09.07.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உண்மையான தந்தையுடன் அகமும் புறமும் நேர்மையாக இருந்தால் மாத்திரமே உங்களால் தேவர்களாக முடியும். பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே தேவதைகளாகிய பின்னர் தேவர்கள் ஆகுகிறீர்கள்.

பாடல்:
இந்த ஞானத்தைச் செவிமடுப்பதற்கும், கிரகிப்பதற்கும் உரிமை உள்ளவர்கள் யார்?

பதில்:
சகலதுறை பாகங்களை நடித்தவர்களும், அதிகளவு பக்தி செய்தவர்களுமே இந்த ஞானத்தைக் கிரகிப்பதில் திறமைசாலிகள் ஆகுவார்கள். அவர்களே உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெறுகின்றார்கள். சிலர் குழந்தைகளாகிய உங்களிடம் வினவுகின்றார்கள்: சமயநூல்களில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா? அவர்களிடம் கூறுங்கள்: உலகிலுள்ள வேறு எவருமே எங்களைப் போன்று சமய நூல்களைக் கற்றவர்களோ அல்லது பக்தி செய்தவர்களோ இல்லை. நாங்கள் இப்பொழுது பக்தியின் பலனைப் பெற்று விட்டதாலேயே இனியும் நாங்கள் பக்தி செய்ய வேண்டிய அவசியமில்லை.

ஓம் சாந்தி.
எல்லையற்ற தந்தை இங்கமர்ந்திருந்து எல்லையற்ற குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆத்மாக்கள் அனைவரதும் தந்தையே ஆத்மாக்கள் அனைவருக்கும் விளங்கப்படுத்துகின்றார்: ஏனெனில் அந்த ஒரேயொருவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். ஆத்மாக்கள் அனைவரும் மனித சரீரங்களில் இருக்கிறார்கள் என்று கூறப்படுகின்றது. ஓர் ஆத்மாவிற்கு சரீரம் இல்லையென்றால், அவரால் பார்க்க முடியாது.. நாடகத்திட்டத்திற்கேற்ப தந்தை சுவர்க்கத்தை ஸ்தாபித்தபோதிலும் தந்தை கூறுகிறார்: நான் சுவர்க்கத்தைப் பார்ப்பதில்லை. சுவர்க்கம் யாருக்காக உருவாக்கப்படுகின்றதோ, அவர்களாலேயே அதனைப் பார்க்க முடியும். உங்களுக்குக் கற்பித்த பின்னர், நான் சரீரம் எடுப்பதில்லை. எனவே, ஒரு சரீரம் இல்லாது, என்னால் எவ்வாறு எதனையும் பார்க்க முடியும்? நான் இங்கும், அங்கும், எங்கும் இருக்கின்றேன் என்றோ அதனால் என்னால் அனைத்தையும் பார்க்க முடியும் என்றோ அல்ல. இல்லை. தந்தையால் நினைவு யாத்திரை செய்ய கற்பிக்கப்படுபவர்களும், தந்தையால் அழகான மலர்களாகளாக ஆக்கப்படும் குழந்தைகளாகிய உங்களையே அவர் பார்க்கின்றார். ‘யோகம்’ என்ற வார்த்தை பக்தி மார்க்கத்திற்குரியதாகும். ஞானக்கடல் மாத்திரமே ஞானத்தைக் கொடுக்கின்றார். அவர் மாத்திரமே சற்குரு என்று அழைக்கப்படுகின்றார். ஏனைய அனைவரும் குருமார்கள் ஆவார்கள். உண்மையைப் பேசுகின்ற ஒரேயொருவரே சத்திய உலகை ஸ்தாபிக்கிறார். பாரதமே சத்திய உலகமாகவிருந்தது, அங்கேயே தேவர்கள் வாழ்ந்தனர். நீங்கள் இப்பொழுது மனிதர்களிலிருந்து தேவர்கள் ஆகுகிறீர்கள். எனவே, அகமும் புறமும் தந்தையுடன் நேர்மையாக இருங்கள் எனக் குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. முன்பு ஒவ்வொரு அடியிலும் பொய்மையே இருந்தது. சுவர்க்கத்தில் நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற விரும்பினால், அவை அனைத்தையும் இப்பொழுது நீங்கள் துறக்க வேண்டும். உங்களில் பலர் சுவர்க்கத்திற்குச் செல்வீர்கள். ஆனால், தந்தையை இனங்கண்ட பின்னரும், உங்கள் பாவங்களை நீங்கள் அழிக்காது விட்டால், தண்டனையை அனுபவம் செய்வதன் மூலமே உங்கள் கர்மக் கணக்குகளைத் தீர்க்க வேண்டும் என்பதால்; நீங்கள் குறைந்த அந்தஸ்தையே பெறுவீர்கள். இராச்சியம் இந்த அதிமங்களகரமான சங்கமயுகத்திலேயே உருவாக்கப்படுகிறது. ஓர் இராச்சியத்தை சத்திய யுகத்திலோ அல்லது கலியுகத்திலோ ஸ்தாபிக்க முடியாது. ஏனெனில் தந்தை சத்திய யுகத்திற்கோ அல்லது கலியுகத்திற்கோ வருவதில்லை. இந்தயுகம் அதிமங்களகரமானதும், உபகாரமிக்க யுகம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நேரத்தில் தந்தை வந்து அனைவருக்கும் நன்மையளிக்கின்றார். சத்தியயுகம் கலியுகத்தின் பின்னர் வருவதாலேயே சங்கமயுகம் இருக்கவேண்டும். இது பழையதும், தூய்மையற்றதுமான உலகம் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். ‘தொலைதூரவாசியே’ என்றொரு பாடல் உள்ளது. அவர் தனது குழந்தைகளை எவ்வாறு அந்நிய தேசத்தில் சந்திக்க முடியும்? ஆம், அவர் அந்நிய நாட்டுக் குழந்தைகளை, அந்நிய நாட்டிலே சந்திக்கின்றார். அவர் யாருடைய சரீரத்தில் பிரவேசிக்கின்றார் என்பதை மிகத் தெளிவாக அவர்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். அவர் தனது சொந்த அறிமுகத்தைக் கொடுப்பதுடன்; அவர் பிரவேசின்றவர் இப்பொழுது அவரது பல பிறவிகளின் இறுதிப் பிறவியில் இருக்கின்றார் என்பதையும் அவர் விளங்கப்படுத்துகின்றார். இது மிகத் தெளிவானதாகும். நீங்கள் இங்கே இன்னமும் முயற்சி செய்பவர்களே: நீங்கள் முற்றிலும் தூய்மையானவர்கள் அல்ல. முற்றிலும் தூய்மையானவர்களே தேவதைகள் என அழைக்கப்படுகின்றார்கள். தூய்மை இல்லாதவர்கள், தூய்மையற்றவர்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள். தேவதை ஆகிய பின்னரே நீங்கள் தேவர்கள் ஆகுகிறீர்கள். சம்பூரண தேவதைகளை நீங்கள் சூட்சும உலகில் பார்க்கின்றீர்கள். அவர்களே தேவதைகள் என்று அழைக்கப்படுகின்றார்கள். தந்தை விளங்கப்படுத்துகின்றார்: குழந்தைகளே, அல்பாவை மாத்திரம் நினைவு செய்யுங்கள். அல்பா என்றால் பாபா. அவர் அல்லா என்றும் அறியப்படுகின்றார். உங்கள் சுவர்க்க ஆஸ்தியை நீங்கள் தந்தையிடமிருந்து பெறுகிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். சுவர்க்கம் எவ்வாறு உருவாக்கப்படுகின்றது? நினைவு யாத்திரையின் மூலமும் ஞானத்தின் மூலமும் ஆகும். பக்திமார்க்கத்தில் இந்த ஞானம் எதுவும் இருப்பதில்லை. ஒரேயொரு தந்தையே பிராமணர்களாகிய உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார். பிராமணர்கள் உச்சிக்குடுமிகள் ஆவார்கள். இப்பொழுது நீங்கள் பிராமணர்கள், பின்னர் நீங்கள் குத்துக்கரண விளையாட்டை விளையாடுகிறீர்கள்: பிராமணர்கள், தேவர்கள், சத்திரியர்கள், வைசியர்கள். இதுவே பல்ரூப வடிவம் எனப்படுகிறது. பல்ரூப வடிவம் பிரம்மா, விஷ்ணு, சங்கரரைக் கொண்டதல்ல. பிராமணர்களின் உச்சிக்குடுமி அவ் வடிவில் காட்டப்படவில்லை. பிரம்மாவின் சரீரத்தினுள் தந்தை பிரவேசிக்கின்றார் என்பது எவருக்குமே தெரியாது. தந்தையே வந்து பிராமணர்களுக்குக் கற்பிப்பதால், பிராமண குலமே அதி மேன்மையான குலமாகும். தந்தை சூத்திரர்களுக்குக் கற்பிப்பதில்லை. அவர் பிராமணர்களாகிய உங்களுக்கு மாத்திரமே கற்பிக்கின்றார். ஓர் இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பதால், இக் கல்விக்கு காலம் எடுக்கின்றது. நீங்கள் அதி மேன்மையான மனிதர்கள் ஆகவேண்டும். புதிய உலகை உருவாக்குபவர் யார்? அதனை தந்தையே உருவாக்குகின்றார். இதனை மறந்துவிடாதீர்கள். மாயை உங்களை இதனை மறக்கச் செய்கிறாள். அதுவே அவளது தொழில் ஆகும். அவள் நினைவு செய்வதற்கு இடையூறு விளைவிக்கும் அளவிற்கு ஞானத்திற்கு இடையூறு விளைவிப்பதில்லை. ஆத்மாக்களாகிய நீங்கள் அதிகளவு குப்பைகளை நிரப்பி வைத்திருக்கின்றீர்கள், தந்தையை நினைவு செய்யாமல் அதனை அகற்ற முடியாது. ‘யோகம்’ என்ற வார்த்தையினால் சில குழந்தைகள் மிகவும் குழப்பமடைகிறார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, என்னால் யோகம் செய்ய முடியவில்லை. உண்மையில், ‘யோகம்’ என்ற வார்த்தை ஹத்தயோகிகளுக்கே உரியது. “பிரம்ம தத்துவத்துடன் யோகம் செய்யுங்கள்” என சந்நியாசிகள் கூறுகிறார்கள். எனினும், பிரம்மதத்துவம் மிகவும் பெரியது. வானிலே நட்சத்திரங்கள் தென்படுவதைப் போன்று, வானத்திற்கும் அப்பால், சூரிய, சந்திர வெளிச்சமே இல்லாத இடத்தில் மேலே சின்னஞ் சிறிய ஆத்மாக்கள் இருக்கின்றார்கள். எனவே பாருங்கள், நீங்கள் அத்தகைய சின்னஞ்சிறிய ரொக்கட்டுகள். இதனாலேயே பாபா கூறுகிறார்: எல்லாவற்றிற்கும் முதலில், நீங்கள் அனைவருக்கும் ஆத்மாவின் ஞானத்தைக் கொடுக்க வேண்டும். கடவுளால் மாத்திரமே இந்த ஞானத்தைக் கொடுக்க முடியும். மக்களுக்கு கடவுளைத் தெரியாதது மட்டுமல்ல, அவர்கள் ஆத்மாக்களைப் பற்றியும் அறியாதுள்ளார்கள். மிகச் சின்னஞ்சிறிய ஆத்மா, அழியாத 84 பிறவிச் சக்கரத்தின் பாகத்தினால் நிரப்பப்பட்டுள்ளார். இதுவே இயற்கையின் அற்புதம் என்று அழைக்கப்படுகின்றது. வேறு ஏதாவதொன்றாக அதனைக் கூறமுடியாது. ஆத்மாக்கள் தொடர்ந்தும் 84 பிறவிச்சக்கரத்தைச் சுற்றி வருகிறார்கள். இச் சக்கரம் ஒவ்வொரு 5000 வருடமும் தொடர்;ந்தும் சுழல்கின்றது. இது நாடகத்திலே நிச்சயிக்கப்பட்டுள்ளது. உலகம் அழிவற்றது. அது ஒருபோதும் அழிக்கப்படுவதில்லை. பிரளயம் இடம்பெற்ற பின்னர் கிருஷ்ணர் தனது பெருவிரலைச் சூப்பியவாறு ஆலம் இலையில் மிதந்து வந்தார் என மக்கள் கூறுகிறார்கள். எனினும், இது நிகழவில்லை. இது இயற்கையின் நியதிக்கு எதிரானது, ஏனெனில் பிரளயம் முழுமையாக ஒருபோதும் இடம்பெறுவதில்லை. ஒரேயொரு தர்மம் ஸ்தாபிக்கப்பட்டு ஏனைய அனைத்துச் சமயங்களும் அழிக்கப்படுகின்றன. இது எக்காலத்திற்கும் தொடர்ந்து நிகழ்கின்றது. இந்நேரத்தில் மூன்று பிரதான சமயங்கள் உள்ளன. இதுவே அதிமங்களகரமான சங்கமயுகமாகும். பழைய உலகிற்கும் புதிய உலகிற்கும் இடையில் இரவிற்கும் பகலுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது. நேற்று புதிதாக இருந்த உலகம், இன்று பழையதாகிவிட்டது. நேற்றைய உலகில் என்ன இருந்தது என்பதை நீங்கள் மாத்திரமே அறிவீர்கள். எச் சமயமாயினும், அச் சமயத்தைச் சேர்ந்தவர்களாலேயே அது ஸ்தாபிக்கப்படுகிறது. ஒரேயொரு ஆத்மா மாத்திரமே வருகின்றாரே அன்றி பலர் வருவதில்லை. பின்னர், படிப்படியாக விரிவாக்கம் இடம்பெறுகிறது. தந்தை கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு எவ்வித சிரமத்தையும் கொடுப்பதில்லை. குழந்தைகளுக்குக் என்னால் எவ்வாறு கஷ்டத்தைக் கொடுக்க முடியும்? அவரே அதி அன்பிற்கினிய தந்தையாவார். அவர் கூறுகிறார்: நானே உங்களுக்கு சற்கதியை அருள்கிறேன். நானே துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருள்பவர். என்னை மாத்திரமே நீங்கள் நினைவு செய்கின்றீர்கள். பக்திமார்க்கத்தில் மக்கள் என்ன செய்கிறார்கள்? என்னை அவர்கள் அதிகளவு அவதூறு செய்தார்கள். கடவுள் ஒருவரே எனக் கூறப்பட்டுள்ளது. ஒரு உலகச் சக்கரமே உள்ளது. வானத்திலே வேறொரு உலகம் உள்ளது என்றல்ல. வானத்திலே நட்சத்திரங்களே உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரத்திலும் ஓர் உலகம் உள்ளது என்றும் அத்துடன் கீழேயும் ஓர் உலகம் உள்ளது என்றும் மக்கள் நினைக்கின்றார்கள். அந்த விடயங்கள் அனைத்தும் பக்தி மார்க்கத்திற்குரியவை ஆகும். அதிமேலான கடவுள் ஒருவர் மாத்திரமே உள்ளார். கூறப்படுகின்றது: முழு உலகிலுமுள்ள சகல ஆத்மாக்களும் உங்களுக்குள் (சிவபாபா) ஒரு மாலை போன்று கோர்க்கப்பட்டுள்ளனர். அதனை உருத்திரரின் எல்லையற்ற மாலை என்றும் அழைக்கலாம். அவர்கள் அனைவரும் ஒன்றாகக் கோர்க்கப்பட்டுள்ளார்கள். மக்கள் இதனையிட்டுப் பாடிய போதிலும், அவர்களுக்கு எதுவுமே புரிவதில்லை. தந்தை வந்து விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளே, நான் சிறிதளவு கஷ்டத்தையும் உங்களுக்குக் கொடுப்பதில்லை. முதலாவதாக பக்தி செய்தவர்களே ஞானத்தில் வேகமாகச் செல்வார்கள் என உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. அவர்கள் அதிகளவு பக்தி செய்திருந்தால், அவர்கள் அதிகளவு பலனையும் பெறுவார்கள். பக்திக்கான பலனை கடவுளே கொடுக்கிறார் எனக் கூறப்பட்டுள்ளது. அவர் ஞானக் கடலாவார். எனவே அவர் நிச்சயமாக ஞானத்தின் பலனைக் கொடுப்பார். பக்தியின் பலனைப்பற்றி எவருக்குமே தெரியாது. பக்தியின் பலன் ஞானமாகும். அதன் மூலம் நீங்கள் சுவர்க்க சந்தோஷம் என்ற ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். ஒரேயொரு தந்தையே வந்து உங்களுக்கு இதன் பலனைக் கொடுக்கின்றார். அதாவது, அவர் உங்களை நரகவாசிகளிலிருந்து சுவர்க்க வாசிகளாக மாற்றுகின்றார். எவருக்கும் இராவணனைப் பற்றித் தெரியாது. இவ்வுலகம் பழையது என அவர்கள் கூறுகிறார்கள். எவ்வளவு காலம் இது பழையதாக உள்ளது? அவர்களால் இதனைக் கணக்கிட முடியாது. தந்தையே மனித உலக விருட்சத்தின் விதையாவார். அவர் சத்தியமானவர். அவரை ஒரு போதும் அழிக்கமுடியாது. இந்த விருட்சம், தலை கீழான விருட்சம் என அழைக்கப்படுகிறது. தந்தை மேலே உள்ளார். ஆத்மாக்கள் மேலே பார்த்துத் தந்தையைக் கூவி அழைக்கிறார்கள். சரீரத்தினால் கூவியழைக்க முடியாது. ஓர் ஆத்மா ஒரு சரீரத்தை விட்டு நீங்கியதும் இன்னொன்றில் பிரவேசிக்கின்றார். பருமனைப் பொறுத்தவரையில் ஆத்மாக்கள் அளவில் ஒருபோதும் அதிகரிப்பதோ அல்லது குறைவடைவதோ இல்லை: அவர்கள் மரணிப்பதும் இல்லை. இந்நாடகம் ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது. நாடகம் முழுவதினதும் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களைத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். அவர் உங்களை ஆஸ்திகர்களாகவும் ஆக்கியுள்ளார். இலக்ஷ்மி நாராயணனுக்கு இந்த ஞானம் இருக்கவில்லை என்றும் உங்களுக்குக் கூறியுள்ளார். அங்கு உங்களுக்கு ஆஸ்திகர்கள் அல்லது நாஸ்திகர்கள் பற்றித் தெரியாது. இந்நேரத்திலேயே தந்தை இதன் அர்த்தத்தை விளங்கப்படுத்துகின்றார். தந்தையையோ அல்லது அவரது படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியையோ அல்லது அதன் ஆயட்காலத்தையோ அறிந்து கொள்ளாதவர்கள் நாஸ்திகர்கள் ஆவார்கள். இந்நேரத்தில் நீங்கள் ஆஸ்திகர்கள் ஆகியுள்ளீர்கள். இந்த விடயம் அங்கு இருப்பதில்லை. இது ஒரு நாடகம். ஒரு வினாடியில் நிகழ்வது எதுவானாலும் மறுவினாடியில் அது மீண்டும் நிகழ்வதில்லை. நாடகம் தொடர்ந்து நகர்ந்துகொண்டே இருக்கிறது. ஒருதிரைப்படம் காட்டப்படும்போது, இரண்டு அல்லது மூன்று மணித்தியாலங்களுக்குப் பின்னரும் அந்தப்படத்தை மறுபடியும் மீண்டும் காட்டும்போது அதே மாதிரியே இடம்பெறுவது போன்று, நடந்து முடிந்த அந்தச் சுருளும் தொடர்ந்து சுழலும். திரைப்படங்களில் கட்டிடங்கள் போன்றவை இடிந்து வீழ்வதும், பின்னர் நீங்கள் அப்படத்தைப் பார்க்கும் போது அதே கட்டிடங்களையே காண்பீர்கள். அதுவும் அதேபோன்றே மீண்டும் இடம்பெறும். இதைப்பற்றிக் குழப்பமடைய வேண்டியதில்லை. பிரதான விடயம். ஆத்மாக்களின் தந்தையாகிய கடவுளைப் பற்றியதாகும். ஆத்மாக்கள் நீண்ட காலமாகப் பரமாத்மாவிடமிருந்து பிரிந்துவிட்டார்கள். அவர்கள் பிரிந்து, தங்கள் பாகத்தை நடிப்பதற்காக இங்கு கீழே வந்துவிட்டார்கள். நீங்கள் முழமையாக 5000 வருடங்களுக்குப் பிரிந்திருந்தீர்கள். இனிய குழந்தைகளாகிய நீங்கள் சகலதுறைப் பாகங்களையும் பெற்றுவிட்டீர்கள். இதனாலேயே, நீங்கள் இந்த ஞானத்திற்கு உரிமையுள்ளவர்கள் என விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. அதிக பக்தி செய்தவர்களே ஞானத்தில் விரைவாக முன்னேறுவதுடன் உயர்ந்ததோர் அந்தஸ்தையும் பெறுவார்கள். முதலாவதாக சிவபாபாவும் பின்னர் தேவர்களும் பூஜிக்கப்பட்டார்கள். காலம் கடந்த பின்னர், ஐந்து தத்துவங்களையும் பூஜித்ததனால் நீங்கள் கலப்படமாகி விட்டீர்கள். இப்பொழுது தந்தை உங்களை எல்லையற்றதிற்குள் அழைத்துச் செல்கிறார். ஆனால் அம்மக்கள் உங்களை எல்லையற்ற அறியாமை என்ற பக்திக்குள் இட்டுச் செல்கிறார்கள். இப்பொழுது தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, தந்தையாகிய என்னை நினைவு செய்யுங்கள். எனினும், அவர்கள் இங்கிருந்து சென்ற பின்னர் மாயை அவர்களை மறக்கச் செய்கிறாள். கருப்பையில் இருக்கும் ஓர் ஆத்மா, வருந்தி தான் மேலும் பாவச் செயல்களைச் செய்யமாட்டேன் எனச் சத்தியம் செய்த பின்னர், அவர் வெளியே வரும் போது அதனை மறந்துவிடுவது போன்றே, இங்கும் அவர்கள் இங்கிருந்து வெளியேறியதும் அவர்கள் மறந்து விடுகிறார்கள். இது மறந்து விடுவதும், மறக்காமல் இருப்பதற்குமான ஒரு நாடகமாகும். நீங்கள் இப்பொழுது தந்தையின் தத்தெடுக்கப்பட்ட குழந்தைகளாகுகிறீர்கள். அவரே சிவபாபா. அவர் ஆத்மாக்கள் அனைவரதும் எல்லையற்ற தந்தையாவார். தந்தை தொலைதூரத்திலிருந்தே வருகிறார். அவருடைய வீடு பரந்தாமம். அவர் பரந்தாமத்திலிருந்து வரும்போது, நிச்சயமாகக்; குழந்தைகளுக்காக ஒரு பரிசைக் கொண்டுவருகிறார். அவர் தனது உள்ளங் கைகளில் வைகுந்தத்தைப் பரிசாகக் கொண்டு வருகிறார். தந்தை கூறுகிறார்: ஒரு விநாடியில் உங்கள் சுவர்க்க இராச்சியத்தை பெற்றுக் கொள்ளுங்கள். தந்தையை இனங்கண்டு கொள்ளுங்கள். அவர் ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தையாவார். அவர் கூறுகிறார்: நானே உங்கள் தந்தை ஆவேன். எவ்வாறு நான் வருகிறேன் என்பதையும் நான் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றேன். நிச்சயமாக எனக்கு ஓர் இரதம் தேவை. எந்த இரதம்? நான் மகாத்மாக்கள் எவரையும் இரதமாக ஏற்றுக் கொள்ள முடியாது. நீங்கள் பிரம்மாவைக் கடவுள் என்றும், பிரம்மா ஒரு தேவர் என்றும் கூறுவதாக மனிதர்கள் கூறுகிறார்கள். ஓ! ஆனால், நாங்கள் இதனைக் கூறவில்லை. முழு விருட்சமும் தமோப்பிரதானாகும் போதே, விருட்சத்தின் உச்சியிலே அவர் நிற்பதாகக் காட்டியுள்ளார்கள். பிரம்மாவை அங்கு காட்டியிருப்பதால், இதுவே அவரது பல பிறவிகளின் இறுதிப்பிறவியாக இருக்கும். பாபாவே கூறுகின்றார்: நான் ஓய்வு ஸ்திதியை அடையும் போது, எனது பல பிறவிகளின் இறுதிப்பிறவியில் தந்தை எனக்குள் பிரவேசிக்கின்றார். அவர் வந்து எனது வியாபாரம் போன்ற முழவதையும் என்னைத் துறக்கச் செய்தார். கடவுளைச் சந்திப்பதற்காக, மக்கள் 60 வயதிற்குப்பின் பக்தி செய்ய ஆரம்பிக்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் அனைவரும் மனிதர்களின் கட்டளைகளையே பின்பற்றினீர்கள். பாபா இப்பொழுது உங்களுக்கு ஸ்ரீமத்தைக் கொடுக்கின்றார். மனிதர்களே சமய நூல்களையும் எழுதுகின்றார்கள். தேவர்கள் அவற்றை எழுதுவதோ அல்லது கற்பதோ இல்லை. சத்திய யுகத்தில் சமய நூல்களோ, பக்தி செய்யப்படுவதோ இல்லை. சமயநூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும் பௌதீகச் சடங்குகளாகும். ஆனால் இங்கு அவ்வாறில்லை. பாபாவே உங்களுக்கு ஞானத்தைக் கொடுக்கின்றார் என்பதை நீ;ங்கள் பார்க்கலாம். பக்தி மார்க்கத்தில் நீங்கள் பல சமயநூல்களைக் கற்றுள்ளீர்கள். ‘நீங்கள் வேதங்களையும், சமய நூல்களையும் நம்புகிறீர்களா?’ என உங்களை எவராவது வினவினால், அவர்களிடம் கூறுங்கள்: நாங்கள் அவற்றை ஏனைய மனிதர்களைவிட, மேலும் அதிகளவு அவற்றை நம்புகின்றோம். ஆரம்பத்தில், நாங்களே கலப்படமற்ற பக்தியை ஆரம்பித்தவர்கள் ஆவோம். நாங்கள் இப்பொழுது ஞானத்தைப் பெற்றுள்ளோம். ஞானத்தின் மூலமே சற்கதி கிடைக்கும் என்பதால் நாங்கள் ஏன் பக்தி செய்ய வேண்டும்? தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, தீயதைக் கேட்காதீர்கள்! தீயதைப் பார்க்காதீர்கள்! ஆகவே, தந்தை மிகவும் எளியமுறையில் விளங்கப்படுத்துகின்றார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருங்கள். நான் ஓர் ஆத்மா. அவர்கள் அல்லா என அவர்களே கூறுகிறார்கள். உங்களையே ஆத்மாக்கள் அதாவது தந்தையின் குழந்தைகள் எனக்கருதுங்கள் என்ற கற்பித்தல்களை நீங்கள் பெறுகிறீர்கள். இதனை மாயை மீண்டும், மீண்டும் உங்களை மறந்துவிடச் செய்து விடுகிறாள். சரீர உணர்விற்குள் வருவதனாலேயே நீங்கள்; பிழையான வகையில் செயல்களைச் செய்கிறீர்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: குழந்தைகளே, தந்தையை மறந்து விடாதீர்கள். நேரத்தை வீணாக்காதீர்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. படைப்பவரையும், படைப்பின் இரகசியங்களையும் மிகச் சரியாகப் புரிந்து கொண்டு ஆஸ்திகர்கள் ஆகுங்கள். நாடகத்தின் ஞானத்தைப் பற்றிக் குழப்பமடையாதீர்கள். எல்லைக்குட்பட்ட அனைத்திலிருந்தும் உங்கள் புத்தியை அகற்றி, எல்லையற்றதிற்குள் எடுத்துச் செல்லுங்கள்.

2. சூட்சும உலகவாசியான ஒரு தேவதை ஆகுவதற்கு முற்றிலும் தூய்மையாகுங்கள். நினைவு சக்தியுடன் ஆத்மாக்களில் நிறைந்திருக்கும். குப்பைகள் அனைத்தையும் அகற்றி, சுத்தமாகுங்கள்.

ஆசீர்வாதம்:
இறைவனின் இனிமையை அனுபவம் செய்வதன் மூலம் சதா ஸ்திரமாகவிருந்து நிலையான ஸ்திதியில் நிலைத்திருக்கின்ற ஒரு மேன்மையான ஆத்மா ஆகுவீர்களாக.

இறைவனின் இனிமையை அனுபவம் செய்கின்ற குழந்தைகள், உலகத்தின் சுவைகள் அனைத்தையும் சாதாரணமாகவே உணர்வார்கள். ஒன்றே ஒன்று இனிமையாக இருப்பதால் உங்கள் கவனம் அந்த ஒருவரிடம் மாத்திரமே செல்லுகின்றது, அப்படித்தானே? உங்கள் மனம் அந்த ஒருவரிடம் இலகுவாகச் செல்கின்றது, அதற்கு எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. தந்தையின் அன்பு, தந்தையின் உதவி, தந்தையின் சகவாசம் தந்தையின் அனைத்து பேறுகளும் உங்கள் ஸ்திதியை நிலையாகவும் ஸ்திரமாகவும் வைத்திருக்க உதவுகின்றது. அத்தகைய நிலையான ஸ்திரமான ஸ்திதியில் நிலைத்திருக்கின்ற ஆத்மாக்கள் மாத்திரமே மேன்மையானவர்கள் ஆவார்கள்.

சுலோகம்:
உங்களுக்குள் அனைத்து குப்பைகளையும் அமிழ்த்திக் கொண்டு, இரத்தினங்களை கொடுப்;பதே மாஸ்டர் கடல் ஆகுவதாகும்.