11.06.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது முழுமையாக வேண்டும், ஏனெனில் நீங்கள் வீடு திரும்பியதும் தூய உலகிற்குச் செல்ல வேண்டும்.

பாடல்:
முழுமையாகத் தூய்மையடைவதற்கான வழி யாது?

பதில்:
முழுமையாகத் தூய்மையாகுவதற்கு, நீங்கள் ஓர் ஆண்டி ஆக வேண்டும். உங்களுடைய சரீரம் உட்பட, உறவுமுறைகள் அனைத்தையும் மறந்து, என்னை நினைவுசெய்யுங்கள், அப்பொழுதே நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். இப்பொழது நீங்கள் அந்தக் கண்களால்; பார்க்கின்ற அனைத்தும் அழிக்கப்படும் என்பதால் நீங்கள் செல்வம், உடைமைகள் போன்றவற்றை மறந்து ஓர் ஆண்டி ஆக வேண்டும். அத்தகைய ஆண்டிகளே இளவரசர்கள் ஆகுவார்கள்.

ஓம் சாந்தி.
இனிமையிலும் இனிமையான ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்குத் தந்தை விளங்கப்படுத்துகிறார். ஆரம்பத்தில் ஆத்மாக்கள் அனைவரும் தூய்மையாக இருந்தார்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் மிக நன்றாகப் புரிந்து கொள்கின்றீர்கள். நாங்கள் தூய்மையாக இருந்தோம். ஆத்மாவைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது: தூய்மையானவரும் தூய்மையற்றவரும். ஓர் ஆத்மா தூய்மையாக இருக்கும்பொழுது, அவரிடம் சந்தோஷமும் இருக்கின்றது. நீங்கள் தூய்மையாகும்பொழுது, நீங்கள் தூய உலகின் அதிபதிகள் ஆகுவீர்கள் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் புகுகின்றது. நீங்கள் அதற்காக முயற்சி செய்கின்றீர்கள். 5000 வருடங்களுக்கு முன்னர் தூய உலகம் இருந்தது, அந்த உலகில் அரைக்கல்பத்திற்கு நீங்கள் தூய்மையானவர்களாக இருந்தீர்கள். பின்னர் மற்றைய அரைக்கல்பம் இருந்தது. வேறு எவராலும் இவ்விடயங்களைப் புரிந்துகொள்ள முடியாது. தூய்மையும் தூய்மையின்மையும், சந்தோஷமும் துன்பமும், பகலும் இரவும் ஆகிய ஒவ்வொன்றும் அரைக்கல்பத்திற்கு இருக்கின்றது என்பது உங்களுக்குத் தெரியும். சிறந்த விவேகிகளும் அதிகளவு பக்தி செய்தவர்களும் மிக நன்றாகப் புரிந்து கொள்வார்கள். தந்தை கூறுகின்றார்: இனிய குழந்தைகளே, நீங்கள் தூய்மையாக இருந்தீர்கள். நீங்கள் மாத்திரமே புதிய உலகில் இருந்தீர்கள்; ஏனைய அனைவரும் அமைதி தாமத்தில் இருந்தார்கள். முதன்; முதலில், நாங்கள் தூய்மையாக இருந்தோம், அங்கு எங்களிற ; மிகச் சிலரே இருந்தார்கள், பின்னர் மனித உலகம் வரிசைக்கிரமமாக விரிவடையத் தொடங்கியது. இனிமையான குழந்தைகளாகிய உங்களுக்கு யார் விளங்கப்படுத்துகின்றார்? தந்தை. பரமாத்மாவாகிய தந்தையே, ஆத்மாக்களாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இதுவே சங்கமயுகம் என்று அழைக்கப்படுகின்றது. இது கும்பம் (சங்கமம்) என்று அழைக்கப்படுகின்றது. மக்கள் இந்தச் சங்கமயுகத்தை மறந்துவிட்டார்கள். நான்கு யுகங்கள் உள்ளன என்றும் இந்த ஐந்தாவது யுகம் ஒரு குறுகிய கால எல்லையைக் கொண்ட, லீப் யுகமாகிய சிறிய சங்கமயுகம் என பாபா விளங்கப்படுத்தியுள்ளார். தந்தை கூறுகிறார்: நான் இவரில் அவருடைய பல பிறவிகளின் இறுதிப் பிறவியில், அவர் ஓய்வுபெறும் ஸ்திதியில் பிரவேசிக்கின்றேன். குழந்தைகள் இந்த உத்தரவாதத்தைக் கொண்டிருக்கின்றார்கள். தந்தை இவரில் பிரவேசித்து, அவருடைய சுயசரிதையையும் கூறினார். தந்தை கூறுகிறார்: நான் ஆத்மாக்களுடன் மாத்திரமே பேசுகிறேன். ஒவ்வொரு ஆத்மாவினதும் பாகமும், அவரது சரீரத்துடன் இணைந்து செயற்படுகின்றது. அவர் ஓர் உயிருள்ளவர் (சொரூபம்) என்று அழைக்கப்படுகிறார்; தூய உயிருள்ளவர்களும் தூய்மையற்ற உயிருள்ளவர்களும். சத்தியயுகத்தில் மிகச் சில தேவர்களே இருக்கின்றார்கள் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் இருக்கிறது. பின்னர், நீங்கள் உங்களைப் பற்றிக் கூறுவீர்கள்: உயிருள்ளவர்களாகிய நாங்களே, சத்தியயுகத்தில் தூய்மையாக இருந்து 84 பிறவிகளை எடுத்த பின்னர், தூய்மையற்றவர்கள் ஆகிவிட்டோம். இந்தச் சக்கரம் தொடர்ந்தும் சுழல்கின்றது: தூய்மையிலிருந்து தூய்மையற்றதாகவும், தூய்மையற்றதில் இருந்து தூய்மையாகவுமாகும். நீங்கள் தூய்மையாக்குபவராகிய அந்தத் தந்தையை நினைவுசெய்கிறீர்கள். எனவே, பாபா 5000 வருடங்களுக்கு ஒருமுறை மாத்திரமே வந்து சுவர்க்கத்தை ஸ்தாபிக்கிறார். கடவுள் ஒரேயொருவரே அவர் நிச்சயமாகப் பழைய உலகைப் புதியதாக்குவார். புpன்னர் யார் அப் புதிய உலகைப் பழையதாக்குகிறார்? இராவணன், ஏனெனில் இராவணனே உங்களைச் சரீர உணர்வுடையவர் ஆக்குகிறான். ஓர் எதிரி எரிக்கப்படுகிறான், ஒரு நண்பன்; எரிக்கப்பட மாட்டான். அனைவருக்கும் ஜீவன்முக்தியை அருள்கின்ற, ஒரேயொரு தந்தையே அனைவரினதும் நண்பர் ஆவார். அவரே அனைவருக்கும் சந்தோஷத்தைக் கொடுப்பவர் என்பதால், அனைவரும் அவரை நினைவுசெய்கின்றார்கள். எனவே, அங்கு நிச்சயமாகத் துன்பத்தைக் கொடுப்பவரும் இருக்க வேண்டும். அது ஐந்து விகாரங்களாகிய, இராவணன் ஆகும். அரைக் கல்பத்திற்கு இராம இராச்சியமும் அரைக்கல்பத்திற்கு இராவண இராச்சியமும் இருக்கின்றது. மக்கள் ஒரு சுவஸ்திகாவை வரைகின்றார்கள். தந்தை அதன் அர்த்தத்தை விளங்கப்படுத்துகிறார். அவை அனைத்தும் நான்கு சமமான காற்பங்குகள் ஆகும். ஒன்று (ஒரு காற் பங்கு) சிறிதளவேனும் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இருக்க முடியாது. இந்த நாடகம் மிகச் சரியானதாகும். மக்களிற் சிலர் மிகவும் சந்தோஷமற்றிருப்பதால், தாங்கள் இந் நாடகத்திலிருந்து வெளியேற வேண்டும் என்றும், பிரம்ம தத்துவத்துடன் கலப்பது அல்லது ஒளித் தத்துவத்துடன் கலப்பது சிறந்தது என்றும் எண்ணுகிறார்கள். எவ்வாறாயினும், எவராலும் அங்கு செல்ல முடியாது. அவர்கள் கொண்டிருக்கின்ற எண்ணங்களைப் பாருங்கள்! பக்தி மார்க்கத்தில், அவர்கள் வெவ்வேறு விதமான முயற்சிகளைச் செய்கின்றார்கள். ஒரு சந்நியாசி தனது சரீரத்தை நீக்கும்பொழுது, அவர் சுவர்;க்கத்துக்கு அல்லது வைகுந்தத்திற்குச் சென்றார் என்று ஒருபொழுதும் கூறப்பட மாட்டாது. இல்லறத்தவர்கள் கூறுவார்கள்: இன்ன இன்னார் சுவர்க்கத்திற்குச் சென்றுவிட்டார். ஆத்மாக்கள் சுவர்க்கத்தை நினைவுசெய்கிறார்கள். நீங்கள் அதை அதிகளவு நினைவுசெய்கிறீர்கள். உங்களுக்கு இரண்டினது வரலாறும் புவியியலும்;; தெரியும். அது வேறு எவருக்கும் தெரியாது. நீங்களும் அறிந்திருக்கவில்லை. தந்தை வந்து இரகசியங்கள் அனைத்தையும் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். இது மனித உலக விருட்சம்; விருட்சம் நிச்சயமாக விதையையும் கொண்டிருக்கும். எவ்வாறு தூய உலகம் தூய்மையற்றதாகுகிறது என்பதைத் தந்தை மாத்திரம் விளங்கப்படுத்துகிறார். பின்னர் நான் வந்து அதைத் தூய்மையாக்குகிறேன். தூய உலகம் சுவர்க்கம் என்று அழைக்கப்படுகின்றது. இப்பொழுது சுவர்க்கம் கடந்ததாகி உள்ளது, அது நிச்சயமாக மீண்டும் வரும். இதனாலேயே கூறப்பட்டுள்ளது: உலக வரலாறு மீண்டும் சுழன்று வருகின்றது. அதாவது, உலகம் பழையதிலிருந்து புதியதாகவும் புதியதிலிருந்து பழையதாகவும் ஆகுகின்றது. அது மீண்டும் இடம்பெறுவதென்பது, ஒரு நாடகம் (படம்) என்று அர்த்தமாகும். “நாடகம்” என்;ற வார்த்தை மிகவும் சிறந்தது; அது சரியெனக் காணப்படுகின்றது. சக்கரம் தொடர்ந்தும் அதே போன்று சுழல்கின்றது. ஒரு நாடகம் ஒரேமாதிரியானது எனக் கூறப்பட முடியாது. ஒருவர் நோய் வாய்ப்படும்பொழுது, அவர் சுகயீன விடுமுறையை எடுக்கின்றார். குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது: நாங்கள் பூஜிக்கத் தகுதிவாய்ந்த தேவர்களாக இருந்து பின்னர் பூஜிப்பவர்கள் ஆகினோம். தந்தை வந்து உங்களுக்குத் தூய்மையற்றவரில் இருந்து தூய்மையாகுவதற்கான வழியைக் காட்டுகின்றார். அவர் இதையே உங்களுக்கு 5000 வருடங்களுக்கு முன்னரும் கூறினார். அவர் கூறுகிறார்: குழந்தைகளே, என்னை நினைவுசெய்யுங்கள். முதலில், தந்தை உங்களை ஆத்ம உணர்வுடையவர்கள் ஆக்குகிறார். முதலாவதாக, அவர் உங்களுக்கு இந்தப் பாடத்தைக் கற்பிக்கின்றார்: குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதித் தந்தையை நினைவுசெய்யுங்கள். நான் உங்களுக்கு அதிகளவு நினைவூட்டினாலும் இன்னமும் நீங்கள் மறக்கிறீர்கள்! நாடகத்தின் இறுதிவரையும், நீங்கள் தொடர்ந்தும் மறப்பீர்கள். இறுதியில், விநாச காலத்தின் பொழுது, உங்களுடைய கல்வி ஒரு முடிவிற்கு வரும், அப்பொழுது ஒரு பாம்பு தனது பழைய தோலை நீக்குவதுபோன்று, நீங்களும்; உங்களுடைய சரீரங்களை நீக்கிவிடுவீர்கள். தந்தை மேலும் விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் அமர்ந்திருக்கும்பொழுதும், நடக்கும்பொழுதும், உலாவித் திரியும்பொழுதும் ஆத்ம உணர்வில் இருங்கள். முன்னர், உங்களுக்குச் சரீர உணர்வு இருந்தது. தந்தை கூறுகின்றார்: இப்பொழுது, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுங்கள். நீங்கள் சரீர உணர்வுடையவர்கள் ஆகும்பொழுது, ஐந்து விகாரங்களும்; உங்களை இறுகப் பற்றிக் கொள்;கின்றன. நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகும்பொழுது, விகாரங்கள் எவையும் உங்களைப் பற்றிக் கொள்ள முடியாது. நீங்கள் ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகி அதிகளவு அன்புடன் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். இந்தச் சங்கமயுகத்தில் மாத்திரமே ஆத்மாக்கள், பரமாத்மாவாகிய தந்தையிடமிருந்து அன்பைப் பெறுகின்றனர். இது தந்தை குழந்தைகளைச் சந்திக்கின்ற நன்மையளிக்கும் சங்கமயுகம் என அழைக்கப்படுகின்றது. ஆத்மாக்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு சரீரத்தில் இருக்கின்றீர்கள். தந்தையும் ஒரு சரீரத்தில் பிரவேசித்து நீங்கள் ஆத்மாக்கள் என்ற நம்பிக்கையைக்; கொண்டிருக்கச் செய்கின்றார். அவர் அனைவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்வதற்கு தந்தை ஒரேயொருமுறை மாத்திரமே வருகின்றார். அவர் எவ்வாறு உங்களைத் திரும்பவும் வீட்டிற்கு அழைத்துச் செல்வார் என்பதையும் அவர் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். நீங்கள் கூறுகிறீர்கள்: நாங்கள் அனைவரும் தூய்மையற்றவர்கள், நீங்களோ தூய்மையானவர். வந்து எங்களைத் தூய்மையாக்குங்கள்! பாபா எவ்வாறு உங்களைத் தூய்மையாக்குவார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிந்திருக்கவில்லை. அவர் உங்களைத் தூய்மையாக்கும்வரை, உங்களுக்கு என்ன தெரியும்? ஓர் ஆத்மா ஒரு சின்னஞ் சிறிய நட்சத்திரம் என்பதை நீங்கள் புரிந்துகொள்கின்றீர்கள். தந்தையும் ஒரு சின்னஞ் சிறிய நட்சத்திரம் ஆவார். எவ்வாறாயினும், அவர் ஞானக்கடலும் அமைதிக்கடலும் ஆவார். அவர் உங்களைத் தனக்குச் சமமானவர்களாகவும் ஆக்குகின்றார். குழந்தைகளாகிய நீங்கள் இந்த ஞானத்தைக் கொண்டிருந்து பின்னர் நீங்கள் அதை அனைவருக்கும் விளங்கப்படுத்துகிறீர்கள். நீங்கள் சத்தியயுகத்தில் இருக்கும்பொழுது, உங்களுக்கு இந்த ஞானம் கூறப்படுமா? இல்லை. ஞானக்கடலாகிய ஒரேயொரு தந்தையே, இந்நேரத்தில் உங்களுக்கு மாத்திரம் கற்பிக்கின்றார். ஒவ்வொருவருக்கும்; ஒரு வாழ்க்கைச் சரிதை இருக்க வேண்டும். தந்தை உங்களுக்கு அதைத் தொடர்ந்தும் கூறுகின்றார். எவ்வாறாயினும், நீங்கள் அதை மீண்டும் மீண்டும் மறந்துவிடுகிறீர்கள். உங்களுடைய யுத்தம் மாயையுடன் ஆகும். நீங்கள் பாபாவை நினைவுசெய்வதை உணர்கிறீர்கள், ஆனாலும் பின்னர் நீங்கள் அவரை மறந்து விடுகிறீர்கள். தந்தை கூறுகிறார்;: மறக்க வைக்கின்ற மாயையே உங்கள் எதிரியாவாள், அதாவது, அவள் உங்களைத் தந்தையிடமிருந்து அப்பால் திரும்பச் செய்கிறாள். குழந்தைகளாகிய நீங்கள் ஒருமுறை மாத்திரம் தந்தையின் முன்னிலையில் வருகின்றீர்கள். தந்தை உங்களுக்கு ஒருமுறை மாத்திரம் ஓர் ஆஸ்தியைக் கொடுக்கிறார். பின்னர் தந்தை மீண்டும் உங்கள் முன்னிலையில் வர வேண்டிய தேவையில்லை. அவர் உங்களைப் பாவாத்மாக்களில் இருந்து புண்ணியாத்மாக்களாகவும் சுவர்க்கத்தின் அதிபதிகளாகவும் மாற்றுகிறார். அவ்வளவுதான். அதன் பின்னர் அவர் இங்கு வந்தால், அவர் என்ன செய்வார்? நீங்கள் என்னை அழைத்தீர்கள், எனது மிகச் சரியான நேரத்தில் நான் வந்தேன். ஒவ்வொரு 5000 வருடங்களும் எனக்குரிய மிகச்சரியான நேரத்தில் நான் வருகிறேன். மக்கள் சிவனின் பிறந்த தினத்தை ஏன்; கொண்டாடுகிறார்கள் என்பது எவருக்கும் தெரியாது. அவர் என்ன செய்தார் என்பதை எவருமே அறியவும் இல்லை. இதனாலேயே சிவனின் பிறந்தநாளில் அவர்கள் விடுமுறை எதையும் வழங்குவதில்லை. அவர்கள் அனைவருக்கும் ஒரு விடுமுறை நாளை வழங்குகின்றார்கள், ஆனால் சிவபாபா வந்து அத்தகைய ஒரு பாகத்தை நடிக்கிறார் என்பதை எவரும் அறியார். அவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியாது. பாரதத்தில் அதிகளவு அறியாமை உள்ளது. சிவபாபாவே அதிமேலானவர் என்பதும், எனவே அவர் நிச்சயமாக மனிதர்களை அதிமேலானவர்களாக ஆக்குவார் என்பதும் குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். தந்தை கூறுகிறார்: நான் இவருக்கு ஞானத்தையும் கொடுத்து, யோகத்தையும் கற்பித்தேன், பின்னர் அவர் ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகினார். அவர்(பிரம்மா) இந்த ஞானத்தைச் செவிமடுத்தார். இந்த ஞானம் உங்களுக்கு மாத்திரமானதாகும். அது வேறு எவருக்கேனும் உகந்ததாகக் காணப்படவில்லை. நீங்கள் மீண்டும் ஒருமுறை அவ்வாறு ஆக வேண்டும். வேறு எவரும் அவ்வாறு ஆகுவதில்லை. இது ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணன் ஆகுகின்ற கதை ஆகும். ஏனைய சமயங்களை ஸ்தாபித்த அனைவரும் மறுபிறவி எடுத்து தமோபிரதான் ஆகிவிட்டார்கள், எனவே அவர்கள் அனைவரும் மீண்டும் சதோபிரதான் ஆக வேண்டும். அவர்கள் அடைந்த அந்தஸ்துக்கேற்ப, அவர்கள் பின்னர் தங்களுடைய பாகங்களை மீண்டும் மீண்டும் நடிக்க வேண்டும். மேன்மையான நடிகர்கள் ஆகுவதற்கு நீங்கள் பெருமளவு முயற்சியைச் செய்கிறீர்கள். யார் உங்களை முயற்சி செய்வதற்குத் தூண்டுகிறார்கள்? பாபாவே ஆவார். நீங்கள் மேன்மையானவர்கள் ஆகியதும் நீங்கள் ஒருபொழுதும் அவரை நினைவுசெய்வதில்லை. நீங்கள் அவரைச் சுவர்க்கத்தில் நினைவுசெய்ய மாட்டீர்கள். தந்தையே அதிமேலானவர். அவரே உங்களை அதிமேலானவர்கள் ஆக்குகிறார். நாராயணனுக்கு முன்னர் ஸ்ரீ கிருஷ்ணர் இருக்கிறார். எனவே, அவர் உங்களை ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக மாற்றுகிறார் என நீங்கள் ஏன் கூறுகிறீர்கள்? அவர் உங்களை ஒரு சாரதாரண மனிதனிலிருந்து கிருஷ்ணராக மாற்றுகிறார் என்று நீங்கள் ஏன் கூறுவதில்லை? அவர் முதலில் நாராயணனாக ஆகுவதில்லை. முதலில் அவர் இளவரசனானஸ்ரீ கிருஷ்ணராக ஆகுகிறார். ஓரு குழந்தை ஒரு மலர் ஆவார், அவரோ (நாராயணன்) தம்பதியினரில் ஒருவர் ஆவார். பிறப்பிலிருந்து பிரம்மச்சாரியாக உள்ளவர்களே, புகழப்படுகிறார்கள். சிறு குழந்தைகள் சதோபிரதான் என்று கூறப்படுகிறார்கள். அனைத்திற்கும் முதலில், நீங்கள் இளவரசர்கள் ஆகுவீர்கள் என்று குழந்தைகளாகிய நீங்கள் எண்ண வேண்டும். “ஆண்டிகளிலிருந்து இளவரசர்கள்” என்ற வார்த்தை நினைவுகூரப்படுகிறது. யார் ஓர் ஆண்டி என்று அழைக்கப்படுகிறார்? சரீரத்தில் இருக்கின்ற ஆத்மாவே, ஓர் ஆண்டியாக அல்லது ஒரு செல்வந்த நபராகக் குறிப்பிடப்படுகிறார். இந்நேரத்தில், அனைவரும் ஆண்டிகள் ஆகிவிட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்; அனைத்தும் அழிக்கப்படுகின்றன. இந்நேரத்தில் உங்கள் சரீரங்களுடன்; நீங்கள் ஆண்டிகள் ஆக வேண்டும். நீங்கள் கொண்டிருக்கின்ற பென்னிகள் (ஆங்கில நாணயம்) அனைத்தும் அழிக்கப்பட்டு விடும். ஆத்மா ஓர் ஆண்டி ஆகி, அனைத்தையும் கைவிட்ட பின்னர் ஓர் இளவரசர் ஆக வேண்டும். நீங்கள் செல்வம், செழிப்பு அனைத்தையும் கைவிட்டு ஆண்டிகள் ஆகிப் பின்னர் வீடு திரும்புவீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும். பின்னர் நீங்கள் புதிய உலகிற்கு இளவரசர்களாகச் செல்வீர்கள். நீங்கள் கொண்டுள்ளவை அனைத்தையும் நீங்கள் துறக்க வேண்டும். இப் பழைய விடயங்கள் எவ்விதப் பயனும் அற்றவையாகும். ஆத்மாக்களாகிய நீங்கள் முன்னைய கல்பத்தில் செய்ததைப் போன்றே, தூய்மையானவராகியதும், உங்கள் பாகங்களை நடிப்பதற்கு நீங்கள் இங்கு வருவீர்கள். நீங்கள் எந்தளவிற்கு ஞானத்தைக் கிரகிக்கின்றீர்களோ, அந்தளவிற்கு உயர்ந்த அந்தஸ்தைப்; பெறுவீர்கள். இந்நேரத்தில், ஒருவர் ஐந்து மில்லியனைக் கொண்டிருந்தாலும் அவை அனைத்தும் அழியப் போகின்றன. நாங்கள் மீண்டும் ஒருமுறை எங்களுடைய புதிய உலகிற்குச் செல்கின்றோம். நீங்கள் புதிய உலகிற்குச் செல்வதற்கே இங்கு வந்துள்ளீர்கள். தாங்கள் புதிய உலகிற்காகக்; கற்கின்றோம் என்று அவர்கள் நம்புகின்ற, வேறு எந்த ஆன்மீக ஒன்றுகூடல்களும் இல்லை. அனைத்திற்கும் முதலில், பாபா உங்களைப் ஆண்டிகள் ஆக்கிப் பின்னர் இளவரசர்கள் ஆக்குகிறார் என்பது குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளது. உங்களுடைய சரீர உறவுமுறைகள் அனைத்தையும் நீங்கள் துறந்தால், நீங்கள் பின்னர் ஓர் ஆண்டி, உங்களிடம் எதுவும் இல்லை. இப்பொழுது, பாரதத்தில் எதுவுமே இல்லை. தற்பொழுது பாரதம் கடனாளியாக, ஒரு ஆண்டியாக உள்ளது. அது பின்னர் செல்வந்த நாடாக மாறும். அவ்வாறு யார் ஆகுகிறார்கள்? சரீரத்தினூடாக, ஆத்மாக்கள் அவ்வாறு ஆகுகிறார்கள். இப்பொழுது அரசர்களோ அல்லது அரசிகளோ இல்லை. அவர்களும் கடனாளிகள்;. ஒரு கிரீடத்தையுடைய அரசர்களோ அல்லது அரசிகளோ இல்லை. அவர்கள் அந்தக் கிரீடத்தையோ (ஒளியாலான), இரத்தினங்களினாலான ஒரு கிரீடத்தையோ கொண்டிருக்கவில்லை. இது இருள் சூழ்ந்த நகரம் ஆகும். கடவுள் சர்வவியாபி, அதாவது கடவுள் அனைவரிலும் இருக்கிறார், அனைவரும் சமமானவர்களே, அவர் பூனைகளிலும் நாய்களிலும் இருக்கிறார் என்று அவர்கள் கூறுகிறார்கள். இது இருள் சூழ்ந்த நகரம் என்று அழைக்கப்படுகின்றது. அது பிராமணர்களாகிய உங்களின் இரவாக இருந்தது. இப்பொழுது, நீங்கள் பகலாகிய, ஞானம் வந்து கொண்டிருக்கிறது என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். சத்தியயுகத்தில் அனைவரும் ஏற்றப்பட்ட தீபங்கள் ஆவார்கள். தீபம் இப்பொழுது முற்றிலும் மங்கலாகிவிட்டது. பாரதத்தில் மாத்திரமே அவர்கள் தீபங்களை ஏற்றுகின்ற வழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். வேறு எவரும் ஒரு தீபத்தை ஏற்றுவதில்லை. உங்களுடைய தீபம் அணைக்கப்பட்டு விட்டது. நீங்கள் சதோபிரதான் உலகின் அதிபதிகளாக இருந்தீர்கள். படிப்படியாக நீங்கள் கொண்டிருந்த சக்தி குறைவடைந்து, இப்பொழுது எந்தச் சக்தியும் எஞ்சியில்லை. மீண்டும் ஒருமுறை உங்களுக்கு வலிமையைக் கொடுப்பதற்குத் தந்தை வந்துள்ளார். உங்களுடைய மின்கலம் (பற்றரி) தொடர்ந்தும் நிரப்பப்படுகிறது. ஓர் ஆத்மா பரமாத்மாவாகிய தந்தையின் நினைவைக் கொண்டிருக்கும்பொழுது, அவருடைய மின்கலம் நிறைந்து விடுகிறது. நல்லது.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. இப்பொழுது நாடகம் முடிவடைவதனால், நாங்கள் வீடு திரும்ப வேண்டும். ஆகவே, தந்தையை நினைவு செய்வதன் மூலம் ஆத்மா சதோபிரதானாகவும் தூய்மையாகவும் ஆக்கப்பட வேண்டும். இப்பொழுதே, நீங்கள் தந்தையைப் போன்று. ஞானக்கடலாகவும் அமைதிக் கடலாகவும் ஆக வேண்டும்.

2. உங்கள் சரீர உறவிலேனும், ஒரு முழுமையான ஆண்டி ஆகுவதற்கு, கண்களால் நீங்கள் பார்க்கின்ற அனைத்தும் அழியப் போகின்றன என்பது உங்களுடைய புத்தியில் இருக்கட்டும். நாங்கள் ஆண்டிகளில் இருந்து இளவரசர்கள் ஆக வேண்டும். எங்களுடைய கல்வி புதிய உலகிற்கானதாகும்.

ஆசீர்வாதம்:
தற்காலிக அதிசயங்களை செய்து காட்டுவதற்கு மாறாக, பிரகாசமான அழிவற்ற பாக்கிய நட்சத்திரங்களை உருவாக்குகின்ற வெற்றி சொரூபம் ஆகுவீர்களாக.

இக்காலத்தில் சில மக்கள் இறுதியாக மேலிருந்து கீழே வருவதால், அவர்கள் தற்காலிகமான சக்திகளை கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் சதோபிரதான் ஸ்திதியை கொண்டிருக்கின்றார்கள், தூய்மையின் வெகுமதியாக அவர்கள் தற்காலிக எல்லைக்குட்பட்ட அதிசயங்களை செய்து காட்டுகின்றார். எவ்வாறாயினும் அந்த வெற்றி நீடிப்பதில்லை ஏனெனில், அவர்கள் சதோ, இரஜோ, தமோ என்ற மூன்று ஸ்திதிகளினூடாக விரைவாக கடந்து செல்கிறார்கள். தூய ஆத்மாக்களாகிய நீங்கள் நிலையான வெற்றி சொரூபங்கள் ஆவீர்கள் என்பதால், நீங்கள் அதிசயங்களை செய்து காட்டுவதற்கு மாறாக, நீங்கள் ஆத்மாக்களை பிரகாசமான ஒளிப்புள்ளி வடிவத்தினர் ஆக்குகிறீர்கள். நீங்கள் பிரகாசமான அழிவற்ற பாக்கிய நட்சத்திரங்களை உருவாக்குகிறீர்கள் என்பதாலேயே அனைவருமே உங்களிடமிருந்து ஒரு துளியை எடுத்துக் கொள்வதற்காக வருவார்கள்.

சுலோகம்:
எல்லையற்ற ஆர்மின்மையின் சூழல் இருக்கும் போது,, ஒத்துழைக்கின்ற ஆத்மாக்கள் இலகுயோகிகள் ஆகுகின்றார்கள்.