10.12.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, புண்ணியம் வீட்டிலேயே ஆரம்பம் ஆகுகின்றது. முதலில் நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்து, பின்னர் பிறருக்கும் கூற வேண்டும் என்பதே அதன் அர்த்தம் ஆகும். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி மற்றவர்களுக்கு நீங்கள் இந்த ஞானத்தைக் கொடுக்கும் பொழுதே, ஞான வாள் சக்தியால் நிரப்பப்படும்.

கேள்வி:
சங்கம யுகத்தில் எந்த இரு விடயங்களில் முயற்சி செய்வதன் மூலம் நீங்கள் சத்திய யுகத்துச் சிம்மாசனத்தின் அதிபதிகள் ஆகுவீர்கள்?

பதில்:
1. சந்தோஷத்திலும் துன்பத்திலும், புகழ்ச்சியிலும் இகழ்ச்சியிலும் சமநிலைக்குரிய ஒரு ஸ்திதியைப் பேணுவதற்கு முயற்சி செய்யுங்கள். எவராவது தவறான விடயங்களைப் பேசினால் அல்லது கோபம் அடைந்தால், அமைதியாக இருங்கள்; உங்கள் வாயால் கைதட்டாதீர்கள் (உங்கள் வார்த்தைகளால் பதில் அளிக்காதீர்கள்). 2. உங்கள் கண்களைக் குற்றமற்றவை ஆக்குங்கள். குற்றக் பார்வை முற்றாகவே முடிவடைய வேண்டும். ஆத்மாக்களாகிய நாங்கள் சகோதரர்கள். பிறரை ஆத்மாக்களாகக் கருதியவாறே அவர்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுங்கள். ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள், நீங்கள் சத்திய யுகத்துச் சிம்மாசனத்தின் அதிபதிகள் ஆகுவீர்கள். முற்றிலும் தூய்மை ஆகுபவர்கள் மாத்திரமே சிம்மாசனத்தில் அமர்வார்கள்.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை, ஆன்மீகக் குழந்தைகளுடன் பேசுகின்றார். ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் மூன்றாவது கண்ணைப் பெற்றுள்ளீர்கள், அதை ஞானக் கண் எனவும் அழைக்கலாம். நீங்கள் உங்கள் சகோதரர்களை இந்தக் கண்ணின் மூலமே பார்க்கின்றீர்கள். நீங்கள் மற்றவர்களைச் சகோதரர்களாகப் பார்க்கும் பொழுது, உங்கள் புலனங்கங்கள் விஷமத்தனம் செய்யாது என்பதை உங்கள் புத்தியால் புரிந்து கொள்கின்றீர்கள். நீங்கள் தொடர்ந்தும் இதனைச் செய்யும் பொழுது, குற்றம் செய்யும் கண்கள், குற்றமற்றவை ஆகும். தந்தை கூறுகின்றார்: நீங்கள் உலகின் அதிபதிகள் ஆகுவதற்கு ஏதாவதொரு முயற்சியைச் செய்ய வேண்டும். ஆகவே, இப்பொழுது இந்த முயற்சியைச் செய்யுங்கள். நீங்கள் முயற்சி செய்வதற்காக பாபா உங்களுக்குத் தினமும் புதிய, ஆழமான கருத்துக்களைக் கொடுக்கின்றார். ஆகவே, இப்பொழுது மற்றவர்களைச் சகோதரர்களாகக் கருதி இந்த ஞானத்தைக் கொடுக்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். அப்பொழுதே “நாங்கள் அனைவரும் சகோதரர்கள்” என்ற கூற்று நடைமுறை ஆகும். உங்களுக்கு உங்கள் தந்தையைத் தெரியும் என்பதால், நீங்களே இப்பொழுது உண்மையான சகோதரர்கள். தந்தை, குழந்தைகளாகிய உங்களுடனேயே சேவை செய்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் தைரியத்தைப் பேணும்பொழுது, தந்தை உதவி செய்கின்றார். ஆகவே, தந்தை வந்து உங்களுக்குச் சேவை செய்வதற்கான தைரியத்தைக் கொடுக்கின்றார். ஆகவே, இது இலகுவானது, அல்லவா? நீங்கள் இதனைத் தினமும் பயிற்சி செய்ய வேண்டும்; சோம்பேறியாக இருக்காதீர்கள். குழந்தைகளாகிய நீங்கள் இந்தப் புதிய கருத்துக்களைப் பெறுகின்றீர்கள். பாபா, சகோதரர்களாகிய உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். ஆத்மாக்கள், இந்த ஆன்மீக ஞானத்தைக் கற்கின்றார்கள். இதுவே ஆன்மீக ஞானம் எனப்படுகின்றது. இந்நேரத்தில் மாத்திரமே நீங்கள் ஆன்மீகத் தந்தையிடம் இருந்து இந்த ஆன்மீக ஞானத்தைப் பெறுகின்றீர்கள், ஏனெனில், இவ்வுலகம் மாற்றமடைய வேண்டிய நேரமாகிய சங்கமயுகத்தில் மாத்திரமே அவர் வருகின்றார். உலகம் மாற்றமடைய வேண்டிய பொழுது மாத்திரமே நீங்கள் இந்த ஆன்மீக ஞானத்தைப் பெறுகின்றீர்கள். தந்தை வந்து உங்களுக்கு ஆன்மீக ஞானத்தைக் கொடுக்கின்றார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். ஆத்மாக்களாகிய நீங்கள் இங்கு சரீரமற்றே வந்தீர்கள், பின்னர் இங்கு சரீரங்களை எடுத்திருக்கின்றீர்கள். நீங்கள் ஆரம்பத்தில் இருந்தே 84 பிறவிகளை எடுத்து விட்டீர்கள். நீங்கள் வரிசைக்கிரமமாகக் கீழிறங்கி வருவதைப் போலவே, நீங்கள் வரிசைக்கிரமமாகவே ஞானத்திலும், யோகத்திலும் முயற்சி செய்கின்றீர்கள். நீங்கள் ஒவ்வொருவரும் எந்த முயற்சியைச் சென்ற கல்பத்தில் செய்தீர்களோ, அதுவே இப்பொழுதும் அதேவழியில் செய்யப்படுகின்றது என்பதைக் காணலாம். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்காகவே முயற்சி செய்ய வேண்டும். வேறு எவருக்காகவும் நீங்கள் முயற்சி செய்வதில்லை. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுவதால், நீங்களே உங்களுக்காக முயற்சி செய்ய வேண்டும். மற்றவர்கள் என்ன செய்தால் உங்களுக்கு என்ன? “புண்ணியம் வீட்டிலேயே ஆரம்பம் ஆகுகின்றது” என்றால், நீங்கள் முதலில் முயற்சி செய்து, பின்னர், மற்றவர்களையும் (உங்கள் சகோதரர்கள்) அவ்வாறு செய்யுமாறு கேட்க வேண்டும் என்று அர்த்தம். முதலில் நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, ஆத்மாக்களுக்கு ஞானத்தைக் கொடுக்கும் பொழுது, உங்கள் ஞானவாள் சக்தியால் நிரப்பப்படும். இதற்குக் கொஞ்சம் முயற்சி தேவை. ஆகவே, நீங்கள் நிச்சயமாக ஏதாவது ஒன்றைச் சகித்துக் கொள்ளவே வேண்டும். இந்நேரத்தில் சந்தோஷமும் துன்பமும், மரியாதையும் அவமரியாதையும், புகழ்ச்சியும் இகழ்ச்சியும், அனைத்தும் சிறிதளவு சகித்துக் கொள்ளப்பட வேண்டும். எவராவது தவறான விடயங்களைக் கூறினால், அமைதியாக இருங்கள். ஒருவர் அமைதி ஆகினால், மற்றவரால் கோபப்பட முடியாது. ஒரு நபர் ஒன்றைக் கூறும்பொழுது, மற்றவரும் அதேபோன்று பதில் அளித்தால், அது வாயால் கைதட்டுவது போன்றதாகும். ஒருவர் ஏதாவது ஒன்றைக் கூறும்பொழுது, மற்றவர் அமைதியாக இருப்பாராயின், அனைத்தும் அப்பொழுது அமைதியாகி விடுகின்றது. இதனையே தந்தை கற்பிக்கின்றார். நீங்கள் எவராவது கோபப்படுவதைப் பார்க்கும் பொழுது, அமைதியாக இருங்கள், அப்பொழுது அந்த நபரின் கோபம் இயல்பாகவே தணிந்து விடும். அப்பொழுது எவ்விதமான கைதட்டலும் (விளைவு) ஏற்படாது. ஏதாவது பதில் கொடுக்கும் பொழுதே, முரண்பாடுகள் ஏற்படும். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: குழந்தைகளே, காமம் அல்லது கோபம் எனும் விகாரம் போன்ற விடயங்களாக இருந்தாலும், அத்தகைய விடயங்களிலும் ஒருபொழுதும் அதேவிதமாக, பதிலடி கொடுக்காதீர்கள். குழந்தைகளாகிய நீங்கள், அனைவருக்கும் நன்மை செய்ய வேண்டும். ஏன், பல நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன? அத்தகைய நிலையங்கள் முன்னைய கல்பத்திலும் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும். பல குழந்தைகள் நிலையங்களைத் திறப்பதில் ஆர்வமாக இருப்பதைத் தேவர்களுக்கு எல்லாம் தேவரான, தந்தை தொடர்ந்தும் பார்க்கின்றார். நான் ஒரு நிலையத்தைத் திறந்து, அனைத்துச் செலவீனங்களையும் கவனிப்பேன் என்று அவர்கள் கூறுகின்றார்கள். நாளுக்கு நாள், இது இவ்வாறு தொடர்ந்தும் நடைபெறும். ஏனெனில் விநாச நேரம் நெருங்கி வருவதால், இவ்வகையான சேவை செய்வதில் ஆர்வமும் அதிகரிக்கும். பாபாவும், தாதாவும் இப்பொழுது ஒன்றாகவே இருக்கின்றார்கள். ஆகவே, நீங்கள் என்ன முயற்சியைச் செய்கின்றீர்கள் எனவும், நீங்கள் என்ன அந்தஸ்தைப் பெறுவீர்கள் எனவும் காண்பதற்காக அவர்கள் உங்களைப் பார்க்கின்றனர். சிலரது முயற்சிகள் அதி உயர்ந்த தரத்திலும், மற்றவர்களது நடுத்தரமானவையாகவும், சிலரது மிகக் குறைந்தவையாகவும் இருக்கின்றன. இதனைப் பார்க்கக் கூடியதாக உள்ளது. ஒரு பாடசாலையிலும், மாணவர்கள் எந்தப் பாடங்களில் தளம்புகின்றார்கள் என்பதை ஓர் ஆசிரியர் பார்க்கின்றார். இங்கும் இது அவ்வாறே. சில குழந்தைகள் மிக நன்றாகக் கவனம் செலுத்துவதால் தங்களை உயர்ந்தவர்களாகக் கருதுகின்றார்கள். சிலவேளைகளில் அவர்கள் தவறுகள் செய்து, நினைவிலும் நிலைத்திருப்பது இல்லை. இதனால், அவர்கள் தங்களை மிகவும் தாழ்ந்தவர்களாகக் கருதுகின்றார்கள். இது ஒரு பாடசாலை. குழந்தைகள் கூறுகின்றனர்: பாபா, சிலவேளைகளில் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கின்றேன், ஆனால் மற்றைய வேளைகளில் எனது சந்தோஷம் குறைவடைகின்றது. ஆகவே, பாபா தொடர்ந்தும் விளங்கப்படுத்துகின்றார்: நீங்கள் சந்தோஷமாக இருக்க விரும்பினால், “மன்மனாபவ” ஆகுங்கள்! உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள்! பரமாத்மாவை உங்கள் முன்னால் பார்த்து, அவர் அமரத்துவ சிம்மாசனத்தில் இருப்பதை நீங்கள் காண்பதைப் போலவே, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதியவாறு உங்கள் சகோதரர்களையும் பார்த்து, பின்னர் அவர்களுடன் பேசுங்கள். நான் எனது சகோதரருக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றேன்; ஒரு சகோதரிக்கு அல்ல, ஆனால் ஒரு சகோதரருக்கே கொடுக்கின்றேன். நீங்கள் ஆத்மாக்களுக்கே இந்த ஞானத்தைக் கொடுக்கின்றீர்கள். நீங்கள் இந்தப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ளும் பொழுது, குற்றக் கண்கள் உங்களை ஏமாற்றுவது படிப்படியாக நின்றுவிடும். ஓர் ஆத்மா இன்னோர் ஆத்மாவை என்ன செய்ய முடியும்? சரீர உணர்வு இருக்கும் பொழுதே, நீங்கள் வீழ்கின்றீர்கள். பலரும் கூறுகின்றார்கள்: பாபா, எனது கண்கள் குற்றம் உள்ளவையாக இருக்கின்றன. அச்சா, அவ்வாறாயின், இப்பொழுது உங்கள் குற்றக் கண்களைக் குற்றமற்றவை ஆக்குங்கள். தந்தை ஆத்மாக்களாகிய உங்கள் ஒவ்வொருவருக்கும் மூன்றாவது கண்ணைக் கொடுத்துள்ளார். நீங்கள் அனைத்தையும் உங்கள் மூன்றாவது கண்ணால் பார்க்கும் பொழுது, சரீரங்களைப் பார்க்கும் உங்கள் பழக்கம் முடிவடையும். பாபா தொடர்ந்தும் குழந்தைகளுக்கு வழிகாட்டல்களைக் கொடுக்கின்றார். அவர் அதனையே இவருக்கும் (பிரம்மா) கூறுகின்றார். இந்த பாபாவும் சரீரத்தில் இருக்கும் ஆத்மாவையே பார்க்க வேண்டும். ஆகவே, இது ஆன்மீக ஞானம் என அழைக்கப்படுகின்றது. நீங்கள் பெறுகின்ற அந்தஸ்து எத்தனை மேன்மையானது என்று பாருங்கள்! இது மிகவும் சக்திவாய்ந்த ஓர் அந்தஸ்தாகும். ஆகவே, அதற்கேற்பவே நீங்களும் முயற்சி செய்ய வேண்டும். அனைவரது முயற்சிகளும் அவர்கள் கடந்த கல்பத்தில் செய்தது போலவே இருக்கும் என்பதை பாபாவும் புரிந்து கொள்கின்றார். சிலர் அரசர், அரசி ஆகுவார்கள், சிலர் பிரஜைகளில் ஒருவர் ஆகுவார்கள். ஆகவே, நீங்கள் குறிப்பாக அனைவருக்குமாகத் தியானத்தை நடாத்தும் பொழுது, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, மற்றவர்களை அவர்களின் நெற்றியின் புருவ மத்தியில் பார்க்கும் பொழுது, அவர்கள் செய்யும் சேவை மிகச்சிறப்பாக அமையும். இங்கு ஆத்ம உணர்வில் அமர்ந்திருப்பவர்கள், ஆத்மாக்களை மாத்திரமே பார்க்கின்றார்கள். இதனைப் பெருமளவில் பயிற்சி செய்யுங்கள். நீங்கள் உயர்ந்ததோர் அந்தஸ்தைக் கோர விரும்பினால், சிறிதளவு முயற்சியையேனும் செய்ய வேண்டும். இந்த ஒரு முயற்சியையே, ஆத்மாக்களாகிய நீங்கள் செய்ய வேண்டும். இந்த ஆன்மீக ஞானத்தை நீங்கள் ஒருமுறை மாத்திரமே பெறுகின்றீர்கள்; உங்களால் வேறெந்த நேரத்திலும் இதனைப் பெற முடியாது. கலியுகத்திலோ அல்லது சத்திய யுகத்திலோ இதனைப் பெற முடியாது; சங்கமயுகத்தில் மாத்திரமே இதைப் பெற முடியும். அதிலும், பிராமணர்கள் மாத்திரமே அதனைப் பெறுகிறார்கள். இதனை, மிக உறுதியாக நினைவு செய்யுங்கள். நீங்கள் முதலில் பிராமணர்கள் ஆகினால் மாத்திரமே, பின்னர் உங்களால் தேவர்கள் ஆக முடியும். நீங்கள் பிராமணர்கள் ஆகாதுவிடின் எவ்வாறு உங்களால் தேவர்கள் ஆக முடியும்? இச் சங்கமயுகத்தில் மாத்திரமே நீங்கள் இந்த முயற்சியைச் செய்கின்றீர்கள். வேறெந்த நேரத்திலும் இப்படிக் கூறப்பட முடியாது: இந்த ஞானத்தைக் கொடுக்கும் பொழுது, உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுவதுடன், மற்றவர்களையும் ஆத்மாக்களாகக் கருதுங்கள். தந்தை உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற அனைத்தையும் கடையுங்கள். இது சரியா அல்லது இல்லையா, உங்களுக்கு நன்மை பயப்பதா என்பதை நீங்களே தீர்மானியுங்கள். பின்னர் நீங்கள் தந்தை உங்களுக்குக் கொடுத்துள்ள கற்பித்தல்களை உங்கள் சகோதரர்களுக்கும் கொடுக்கும் பழக்கத்தை உங்களுக்குள் வளர்த்துக் கொள்வீர்கள். இவை பெண்களுக்கும், ஆண்களுக்கும் கொடுக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், இவை ஆத்மாக்களுக்கே கொடுக்கப்பட வேண்டும். ஆத்மாக்களே, ஆண்களாகவோ அல்லது பெண்களாகவோ, சகோதரர்களாகவோ அல்லது சகோதரிகளாகவோ ஆகியுள்ளார்கள். தந்தை கூறுகின்றார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றேன். நான் குழந்தைகளாகிய உங்களை ஆத்மாக்களாகவே பார்க்கின்றேன், ஆத்மாக்களாகிய நீங்களும் உங்கள் தந்தையாகிய பரமாத்மாவே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். இதுவே ஆன்மீக உணர்வினைக் கொண்டிருத்தல் எனப்படுகிறது. இதுவே “பரமாத்மாவுடனான ஆத்மாக்களின் ஆன்மீகக் கொடுக்கல் வாங்கல்” எனப்படுகின்றது. விருந்தாளி ஒருவர் வரும்பொழுது, நீங்கள் உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையின் அறிமுகத்தை அந்த ஆத்மாவிற்குக் கொடுக்க வேண்டும் எனத் தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்றார். சரீரமன்றி, ஆத்மாவே இந்த ஞானத்தைக் கொண்டிருக்கின்றார். ஆகவே, அவரை ஓர் ஆத்மாவாகக் கருதியவாறே அவருக்கு இந்த ஞானத்தைக் கொடுங்கள். நீங்கள் இதனைச் செய்யும்பொழுது அவர்களும் இதனால் களிப்படைவார்கள். உங்கள் வார்த்தைகளிலும் சக்தி இருக்கும். நீங்கள் ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதனால் உங்கள் ஞான வாள் சக்தியால் நிரப்பப்படும். ஆகவே, இதனை நீங்கள் பயிற்சி செய்து பாருங்கள்! பாபா கூறுகின்றார்: இது சரியானதா என்பதை நீங்களே தீர்மானியுங்கள். இது குழந்தைகளாகிய உங்களுக்கொன்றும் புதிய விடயமல்ல. ஏனெனில், தந்தை மிக இலகுவாக அனைத்தையும் விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் சக்கரத்தைச் சுற்றி வந்தீர்கள், இப்பொழுது நாடகம் முடிவிற்கு வருகின்றது. நீங்கள் இப்பொழுது பாபாவின் நினைவில் நிலைத்திருக்க வேண்டும். நீங்கள் சதோபிரதான் உலகின் அதிபதிகள் ஆகுவதற்குத் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆகுகின்றீர்கள். பின்னர் நீங்கள் மீண்டும் அவ்வாறே ஏணியில் கீழிறங்கி வருவீர்கள். அவர் எத்தனை எளிமையான முறையில் விளங்கப்படுத்துகின்றார் எனப் பாருங்கள்! நான் 5000 வருடங்களுக்கு ஒருமுறை வரவேண்டும். நான் நாடகத் திட்டத்தில் கட்டுப்பட்டவனாக இருக்கின்றேன். நான் வந்து குழந்தைகளாகிய உங்களுக்கு இந்த மிகவும் இலகுவான நினைவு யாத்திரையைக் கற்பிக்கின்றேன். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதனால், உங்கள் இறுதி எண்ணங்கள் உங்களை உங்கள் இலக்கிற்கு இட்டுச் செல்லும். இது, இந்நேரத்தையே குறிக்கின்றது. இதுவே இறுதிக் கால நேரமாகும். இந்நேரத்திலேயே, தந்தை இங்கிருந்து உங்களுக்குப் பாதையைக் காட்டுகின்றார். அவர் கூறுகின்றார்: நீங்கள் சதா என்னை மாத்திரமே நினைவுசெய்தால், சற்கதியைப் பெறுவீர்கள். கற்பதனால் தாங்கள் என்னவாக ஆகுகின்றார்கள் என்பதைக் குழந்தைகள் புரிந்து கொள்கின்றார்கள். இங்கும், நீங்கள் சென்று புதிய உலகின் தேவர்கள் ஆகுவீர்கள் என்பதைப் புரிந்து கொள்கின்றீர்கள். இதில் எதுவும் புதிதல்ல. தந்தை மீண்டும் மீண்டும் கூறுகின்றார்: எதுவும் புதிதல்ல! நீங்கள் ஏணியில் மேலே சென்று கீழிறங்கி வரவேண்டும். ஜீனியின் கதையும் இருக்கின்றது: அவருக்கு ஏணியில் மேலும் கீழும் ஏறும் வேலை கொடுக்கப்பட்டது. இவ் விளையாட்டானது, மேலே சென்று கீழே வருவதைப் பற்றியது. நினைவு யாத்திரையில் நிலைத்திருப்பதால், நீங்கள் மிக உறுதியானவர்கள் ஆகுவீர்கள். ஆகவே, தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு வெவ்வேறு வழிகளைக் கற்பித்துக் கூறுகின்றார்: குழந்தைகளே, இப்பொழுது ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள். இப்பொழுது அனைவரும் வீட்டிற்குத் திரும்பிச் செல்ல வேண்டும். ஆத்மாக்களாகிய நீங்கள் முழுமையான 84 பிறவிகளை எடுக்கும் பொழுது, தமோபிரதான் ஆகிவிட்டீர்கள். பாரத மக்களே சதோ, ரஜோ, தமோ ஸ்திதிகளினூடாகச் செல்கின்றார்கள். வேறு எந்த நாட்டைச் சேர்ந்தவர்களும் முழுமையான 84 பிறவிகளை எடுத்துள்ளார்கள் எனக் கூறப்பட முடியாது. தந்தை வந்து, ஒவ்வொருவரும் நாடகத்தில் தனது சொந்தப் பாகத்தை கொண்டிருக்கின்றார் எனக் கூறியுள்ளார். ஆத்மாக்கள் மிகவும் சின்னஞ் சிறியவர்கள்! அத்தகைய சின்னஞ்சிறிய ஆத்மாவில் எவ்வாறு அழிவற்ற ஓர் பாகம் பதியப்பட்டிருக்கின்றது என்பதை விஞ்ஞானிகளால் கூட, ஒருபொழுதும் புரிந்துகொள்ள முடியாது. இது மிகவும் அற்புதமான விடயம்! ஓர் ஆத்மா மிகவும் சின்னஞ் சிறியவர், ஆனால் அவர் எவ்வளவு பெரிய பாகத்தை நடிக்கின்றார் எனப் பாருங்கள்; அதுவும் அழிவற்றது. இந்த நாடகமும், அழிவற்றதும், ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டதும் ஆகும். இது எப்பொழுது உருவாக்கப்பட்டது என எவரும் கேட்க வேண்டும் என்றில்லை. இல்லை; இது இயற்கையானது. இந்த ஞானம் மிகவும் அற்புதமானது. வேறு எவராலும் இந்த ஞானத்தை என்றுமே கொடுக்க முடியாது. வேறு எவருக்குமே இந்த ஞானத்தைக் கொடுப்பதற்கான சக்தி இல்லை. ஆகவே, தந்தை தினமும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். “நான் எனது சகோதர ஆத்மாவுக்கு, அவரை எனக்குச் சமமானவர் ஆக்குவதற்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றேன்” என்பதை இப்பொழுது பயிற்சி செய்யுங்கள். அவரும் தந்தையிடம் இருந்தே தனது ஆஸ்தியைப் பெற வேண்டும். ஏனெனில், ஆத்மாக்கள் அனைவருக்கும் ஓர் உரிமை உள்ளது. பாபா ஆத்மாக்கள் அனைவருக்கும் அவர்களது ஆஸ்தியாகிய அமைதியையோ அல்லது சந்தோஷத்தையோ கொடுப்பதற்கே வருகின்றார். நாங்கள் எங்கள் இராச்சியத்தில் இருக்கும் பொழுது, ஏனைய ஆத்மாக்கள் அனைவரும் அமைதி தாமத்திலேயே இருக்கின்றார்கள், அப்பொழுது வெற்றி முழக்கம் கேட்கும். நாங்கள் அங்கிருக்கும் பொழுது, சந்தோஷம் மாத்திரமே இருக்கும். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: தூய்மை ஆகுங்கள்! எவ்வளவிற்கு அதிகமாக நீங்கள் தூய்மையைக் கொண்டிருக்கின்றீர்களோ, அவ்வளவிற்கு அதிகமாகக் கவர்ச்சி உள்ளது. நீங்கள் முற்றாகவே தூய்மையானவர்கள் ஆகும்பொழுது, சிம்மாசனத்தில் இருப்பீர்கள். ஆகவே, இதனைப் பயிற்சி செய்யுங்கள்! நீங்கள் கேட்டுவிட்டீர்கள் தானே என நினைத்து மற்றைய காதால் அதை விட்டு விடாதீர்கள். இல்லை, நீங்கள் இங்கே அமர்ந்து உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி, உங்கள் சகோதர ஆத்மாவான, மற்ற நபருக்கு, விளங்கப்படுத்துவதைப் பயிற்சி செய்யாமல், உங்களால் தொடர்ந்து செல்ல முடியாது. ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார். இதுவே ஆன்மீக ஞானம் எனப்படுகின்றது. ஆன்மீகத் தந்தையே இதனைக் கொடுக்கின்றார். குழந்தைகளாகிய நீங்கள் முற்றாகவே ஆன்மீகமானவர்களாகவும், தூய்மையானவர்களாகவும் ஆகும்பொழுது, உங்களால் சத்தியயுகத்துச் சிம்மாசனத்தின் அதிபதிகளாக முடியும். தூய்மை ஆகாதவர்களால் மாலையின் மணியாக முடியாது. மாலையிலும் சில முக்கியத்துவம் இருக்க வேண்டும். வேறு எவருக்குமே மாலையைப் பற்றிய இரகசியம் தெரியாது. மக்கள் ஏன் மாலையின் மணிகளை உருட்டுகின்றார்கள்? ஏனெனில் நீங்கள் தந்தைக்குப் பெருமளவில் உதவி செய்தீர்கள். ஆகவே, நீங்கள் ஏன் நினைவு செய்யப்படக்கூடாது? நீங்கள் நினைவு செய்யப்படுவதுடன், வழிபாடும் செய்யப்படுகின்றீர்கள்; உங்கள் சரீரங்கள் கூட வழிபாடு செய்யப்படுகின்றன. எவ்வாறாயினும், என்னைப் பொறுத்தவரையில், ஆத்மா மாத்திரமே வழிபாடு செய்யப்படுகின்றது. நீங்களோ இரு வழிகளில் என்னையும் விட வழிபாடு செய்யப்படுவதைப் பாருங்கள்! நீங்கள் தேவர்கள் ஆகுவதால், நீங்கள் (பின்னர்) தேவர்களாக வழிபாடு செய்யப்படுகின்றீர்கள். இதனாலேயே வழிபாடு செய்யப்படுவதில் நீங்கள் என்னை விடவும் முன்னணியில் இருக்கின்றீர்கள். நீங்கள் உங்கள் ஞாபகார்த்தத்தைக் கொண்டிருப்பதிலும் முன்னணியில் இருக்கின்றீர்கள், உங்கள் இராச்சியத்தைப் பெற்றுக் கொள்வதிலும் முன்னணியில் இருக்கின்றீர்கள். நான் உங்களை எவ்வளவு மேன்மையானவர்கள் ஆக்குகின்றேன் எனப் பாருங்கள்! அன்பான குழந்தைகளிலே பெருமளவு அன்பு இருக்கின்றது. அந்தக் குழந்தைகள் தோளிலோ அல்லது தலையிலோ அமர்த்தப்படுகின்றார்கள். பாபா குழந்தைகளாகிய உங்களைத் தலை மேல் வைக்கின்றார். அச்சா.

இனிமையிலும் இனிமையான அன்புக்குரிய எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. புகழப்படத் தகுதிவாய்ந்தவர்களாகவும், நினைவுகூரப்படத் தகுதிவாய்ந்தவர்களாகவும் ஆகுவதற்கு, ஆன்மீகமானவர்கள் ஆகுங்கள். ஆத்மாவான உங்களைத் தூய்மையாக்குங்கள். ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

2. “மன்மனாபவ”வைப் பயிற்சி செய்வதனால், முடிவற்ற சந்தோஷத்தில் நிலைத்திருங்கள். உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதி ஆத்மாக்களுடன் பேசுங்கள். உங்கள் கண்களைக் குற்றமற்றவை ஆக்குங்கள்.

ஆசீர்வாதம்:
முழுமையான யோகியாகி, மாஸ்டர் படைப்பவர் என்ற ஸ்திதியின் மூலம், அனர்த்தங்களையும் கேளிக்கையாக அனுபவம் செய்வீர்களாக.

நீங்கள் மாஸ்டர் படைப்பவர் ஸ்திதியில் ஸ்திரமாக இருக்கின்ற போது, பேரழிவும் கூட கேளிக்கைக் காட்சியாக அனுபவம் செய்யப்படும். சுவர்க்க வாசல் திறப்பதற்கு விநாசத்தின் அழிவே வழியாகும் என நீங்கள் காட்டுகின்றீர்கள். அவ்வாறே, சிறிய அல்லது பெரிய பிரச்சனைகள் அல்லது அனர்த்தங்களும் கேளிக்கை வடிவத்தில் பார்க்கப்பட வேண்டும். விரக்திக் கூக்குரலுக்குப் (ஐயோ, ஐயோ) பதிலாக, அற்புதம் என்ற (ஆஹா) வார்த்தைகளை வெளிவரச் செய்யுங்கள். துன்பத்தை, சந்தோஷத்தின் வடிவத்தில் அனுபவம் செய்ய உதவுங்கள். சந்தோஷத்தினதும் துன்பத்தினதும் ஞானத்தை கொண்டிருக்கின்ற வேளையில், அவை இரண்டின் ஆதிக்கத்திற்கும் உள்ளாகாதீர்கள். துன்பத்தை வரவிருக்கின்ற பெரும் சந்தோஷத்தின் நாட்கள் எனக் கருதுங்கள். அப்போதுதான் நீங்கள் முழுமையான யோகி எனப்படுவீர்கள்.

சுலோகம்:
இதய-சிம்மாசனத்தை விட்டிறங்கி, சாதாரண எண்ணங்களைக் கொண்டிருத்தல் என்றால் உங்கள் பாதங்களை நிலத்தில் வைப்பது என்று அர்த்தமாகும்.

அவ்யக்த சமிக்ஞை: இப்பொழுது முழுமையாகவும் கர்மாதீத்தாகவும் ஆகுகின்ற ஆழமான அக்கறையைக் கொண்டிருங்கள்.

நீங்கள் எதனைச் செய்யும் போதும், உங்கள் சரீரத்தில் இலேசான தன்மையையும் மன நிலையில் இலேசான தன்மையையும் கொண்டிருங்கள், உங்கள் மனம் எந்தவொரு செயல்களின் விளைவினாலும் ஈர்க்கப்பட அனுமதிக்காதீர்கள். அப் பணி எவ்வளவு அதிகளவு தொடர்ந்தாலும், அதற்கேற்ப இலேசான தன்மையை அதிகரித்துக் கொள்ளுங்கள். எந்தவொரு செயலும் உங்களை ஈர்க்க அனுமதிக்காதீர்கள். ஆனால், உங்களைத் தூண்டுபவர் அதனைச் செய்விக்கின்றார் என்பதையும், அந்தச் செயலைச் செய்பவர் ஒரு கருவியாக அதனைச் செய்கின்றார் என்பதையும் அறிந்த, ஒரு மாஸ்டராக இருங்கள். இந்தப் பயிற்சியை அதிகரியுங்கள். நீங்கள் இலகுவாக முழுமையும் கர்மாதீத்தும் ஆகுவீர்கள்.