08.06.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நினைவு செய்வதன் மூலமாகவே உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றனவேயன்றி, திரான்ஸ் மூலமாக அல்ல. திரான்ஸ் ஒரு சொற்ப சதங்கள் பெறுமதியான விளையாட்டேயாகும். ஆகவே, திரான்ஸில் செல்ல வேண்டுமென்ற ஆசையைக் கொண்டிருக்காதீர்கள்.

பாடல்:
மாயையின் பல்வேறு வடிவங்களிலிருந்து உங்களைக் காப்பாற்றுவதற்காக, குழந்தைகளாகிய உங்கள் அனைவருக்கும் தந்தை தரும் ஒரு எச்சரிக்கை யாது?

பதில்:
இனிய குழந்தைகளே, திரான்ஸில் செல்வதற்கு எவ்வாறான ஆசையையும் கொண்டிருக்காதீர்கள். ஞானத்திற்கும், யோகத்திற்கும், திரான்சுடன் தொடர்பில்லை. கல்வியே பிரதானமாகும். சிலர் திரான்ஸில் சென்று, “மம்மா எனக்குள் பிரவேசித்தார்” அல்லது “பாபா எனக்குள் பிரவேசித்தார்” என்று கூறுகிறார்கள். அவை அனைத்தும் மாயையின் சூட்சுமமான எண்ணங்களாகும். நீங்கள் அவற்றையிட்டு மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மாயை பல குழந்தைகளுக்குள் பிரவேசித்து, அவர்களைத் தவறான செயல்களைச் செய்ய வைக்கின்றாள். ஆகவே திரான்ஸில் செல்வதற்கு எவ்வித ஆசையையும் கொண்டிருக்காதீர்கள்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகள் ஒருபுறம் பக்;தியும் மறுபுறம் ஞானமும் உள்ளதென்பதை புரிந்து கொண்டிருக்கிறார்கள். பக்தி அதிகளவு இருப்பதுடன், அதனை உங்களுக்குக் கற்பிப்பதற்குப் பலர் உள்ளனர். சமய நூல்களுடன் மனிதர்களும் உங்களுக்கு அதனைக் கற்பிக்கின்றார்கள். இங்கு, எந்த சமயநூல்களோ அல்லது எந்த மனிதரோ இல்லை. ஒரேயொரு ஆன்மீகத் தந்தையே உங்களுக்குக் கற்பித்து, ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். ஆத்மாவே அனைத்தையும் கிரகித்துக் கொள்கிறார். பரமாத்மாவான பரமதந்தையிடமே இந்த ஞானம் முழுவதும் உள்ளது. அவரிடம் 84 பிறவிச் சக்கரத்தின் ஞானம் உள்ளது. இதனாலேயே அவரையும் சுய தர்சன சக்கரதாரி என்று அழைக்கலாம். அவர் குழந்தைகளாகிய எங்களைச் சுயதர்சனச் சக்கரதாரிகள் ஆக்குகிறார். பாபா பிரம்மாவின் சரீரத்திற்குள் இருப்பதால், அவரையும் பிராமணர் என்று அழைக்கலாம். அவருடைய குழந்தைகளாகிய நாங்களும் பிராமணர்களாகிய பின்னர் தேவர்கள் ஆகுகிறோம். தந்தை, இப்பொழுது இங்கு அமர்ந்திருந்து, உங்களுக்கு நினைவு யாத்திரையைக் கற்பிக்கிறார். இதில் ஹத்த யோகம் என்ற கேள்விக்கு இடமில்லை. அந்த மக்கள் ஹத்த யோகத்தின் மூலம் திரான்ஸில் செல்கிறார்கள். அது ஒரு மகத்தான விடயமல்ல. திரான்ஸில் எந்த மகத்துவமும் இல்லை. திரான்ஸில் செல்வது ஒரு சொற்ப சதங்கள் பெறுமதியான விளையாட்டாகும். நீங்கள் திரான்ஸில் செல்வதாக எவரிடமும் என்றுமே கூறக்கூடாது. ஏனெனில், இக்காலத்தில், வெளிநாடுகளில் எங்கும்; பலர் திரான்ஸில் செல்;கிறார்கள். திரான்ஸில் செல்வதால், அவர்களோ அல்லது நீங்களோ எவ்வித பயனையும் பெறுவதில்லை. திரான்ஸில் நினைவு யாத்திரையோ அல்லது ஞானமோ இல்லையென்ற புரிந்துணர்வை பாபா உங்களுக்குக் கொடுத்திருக்கின்றார். திரான்ஸில் செல்பவர்கள் ஒருபோதும் ஞானத்தைச் செவிமடுப்பதும் இல்லை. அவர்களது பாவங்கள் எரிக்கப்படுவதும் இல்லை. திரான்ஸிற்கு எவ்வித முக்கியத்துவமும் இல்லை. குழந்தைகள் யோகம் செய்கிறார்கள். அது திரான்ஸ் என்று அழைக்கப்படுவதில்லை. உங்கள் பாவங்கள் நினைவு செய்வதன் மூலமே அழிக்கப்படும். திரான்ஸ் மூலம் பாவங்கள் அழிக்கப்பட மாட்டாது. பாபா உங்களை எச்சரிக்கிறார்: குழந்தைகளே, திரான்ஸில் செல்வதற்கு, எவ்வித ஆசையையும் கொண்டிருக்காதீர்கள். சந்நியாசிகள் போன்றவர்கள் விநாச காலத்தின் போதே ஞானத்தைப் பெறுகிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள் அவர்களைத் தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தாலும், இந்த ஞானம் அவர்களது கலசத்தில் (புத்தி) உடனடியாக நிற்காது. தம் முன்னிலையில் விநாசத்தைக் காணும்போதே அவர்கள் வருவார்கள். மரணம் வரவுள்ளது என்பதை அப்பொழுதே அவர்கள் புரிந்து கொள்வார்கள். அது அண்மிப்பதை பார்க்கும் போதே அவர்கள் உங்களை நம்புவார்கள். இறுதியிலேயே அவர்களது பாகம் உள்ளது. விநாசம் இடம்பெறவுள்ளது என்றும், மரணம் சம்பவிக்கும் என்றும் நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் பொய்யைக் கூறுகின்றீர்கள் என்று அவர்கள் நினைக்கிறார்கள். உங்களுடைய விருட்சம் மெதுவாக வளர்கிறது. நீங்கள் சந்நியாசிகளுகளிடம் கூறவேண்டும்: தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் கண்களை மூடக் கூடாது என்று தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்தியிருக்கிறார். கண்களை நீங்கள் மூடினால் உங்களால் எவ்வாறு தந்தையைப் பார்க்க முடியும்? ஆத்மாக்களாகிய நாங்கள் பாமாத்மாவான பரமதந்தையின் முன்னால் அமர்ந்திருக்கிறோம். அவரைப் பார்க்க முடியாது விட்டாலும், எங்கள் புத்தியில் இந்த ஞானம் உள்ளது. பரமாத்மாவான பரமதந்தை இந்தச் சரீரத்தின் உதவியுடன் எங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். திரான்ஸ் போன்றவற்றிற்கான கேள்விக்கு இடமில்லை. திரான்ஸில் செல்வது என்பது ஒரு பெரிய விடயமில்லை. ‘போக்’ போன்றவற்றைப் படைப்பது என்பது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் (திரான்ஸ் தூதுவர்கள்), ஒரு பணியாளனாகச் சென்று போக் படைத்துவிட்டுத் திரும்புகின்றீர்கள். அது முக்கியஸ்தர்களுக்கு பணியாட்கள் உணவு ஊட்டுவதைப் போன்றதாகும். தேவர்களுக்கு உணவு படைக்கச் செல்லும் நீங்களும் பணியாட்களே. அவர்கள் தேவதைகள். நீங்கள் அங்கு மம்மாவையும், பாபாவையும் காண்கிறீர்கள். அந்தச் சம்பூரணமான உருவமே உங்கள் இலக்கும், இலட்சியமும் ஆகும். அவர்களை அவ்வாறு தேவதைகள் ஆக்கியவர் யார்? திரான்ஸில் செல்வது ஒரு பெரிய விடயமல்ல. இங்கு சிவபாபா உங்களுக்குக் கற்பிக்கின்றார், அவ்வாறே, அங்கும் இவருடாக உங்களுக்கு எதனையாவது விளங்கப்படுத்துவார். சூட்சும உலகில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்க வேண்டுமே அல்லாது திரான்ஸ் போன்றவற்றிற்கு நீங்கள் எவ்வித முக்கியத்துவமும் கொடுக்க வேண்டியதில்லை. திரான்ஸில் செல்வதை செய்து காட்டுவதும் சிறுபிள்ளைத் தனமாகும். பாபா அனைவரையும் எச்சரிக்கிறார்: திரான்ஸில் செல்லாதீர்கள். மாயை அடிக்கடி அதில் தலையிடுகின்றாள். இது ஒவ்வொரு கல்பத்திலும், தந்தை வந்து உங்களுக்குக் கற்பிக்கும் கல்வியாகும். இப்பொழுது சங்கம யுகமாகும். நீங்கள் மாற வேண்டும். நாடகத் திட்டத்திற்கு அமைய, நீங்கள் உங்கள் பாகத்தை நடிக்கிறீர்கள். உங்கள் பாகங்களுக்கான புகழ் உள்ளது. நாடகத்திற்கு ஏற்ப, தந்தை வந்து உங்களுக்குக் கற்பிக்கிறார். நீங்கள் ஒருதடவை தந்தையிடம் கற்று, நிச்சயமாக மனிதர்களிலிருந்து தேவர்களாக மாற வேண்டும். இதில் குழந்தைகளாகிய உங்களுக்கு அதிகளவு சந்தோஷம் உள்ளது. இப்பொழுது எங்களுக்குத் தந்தையையும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியை தெரியும். தந்தையிடமிருந்து கற்பித்தலைப் பெறுவதால், நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்க வேண்டும். புதிய உலகத்திற்காக நீங்கள் கற்கிறீர்கள். அங்கு, அது தேவ இராச்சியமாகும். ஆகவே இந்த மங்களகரமான சங்கம யுகத்தில் நீங்கள் நிச்சயமாகக் கற்க வேண்டும். நீங்கள்; இந்தத் துன்பத்திலிருந்து விடுபட்டு, பின்னர் சந்தோஷத்திற்குச் செல்வீர்கள். இங்கு நீங்கள் தமோபிரதான் என்பதால், நோய் வாய்ப்படுகிறீர்கள். இந்த நோய்கள் அனைத்தும் முடிவடைய உள்ளன. கல்வியே பிரதான விடயமாகும், அதற்கு திரான்ஸ் போன்றவற்றுடன் தொடர்பு இல்லை. அது ஒரு பெரிய விடயமல்ல. சில இடங்களில், சிலர் திரான்ஸில் சென்று, மம்மா வந்தார் அல்லது பாபா வந்தார் என்று கூறுகிறார்கள். தந்தை கூறுகிறார்: அவற்றில் ஒன்றுமில்லை. தந்தை ஒருவிடயத்தை மாத்திரம் விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் அரைக் கல்பமாகச் சரீர உணர்வுடையவர்களாக இருந்தீர்கள். இப்பொழுது ஆத்ம உணர்வுடையவர்களாகி, தந்தையை நினைவு செய்யுங்கள். உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். இது நினைவு யாத்திரை என்று அழைக்கப்படுகிறது. அதனை யோகம் என்று அழைப்பதன் மூலம், யாத்திரை என்று உங்களால் நிரூபிக்க முடியாது. ஆத்மாக்களாகிய நீங்கள் இங்கிருந்து சென்று, தமோபிரதானிலிருந்து, சதோபிரதான் ஆகவேண்டும். இப்பொழுது நீங்கள் யாத்திரையில் இருக்கிறீர்கள். அவர்களுடைய யோகத்தில் எவ்வித யாத்திரையும் இல்லை. பல ஹத்த யோகிகள் இருக்கிறார்கள். அது ஹத்த யோகமாகும். ஆனால், இதுவோ தந்தையை நினைவு செய்வதாகும். தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். வேறு எவரும் ஒருபோதும் இவ்வாறு விளங்கப்படுத்த மாட்டார்கள். இது ஒரு கல்வியாகும். நீங்கள் தந்தையின் குழந்தையாகியதும், அவரிடம் கற்று, பின்னர் மற்றவர்களுக்கும் கற்பிக்க வேண்டும். பாபா கூறுகிறார்: நூதன சாலைகளைத் திறவுங்கள். மக்கள் தாங்களாகவே உங்களிடம் வருவார்கள். நீங்கள் அவர்களை அழைக்க வேண்டியதில்லை. அவர்கள் கூறுவார்கள்: இந்த ஞானம் மிகவும் சிறந்தது. நாங்கள் இதற்கு முன்னர் இதனைக் கேள்விப்படவில்லை. இங்கு நடத்தையே சீராக்கப்படுகின்றன. தூய்மையே பிரதான விடயமாகும். இதனையிட்டே குழப்பங்கள் ஏற்படுகின்றன. பலர் இன்னும் இதில் தவறி விடுகின்றனர். இந்த உலகில் இருந்தவாறே, நீங்கள் எதனையும் பார்க்காதவாறு உங்கள் ஸ்திதி இருக்க வேண்டும். ஒரு தந்தை ஒரு புதிய வீட்டைக் கட்டும்போது, அனைவரது புத்தியும் அந்தப் புதிய வீட்டில் ஈர்க்கப்படுவதுபோன்று, நீங்கள் உண்ணும்போதும், பருகும்போதும் உங்களுடைய புத்தி அந்தத் திசையிலேயே இருக்க வேண்டும். புதிய உலகம் இப்போது உருவாக்கப்படுகிறது. எல்லையற்ற தந்தை இப்போது எல்லையற்ற வீட்டைக் கட்டுகிறார். நாங்கள், சுவர்க்க வாசிகள் ஆகுவதற்கான முயற்சியைச் செய்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். சக்கரம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இப்பொழுது நாங்கள் வீட்டிற்குச் சென்று, பின்னர் சுவர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். அதனைச் செய்வதற்கு நிச்சயமாக நாங்கள் தூய்மையாக வேண்டும். நினைவு யாத்திரை மூலம் நீங்கள் தூய்மையாக வேண்டும். நினைவு செய்யும்போதே தடைகள் ஏற்படும். அப்போது நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும். கற்கும்போது, எதிர்த்துப் போராடுதல் என்ற கேள்விக்கு இடமில்லை. கல்வி மிகவும் இலகுவானது. 84 பிறவிச் சக்கரத்தின் ஞானம் மிகவும் இலகுவானது. ஆனால் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுவதற்கும், தந்தையை நினைவு செய்வதற்கும் முயற்சி தேவையாகும். தந்தை கூறுகிறார்: நினைவு யாத்திரையை மறக்காதீர்கள். குறைந்தது எட்டு மணித்தியாலங்களுக்கு பாபாவை நினைவு செய்யுங்கள். நீங்கள் பௌதீக ஜீவனோபாயத்திற்காகச் செயல்களைச் செய்யவேண்டும். நீங்கள் சற்று உறங்கவும் வேண்டும். இது ஓர் இலகுவான பாதையாகும். உறங்கக் கூடாது என்று உங்களுக்குக் கூறப்பட்டால், அது ஹத்த யோகம் ஆகிவிடும். பல ஹத்த யோகிகள் இருக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: அத் திசையில் எதனையும் பார்க்காதீர்கள். அதில் எவ்வித பலனுமில்லை. பலர் ஹத்த யோகம் போன்றவற்றைக் கற்பிக்கிறார்கள். அவை அனைத்தும் மனிதர்களின் வழிகாட்டல்களாகும். நீங்கள் ஆத்மாக்கள். ஆத்மாவே ஓரு சரீரத்தை எடுத்து, ஒரு வைத்தியராகி, தனது பாகத்தை நடிக்கிறார். எவ்வாறாயினும் மக்கள் நான் இன்னார், இன்னாரென்று, சரீர உணர்வுடையவர்கள் ஆகிவிட்டார்கள். நீங்கள் ஆத்மாக்கள் என்பதையும், தந்தையும் ஓர் ஆத்மா என்பதையும்; உங்கள் புத்தியில் கொண்டிருக்கின்றீர்கள். இந் நேரத்தில் பரம தந்தை உங்களுக்குக் கற்பிக்கிறார். இதனாலேயே, ஆத்மாக்கள் நீண்ட காலமாகப் பரமாத்மாவிடமிருந்து பிரிந்து இருந்தார்கள் என்பது நினைவு கூரப்படுகிறது. நீங்கள் அவரை ஒவ்வொரு கல்பத்திலும் சந்திக்கிறீர்கள். உலகிலுள்ள ஏனையவர்கள் அனைவரும் தங்களைச் சரீரமாகக் கருதுவதால், சரீர உணர்விலேயே கற்பித்தலும், கற்றலும் இடம்பெறுகிறது. ஆனால் நீங்களோ, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதியவாறு கற்கிறீர்கள். தந்தை கூறுகிறார்: நான் ஆத்மாக்களாகிய உங்களுக்குக் கற்பிக்கிறேன். ஆத்மாவே ஒரு நீதிபதியாகவோ அல்லது சட்டநிபுணராகவோ ஆகுகிறார். ஆத்மாக்களாகிய நீங்கள் தூய்மையாகவும், சதோபிரதானாகவும் இருந்தீர்கள். பின்னர், நீங்கள் அனைவரும் உங்கள் பாகங்களை நடிக்கும்போது, இப்போது தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டீர்கள். இதனாலேயே, நீங்கள் கூவி அழைக்கிறீர்கள்: பாபா, வந்து எங்களைத் தூய்மையான ஆத்மாக்கள் ஆக்குங்கள். தந்தை தூய்மையானவர். இவ் விடயங்களைச் செவிமடுக்கும்போதே நீங்கள் இவற்றைக் கிரகிக்கிறீர்கள். இவ் விடயங்களைக் கிரகிக்கும்போது, குழந்தைகளாகிய நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள். இவ் விடயங்கள் புதியவை என்பதால், இவை வேறு எவரினதும் புத்தியில் இருப்பதில்லை. இது ஞானமாகும். அது பக்தியாகும். பக்தி செய்யும்போது, நீங்களும் சரீர உணர்வுடையவர்கள் ஆகுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, இப்போது ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள். ஆத்மாக்களாகிய எங்களுக்கு தந்தையே இந்தச் சரீரத்தின் மூலம் கற்பிக்கிறார். ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையான பரமதந்தை, இந் நேரத்தில் மாத்திரமே எங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதை மீண்டும் மீண்டும் நினைவு செய்யுங்கள். நாடகத்தில், இந்தச் சங்கமயுகம் தவிரவேறு எந்த ஒரு நேரத்திலும் அவருக்கென ஒரு பாகம் இல்லை. இதனாலேயே தந்தை மீண்டும் மீண்டும் கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருப்பதுடன், தந்தையையும் நினைவு செய்யுங்கள். இது மிகவும் உயர்ந்த யாத்திரையாகும். நீங்கள் மேலே ஏறினால், சுவர்க்கத்தின் இனிமையான சுவையை அனுபவம் செய்யலாம். விகாரத்தில் வீழ்வதால், நீங்கள் முற்றாக நசுக்கப்படுகிறீர்கள். இருப்பினும், நீங்கள் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். ஆனால் உங்களுடைய அந்தஸ்து மிகவும் குறைவாகவே இருக்கும். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகிறது. குறைந்த அந்தஸ்திலுள்ளோரும் அங்கு தேவைப்படுகின்றார்கள். அனைவரும் ஞானப் பாதையைப் பின்பற்றுவார்கள் என்றில்லை. அவ்வாறு பின்பற்றுவார்களாயின், பாபாவிற்கு ஏராளமான குழந்தைகள் இருப்பார்கள். அவ்வாறு அவர் அவர்களைக் கண்டுபிடித்தாலும், அது ஒரு குறுகிய காலத்திற்கே. தாய்மார்களாகிய நீங்கள் அதிகளவு புகழப்படுகிறீர்கள். கூறப்படுகிறது: தாய்மார்களுக்கு வந்தனங்கள். ஜெகதாம்பாள் அதிகளவு சேவை செய்ததால், அவருக்குப் பெரிய அளவில் மேளா இடம்பெறுகிறது. அதிகளவு சேவை செய்பவர்கள் பேரரசர்கள் ஆகுகின்றார்கள். தில்வாலா ஆலயத்தில் இருப்பது உங்கள் ஞாபகார்த்தமேயாகும். புத்திரிகளாகிய நீங்கள் அதிகளவு நேரத்தை ஒதுக்க வேண்டும். நீங்கள் உணவு தயாரிக்கும்போது, நினைவிலிருந்தவாறு, அதனை தூய்மையாக தயாரித்தால், அவ்வுணவை உண்பவர்களின்; இதயமும் தூய்மையானதாக ஆகும். மிகச் சிலரே அவ்வாறான உணவைப் பெறுகின்றார்கள். உங்களையே கேளுங்கள்: நான் உணவு தயாரிக்கும்போது, அதனை உண்பவர்களின் இதயம் உருகக் கூடியளவிற்கு, நான் சிவபாபாவின் நினைவில் அதனைத் தயாரிக்கிறேனா? நீங்கள் நினைவில் இருப்பதற்கு மீண்டும் மீண்டும் மறந்து விடுகின்றீர்கள்? பாபா கூறுகிறார்: நீங்கள் இன்னும் பதினாறு சுவர்க்கக் கலைகளும் நிரம்பியவர்கள் ஆகாததால், நீங்கள் மறப்பது நாடகத்தில் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நீங்கள் நிச்சயம் சம்பூரணமானவர்கள் ஆகவேண்டும். பூரணச் சந்திரன் மிகவும் பிரகாசமானது. பின்னர், அது ஒரு கோடு மாத்திரமே எஞ்சியிருக்கும் அளவிற்குத் தேய்ந்து விடுகிறது. அது முழுமையாக இருளாகி, பின்னர் முழுமையாகப் பிரகாசம் ஆகுகிறது. ஆத்மாக்களாகிய நீங்கள் அந்த விகாரங்கள் போன்றவற்றைத் துறந்து, தொடர்ந்து தந்தையை நினைவு செய்தால், நீங்கள் சம்பூரணமானவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் ஒரு சக்கரவர்த்தியாக ஆகுவதற்கு விரும்புகிறீர்கள். ஆனால் அனைவரும் அவ்வாறு ஆகமுடியாது. ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும். சிலர் சற்றேனும் முயற்சி செய்யாததாலேயே, ‘யானைப் படைகள், குதிரைப் படைகள், காலாட் படைகள்’ என்று கூறப்படுகின்றது. வெகுசில மஹாரத்திகளே உள்ளனர். பிரஜைகளும், போர் வீரர்களும் இருக்குமளவிற்கு, கட்டளைத் தளபதிகளும், மேஜர்களும் அதிகளவினர் இருப்பதில்லை. உங்கள் மத்தியிலும் கட்டளைத்தளபதிகளும், மேஜர்களும் அதிகாரிகளும்; இருக்கிறீர்கள். அங்கே காலாட்படைகளும் இருக்கிறார்கள். இது உங்களுடைய ஆன்மிக சேனையாகும். அனைத்தும் நினைவு யாத்திரையிலேயே தங்கியுள்ளது. இதன் மூலமே நீங்கள் சக்தியைப் பெறுகிறீர்கள். நீங்களே எவரும் அறியாத போராளிகள். தந்தையை நினைவு செய்வதன் மூலம் பாவங்களின் குப்பைகள் எரிக்கப்படும். தந்தை கூறுகிறார்: நீங்கள் உங்கள் வியாபாரம் போன்றவற்றைச் செய்யலாம். ஆனால், தந்தையை நினைவு செய்யுங்கள். நீங்கள் பிறவி பிறவியாக, ஒரேயொரு அன்புக்கினியவரின் காதலராக இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் அந்த அன்புக்கினியவரைக் கண்டுபிடித்துவிட்டீர்கள். நீங்கள் அவரை நினைவு செய்ய வேண்டும். முன்னரும் நீங்கள் அவரை நினைவு செய்திருந்தாலும், அதன் மூலம் உங்கள் பாவங்கள் அழிக்கப்படவில்லை. இங்கு நீங்கள் தமோபிரதானிலிருந்து, சதோபிரதான் ஆகவேண்டுமென்று தந்தை உங்களுக்குக் கூறியுள்ளார். ஆத்மாவே இவ்வாறு ஆகவேண்டும். ஆத்மாவே முயற்சி செய்கிறார். பல பிறவிகளி;ன் அழுக்குகளை நீங்கள் இந்த ஒரு பிறவியில் அகற்றவேண்டும். மரண பூமியில் இதுவே இறுதிப் பிறப்பாகும். பின்னர் நீங்கள் அமரத்துவமான பூமிக்குச் செல்ல வேண்டும். தூய்மையாகாது, ஆத்மாக்கள் அங்கு செல்ல முடியாது. அனைவரதும் கர்மக் கணக்குகள் முடிக்கப்பட வேண்டும். பின்னர் நீங்கள் தண்டனையை அனுபவம் செய்தால், உங்களுடைய அந்தஸ்து குறைக்கப்படும். தண்டனையை அனுபவம் செய்யாதவர்கள் மாலையின் எட்டு மணிகள் என்று அழைக்கப்படுகிறார்கள். நவரத்தினங்களைக் கொண்ட மோதிரம் ஒன்று செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு நீங்கள் ஆகுவதற்கு விரும்பினால், தந்தையை நினைவு செய்வதற்கு அதிகளவு முயற்சி செய்ய வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. சங்கம யுகத்தில் உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். கற்பதன் மூலமும், தூய்மையைக் கடைப்பிடிப்பதன் மூலமும் உங்கள் நடத்தையை சீராக்கிக் கொள்ளுங்கள். திரான்ஸ் போன்றவற்றில் எவ்வித ஆர்வத்தையும் கொண்டிருக்காதீர்கள்.

2. உங்களுடைய சரீர ஜீவனோபாயத்திற்கான செயல்களைச் செய்யுங்கள். ஆனால் நீங்கள் சற்று உறங்கவும் வேண்டும் ஏனெனில் இது ஹத்த யோகம் அல்ல. எவ்வாறாயினும், நினைவு யாத்திரையை நீங்கள் என்றுமே மறக்கக்கூடாது. நீங்கள் தயாரித்து பரிமாறுகின்ற உணவு அதனை உண்பவர்களின்;; இதயம் தூய்மையாகும் அளவிற்கு அத்தகைய தூய உணவை மிகவும் யோகயுத்தாகவிருந்து தயாரியுங்கள்.

ஆசீர்வாதம்:
இராஜரிஷியாகவும் உங்களுக்கு அதிபதியாகவும் இருந்து. உங்கள் சூட்சும சக்திகளை வென்றவர்கள் ஆகுவீர்களாக.

நீங்கள் புலன் அங்கங்களை வென்றவர்கள் ஆகுவது இலகுவாகும், ஆனால் உங்கள் மனம், புத்தி, சம்ஸ்காரங்களான உங்கள் சூட்சும சக்திகளை வெற்றி கொள்வதற்கு சூட்சும பயிற்சி தேவையாகும். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு சம்ஸ்காரத்தை அல்லது எண்ணத்தை இலகுவாக பயன்படுத்த இயலுமாக இருப்பதே, உங்கள் சூட்சும சக்திகளை வெற்றி கொள்வது எனப்படுகின்றது. இதுவே இராஜரிஷியின் ஸ்திதியாகும். உங்கள் எண்ணத்தின் சக்திக்கு நீங்கள் கட்டளை பிறப்பித்ததுமே, அரசரின் கட்;டளைக்கு ஏற்ப உடனடியாக செயற்படுவதே சுயத்திற்கு அதிகாரியாக இருப்பதன் அடையாளமாகும். இதனை பயிற்சி செய்வதன் மூலம், நீங்கள் இறுதி பரீட்சைத்தாளில் சித்தியடைவீர்கள்.

சுலோகம்:
சேவை செய்வதனால் நீங்கள் பெறுகின்ற ஆசீர்வாதங்களே அனைத்திலும் மகத்துவமான பரிசாகும்.