10.09.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, உங்களை வைரம் போன்று ஆக்குகின்ற, தந்தை மீது என்றுமே எவ்வித சந்தேகமும் கொள்ளாதீர்கள். சந்தேக புத்தியைக் கொண்டிருப்பது என்றால் தமக்குத்தாமே இழப்பை ஏற்படுத்திக் கொள்வதாகும்.
கேள்வி:
ஒரு மனிதரிலிருந்து தேவர் ஆகுவதற்கான இக்கல்வியின் பரீட்சையில், சித்தி அடைவதற்கு முக்கிய அடிப்படையாக இருப்பது என்ன?பதில்:
நம்பிக்கை: புத்தியில் நம்பிக்கைக் கொண்டிருப்பதற்கு தைரியம் தேவையாகும். மாயை இந்தத் தைரியத்தை துண்டித்து விடுகிறாள். அவள் உங்கள் புத்தியை, சந்தேக புத்தியாக ஆக்கிவிடுகிறாள். முன்னேறிச் செல்கையில் இக்கல்வியில் அல்லது உங்களுக்கு கற்பிக்கின்ற பரம ஆசிரியரில் நீங்கள் சந்தேகம் கொண்டிருந்தால், நீங்கள் உங்களுக்கும் பிறருக்கும் பேரிழப்பை ஏற்படுத்துகின்றீர்கள்.பாடல்:
நீங்களே அன்புக்கடல், ஒரு துளிக்காக நாங்கள் தவிக்கின்றோம்.ஓம் சாந்தி.
சிவபாபா ஆன்மீகக் குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் தந்தையைப் புகழ்ந்து கூறுகின்றீர்கள்: நீங்களே அன்புக்கடல். அவர் ஞானக்கடல் என்றும் அழைக்கப்படுகின்றார். ஒரேயொருவரே ஞானக்கடல் ஆவார். ஏனையோர் அறியாமையில் உள்ளவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். ஏனெனில், இது ஞானமும் அறியாமையையும் பற்றிய நாடகமாகும். பரமாத்மாவாகிய பரமதந்தை மாத்திரமே இந்த ஞானத்தைக் கொண்டுள்ளார். இந்த ஞானத்தின் மூலமாகவே புதிய உலகம் ஸ்தாபிக்கப்படுகின்றது. அவர் புதிதாக ஓர் உலகைப் படைக்கின்றார் என்றில்லை. உலகம் அழிவற்றது. பழைய உலகம் மாற்றப்பட்டு, புதிதாகவே ஆக்கப்படுகின்றது. பிரளயம் ஏற்படும் என்றில்லை. முழு உலகமும் என்றுமே அழிவதில்லை. உலகம் பழையதாகி விட்டதால், அது புதிதாக மாற்றம் செய்யப்படுகின்றது. நீங்கள் இருக்கின்ற இந்த வீடு பழையது எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். நாங்கள் புதிய வீட்டிற்குச் செல்வோம் என்பது உங்களுக்குத் தெரியும். அதேபோன்று, பழைய டெல்கி இப்பொழுது அழிய உள்ளது. அதற்கு ஈடாக, புதியதொன்று மீண்டும் அமைக்கப்படும். இப்பொழுது அது எவ்வாறு புதுப்பிக்கப்படும்? எல்லாவற்றிற்கும் முதலில், அங்கே வாழ்வதற்கு தகுதியானவர்கள் தேவையாகும். புதிய உலகில், சகல நற்குணங்களும் நிறைந்தவர்களே உள்ளார்கள். குழந்தைகளாகிய உங்களிடம் உங்கள் இலட்சியமும் குறிக்கோளும் உள்ளன. ஒரு பாடசாலையிலும் ஓர் இலக்கும் குறிக்கோளும் உள்ளன. கற்பவர்கள் தாம் என்னவாக ஆகப் போகின்றோம். அதாவது, ‘நான் ஒரு சத்திரசிகிச்சை நிபுணராக ஆகுவேன்’ அல்லது ‘நான் ஒரு சட்டநிபுணர் ஆகுவேன்’ எனப் புரிந்து கொண்டுள்ளார்கள். நீங்கள் ஒரு சாதாரண மனிதரிலிருந்து தேவர்களாக மாறுவற்காகவே இங்கே வந்திருக்கின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். ஓர் இலக்கும், குறிக்கோளும் இல்லாமல் எவருமே ஒரு பாடசாலையில் இருக்க முடியாது. எவ்வாறாயினும், இலக்கையும் குறிக்கோளும் புரிந்து கொண்டு கற்கின்ற போதிலும், சிலர் இக்கல்வியை விட்டு விலகிச் செல்வது இப்பாடசாலையின் அற்புதமாகும். அவர்கள் இக்கல்வி பிழையானது என்றும், இது அவர்களுடைய இலக்கும் குறிக்கோளும் அல்ல, இது என்றுமே நிகழ முடியாது என்றும் சிந்திக்கத் தொடங்குகிறார்கள். அவர்கள் தமக்குக் கற்பிப்பவரின் மீது சந்தேகத்தை வளர்த்துக் கொள்கிறார்கள். உலக கல்வியிலும் சிலவேளைகளில் மாணவர்களிடம் கற்பதற்குப் போதியளவு பணம் இல்லா விட்டாலோ அல்லது அவர்களிடம் தைரியம் இல்லாது இருந்தாலோ அவர்கள் கல்வியை கைவிட்டு விடுவார்கள். ஒரு சட்டநிபுணராக ஆகுவதற்கான கல்வியறிவு பிழையானது என்றோ அல்லது கற்பிப்பவர் பிழையானவர் என்றோ நீங்கள் கூறமாட்டீர்கள். இங்கு மனிதர்கள் அதிசயமான புத்திகளைக் கொண்டுள்ளார்கள். நீங்கள் கல்வியில் சந்தேகத்தை வளர்த்துக் கொள்வதால் இக்கல்வி பிழை என்றும், கடவுள் இதனைக் கற்பிக்கவில்லை என்றும், உங்களால் ஓர் இராச்சியம் போன்றவற்றைக் கோரமுடியாது என்றும் இவை யாவும் பொய் என்றும் நீங்கள் கூறுகின்றீர்கள். இவ்வாறாகச் சிந்திப்பதால், பல குழந்தைகள் இக்கல்வியை விட்டுவிலகி விடுகின்றார்கள். கடவுள் உங்களுக்குக் கற்பிப்பதாலேயே மனிதரில் இருந்து தேவர்களாக மனிதர்கள் மாறுகின்றார்கள் என நீங்கள் கூறுகின்றீர்கள், அதன் பின்னர் என்ன நடக்கின்றது? நீங்கள் கூறுகின்றீர்கள்: இல்லை, இல்லை! அவை அனைத்தும் பொய்யாகும். உங்களால் இலக்கையும், குறிக்கோளையும் புரிந்து கொள்ள முடியவில்லை என நீங்கள் கூறுகின்றீர்கள். சிலர் நம்பிக்கையுடன் கற்கின்றார்கள். பின்னர் அவர்களும் சந்தேகப்பட ஆரம்பிக்கும்போது, அவர்கள் கற்பதை நிறுத்தி விடுகிறார்கள். அவர்கள் எவ்வாறு நம்பிக்கையைக் கொண்டிருந்தார்கள், பின்னர், அவர்களின் புத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது யார்? அந்த நபர் இன்னமும் கற்றுக் கொண்டிருந்தால் அவர் உயர்ந்ததோர் அந்தஸ்தைப் பெற்றிருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. பலர் தொடர்ந்தும் கற்கின்றார்கள். சட்டத்தரணிகள் ஆகுவதற்காகக் கற்கின்ற சிலர், இடையில் கற்பதை நிறுத்தி விடுகிறார்கள். ஆனால் ஏனையோர் தொடர்ந்தும் கற்று சட்டத்தரணி ஆகுகின்றார்கள். சிலர் கற்று, சித்தி எய்துகிறார்கள். ஆனால் ஏனையோரோ சித்தி எய்துவதில்லை. அதனால், அவர்கள் குறைந்ததோர் அந்தஸ்தைப் பெறுகிறார்கள். இது ஒரு முக்கியமான பரீட்சையாகும். இதில் சித்தி எய்துவதற்கு உங்களுக்கு அதிகளவு தைரியம் தேவை. முதலில் உங்கள் புத்தியில் நம்பிக்கை கொண்டிருப்பதற்கு, தைரியம் தேவையாகும். மாயையினால் ஒரு நிமிடம் உங்களை நம்பிக்கை உடையவராகவும், மறு நிமிடம் சந்தேகப்புத்தி உடையராகவும் ஆக்க முடியும். இங்கு கற்பதற்குப் பலர் வருகின்றார்கள். ஆனாலும் சிலர் மந்த புத்தியைக் கொண்டிருப்பதால், அவர்கள் வரிசைக் கிரமமாகவே சித்தி அடைகிறார்கள். செய்தித்தாள்களிலும் ஒரு பட்டியல் அச்சடிக்கப்பட்டுள்ளது. இங்கேயும் அவ்வாறே உள்ளது. கற்பதற்காகப் பலர் இங்கு வருகின்றார்கள். சிலரிடம் நல்ல புத்தி உள்ளது. ஏனையோரோ மந்த புத்தியைக் கொண்டுள்ளார்கள். அவர்களிடம் மந்த புத்தி உள்ளதால் சந்தேகத்தை வளர்த்து, விட்டு விலகிச் சென்று விடுகின்றார்கள். பின்னர் அவர்கள் ஏனையோருக்கும் தீங்கு விளைவிக்கிறார்கள். ‘சந்தேகப் புத்தியைக் கொண்டவர்கள் அழிவை நோக்கியே செல்வார்கள்’ எனக் கூறப்பட்டுள்ளது. அவர்களால் உயர்ந்தோர் அந்தஸ்தைப் பெற முடியாது. நீங்கள் நம்பிக்கை உடையவராக இருந்தும், முழுமையாகக் கற்காது விட்டால், உங்கள் புத்தி பயனற்றதாக இருப்பதால், உங்களால் சித்தி எய்த முடியாது. உங்களால் இந்த ஞானத்தைக் கிரகிக்க முடியாதிருக்கும். நீங்கள் ஓர் ஆத்மா என்பதை நீங்கள் மறந்து விடுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நானே ஆத்மாக்களாகிய உங்களின் பரமதந்தை ஆவேன். குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை வந்துள்ளார் என்பது தெரியும். சிலருக்குப் பல தடைகள் ஏற்படுவதால், சந்தேகத்தை வளர்த்துக் கொள்கின்றார்கள். பின்னர் அவர்கள் கூறுகின்றார்கள்: எனக்கு இன்ன ஆசிரியர் மீது நம்பிக்கை இல்லை. பிராமண ஆசிரியர்கள் எவ்வாறாக இருந்த போதிலும், நீங்கள் தொடந்தும் கற்க வேண்டும். உங்கள் ஆசிரியர் சிறப்பாகக் கற்பிக்காது விட்டால், அவரை விலக்கி விடுவதற்கு நீங்கள் எண்ணுகின்றீர்கள். எவ்வாறாயினும், நீங்கள் தொடர்ந்தும் கற்க வேண்டும். இது தந்தையின் கல்வியாகும். பரம ஆசிரியர் உங்களுக்குக் கற்பிக்கின்றார். பிராமண ஆசிரியர்களும் அவருடைய (கடவுள்) ஞானத்தையே கொடுக்கின்றார்கள். ஆகவே நீங்கள் இக்கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். நீங்கள் கற்காவிட்டால், உங்களால் பரீட்சையில் சித்தி எய்த முடியாது. எனினும் தந்தை மீதுள்ள உங்கள் நம்பிக்கை துண்டிக்கப்படுமாயின், கற்பதை நீங்கள் நிறுத்தி விடுகிறீர்கள். கற்கும் போது, அவர் மூலமாக என்னால் ஓர் அந்தஸ்தை அடைய முடியுமா இல்லையா என ஓர் ஆசிரியர் மீது உங்களுக்கு சந்தேகம் எழும் போது, நீங்கள் கற்பதை நீங்கள் நிறுத்தி விடுகின்றீர்கள். பின்னர் நீங்கள் பிறரையும் சீரழிக்கின்றீர்கள். நீங்கள் அவதூறு ஏற்படுத்தினால், மேலும் தீங்கு விளைவிக்கப்படுகின்றது. அதனால் பேரிழப்பு அனுபவம் செய்யப்படுகின்றது. தந்தை கூறுகின்றார்: இங்கு ஒருவர் பாவம் செய்தால், அவர் நூறு மடங்கு தண்டனையை அனுபவம் செய்ய நேரிடும். ஏனெனில் அவர் ஏனைய பலருக்கு தீங்கு விளைவிப்பதற்கு கருவி ஆகுகின்றார். அப்பொழுது, எந்தளவிற்கு நீங்கள் ஒரு புண்ணியாத்மா ஆகினீர்களோ, அந்தளவிற்கு பின்னர் நீங்கள் பாவாத்மா ஆகுவீர்கள். இக்கல்வியின் மூலமே நீங்கள் ஒரு புண்ணியாத்மா ஆகுகின்றீர்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே உங்களை ஒரு புண்ணியாத்மாவாக ஆக்குகின்றார். ஒருவரால் கற்க முடியாது விட்டால், நிச்சயமாக அங்கு ஏதோ ஒரு பிழை இருக்க வேண்டும். பின்னர் அவர்கள் கூறுகின்றார்கள்: அதுவே எனது பாக்கியம்! எனவே நான் என்ன செய்ய முடியும்? அது அவர்களுக்கு இதய வழுவல் ஏற்பட்டதைப் போன்றுள்ளது. இங்கு வந்து, மரணித்து வாழ்ந்த பின்னர், மீண்டும் இராவணனின் இராச்சியத்திற்குள் சென்று உயிரிருந்தும் மரணிக்கிறார்கள். அவர்களால் ஒரு வைரம் போன்ற வாழ்க்கைகளை உருவாக்க முடியாமல் இருக்கின்றது. மனிதர்களுக்கு இதயவழுவல் ஏற்படும் போது, அவர்கள் இன்னொரு பிறவியை எடுக்கிறார்கள். இங்கோ, அவர்களுக்கு இதய வழுவல் வரும்போது அவர்கள் அசுர சமுதாயத்திற்குள் செல்கின்றார்கள். இது நீங்கள் மரணித்து வாழும் பிறவியாகும். புதிய உலகிற்குச் செல்வதற்காகவே, நீங்கள் இங்கு வந்து தந்தைக்கு உரியவர் ஆகுகின்றீர்கள். ஆத்மாக்கள் அங்கு செல்வார்கள். ஆத்மாவாகிய நான் சரீர உணர்வைத் துறக்கும்போது, நான் ஆத்ம உணர்வில் உள்ளேன் என்பது புரிந்து கொள்ளப்படுகின்றது. நான் வேறு, சரீரம் வேறாகும். ஆத்மா சரீரத்தை நீக்கிவிட்டு வேறொன்றை எடுக்கிறார். ஆகவே ஒவ்வோர் ஆத்மாவும் நிச்சயமாக வேறான ஒன்றே ஆவார். நீங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதனால் பாரதத்தில் சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றீர்கள் என்பதை நீங்கள் புரிந்துள்ளீர்கள். மனிதரிலிருந்து தேவர்களாக மாறுகின்ற கலையைக் கற்க வேண்டும். வேறொரு சத்திய சகவாசமும் இல்லை என குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறப்பட்டுள்ளது. ஒரேயொரு பரமாத்மாவே சத்தியம் என்று அழைக்கப்படுகின்றார். அவருடைய பெயர் சிவனாகும். அவரே சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றார். கலியுகத்தின் கால எல்லை நிச்சயமாக ஒரு முடிவிற்கு வர வேண்டும். உலகச் சக்கரம் எவ்வாறு சுழல்கின்றது என்பது சக்கரம் உள்ள படத்தில் மிகத்தெளிவாகக் காட்டப்பட்டுள்ளது. தேவர்களாக மாறுவதற்கு, சங்கமயுகத்தில் நீங்கள் தந்தைக்கு உரியவராக வேண்டும். தந்தையை விட்டுச் சென்றால், நீங்கள் கலியுகத்தையே சென்றடைவீர்கள். ஒருவருக்குத் தான் பிராமணன் என்ற சந்தேகம் ஏற்படும் போது, அவர் சூத்திர குலத்திற்குள் சென்று விடுகின்றார். அவ்வாறாயின் அவர் ஒரு தேவர் ஆக மாட்டார். சுவர்க்க ஸ்தாபனைக்காக அத்திவாரங்கள் எவ்வாறு இடப்படுகின்றன என்பதைத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். முதலில் அத்திவார விழா, அதன்பின்னர் திறப்பு விழாவும் இடம்பெறுகின்றது. இங்கு அனைத்துமே மறைமுகமானவை. சுவர்க்கத்திற்குச் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அப்போது நரகத்தை பற்றி எவருக்கும் தெரியாது. நீங்கள் உயிர் வாழும் வரை அதாவது இறுதிவரை நிச்சயமாக கற்க வேண்டும். உங்களைத் தூய்மை ஆக்குகின்ற ஒரேயொரு தந்தையே தூய்மையாக்குபவர் ஆவார். தந்தை வந்து உங்களைத் தூய்மை ஆக்குகின்ற சங்கமயுகம் இதுவே எனக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொண்டிருக்கின்றீர்கள். ‘இந்த அதிமேன்மையான சங்கமயுகத்திலே சாதாரண மனிதர்கள் நாராயணனாக மாறுகின்றார்கள்’ என நீங்கள் எழுத வேண்டும். இது உங்கள் இறை பிறப்புரிமை எனவும் எழுதப்பட்டுள்ளது. தந்தை இப்பொழுது உங்களுக்கு தெய்வீகக் காட்சிகளைக் கொடுக்கிறார். இந்த 84 பிறவிகளின் பிறவிச் சக்கரம் இப்பொழுது முடிவடைகின்றது என்பதை ஆத்மா அறிந்துள்ளார். தந்தை இங்கே அமர்ந்திருந்து ஆத்மாக்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். ஆத்மா கற்ற போதிலும், அரைக் கல்பத்திற்கு சரீர உணர்வு இருந்ததால், மீண்டும், மீண்டும் சரீர உணர்விற்கு வருகின்றார். ஆகவே ஆத்ம உணர்வு உடையவர் ஆகுவதற்குக் காலம் எடுக்கின்றது. தந்தை இங்கே அமர்ந்துள்ளார். உங்களுக்குக் காலம் கொடுக்கப்பட்டுள்ளது. பிரம்மாவின் ஆயுட்காலம் 100 வருடங்கள் அல்லது அதிலும் குறைவானதாக இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. எனினும் பிரம்மா இடையில் விட்டுச் செல்ல வேண்டி இருந்தாலும், ஸ்தாபனை இடம்பெற மாட்டாது என்று அர்த்தம் அல்ல. சேனைகளாகிய நீங்கள் தொடர்ந்தும் இங்கு இருக்கின்றீர்கள். தந்தை உங்களுக்கு அந்த மந்திரத்தைக் கொடுத்துள்ளார். நீங்கள் கற்கவும் வேண்டும். உலகச்சக்கரம் எவ்வாறு சுற்றுகின்றது என்பது உங்கள் புத்திகளில் உள்ளது. நீங்கள் நினைவு யாத்திரையில் நிலைத்திருக்க வேண்டும். நினைவின் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. பக்திமார்க்கத்தில் நீங்கள் அனைவரும் பாவச் செயல்களையே செய்தீர்கள். புதிய, பழைய இரண்டு பூலோகங்களும் உங்கள் முன்னிலையில் உள்ளன. ‘இராவண இராச்சியமான பழைய உலகிற்கு மரணமும், இந்த ஞானமார்க்கமான புதிய உலக இராம இராச்சியத்திற்கு வெற்றியும்’ என நீங்கள் எழுதலாம். பூஜிக்கத்தகுதி வாய்ந்தவர்களாக இருந்தவர்களே பூஜிப்பவர்களாக ஆகியுள்ளார்கள். ஸ்ரீகிருஷ்ணர் அழகானவராகவும், பூஜிக்கத்தகுதி வாய்ந்தவராகவும் இருந்தார். எனினும் பின்னர் இராவண இராச்சியத்தில் அவர் அவலட்சணமான பூஜிப்பவர் ஆகிவிட்டார். இதனை விளங்கப்படுத்துவது இலகுவானது. வழிபாடு ஆரம்பித்த போது, அவர்கள் முதலில் ஒரு பெரிய வைரத்திலான லிங்கத்தை உருவாக்கினார்கள். தந்தை உங்களை பெருஞ்செல்வந்தர் ஆக்கியதால், அதுவே மிகவும் பெறுமதி வாய்ந்ததாகும். அவரே ஒரு வைரமானவர். ஆகவே அவர் ஆத்மாக்களையும் வைரங்கள் போல ஆக்கியுள்ளார். வைரத்திலான அவருடைய வடிவத்தைச் செய்து நீங்கள் வைத்திருக்க வேண்டும். வைரம் எப்பொழுதும் நடுவில் வைக்கப்படுகின்றது. அது மரகதம் போன்றவற்றுடன் சேர்க்கப்படும் போது அந்தளவிற்கு பெறுமதி இருக்கமாட்டாது. இதனாலேயே வைரம் நடுவில் வைக்கப்படுகின்றது. எட்டு இரத்தினங்களைக் கொண்டு அவர் வெற்றி மணிமாலையை உருவாக்குகின்றார். ஒரு வைரத்திற்கே அதிகளவு பெறுமதி கொடுக்கப்படுகின்றது. ஏனைய அனைத்தும் வரிசைக்கிரமமாக உள்ளன. சிவபாபாவே உங்களை இவ்வாறு ஆக்குகின்றார். இவ்விடயங்களை தந்தையைத் தவிர வேறு எவராலும் விளங்கப்படுத்த முடியாது. கற்கின்றபோது, சிலர் இந்த ஞானத்தையிட்டு வியப்படைகின்றார்கள். அவர்கள் “பாபா! பாபா!” எனக் கூறுகின்றார்கள். பின்னர் விலகிச் சென்று விடுகின்றார்கள்! நீங்கள் சிவபாபாவை “பாபா” என ஒருமுறை அழைத்து விட்டால், பின்னர் அவரை விட்டு எப்பொழுதுமே விலகிச் செல்லக் கூடாது. அவ்வாறாயின் உங்கள் பாக்கியம் அவ்வளவே! எனக் கூறப்படுகின்றது. அவர்களின் பாக்கியம் அதிகளவாக இல்லாவிட்டால் நூறுமடங்கு தண்டனையைப் பெறக்கூடிய வகையான செயல்களை அவர்கள் செய்வார்கள். ஒரு புண்ணியாத்மாவாக ஆகுவதற்கு, நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். பின்னர் பாவம் செய்வதனால், அப் பாவம் நூறுமடங்கு ஆகிவிடுகின்றது. பின்னர் அவர்கள் வளர முடியாத குள்ளர்களாக ஆகிவிடுகிறார்கள். நீங்கள் நூறுமடங்கு தண்டனையைப் பெற்றால் உங்கள் ஸ்திதி சக்திவாய்ந்ததாக ஆக முடியாது. உங்களை வைரங்கள் போன்று ஆக்குகின்ற தந்தையின் மீது நீங்கள் ஏன் சந்தேகம் கொள்கின்றீர்கள்? எக்காரணத்தைக் கொண்டும் நீங்கள் தந்தையை விட்டுச் சென்றால், நீங்கள் மிகவும் அபாக்கியசாலி ஆத்மா என்றே அழைக்கப்படுவீர்கள். நீங்கள் எங்கிருந்தாலும், தந்தையை நினைவு செய்ய வேண்டும். அப்போது நீங்கள் தண்டனையில் இருந்து விடுபடுவீர்கள். தூய்மை அற்றவரில் இருந்து தூய்மையானவர் ஆகுவதற்கே, நீங்கள் இங்கே வருகிறீர்கள். நீங்கள் கடந்த காலத்தில் செய்த சில செயல்களால் சரீரத்தின் மூலம் அதிகளவு வேதனையை அனுபவம் செய்கின்றீர்கள். இப்பொழுது நீங்கள் அரைச்சக்கரத்திற்கு அதிலிருந்து விடுவிக்கப்படுகிறீர்கள். நீங்கள் எந்தளவிற்கு முன்னேறி, ஏனையோருக்கு சேவை செய்கிறீர்கள் என்றும் உங்களைச் சோதித்துப் பாருங்கள். ‘இதுவே இப்பொழுது ஸ்தாபிக்கப்படுகின்ற உலகின் அமைதி இராச்சியம்’ என நீங்கள் இலக்ஷ்மி நாராயணனின் படத்தின் உச்சியில் எழுத வேண்டும். இதுவே உங்கள் இலக்கும் குறிக்கோளும் ஆகும். அங்கே 100 வீதம் தூய்மையும் அமைதியும் சந்தோஷமும் இருக்கும். அவர்களுடைய இராச்சியத்தில் வேறு எந்தச் சமயமும் இருக்கவில்லை. ஆகவே இப்பொழுது இருக்கின்ற சமயங்கள் அனைத்தும் நிச்சயமாக அழிக்கப்பட்டுவிடும். இவ்விடயங்களை விளங்கப்படுத்துவதற்கு அதிகளவு விவேகம் தேவை. இல்லையேல் நீங்கள் உங்கள் ஸ்திதிக்கேற்ப விளங்கப்படுத்துவீர்கள். படங்களுக்கு முன் அமர்ந்திருந்து இவ்விடயங்கள் அனைத்தையும் பற்றிச் சிந்தியுங்கள். அவை யாவும் உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றை நீங்கள் புரிந்து கொண்டுள்ளதால், பிறருக்கும் விளங்கப்படுத்த வேண்டும். இதனாலேயே பாபா உங்களை அருங்காட்சியகங்களைத் திறப்பதற்குத் தூண்டுகிறார். “சுவர்க்கவாசல்” என்பது மிக நல்லதொரு பெயராகும். அவை “டெல்கி வாசல்” மற்றும் “இந்தியா வாசல்” ஆகும். இதுவோ சுவர்க்க வாசல் ஆகும். இப்பொழுது நீங்கள் சுவர்க்கத்தின் வாசலைத் திறக்கின்றீர்கள். புதிர்ப்போட்டி ஒன்றில் இலக்கைக் கண்டுபிடிப்பதற்கு தடுமாறுவதைப் போன்று, பக்தி மார்க்கத்தில் மக்களும் குழப்பம் அடைந்துள்ளார்கள். எவராலும் வெளியே செல்லும் பாதையைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அனைவரும் மாயையின் இராச்சியத்தில் சிக்கி உள்ளார்கள். உங்களை அதில் இருந்து விடுவிப்பதற்காகவே தந்தை வந்துள்ளார். சிலர் அதில் இருந்து வெளியேற விரும்புவதில்லை. அப்பொழுது தந்தையால் என்ன செய்ய முடியும்? இதனாலேயே தந்தை கூறுகின்றார்: நீங்கள் அதிகளவு அபாக்கியசாலிகளைப் பார்க்க விரும்பினால், இங்கு கற்பதை நிறுத்துபவர்களைப் பாருங்கள். அவர்கள் சந்தேகப் புத்தி உடையவர்களாகி, தமது பல பிறவிகளுக்கு தம்மைத்தாமே கொலை (தற்கொலை) செய்கின்றார்கள். இது அவர்களின் பாக்கியம் பழுதடையும் பொழுது நிகழ்கின்றது. தீய சகுனங்கள் இருக்கும் போது, அழகானவர்களாக ஆகுவதற்குப் பதிலாக அவர்கள் அவலட்சணமாக ஆகுகின்றார்கள். மறைமுகமான ஆத்மாக்களே கற்கின்றார்கள். ஆத்மாக்கள், அனைத்தையும் சரீரத்தினூடாகச் செய்கின்றார்கள். சரீரமின்றி ஆத்மாவால் எதனையும் செய்ய முடியாது. உங்களை ஓர் ஆத்மா எனக் கருதுவதற்கு முயற்சி தேவை. நீங்கள் ஆத்மா என்ற நம்பிக்கையை கொண்டிருக்காத போது, நீங்கள் சரீர உணர்வுடையவர் ஆகுகின்றீர்கள். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும் ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. பரம ஆசிரியரினால் கற்பிக்கப்படும், கற்பித்தல்கள் எங்களை மனிதரிலிருந்து நாராயணனாக மாற்றுகின்றது. இந்த நம்பிக்கையுடன் உங்கள் கல்வியில் முழுக்கவனம் செலுத்துங்கள். உங்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியரை பார்க்காதீர்கள்.2. ஆத்ம உணர்வு உடையவராக ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள். நீங்கள் மரணித்து வாழ்வதால், உங்கள் சரீர உணர்வுகள் அனைத்தையும் விட்டுவிடுங்கள். ஒரு புண்ணியாத்மா ஆகுங்கள். எந்தப் பாவச் செயல்களையும் செய்யாதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுகின்ற விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் சகல பொக்கிஷங்களாலும் நிரம்பியவராகி, சதா உங்களின் முழுமை ஸ்திதியை அனுபவம் செய்வீர்களாக.சதா சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்கள், மாயையின் பல வகையான சுழற்சிகளில் இருந்து விடுபட்டிருப்பார்கள். இந்த ஒரு சுயதரிசனச் சக்கரம் சகல வீணான சுழற்சிகளையும் முடித்துவிடும். அது மாயையை அப்பால் விரட்டிவிடும். இத்தகைய ஆத்மாக்களின் முன்னால் மாயையால் நிற்க முடியாது. ஏனென்றால், சுயதரிசனச் சக்கரதாரிக் குழந்தைகள் சதா நிரம்பியவர்கள். அவர்கள் அசைக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் தங்களைச் சகல பொக்கிஷங்களும் நிரம்பியவர்களாக அனுபவம் செய்கிறார்கள். மாயை அவர்களை வெறுமையாக்க முயற்சி செய்கிறாள். ஆனால் அவர்கள் சதா எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் ஏற்றப்பட்ட தீபங்களாகவும் இருப்பார்கள். அதனால் மாயையால் அவர்களை எதுவும் செய்ய முடியாது. எச்சரிக்கைப் பாதுகாவலர்களாக இருப்பவர்கள், விழிப்பாகவும் சதா பாதுகாப்பாகவும் இருப்பார்கள்.
சுலோகம்:
உங்களின் வார்த்தைகளில் தூய, மேன்மையான உணர்வுகள் அமிழ்ந்திருக்கும் மிகவும் சக்திவாய்ந்த வார்த்தைகள் ஆக்குங்கள்.அவ்யக்த சமிக்கை: இப்போது அன்பெனும் அக்கினியை ஏற்றி, உங்களின் யோகத்தை எரிமலை ஆக்குங்கள்.
சக்திவாய்ந்த நினைவைக் கொண்டிருப்பதற்கு, உங்களின் அன்பானது நேர்மையான இதயத்தில் இருந்து வெளிப்பட வேண்டும். நேர்மையான இதயங்களைக் கொண்டிருப்பவர்களால் ஒரு விநாடியில் ஒரு புள்ளியாகி, புள்ளியான பாபாவை நினைவு செய்யக்கூடியதாக இருக்கும். தமது நேர்மையான இதயங்களால் பிரபுவை மகிழ்விப்பதால், இத்தகைய ஆத்மாக்கள் தந்தையிடம் இருந்து விசேடமான ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள். அவற்றால் அவர்களால் ஒரேயொருவரின் எண்ணத்தில் ஸ்திரமாக்க முடிகிறது. அவர்கள் எரிமலை ரூபத்தில் நினைவை அனுபவம் செய்து, எங்கும் சக்திவாய்ந்த அதிர்வலைகளைப் பரப்புவார்கள்.