10.06.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்கள் இலக்கை எப்பொழுதும் உங்கள் முன்னிலையில் வைத்திருங்கள், அப்பொழுது நீங்கள் தொடர்ந்தும் தெய்வீகக் குணங்களை விருத்தி செய்வீர்கள். இப்பொழுது நீங்களே உங்களைப் பராமரித்துக் கொள்ள வேண்டும். அசுரக் குணங்களை அகற்றித் தெய்வீகக் குணங்களைக் கிரகித்துக் கொள்ளுங்கள்.

பாடல்:
ஒரு நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதற்கான ஆசீர்வாதத்தை நீங்கள் பெற்றிருந்தாலும், நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டிய முயற்சி என்ன?

பதில்:
ஒரு நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதற்கு, தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுகின்ற முயற்சியைச் செய்யுங்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகத் தந்தையை நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு நீங்கள் சதோபிரதான் ஆகுவீர்கள், உங்கள் ஆயுட்காலம் அதிகரிப்பதுடன், மரண பயமும் அகற்றப்படும். நினைவைக் கொண்டிருப்பதனால், உங்களுடைய துன்பம் அகற்றப்பட்டு, நீங்கள் மலர்கள் ஆகுவீர்கள். நினைவு செய்வதன் மூலமாகவே நீங்கள் ஒரு மறைமுகமான வருமானத்தைச் சம்பாதிக்கின்றீர்கள். நினைவு செய்வதனால், உங்கள் பாவங்கள் அழிக்கப்பட்டு, ஆத்மா இலேசானவர் ஆகுவதுடன் உங்கள் ஆயுட்காலமும் நீண்டதாக ஆகுகின்றது.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை கற்பித்து விளங்கப்படுத்துகின்றார். அவர் எதனை விளங்கப்படுத்துகின்றார்? இனிய குழந்தைகளே, முதலில், நீங்கள் ஒரு நீண்ட ஆயுளைக் கொண்டிருக்க வேண்டும். ஏனெனில், உங்கள் ஆயுட்காலம் நீண்டதாகவே இருந்தது. உங்கள் ஆயுட்காலம் ஏறத்தாழ 150 வருடங்களாக இருந்தது. நீங்கள் எவ்வாறு ஒரு நீண்ட ஆயுட்காலத்தைப் பெறுகின்றீர்கள்? தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவதன் மூலமாகும். நீங்கள் சதோபிரதானாக இருந்தபொழுது, உங்களுடைய ஆயுட்காலம் மிகவும் நீண்டதாக இருந்தது. நீங்கள் இப்பொழுது மேலே ஏறுகிறீர்கள். நீங்கள் தமோபிரதானாகியதால், உங்களுடைய ஆயுட்காலம் குறுகிவிட்டது என்பது உங்களுக்குத் தெரியும். உங்களுக்கு நல்ல ஆரோக்கியமும் இருக்கவில்லை. நீங்கள் முற்றிலும் நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகிவிட்டீர்கள். இந்தப் பழைய வாழ்க்கை புதிய வாழ்க்கையுடன் ஒப்பிடப்படுகிறது. ஒரு நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதற்கான வழியைத் தந்தை இப்பொழுது உங்களுக்குக் காட்டுகின்றார் என்பதை நீங்கள் அறிவீர்கள். இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் என்னை நினைவு செய்தால், மீண்டும் ஒருமுறை முன்பு இருந்தது போன்று ஆகுவீர்கள்;;, நீங்கள் நீண்ட ஆயுளுடன் சதோபிரதானாகவும் ஆரோக்கியமாகவும் இருந்தீர்கள். நீங்கள் குறுகிய ஆயுளைக் கொண்டிருக்கும் பொழுது, மரண பயம் உள்ளது. சத்தியயுகத்தில் நீங்கள் என்றுமே அகால மரணத்தை அனுபவம் செய்யமாட்டீர்கள் என்ற உத்தரவாதத்தை நீங்கள் பெற்றிருக்கின்றீர்கள். நீங்கள் தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்தால், உங்கள் ஆயுட்காலம் நீண்டதாகவும் உங்கள் துன்பம் அனைத்தும் அகற்றப்படும். நீங்கள் எவ்விதத் துன்பத்தையும் அனுபவம் செய்யமாட்டீர்கள். உங்களுக்கு வேறு என்ன வேண்டும்? உங்களுக்கு ஓர் உயர்ந்த அந்தஸ்து வேண்டும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். உங்களால் அத்தகையதோர் அந்தஸ்தைப் பெறமுடியும் என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. தந்தை இப்பொழுது உங்களுக்கு அதற்கான வழியைக் காட்டு;கின்றார். உங்களுடைய இலக்கும் இலட்சியமும் உங்கள் முன்னிலையில் உள்ளன. உங்களால் அத்தகையதோர் அந்தஸ்தைக் கோர முடியும். இங்கேயே நீங்கள் தெய்வீகக் குணங்களைக் கிரகிக்க வேண்டும். உங்களையே வினவுங்கள்: என்னில் ஏதாவது குறைபாடுகள் உள்ளனவா? பல வகையான குறைபாடுகள் உள்ளன. புகைப்பதும் அசுத்தமான உணவை உண்பதும் குறைபாடுகளேயாகும். விகாரத்தை கொண்டிருப்பதே மிகப் பெரிய குறைபாடாகும், அது தீய நடத்தையை கொண்டிருப்பது என்றும் அழைக்கப்படுகின்றது. தந்தை கூறுகிறார்: நீங்கள் விகாரமுடையவர்களாகிவிட்டீர்கள், இப்பொழுது நான் உங்களுக்கு விகாரமற்றவர்கள் ஆகுவதற்கான வழியைக் காட்டு;கின்றேன். இதற்கு, நீங்கள் விகாரங்களையும் குறைபாடுகளையும் துறக்க வேண்டும். நீங்கள் ஒருபொழுதும் விகாரமுடையவர்கள் ஆகக்கூடாது. இப்பிறவியில் தங்களைச் சீர்திருத்திக் கொள்பவர்களின் சீரமைப்பானது 21 பிறவிகளுக்கு நீடிக்கின்றது. நீங்கள் விகாரமற்றவர்கள் ஆகுவது மிக அவசியமானதாகும். யோகசக்தியினால் மாத்திரமே உங்கள் தலைமீதுள்ள பல பிறவிகளின் சுமை அகற்றப்படும். நீங்கள் பிறவி பிறவியாக விகாரமுடையவர்களாக இருந்தீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். நீங்கள் என்றுமே விகாரமுடையவர்களாக ஆகமாட்டீர்கள் என்று இப்பொழுது தந்தைக்குச் சத்தியம் செய்கின்றீர்கள். தந்தை கூறியுள்ளார்: நீங்கள் தூய்மையற்றவர்களாகினால், நூறு மடங்கு தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும், அத்துடன் உங்களுடைய அந்தஸ்தும் அழிக்கப்படும். ஏனெனில், நீங்கள் தந்தையை அவதூறு செய்கிறீர்கள். அதாவது அதன் அர்த்தம் நீங்கள் மறுபுறம் (விகாரமுள்ள மனிதர்களிடம்) சென்றுவிட்டீர்கள். பலர், இவ்விதமாக கைவிட்டுச் சென்றுவிடுகின்றார்கள், அதாவது, அவர்கள் தோற்கடிக்கப்படுகிறார்கள். விகாரமான தொழிலை மேற்கொள்ளக்கூடாது என்பதை முன்னர் நீங்கள் அறிந்திருக்கவில்லை. தாங்கள் பிரம்மச்சாரியாக இருப்போம் என்று சில நல்ல குழந்தைகள் கூறுகிறார்கள். சந்நியாசிகளைப் பார்க்கையில், தூய்மையே சிறந்தது என்று அவர்கள் எண்ணுகிறார்கள். தூய்மையற்றவர்களும் தூய்மையானவர்களும் உள்ளார்கள். உலகிலுள்ள மக்களிற் பலர் தூய்மையற்றவர்களேயாவர். கழிவறைக்குச் செல்வதும் தூய்மையற்றதாகும் என்பதாலேயே நீங்கள் உடனடியாக நீராட வேண்டும். பலவகையான தூய்மையின்மை உள்ளது. ஒருவருக்குத் துன்பம் விளைவிப்பதுவும், சண்டை சச்சரவுகளில் ஈடுபடுவதும், தூய்மையற்ற செயல்களேயாகும். தந்தை கூறுகிறார்: நீங்கள் பிறவி பிறவியாகப் பாவம் செய்துள்ளீர்கள். நீங்கள் இப்பொழுது அப்பழக்கங்கள் அனைத்தையும் முடித்துவிட வேண்டும். இப்பொழுது நீங்கள் ஓர் உண்மையான, மகாத்மா ஆகவேண்டும். இலக்ஷ்மியும் நாராயணனும் மாத்திரமே உண்மையான மகாத்மாக்கள்;. இங்கு அனைவரும் தமோபிரதானாக உள்ளதால், வேறு எவரும் அவ்வாறு ஆக முடியாது. அவர்கள் அதிகளவு அவதூறு செய்கிறார்கள். தாங்கள் என்ன செய்கின்றார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஒன்று மறைமுகமான பாவமும் மற்றையது புலப்படுகின்ற பாவமும் ஆகும். இது தமோபிரதான் உலகாகும். தந்தை இப்பொழுது உங்களை விவேகிகளாக ஆக்குகிறார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். இதனாலேயே நீங்கள் அனைவரும் அவரை நினைவுசெய்கிறீர்கள். நீங்கள் தூய்மையாக வேண்டும் என்;ற சிறந்த புரிந்துணர்வைப் பெறுகிறீர்கள், ஆனால் நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கொண்டிருக்க வேண்டும். நீங்கள் பாடிக்கொண்டிருந்த தேவர்களின் புகழைப் போன்று நீங்கள் இப்பொழுது ஆகவேண்டும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் அத்தகைய இனிமையான அழகான மலர்களாக இருந்தீர்கள். இப்பொழுது நீங்கள் முட்களாகிவிட்டீர்கள். இப்பொழுது தந்தையை நினைவுசெய்யுங்கள், அந்த நினைவின் மூலமாக உங்கள் ஆயுட்காலம் நீண்டதாக ஆகுவதுடன், உங்கள் பாவங்களும் எரிக்கப்படும். உங்கள் தலைமீது இருந்த சுமையும் அகற்றப்படும். உங்களை நீங்களே பராமரிக்க வேண்டும். உங்களிடமுள்ள குறைபாடுகளை நீங்கள் அகற்ற வேண்டும். நாரதரின் உதாரணமும் உள்ளது; அவரிடம் வினவப்பட்டது: நீங்கள் தகுதிவாய்ந்தவரா? உண்மையில் தான் தகுதிவாய்ந்தவரல்ல என்பதை அவர் உணர்ந்தார். தந்தை இப்பொழுது உங்களை மேன்மையானவர்களாக ஆக்குகிறார். நீங்கள் தந்தையின் குழந்தைகள். ஒருவருடைய தந்தை ஒரு சக்கரவர்த்தியாக இருக்கும்பொழுது, அவர் கூறுவார்: எனது தந்தை சக்கரவர்த்தி. ஒரேயொரு பாபாவே உங்களுக்குப் பெருமளவு சந்தோஷத்தைக் கொடுக்கின்றார். ஒரு நல்ல சுபாவத்தைக் கொண்டிருக்கின்ற சக்கரவர்த்திகள் ஒருபொழுதும் கோபப்படமாட்டாரகள்;. இப்பொழுது, அனைவருடைய கலைகளும் படிப்படியாகக் குறைந்துவிட்டன. அவர்கள் அனைத்துக் குறைபாடுகளினதும் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருப்பதுடன் அவர்களுடைய கலைகளும் தொடர்ந்தும் குறைவடைகின்றன. அவர்கள் தொடர்ந்து தமோ ஆகினார்கள். இப்பொழுது இது தமோபிரதான் ஸ்திதியின் இறுதி போன்றுள்ளது. அவர்கள் சந்தோஷமற்றவர்களாக ஆகிவிட்டார்கள். நீங்கள் பெருமளவு சகித்துக்கொள்ள வேண்டும். நீங்கள் இப்பொழுது அநாதியான சத்திரசிகிச்சை நிபுணரால் குணமாக்கப்படுகிறீர்கள். தந்தை கூறுகிறார்: அந்த ஐந்து விகாரங்களும் மீண்டும் மீண்டும் உங்களுக்குத் தொல்லை கொடுக்கின்றன. நீங்கள் தந்தையை நினைவு செய்வதற்கு எந்தளவிற்கு முயற்சி செய்கின்றீர்களோ அந்தளவிற்கு மாயையும் உங்களை விழச் செய்வதற்கு அதிக முயற்சி செய்வாள். மாயையின் புயல்கள் எவையும் உங்களை அசைக்க முடியாதளவுக்கு உங்களுடைய ஸ்திதி மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். இராவணன் என்பது வேறு எதுவுமல்ல, அவன் ஒரு மனிதனும் அல்லன். ஐந்து விகாரங்களாகிய இராவணனே மாயை என்று அழைக்கப்படுகின்றான். நீங்கள் யார் என்பதை இராவணனின் அசுர சமுதாயம் இனங்கண்டு கொள்வதில்லை. “இந்த பிரம்மகுமாரிகள் எதை விளங்கப்படுத்துகிறார்கள்?”. இதன் உண்மை நிலையை எவருமே புரிந்துகொள்வதில்லை. நீங்கள் ஏன் பிரம்மாகுமாரர்களும் குமாரிகளும்; என அழைக்கப்படுகிறீர்கள்? பிரம்மா யாருடைய குழந்தை? நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை இங்கமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இக்கற்பித்தல்களைக் கொடுக்கின்றார். நீங்கள் ஒரு நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதுடன் செல்வந்தராகவும் இருப்பீர்களாக! அவர் உங்களுடைய ஆசைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து உங்களுக்கு ஆசீர்வாதங்களை அருளுகின்றார். எவ்வாறாயினும், அந்த ஆசீர்வாதங்களைப் பெறுவதனால் மாத்திரம், எதுவும் நிகழ்ந்துவிடாது. நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். அனைத்து விடயங்களும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். உங்களுக்கு இராச்சிய திலகத்தைக் கொடுப்பதற்கான ஓர் உரிமையை நீங்கள் சம்பாதித்துக்கொள்ள வேண்டும். தந்தை இந்த உரிமையை உங்களுக்குக் கொடுக்கின்றார். அவர் குழந்தைகளாகிய உங்களுக்குக் கற்பித்தல்களைக் கொடுக்கின்றார்: இன்ன இன்னதைச் செய்யுங்கள். அவர் உங்களுக்குக் கொடுக்கின்ற முதற்தரமான கற்பித்தல்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். மக்கள் அவரை அறியாததனால் அவர்கள் அவரை நினைவு செய்வதில்லை. அவர்களுடைய நினைவு தவறானதாகவே உள்ளது. கடவுள் சர்வவியாபி என்று அவர்கள் கூறுகிறார்கள். எனவே, அவர்கள் எவ்வாறு சிவபாபாவை நினைவுசெய்ய முடியும்? அவர்கள் ஒரு சிவாலயத்திற்குச் சென்று அவரை வழிபடுகின்றார்கள். நீங்கள் அவர்களை வினவ முடியும்: அவரது தொழில் என்னவென்று எனக்குக் கூறுங்கள்! கடவுள் சர்வவியாபி என்று அவர்கள் பதிலளிப்பார்கள். அவர்கள் அவரை வழிபட்டு அவரிடம் கருணையை வேண்டுகிறார்கள், பின்னர் எவராவது அவர்களைக் கடவுள் எங்கே இருக்கிறார் என்று வினவும்பொழுது, கடவுள் சர்வவியாபி என்று கூறுகிறார்கள்! அவர்கள் விக்கிரகங்களின் முன்னிலையில் என்ன செய்கின்றார்கள் என்று பாருங்கள், விக்கிரகங்களின் முன்னிலையில் அவர்கள் இல்லாதபொழுது, அவர்கள் தெய்வீகக் குணங்கள் அனைத்தையும் இழக்கின்றனர். பக்திமார்க்கத்தில் அவர்கள் பல தவறுகளைச் செய்கின்றார்கள், இன்னமும் அவர்கள்; பக்தியில் பெருமளவு அன்பைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கிருஷ்ணருக்காக விரதம் இருப்பதுடன் நீரையேனும் அருந்துவதில்லை.. இங்கு, நீங்கள் கற்;கின்றீர்கள், அந்த பக்தர்கள் என்ன செய்கின்றார்கள் என்று பாருங்கள்! இப்பொழுது நீங்கள் அவை அனைத்தையும் பார்த்து வியப்படைகின்ற்Pர்கள். நாடகத்திற்கேற்ப, பக்தி செய்கையில், நீங்கள்; தொடர்ந்தும் கீழிறங்கினீர்கள். எவராலும் மேலேற முடியாது. இதுவே எவரும் அறிந்திராத அதி மங்களகரமான சங்கமயுகம் ஆகும். அதி மேன்மையானவர்கள் ஆகுவதற்கு இப்பொழுது நீங்கள் முயற்சி செய்;கின்றீர்கள். ஓர் ஆசிரியர் மாணவர்களுக்குச் சேவை செய்வதால், அவர் அவர்களின் சேவகர் ஆவார்; அவர்கள் அரசாங்க சேவகர்கள்;. தந்தை கூறுகின்றார்: நானும் உங்களுக்குச் சேவை செய்வதுடன், கற்பிக்;கின்றேன். அவர் ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை. அவர் ஆசிரியராகவும் ஆகுகின்றார். அவர் உங்களுக்கு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதியின் ஞானத்தையும் கூறுகின்றார். எந்த மனிதரிடமும் இந்த ஞானம் இருக்கவில்லை. அதை வேறு எவராலும் கற்பிக்கவும் முடியாது. நீங்கள் இவ்வாறு ஆகுவதற்கு முயற்சி செய்கின்றீர்கள். உலக மக்கள் அத்தகைய தமோபிரதான் புத்தியைக் கொண்டிருக்கின்றார்கள். உலகம் மிகவும் பயங்கரமானதாகும். மக்கள் செய்யக்கூடாததைச் செய்கின்றார்கள். அவர்கள் பெருமளவு வன்முறைகள், கொள்ளையடித்தல் போன்றவற்றில் ஈடுபடுகின்றார்கள். அவர்கள் எதைத்தான் செய்யவில்லை? அவர்கள் 100மூ தமோபிரதானாக உள்ளனர். நீங்களோ இப்பொழுது 100மூ சதோபிரதான் ஆகுகின்றீர்கள். உங்களுக்கு அதற்காக நினைவுயாத்திரையின் வழிமுறையும் காட்டப்பட்டுள்ளது. நினைவைக் கொண்டிருப்பதால் மாத்திரமே உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படுவதுடன் நீங்கள்; சென்று தந்தையைச் சந்திக்கவும் முடியும். இப்பொழுது நீங்கள் தந்தையாகிய கடவுள் எவ்வாறு வருகின்றார் என்பதைப் புரிந்துகொள்கின்றீர்கள். அவர் இந்த இரதத்தில் பிரவேசித்து, பிரம்மாவின் மூலமாக உங்களுக்கு ஞானத்தை உரைக்கின்றார். நீங்கள் இதைக் கிரகித்து, அதை மற்றவர்களுக்கும் கூறுகின்றீர்கள். அதனால் அவர்களுக்குத் தந்தையை நேரடியாகச் செவிமடுத்து, அவரது குடும்பத்துக்குரியவர்கள் ஆகவேண்டும் என்ற ஆசையேற்படும். இங்கு, தந்தையும் தாயும் குழந்தைகளாகிய நீங்களும் இருக்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் ஒரு குடும்பத்தவர்கள்;. அது அசுர உலகமாகும். நீங்கள் அசுர குடும்பத்தினால் விரக்தியடைந்து விட்டதால், உங்களுடைய வியாபாரம் போன்றவற்றை விட்டு நீங்கி, புத்துணர்ச்சி பெறுவதற்காக பாபாவிடம் வருகின்றீர்கள். இங்கு பிராமணர்களே வசிக்கின்றார்கள். எனவே, நீங்கள் வந்து இந்தக் குடும்பத்துடன் அமர்ந்திருக்கின்றீர்கள். நீங்கள் வீடு திரும்பும் பொழுது, அங்கு அத்தகையதொரு குடும்பம் இருக்கமாட்டாது. அங்கு, நீங்கள் ஏனைய சரீரதாரிகள் போன்று ஆகிவிடுகின்றீர்கள்; அந்தப் பௌதீக வியாபாரத்திலிருந்து விடுபட்டு நீங்கள் இங்கு வருகின்றீர்கள். தந்தை இப்பொழுது கூறுகின்றார்: சரீர உறவுமுறைகள் அனைத்தையும் துறந்து நறுமணம் மிக்க மலர்கள் ஆகுங்கள். ஒரு மலர் நறுமணத்தைக் கொண்டிருக்கின்றது. அனைவரும் மலர்களைப் பறித்து அவற்றை நுகர்கின்றார்கள். எவரும் எருக்கலம்பூவைப் பறிப்பதில்லை. எனவே நீங்கள் மலர்களாகுவதற்கு முயற்சி செய்ய வேண்டும். இதனாலேயே பாபா மலர்களையும் கொண்டுவந்து உங்களுக்குக் கூறுகின்றார்: நீங்கள் இவைகளைப் போன்று ஆக வேண்டும். வீட்டில் வசிக்கையில், நீங்கள் ஒரேயொரு தந்தையையே நினைவுசெய்ய வேண்டும். அந்தச்சரீர உறவுகள் அனைத்தும் முடிவடையப் போகின்றன என்பது உங்களுக்குத் தெரியும். இங்கு நீங்கள் ஒரு மறைமுகமான வருமானத்தைச் சம்பாதிக்கின்றீர்கள். நீங்கள் உங்களுடைய சரீரத்தை நீக்க வேண்டும். நீங்கள் உங்களுடைய வருமானத்தைச் சம்பாதிப்பதுடன் மலர்ச்சியாக இருந்தவாறு உங்களுடைய சரீரத்தை நீக்க வேண்டும். நடக்கும்பொழுதும் உலாவித் திரியும்பொழுதும் தந்தையின் நினைவில் நிலைத்திருங்கள், நீங்கள் ஒருபொழுதும் களைப்படையமாட்டீர்கள். தந்தையின் நினைவில், சரீரமற்ற ஸ்திதியில் நீங்கள் எவ்வளவுதான் நடந்து திரிந்தாலும், நீங்கள் இங்கிருந்து கீழே அபு ரோட்டிற்கு நடந்தாலும், களைப்படையமாட்டீர்கள். உங்களுடைய பாவங்கள் அழிக்கப்படுவதுடன் நீங்கள் இலேசானவர்கள் ஆகுவீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் எவ்வளவு நன்மையடைகிறீர்கள் என்பதை வேறு எவராலும் அறிநது கொள்ள முடியாது. உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் கூவியழைக்கின்றார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! அவ்வாறாயின், அவரை எவ்வாறு மகாத்மா என்று அழைக்க முடியும்? நீங்கள் தூய்மையற்றவர்களுக்குத் தலைவணங்க மாட்டீர்கள். நீங்கள் தூய்மையானவர்கள் முன்னிலையில் மாத்திரமே தலை வணங்குவீர்கள். ஒரு குமாரியின் உதாரணம் உள்ளது: அவள் தூய்மையற்றவளாகும்பொழுது, அனைவர் முன்னிலையிலும் தலை வணங்க வேண்டியிருப்பதுடன், ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள் எனக் கூவியழைக்கின்றாள். ஆனால், நீ;ங்கள் கூவியழைக்க நேரிடும் வகையில் ஏன் தூய்மையற்றவர்களாகினீர்கள்? இது இராவண இராச்சியம் என்பதால், அனைவருடைய சரீரங்களும் விகாரத்தினால் உருவாக்கப்பட்டவை ஆகும். நீங்கள் இப்பொழுது இராவணனைவிட்டு விலகிவிட்டீர்கள். இது அதி மங்களகரமான சங்கமயுகம் என்று அழைக்கப்படுகின்றது. நீங்கள் இப்பொழுது இராம இராச்சியத்துக்குச் செல்வதற்கு முயற்சி செய்;கின்றீர்கள். சத்தியயுகமே இராம இராச்சியம் ஆகும். நீங்கள் திரேதாயுகமே இராம இராச்சியம் என்று கூறுவீர்களாயின், இலக்ஷ்மி, நாராயணனின் சூரியவம்ச இராச்சியத்துக்கு என்ன நடந்தது? இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானம் முழுவதையும் பெறுகின்றீர்கள். புதியவர்கள் வருகின்றார்கள். நீங்கள் அவர்களுக்கும்; ஞானத்தைக் கொடுத்து அவர்களைத் தகுதிவாய்ந்தவர்கள் ஆக்குகிறீர்கள். சிலவேளைகளில் அவர்கள் கொண்டிருக்கின்ற சகவாசத்தினாலே தகுதிவாய்ந்தவர்களில் இருந்து தகுதியற்றவர்கள் ஆகிவிடுகின்றார்கள். தந்தை உங்களைத் தூய்மையாக்குவதால், நீங்கள் மேலும் தூய்மையற்றவர்கள் ஆகிவிடக்கூடாது. தந்தை உங்களைத் தூய்மையாக்குவற்காக வந்துவிட்டதால், உங்களைத் தூய்மையற்றவர்களாக்கி தோற்கடிக்குமளவுக்கு மாயை மிகவும் சக்திவாய்ந்தவளாக இருக்கின்றாள். நீங்கள் பின்னர் கூவியழைக்கிறீர்கள்: பாபா, என்னைக் காப்பாற்றுங்கள்! அற்புதம்! ஒரு போர்க்களத்தில் பலர் மரணிக்கின்றார்கள், எனவே அவர்கள் காப்பாற்றப்பட்டார்களா? மாயையின் இக்குண்டு ஒரு துப்பாக்கி ரவையை விடவும் சக்திவாய்ந்ததாகும். நீங்கள் காம விகாரத்தினால் துன்புறுத்தப்படும்பொழுது, உச்சியிலிருந்து கீழே வீழ்கின்றீர்கள். சத்தியயுகத்தில், அனைவரும் தூய்மையானவர்கள். தூய இல்லற தர்மத்தைச் சார்ந்த அவர்கள் தேவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். எவ்வாறு தந்தை வருகின்றார், அவர் எங்கு வசிக்கின்றார், எவ்வாறு அவர் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். அவர் அர்ஜூனனின் இரதத்தில் அமர்ந்திருந்து ஞானத்தைக் கொடுப்பதாக அவர்கள் காட்டுகின்றார்கள். அப்படியாயின், அவர்கள் ஏன் அவரைச் சர்வவியாபி என்று அழைக்கின்றார்கள்? சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்ற தந்தையை அவர்கள் மறந்துவிட்டார்கள். இப்பொழுது அவரே உங்களுக்குத் தனது அறிமுகத்தைக் கொடுக்கின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. மகாத்மாக்கள் ஆகுவதற்கு, சகல தூய்மையற்ற, தீய பழக்கவழக்கங்களை முடித்துவிடுங்கள். துன்பத்தை விளைவித்தல், சண்டை சச்சரவில் ஈடுபடுதல் ஆகியவை நீங்கள் செய்யக்கூடாத, தீய செயல்களாகும். உங்களுக்கு ஓர் இராச்சிய திலகத்தைக் கொடுப்பதற்கான உரிமையைச் சம்பாதித்துக் கொள்ளுங்கள்.

2. உலகிய வியாபாரத்திலிருந்தும், சரீரதாரிகளிலிருந்தும் உங்கள் புத்தியை அகற்றி, நறுமணம் மிக்க மலர்கள் ஆகுங்கள். ஒரு மறைமுகமான வருமானத்தைச் சம்பாதிப்பதற்கு, நடக்கும்பொழுதும் உலாவித் திரியும்பொழுதும் சரீரமற்றிருப்பதைப் பயிற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
தூய்மையான ஆக்கபூர்வமான எண்ணங்களைக் கொண்டிருக்கின்ற ஓர் இரத்தினமான நீங்கள், உங்களுடைய சொந்த தூய்மையான, ஆக்கபூர்வமான எண்ணங்களின் சக்தியை பயன்படுத்துவதன் மூலம் ஆத்மாக்களை கவலைப்படுவதில் இருந்து விடுவிப்பீர்களாக.

இன்றைய உலகில், ஆத்மாக்கள் அனைவரும் கவலையின் இரத்தினங்களாகவே இருக்கிறார்கள். உங்களுடைய தூய்மையான, ஆக்கபூர்வமான எண்ணங்களின் சக்தியினால் பிறரையிட்டு தூய்மையான ஆக்கபூர்வமான எண்ணங்களை கொண்டிருக்கின்ற இரத்தினங்களான உங்களால், கவலை இரத்தினங்களை மாற்ற முடியும். சூரிய கதிர்களினால் தொலைவிலிருந்தவாறே இருளை அகற்ற முடிவதைப் போன்று, இரத்தினங்களான உங்களது தூய்மையான ஆக்கபூர்வமான எண்ணங்கள் என்ற வடிவத்திலுள்ள ஒளிக்கதிர்கள் உலகெங்கும் நாலாதிசையிலும் பரவி உள்ளன. ஆகையாலேயே அவர்கள் ஏதோ ஒரு ஆன்மிக ஒளி, மறைமுகமான வழியில் தனது வேலையை பார்க்கின்றது என நம்புகிறார்கள். அவர்கள் இந்தத் தொடுகையை கொண்டிருப்பதால் அவர்கள் உங்களை தேடுகிறார்கள். இறுதியில் அவர்கள் இவ்விடத்திற்கு வந்து சேருகிறார்கள்.

சுலோகம்:
பாப்தாதாவின் வழிகாட்டல்களை தெளிவாகப் பெற்றுக் கொள்வதற்கு, உங்கள் மனதினதும் புத்தியினதும் ரேகையை தெளிவாக வைத்திருங்கள்.