09.10.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது முட்களிலிருந்து மலர்களாக ஆகுகின்றீர்கள். நீங்கள் எப்பொழுதும் ஏனையோருக்குச் சந்தோஷத்தைக் கொடுக்க வேண்டும். நீங்கள் எவரையும் சந்தோஷம் அற்றவர் ஆக்கக்கூடாது.
கேள்வி:
முதற்தரமான முயற்சியைச் செய்கின்ற குழந்தைகள் தங்கள் இதயங்களில் இருந்து எவ்வாறான வார்த்தைகளைப் பேசுவார்கள்?பதில்:
“பாபா கவலைப்படாதீர்கள், நான் நிச்சயமாகத் திறமைச்சித்தி எய்தி அனைவருக்கும் காட்டுவேன்”. அவர்களது பதிவேடுகளும் மிகச் சிறந்தவையாக இருக்கும். “நான் இன்னமும் ஒரு முயற்சியாளரே” போன்ற வார்த்தைகளை அவர்கள் ஒருபொழுதும் பேச மாட்டார்கள். மாயை சிறிதளவேனும் உங்களை அசைக்க முடியாதவாறு நீங்கள் முயற்சி செய்து, அத்தகைய மகாவீரர் ஆகவேண்டும்.ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான, ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் ஆன்மீகத் தந்தையுடன் கற்கின்றீர்கள். நீங்கள் உங்களை ஆத்மாக்களாகக் கருத வேண்டும். அசரீரியான ஆத்மாக்களாகிய, குழந்தைகளாகிய நாங்கள் அசரீரியான தந்தையுடன் கற்கின்றோம். உலகில், பௌதீக ஆசிரியர்கள் மாத்திரமே உங்களுக்குக் கற்பிப்பவர்கள். இங்கு அசரீரியான ஆசிரியராகிய, அசரீரியான தந்தையே எங்களுக்குக் கற்பிக்கின்றார். இவருக்கு எந்தப் பெறுமதியும் இல்லை. எல்லையற்ற தந்தையாகிய சிவபாபாவே வந்து இவருக்குப் பெறுமதி கொடுக்கிறார். அதிபெறுமதி வாய்ந்த, சிவபாபாவே வந்து சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். அவர் அத்தகைய மேன்மையான பணியை மேற்கொள்கின்றார்! தந்தை அதிமேன்மையானவர் என நினைவு கூரப்படுகின்றார். ஆகவே குழந்தைகளாகிய நீங்களும் மேன்மையானவர்கள் ஆக வேண்டும். தந்தையே அனைவரிலும் அதி உயர்வானவர் என்பது உங்களுக்குத் தெரியும். இப்பொழுது உண்மையிலேயே சுவர்க்க இராச்சியம் ஸ்தாபிக்கப்படுகின்றது என்பது உங்கள் புத்தியில் இருக்கின்றது. இது சத்தியயுகத்தினதும் கலியுகத்தினதும் சங்கமமாகிய சங்கமயுகமாகும். சங்கமயுகத்திலேயே நீங்கள் அதிமேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். மக்கள் “புருஷோத்தம்” (அதிமேன்மையானவர்) என்ற வார்த்தையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. அதி மேன்மையானவர்கள், பின்னர் அதி தாழ்வானவர்கள் ஆகுகின்றார்கள். தூய்மைக்கும் தூய்மை அற்றதிற்கும் இடையில் அதிக வித்தியாசம் உள்ளது. தேவர்களை வழிபடுபவர்கள் “நீங்கள் அனைத்துத் தெய்வீகக் குணங்களும் நிறைந்தவர்கள்” எனக் கூறுகின்றார்கள். நீங்களே உலக அதிபதிகள் ஆவீர்கள். பின்னர் அவர்கள் தாங்களே கூறுகின்றார்கள்: நாங்களே நச்சாற்றில் தத்தளிப்பவர்கள். இதனை அவர்கள் கூறவேண்டும் என்பதற்காகவே கூறுகின்றார்கள். அவர்கள் உண்மையில் அதனை நம்புவதில்லை. நாடகம் தனித்துவமானதும், அற்புதமானதும் ஆகும். நீங்கள் ஒவ்வொரு சக்கரத்திலும் அத்தகைய விடயங்களைச் செவிமடுக்கின்றீர்கள். தந்தை வந்து உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். தந்தை மீது முழுமையான அன்பைக் கொண்டிருப்பவர்கள், அந்த மகத்தான ஈர்ப்பை உணர்கின்றனர். ஆத்மாக்கள் எவ்வாறு தந்தையைச் சந்திக்க முடியும்? பௌதீக உலகிலேயே சந்திப்பு இடம்பெறுகிறது. அசரீரி உலகிலே ஈர்ப்பை அனுபவம் செய்வது என்ற கேள்விக்கே இடமில்லை. அங்கு ஆத்மாக்கள் அனைவரும் தூய்மையானவர்கள். அனைத்துத் துருவும் அகற்றப்பட்டுள்ளது. அங்கு ஈர்ப்பு எனும் கேள்விக்கே இடமில்லை. அன்பிற்கான கேள்வி இங்கேயே உள்ளது. அத்தகைய பாபாவை நீங்கள் முழுமையாக மிகவும் உறுதியாகப் பற்றிப் பிடிக்க வேண்டும். “பாபா நீங்கள் அத்தகைய மகத்தான அற்புதங்களைப் புரிகின்றீர்கள்! நீங்கள் எங்களின் வாழ்வுகளை மிக அற்புதமானவை ஆக்குகின்றீர்கள்!” அதிகளவான அன்பு தேவைப்படுகின்றது. அத்தகைய அன்பு ஏன் இருப்பதில்லை? ஏனெனில் ஆத்மா துருவினால் மூடப்பட்டுள்ளார். நீங்கள் நினைவு யாத்திரையைக் கொண்டிரா விட்டால், உங்களது துரு அகற்றப்பட முடியாததுடன், உங்களால் அவ்வாறு அன்பானவர்களாகவும் முடியாது. மலர்களாகிய நீங்கள் இங்கே மலர வேண்டும். அங்கே நீங்கள் பிறவிபிறவியாக மலர்களாக ஆகுவதற்கு முன்னர், இங்கு மலர்களாக வேண்டும். நீங்கள் முட்களில் இருந்து மலர்களாக மாறுகின்றீர்கள் என்று அதிகளவு சந்தோஷத்தில் இருக்க வேண்டும்! மலர்கள் எப்பொழுதும் அனைவருக்கும் சந்தோஷத்தையே கொடுக்கின்றன. அனைவரும் மலர்களைத் தங்கள் கண்களில் ஒற்றிக் கொள்கிறார்கள், அவற்றின் நறுமணத்தை நுகர்கிறார்கள். அவர்கள் மலர்களிலிருந்து வாசனைத் திரவியங்களை உருவாக்குகின்றார்கள். அவர்கள் பன்னீரையும் தயாரிக்கின்றனர். தந்தையே உங்களை மலர்கள் ஆக்குபவர். குழந்தைகளாகிய நீங்கள் ஏன் சந்தோஷம் அற்றுள்ளீர்கள் என பாபா அதிசயிக்கின்றார். அவர் உங்களைச் சத்தியயுகத்து மலர்கள் ஆக்குகின்றார். மலர்கள் பழையதாகியதும் முழுமையாக வாடிவிடுகின்றன. நீங்கள் சாதாரண மனிதர்களில் இருந்து தேவர்களாக மாறுகின்றீர்கள் என்பது உங்கள் புத்திக்குத் தெரியும். தமோபிரதான் மனிதர்களுக்கும் சதோபிரதான் தேவர்களுக்கும் இடையில் அதிகளவு வித்தியாசம் உள்ளது! வேறு எவராலும் அன்றி, தந்தையால் மாத்திரமே இவற்றை விளங்கப்படுத்த முடியும். நீங்கள் தேவர்கள் ஆகுவதற்கே கற்கின்றீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். கல்வியைப் பற்றிய போதை உள்ளது. நீங்கள் இப்பொழுது பாபாவுடன் கற்கின்றீர்கள் எனவும், பின்னர் உலக அதிபதிகள் ஆகுவீர்கள் எனவும் நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். உங்கள் கல்வி எதிர்காலத்திற்கானது. எப்பொழுதாவது எதிர்காலத்திற்கான எந்தக் கல்வியைப் பற்றியேனும் கேள்விப்பட்டுள்ளீர்களா? நீங்கள் புதிய உலகிற்காகவும், புதிய பிறவிக்காகவுமே கற்கின்றீர்கள் என்று நீங்களே கூறுகின்றீர்கள். தந்தை உங்களுக்குச் செயலினதும், நடுநிலைச் செயலினதும் பாவச்செயலினதும் தத்துவத்தை விளங்கப்படுத்துகின்றார். இதுவும் கீதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கீதையைக் கற்பவர்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. சத்தியயுகத்தில் செயல்கள் நடுநிலையானவை என்றும், இராவண இராச்சியம் ஆரம்பிக்கும் பொழுதே செயல்கள் பாவகரமானவை ஆகுகின்றன என்றும் நீங்கள் இப்பொழுது தந்தையிடம் இருந்து அறிந்து கொள்கிறீர்கள். 63 பிறவிகளாக நீங்கள் அத்தகைய பாவகரமான செயல்களையே செய்து வருகின்றீர்கள். உங்களின் தலையில் பாரிய பாவச்சுமை உள்ளது. ஒவ்வொருவரும் ஒரு பாவாத்மா ஆகியுள்ளனர். கடந்த காலப் பாவங்கள் எவ்வாறு அகற்றப்பட முடியும்? நீங்கள் முதலில் சதோபிரதானாக இருந்து, பின்னர் 84 பிறவிகளை எடுத்தீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். தந்தை உங்களை நாடகத்தை இனங்காணச் செய்துள்ளார். ஆரம்பத்தில் முதல் இராச்சியத்தில் வருபவர்கள் 84 பிறவிகளை எடுப்பார்கள். பின்னர் தந்தை வந்து உங்கள் இராச்சிய பாக்கியத்தை உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் இப்பொழுது உங்கள் இராச்சியத்தைக் கோருகின்றீர்கள். எவ்வாறு நீங்கள் 84 பிறவிச் சக்கரத்தைச் சுற்றி வந்தீர்கள் என்பதை இப்பொழுது நீங்கள் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் இப்பொழுது மீண்டும் தூய்மையாக வேண்டும். பாபாவை நினைவு செய்வதன் மூலம் ஆத்மாக்கள் தூய்மையாகி, பின்னர் அவர்களின் பழைய சரீரங்கள் அழிக்கப்படுகின்றன. குழந்தைகளாகிய நீங்கள் முடிவற்ற சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். தந்தை தந்தையாகவும், ஆசிரியராகவும் குருவாகவும் இருப்பதுடன், அதிமேலான அவரே மூவராகவும் இருக்கின்றார் என்ற புகழை நீங்கள் முன்னர் என்றுமே கேள்விப்பட்டதில்லை. மூவரும் ஒருவரே: உண்மையான தந்தை, உண்மையான ஆசிரியர், உண்மையான குரு. ஆத்மாக்களின் அனைவரதும் தந்தையும் ஞானக்கடலுமாகிய பாபாவே இப்பொழுது எங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் உணர்கின்றீர்கள். அவர் ஒரு வழிமுறையை உருவாக்குகின்றார். பல நல்ல கருத்துக்கள் தொடர்ந்தும் சஞ்சிகைகளில் வெளிவருகின்றன. வர்ண சஞ்சிகை வெளிவருகின்ற சாத்தியமும் உள்ளது. அவற்றில் எழுத்துக்கள் மிகச்சிறியனவாக இருக்கின்றன. அனைத்துப் படங்களும் ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளன. எவராலும் எங்கும் அவற்றை உருவாக்க முடியும். ஒவ்வொரு படத்திலும் உள்ள ஒவ்வொருவரின் தொழிலும் உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு சிவபாபாவின் தொழிலும் தெரியும். குழந்தைகளுக்கு அவர்களது தந்தையின் தொழில் பற்றி நிச்சயமாக அவர்களது தந்தையினால் கூறப்படும். முன்னர் உங்களுக்கு எதுவும் தெரியாது. சிறிய குழந்தைகளுக்குக் கற்பது பற்றி என்ன தெரியும்? அவர்கள் ஐந்தாவது வயதிலேயே கற்க ஆரம்பிக்கின்றனர். பின்னர் உயர் பரீட்சையில் சித்தி எய்துவதற்கு, அவர்களுக்குப் பல வருடங்கள் எடுக்கின்றன. நீங்கள் மிகவும் சாதாரணமானவர்கள், இருந்தும் நீங்கள் என்னவாக ஆகுகின்றீர்கள் எனப் பாருங்கள்! உலக அதிபதிகள்! நீங்கள் அதிகளவு அலங்கரிக்கப்படுவீர்கள். “வாயில் தங்கக் கரண்டி” என்பதே அந்த இடத்தின் புகழாகும். இப்பொழுதும் கூட சில சிறந்த குழந்தைகள் தங்கள் சரீரங்களை நீங்கும்பொழுது, மிகச்சிறந்த வீடுகளில் பிறப்பு எடுக்கின்றார்கள். அதனால் அவர்கள் தங்கள் வாயில் தங்கக் கரண்டியைப் பெறுகின்றனர். அவர்கள் நிச்சயமாக முன்னதாக எவரிடமாவது செல்வார்கள். ஸ்ரீ கிருஷ்ணர் மாத்திரமே முதலாவது விகாரமற்ற பிறவியை எடுக்கின்றார். இங்கு சரீரத்தை நீக்கிவிட்டுச் செல்கின்ற ஏனைய அனைவரும் விகாரமானவர்களுக்கே பிறப்பார்கள். எவ்வாறாயினும் அவர்கள் கருப்பையில் அதிகளவான தண்டணையை அனுபவம் செய்ய மாட்டார்கள். அவர்கள் மிகச்சிறந்த வீடுகளிலேயே பிறப்பார்கள். அவர்களின் பாவங்கள் அழிக்கப்பட்டிருப்பதுடன், சிறிதளவு மாத்திரமே எஞ்சியுள்ளது. அவர்கள் அந்தளவுக்கு வேதனையை அனுபவம் செய்ய மாட்டார்கள். நீங்கள் முன்னேறிச் செல்லும் பொழுது, எவ்வாறு சிறந்த அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர்களும் இளவரசிகளும் உங்களை நாடி வருவார்கள் என்பதைப் பார்ப்பீர்கள். தந்தை உங்களை அதிகளவில் புகழ்கின்றார்! ஒரு லௌதீகத் தந்தை எவ்வாறு தனது குழந்தைகளை மகிழ்விப்பாரோ, அதேபோன்று நான் உங்களை என்னை விடவும் அதிமேன்மையானவர்கள் ஆக்குகின்றேன். ஒரு லௌகீகத் தந்தை 60 வயதை அடைந்ததும், இளைப்பாறும் நிலைக்குச் செல்வதுடன், பக்தி செய்வதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றார். அவர்களுக்கு எவரும் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. இந்த ஞானத்தின் மூலம் நானே அனைவருக்கும் சற்கதியை அளிக்கின்றேன். உங்களால் அனைவரும் நன்மை அடைகின்றனர், ஏனெனில் புதிய உலகம் நிச்சயமாக உங்களுக்குத் தேவைப்படுகின்றது. நீங்கள் சந்தோஷம் மிக்கவர்கள் ஆகுகின்றீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் சைவ உணவு மாநாட்டிற்கு ஓர் அழைப்பிதழைப் பெற்றுள்ளீர்கள். பாபா தொடர்ந்தும் தைரியத்தைக் கொண்டிருக்குமாறு உங்களுக்குக் கூறுகிறார். உங்களது ஒலி டெல்லி போன்ற நகரங்களில் எங்கும் பரவ வேண்டும். மூட நம்பிக்கையினால் உலகில் பெருமளவு பக்தி இருக்கின்றது. சத்திய, திரேதா யுகங்களில் பக்தி என்ற கேள்விக்கே இடமில்லை. அந்தத் திணைக்களம் முற்றிலும் வேறானது. இந்த ஞானத்தின் வெகுமதி அரைக் கல்பத்திற்கு நீடிக்கின்றது. நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் இருந்து 21 பிறவிகளுக்கான ஓர் ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். நீங்கள் 21 சந்ததிக்கு சந்தோஷமாக இருக்கின்றீர்கள். வயது முதிர்ந்த நிலையிலும் அங்கே துன்பம் என்று குறிப்பே இருப்பதில்லை. நீங்கள் உங்களது முழு ஆயுட்காலமும் சந்தோஷமாகவே இருக்கின்றீர்கள். நீங்கள் முயற்சி செய்து உங்கள் ஆஸ்தியைக் கோரிக்கொள்ளும் அளவிற்கேற்ப, நீங்கள் கோருகின்ற அந்தஸ்தும் உயர்வானதாக இருக்கும். ஆகவே நீங்கள் முழுமையான முயற்சியைச் செய்ய வேண்டும். எவ்வாறு வரிசைக்கிரமமாக மாலை உருவாக்கப்பட்டுள்ளது என உங்களால் பார்க்க முடியும். நீங்கள் ஒவ்வொருவரும் செய்யும் முயற்சிக்கேற்பவே அது உருவாக்கப்படுகின்றது. நீங்கள் அற்புதமான மாணவர்கள். பாடசாலைக் குழந்தைகள் ஓர் இலக்கை நோக்கி ஓட வைக்கப்படுகின்றனர். பாபா கூறுகின்றார்: நீங்களும் உங்கள் இலக்கை நோக்கி ஓடிச்சென்று, இங்கு திரும்ப வேண்டும். நினைவு யாத்திரையில் விரைந்து சென்று முதலாம் இலக்கத்தைக் கோரிக் கொள்ளுங்கள். நினைவு யாத்திரையே பிரதான விடயமாகும். சில குழந்தைகள் கூறுகின்றனர்: பாபா நான் மறந்து விடுகின்றேன். ஓ! உங்களை உலக அதிபதி ஆக்குகின்ற தந்தையை நீங்கள் மறந்து விடுகின்றீர்கள்! புயல்கள் வந்தாலும் தந்தை உங்களுக்கு தைரியத்தைக் கொடுக்கின்றார். அத்துடன் அவர் கூறுகின்றார்: இது ஒரு யுத்தகளம். உண்மையில் தந்தை யுதிஷ்டிரர் (போரிடுவது பற்றி உங்களுக்கு கற்பிப்பவர்) எனவும் அழைக்கப்பட வேண்டும். ஏனெனில் அவர் உங்களுக்குப் போரிடுவது பற்றிக் கற்பிக்கின்றார். தந்தையாகிய யுதிஷ்டிரர் உங்களுக்கு மாயையுடன் எவ்வாறு போரிடுவதெனக் கற்பிக்கின்றார். இந்த நேரத்தில் இது ஒரு யுத்த களமாகும். தந்தை கூறுகின்றார்: காமமே கொடிய எதிரி. அதனை வெற்றி கொள்வதன் மூலம் நீங்கள் உலகை வெற்றி கொள்கின்றீர்கள். உங்கள் உதடுகளின் மூலம் நீங்கள் எதனையும் உச்சரிக்கத் தேவையில்லை. நீங்கள் மௌனமாக இருக்க வேண்டும். அவர்கள் பக்தி மார்க்கத்தில் அதிகளவு முயற்சி செய்கின்றனர். அவர்கள் உள்ளுர “இராமா, இராமா” என உச்சரிக்கின்றனர். அது தீவிர பக்தி என அழைக்கப்படுகின்றது. பாபா உங்களைத் தனது மாலையில் ஒருவர் ஆக்குகின்றார் என்பது உங்களுக்குத் தெரியும். நீங்கள் பின்னர் வழிபடப் போகின்ற உருத்திர மாலையின் மணிகளாகப் போகின்றீர்கள். உருத்திர மாலையும், உருண்டா மாலையும் உருவாக்கப்படுகின்றன. விஷ்ணு மாலை, உருண்டா மாலை எனவும் அழைக்கப்படுகின்றது. நீங்கள் விஷ்ணுவின் கழுத்து மாலை ஆகுகின்றீர்கள். எப்படி நீங்கள் அவ்வாறு ஆகுகின்றீர்கள்? நீங்கள் ஓட்டப்பந்தயத்தில் வெற்றி பெறும் பொழுதாகும். நீங்கள் தந்தையை நினைவு செய்வதுடன், 84 பிறவிச் சக்கரத்தையும் அறிந்திருக்க வேண்டும். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதன் மூலம் மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் எவ்வாறு கலங்கரை விளக்கங்கள் ஆகுகின்றீர்கள்? நீங்கள் ஒரு கண்ணில் முக்தி தாமத்தையும், மற்றைய கண்ணில் ஜீவன்முக்தி தாமத்தையும் கொண்டிருக்கிறீர்கள். இந்தச் சக்கரத்தை அறிந்து கொள்வதன் மூலம் நீங்கள் பூகோள ஆட்சியாளர்களாகவும், சந்தோஷ தாமத்தின் அதிபதிகளாகவும் ஆகுகின்றீர்கள். ஆத்மாக்களாகிய நாங்கள் இப்பொழுது எங்கள் வீட்டிற்குத் திரும்ப இருக்கின்றோம் என ஆத்மாக்களாகிய நீங்கள் கூறுகின்றீர்கள். அதனை நினைவு செய்வதனால், நாங்கள் அங்கு செல்கின்றோம். இதுவே நினைவு யாத்திரையாகும். உங்களது யாத்திரை எவ்வளவு முதற்தரமானதெனப் பாருங்கள்! நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும் பொழுதே பாற்கடலுக்குச் செல்வீர்கள் என்பது பாபாவிற்குத் தெரியும். விஷ்ணு பால் ஏரியில் சயனித்திருப்பதாகக் காட்டப்பட்டுள்ளது. தந்தையை நினைவு செய்வதன் மூலம் நீங்கள் பாற்கடலுக்குச் செல்வீர்கள். பாற்கடல் இப்பொழுது இங்கு இல்லை. அந்த ஏரியை உருவாக்கியவர்கள் நிச்சயமாக அதனுள் பாலை ஊற்றியிருக்க வேண்டும். முன்னர் பால் மிக மலிவாக இருந்தது. ஒரு சதத்திற்கு, ஒரு குடம் பாலை அவர்கள் கொடுத்தார்கள். ஆகவே அதனால் நிரப்பப்பட்ட ஓர் ஏரி ஏன் இருக்க முடியாது? இப்பொழுது பால் எதுவும் இல்லை. எங்கும் நீரே உள்ளது. பாபா நேபாளத்தில் விஷ்ணுவின் மிகப் பெரியதொரு படத்தைப் பார்த்திருக்கின்றார். அவர்கள் அவரைக் கருநீலமாக ஆக்கியுள்ளார்கள். இப்பொழுது நீங்கள் நினைவு யாத்திரையின் மூலமும், சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுவதன் மூலமும் விஷ்ணுதாமத்தின் அதிபதிகள் ஆகுகின்றீர்கள். நீங்கள் இங்கேயே தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். இது அதிமேன்மையான சங்கமயுகமாகும். கற்பதனால், நீங்கள் அதி மேன்மையானவர்கள் ஆகுகின்றீர்கள். ஆத்மாவின் சீரழிந்த சுபாவம் முடிவடைந்து விடுகின்றது. நீங்கள் போதையடைய வேண்டும் என்பதற்காக, பாபா தினமும் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். சிலர் கூறுகின்றார்கள்: பாபா, நான் முயற்சி செய்கின்றேன். பாபாவிடம் திறந்த இதயத்துடன் கூறுங்கள்: பாபா என்னைப் பற்றி கவலைப்படாதீர்கள்! நான் நிச்சயமாகத் திறமைச்சித்தி அடைவேன். மிக நன்றாகக் கற்கின்ற முதற்தரமான குழந்தைகள், மிக நல்லதோர் பதிவேட்டைக் கொண்டிருப்பார்கள். நீங்கள் பாபாவுக்குக் கூற வேண்டும்: பாபா, கவலைப்படாதீர்கள்! நான் நிச்சயமாக அவர்களைப் போல் ஆகுவேன். பல ஆசிரியர்கள் முதற் தரமானவர்கள் என்பது பாபாவுக்குத் தெரியும். அனைவரும் முதற்தரமானவர்கள் ஆகுகின்றார்கள் என்றில்லை. நல்ல ஆசிரியர்கள் ஒருவரை ஒருவர் அறிவார்கள். மகாராத்திகளின் வரிசைக்கு அனைவரும் கொண்டுவரப்பட முடியாது. பிரபல்யமானவர்களும் வரக்கூடிய முறையில் நல்ல மிகப்பெரிய நிலையங்களைத் திறவுங்கள். சென்ற கல்பத்திலும் பொக்கிஷக் களஞ்சியம் நிரம்பியிருந்தது. சக்கரவர்த்திகளுக்கு எல்லாம் சக்கரவர்த்தியான பாபா நிச்சயமாக உங்கள் பொக்கிஷக் களஞ்சியத்தை நிரப்புவார். இரு தந்தையர்களுக்கும் பல குழந்தைகள் உள்ளார்கள். பிரஜாபிதா பிரம்மாவுக்கு எத்தனை குழந்தைகள் உள்ளார்கள்? சிலர் ஏழைகள், சிலர் சாதாரணமானவர்கள், ஏனையோர் செல்வந்தர்கள். முன்னைய சக்கரத்திலும் இவரின் மூலமே இராச்சியம் ஸ்தாபிக்கப்பட்டது. இது அரசர்களின் தெய்வீக பூமி (இராஜஸ்தான்) என அழைக்கப்பட்டது. இது இப்பொழுது அசுர அரசர்களின் பூமியாக உள்ளது. முழு உலகமும் தெய்வீக அரசர்களின் பூமியாக இருந்தது. அங்கு வேறுபட்ட பல்வேறு நாடுகளும் இருக்கவில்லை. டெல்லி யமுனை ஆற்றங்கரையில் இருந்தது. அது பரிஸ்தான் (தேவதைகளின் பூமி) என அழைக்கப்பட்டது. அங்கு ஆறுகள் பெருக்கெடுக்கவில்லை. இப்பொழுது அவை அதிகளவில் பெருக்கெடுக்கின்றன. அணைக்கட்டுக்களும் கூட உடைந்து பெருக்கெடுக்கின்றன. இது நாங்கள் இயற்கையின் அடிமைகள் ஆகியுள்ளதைப் போன்றதாகும். பின்னர் நீங்கள் அதன் அதிபதிகள் ஆகுவீர்கள். அங்கு உங்களை அவமதிக்கக்கூடிய அளவிற்கு மாயை எவ்விதச் சக்தியுடனும் இருக்க மாட்டாள். ஆட்டங் காண்பதற்கான சக்தி பூமிக்கு இருக்க மாட்டாது. நீங்கள் மகாவீரர்கள் (தைரியமான போர்வீரர்கள்) ஆகவேண்டும். அனுமான் மகாவீரர் என்று அழைக்கப்படுகின்றார். தந்தை கூறுகின்றார்: நீங்கள் அனைவரும் மகாவீர்கள் ஆவீர்கள். மகாவீர் குழந்தைகள் ஒருபொழுதும் தளம்பலடைய முடியாது. மகாவீர்களுக்கு ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. அங்கு அவர்கள் அதிகளவு உருவங்களை வைத்திருக்க மாட்டார்கள். ஆகவே மாதிரி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இப்பொழுது நீங்கள் பாரதத்தைச் சுவர்க்கமாக ஆக்குகின்றீர்கள். ஆகவே நீங்கள் அதிகளவு சந்தோஷத்தைக் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் மிக நன்றாகத் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். தொடர்ந்தும் உங்கள் குறைபாடுகளை அகற்றுங்கள். எப்பொழுதும் முக மலர்ச்சியாக இருங்கள்! புயல்கள் வரும். நீங்கள் புயல்களை அனுபவம் செய்யும் பொழுது மாத்திரமே நீங்கள் மகாவீரராக இருக்கும் சக்தி புலப்படும். நீங்கள் எந்தளவிற்குப் பலசாலிகள் ஆகுகின்றீர்களோ, அந்த அளவிற்குப் பல புயல்களும் வரும். நீங்கள் இப்பொழுது முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப வரிசைக்கிரமமாக மகாவீர் ஆகுகின்றீர்கள். தந்தை மாத்திரமே ஞானக்கடல் ஆவார். சமயநூல்கள் போன்ற ஏனைய அனைத்தும் பக்தி மார்க்கத்திற்கு உரியவை. இது உங்களுக்கான அதிமேன்மையான சங்கமயுகமாகும். கிருஷ்ணரின் ஆத்மா இங்கே அமர்ந்திருக்கின்றார். இவரே (பாக்கிய இரதம்) பகீரதன் ஆவார். அவ்வாறே நீங்கள் அனைவரும் பகீரதன்கள் ஆவீர்கள், காரணம் நீங்களும் பாக்கியசாலிகள். பக்தி மார்க்கத்தில் எவருடைய காட்சியையும் தந்தையால் அருள முடியும். இதனால் மக்கள் அவரைச் சர்வவியாபி எனக் கூறி விட்டார்கள். இதுவும் நாடகத்தின் நியதி ஆகும். குழந்தைகளாகிய நீங்கள் மிக மேன்மையான கல்வியைக் கற்கின்றீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
மாயையின் புயல்களையிட்டுப் பயப்படாதீர்கள். மகாவீர்கள் ஆகுங்கள். உங்கள் குறைபாடுகளைத் தொடர்ந்தும் அகற்றுங்கள். எப்பொழுதும் முகமலர்ச்சியாக இருப்பதுடன், என்றுமே அசைக்க முடியாதவராகவும் இருங்கள்.ஆசீர்வாதம்:
நீங்கள் உங்களின் தூய எண்ணங்களின் களஞ்சியத்தைப் பயன்படுத்துதன் மூலம் உங்களின் மனதின் சக்தியால் சேவை செய்வதை இலகுவாக அனுபவம் செய்வீர்களாக.அகநோக்கு உடையவராகி, உங்களின் எண்ணங்களின் சக்திக் களஞ்சியத்தைச் சேமியுங்கள். தூய எண்ணங்களின் இந்தச் சக்தியானது, இலகுவாக உங்களின் வீணான எண்ணங்களை முடித்துவிடும். அத்துடன் உங்களின் நல்லாசிகளினதும் தூய உணர்வுகளினதும் சொரூபமாக இருப்பதன் மூலம் மற்றவர்களையும் மாற்றக்கூடியது. தூய எண்ணங்களின் களஞ்சியத்தைச் சேமிப்பதற்கு, முரளியின் ஒவ்வொரு கருத்தையும் செவிமடுப்பதுடன் ஒவ்வொரு கணமும் அவற்றைப் பணியில் சக்தியின் வடிவத்தில் பயன்படுத்துங்கள். நீங்கள் தூய எண்ணங்களின் இந்தச் சக்தியின் களஞ்சியத்தை எந்தளவிற்குச் சேமிக்கிறீர்களோ, அதற்கேற்ப இலகுவாக நீங்கள் உங்களின் மனதால் சேவை செய்வதில் அனுபவசாலி ஆகுவீர்கள்.
சுலோகம்:
உங்களின் மனதின் பொறாமை மற்றும் முரண்பாடுகளுக்கு எல்லா வேளைக்குமாக விடை கொடுங்கள், நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.அவ்யக்த சமிக்ஞை: யோக சக்திகளுடன் உங்கள் மனதால் உங்களுடனும் மற்றவர்களுடனும் பரிசோதனை செய்யுங்கள்.
நீங்கள் தற்போது உங்களின் சரீரம், மனம், செல்வம் மற்றும் நேரத்தைப் பயன்படுத்துவதை விட, உங்களின் மனதின் சக்திகளைக் கொண்டு சேவை செய்யும்போது, குறுகிய காலத்தில் நீங்கள் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். உங்களின் சுபாவத்தை மாற்றுவதற்கு அல்லது ஒன்றுகூடலில் நன்றாகப் பழகுவதற்கு, சேவையில் அதிக வெற்றி கிடைக்கா விட்டால் மனச் சோர்வடைவதை நிறுத்துவதற்கென இப்போது நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் முடிவிற்கு வந்துவிடும்.