கும் பொழுது, உங்களுக்குப் புல்லரிக்கின்ற அனுபவம் இருக்க வேண்டும். இங்கே, குழந்தைகளுக்குப் புல்லரிக்கின்ற உணர்வே அற்றுப் போய்விட்டது என்பதை பாபா காண்கின்றார். பாபாவை நினைவுசெய்வதன் மூலம் தங்கள் பாவங்களை அழிக்க முடியும் என்பதையும், ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் தங்கள் இராச்சியத்தை உருவாக்க முடியும் என்பதையும் எண்ணிக்கையற்ற குழந்தைகள் தங்கள் புத்தியில் கொண்டிருப்பதில்லை. தினமும் பாபா விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, நீங்கள் இராவணனை வெற்றி கொள்கின்ற, போர்வீரர்கள். தந்தை குழந்தைகளாகிய உங்களை ஓர் ஆலயத்தில் அமர்வதற்குத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்கினாலும், குழந்தைகளாகிய உங்களால் அப் போதையையும் சந்தோஷத்தையும் பேண முடியாதுள்ளது. நீங்கள் எதனையும் பெறாவிட்டால், நீங்கள் முகங்கோண ஆரம்பிக்கிறீர்கள். குழந்தைகளின் ஸ்திதியைப் பார்த்து பாபா வியப்படைகின்றார்; அவர்கள் மாயையின் சங்கிலியில் சிக்குண்டு விட்டார்கள். உங்கள் கௌரவம், உங்கள் செயற்பாடுகள், உங்கள் சந்தோஷம் அனைத்தும் அற்புதமாக இருக்க வேண்டும். தங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் மறக்க முடியாதவர்களால் ஒருபொழுதும் தந்தையை நினைவுசெய்ய முடியாது. எனவே, அவர்கள் என்ன அந்தஸ்தைப் பெறுவார்கள்? இது ஓர் அற்புதமே! குழந்தைகளாகிய உங்களுக்குப் பெரும் போதை இருக்க வேண்டும். உங்களைப் பிரபுவினதும் அதிபதியினதும் குழந்தைகள் எனக் கருதினால், நீங்கள் எதனையும் கேட்க வேண்டிய அவசியம் இருக்க மாட்டாது. நீங்கள் 21 பிறவிகளுக்கு எதனையும் கேட்க வேண்டிய அவசியமே இல்லாதவாறு பாபா உங்களுக்கு அத்தகைய எல்லையற்ற பொக்கிஷங்களைக் கொடுக்கிறார். நீங்கள் அந்தளவிற்குப் போதையைக் கொண்டிருக்க வேண்டும். எவ்வாறாயினும், உங்களிற் சிலர் முற்றிலும் மந்தமான, செயலற்ற, குறுகிய புத்தியைக் கொண்டுள்ளீர்கள். குழந்தைகளாகிய உங்களின் புத்தி ஏழு அடி உயரமாக இருக்க வேண்டும். மனிதர்களின் ஆகக்கூடிய உயரம் 6 அல்லது 7 அடி ஆகும். பாபா குழந்தைகளாகிய உங்களை உற்சாகமாக்குவதற்குத் தூண்டுகின்றார். நீங்களே பிரபுவினதும் அதிபதியினதும் குழந்தைகள். உலக மக்கள் எதனையும் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள்: தந்தையின் முன்னிலையில் நீங்கள் அமர்ந்திருக்கிறீர்கள் என எண்ணுங்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்து கொண்டிருங்கள், அப்பொழுது உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, மாயையே உங்கள் மிகக்கொடிய எதிரி. அவள் உங்களுக்கு எதிரியாக இருப்பது போன்று மற்றவர்களுக்கு அவள் பெரிய எதிரியல்ல. இது மனிதர்களுக்குத் தெரியாது; அவர்களின் புத்தி சீரழிந்து விட்டது. பாபா தினமும் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகின்றார்: நீங்களே பிரபுவினதும் அதிபதியினதும் குழந்தைகள். தந்தையை நினைவுசெய்வதுடன், தொடர்ந்தும் உங்களைப் போன்று பிறரையும் ஆக்குங்கள். எவ்வாறு கடவுளே உண்மையான அதிபதியாக உள்ளார் என்பதையும், அவரின் குழந்தைகளாகிய நீங்கள் எவ்வாறு பிரபுவினதும் அதிபதியினதும் குழந்தைகளாக உள்ளீர்கள் என்பதையும் நீங்கள் பிறருக்கு விளங்கப்படுத்த வேண்டும். இதனைக் குழந்தைகளாகிய நீங்கள் நடந்தும் உலாவியும் திரியும்பொழுதும் உங்கள் புத்தியில் நினைவுசெய்து கொண்டிருக்க வேண்டும். தாதிசி ரிஷி செய்தது போன்று, நீங்களும் சேவையில் உங்கள் எலும்புகளைக் கொடுக்க வேண்டும். சேவையில் உங்கள் எலும்புகளைக் கொடுப்பது என்பது பற்றிச் சிந்திக்காமல், சிலர் மேலும் பல சௌகரியங்களை விரும்புகிறார்கள்! அவ்விடயங்களினால் உங்கள் ஆரோக்கியம் முன்னேற்றம் அடையாது. ஆரோக்கியமானவர்கள் ஆகுவதற்கு, நினைவு யாத்திரையே உங்களுக்குத் தேவை. அந்தச் சந்தோஷம் உங்களுக்கு இருக்க வேண்டும் : ஓ! நாங்கள் கல்பம் கல்பமாக மாயையினால் தோற்கடிக்கப்பட்டோம், ஆனால் இப்பொழுது நாங்கள் மாயையை வெற்றி கொள்கின்றோம். தந்தை வந்து உங்களை வெற்றி கொள்ளுமாறு செய்கின்றார். இப்பொழுது பாரதத்தில் பெரும் துன்பம் உள்ளது. இராவணனே எல்லையற்ற துன்பத்தை ஏற்படுத்துகின்றான். அம்மக்கள் தாங்கள் விமானங்களையும் மோட்டார் வாகனங்களையும் வைத்திருப்பதனால், தாங்கள் சுவர்க்கத்தில் இருப்பதாக எண்ணுகின்றார்கள். எவ்வாறாயினும், இவ்வுலகம் அழிக்கப்படவுள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் அணைக்கட்டு போன்றவற்றைக் கட்டுவதில் நூறாயிரக்கணக்கான ரூபாய்களைச் செலவு செய்கின்றார்கள். பெருமளவு போர்த் தளபாடங்களும் வாங்கப்படுகின்றன. அவர்கள் ஒருவரையொருவர் அழிக்கப் போகின்றார்கள். அவர்கள் அனாதைகள். அவர்கள் அதிகளவு சண்டை, சச்சரவு செய்கிறார்கள். கேட்கவே வேண்டாம்! அதிகளவு குப்பை உள்ளது! இது நரகம் என அழைக்கப்படுகின்றது. சுவர்க்கக்திற்குப் பெரும் புகழ் உள்ளது. உங்கள் மகாராஜா எங்கு சென்றுவிட்டார் என பரோடாவின் மகாராணியை வினவினால், அவர் சுவர்க்கவாசியாகி விட்டார் என மகாராணி பதிலளிப்பார். சுவர்க்கம் என்றால் என்ன என்பது எவருக்குமே தெரியாது. அவர்கள் காரிருளில் இருக்கின்றார்கள். நீங்களுமே காரிருளில் இருந்தீர்கள். தந்தை கூறுகின்றார்: இப்பொழுது நான் உங்களுக்கு ஒரு தெய்வீகப் புத்தியைக் கொடுத்துள்ளேன். உங்களைப் பிரபுவும் அதிபதியுமாகிய கடவுளின் குழந்தைகள் எனக் கருதுங்கள். பிரபுவும் அதிபதியுமானவர் உங்களுக்குக் கற்பித்து உங்களை இளவரசர்கள் ஆக்குகின்றார். பாபா கூற்றைத் தொடர்புபடுத்துகின்றார்: சுவர்க்கத்தின் தெய்வீகச் சப்தத்தைப் பற்றி ஒரு செம்மறியாடு அல்லது வெள்ளாட்டினால் என்ன புரிந்துகொள்ள முடியும்? உங்களுக்கு இப்பொழுது புரிந்துணர்வு உள்ளது. ஆனால் மனிதர்கள் செம்மறியாடும் வெள்ளாடும் போன்றவர்கள்; அவர்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் அனைத்து விதமான புகழையும் தொடர்ந்தும் பாடுகின்றார்கள். இப்பொழுது உங்கள் புத்தியில் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்கள் உள்ளன. நீங்கள் உலகில் அமைதியையும் சந்தோஷத்தையும் ஸ்தாபிக்கிறீர்கள் என்பதை நீங்கள் மிகத் தெளிவாக நினைவுசெய்ய வேண்டும். இதில் உதவியாளர்கள் ஆகுபவர்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுவார்கள். யார் உதவியாளர் ஆகுகின்றார்கள் என்பதை நீங்களும் பார்க்க முடியும். நீங்கள் என்ன செய்கின்றீர்கள் என்றும், நீங்கள் ஓர் செம்மறியாடு அல்லது வெள்ளாடு போன்றுள்ளீர்களா என்றும் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த இதயத்தை வினவ வேண்டும். மனிதர்கள் எவ்வளவு அகங்காரம் கொண்டுள்ளனர் என்று பாருங்கள்! அவர்கள் (அகங்காரத்தினால்) உறுமியவாறு உள்ளார்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். சேவையில் நீ;ங்கள் உங்கள் எலும்புகளையும் கொடுக்க வேண்டும். எவரையும் நீங்கள் குழப்பமடையச் செய்யவோ அல்லது எவராலும் நீங்கள் குழப்பமடையவோ கூடாது. நீங்கள் எவ்வித அகங்காரத்தையும் கொண்டிருக்கக் கூடாது: நான் இதைச் செய்தேன் அல்லது நான் மிகவும் திறமைசாலி. அத்தகைய எண்ணங்களைக் கொண்டிருப்பதுவும் சரீர உணர்வாகும். அத்தகைய ஆத்மாக்கள், தாங்களே தங்களையிட்டு வெட்கப்படும் வகையில் நடந்து கொள்கிறார்கள். இல்லாவிட்டால், உங்களைப் போல சந்தோஷம் மிக்கவர்கள் வேறு எவருமேயில்லை. இதனை நீங்கள் உங்கள் புத்தியில் வைத்திருந்தால், பிரகாசிப்பீர்கள். நிலையங்களில் மிகச்சிறந்த மகாராத்திகளும் குதிரைப் படையினர் சிலரும் காலாட்படை சிலரும் உள்ளனர். இதனைப் புரிந்து கொள்வதற்கு உங்களுக்கு ஒரு பரந்த, எல்லையற்ற புத்தி தேவையாகும். பல்வேறு வகையான ஆசிரியர்கள் இருக்கிறார்கள். சிலர் மிக நல்ல உதவியாளராக இருப்பதுடன், சேவை செய்யும் பொழுது, மிகவும் சந்தோஷமாகவும் இருக்கிறார்கள். உங்களுக்குப் போதை இருக்க வேண்டும். சேவை செய்யாது நீங்கள் என்ன அந்தஸ்தைப் பெறுவீர்கள்? குழந்தைகள் மீது தாயும் தந்தையுமானவர் மரியாதை கொண்டிருக்கிறார்;கள். ஆனால், நீங்களே உங்கள் மீது மரியாதை கொண்டிராது விட்டால், பாபாவினால் என்ன செய்ய முடியும்;? குழந்தைகளாகிய நீங்கள் தந்தையின் செய்தியைச் சுருக்கமாகக் கொடுக்க வேண்டும். அவர்களுக்குக் கூறுங்கள்: மன்மனபவ! எனத் தந்தை கூறுகின்றார். கீதையில் உள்ள சில வார்த்தைகள் மிகச்சரியானவை, ஆனால் அவை ஓரு சாக்கு மாவில் உள்ள ஒரு துளி உப்பு போன்றவை. இம் மனித உலகம் மிகவும் பெரியது. இவ்வுலகம் எவ்வளவு பெரியது என்றும், அதில் எத்தனை மனிதர்கள் உள்ளார்கள் என்றும், இதில் எதுவுமே எஞ்சியிருக்கப் போவதில்லை என்பதுவும் உங்கள் புத்தியில் பிரவேசிக்க வேண்டும். சில நாடுகளின் சுவடேனும் இல்லாமற் போய்விடும். நீங்கள் சுவர்க்கத்தின் அதிபதிகள் ஆகுகிறீர்கள் என்ற சந்தோஷத்தில் இரவுபகலாக நிலைத்திருங்கள். ஞானம் மிகவும் இலகுவானது. இதனை விளங்கப்படுத்துபவர் மிகவும் களிப்பூட்டுபவராக இருக்க வேண்டும். விளங்கப்படுத்துவதற்குப் பல்வேறு வழிமுறைகள் உள்ளன. தந்தை கூறுகின்றார்: நான் உங்களை மிகச்சிறந்த இராஜதந்திரி ஆக்குகின்றேன். ஓர் அரசாங்க தூதரே இராஜதந்திரி என அழைக்கப்படுகின்றார். குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்க வேண்டும்: ஓ! எல்லையற்ற தந்தை எங்களுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். இதனைக் கிரகித்து, பின்னர் தந்தையின் அறிமுகத்தைப் பிறருக்குக் கொடுங்கள். உங்களைத் தவிர, உலகிலுள்ள அனைவரும் நாஸ்திகர்கள். எவ்வாறாயினும், நீங்களும் வரிசைக்கிரமமானவர்களே. உங்களிற் சிலர் இன்னமும் நாஸ்திகர்களே; நீங்கள் தந்தையை நினைவு செய்வதில்லை. அவர்களே கூறுகிறார்கள்: பாபா, நான் உங்களை நினைவு செய்ய மறந்துவிட்டேன். நீங்கள் நாஸ்திகர்கள் என்பதே இதன் அர்த்தமாகும். உங்களை இளவரசர்கள் ஆக்குகின்ற அத்தகைய தந்தையை உங்களால் நினைவுசெய்ய முடியாதா? இதனைப் புரிந்துகொள்வதற்கு உங்களுக்கு ஒரு பரந்த, எல்லையற்ற புத்தி தேவை. தந்தை கூறுகின்றார்: நான் ஒவ்வொரு 5000 வருடங்களும் வருகிறேன். உங்கள் மூலமாகவே நான் எனது பணியை மேற்கொள்கிறேன். போர்வீரர்களாகிய நீங்கள் மிகவும் நல்லவர்கள். “தாய்மார்களுக்கு வந்தனங்கள்” என்பது உங்களையே குறிக்கிறது. நீங்களே பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்களாக இருந்தவர்களும், பின்னர் பூஜிப்பவர்கள் ஆகியவர்களும் ஆவீ;ர்கள். ஸ்ரீமத்தின் அடிப்படையில் நீங்கள் மீண்டும் ஒருமுறை பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்கள் ஆகுகின்றீர்கள். ஆதலால், குழந்தைகளாகிய நீங்கள் அமைதியான முறையில் சேவை செய்ய வேண்டும். எவ்வித அமைதியின்மையையும் நீங்கள் கொண்டிருக்கக் கூடாது. தனது ஒவ்வொரு நரம்பிலும் தீய ஆவிகளைக் கொண்டிருப்பவர் என்ன அந்தஸ்தைப் பெறுவார்? பேராசையும் ஒரு தீய ஆவியே. உங்கள் ஒவ்வொருவரினதும் நடத்தைகள் எவ்வாறு உள்ளதென பாபா தொடர்ந்தும் அவதானிக்கின்றார். பாபா உங்கள் போதையை அதிகரிக்கச் செய்கின்றார். சிலர் சேவை செய்வதில்லை; அவர்கள் சாதாரணமாக உண்டு, அருந்துகிறார்கள். ஆதலால், அவர்கள் பிறருக்கு 21 பிறவிகளுக்குச் சேவை செய்ய நேரிடும். சிலர் பணிப்பெண்களாகவும் வேலையாட்;களாகவும் ஆகுவார்கள். இறுதியில், அனைவரும் ஒரு காட்சியைப் (அவர்கள் என்னவாக ஆகுவார்கள்) பெறுவார்கள். சேவாதாரிகள் மாத்திரம் பாபாவின் இதயத்தை வெற்றி கொள்கிறார்;கள். பிறரை அமரத்துவ பூமியின் வாசிகளாக்குவதே, உங்கள் சேவையாகும். பாபா, நீங்கள் அதிகளவு தைரியத்தைக் கொண்டிருப்பதற்கும் நற்பண்புகளைக் கிரகிப்பதற்கும் தூண்டுகின்றார். சரீர உணர்வுடையவர்களால் நற்பண்புகளைக் கிரகிக்க முடியாது. தந்தையை நினைவுசெய்வதனால், நீங்கள் இவ் விலைமாதர் இல்லத்திலிருந்து சிவாலயத்திற்குச் (சிவனின் ஆலயம்) செல்கிறீர்கள் என்பதை நீ;ங்கள் அறிவீர்கள். எனவே, இப்பொழுது நீங்கள் அவ்வாறு ஆக வேண்டும். பாபா கடிதங்களில் எழுதுகின்றார்: அன்பிற்கினியவர்களே, பிரபுவினதும் அதிபதியினதும் ஆன்மீக இளவரசர்கள், இளவரசிகளே, நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றி, மகாராத்திகள் ஆகினால், நிச்சயமாக நீங்கள் இளவரசர்கள் ஆகுவீர்கள். இதுவே உங்கள் இலக்கும் இலட்சியமும் ஆகும். ஒரேயொரு உண்மையான தந்தையே அனைத்தையும் உங்களுக்கு மிகத்தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். சேவை செய்து பிறருக்குத் தொடர்ந்தும் நன்மையை ஏற்படுத்துங்கள். யோக சக்தியை நீங்கள் கொண்டிராத பொழுது, அந்தச் சந்தோஷம் இருக்காததுடன், “எனக்கு இது வேண்டும், அது வேண்டும்” போன்ற ஆசைகளையும் கொண்டிருக்கிறீர்கள். “சந்தோஷப் போஷாக்கைப் போல வேறு எந்தப் போஷாக்கும் இல்லை” எனக் கூறப்பட்டுள்ளது. இளவரசர், இளவரசிகளாகிய நீங்கள், பெருமளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். இதனை நீங்கள் கொண்டிராத பொழுது, பல்வேறு விடயங்கள் உங்களுக்குள் எழும். ஓ! தந்தை உங்களுக்கு உலக இராச்சியத்தைக் கொடுக்கின்றார். இதை விட மேலும் உங்களுக்கு என்ன வேண்டும்? அத்தகைய இனிய பாபாவிற்காக நீங்கள் என்ன சேவையைச் செய்கின்றீர்கள் என நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் இதயத்தை வினவ வேண்டும். தந்தை கூறுகின்றார்: பிரபு வந்துவிட்டார் என்ற செய்தியைத் தொடர்ந்தும் அனைவருக்கும் கொடுங்கள். உண்மையில் நீங்கள் அனைவரும் சகோதரர்களே. மக்கள் தாங்கள் அனைவரும் சகோதரர்கள் எனக் கூறிய பொழுதிலும், சகோதரர்கள், சகோதரிகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் அவர்கள் இதனைக் கூறுகின்றார்கள். இங்கு, தந்தை கூறுகின்றார்: சகோதரர்களாகிய நீங்கள் ஒரேயொரு தந்தையின் குழந்;தைகள். தந்தையே சுவர்க்கத்தை ஸ்தாபிப்பவர். அவர் சுவர்க்கத்தைக் குழந்தைகளாகிய உங்கள் மூலமே ஸ்தாபிக்கின்றார். அவர் சேவை செய்வதற்குப் பல வழிகளை விளங்கப்படுத்துகின்றார். நீங்களும் உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் விளங்கப்படுத்த வேண்டும். வெளிநாட்டில் உள்ள சேவை செய்கின்ற, குழந்தைகளைப் பாருங்கள், நாளுக்கு நாள், அனர்த்தங்கள் இடம்பெறுவதைப் பார்க்கின்ற மக்கள், தாங்கள் மரணிக்கும் முன்னர் தங்கள் ஆஸ்தியைப் பெற வேண்டும் என எண்ணுவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் உங்கள் நண்பர்களையும் உறவினர்களையும் ஈடேற்றுவதுடன், நீங்களும் தூய்மையாக இருக்கிறீர்கள். எவ்வாறாயினும், சகோதரத்துவ உணர்வைச் சதா பேணுவது சிரமமாகும். தந்தை உங்களுக்கு மிக நல்ல பட்டத்தைக் கொடுத்துள்ளார்: “பிரபுவினதும் அதிபதியினதும் குழந்தைகள்”. ஆதலால், நீங்கள் உங்களைச் சோதிக்க வேண்டும். நீங்கள் சேவை செய்யாது விpட்டால், நீங்கள் என்னவாக ஆகுவீர்கள்? எதனையேனும் சேகரித்துவிட்டு, பின்னர் எல்லாநேரமும் அதனைப் பயன்படுத்தி உண்பதில் முடித்துவிட்டால், அந்த ஆத்மா மேலும் கடனைப் பெறுகின்றார். சேவை செய்பவர்கள், தாங்கள் இந்தளவு கொடுத்துள்ளோம் அல்லது அதிலிருந்தே பிறர் பராமரிக்கப்படுகின்றார்கள் என ஒருபொழுதும் எண்ணக்கூடாது. இதனாலேயே உதவுபவர்களும் யக்ஞத்தினால் கவனிக்கப்படுகிறார்கள். அவரே உங்களுக்கு உணவளிப்பவர் என நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் உணவூட்டப்படுகின்றீர்கள், எனவே, நீங்கள் அவருக்குச் சேவை செய்ய வேண்டும். இது பெரியதொரு கணக்காகும். நீங்கள் அவர்களுக்கு உங்கள் மனம், வார்த்தைகள், செயல்களின் மூலம் சேவை செய்யாவிடின், பின்னர் எவ்வாறு நீங்கள் அச் சந்தோஷத்தைக் கொண்டிருக்க முடியும்? சிவபாபாவின் நினைவில் உணவைத் தயாரிப்பதால், நீங்கள் அதிலிருந்து சக்தியைப் பெறுகிறீர்கள். உங்கள் இதயத்தை வினவுங்கள்: நான் அனைவரையும் சந்;தோஷமடையச் செய்கிறேனா? மகாராத்திக் குழந்தைகள் பெருமளவு சேவை செய்கின்றார்கள். பாபா மெழுகுச் சீலையில் அச்சடித்த படங்களை வைத்திருப்பதனால், அவை கிழிய மாட்டாது. எங்குமுள்ள பாபாவின் குழந்தைகள், பணம் அனுப்புகிறார்கள். பாபா எங்கிருந்து பணத்தைப் பெறுவார்? எவ்வாறு இந்த நிலையங்கள் அனைத்தும் இயங்குகின்றன? குழந்தைகளே அவற்றை நடத்துகின்றார்கள். சிவபாபா கூறுகின்றார்: என்னிடம் ஒரு சிப்பியேனும் இல்லை. நீங்கள் மேலும் முன்னேறுகையில், மக்கள் வந்து கூறுவார்கள்: எங்கள் வீட்டைத் தயவுசெய்து பயன்படுத்துங்கள். எவ்வாறாயினும், “மிகவும் தாமதமாகிவிட்டது!” என நீங்கள் அப்பொழுது கூறுவீர்கள். தந்தையே ஏழைகளின் பிரபு. ஏழைகள் எங்கிருந்து பணத்தைப் பெற முடியும்? மக்களிற் சிலர் மில்லியன்களையும் மற்றும் சிலர் பல மில்லியன்களையும் உடையவர்கள். அவர்களுக்கு, இங்கு இது சுவர்க்கமாக உள்ளது. அது மாயையின் பகட்டு, அது அழிக்கப்படவுள்ளது. தந்தை கூறுகிறார்: முதலில் நீங்கள் பிரபுவினதும் அதிபதியினதும் குழந்தைகள் ஆகுகிறீர்கள், பின்னர் நீங்கள் இளவரசர்கள் ஆகவுள்ளீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் அதற்காக, போதுமானளவு சேவையும் செய்ய வேண்டும். இப்பொழுது நீங்கள் பிரபுவினதும் அதிபதியினதும் குழந்தைகள் என்பதுடன், நீங்கள் மீண்டும் இளவரசராகப் போகின்றீர்கள் என்னும் பெருஞ் சந்தோஷத்திலும் இருங்கள். நீங்கள் பலருக்குச் சேவை செய்துள்ள பொழுதே, நீங்கள் இளவரசர் ஆகுவீர்கள். உங்கள் சந்தோஷப் பாதரசம் அதிகளவு உயர்ந்திருக்க வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. ஒருபொழுதும் எவரையும் குழப்பமடையச் செய்யாதீர்கள் அல்லது நீங்களும் எவராலும் குழப்பம் அடையாதீர்கள். உங்கள் திறமையினாலோ அல்லது நீங்கள் செய்கின்ற எச்சேவையாலோ அகங்காரம் கொள்ளாதீர்கள். குழந்தைகளாகிய உங்கள் மீது தந்தை மரியாதை வைத்திருப்பது போன்று, நீங்களும் உங்கள் மீது மரியாதை கொண்டிருக்க வேண்டும்.

2. யோகசக்தியின் மூலம் உங்கள் ஆசைகள் அனைத்தையும் முடித்துவிடுங்கள், பிரபுவினதும் அதிபதியினதும் குழந்தைகளாகிய நீங்;கள் இளவரசர் ஆகப் போகின்றீர்கள் என்ற சந்தோஷத்தில்; எப்பொழுதும் போதையடைந்திருங்கள். எப்பொழுதும் சேவை செய்யும் பொழுது, அமைதியாக இருங்கள். உங்கள் நரம்புகளில் இன்னமும் இருக்கின்ற தீய ஆவி எதனையும் அகற்றி விடுங்கள்.

ஆசீர்வாதம்:
உங்கள் பிராமண வாழ்க்கைக்காக, தந்தையிடமிருந்து ஒளிக்கிரீடத்தை பெறுகின்ற மகாபாக்கியசாலி ஆத்மா ஆகுவீர்களாக.

சங்கமயுக பிராமண வாழ்க்கையின் சிறப்பியல்பு தூய்மையாகும். ஒவ்வொரு பிராமண ஆத்மாவும் தந்தையிடமிருந்து பெறுகின்ற ஒளிக்கிரீடம் தூய்மையின் அடையாளமாகும். இந்த ஒளிக்கிரீடமானது, இரத்தினங்கள் பதித்த கிரீடத்தையும் விட மேன்மையானதாகும். இந்தக் கிரீடமானது, அதிமேலான ஆத்மாவும், மகாத்மாவுமான இறை பர்கியத்தையுடைய ஆத்மாவிற்கான அடையாளமாகும். பாப்தாதா ஒவ்வொரு குழந்தையும் பிறப்பெடுத்தவுடனேயே ~~தூய்மையாக இருப்பீர்களாக!|| என்ற ஆசீர்வாதத்தை கொடுக்கின்றார். அதன் அடையாளமே ஒளிக்கிரீடமாகும்.

சுலோகம்:
எல்லையற்ற ஆர்வமின்மையின் மனோபாவத்தினால், தமது ஆசைகளினால் விரக்தியடைந்திருக்கின்ற ஆத்மாக்களின் எவ்விதமான விரக்தியையும் அகற்றுங்கள்.