13.02.25        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, மிகச்சரியாகத் தந்தையை - அவரை அவ்வாறே, என்ன செய்கிறார் என்பதை - அறிந்துகொள்வதும் அவரை நினைவுசெய்வதுமே பிரதான விடயமாகும். மனிதர்களுக்கு இவ்விடயத்தைப் பெரும் சாதுரியமாக விளங்கப்படுத்துங்கள்.

கேள்வி:
முழுப் பிரபஞ்சத்துக்குமாக இங்கு மட்டுமே நீங்கள் கற்கும் கல்வி என்ன?

பதில்:
முழுப் பிரபஞ்சத்துக்குமான கல்வி: நீங்கள் ஓர் ஆத்மா. உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதித் தந்தையை நினைவு செய்யுங்கள், நீங்கள் தூய்மை ஆகுவீர்கள். இந்த ஒரு யுகத்தில் மட்டுமே முழுப் பிரபஞ்சத்தினதும் தந்தை அனைவரையும் தூய்மை ஆக்குவதற்கு வருகிறார். அவர் மட்டுமே படைப்பவரினதும் படைப்பினதும் ஞானத்தைக் கொடுக்கிறார். ஆகவே, உண்மையில், இது மாத்திரமே ஒரேயொரு பல்கலைக்கழகம் ஆகும். இவ்விடயத்தை மிகவும் தெளிவாகக் குழந்தைகளாகிய நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்.

ஓம் சாந்தி.
கடவுள் பேசுகிறார். யார் கடவுள் என்பதை நிச்சயமாக ஆன்மீகக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். பாரதத்திலுள்ள எவரும் இதை மிகச்சரியாக அறிந்து கொள்ளவில்லை. அவரும் கூறுகிறார்: என்னை அவ்வாறாகவும், நான் என்ன செய்கிறேன் என்பதையும் எவரும் மிகச்சரியாக அறிந்து கொள்ளவில்லை. நீங்களும் வரிசைக்கிரமமானவர்கள். உங்கள் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாக நீங்கள் அறிந்து கொள்கிறீர்கள். நீங்கள் இங்கே வசித்தாலும், நீங்கள் என்னை மிகச்சரியாக அறிந்து கொள்வதில்லை. தந்தையை மிகச்சரியாக அறிந்து, அவரை நினைவுசெய்வது மிகவும் சிரமமானது. அது இலகுவானது எனச் சில குழந்தைகள் கூறக்கூடும். ஆனால், என்னை அப்படியே அறிந்து தந்தையான என்னைச் சதா நினைவுசெய்யுங்கள். புத்தியில் வைத்திருப்பதற்கான வழிமுறையானது, ஆத்மாவான நான், மிகவும் சின்னஞ்சிறியவர் என்பதாகும். புள்ளி ரூபமான, எனது பாபாவும் சின்னஞ்சிறியவர் ஆவார். அரைக்கல்பமாக, கடவுளின் பெயரைக் கூட எவரும் குறிப்பிடுவதில்லை. அவரைத் துன்பத்தில் மட்டுமே மக்கள் நினைவு செய்கிறார்கள்: ஓ கடவுளே! யார் கடவுள் என்பதை எம்மனிதரும் புரிந்து கொள்வதில்லை. எவ்வாறு மனிதர்களுக்கு விளங்கப்படுத்துவது என்பதைப் பற்றி நீங்கள் இப்பொழுது ஞானக்கடலைக் கடைய வேண்டும். “பிரஜாபிதா பிரம்மாகுமாரிகள் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம்” எனும் பெயரும் எழுதப்பட்டுள்ளது. அப்படியிருந்தும், இதுவே எல்லையற்ற ஆன்மீகத் தந்தையின் உலக ஆன்மீகப் பல்கலைக்கழகம் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதுமில்லை. மனிதர்கள் விரைவில் புரிந்து கொள்ளும்படி, இதற்கு என்ன பெயரை வைக்கலாம்? இது ஒரு பல்கலைக்கழகம் என்று எப்படி மக்களுக்கு விளங்கப்படுத்துவது? “பிரபஞ்சம்” (யுனிவேர்ஸ்) என்னும் வார்த்தையில் இருந்தே பல்கலைக்கழகம் (யுனிவேசிட்டி) என்னும் வார்த்தை தோன்றியுள்ளது. பிரபஞ்சம் என்றால் முழு உலகமும் என்று அர்த்தம். மனிதர்கள் அனைவரும் கற்க முடிகின்ற, பல்கலைக்கழகம் என்று இது அழைக்கப்படுகிறது. இது பிரபஞ்ச மக்கள் கற்பதற்கான ஒரு பல்கலைக்கழகம். உண்மையில், முழுப் பிரபஞ்சத்துக்குமாக, ஒரேயொரு தந்தை மட்டுமே வருகிறார். அவருக்கு இந்த ஒரு பல்கலைக்கழகம் மட்டும் உள்ளது. இலக்கும் இலட்சியமும் ஒன்றேயாகும். முழுப் பிரபஞ்சத்தையும் தந்தை மட்டும் வந்து தூய்மை ஆக்குகிறார். அவர் யோகத்தைக் கற்பிக்கிறார். இது அனைத்துச் சமயத்தவர்களுக்கும் உரியது. அவர் கூறுகிறார்: உங்களை ஓர் ஆத்மாவாகக் கருதுங்கள். அவரே தந்தையான, அசரீரிக் கடவுளான, முழுப் பிரபஞ்சத்தினதும் தந்தை ஆவார். ஆகவே, இந்த இடத்தைத் தந்தையான, ஆன்மீக, அசரீரிக் கடவுளின் ஆன்மீகப் பல்கலைக்கழகம் என்று அழைக்க முடியும்தானே? நீங்கள் இதைப் பற்றிச் சிந்திக்க வேண்டும். முழு உலகின் மக்களும் எத்தகையவர்கள் என்றால், ஒரு நபரேனும் தந்தையை அறியாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் படைப்பவரை அறிந்திருந்தால், படைப்பையும் அறிந்திருப்பார்கள். படைப்பவரிடம் இருந்து மட்டுமே படைப்பை அறிந்து கொள்ள முடியும். தந்தை குழந்தைகளுக்கு சகல விடயங்களையும் விளங்கப்படுத்துகிறார். வேறு எவருக்கும் தெரியாது. ரிஷிகளும் முனிவர்களும் ‘எங்களுக்குத் தெரியாது’ என்று கூறுகிறார்கள். ஆகவே, தந்தை கூறுகிறார்: முன்னர், உங்களுக்குப் படைப்பவரின் அல்லது படைப்பின் ஞானம் இருக்கவில்லை. படைப்பவர் இப்பொழுது அதை விளங்கப்படுத்தியுள்ளார். தந்தை கூறுகிறார்: அனைவரும் என்னை அழைக்கிறார்கள்: வந்து எங்களுக்கு அமைதியையும் சந்தோஷத்தையும் கொடுங்கள், ஏனெனில் இப்பொழுது துன்பமும் அமைதியின்மையும் உள்ளன. அவருடைய பெயரே துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அருள்பவர் என்பதாகும். அவர் யார்? கடவுள் ஆவார். அவர் எப்படித் துன்பத்தை அகற்றிச் சந்தோஷத்தை அளிக்கிறார்? எவருக்கும் தெரியாது. ஆகவே, தந்தையான, அசரீரிக் கடவுள் மட்டுமே இந்த ஞானத்தைக் கொடுக்கிறார் என்று மக்கள் புரிந்துகொள்ளும்படி, அதை மிகவும் தெளிவாக எழுதுங்கள். நீங்கள் இவ்விதமாக ஞானக்கடலைக் கடைய வேண்டும். தந்தை விளங்கப்படுத்துகிறார்: மனிதர்கள் அனைவருக்கும் கல்லுப்புத்தியே உள்ளது. இப்பொழுது அவர் உங்களைத் தெய்வீகப் புத்தியை உடையவர்கள் ஆக்குகிறார். உண்மையில், குறைந்தபட்சம் 50 வீதம் அல்லது அதற்குக் கூடிய புள்ளிகளைப் பெறுபவர்களே, தெய்வீகப்புத்தி உடையவர்கள் என்று அழைக்கப்படுவார்கள். சித்தி அடையாதவர்கள், தெய்வீகப் புத்தியைக் கொண்டிருப்பதில்லை. ஏன் இராமர் வில்லுடனும் அம்புடனும் காட்டப்படுகிறார் என்று எவரும் புரிந்து கொள்வதில்லை. ஸ்ரீ கிருஷ்ணர் அனைவரையும் சுயதரிசனச் சக்கரத்தால் கொன்றதாகக் காட்டப்படுகிறது. ஆனால், இராமரோ வில்லுடனும் அம்புடனும் காட்டப்படுகிறார். எவ்வாறு ஸ்ரீகிருஷ்ணர் சுயதரிசனச் சக்கரத்தின் மூலம் அகாசுரன், பகாசுரன் போன்றவர்களைக் கொல்கிறார் என்று ஒரு சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. இருவரும் வன்முறையாளர்களாக ஆக்கப்பட்டு, பின்னர் இரட்டை வன்முறையாளர்களாக ஆக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் கூறுகிறார்கள்: அவர்களுக்கும் குழந்தைகள் இருந்தார்கள். ஆ, ஆனால் அவர்கள் விகாரமற்ற தேவர்கள். அங்கு நிச்சயமாக இராவண இராச்சியம் இருக்கவில்லை. இந்த நேரத்தில், இது இராவணின் சமுதாயம் என்று அழைக்கப்படுகிறது. யோகசக்தி மூலம் நாங்கள் உலக இராச்சியத்தைக் கோருகிறோம் என்று இப்பொழுது நீங்கள் விளங்கப்படுத்துகிறீர்கள். அப்படியென்றால், யோகசக்தி மூலம் குழந்தைகள் பிறப்பது சாத்தியமில்லையா? அது விகாரமற்ற உலகம். இப்பொழுது நீங்கள் சூத்திரர்களில் இருந்து பிராமணர்கள் ஆகிவிட்டீர்கள். இவ்விதமாகத் தெளிவாக விளங்கப்படுத்துவதனால், உங்களிடம் முழு ஞானமும் இருப்பதை மனிதர்கள் புரிந்து கொள்கிறார்கள். ஒரு சிலர் இவ்விடயத்தைச் சிறிதளவு புரிந்து கொண்டாலும், அவர் பிராமண குலத்துக்கு உரியவர் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். சிலரின் விடயத்தில், அவர்கள் பிராமண குலத்தினர் இல்லை என்பதை நீங்கள் விரைவிலேயே புரிந்து கொள்வீர்கள். பலவிதமான மக்கள் வருகிறார்கள். ஆகவே, ‘தந்தையான ஆன்மீக அசரீரிக் கடவுளின் ஆன்மீகப் பல்கலைக்கழகம்’ என்று எழுதுங்கள். பின்னர் என்ன நடைபெறுகிறது என்பதைப் பாருங்கள். நீங்கள் ஞானக்கடலைக் கடைந்து சரியான வார்த்தைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இதை எழுதுவதற்கு உங்களுக்குப் பெரும் சாதுரியம் அவசியம். அதனால் இங்கு தந்தையான, கடவுள் இந்த ஞானத்தை விளங்கப்படுத்துகிறார் எனவும் அவர் இராஜயோகத்தைக் கற்பிக்கிறார் எனவும் மக்களால் புரிந்து கொள்ள முடியும். ‘ஜீவன்முக்தி’ மற்றும் ‘ஒரு விநாடியில் தேவ இராச்சியம்’ என்னும் இந்தச் சொற்றொடர்களும் பொதுவானவை. மக்களின் புத்தியில் இருக்கக்கூடிய அத்தகைய சொற்றொடர்கள் இருக்க வேண்டும். பிரம்மாவினூடாக, விஷ்ணுபூமி ஸ்தாபிக்கப்படுகிறது. மன்மனாபவவின் அர்த்தம்: தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்யுங்கள். நீங்களே பிராமண குல அலங்காரமான, பிரம்மாவின் வாய்வழித் தோன்றலும் சுயதரிசனச் சக்கரத்தைச் சுழற்றுபவர்களும் ஆவீர்கள். அவர்கள் விஷ்ணுவை ஒரு சுயதரிசனச் சக்கரத்துடன் காட்டுகிறார்கள். அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரையும் நான்கு கரங்களுடன் காண்பிக்கிறார்கள். அவருக்கு எப்படி நான்கு கைகள் இருக்க முடியும்? தந்தை மிகவும் நன்றாக விளங்கப்படுத்துகிறார். குழந்தைகளாகிய நீங்கள் தெய்வீகப்புத்தியை, பரந்த புத்தியை உடையவர்கள் ஆக வேண்டும். சத்தியயுகத்தில் அரசரும் அரசியும் தெய்வீகப் புத்தியை உடையவர்களாக இருப்பதால், பிரஜைகளும் அவ்வாறே இருப்பார்கள் என்று கூறப்படும். அது தெய்வீக உலகம்;, இது கற்களின் உலகம். நீங்கள் மனிதர்களிலிருந்து தேவர்களாக மாறுவதற்கே இந்த ஞானத்தைப் பெறுகிறீர்கள். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதால், நீங்கள் மீண்டும் ஒருமுறை உங்கள் இராச்சியத்தை ஸ்தாபிக்கிறீர்கள். அரசர்களாகவும் சக்கரவர்;த்திகளாகவும் ஆகும் வழிமுறையை பாபா எங்களுக்குக் காட்டுகிறார். ஏனையோருக்கு விளங்கப்படுத்துவதற்காக உங்கள் புத்தி இந்த ஞானத்தால் நிரப்பப்பட்டுள்ளது. சக்கரத்தை விளங்கப்படுத்துவதும் மிகவும் இலகுவானது: இந்த நேரத்தில் சனத்தொகை எவ்வளவு பெருகியுள்ளது என்று பாருங்கள்! சத்தியயுகத்தில் மிகச் சொற்ப அளவினரே இருக்கிறார்கள். இதுவே சங்கமயுகம். ஆகவே சொற்ப பிராமணர்களே இருப்பார்கள். பிராமணர்களின் யுகம் சிறியதாகும். பிராமணர்களின் பின்னர் தேவர்கள் வருகிறார்கள், பின்னர் விரிவாக்கம் தொடர்கிறது. அது ஒரு குட்டிக்கரணம். ஆகவே, நீங்கள் ஏணியின் படத்துடன், பல்வகை ரூபத்தின் படத்தையும் வைத்திருப்பின், அது விளக்கத்தைத் தெளிவாக்;கும். படைப்பவரினதும் படைப்பினதும் இந்த ஞானம் உங்கள் குலத்துக்கு உரியவர்களின் புத்தியில் இலகுவில் நன்கு பொருந்தும். அவர்கள் உங்கள் குலத்துக்கு உரியவர்களா அல்லது இல்லையா என்று அவர்களின் முகங்களிலிருந்து உங்களால் கூறமுடியும். அவர்கள் உங்கள் குலத்துக்கு உரியவர்கள் இல்லையெனில், அவர்கள் ஞானத்தை ஒரு சூடான பாத்திரத்தைப் போன்று செவிமடுக்கிறார்கள். (ஒரு சூடான பாத்திரத்தில் உள்ள நீர் சத்தமிட்டு ஆவியாகுவதைப் போல், ஞானமும் பதிவதில்லை) விவேகிகள் கவனமாகச் செவிமடுப்பார்கள். ஒருமுறை அம்பு இலக்கைத் தாக்கியதும், அவர்கள் தொடர்ந்தும் வருவார்கள். சிலர் கேள்விகளை மட்டுமே கேட்பார்கள். ஆனால் சிறந்த மலர்களாக இருக்கும் ஏனையோர் ஒவ்வொரு நாளும் தாங்களாகவே வருவார்கள். அவர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டு, பின்னர் திரும்பிச் செல்கிறார்கள். நிச்சயமாகத் தந்தை தேவதர்மத்தை ஸ்தாபிக்கிறார் என்பதை எவரும் படங்களிலிருந்து புரிந்துகொள்ள முடியும். கேள்விகளைக் கேட்காமலேயே சிலர் புரிந்து கொள்வார்கள். சிலர் தொடர்ந்தும் பல கேள்விகளைக் கேட்பார்கள், இருந்தும் எதையும் புரிந்து கொள்ள மாட்டார்கள். அப்பொழுது, நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். ஒரு குழப்பத்தை உருவாக்கத் தேவையில்லை. இல்லாவிட்டால், அவர்கள் கூறுவார்கள்: கடவுள்கூட உங்களைப் பாதுகாக்கவில்லை. இப்பொழுது, அவர் என்ன பாதுகாப்பைக் கொடுக்கிறார் என்று நீங்களும் அறிந்து கொள்கிறீர்கள். ஒவ்வொருவரும் அவருடைய சொந்தக் கர்மக் கணக்குகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுடைய சரீர ஆரோக்கியம் சீரற்றதாகும் பொழுது, எங்களைக் காப்பாற்றுங்கள்! என்று கூறும் பலர் உள்ளார்கள். தந்தை கூறுகிறார்: தூய்மை அற்றவர்களைத் தூய்மை ஆக்குவதற்கே நான் வருகிறேன். நீங்களும்; இவ்வியாபாரத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும். தந்தை உங்களை ஐந்து விகாரங்களின் மீதும் வெற்றி அடையச் செய்கிறார். அப்பொழுது அவை உங்களை மேலும் அதிக விசையுடன் எதிர்க்கின்றன. விகாரங்களின் புயல்கள் பெருமளவு விசையுடன் தாக்குகின்றன. நீங்கள் தந்தைக்கு உரியவராகும் பொழுது, இந்த நோய்கள் அனைத்தும் வெளிவரும். புயல்கள் முழு விசையுடன் வரும். இது நிஜமான குத்துச்சண்டை ஆகும். அவை சிறந்த, உறுதியான மல்யுத்த வீரர்களைக் கூடத் தோற்கடிக்கின்றன. அவர்கள் கூறுகிறார்கள்: நாங்கள் அது நடைபெறுவதை விரும்பாவிடினும், எங்கள் பார்வை சீரழிந்தது ஆகுகிறது. அவர்களின் பதிவேடு பாழாக்கப்பட்டு விடுகிறது. தூய்மையற்ற பார்வையைக் கொண்டவர்களுடன் நீங்கள் பேசக்கூடாது. தூய்மையற்ற பார்வையை உடைய பலர் உள்ளார்கள் என்று அனைத்து நிலையங்களிலும் உள்ள குழந்தைகளுக்கு பாபா விளங்கப்படுத்துகிறார். பாபா அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டிருப்பின், அவர்கள் பெரும் துரோகிகளாகவும் ஆகுவார்கள். தங்கள் சுயத்தின் உண்மையை அழிப்பவர்கள், தவறான செயல்களைப் புரிவதில் ஈடுபடுபவர்கள் ஆகுகிறார்கள். காம விகாரம் அவர்களின் மூக்கைப் பற்றிப் பிடிக்கிறது. மாயை விடுவதில்லை. தூய்மையற்ற செயல்கள், தூய்மையற்ற பார்வை, தூய்மையற்ற வார்த்தைகள் வெளிப்பட்டு, செயல்கள் தூய்மையற்றவை ஆகுகின்றன. ஆகவே, நீங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் கண்காட்சிகள் போன்றவற்றை நடத்தும்பொழுது, எவரும் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடிய, அத்தகையதொரு வழிமுறைகளை உருவாக்குங்கள். தந்தையே இந்த கீதா ஞானத்தைக் கற்பிக்கிறார். இது எந்தச் சமயநூலினதும் விடயமல்ல. இது ஒரு கல்வி. இங்கு கீதா நூலைப் பயன்படுத்துவதில்லை. இங்கு தந்தையே கற்பிக்கிறார். அவர் தனது கரங்களில் புத்தகங்களை வைத்திருக்கிறார் என்பதல்ல. கீதை எனும் பெயர் எங்கிருந்து வந்தது? அச்சமயநூல்கள் அனைத்தும் பின்னரேயே உருவாக்கப்பட்டன. பல்வேறு பிரிவுகளும் சிறுமதப் பிரிவுகளும் (ளைஅள) உள்ளன. அவை ஒவ்வொன்றும் தனது சொந்த தனிப்பட்ட சமயநூலைக் கொண்டுள்ளன. கிளைகள், சிறு கிளைகள், சிறு பிரிவுகள், சிறுமதப் பிரிவுகளும் இருப்பினும், அவை அனைத்துக்கும் தங்கள் சொந்தச் சமயநூல்கள் போன்றவை உள்ளன. ஆகவே, அவை அனைத்தும் குழந்தைகள் ஆகும். அவற்றிலிருந்து முக்தி பெறப்பட முடியாது. சமயநூல்கள் அனைத்தினதும் அதிமேன்மையான இரத்தினமாகக் கீதை நினைவு கூரப்படுகிறது. கீதா ஞானத்தை உரைத்தவர்களும் இருப்பார்கள். எவ்வாறாயினும், தந்தை மட்டுமே வந்து இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். அவர் தன்னுடைய கைகளில் சமயநூல்கள் போன்றவற்றை வைத்திருக்கிறார் என்பதல்ல. நான் சமயநூல்களைக் கற்கவும் இல்லை, நான் அவற்றை உங்களுக்குக் கற்பிப்பதும் இல்லை. அம்மக்கள் அவற்றைக் கற்றுப் பின்னர் ஏனையோருக்குக் கற்பிக்கிறார்கள். இங்கு, இது சமயநூல்களுக்கான ஒரு விடயமில்லை. நிச்சயமாக, தந்தை ஞானம்-நிறைந்தவர் ஆவார். வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தை நான் உங்களுக்குக் காட்டுகிறேன். நான்கு சமயங்களின் நான்கு சமயநூல்களே பிரதானமானவை. பிராமண சமயத்துக்கென ஏதாவது சமயநூல் இருக்கிறதா? பல்வேறு விடயங்களும் புரிந்து கொள்ளப்பட வேண்டும். தந்தை இங்கமர்ந்திருந்து இவை அனைத்தையும் விபரமாக விளங்கப்படுத்துகிறார். மனிதர்களுக்குக் கல்லுப்புத்தி உள்ளதாலேயே, அவர்கள் ஏழைகள் ஆகிவிட்டார்கள். சத்தியயுகத்தில் தேவர்கள் இருந்தார்கள். அங்கு தங்கத்தால் மாளிகைகள் கட்டப்பட்டன, அங்கு தங்கச் சுரங்கங்கள் இருந்தன. இப்பொழுது, நிஜத் தங்கம் எதுவும் கிடையாது. முழுக் கதையும் பாரதத்தையே அடிப்படையாகக் கொண்டது. தேவர்களான உங்களுக்குத் தெய்வீகப்புத்தி இருந்தது. நீங்கள் முழு உலகையும் ஆட்சிசெய்தீர்கள். இப்பொழுது உங்களுக்கு ஞாபகம் வந்துள்ளது: நாங்கள் சுவர்க்க அதிபதிகளாக இருந்தோம், இப்பொழுது நரகத்தின் அதிபதிகள் ஆகிவிட்டோம். பின்னர் நாங்கள் தெய்வீகப் புத்தியை உடையவர்கள் ஆகுவோம். குழந்தைகளாகிய உங்களின் புத்தியில் இந்த ஞானம் உள்ளது. பின்னர் நீங்கள் ஏனையோருக்கு அதை விளங்கப்படுத்த வேண்டும். நாடகத்துக்கேற்ப, உங்கள் பாகங்கள் தொடர்கின்றன. நேரம் கடந்து செல்கையில், மிகச்சரியான முயற்சியைச் செய்வதற்கு இன்னமும் நீங்கள் தூண்டப்படுவீர்கள். எங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குவதற்கு, எங்களை முயற்சி செய்யும்படி கடவுளே தூண்டுகிறார் எனும் போதையைக் கொண்டிருக்கும் குழந்தைகளின் முகங்கள் முதற்தரமானதாகவும், சந்தோஷத்தைப் பரப்பியவாறும் இருக்கும். உங்களின் வெகுமதிக்காக, முயற்சி செய்வதற்குக் குழந்தைகளாகிய உங்களைத் தூண்டுவதற்கும் தந்தை வருகிறார். குழந்தைகளாகிய நீங்கள் மட்டுமே இதை அறிவீர்கள். இது உலகில் வேறு எவருக்கும் தெரியாது. உங்களைச் சுவர்க்க அதிபதிகள் ஆக்குவதற்கு, உங்களை முயற்சி செய்யுமாறு கடவுள் தூண்டுகிறார். ஆகவே, நீங்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். உங்கள் முகங்கள் உண்மையில் முதற்தரமானதாக சந்தோஷத்தைப் பரப்பியவாறு இருக்க வேண்டும். தந்தையின் நினைவைக் கொண்டிருப்பதால், நீங்கள் சதா மலர்ச்சியாக இருப்பீர்கள். தந்தையை மறப்பதால் மட்டுமே, நீங்கள் வாடிவிடுகிறீர்கள். தந்தையையும் ஆஸ்தியையும் நினைவு செய்வதால், நீங்கள் சந்தோஷத்தைப் பரப்புபவர்கள் ஆகுகிறீர்கள். அவனோ அல்லது அவளோ செய்யும் சேவையிலிருந்து நீங்கள் ஒவ்வொருவரையும் புரிந்து கொள்ள முடியும். தந்தை குழந்தைகளின் நறுமணத்தைப் பெறுகிறார். தகுதிவாய்ந்த குழந்தைகளில் இருந்து நறுமணமும், தகுதியற்ற குழந்தைகளிலிருந்து ஒரு தீய நாற்றமும் வருகின்றன. ஒரு பூந்தோட்டத்தில், நறுமணம் மிக்க மலர்களை மட்டுமே நீங்கள் பறிப்பதற்கு விரும்புவீர்கள். யார் எருக்கலம் மலர்களைப் பறிப்பார்கள்? தந்தையை மிகச்சரியாக நினைவு செய்வதால் மட்டும், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளான உங்களுக்கு, உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. மாயையின் குத்துச்சண்டையால் தோற்கடிக்கப்படாதீர்கள். உங்கள் வாயிலிருந்து தூய்மையற்ற வார்த்தைகள் எதுவும் வெளிப்படாதபடி கவனம் செலுத்துங்கள். ஒருபொழுதும் தூய்மையற்ற பார்வையைக் கொண்டிருக்கவோ அல்லது தூய்மையற்ற செயல்களைப் புரியவோ அல்லது தூய்மையற்ற நடத்தையைக் கொண்டிருக்கவோ வேண்டாம்.

2. ஒரு முதற்தரமான நறுமணம் மிக்க மலர் ஆகுங்கள். கடவுளே உங்களுக்குக் கற்பிக்கிறார் என்னும் போதையைக் கொண்டிருங்கள். தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதுடன் மலர்ச்சியாகவும் இருங்கள். ஒருபொழுதும் வாடிப் போகாதீர்கள்.

ஆசீர்வாதம்:
உங்களின் சவாலையும் நடைமுறை வாழ்க்கையையும் சமமாக ஆக்கி, உங்களை பாவத்தில் இருந்து பாதுகாப்பாக வைத்திருப்பதன் மூலம் ஓர் உலக சேவையாளர் ஆகுவீர்களாக.

குழந்தைகளான நீங்கள் விடுக்கும் சவாலும் உங்களின் நடைமுறை வாழ்க்கையும் சமமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால், புண்ணியாத்மா ஆகுவதற்குப் பதிலாக, நீங்கள் சுமையுடைய ஆத்மா ஆகுவீர்கள். பாவத்தினதும் புண்ணியத்தினதும் தத்துவத்தைப் புரிந்துகொண்டு, உங்களைப் பாதுகாப்பாக வைத்திருங்கள். ஏனென்றால், உங்களின் எண்ணங்களிலேனும் எந்த வகையான பலவீனம் இருப்பதும் அல்லது வீணான வார்த்தைகளைப் பேசுவதும் வீணான நோக்கங்களை அல்லது வெறுப்பு அல்லது பொறாமைக்கான உணர்வுகளைக் கொண்டிருப்பதும் உங்களின் பாவக்கணக்கை அதிகரிக்கும். ‘நீங்கள் புண்ணியாத்மா ஆகுவீர்களாக’ என்ற ஆசீர்வாதத்துடன் உங்களைப் பாதுகாப்பாக வைத்திருந்து, ஓர் உலக சேவையாளர் ஆகுங்கள். ஒன்றுதிரட்டிய முறையில் ஒரே வழிகாட்டலின் அனுபவத்தையும் ஸ்திரமான ஸ்திதியைக் கொண்டிருப்பதன் அனுபவத்தையும் வழங்குங்கள்.

சுலோகம்:
எல்லா இடங்களிலும் தூய்மை ஒளியை நீங்கள் ஏற்றி வைக்கும்போது, எல்லோராலும் இலகுவாகத் தந்தையைக் காணக்கூடியதாக இருக்கும்.

ஏகாந்தத்தின் மீது அன்பு வைத்து, ஒற்றுமையையும் ஒருமுகப்படுத்தலையும் கிரகியுங்கள்.

வெளிப்படுத்தலின் கொடியை ஏற்றி வைக்க முன்னர், எந்தவொரு செயலைச் செய்வதற்கு முன்னர், ஒரு விடயத்தைப் பயிற்சி செய்யுங்கள். உங்களின் உறவுமுறைகள் மற்றும் தொடர்புகள் அனைத்திலும் ஒற்றுமையைக் கொண்டிருங்கள். பல சம்ஸ்காரங்கள் இருந்தாலும், வேற்றுமையில் ஒற்றுமையைக் கொண்டிருப்பதுடன் திடசங்கற்பத்தையும் கொண்டிருப்பதே உங்களின் வெற்றிக்கான வழிமுறையாகும். சிலவேளைகளில், உங்களின் ஒற்றுமை தளம்பல் அடைகிறது - ‘இவர் இதைச் செய்தால், நான் இதைச் செய்வேன்’. இல்லை. உங்களின் சுலோகம், சுய மாற்றத்தின் மூலம் உலக மாற்றம் என்பதே. உலக மாற்றத்தின் மூலம் சுய மாற்றம் என்பதல்ல.