06.09.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, அனைவருக்கும் சந்தோஷ தாமத்துக்கான பாதையை எவ்வாறு காட்டுவது என்ற ஒரேயொரு அக்கறையை மாத்திரமே நீங்கள் கொண்டிருக்க வேண்டும். இதுவே நீங்கள் அதிமேன்மையான மனிதர்கள் ஆகுகின்ற சங்கமயுகம் என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் எப்பொழுது ஒருவருக்கொருவர் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றீர்கள்? மனிதர்கள் எப்பொழுது ஒருவருக்கொருவர் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றனர்?பதில்:
ஒருவர் பிறக்கும் பொழுதும், ஒருவர் வெற்றியடையும் பொழுதும், ஒருவரின் திருமண நாளின் பொழுதும் அல்லது விசேடமான, முக்கிய தினத்திலும் மனிதர்கள் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றனர். எவ்வாறாயினும் அவை உண்மையான பாராட்டுக்கள் அல்ல. குழந்தைகளாகிய நீங்கள் தந்தைக்குச் சொந்தம் ஆகியதற்காக ஒருவருக்கொருவர் பாராட்டுகளைத் தெரிவிக்கின்றீர்கள். நீங்கள் கூறுகின்றீர்கள்: சகல துன்பங்களில் இருந்தும் விடுபட்டு, சந்தோஷ தாமத்துக்குச் செல்வதால், நாங்கள் மிகவும் பாக்கியசாலிகள். நீங்கள் உங்கள் இதயங்களில் சந்தோஷத்தை அனுபவம் செய்கின்றீர்கள்.ஓம் சாந்தி.
எல்லையற்ற தந்தை இங்கே அமர்ந்திருந்து எல்லையற்ற குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். இப்பொழுது எல்லையற்ற தந்தை யார் என்ற கேள்வி எழுகின்றது. பரம தந்தை என அழைக்கப்படுகின்ற ஒரேயொருவரே அனைவரதும் தந்தை என நீங்கள் அறிவீர்கள். ஒரு லௌகீகத் தந்தையை, பரமதந்தை என அழைக்க முடியாது. பரமதந்தை ஒருவரே இருக்கின்றார், சகல குழந்தைகளும் அவரை மறந்து விட்டார்கள். ஆகையினால், குழந்தைகளாகிய நீங்கள் துன்பத்தை நீக்கிச் சந்தோஷத்தை அருள்பவரான, பரமாத்மா பரமதந்தை, எவ்வாறு துன்பத்தை அகற்றுகின்றார் எனவும், பின்னர் நீங்கள் அமைதிக்கும், சந்தோஷத்துக்கும் செல்வீர்கள் எனவும் புரிந்து கொள்கின்றீர்கள். அனைவருமே சந்தோஷத்திற்குள் செல்வதில்லை. சிலர் அமைதியில் நிலைத்திருக்க, ஏனையோர் சந்தோஷத்திற்குச் செல்வார்கள். சிலர் தங்கள் பாகங்களைச் சத்தியயுகத்தில் இருந்தும், சிலர் திரேதாயுகத்தில் இருந்தும், ஏனையோர் துவாபரயுகத்தில் இருந்தும் நடிக்க ஆரம்பிக்கிறார்கள். நீங்கள் சத்தியயுகத்தில் வாழும்பொழுது, ஏனைய அனைவரும் முக்தி தாமத்தில் இருப்பார்கள். அதுவே கடவுளின் இல்லம் என்று அழைக்கப்படுகின்றது. முஸ்லீம்கள் தமது பிரார்த்தனைகளைச் செய்யும் பொழுது, அவர்கள் ஒன்றுகூடி கடவுளைப் (குதா) பிரார்த்திக்கின்றனர். எதற்காக? சொர்க்கத்திற்குச் செல்வதற்காகவா அல்லது கடவுளிடம் (அல்லா) செல்வதற்காகவா? கடவுளின் இல்லத்தைச் சொர்க்கம் என்று அழைக்க முடியாது. அங்கே, ஆத்மாக்கள் மௌனமாக இருக்கின்றனர். அங்கே சரீரங்கள் எதுவும் இல்லை. தாம் தமது சரீரங்களுடன் அன்றி, ஆத்மாக்களாகவே அல்லாவிடம் செல்ல முடியும் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். அல்லா யார் என்பதை அறியாமலே அவரை நினைவு செய்வதனால், ஒருவரால் தூய்மையாக முடியாது. இப்பொழுது, தந்தையே அமைதியும், சந்தோஷமும் என்ற ஆஸ்தியை அனைவருக்கும் கொடுக்கின்றார் என நீங்கள் எவ்வாறு மக்களுக்கு விளங்கப்படுத்த முடியும்? உலகில் எவ்வாறு அமைதி நிலவ முடியும் என்பதையும், உலகில் எப்பொழுது அமைதி நிலவியது என்பதையும் எவ்வாறு நீங்கள் அவர்களுக்கு விளங்கப்படுத்த முடியும்? சேவை செய்யும் குழந்தைகள், தாங்கள் செய்யும் முயற்சிக்கேற்ப வரிசைக்கிரமமாக இவ்விடயங்களைப் பற்றிச் சிந்திக்கின்றார்கள். வாய்வழித் தோன்றல்களான, பிராமணர்களாகிய உங்களுக்கு மாத்திரமே தந்தை தனது அறிமுகத்தைக் கொடுத்துள்ளார். உலக மக்கள் அனைவரும் நடிக்கின்ற பாகங்கள் பற்றியும் அவர் உங்களுக்குக் கூறியுள்ளார். இப்பொழுது நாங்கள் எவ்வாறு தந்தையினதும், படைப்பினதும் அறிமுகத்தை மக்களுக்குக் கொடுப்பது? தந்தை இப்பொழுது அனைவருக்கும் கூறுகின்றார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி என்னை நினைவு செய்தால், நீங்கள் கடவுளின் இல்லத்திற்குச் செல்வீர்கள். அனைவருமே சத்தியயுகத்திற்குச் செல்வதில்லை; அங்கே ஒரேயொரு தர்மம் மாத்திரமே உள்ளது. ஏனைய அனைவரும் அமைதி தாமத்தில் இருக்கின்றார்கள். இது பற்றிக் குழப்பம் அடைவது என்ற கேள்வி இல்லை. மக்கள் அமைதியை வேண்டுகின்ற பொழுதிலும், அதனைத் தந்தையாகிய கடவுளான, அல்லாவின் வீட்டில், மாத்திரமே பெற முடியும். ஆத்மாக்கள் அனைவரும் அமைதி தாமத்திலிருந்தே வருகின்றார்கள். நாடகம் முடிவுக்கு வரும்பொழுது, அனைவரும் அங்கே திரும்புவார்கள். தந்தை வந்து இந்தத் தூய்மையற்ற உலகிலிருந்து அனைவரையும் திரும்பவும் வீட்டுக்கு அழைத்துச் செல்கின்றார். நீங்கள் இப்பொழுது அமைதி தாமத்துக்குச் சென்று, பின்னர் சந்தோஷ தாமத்துக்குச் செல்வீர்கள் என்பது இப்பொழுது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. இதுவே அதிமேன்மையான சங்கமயுகம். “மேன்மையான மனிதர்கள்” என்றால் அதிமேலான மனிதர்கள் என்று அர்த்தம். ஓர் ஆத்மா தூய்மை ஆகும்வரை, அவரால் மேன்மையான மனிதர் ஆகமுடியாது. தந்தை இப்பொழுது கூறுகின்றார்: என்னை நினைவுசெய்து, சக்கரத்தைப் புரிந்து கொள்வதுடன், தெய்வீகக் குணங்களையும் கிரகியுங்கள். இந்நேரத்தில் மனிதர்கள் அனைவரது நடத்தைகளும் சீரழிந்துள்ளன. புதிய உலகில் அவர்களின் நடத்தைகள் முதற்தரமானவை. பாரத மக்களே மேன்மையான நடத்தைகள் உடையவர்கள் ஆகுகிறார்கள். குறைவான நடத்தைகளை உடையவர்கள், மேன்மையான நடத்தைகள் உடையவர்களை வணங்குவதுடன், அவர்களுடைய நடத்தைகள் பற்றியும் பேசுகின்றார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே இதைப் புரிந்து கொள்கின்றீர்கள். பிறருக்கு நீங்கள் எவ்வாறு விளங்கப்படுத்துவீர்கள்? ஆத்மாக்களின் மூன்றாவது கண்ணைத் திறப்பதற்கு, எந்த இலகுவான வழிமுறையை நீங்கள் உருவாக்க வேண்டும்? பாபா என்ற ஆத்மாவில் ஞானம் உள்ளது. மக்கள் தங்களிடம் ஞானம் உள்ளதாகக் கூறுகின்றார்கள். அது சரீர உணர்வாகும். இங்கே நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகவேண்டும். சந்நியாசிகள் சமயநூல்கள் பற்றிய ஞானத்தைக் கொண்டுள்ளார்கள். தந்தை வந்து ஞானத்தைக் கொடுக்கும் பொழுதே, நீங்கள் தந்தையின் ஞானத்தைக் கொண்டிருக்க முடியும். இதை யுக்தியுடன் விளங்கப்படுத்துங்கள். அந்த மக்கள் கிருஷ்ணரைக் கடவுளாகக் கருதுகின்றார்கள்; அவர்களுக்கு கடவுளைத் தெரியாது. ரிஷிகளும், முனிவர்களும் தமக்குத் தெரியாது எனக் கூறிய போதிலும், மனிதர்கள் கடவுளாக இருக்க முடியாது என்பதை அவர்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அசரீரியான தந்தை மாத்திரமே படைப்பவர், ஆனால் அவர் எவ்வாறு படைக்கின்றார்? அவரது பெயர், ரூபம், இருப்பிடம், நேரம் போன்றவை என்ன? அவர்கள் அவற்றை அறியாததால், அவர் பெயருக்கும், ரூபத்துக்கும் அப்பாற்பட்டவர் எனக் கூறுகின்றார்கள். எதுவுமே பெயரும், ரூபமும் இல்லாதிருக்க முடியாது என்றும், அது சாத்தியம் இல்லை என்றும் உணர முடியாதளவுக்கு, அவர்கள் விவேகம் அற்றுள்ளார்கள். கடவுள் கற்களிலும், கூழாங்கற்களிலும் அல்லது மீனில், முதலையில் இருக்கின்றார் என அவர்கள் கூறுவதாயின், அதுவும் பெயரும், ரூபமுமே ஆகும். அவர்கள் சிலநேரங்களில் ஒன்றையும், வேறொரு நேரத்தில் வேறொன்றையும் கூறுகின்றார்கள். மக்களுக்கு எவ்வாறு விளங்கப்படுத்துவது எனக் குழந்தைகளாகிய நீங்கள் இரவுபகலாக அதிகளவு சிந்திக்க வேண்டும். நீங்கள் சாதாரண மனிதரிலிருந்து, தேவர்கள் ஆகுகின்ற அதிமேன்மையான சங்கமயுகம் இதுவாகும். மனிதர்கள் தேவர்களின் விக்கிரகங்களை வணங்குகின்றார்கள். மனிதர்கள், மனிதர்களின் சிலைகளை வணங்குவதில்லை. மனிதர்கள் கடவுளை அல்லது தேவர்களையே வணங்க வேண்டும். முஸ்லீம்களும் அல்லாவைப் பிரார்த்திக்கின்றனர், அவர்கள் அல்லாவை நினைவு செய்கின்றார்கள். அவர்களால் அல்லாவை அடைய முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். அல்லாவை எவ்வாறு அடைவது என்பதே பிரதான விடயம். அவ்வாறாயின், எவ்வாறு அல்லாவால் அந்தப் புதிய உலகை உருவாக்க முடியும்? எவ்வாறு இந்த விடயங்கள் அனைத்தையும் நீங்கள் விளங்கப்படுத்துவீர்கள்? இதற்குக் குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானக்கடலைக் கடைய வேண்டும். தந்தை இந்த ஞானக் கடலைக் கடைய வேண்டியதில்லை. தந்தை இந்த ஞானக் கடலைக் கடையும் வழிமுறைகளைக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்நேரத்தில் கலியுகத்திலுள்ள அனைவரும் தமோபிரதானாகவே இருக்கிறார்கள். ஏதோ ஒரு காலத்தில் சத்தியயுகம் நிச்சயமாக இருக்கும். சத்தியயுகமே தூய்மையானது எனக் கூறப்படுகிறது. தூய்மையும், தூய்மையின்மையும் உள்ளன. தங்கத்தில் கலப்படம் கலந்துள்ளது. ஆத்மாக்களும் முதலில் சதோபிரதானாக இருக்கின்றார்;கள், பின்னரே அவர்களில் கலப்படம் கலக்கப்பட்டது. ஆத்மாக்களும் முதலில் தூய்மையாகவும், சதோபிரதான் ஆகவும் இருந்தார்கள். ஆத்மாக்கள் தமோபிரதான் ஆகும்பொழுதே தந்தை வரவேண்டி உள்ளது. தந்தையே வந்து அந்த சதோபிரதானான சந்தோஷ உலகை உருவாக்குகின்றார். அந்த சந்தோஷ உலகில் பாரத மக்கள் மாத்திரமே இருக்கின்றார்கள். ஏனைய அனைவரும் அமைதி தாமத்தில் இருக்கின்றார்கள். அமைதி தாமத்தில் உள்ள அனைவரும் தூய்மையானவர்கள். அதன் பின்னர் அவர்கள் இங்கே தொடர்ந்தும் கீழிறங்கி வரும்பொழுதே, மெதுவாக அவர்கள் தூய்மை அற்றவர்கள் ஆகுகின்றார்கள். ஒவ்வொரு மனிதரும் நிச்சயமாகச் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளுக்கூடாகச் செல்கின்றார். அவர்கள் கடவுளின் இல்லத்துக்குச் செல்ல முடியும் என அவர்கள் அனைவருக்கும் எவ்வாறு நீங்கள் கூறுவீர்கள்? கடவுள் பேசுகிறார்: சரீர உறவுகள் அனைத்தையும் துறந்து, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். நீங்கள் என்னை நினைவுசெய்யும் பொழுது, ஐந்து தீய ஆவிகளும் உங்களிடம் இருந்து அகற்றப்படுகின்றது. குழந்தைகளாகிய நீங்கள் இரவுபகலாக இந்த அக்கறையையே கொண்டிருக்க வேண்டும். தந்தையும் அக்கறையைக் கொண்டுள்ளார், இதனாலேயே அவர் அனைவரையும் சந்தோஷம் ஆக்குவதற்காக இங்கே வருவதற்கான எண்ணத்தைக் கொண்டிருந்தார். அத்துடன் குழந்தைகளாகிய நீங்கள் அவரது உதவியாளர்கள் ஆகவேண்டும். தந்தையால் தானாகவே தனியாக என்ன செய்ய முடியும்? ஆகவே இந்த ஞானக்கடலைக் கடையுங்கள். இதுவே அதிமேன்மையான சங்கமயுகம் என்பதை மக்கள் விரைவாகப் புரிந்து கொள்ளக் கூடியவாறு எந்த வழிமுறையை நீங்கள் உருவாக்க வேண்டும்? இந்நேரத்தில் மாத்திரமே மக்களால் அதிமேன்மையானவர்கள் ஆகமுடியும். முதலில் அவர்கள் மேன்மையானவர்களாக இருக்கின்றார்கள், பின்னர் அவர்கள் வீழ்கின்றார்கள்; அவர்கள் உடனடியாகவே வீழ்வதில்லை. அவர்கள் கீழே இறங்கியவுடனே தமோபிரதான் ஆகுவதில்லை. முதலில் அனைத்துமே சதோபிரதானாக இருந்து, பின்னர் சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்கின்றது. குழந்தைகளாகிய நீங்கள் பலவிதமான கண்காட்சிகளை நடாத்துகின்றீர்கள். இருப்பினும் மக்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. ஆகையினால் வேறு என்ன வழிமுறைகளை நீங்கள் உருவாக்க வேண்டும்? நீங்கள் பல்வேறு வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். உங்களுக்கு இதற்கு நேரம் கொடுக்கப்பட்டுள்ளது. எவருமே உடனடியாகவே முழுமையாகவும், சம்பூரணமாகவும் ஆகமுடியாது. சந்திரனும்கூட படிப்படியாகவே சம்பூரணம் அடைகின்றது. நாங்களும் படிப்படியாகவே தமோபிரதான் ஆகியதாலேயே எங்களுக்குச் சதோபிரதானாக ஆகுவதற்கும் காலம் எடுக்கின்றது. அது உயிரற்றது, ஆனால் இதுவோ உயிருள்ளது. எனவே நாங்கள் எவ்வாறு விளங்கப்படுத்துவது? நீங்கள் முஸ்லீம்களின் முல்லாக்களுக்கும் (மசூதியின் தலைவர்கள்), அவர்கள் ஏன் பிரார்த்தனை (நமாஸ்) செய்கின்றார்கள் என்றும், யாருடைய நினைவில் அதைச் செய்கின்றார்கள் என்றும் விளங்கப்படுத்த வேண்டும். நீங்கள் இந்த விடயங்களைக் கடைய வேண்டும். ஜனாதிபதி போன்றவர்கள் பெரிய, முக்கியமான நாட்களில் மசூதிகளுக்குச் செல்கின்றார்கள். அவர்கள் சென்று சிரேஷ்டர்களைச் சந்திக்கின்றார்கள். சிறிய மசூதிகளும் உள்ளன, ஈகைப் பண்டிகைக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்கு அவர்கள் செல்கின்ற ஒரு பிரதான மசூதியும் இருக்கின்றது. இப்பொழுது, நாங்கள் அனைவரும் சகல வகையான துன்பத்தில் இருந்தும் விடுபட்டு, சந்தோஷ உலகிற்குச் செல்லவுள்ள பொழுதே பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட வேண்டும். நாங்கள் உங்களுக்கு நல்ல செய்தியைக் கொடுக்கின்றோம். ஒருவர் எதிலாவது வெற்றி அடையும் பொழுது, பாராட்டப்படுகின்றார். தம்பதிகள் திருமணம் செய்யும் பொழுதும், அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றது. “நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பீர்களாக” நீங்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு பாராட்டுக்களைத் தெரிவிக்கலாம் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். இந்நேரத்தில், நாங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து முக்தியும், ஜீவன்முக்தியும் எனும் ஆஸ்தியைப் பெறுகின்றோம். இதற்காக நீங்கள் பாராட்டுக்களைப் பெறமுடியும். தந்தை கூறுகின்றார்: உங்களுக்குப் பாராட்டுக்கள்! நீங்கள் 21 பிறவிகளுக்குப் பல்கோடீஸ்வரர்கள் ஆகுகின்றீர்கள். மக்கள் அனைவரும் தந்தையிடம் இருந்து தங்கள் ஆஸ்தியைக் கோரி தந்தையிடம் இருந்து எவ்வாறு பாராட்டுக்களைப் பெறமுடியும்? நீங்கள் இப்பொழுது இவை அனைத்தையும் அறிவீர்கள், ஆனால் மக்களால் உங்களைப் பாராட்ட முடியாது; அவர்களுக்கு உங்களைத் தெரியாது. அவர்கள் உங்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்கும் பொழுது, அவர்களும் பாராட்டுக்களைப் பெறத் தகுதியானவர்களாக முடியும். நீங்கள் மறைமுகமானவர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் பாராட்டுக்கள் தெரிவிக்கின்றீர்கள்: பாராட்டுக்கள்! நாங்கள் இப்பொழுது எல்லையற்ற தந்தைக்குச் சொந்தமானவர்கள். நீங்கள் மிகவும் பாக்கியசாலிகள்! ஒருவர் ஓர் அதிர்ஷ்ட இலாபச்சீட்டை வெல்லும் பொழுது அல்லது அவரது குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்கும் பொழுது, பாராட்டப்படுகின்றார். ஒரு குழந்தை தனது பரீட்சையில் சித்தி எய்தும் பொழுது, பாராட்டப்படுகின்றார். நீங்கள் உங்கள் இதயத்தில் ஆழமான சந்தோஷத்தைக் கொண்டிருக்கின்றீர்கள். நீங்கள் உங்களையே பாராட்டுகின்றீர்கள். நாங்கள் எவரிடமிருந்து ஆஸ்தியைப் பெறுகின்றோமோ, அந்தத் தந்தையைக் கண்டு கொண்டோம். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் சீரழிந்து விட்டீர்கள், இப்பொழுது நீங்கள் சற்கதியைப் பெறுகின்றீர்கள். ஒவ்வொருவரும் ஒரேவகையான பாராட்டுக்களையே பெற்றார்கள். இறுதியில் அனைவரும் அறிந்து கொள்வார்கள். கீழான நிலையில் உள்ளவர்கள் அதிமேலான நிலையில் உள்ளவர்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிப்பார்கள். நீங்கள் சூரிய வம்ச குலத்தின் சக்கரவர்த்திகள், சக்கரவர்த்தினிகள் ஆகுகின்றீர்கள். குலத்தில் கீழான நிலையில் இருப்பவர்கள், வெற்றி மாலையின் மணிகள் ஆகுபவர்களுக்குப் பாராட்டுக்களைத் தெரிவிப்பார்கள். சித்தி அடைந்தவர்கள் பாராட்டப்படுவார்கள்; அவர்கள் பூஜிக்கப்படுவார்கள். உயர்ந்த அந்தஸ்தைப் பெற்ற ஆத்மாக்களுக்குப் பாராட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன. அந்த ஆத்மாக்கள் பின்னர் பக்தி மார்க்கத்தில் பூஜிக்கப்படுவார்கள். அவர்களை ஏன் தாங்கள் பூஜிக்கின்றனர் என மக்கள் அறியார்கள். ஆகவே, எவ்வாறு பிறருக்கு விளங்கப்படுத்தலாம் என்ற ஒரே அக்கறையையே குழந்தைகளாகிய நீங்கள் கொண்டிருக்க வேண்டும். நாங்கள் தூய்மையாகி விட்டதால், எவ்வாறு பிறரையும் தூய்மை ஆக்கலாம்? உலகம் மிகப் பெரியது. ஒவ்வொரு வீட்டையும் செய்தி சென்றடைய நாங்கள் என்ன செய்ய வேண்டும்? துண்டுப்பிரசுரங்கள் போடப்படும்பொழுது, அனைவரும் அதைப் பெற்றுக் கொள்வதில்லை. ஒவ்வொருவருக்கும் அவர்களின் கையில் செய்தி கொடுக்கப்பட வேண்டும். ஏனெனில் எவ்வாறு தந்தையை அடைவது என எவருமே அறியார். அனைத்துப் பாதைகளும் கடவுளிடம் இட்டுச் செல்லும் என அவர்கள் கூறுகின்றார்கள். எவ்வாறாயினும் தந்தை கூறுகின்றார்: நீங்கள் பிறவிபிறவியாகப் பூஜித்து, தான தர்மங்கள் செய்தீர்கள், இருப்பினும் நீங்கள் பாதையைக் கண்டுபிடிக்கவில்லை. அவை அனைத்தும் அநாதியாகவே தொடர்ந்து வருவதாக அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அவை எப்பொழுது ஆரம்பித்தன? ‘அநாதியானது’ என்பதன் அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. நீங்களும் கூட, நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப வரிசைக்கிரமமாகவே புரிந்து கொள்கின்றீர்கள். இந்த ஞானத்தின் வெகுமதியான சந்தோஷம் 21 பிறவிகளுக்கு நீடிக்கின்றது, அதன் பின்னரே துன்பம் உள்ளது. அதிகளவு பக்தி செய்துள்ளவர்களின் கணக்குகளும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்தப்படுகின்றன. இந்த விபரங்கள் அனைத்தும் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் விளங்கப்படுத்தப்படுவதில்லை. நாங்கள் என்ன செய்ய வேண்டும்? பத்திரிகைகளில் அச்சிடலாமா? அதற்குக் காலம் எடுக்கும். அனைவரும் அவ்வளவு விரைவாகச் செய்தியைப் பெற மாட்டார்கள். அனைவரும் முயற்சி செய்ய ஆரம்பித்தால், அப்பொழுது அவர்கள் அனைவரும் சுவர்க்கத்துக்குச் செல்வார்கள்; அது அவ்வாறிருக்க முடியாது. நீங்கள் இப்பொழுது சுவர்க்கத்திற்காக முயற்சி செய்கின்றீர்கள். எமது தர்மத்துக்குச் சொந்தமானவர்களை எவ்வாறு மீண்டும் வெளிப்படச் செய்ய முடியும்? யார் மாற்றப்பட்டுள்ளார்கள் (மதமாற்றம் செய்யப்பட்டார்கள்) என நீங்கள் எவ்வாறு அறிந்துகொள்ள முடியும்? இந்து சமயத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், ஆதியில் தேவ தர்மத்துக்கு உரியவர்கள். இதை எவருமே அறியவும் மாட்டார்கள். உறுதியான இந்துக்கள் தங்கள் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்தில் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். இந்நேரத்தில் அனைவரும் தூய்மை அற்றவர்கள். “ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!” என அவர்கள் அழைக்கின்றார்கள். அவர்கள் அசரீரியானவரை வந்து தங்களைத் தூய உலகிற்கு அழைத்துச் செல்லுமாறு அழைக்கின்றார்கள். எவ்வாறு அவர்கள் அவ்வளவு பெரிய இராச்சியத்தைக் கோரினார்கள்? இந்நேரத்தில் அவர்கள் தோற்கடித்து, பெறுவதற்கு, பாரதத்தில் எந்த இராச்சியமும் இல்லை. போராடுவதால், அவர்கள் தங்களுடைய இராச்சியத்தைப் பெறுவதில்லை. எவ்வாறு சாதாரண மனிதர்கள் தேவர்களாக முடியும் என எவருமே அறியார். நீங்கள் இப்பொழுது இதைத் தந்தையிடம் இருந்து அறிந்துள்ளீர்கள். மற்றவர்களும் முக்தியையும், ஜீவன்முக்தியையும் அடையும் வகையில் இதை நாங்கள் எவ்வாறு அவர்களுக்குக் கூறமுடியும்? அவர்களை முயற்சி செய்யத் தூண்டுவதற்கு ஒருவர் இருக்க வேண்டும். அதனால், அவர்களால் அறிந்துகொண்டு, அல்லாவையும் நினைவுசெய்ய முடியும். ஈகைப் பண்டிகையின் பொழுது ‘நீங்கள் யாருக்கு வாழ்த்துத் தெரிவிக்கின்றீர்கள்’ என அவர்களிடம் வினவுங்கள். நீங்கள் அல்லாவிடம் செல்கின்றீர்கள் என்ற உறுதியான நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா? உங்களுக்கு அதில் அதிகளவு சந்தோஷம் இருக்கின்றது. நீங்கள் பல வருடங்களாக அதைச் செய்கின்றீர்கள். நீங்கள் என்றும் கடவுளிடம் செல்வீர்களா, இல்லையா எனக் குழப்பம் அடைந்துள்ளீர்கள். நாங்கள் ஏன் கற்கின்றோம்? அல்லா மாத்திரமே அதிமேலானவர். அவர்களிடம் கூறுங்கள்: நீங்களும் அல்லாவின் குழந்தைகளான, ஆத்மாக்களே ஆவீர்கள். அல்லாவிடம் செல்வதற்கே ஆத்மாக்கள் ஆசைப்படுகின்றார்கள். முதலில் தூய்மையாக இருக்கின்ற ஆத்மாக்கள் இப்பொழுது தூய்மை அற்றவர்கள் ஆகிவிட்டார்கள். இந்த உலகை இப்பொழுது சுவர்க்கம் என அழைக்க முடியாது. ஆத்மாக்கள் அனைவரும் தூய்மை அற்றவர்கள். எவ்வாறு அவர்கள் அல்லாவின் வீட்டிற்குச் செல்லும் வகையில் தூய்மையாக முடியும்? அங்கே விகாரமான ஆத்மாக்கள் இருக்க மாட்டார்கள்; அவர்கள் விகாரம் அற்றவர்களாக இருக்க வேண்டும். ஆத்மாக்கள் சடுதியாகச் சதோபிரதானாக முடியாது. இந்த விடயங்கள் அனைத்தையும் பற்றி சிந்தித்துப் பார்த்துக் கடைய வேண்டும். பாபா (பிரம்மாபாபா) இந்த ஞானக்கடலைக் கடைவதால் அவரால் உங்களுக்கு விளங்கப்படுத்த முடிகின்றது. நீங்களும் பிறருக்கு விளங்கப்படுத்துவதற்கு வழிகளை உருவாக்க வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. இங்கே வந்து குழந்தைகளை அவர்களின் துன்பத்திலிருந்து விடுவித்து, அவர்களைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் தந்தைக்கு ஏற்பட்டது. அதேபோன்று நீங்கள் தந்தையின் உதவியாளர்கள் ஆகவேண்டும். அத்துடன் ஒவ்வொரு வீட்டிற்கும் செய்தி சென்று அடைவதற்கான வழிகளைப் பற்றியும் நீங்கள் சிந்திக்க வேண்டும்.2. அனைவரிடம் இருந்தும் பாராட்டுகளைப் பெற வேண்டுமாயின், வெற்றி மாலையின் ஒரு மணி ஆகுவதற்கான முயற்சியை செய்யுங்கள். பூஜிக்கத் தகுதிவாய்ந்தவர் ஆகுங்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் கரன்ஹார் (செய்பவர்) மற்றும் கரவன்ஹார் (செய்வதற்குத் தூண்டுபவர்) ஆக இருப்பதன் விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் ஒளிக்கிரீடத்தை அணிவீர்களாக.நான் ஒரு கருவி, ஒரு கர்மயோகி, கரன்ஹார் (செய்பவர்). தந்தையே கரவன்ஹார் (செய்யத் தூண்டுபவர்) ஆவார். இந்த இயல்பான விழிப்புணர்வு உங்களுக்கு இருக்கும்போது, நீங்கள் சதா ஒளிக்கிரீடத்தைக் கொண்டிருப்பதுடன் ஒரு கவலையற்ற சக்கரவர்த்தியாகவும் ஆகுவீர்கள். தந்தையும் நானும் மட்டுமே, மூன்றாவது நபர் கிடையாது. இதை இலகுவாக அனுபவம் செய்யும்போது, அது உங்களை ஒரு கவலையற்ற சக்கரவர்த்தி ஆக்கும். இத்தகைய சக்கரவர்த்திகள் ஆகுபவர்கள், மாயையை வென்றவர்களாகவும் தமது பௌதீகப் புலன்களை வென்றவர்களாகவும் சடப்பொருளை வென்றவர்களாகவும் ஆகுவார்கள். எவ்வாறாயினும், தவறுதலாகவேனும், ஒருவர் வீணான உணர்வுகள் மற்றும் நோக்கங்களின் சுமையைத் தனக்குள் வைத்துக் கொண்டால், ஒரு கிரீடத்திற்குப் பதிலாக, தனது தலையில் கவலைகளின் பல கூடைகளை வைத்திருப்பார்.
சுலோகம்:
சகல பந்தனங்களில் இருந்தும் விடுபடுவதற்கு, சரீர உறவுகளின் மீதுள்ள பற்றுகள் அனைத்தையும் அழித்தவர் ஆகுங்கள்.அவ்யக்த சமிக்கை: இப்போது அன்பெனும் அக்கினியை ஏற்றி, உங்களின் யோகத்தை எரிமலை ஆக்குங்கள். உங்களின் எண்ணங்கள் அனைத்தும் மௌனமாகி, ‘பாபாவும் நானும்’ என்ற ஒரேயொரு எண்ணம் மட்டும் இருக்கும்போது உங்களின் யோகம் சக்திவாய்ந்தது ஆகிவிடும். தந்தையைச் சந்திக்கும் அனுபவத்தைத் தவிர வேறு எண்ணங்கள் அனைத்தும் மறைந்துவிடும். அப்போது மட்டுமே உங்களின் நினைவானது அக்கினியைப் போல் சக்திவாய்ந்தது என்று உங்களால் சொல்ல முடியும். அதன் மூலமே மாற்றம் இடம்பெற முடியும்.
ழூழூழூஓம் சாந்திழூழூழூ