11.07.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, இது இப்பொழுது ஆழமான மௌன ஸ்திதியைக் கொண்டிருப்பதற்கான, அதாவது, சரீரமற்றவராக இருக்கின்ற ஸ்திதிக்கான நேரமாகும். இந்த ஸ்திதியில் நிலைத்திருப்பதைப் பயிற்சி செய்யுங்கள்.

பாடல்:
அனைத்திலும் அதி உயர்ந்த இலக்கு எது, நீங்கள் அதனை எவ்வாறு அடைகிறீர்கள்?

பதில்:
முற்றிலும் நாகரீகம் உடையவர் ஆகுதலே அதியுயர்ந்த இலக்காகும். உங்கள் பௌதீக அங்கங்களில் சற்றேனும் விஷமத்தனம் இ;ல்லாதிருக்கும்பொழுது மாத்திரமே உங்களால் முற்றிலும் நாகரீகம் உடையவராக முடியும். உங்களுக்கு அத்தகைய ஸ்திதி இருக்கும் பொழுதே, உலக இராச்சியத்தைப் பெற முடியும். நினைவுகூரப்பட்டுள்ளது: மேலேறுபவர்கள் சுவர்க்கத்தின் இனிமையைச் சுவைக்கின்றார்கள், அதாவது, அவர்களால் அரசர்களுக்கெல்லாம் அரசராக முடியும். இல்லையேல், அவர்கள் பிரஜைகள் ஆகுகிறார்கள். இப்பொழுது, சோதியுங்கள்: எனது மனோபாவம் எவ்வாறு உள்ளது? நான் தவறுகள் ஏதேனும் செய்கின்றேனா?

ஓம் சாந்தி.
நீங்கள் இங்கே ஆத்ம உணர்வில் அமர்ந்திருக்க வேண்டும். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகின்றார்: உங்களை ஆத்மாக்கள் எனக் கருதுங்கள். பாபா இப்பொழுது சகலதுறை வல்லுனராகிய தாதியிடம் வினவுகின்றார்: நீங்கள் சத்திய யுகத்தில் ஆத்ம உணர்வில் இருக்கின்றீர்களா அல்லது சரீர உணர்வில் இருக்கின்றீர்களா? அங்கே நீங்கள் இயல்பாகவே ஆத்ம உணர்வில் இருக்கின்றீர்கள். நீங்கள் இதனை மீண்டும் மீண்டும் நினைவுசெய்யத்; தேவையில்லை. ஆம், எனது சரீரம் முதிர்ந்து விட்டது, ஆகையால் அதனை நீக்கிப் புதியதொன்றைக் பெற வேண்டும் என்று நீங்கள் அங்கே புரிந்துகொள்கின்றீர்கள். ஒரு பாம்பின் உதாரணத்தைப் போன்று, ஆத்மாவும் தனது பழைய சரீரத்தை நீக்கி, புதியதொன்றைப் பெறுகின்றார். கடவுள் உதாரணங்கள் மூலம் விளங்கப்படுத்துகின்றார். மனிதர்கள் அனைவருக்கும் ஞானத்தை ரீங்காரமிட்டு அவர்களையும் உங்களைப் போன்று ஞானம் நிறைந்தவர்கள் ஆக்குங்கள், அதன் மூலம் அவர்களால்; தேவதைகளின் பூமியில் விகாரமற்ற தேவர்களாக முடியும். மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதே அதியுயர்வான கல்வியாகும். நினைவுகூரப்பட்டுள்ளது: மனிதர்களைத் தேவர்களாக மாற்றுவதற்குக் கடவுளுக்கு நீண்டகாலம் பிடிக்கவில்லை. அதனைச் செய்தவர் யார்? தேவர்கள் அவ்வாறு செய்யவில்லை. கடவுள் மாத்திரமே மனிதர்களைத் தேவர்களாக மாற்றுகின்றார். மனிதர்களுக்கு இவ்விடயங்கள் தெரியாது. எங்குமுள்ள மக்கள் உங்களிடம் வினவுகின்றார்கள்: உங்கள் இலக்கும், இலட்சியமும் எவை? உங்கள் இலக்கையும் இலட்சியத்தையும்; விளங்கப்படுத்தி, ஒரு சிறிய துண்டுப்பிரசுரம் அச்சடித்து வைத்திருந்தால் என்ன? அதனால் உங்களிடம் வினவுகின்ற எவருக்கும் அவற்றைக் கொடுக்க முடியும். அவற்றின் மூலம் அவர்களால் புரிந்துகொள்ள முடியும். பாபா மிகவும் நன்றாக விளங்கப்படுத்தியுள்ளார். இந்நேரத்தில், இது எல்லையற்ற, பெருந் துன்பம் நிறைந்துள்ள, கலியுகத்து, தூய்மையற்ற உலகமாகும். இப்பொழுது, மனிதர்களாகிய எங்களை மகத்துவமான, தூய, சத்தியயுக சந்தோஷ தாமத்திற்கு அழைத்துச் செல்கின்ற சேவையை பாபா செய்கின்றார், அதாவது, அவர் எங்களுக்குப் பாதையைக் காட்டுகின்றார். நாங்கள் பிரிவினையற்ற (வேறுபாடுகளற்ற) ஞானத்தைக் கொடுக்கின்றோம் என்பதல்ல. அம்மக்கள் சமயநூல்களில் உள்ள ஞானத்தைப் பிரிவினையற்ற ஞானம் எனக் கருதுகிறார்கள். உண்மையில், அது பிரிவினையற்ற ஞானம் அல்ல. 'பிரிவினையற்ற ஞானம்" என எழுதுதலே பிழையாகும். இதனை நீங்கள் தெளிவாக மனிதருக்கு விளங்கப்படுத்த வேண்டும். உங்கள் இலக்கு என்ன என்பதனை மக்கள் விரைவில் புரிந்துகொள்ளும் வகையில் துண்டுப்பிரசுரங்களை அச்சடித்து வைத்திருங்கள். நாங்கள் கலியுகத்;தின் தூய்மையற்ற, சீரழிந்த மனிதர்களை எல்லையற்ற துன்பத்திலிருந்து அகற்றி, சத்திய யுகமான தூய, மேன்மையான, எல்லையற்ற சந்தோஷ உலகிற்கு அழைத்துச் செல்கின்றோம். பாபா உங்களுக்கு இந்தக் கட்டுரையை எழுதுமாறு கொடுக்கின்றார். நீங்கள் இதனை மிகவும் தெளிவாக எழுத வேண்டும். அத்தகைய கட்டுரைகளைக் கொண்ட துண்டுப்பிரசுரங்களை நீங்கள் சகல இடங்களிலும் வைத்திருந்தால், அவற்றை நீங்கள் விரைவில் எடுத்து, மக்களுக்குக் கொடுக்க முடியும், பின்னர் தாங்கள் துன்ப பூமியில் இருக்கிறார்கள் என்பதனையும், அசுத்தத்தில் உறங்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனையும் அவர்களால் உணர்ந்துகொள்ள முடியும். மனிதர்கள் தாங்கள் கலியுகத்து, தூய்மையற்ற, துன்ப பூமியின் மனிதர்கள் என்பதனையும், நாங்களே எல்லையற்ற சந்தோஷத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கின்றோம் என்பதனையும் புரிந்துகொள்வதில்லை. பாபா வைத்திருந்ததைப் போன்று, நீங்களும் ஒரு நல்ல துண்டுப்பிரசுரத்தை வைத்திருக்க வேண்டும்: நீங்கள் சத்திய யுகத்தவர்களா அல்லது கலியுகத்தவர்களா? எவ்வாறாயினும், மக்கள் எதனையும் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் இரத்தினங்களைக் கற்களாகக் கருதி, அவற்றை வீசி விடுகின்றார்கள். இவை ஞான இரத்தினங்கள். ஆனால் அம்மக்களோ சமயநூல்களில் உள்ளவற்றை இரத்தினங்கள் என எண்ணுகின்றார்கள். இங்கே எல்லையற்ற துன்பம் உள்ளது என்பதனை அவர்கள் உணர்ந்துகொள்ளும் வகையில் உங்களால் தெளிவாக விளங்கப்படுத்த முடியும். துன்பத்தின் வகைகளின் பட்டியல் ஒன்று இருக்க வேண்டும். அப் பட்டியலில் குறைந்தபட்சம் 101 துன்ப வகைகள் இருக்க வேண்டும். எழுதுங்கள்: இவ் உலகில் எல்லையற்ற துன்பம் உள்ளது. இவை அனைத்தையும் எழுதி, ஒரு பட்டியல் தயாரியுங்கள். மறுபுறத்தில், துன்பத்தின் சுவடேயற்ற, எல்லையற்ற சந்தோஷத்தைப் பற்றி எழுதுங்கள். நாங்கள் அந்த இராச்சியத்தையே, அதாவது, அச் சந்தோஷ தாமத்தையே ஸ்தாபிக்கின்றோம். அப்பொழுதே மக்கள் தங்களின் வாய்களை மிகவும் விரைவில் மூடுவார்கள். இந்நேரத்தில் துன்ப பூமியே உள்ளது என்பதனை மக்கள் புரிந்துகொள்வதில்லை; அவர்கள் இதனைச் சுவர்க்கம் எனக் கருதுகின்றார்கள். அவர்கள் பெரிய மாளிகைகளையும் புதிய ஆலயங்கள் போன்றவற்றையும் கட்டுகின்றார்கள். இவை அனைத்தும் முடிவடையவுள்ளது என்பது அவர்களுக்குத் தெரியாது. அவர்கள் இலஞ்சம் வாங்குவதன் மூலம் பெரும் பணத்தைப் பெறுகின்றார்கள். அவை அனைத்தும் மாயையின் அகங்காரமும், விஞ்ஞானத்தின் அகங்காரமும் எனத் தந்தை விளங்கப்படுத்தியுள்ளார். மோட்டார் கார்கள், விமானங்கள் போன்றன அனைத்தும் மாயையின் பகட்டாகும். தந்தை சுவர்க்கத்தை ஸ்தாபிக்கின்றபொழுது, மாயையும் தனது சொந்த ஆடம்பரத்தைக் காட்டுவது நியதியாகும். இதுவே மாயையின் பகட்டு என அழைக்கப்படுகிறது. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் உலகம் முழுவதிலும் அமைதியை ஸ்தாபிக்கிறீர்கள். மாயை வந்து இடையூறு விளைவித்தால், குழந்தைகளாகிய உங்களின் மனச்சாட்சி உங்களை உறுத்துகின்றது. ஒருவர் இன்னொருவரின் பெயரிலும் வடிவத்திலும் சிக்குண்டு விடுபவர் ஆகுதலே குற்றமுள்ள பார்வை உடையவராக இருத்தல் எனத் தந்தை விளங்கப்படுத்துகின்றார். கலியுகத்தில் குற்றமும், சத்திய யுகத்தில் நாகரீகமும் உள்ளன. அனைவரும் அத் தேவர்களின் விக்கிரகங்களின் முன்னிலையில் தங்களின் தலைகளை வணங்குகின்றார்கள்: நீங்கள் விகாரமற்றவர்கள், நாங்கள் விகாரம் உடையவர்கள். இதனாலேயே தந்தை கூறுகின்றார்: நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் சொந்த ஸ்திதியைச் சோதிக்க வேண்டும். மூத்த மகாராத்திகள் அனைவரும் தங்களையே பார்க்க வேண்டும்: எனது புத்தி எவரின் பெயரிலோ அல்லது வடிவத்திலோ ஈர்க்கப்படவில்லை, இல்லையா? இன்னார் மிகவும் நல்லவர்; நானே இதைச் செய்ய வேண்டும். இவ்வாறான உணர்வுகள் உங்களுக்குள் உள்ளனவா? இந்த நேரத்தில் எவருமே முழுமையாக நாகரீகம் உடையவராக ஆகவில்லை என்பது பாபாவிற்குத் தெரியும். சற்றேனும் விஷமத்தனம் இல்லாதிருப்பதற்குப் பெரும் முயற்சி தேவை. அவ்வாறாக அரிதாகவே உள்ளனர். நிச்சயமாக அவர்களின் கண்கள் சிறிதளவாயினும் ஏமாற்றி விடுகின்றன. நாடகம் எவரையுமே மிக விரைவில் நாகரீகம் உடையவர்களாக (குற்றமற்ற பார்வை) அனுமதிக்க மாட்டாது. நீங்கள் ஒவ்வொருவரும் பெருமளவு முயற்சி செய்து உங்களைச் சோதித்துப் பார்க்க வேண்டும்: எனது கண்கள் என்னை ஏமாற்றுகின்றனவா? உலக அதிபதி ஆகுதல் மிகவும் உயர்ந்த இலக்காகும். ஏறுகின்றவர்கள் சுவர்க்கத்தின் இனிமையைச் சுவைக்கின்றார்கள், அதாவது, அவர்கள் அரசர்களுக்கு எல்லாம் அரசர்கள் ஆகுகின்றார்கள். அவர்கள் விழுந்தால், பிரஜைகள் ஆகுகின்றார்கள். இந்நாட்களில், இவை விகாரம் நிறைந்த காலம்; எனக் கூறப்படும். ஒருவர் எவ்வளவு மகத்தானவராக இருந்தாலும், உதாரணத்திற்கு அரசியாக இருந்தாலும், அவரும் ஒருவேளை, தன்னை எவராவது தனது ஆசனத்திலிருந்து இறக்கி விடுவாரோ என்ற உள்ளார்ந்த பயத்திலேயே இருப்பார். ஒவ்வொரு மனிதரிலும் அமைதியின்மை உள்ளது. சில குழந்தைகளும் அதிகளவு அமைதியின்மையைப் பரப்புகின்றார்கள். நீங்கள் அமைதியை ஸ்தாபிப்பதால், எல்லாவற்றிற்கும் முதலில், நீங்கள் உங்களுக்குள் அமைதிநிறைந்தவராக இருக்க வேண்டும், அதன்பின்னரே உங்களால் பிறரில் அந்தச் சக்தியை நிரப்ப முடியும். அங்கே இராச்சியமே மிகவும் அமைதியாக இருக்கிறது; உங்கள் கண்கள் குற்றமற்றவை ஆகுகின்றன. தந்தை கூறுகின்றார்: உங்களைச் சோதியுங்கள்: இன்று ஆத்மாவாகிய எனது மனோபாவம் எவ்வாறிருந்தது? இதற்குப் பெரும் முயற்சி தேவை. உங்களை நீங்களே கவனித்துக் கொள்ள வேண்டும். சிலவேளைகளில், நீங்கள் எல்லையற்ற தந்தையிடம் உண்மையைக் கூறாமல், ஒவ்வோர் அடியிலும் தொடர்ந்;தும் தவறுகளைச் செய்கின்றீர்கள். நீங்கள் ஒருவரை அந்தக் குற்றமுள்ள பார்வையுடன் சற்றேனும் பார்த்தாலோ அல்லது நீங்கள் தவறு எதனையாவது செய்தாலோ, அதனை உடனடியாகக் குறித்துக் கொள்ளுங்கள். தவறு செய்வதில் இருந்து முற்றிலும் நீங்கள் விடுபட்டவர் ஆகும்வரை, குறைந்தபட்சம் ஒவ்வொரு நாளும் 10 முதல் 20 தவறுகளைச் செய்து கொண்டிருப்பீர்கள். எவ்வாறாயினும், எவரும் உண்மையைக் கூறுவதில்லை. சரீர உணர்வுடையவர்கள் நிச்சயமாக ஏதோவொரு பாவத்தைச் செய்வார்கள். அவர்களின் மனச்சாட்சி அவர்களைத் தொடர்ந்தும் உறுத்தும். ஒரு தவறு என்றால் என்ன என்பதனைக் கூட சிலர் புரிந்துகொள்வதில்லை. மிருகங்கள் இதனைப் புரிந்துகொண்டிருக்கின்றனவா? இந்த ஞானத்தைப் பெறுவதற்கு முன்னர், நீங்களும் குரங்குப் புத்தியையே கொண்டிருந்தீர்கள். சிலர் 50 வீதம் மாறுகின்றார்கள், சிலர் பத்து வீதம் மாறுகின்றார்கள், ஏனையோர் இன்னொரு வீதத்தினால் மாறுகின்றார்கள். இக் கண்கள் மிகவும் ஏமாற்றுபவை. கண்களே அதிகக் கூர்மையானவை. தந்தை கூறுகின்றார்: ஆத்மாக்களாகிய நீங்கள் சரீரமற்று வந்தீர்கள். நீங்கள் சரீரங்களைக் கொண்டிருக்கவில்லை. இந்த நேரத்தில் நீங்;கள் வேறு எந்தச் சரீரத்தைப் பெறுவீர்கள் அல்லது என்ன உறவுமுறைகளுக்குள் பிரவேசிப்பீர்கள் என்பதோ உங்களுக்குத் தெரியுமா? உங்;களால் அதனைக் கூற முடியாது. கருப்பைகளில், நீங்கள் முற்றிலும் மௌனமாக இருக்கின்றீர்கள். ஒவ்வோர் ஆத்மாவும் முற்றிலும் மௌனமானவர் ஆகுகின்றார். சரீரம் பெரிதாக வளரும்பொழுதே நீங்கள் என்னவாக வேண்டும் என்பதனை அறிந்து கொள்வீர்கள். நீங்கள் அப் பழைய சரீரத்தை நீக்கி வீடு திரும்பிப் பின்னர், இன்னொரு சரீரத்தைப் பெறும்பொழுது, சத்திய யுகத்தில் உங்கள் பாகத்தை நடிப்பீர்கள். இப்பொழுது இது முற்றிலும் மௌனமானவர் ஆகுவதற்கான நேரமாகும். ஒவ்வோர் ஆத்மாவும் அச் சம்ஸ்காரங்களைத் தன்னுடன் சுமந்து செல்கின்றார். பின்னர் சரீரம் வளரும்பொழுது, அவை வெளிப்படுகின்றன. நீங்கள் இப்பொழுது வீடு திரும்ப வேண்டும் என்பதால், இப் பழைய உலகத்தையும், உங்கள் சரீரங்களின் உணர்வையும் மறக்க வேண்டும். எதுவுமே நினைவுசெய்யப்படல் கூடாது. நீங்கள் பல முன்னெச்சரிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். உள்ளே இருப்பவை அனைத்தும் வெளியே வெளிப்படும். சிவபாபா தனக்குள் இந்த ஞானத்தைக் கொண்டுள்ளார். எனக்கும் ஒரு பாகம் உள்ளது. என்னைப் பற்றியே நீங்கள் கூறுகின்றீர்கள்: ஞானக்கடல். மக்கள் இப் புகழைப் பாடுகின்றார்கள், ஆனால் அவர்களுக்கு அதன் அர்த்தம் தெரியாது. நீங்கள் இப்பொழுது இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்;கின்றீர்கள். எவ்வாறாயினும், ஆத்மாக்களின் புத்தியானது ஒரு சதப் பெறுமதியும் அற்றதாக ஆகுகின்றது. தந்தை இப்பொழுது உங்களை மிகவும் விவேகிகள் ஆக்குகின்றார். மக்கள் மில்லியன்களையும், பலமில்லியன்களையும் கொண்டுள்ளார்கள். அது மாயையின் பகட்டாகும். இப்பொழுது நீங்கள் கொண்டிருக்கின்ற விஞ்ஞானத்தின் பயனுள்ள பொருட்கள் அனைத்தையும் நீங்கள் அங்கும் கொண்டிருப்பீர்கள். அவற்றைக் கண்டுபிடித்துள்ளவர்கள் அங்கும் இருப்பார்கள். அவர்கள் அரசர்களாக மாட்டார்கள். அவர்கள் இறுதி நேரத்தில் உங்களிடம் வந்து, பின்னர் பிறருக்குக் கற்பிப்பார்கள். நீங்கள் ஒரேயொரு தந்தையிடமிருந்து அதிகளவு கற்கின்றீர்கள். ஒரேயொரு தந்தை மாத்திரமே உலகத்தை, அது எவ்வாறு இருந்ததோ அதிலிருந்து அதிகளவு மாற்றுகின்றார். அவ்விடயங்களைக் கண்டுபிடித்து, பின்னர் அவற்றைப் பரப்புபவர்கள் இருக்கிறார்கள். முதன்முதலில் குண்டுகளை உருவாக்கிய ஒரு நபர் மாத்திரமே இருந்தார். அவற்றினால் உலகம் அழிக்கப்படும் என அவர் புரிந்துகொண்டிருப்பார். பின்னர், அவர் தொடர்ந்தும் அவற்றை அதிகளவில் உருவாக்கினார். அங்கும் விஞ்ஞானம் தேவைப்படுகிறது. இன்னமும் காலம் உள்ளது. அவர்கள் கற்றுத் திறமைசாலிகள் ஆகுவார்கள். அவர்கள் தந்தையின் அறிமுகத்தைப் பெற்றதும், சுவர்க்கத்திற்கு வந்து பணிப்பெண்களும் வேலையாட்களும் ஆகுவார்கள். அங்கே, இருப்பவை அனைத்தும் சந்தோஷத்தைக் கொடுப்பவை.. சந்தோஷ தாமத்தில் இருந்தவை அனைத்தும் அங்கு மீண்டும் இருக்கும். அங்கு நோய் அல்லது துன்பம் என்ற கேள்விக்கே இடமில்லை. இங்கே எல்லையற்ற துன்பம் உள்ளது. அங்கே எல்லையற்ற சந்தோஷம் உள்ளது. நாங்கள் இப்பொழுது இதனையே ஸ்தாபிக்கின்றோம். ஒரேயொரு தந்தை மாத்திரமே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர். எல்லாவற்றுக்கும் முதலில், உங்கள் சொந்த ஸ்திதி அவ்வாறு இருக்க வேண்டும். நீங்கள் ஒரு பண்டிதரைப் போன்றிருக்கக்கூடாது. இராமரின் பெயரைக் கூறிக் கொண்டு நீங்;கள் அக்கரை ஏறலாம் எனக் கூறிய பண்டிதரின் கதை ஒன்றுள்ளது. இந்த நேரத்திற்கே அந்தக் கதை பொருந்துகிறது. தந்தையை நினைவுசெய்வதனால், நீங்கள் நச்சுக்கடலிலிருந்து பாற்கடலுக்குள் செல்கின்றீர்கள். குழந்தைகளாகிய உங்களின் ஸ்திதி இங்கே மிகவும் நன்றாக இருக்க வேண்டும். யோக சக்தி இல்லா விட்டாலும், உங்கள் கண்கள் குற்றமுள்ளவையாக இருந்தாலும் அம்பு இலக்கைத் தாக்காது. கண்கள் குற்றமற்றவையாக இருக்க வேண்டும். நீங்கள் தந்தையின் நினைவில் எவருக்காவது இந்த ஞானத்தைக் கொடுத்தால், அம்பு இலக்கைத் தாக்கும். இந்த ஞான வாள் யோக சக்தியைக் கொண்டிருக்க வேண்டும். இந்த ஞானத்தின் மூலம் நீங்கள் செல்வத்தைச் சம்பாதிக்கின்றீர்கள். நீங்கள் நினைவுச் சக்தியைக் கொண்டிருக்கின்றீர்கள். பல குழந்தைகள் சற்றேனும் நினைவுசெய்வதில்லை; அவர்கள் எதனையும் அறிந்து கொள்வதும் இல்லை. தந்தை கூறுகின்றார்: இது துன்ப தாமம் என்றும், சத்திய யுகமே சந்தோஷ தாமம் என்றும் நீங்கள் மக்களுக்கு விளங்கப்படுத்த வேண்டும். கலியுகத்தில் சந்தோஷத்தின் குறிப்பு கூட இல்லை. மீறி இருந்தால், அது ஒரு காக்கை எச்சத்தைப் போன்றதாகும். சத்திய யுகத்தில் எல்லையற்ற சந்தோஷம் உள்ளது. மக்கள் அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதில்லை. அவர்கள் தொடர்ந்தும் முக்திக்காகப் பெரும் பிரயத்தனம் செய்கின்றார்கள். ஜீவன்முக்தியைப் பற்றி எவருக்கும் தெரியாது. அவ்வாறாயின், அவர்களால் எவ்வாறு இந்த ஞானத்தைக் கொடுக்க முடியும்? அவர்கள் இரஜோபிரதான் காலத்தில் வருவதால், அவர்களால் எவ்வாறு இராஜயோகத்தைக் கற்பிக்க முடியும்? இங்கே சந்தோஷம் ஒரு காக்கை எச்சத்தைப் போன்றது. இராஜயோகத்தின் மூலம் என்ன நடைபெற்றது என்பது கூட அவர்களுக்குத் தெரியாது. இது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நாடகம் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும். அவர்கள் உங்களைப் பற்றி அவதூறான விடயங்களைச் செய்தித்தாள்களில் எழுதுகின்றார்கள், ஆனால் அது நடைபெற வேண்டும். கள்ளங்கபடமற்றவர்களுக்குச் சகல துன்புறுத்தல்களும் இருக்கின்றன. உலகில் பல்வகையான துன்பங்கள் உள்ளன. இங்கே இப்பொழுது எவ்விதச் சந்தோஷமும் இல்லை. ஒருவர் எவ்வளவு செல்வம் நிறைந்தவராக இருந்தாலும், அவர் சுகவீனம் அடைந்தாலோ அல்லது பார்வையை இழந்தாலோ துன்பம் அனுபவம் செய்யப்படுகின்றது. துன்பத்தின் சகல வகைகளின் பட்டியலில் இவை அனைத்தையும் எழுதுங்கள். இராவண இராச்சியமாகிய, கலியுகத்தின் இறுதியிலேயே இவ்விடயங்கள் அனைத்தும் இடம்பெறுகின்றன. சத்திய யுகத்தில் துன்பத்தை விளைவிக்கின்ற, ஒரு விடயமாயினும் இருப்பதில்லை. சத்திய யுகம் கடந்த காலத்தில் நிலவியது. இப்பொழுது இது சங்கம யுகமாகும். தந்தையும் சங்கம யுகத்திலேயே வருகின்றார். நீங்கள் 5000 வருடங்களில் எப் பிறவிகளைப் பெறுகின்றீர்கள் என்றும், சந்தோஷத்திலிருந்து எவ்வாறு துன்பத்திற்குள் வருகின்றீர்கள் என்றும் உங்களுக்கு இப்பொழுது தெரியும். தங்கள் புத்தியில் இந்த ஞானம் அனைத்தையும் கொண்டவர்களாலும், இதனைக் கிரகித்தவர்களாலும் இதனைப் புரிந்துகொள்ள முடியும். தந்தை குழந்தைகளாகிய உங்களின் புத்தியை நிரப்புகின்றார். நினைவுகூரப்பட்டுள்ளது: செல்வத்தைப் பிறருக்குத் தானம்; செய்வதன் மூலம் அது குறைவடையாது. ஒருவர் செல்வத்தைத் தானம் செய்யாது விட்டால், அது அவரிடம் எதுவும் இல்லாததைப் போன்றதாகும். அதன்பின்னர் அவர் எந்தச் செல்வத்தையும் பெற மாட்டார். அந்தக் கணக்கு உள்ளது. நீங்கள் எதனையும் கொடுக்காது விட்டால், அதனை எங்கிருந்து பெறுவீர்கள்? எவ்வாறு விரிவாக்கம் இருக்கும்? இவை அனைத்தும் அழிவற்ற ஞான இரத்தினங்கள். அனைத்தும் வரிசைக்கிரமமாகவே உள்ளன. இது உங்கள் ஆன்மீக சேனையாகும். சில ஆத்மாக்கள் முன்னைய கல்பத்தில்; பெற்றதைப் போன்று, சென்று உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகிறார்கள். ஆனால், பிறரோ பிரஜைகளின் அந்தஸ்தையே பெறுவார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் ஆன்மீகக் குழந்தைகளுக்கு, உங்கள் முயற்சிகளுக்கு ஏற்ப, வரிசைக்கிரமமாக உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் இதயத்தின் ஆழத்திலிருந்து அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்களைக் கவனித்துக் கொள்வதற்கு, ஒவ்வோர் அடியிலும் உங்களைச் சோதியுங்கள்: 1. இன்று ஆத்மாவாகிய எனது மனோபாவம் எவ்வாறு இருந்தது? 2. எனது கண்கள் குற்றமற்றவையாக இருந்தனவா? 3. சரீர உணர்வின் ஆதிக்கத்தினால் நான் செய்த பாவங்கள் எவை?

2. உங்கள் புத்தியில் அழிவற்ற ஞானச் செல்வத்தைக் கிரகித்து, பின்னர் அவற்றைத் தானம் செய்யுங்கள். நிச்சயமாக நினைவுச் சக்தியின் மூலம் இந்த ஞான வாளை நிரப்புங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் சத்தியத்தின் அதிகாரத்தைக் கிரகிப்பதால். பயமற்றவர்களாகவும், வெற்றியாளர்களாகவும் ஆகி, அனைவரையும் கவர்வீர்களாக.

சத்தியத்தின் சக்தி மூலம் குழந்தைகளாகிய நீங்கள் மேன்மையானவர்களாகவும், சக்திவாய்ந்த ஆத்மாக்களாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் இந்த உண்மையான ஞானத்தையும், உண்மையான தந்தையையும், உண்மையான பேற்றையும், உண்மையான நினைவையும், உண்மையான தெய்வீகக் குணங்களையும், உண்மையான சக்திகளையும் பெற்றுள்ளீர்கள். அத்தகைய மகத்தான அதிகாரத்தின் போதை உங்களுக்கு இருக்கும்பொழுது, இந்தச் சத்தியத்தின் அதிகாரம் தொடர்ந்தும் ஒவ்வோர் ஆத்மாவையும் கவரும். பொய்மைப் பூமியிலும். சத்தியத்தின் சக்தியைக் கொண்டிருப்பவர்களே வெற்றியாளர்கள். சந்தோஷமும். பயமற்ற தன்மையுமே சத்தியத்தின் பேறாகும். சத்தியத்தைப் பேசுபவர்களே பயமறறவர்கள் அவர்கள் என்றுமே பயப்படக்கூடாது.

சுலோகம்:
ஆக்கபூர்வமான எண்ணங்களையும், சக்திவாய்ந்த மனோபாவத்தையும் கொண்டிருப்பதே சூழலை மாற்றுவதற்கான வழியாகும்.