07.07.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    11.11.20     Om Shanti     Madhuban


உங்களின் முழுமைநிலையின் நெருக்கத்தினால், வெளிப்படுத்துகைக்கான மேன்மையான நேரத்தை நெருக்கமாகக் கொண்டுவாருங்கள்.


இன்று, பாப்தாதா தனது அதிபுனிதமான, அதிர்ஷ்டம்நிறைந்த, இனிமையிலும் இனிமையான குழந்தைகளைப் பார்க்கிறார். அவ்வப்போது, அதிபுனிதமான ஆத்மாக்கள் உலகிற்கு வந்து கொண்டிருக்கிறார்கள். நீங்களும் அதிபுனிதமானவர்களே. ஆனால். மேன்மையான ஆத்மாக்களான நீங்கள், பஞ்சபூதங்களை (இயற்கை) வென்றவர்களாக ஆகுவதுடன், பஞ்சபூதங்களை சதோபிரதானமாகவும் ஆக்குகிறீர்கள். உங்களின் தூய்மைச்சக்தியானது, பஞ்சபூதங்களையும் சதோபிரதானாகவும் தூய்மையானதாகவும் ஆக்குகிறது. இதனாலேயே, ஆத்மாக்களான நீங்கள் தூய பஞ்சபூதங்களால் ஆன தூய சரீரங்களைப் பெறுகிறீர்கள். உங்களின் தூய சக்தியானது, சகல உயிரற்றவற்றையும் ஜீவராசிகளையும் தூயதாக்குகிறது. இதனாலேயே, நீங்களும் தூய சரீரங்களைப் பெறுகிறீர்கள். ஆத்மாக்கள் தூய்மையானவர்கள். சரீரங்களும் தூய்மையானவை. பஞ்சபூதங்களால் ஆக்கப்பட்ட சகல சௌகரியங்களும் சதோபிரதான் ஆனவை, தூய்மையானவை. இதனாலேயே, நீங்களே உலகில் அதிபுனிதமானவர்கள் ஆவீர்கள். நீங்கள்தான் அதிபுனிதமானவர்களா? நீங்கள் உங்களை உலகிலேயே அதிபுனிதமான ஆத்மாக்களாகக் கருதுகிறீர்களா? நீங்கள் அதியுயர்ந்தவர்களும் ஆவீர்கள். ஏன் நீங்கள் அதியுயர்ந்தவர்கள்? ஏனென்றால், நீங்கள் இறைவனை அதிமேலானவர் என இனங்கண்டுள்ளீர்கள். நீங்கள் அதிமேலான தந்தையின் மூலம், அதிமேலான ஆத்மாக்கள் ஆகியுள்ளீர்கள். உங்களின் சாதாரணமான விழிப்புணர்வு, மனோபாவம், பார்வை, செயல்கள் அனைத்தும் மாறிவிட்டன. நீங்கள் மேன்மையான விழிப்புணர்வின், மேன்மையான மனோபாவத்தின், மேன்மையான பார்வையின் சொரூபங்கள் ஆகிவிட்டீர்கள். நீங்கள் யாராவது ஒருவரைச் சந்திக்கும்போது, என்ன மனோபாவத்துடன் அவரைச் சந்திக்கிறீர்கள்? நீங்கள் அவர்களை சகோதரத்துவ மனோபாவத்துடன், ஆத்ம உணர்வுப் பார்வையுடன், நலம்விரும்பும் உணர்வுகளுடன், இறைகுடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற உணர்வுகளுடனும் பார்க்கிறீர்கள். எனவே, நீங்களே அதிமேலானவர்கள், இல்லையா? நீங்கள் மாறிவிட்டீர்கள்தானே? எனவே, நீங்கள் எவ்வளவு ‘அதிர்ஷ்டசாலிகள்’? எந்தவொரு சோதிடரும் உங்களின் பாக்கிய ரேகைகளை வரையவில்லை. ஆனால். பாக்கியத்தை அருள்பவரே உங்களின் பாக்கிய ரேகைகளை வரைந்துள்ளார். அவர் எவ்வளவு கால உத்தரவாதத்தை அளித்துள்ளார்? உங்களுக்கு 21 பிறவிகளுக்கான பாக்கிய ரேகைகளின அழியாத உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு பிறவிக்குரியது அல்ல. ஆனால், 21 பிறவிகளுக்கு எந்தவிதமான துன்பத்தின் அல்லது அமைதியின்மையின் அனுபவம் இருக்காது. எப்போதும் சந்தோஷம் இருக்கும். வாழ்க்கையில் மூன்று விடயங்கள் தேவைப்படுகின்றன: ஆரோக்கியம், செல்வம், சந்தோஷம். நீங்கள் இவை மூன்றையும் தந்தையிடமிருந்து ஓர் ஆஸ்தியாகப் பெற்றுள்ளீர்கள். உங்களுக்கு 21 பிறவிகளுக்கான உத்தரவாதம் உள்ளதா? நீங்கள் எல்லோரும் அந்த உத்தரவாதத்தைப் பெற்றுள்ளீர்களா? பின்னால் அமர்ந்திருப்பவர்கள் அந்த உத்தரவாதத்தைப் பெற்றுள்ளீர்களா? நீங்கள் எல்லோரும் உங்களின் கைகளை உயர்த்துகிறீர்கள். மிகவும் நல்லது! ஒரு குழந்தை ஆகுவதென்றால், தந்தையிடமிருந்து ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளுதல் என்று அர்த்தம். நீங்கள் ஒரு குழந்தை ஆகுகிறீர்கள் என்பதல்ல. நீங்கள் இன்னமும் இப்படி ஆகுகிறீர்களா? நீங்கள் ஒரு குழந்தை ஆகுகிறீர்களா அல்லது இப்படி ஆகிவிட்டீர்களா? நீங்கள் ஒரு குழந்தை ஆகவேண்டும் என்பதல்ல. நீங்கள் பிறந்தவுடனேயே அப்படி ஆகிவிடுகிறீர்கள். நீங்கள் பிறந்தவுடனேயே, தந்தையின் ஆஸ்திக்கான உரிமையைப் பெற்றுக் கொள்கிறீர்கள். எனவே, நீங்கள் இப்போது தந்தையினூடாக இத்தகைய மேன்மையான பாக்கியத்தைப் பெற்றுள்ளீர்கள். அத்துடன் நீங்கள் பணக்காரரும் ஆவீர்கள். நீங்கள் பிராமண ஆத்மாக்கள். ஷத்திரியர்கள் அல்ல. ஆனால் பிராமணர்கள். பிராமண ஆத்மாக்கள் நம்பிக்கையுடன், ‘நான் ஒரு மேன்மையான ஆத்மா’ என அனுபவம் செய்கிறார்கள். நான் இன்னார் என்பதல்ல. நானே உலகில் பெரும் செல்வந்தராக இருக்கும் ஆத்மா ஆவேன். நீங்கள் பிராமணர்களாக இருப்பதனால், உலகில் பெரும் செல்வந்தர்களாக இருக்கிறீர்கள். ஏனென்றால் இறைவனின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் பிராமண ஆத்மாக்கள் ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன்களைப் பெறுகிறார்கள். எனவே, நாள் முழுவதும் நீங்கள் எத்தனை அடிகளை எடுத்து வைக்கிறீர்கள்? இதைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்! ஒவ்வோர் அடியிலும் பலமில்லியன்களை நீங்கள் பெறுகிறீர்கள். எனவே, நாள் முழுவதும் எத்தனை பலமில்லியன்களை நீங்கள் பெறுவீர்கள்? நீங்கள் தந்தையினூடாக இத்தகைய ஆத்மாக்கள் ஆகியுள்ளீர்கள். ‘பிராமண ஆத்மாவான நான் என்னவாக இருக்கிறேன்’ என நினைப்பது பாக்கியமாகும். ஆகவே, இன்று பாப்தாதா உங்கள் ஒவ்வொருவரின் நெற்றியிலும் பாக்கிய நட்சத்திரம் பிரகாசிப்பதைக் கண்டார். நீங்கள் எல்லோரும் உங்களின் பாக்கிய நட்சத்திரத்தை பார்க்கிறீர்களா?

பாப்தாதா குழந்தைகளைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறாரா? அல்லது, குழந்தைகள் தந்தையைக் காண்பதில் மகிழ்ச்சி அடைகிறார்களா? யார் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்? தந்தையா அல்லது குழந்தைகளா? யார்? (குழந்தைகள்). தந்தைக்கு மகிழ்ச்சி இல்லையா? தந்தை குழந்தைகளைப் பார்ப்பதில் சந்தோஷப்படுகிறார். குழந்தைகளும் தந்தையைப் பார்ப்பதில் சந்தோஷப்படுகிறார்கள். இருவரும் சந்தோஷப்படுகிறார்கள். ஏனென்றால், இந்த வேளையில் மட்டுமே நீங்கள் இறைவனைச் சந்தித்தல், இறையன்பு, இந்த இறை ஆஸ்தி, இறைபேறுகள் என்பவற்றை அனுபவம் செய்கிறீர்கள். ‘இப்பொழுதில்லையேல், எப்போதும் இல்லை!’ அப்படித்தானே?

பாப்தாதா குழந்தைகளான உங்களை ஒரு விடயத்தை மீட்டல் செய்ய வைக்கிறார். இந்த ஒரு விடயம் என்ன? நீங்கள் ஏற்கனவே அதைப் புரிந்து கொண்டுவிட்டீர்கள். பாப்தாதா இந்த ஒரு விடயத்தை நீங்கள் மீட்டல் செய்ய வைக்கிறார்: இப்போது, மேன்மையான நேரத்தை நெருக்கமாகக் கொண்டுவாருங்கள். இதுவே உலகிலுள்ள ஆத்மாக்களின் ஒலியாகும். இதை யார் செய்யப் போகின்றீர்கள்? அது நீங்களா அல்லது வேறு யாருமா? நீங்கள்தானா அழகான, மேன்மையான நேரத்தை நெருக்கமாகக் கொண்டு வரப் போகின்றவர்கள்? அது நீங்களாக இருந்தால், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா, இரண்டாவதாக, நீங்கள் இதைப் புரிந்தும் கொண்டீர்கள். இதனால்;தான் நீங்கள் சிரிக்கிறீர்களா? அச்சா, அதற்கான திகதி என்ன? குறைந்தபட்சம் ஒரு திகதியை நிச்சயம் செய்யுங்கள். நீங்கள் வெளிநாட்டவர்களின் முறைக்காக ஒரு திகதியை நிச்சயம் செய்துள்ளீர்கள்தானே? நீங்கள் அந்தத் திகதியை நிச்சயம் செய்துள்ளீர்கள். எனவே இப்போது, ஓ ஆத்மாக்களே, காலத்தை நெருக்கமாகக் கொண்டு வரப் போகின்றவர்களே, நீங்கள் என்ன திகதியை நிச்சயம் செய்துள்ளீர்கள் என பாபாவிற்குச் சொல்லுங்கள். உங்களால் அதைப் பார்க்க முடிகிறதா? அது உங்களின் பார்வையில் இருக்கும்போது மட்டுமே, அது உலகைச் சென்றடையும். பாப்தாதா அமிர்தவேளையில் உலகைச் சுற்றி வரும்போது. எல்லாவற்றையும் பார்க்கும்போதும் கேட்கும்போதும் அவருக்குக் கருணை ஏற்படுகிறது. அவர்கள் களிப்புடன் இருக்கிறார்கள். ஆனால் களிப்புடன்கூடவே, அவர்கள் குழப்பத்துடனும் இருக்கிறார்கள். அதனால், பாப்தாதா உங்களிடம் கேட்கிறார்: ஓ மாஸ்ரர் அருள்பவர்களே, அருள்பவரின் குழந்தைகளே, எப்போது நீங்கள் மாஸ்ரர் அருள்பவர்களாக இருக்கும் உங்களின் பாகத்தை உலகின் முன்னால் அதிவேகமாக வெளிப்படுத்தப் போகிறீர்கள்? அல்லது, நீங்கள் இன்னமும் திரைகளின் பின்னால் தயாராகிக் கொண்டு இருக்கிறீர்களா? நீங்கள் இன்னமும் ஆயத்தங்களைச் செய்து கொண்டிருக்கிறீர்களா? உலக மாற்றத்திற்குக் கருவிகளாக இருக்கும் ஆத்மாக்களே, இப்போது உலகிலுள்ள ஆத்மாக்களின் மீது கருணை கொள்ளுங்கள்! இது நடக்க வேண்டும். இது நிச்சயிக்கப்பட்டுள்ளது. இது கருவி ஆத்மாக்களான உங்களினூடாகவே நடக்க வேண்டும். எனவே, ஏன் தாமதம்? ஒவ்வொரு பிராமணக் குழந்தையின் இதயத்திலும் சம்பூரணம் மற்றும் முழுமையின் கொடியானது ஏற்றப்படும் ஒரு வைபவத்தை பாப்தாதா இப்போது காண விரும்புகிறார். ஒவ்வொரு பிhமணரின் இதயத்திலும் முழுமையின் கொடி ஏற்றப்பட்டால் மட்டுமே, தந்தையை வெளிப்படுத்தும் கொடி உலகில் ஏற்றப்படும். அதனால், பாப்தாதா இந்த கொடியேற்றும் விழாவைக் காண விரும்புகிறார். சிவராத்திரி தினத்தில், சிவனின் அவதாரத்திற்காகக் கொடி ஏற்றப்படுவதைப் போன்று, இப்போது சிவசக்தி பாண்டவர்களின் அவதாரத்தின் உச்சாடனம் இருக்க வேண்டும். சிவசக்திகள் வந்தனர்! என்ற பாடலை நீங்கள் பாடுகிறீர்கள். நீங்கள் இந்தப் பாடலை இசைக்கிறீர்கள்தானே? இப்போது, சிவனுடன்கூடவே, சக்திகளும் பாண்டவர்களும் வெளிப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்ற பாடலை உலகம் பாட வேண்டும். எவ்வளவு காலத்திற்கு நீங்கள் திரைகளின் பின்னால் இருப்பீர்கள்? திரைகளின் பின்னால் இருப்பதை நீங்கள் விரும்புகிறீர்களா? நீங்கள் அதைச் சிறிதளவு விரும்புகிறீர்கள்! பின்னால் இருப்பவர்கள், திரைகளை விரும்புகிறீர்களா? நீங்கள் அதை விரும்புவதில்லை. எனவே, யார் அவற்றை நீக்கப் போகின்றார்கள்? பாபா அவற்றை நீக்குவாரா? யார் அவற்றை நீக்குவார்கள்? நாடகம் அவற்றை நீக்குமா அல்லது நீங்கள் அவற்றை நீக்குவீர்களா? நீங்களே அவற்றை நீக்கவேண்டி இருப்பதனால். ஏன் இந்தத் தாமதம்? அப்படியென்றால், நீங்கள் திரைகளின் பின்னால் இருப்பதை விரும்புகிறீர்கள் என நாம் புரிந்து கொள்வதா? இப்போது, பாப்தாதாவிற்கு இந்த ஒரு மேன்மையான ஆசை உள்ளது. அதாவது, எல்லோரும் இந்தப் பாடலைப் பாட வேண்டும்: ஆஹா! அவர் வந்துவிட்டார், அவர் வந்துவிட்டார், அவர் வந்துவிட்டார்! இது சாத்தியமா? பாருங்கள், இது சாத்தியம் என தாதிகள் எல்லோரும் சொல்கிறார்கள். அப்படியென்றால், ஏன் அது நடக்கவில்லை? அதற்கான காரணம் என்ன? நீங்கள் எல்லோரும் இவ்வாறு சொல்வதால், அது நடக்காமல் இருப்பதற்கான காரணம் என்ன? (எல்லோரும் சம்பூரணம் ஆகவில்லை). ஏன் நீங்கள் அப்படி ஆகவில்லை? பாபாவிற்கு ஒரு திகதியைச் சொல்லுங்கள்! (பாபா, நீங்கள் ஒரு திகதியைக் கொடுங்கள்) பாப்தாதாவின் மகாமந்திரம் என்னவென்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? பாப்தாதா என்ன கூறுவார்? ஏதோவொரு நேரத்தில் அல்ல, ஆனால் இப்போது! (தாதிஜி கூறினார்: பாபா, நீங்கள்தான் இறுதித் திகதியைச் சொல்ல வேண்டும்) பாப்தாதா உங்களுக்கு திகதியைக் கொடுத்தால், அதற்கேற்ப நீங்கள் உங்களை வளைத்து, அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவீர்களா? பாண்டவர்கள் அந்தப் பொறுப்பை நிறைவேற்றுவீர்களா? உறுதியாகவா? அதில் நீங்கள் தளம்பல் அடைந்தால், அதன்பின்னர் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? (பாபா, நீங்கள் ஒரு திகதியைக் கொடுத்தால், எவரும் தளம்ப மாட்டார்கள்) வாழ்த்துக்கள்! அச்சா, இப்போது நான் ஒரு திகதியைக் கொடுப்பேன், பாருங்கள்! பாருங்கள், பாப்தாதா இன்னமும் கருணைநிறைந்தவராக இருக்கிறார். அதனால் பாப்தாதா உங்களுக்கு ஒரு திகதியைக் கொடுக்கப் போகிறார். கவனமாகக் கேளுங்கள்.

பாப்தாதா எல்லோருக்காகவும் இந்த மேன்மையான உணர்வுகளைக் கொண்டிருக்கிறார். ஆறுமாதங்களுக்குள் - எப்போது ஆறு மாதங்கள் முடிவடையும்? (மே மாதத்தில்) – மே மாதத்தில், நீங்கள் ‘நான், நான்’ என்ற உணர்வுகள் எல்லாவற்றையும் முடித்துவிட வேண்டும். (இந்தியில் நான் என்றால் மே). பாப்தாதா குறைந்தபட்சம் உங்களுக்கு ஆறு மாதங்கள் எல்லையை வழங்குகிறார். பாபா உங்களுக்கு முன்னர் கூறியவற்றையும் கடந்த பருவகாலத்தில் பாபா உங்களுக்குக் கொடுத்த வேலையையும் நீங்கள் மறந்துவிட்டீர்கள் போலும்! குறைந்தபட்சம் ஆறுமாதங்களில், நீங்கள் ஜீவன்முக்தி நிலையை அனுபவம் செய்ய வேண்டும். சத்தியயுக உலகின் ஜீவன்முக்தி அல்ல. ஆனால், சங்கமயுகத்தின் ஜீவன்முக்தி ஸ்திதி. எந்தவிதமான தடைகள், இக்கட்டான சூழ்நிலைகள், வசதிகள் அல்லது ‘நான்’ மற்றும் ‘எனது’ என்ற உணர்வு –சேவை செய்வதனால் ஏற்படும் ‘நான்’ என்ற சரீர உணர்வு, ‘எனது’ என்ற சரீர உணர்வு என்பவற்றின் ஆதிக்கங்களில் இருந்து விடுபட்டிருங்கள். ‘நான் இவற்றில் இருந்து விடுபட்டிருக்க விரும்புகிறேன், ஆனால் இந்தத் தடை வந்தது, இதனாலேயே இது மிகப் பெரிய விடயம் ஆகியது. என்னால் சிறிய விடயங்களை சமாளிக்க முடியும், ஆனால் இது பெரிய விடயம், இது மிகப் பெரிய பரீட்சையாக இருந்தது, இது மிகப் பெரிய தடையாக இருந்தது, இது பெரியதொரு சூழ்நிலையாக இருந்தது’ எனச் சொல்லாதீர்கள். இக்கட்டான சூழ்நிலைகள், தடைகள் அல்லது சௌகரியங்களின் கவர்;ச்சி என்பவற்றினால் எத்தனை பெரிய எதிர்ப்பு வந்தாலும் - அவை உங்களை எதிர்க்கும், உங்களுக்கு இது முன்கூட்டியே சொல்லப்பட்டுள்ளது – உங்களால் ஆறு மாதங்களில் குறைந்தபட்சம் 75 சதவீதம் விடுபட்டு இருக்க முடியுமா? பாப்தாதா 100 சதவீதம் கேட்கவில்லை, ஆனால் 75 சதவீதமே கேட்கிறார். முதலில் நீங்கள் முக்கால் பங்கினை அடைந்தால் மட்டுமே, உங்களால் 100 சதவீதத்தை அடைய முடியும். எனவே, உங்களுக்கு ஆறு மாதங்கள் உள்ளன. ஒரு மாதம் இல்லை, ஆனால் உங்களுக்கு ஆறு மாதங்கள், அரைவருடம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, உங்களால் இந்தத் திகதியை நிச்சயம் செய்ய முடியுமா? பாருங்கள், என்னை ஒரு திகதியை நிச்சயம் செய்யும்படி தாதிகள் என்னைக் கேட்டுள்ளனர். எனவே, நான் அவர்களின் கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டியுள்ளது! பாப்தாதா பெறுபேற்றைப் பார்க்கும்போது, அவர் இயல்பாகவே இங்கே வருவதற்குத் தூண்டப்படுகிறார். அவருக்கு நீங்கள் சொல்வதற்கான தேவை எதுவும் இல்லை. எனவே, 75 சதவீதத்தை அடைவதற்கு உங்களுக்கு ஆறு மாதங்களே உள்ளன. பாபா உங்களை 100 சதவீதத்தைக் கேட்கவில்லை. அதற்கு, எதிர்காலத்தில் உங்களுக்கு மேலதிகமாக நேரம் வழங்கப்படும். எனவே, இதற்கு நீங்கள் என்றும் தயாரா? என்றும் தயார்கூட இல்லை, ஆறு மாதங்களில் தயார் ஆகவேண்டும். உங்களுக்கு இது பிடித்திருக்கிறதா? அல்லது, என்ன நடக்கும் என்று தெரியாததால் உங்களின் தைரியம் சிறிது குறைவடைகிறதா? சிங்கங்கள் வரும், பூனைகள் வரும், எல்லாமே வரும். தடைகள் வரும். இக்கட்டான சூழ்நிலைகள் வரும். சௌகரியங்கள் அதிகரிக்கும். ஆனால், சௌகரியங்களின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டிருங்கள். உங்களுக்கு இது பிடித்திருந்தால், உங்களின் கைகளை உயர்த்துங்கள்! தொலைக்காட்சியைத் (கமெரா) திருப்பி எல்லாவற்றையும் காட்டுங்கள். உங்களின் கைகளை மிக நன்றாக உயர்த்துங்கள். அவற்றைக் கீழே போடாதீர்கள்! இந்தக் காட்சி மிகவும் நல்லது. அச்சா, முன்கூட்டியே அதற்காக வாழ்த்துக்கள்!

பின்னர், ‘நாம் அதிகளவில் இறக்க வேண்டியுள்ளது’ எனச் சொல்லாதீர்கள். நீங்கள் வாழ்ந்தாலென்ன அல்லது இறந்தாலென்ன, நீங்கள் இப்படி ஆகவேண்டும். இப்படி இறப்பது இனிமையானது. இப்படி இறப்பதில் எந்தவிதமான துன்பமும் கிடையாது. இது பலருக்கு நன்மை செய்யும் மரணமாகும். இதனாலேயே, இப்படி இறப்பதில் களிப்பு உள்ளது. இதில் எந்தவிதமான துன்பமும் இல்லை. சந்தோஷமே உள்ளது. ‘ இது நடந்தது, அது நடந்தது, இதனாலேயே இது நடந்தது’ என எந்தவிதமான சாக்குப்போக்கும் சொல்லாதீர்கள். சாக்குப்போக்குகள் இனியும் உதவிசெய்யாது. நீங்கள் இன்னமும் சாக்குப்போக்குகள் சொல்வீர்களா? சொல்லமாட்டீர்கள்தானே? பறக்கும் ஸ்திதியின் விளையாட்டை விளையாடுங்கள், வேறு எதுவும் இல்லை. இப்போது, இறங்குகின்ற ஸ்திதி, சாக்குப்போக்குகள் சொல்லுதல், பலவீனங்கள் என்ற விளையாட்டுக்களை எல்லாம் முடியுங்கள். இப்போது, பறக்கின்ற ஸ்திதி என்ற விளையாட்டை விளையாடுங்கள். இது ஓகேதானே? உங்களின் முகங்கள் எல்லாமே மலர்ந்திருக்கின்றன. ஆறு மாதங்களின் பின்னர் நீங்கள் பாபாவைச் சந்திக்க மீண்டும் வரும்போது உங்களின் முகங்கள் எப்படி இருக்கும்? அப்போது நாங்கள் ஒரு புகைப்படம் எடுப்போம்.

இரட்டை வெளிநாட்டவர்கள் வந்துள்ளார்கள். அதனால் இரட்டை சத்தியத்தைச் செய்கின்ற நாள் வந்துவிட்டது. வேறு யாரையும் பார்க்காதீர்கள். ஆனால். தந்தையையும் தாய் பிரம்மாவையும் மட்டும் பாருங்கள். மற்றவர்கள் இதைச் செய்கிறார்களோ இல்லையோ, எல்லோரும் இதைச் செய்வார்கள், நீங்கள் அவர்களுக்காகவும் கருணைநிறைந்த உணர்வுகளைக் கொண்டிருக்க வேண்டும். பலவீனமானவர்களுக்கு உங்களின் நல்லாசிகளின் சக்தியைக் கொடுங்கள். அவர்களின் பலவீனங்களைப் பார்க்காதீர்கள். உங்களின் தைரியம் என்ற கையால் இத்தகைய ஆத்மாக்களை ஈடேற்றி, அவர்களை மேன்மையானவர்கள் ஆக்குங்கள். உங்களுக்காகவும் மற்றவர்களுக்காகவும் சதா உங்களின் தைரியம் என்ற கையை நீட்டுங்கள். தைரியம் என்ற கை மிகவும் சக்திவாய்;ந்தது. பாப்தாதாவின் ஆசீர்வாதம் என்னவென்றால், குழந்தைகள் தைரியமாக ஓரடி எடுத்து வைக்கும்போது. தந்தை ஆயிரம் அடிகள் உதவியை வழங்குகிறார். சுயநலமற்ற முயற்சியில் ‘நான் முதலில்’ என்றிருக்க வேண்டும். சுயநலமற்ற முயற்சியே இருக்க வேண்டும். சுயநலமான முயற்சி அல்ல. சுயநலமற்றவர்கள் ஆகுவதில் முதலடி எடுத்து வைப்பவர்கள். தந்தை பிரம்மாவிற்குச் சமமானவர்கள்.

நீங்கள் தந்தை பிரம்மாவிடம் அன்பு வைத்திருக்கிறீர்கள்தானே? இதனாலேயே, நீங்கள் பிரம்மாகுமார்கள் என்றும் பிரம்மாகுமாரிகள் என்றும் அழைக்கப்படுகிறீர்கள். நீங்கள் ஒரு விநாடியில் ஜீவன்முக்தி அடைவதற்கான சவாலை விடுக்கிறீர்கள். எனவே இப்போது, உங்களை ஒரு விநாடிக்குள் விடுவிப்பதில் கவனம் செலுத்துங்கள். இப்போது நேரத்தை நெருக்கமாகக் கொண்டுவாருங்கள். உங்களின் முழுமைக்கான நெருக்கம், மேன்மையான நேரத்தை நெருக்கமாகக் கொண்டுவரும். நீங்கள் அதிபதிகள்தானே? நீங்கள் அரசர்கள்தானே? நீங்கள் சுயஇராச்சிய அதிகாரிகளா? எனவே, ஒரு கட்டளை இடுங்கள்! அரசன் கட்டளைகளை இடுவார், அப்படித்தானே? ‘ஆமாம்! இல்லை! இதைச் செய்யாதீர்கள், இதைச் செய்யுங்கள்!’ எனச் சொல்லாதீர்கள். ஒரு கட்டளை இடுங்கள், அவ்வளவுதான். உங்களின் மனங்களை இப்போது பாருங்கள். ஏனென்றால், மனமே பிரதானமான ஆலோசகர் ஆவார். எனவே, ஹே அரசர்களே, உங்களால் உங்களின் பிரதான ஆலோசகரான உங்களின் மனதிற்கு, ஒரு விநாடிக்குள் சரீரமற்ற ஸ்திதியில் ஸ்திரமாகும்படி உங்களால் கட்டளை பிறப்பிக்க முடிகிறதா? இதை ஒரு விநாடியில் செய்யும்படி கட்டளை அதற்குக் கட்டளை இடுங்கள். (ஐந்து நிமிட அப்பியாசம்) அச்சா.

அன்பிலே திளைத்திருக்கும் அதிர்ஷ்டசாலி ஆத்மாக்களுக்கும் தந்தையின் மூலம் தாம் பெற்ற பேறுகள் அனைத்தையும் அனுபவம் செய்யும் ஆத்மாக்களுக்கும் சுய இராச்சியத்திற்கான சகல உரிமைகளையும் கொண்டிருப்பதன் மூலம் தங்களை ஆளுகின்ற சக்திசாலி ஆத்மாக்களுக்கும் ஜீவன்முக்தி ஸ்திதியின் அனுபவத்தை சதா கொண்டிருக்கும் அதியுயர்ந்த ஆத்மாக்களுக்கும் பாக்கியத்தை அருள்பவரால் மேன்மையான பாக்கிய ரேகை வரையப்படும் அதிர்ஷ்டசாலி ஆத்மாக்களுக்கும், தமது நிலையான தூய்மைப் பார்வையாலும் தூய்மை மனோபாவத்தாலும் சுய மாற்றத்தின் மூலம் உலக மாற்றத்தை ஏற்படுத்துகின்ற அதிபுனிதமான ஆத்மாக்களுக்கும், பாப்தாதாவின் அன்பும் நினைவும் நமஸ்காரங்களும்.

காலத்தின் அழைப்பு எனும் கலந்துரையாடலுக்காக வந்திருக்கும் விருந்தாளிகளை பாப்தாதா சந்திக்கிறார்:

நீங்கள் எல்லோரும் உங்களின் இனிய வீட்டையும் இனிய குடும்பத்தையும் வந்தடைந்து விட்டீர்கள்தானே? நீங்கள் இந்தச் சிறிய, இனிய குடும்பம் அழகானதாக இருப்பதை உணர்கிறீர்கள்தானே? நீங்களும் மிக அழகாக ஆகிவிட்டீர்கள்தானே? அனைத்திற்கும் முதலில், நீங்கள் பரமாத்மாவினால் நேசிக்கப்படுபவர்கள் ஆகியுள்ளீர்கள். நீங்கள் அப்படி ஆகியுள்ளீர்கள்தானே? நீங்கள் அப்படி ஆகியுள்ளீர்களா? அல்லது, இன்னமும் அப்படி ஆகிக் கொண்டிருக்கிறீர்களா? பாருங்கள், உங்களைப் பார்ப்பதில் எல்லோரும் எப்படி மகிழ்ச்சி அடைகிறார்கள். அவர்கள் ஏன் சந்தோஷப்படுகிறார்கள்? எல்லோருடைய முகங்களையும் பாருங்கள். அவர்கள் எல்லோரும் மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஏன் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள்? ஏனென்றால், நீங்கள் எல்லோரும் இறை தூதுவர்களாகி, சகல ஆத்மாக்களுக்கும் செய்தியைக் கொடுப்பதற்குக் கருவி ஆத்மாக்கள் ஆகுவீர்கள் என்பதை அவர்கள் அறிவார்கள். (விருந்தாளிகள் ஐந்து கண்டங்களில் இருந்தும் வந்துள்ளார்கள்) எனவே, இந்தச் செய்தி ஐந்து கண்டங்களையும் சென்றடையும். இது இலகுவானதல்லவா? மிக நல்லதொரு திட்டம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தைப் பரமாத்மாவின் சக்தியால் நிரப்பி, குடும்பத்தின் ஒத்துழைப்பைப் பெற்று, தொடர்ந்து முன்னேறுங்கள். எல்லோருடைய எண்ணங்களும் பாப்தாதாவை வந்தடைகின்றன. உங்கள் எல்லோருக்கும் மிக நல்ல எண்ணங்கள் தோன்றுகின்றதல்லவா? திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. எனவே, இது உங்களின் தைரியமும், தந்தையிடமிருந்தும் பிராமணக் குடும்பத்திடமிருந்தும் பெறப்படுகின்ற உதவியும் ஆகும். இவை திட்டங்களை நடைமுறைப்படுத்தத் தேவைப்படுகின்றன. நீங்கள் கருவிகள் ஆகவேண்டும், அவ்வளவுதான். வேறெந்த முயற்சியும் தேவைப்படாது. ‘நான் இறை பணியில் கருவியாக இருக்கிறேன்’. நீங்கள் என்ன பணியைச் செய்தாலும். இந்த உணர்வைக் கொண்டிருங்கள் - ‘பாபா, கருவியான நான், சேவைக்குத் தயாராக இருக்கிறேன். நான் ஒரு கருவி. எல்லோரையும் அசையச் செய்பவர், இயல்பாகவே என்னையும் அசையச் செய்கிறார்’. கருவி ஆத்மாவாக இருக்கும் இந்த உணர்வானது, உங்களின் முகத்தில் பணிவான மற்றும் படைப்பாற்றலுக்குரிய உணர்வுகளை வெளிப்படுத்தும். கரவன்ஹார், உங்களைத் தூண்டுபவர், உங்களைக் கருவிகளாக்கி உங்களின் மூலமாகச் செயல்படுவார். நீங்களே மைக்குகள், அத்துடன் தந்தையின் சக்தி உள்ளது, எனவே, இது இலகுவானதுதானே? எனவே, கருவிகளாகி, நினைவில் பிரசன்னமாக இருங்கள். உங்களின் முகங்களும் சாயல்களும் இயல்பாகவே சேவைக்குக் கருவிகள் ஆகும். நீங்கள் வார்த்தைகளால் மட்டும் சேவை செய்ய மாட்டீர்கள். ஆனால், உங்களின் சாயல்கள் உங்களின் முகங்களினூடாக உங்களின் அக சந்தோஷத்தை வெளிப்படுத்தும். இது தனித்துவம் (அலௌகிக்தா) என்று அழைக்கப்படும். நீங்கள் இப்போது அலௌகீகம் (ஆன்மீகம்) ஆகிவிட்டீர்கள்தானே? லௌகீகம் முடிந்துவிட்டதுதானே? ‘நான் ஓர் ஆத்மா’ - இது ஆன்மீகமாக இருத்தல். ‘நான் இன்னார்’ எனச் சொல்வது லௌகீகமானது. எனவே, நீங்கள் யார்? ஆன்மீகமானவரா அல்லது லௌகீகமானவரா? நீங்கள் ஆன்மீகமானவர், அப்படித்தானே? இது நல்லது. நீங்கள் பாப்தாதாவிற்கும் குடும்பத்திற்கும் முன்னால் வந்துள்ளீர்கள். இதைச் செய்வதற்கு உங்களுக்கு மகத்தான தைரியம் உள்ளது. பாருங்கள், நீங்கள் பலமில்லியன்களில் இருந்து வெளிப்பட்டுள்ள கைப்பிடி அளவினர் ஆவீர்கள். அந்தக் குழு எத்தனை பெரியது? அந்தக் குழுவில் இருந்து நீங்கள் எத்தனை பேர் வந்துள்ளீர்கள்? எனவே, பலமில்லியன்களில் கைப்பிடி அளவினரான நீங்களே வந்துள்ளீர்கள், அப்படித்தானே? இது நல்லது. பாப்தாதா இந்தக் குழுவை விரும்புகிறார். அவர்கள் எல்லோரும் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள் எனப் பாருங்கள்! உங்கள் எல்லோரையும் விட, அவர்களே மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். அவர்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள். ஏனென்றால், சேவைக்கான பலனை அவர்கள் தங்களின் முன்னால் காண்கிறார்கள். நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்கள்தானே? உங்களின் முயற்சிகளின் பலனை நீங்கள் பெற்றுள்ளீர்கள். அச்சா. இப்போது நீங்கள் ஓர் அதிபதியும் குழந்தையும் ஆவீர்கள்! குழந்தை ஓர் அதிபதி ஆவார். குழந்தை எப்போதும் ஓர் அதிபதி என்றே அழைக்கப்படுகிறார். அச்சா.

ஆசீர்வாதம்:
எல்லாவற்றையும் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதனால் ஆசீர்வதிக்கப்பட்ட மூர்த்தி ஆகுவதன் மூலம், வெற்றியின் ஆசீர்வாதத்தைப் பெறுவீர்களாக.

சங்கமயுகத்தில், குழந்தைகளான நீங்கள் ஆஸ்தியையும் அத்துடன், ‘எல்லாவற்றையும் பயனுள்ள முறையில் பயன்படுத்துங்கள், உங்களுக்கு வெற்றி கிடைக்கும்!’ என்ற ஆசீர்வாதத்தையும் பெறுகிறீர்கள். எல்லாவற்றையும் பயனுள்ள முறையில் பயன்படுத்துவதே விதையாகும். வெற்றி அதன் பழம் ஆகும். விதை நன்றாக இருந்தால், நீங்கள் பழத்தைப் பெறாமல் இருப்பது சாத்தியம் இல்லை. எப்படி நீங்கள் மற்றவர்களிடம் அவர்களின் நேரத்தையும் எண்ணங்களையும் செல்வத்தையும் பயனுள்ள முறையில் பயன்படுத்தும்படி சொல்கிறீர்களோ, அப்படியே, உங்களின் பொக்கிஷங்கள் எல்லாவற்றின் பட்டியலையும் சோதித்து, எந்தப் பொக்கிஷங்கள் பயனுள்ள முறையில் பயன்படுத்தப்பட்டன என்றும் எவை வீணாக்கப்பட்டன என்றும் அறிந்து கொள்ளுங்கள். எல்லாவற்றையும் தொடர்ந்து பயனுள்ள முறையில் பயன்படுத்துங்கள். நீங்கள் சகல பொக்கிஷங்களாலும் நிரம்பியவராகவும் ஆசீர்வதிக்கப்பட்ட மூர்த்தியாகவும் ஆகுவீர்கள்.

சுலோகம்:
இறைவனின் விருதைப் பெறுவதற்கு, வீணான அல்லது எதிர்மறையான எதையும் தவிர்த்துவிடுங்கள்.