13.04.26 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் எல்லைகளற்ற உலகின் அதிபதிகளாக ஆகுகிறீர்கள். எவ்வாறு நீங்கள் யோகசக்தியின் மூலம் முழு உலகினதும் இராச்சியத்தைக் கோருகிறீர்கள் என்பதும் ஓர் அற்புதமே ஆகும்.
கேள்வி:
நாடகத்தின் எந்தப் பந்தத்தின் மூலம் தந்தையும் கட்டுப்பட்டுள்ளார்?பதில்:
பாபா கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்கள் முன்னிலையில் நேரடியாக வரவேண்டும். நான் இந்த பந்தத்தின் மூலம் கட்டுப்பட்டுள்ளேன். நான் வராது விட்டால், சிக்குப்பட்டுள்ள நூலைச் சிக்கலெடுக்க முடியாது. நான் ஆசீர்வாதங்களைக் கொடுப்பதற்கோ அல்லது உங்கள் மீது கருணை காட்டுவதற்காகவோ வருவதில்லை. நான் மரணித்தவர்களை உயிர்ப்பிப்பதில்லை. நான் தூய்மையற்ற உங்களைத் தூய்மை ஆக்குவதற்கே வருகிறேன்.பாடல்:
உங்களைக் கண்டுகொண்டதும் நான் அனைத்தையும் கண்டுகொண்டேன்.ஓம் சாந்தி.
பாடலின் வார்த்தைகளைக் கேட்கும் பொழுது, குழந்தைகளாகிய உங்களுக்குப் புல்லரிக்க வேண்டும், ஏனெனில் நீங்கள் தந்தையின் முன்னிலையில் நேரடியாக அமர்ந்திருக்கிறீர்கள். உலகில் எத்தனை கல்விமான்கள், பண்டிதர்கள், குருமார்கள் இருப்பினும், ஒவ்வொரு 5000 வருடங்களும் எல்லையற்ற தந்தை வருகிறார் என்பதை அம்மனிதர்களில் எவரும் அறியார்கள். குழந்தைகளாகிய நீங்கள் மாத்திரமே இதை அறிவீர்கள். குழந்தைகள் கூறுகிறார்கள்: நான் என்ன செய்தாலும், நான் எவ்வாறு இருந்தாலும், நான் உங்களுடையவன் ஆவேன். தந்தையும் கூறுகிறார்: நீங்கள் என்ன செய்தாலும், நீங்கள் எவ்வாறு இருந்தாலும், நீங்கள் என்னுடைய குழந்தை ஆவீர்கள். அவர் ஆத்மாக்கள் அனைவரினதும் தந்தை என்பதை நீங்கள் அறிவீர்கள். அனைவரும் அவரை அழைக்கிறார்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இராவணனின் மிகப்பெரிய நிழல் ஒன்று உள்ளது. தாங்கள் பரமாத்மாவாகிய பரமதந்தை என அழைக்கின்றவரிடம் இருந்து தாங்கள் ஏன் சந்தோஷத்தை அனுபவம் செய்வதில்லை என ஒருவரால்கூடப் புரிந்துகொள்ள முடியாது. அவர்கள் மறந்து விட்டார்கள். இந்த பாபா மாத்திரமே எங்களுக்கு அந்த ஆஸ்தியைக் கொடுக்கிறார். தந்தையே விளங்கப்படுத்துகிறார்: அதத்கையதோர் இலகுவான விடயத்தை எவராலும் புரிந்துகொள்ள முடியாது! அவரே முழு உலகமும் அழைக்கின்ற அதே ஒருவர் என்பதைத் தந்தை விளங்கப்படுத்துகிறார். அவர்கள் “ஓ குதா! ஓ இராமா!” என்று அழைத்தவண்ணம் தங்கள் சரீரங்களை விட்டு நீங்குகிறார்கள். அந்த அதே தந்தையே உங்களுக்குக் கற்பிக்கிறார். இப்பொழுது உங்கள் புத்தி அங்கேயே சென்று விட்டது. பாபா மிகச்சரியாக முன்னைய கல்பத்தில் செய்ததைப் போலவே, வந்துள்ளார். பாபா ஒவ்வொரு கல்பமும் வந்து, உங்களைத் தூய்மையாக்கி, உங்களைச் சீரழிவிலிருந்து சற்கதிக்குள் அழைத்துச் செல்கிறார். பாடப்பட்டுள்ளது: தூய்மையாக்குபவராகிய அனைவரினதும் தந்தை. இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் அவர் முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள். நீங்களே அதியன்பிற்கினிய, இனிமையான குழந்தைகள் ஆவீர்கள். இது பாரத மக்களைக் குறிக்கிறது. தந்தை பாரதத்தில் பிறப்பெடுக்கிறார். தந்தை கூறுகிறார்: பாரதத்தில் பிறப்பு எடுப்பதனால், அவர்கள் மீதே நிச்சயமாக அதிகமாக அன்புசெலுத்தப்பட வேண்டும். அனைவரும் அவரை நினைவு செய்கிறார்கள். ஒருவர் எச்சமயத்துக்கு உரியவராக இருப்பினும், அவர் தனது சமய ஸ்தாபகரை நினைவு செய்கிறார். தாங்கள் ஆதிசனாதன தேவிதேவதா தர்மத்துக்கு உரியவர்களாக இருந்தார்கள் என்பதைப் பாரத மக்கள் அறியார்கள். பாரதமே புராதன தேசம் என பாபா விளங்கப்படுத்துகிறார். ஆகவே அவர்கள் வினவுகிறார்கள்: முன்னர் பாரதம் மாத்திரமே இருந்தது எனக் கூறுபவர் யார்? அவர்கள் பல விடயங்களைக் கேட்டுள்ளார்கள். ஒருவர் ஒரு விடயத்தையும், ஏனையோர் இன்னுமொரு விடயத்தையும் கூறுகிறார்கள். சிலர் வினவுகிறார்கள்: பரமாத்மாவாகிய சிவனே கீதையைக் கூறியவர் எனக் கூறுபவர் யார்? ஸ்ரீகிருஷ்ணரும் பரமாத்மாவாக இருந்து, கீதையையும் கூறினார். அவர்கள் கடவுள் சர்வவியாபி எனவும், முழு நாடகமும் அவருடையதே எனவும் கூறுகிறார்கள்: இவை அனைத்தும் கடவுளின் ரூபங்கள். தனது தெய்வீகச் செயற்பாடுகளைப் புரிவதற்குக் கடவுள் பல ரூபங்களை எடுக்கிறார். கடவுளுக்கு வேண்டியவற்றைக் கடவுளால் செய்ய முடியும். மாயை எவ்வளவு சக்திவாய்ந்தவள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது புரிந்து கொள்கிறீர்கள்! இன்று, அவர்கள் கூறுகிறார்கள்: பாபா, நான் நிச்சயமாக ஆஸ்தியைக் கோரி, ஒரு சாதாரண மனிதனிலிருந்து நாராயணனாக ஆகுவேன். நாளை அவர்கள் இங்கிருக்க மாட்டார்கள். எவ்வாறு பலர் பாபாவை விட்டு விலகிச் சென்று விட்டார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் மம்மாவைக் கார்களில் அழைத்துச் செல்வது வழக்கம். அவர்கள் இங்கு இன்று இப்பொழுது இல்லை. அத்தகைய சிறந்தவர்களும் மாயையின் சகவாசத்தினுள் பிரவேசித்து, உச்சியில் இருந்து அத்தகையதொரு அளவுக்குக் கீழே விழுந்தார்கள். முன்னைய கல்பத்தில் இதைப் புரிந்து கொண்டவர்கள் மீண்டும் புரிந்து கொள்வார்கள். இன்றைய நாட்களில் உலகில் என்ன இருக்கிறது எனப் பாருங்கள்! குழந்தைகளாகிய நீங்கள் என்னவாக ஆகுகிறீர்கள் எனப் பாருங்கள்! நீங்கள் பாடலைக் கேட்டீர்கள். பாடப்பட்டுள்ளது: நாங்கள் முழு உலகினதும் அதிபதிகள் ஆகுகின்ற அத்தகையதோர் ஆஸ்தியைக் கோருகிறோம். அங்கு எதுவும் எல்லைக்கு உட்பட்டது கிடையாது, ஆனால் இங்கோ எங்கும் எல்லைகள் உள்ளன. அவர்கள் கூறுகிறார்கள்: எங்கள் ஆகாய எல்லைக்குள் உங்கள் ஆகாய விமானங்கள் பிரவேசித்தால், நாங்கள் அவற்றைச் சுட்டு வீழ்த்துவோம். அங்கு எல்லைக்கு உட்பட்ட எதுவும் கிடையாது. இப்பாடல் பாடப்பட்டுள்ளது, ஆனால் எவரும் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. நீங்கள் உண்மையிலேயே பாபாவால் மீண்டும் ஒருமுறை உலகின் அதிபதிகளாக ஆக்கப்பட்டு வருகிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். நீங்கள் 84 பிறவிகளின் சக்கரத்தைப் பல தடவைகள் சுற்றி வந்துள்ளீர்கள். நீங்கள் ஒரு குறுகிய காலத்துக்கே துன்பத்தை அனுபவம் செய்துள்ளீர்கள், ஆனால் நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்தீர்கள், இதனாலேயே பாபா கூறுகிறார்: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு எல்லையற்ற சந்தோஷத்தைக் கொடுக்கிறேன். இப்பொழுது, மாயையினால் தோற்கடிக்கப்பட்டவர்கள் ஆகாதீர்கள்! தந்தைக்குப் பல குழந்தைகள் இருக்கிறார்கள். அனைவரும் அதேயளவு தகுதிவாய்ந்தவர்களாக இருக்க முடியாது. ஒருவருக்கு ஐந்து தொடக்கம் ஏழு குழந்தைகள் இருந்து, அவர்களில் ஒருவர் அல்லது இருவர் தகுதியற்றவர்களாக இருக்கும் பொழுது, அவர்கள் அவருடைய தலையைப் பாழாக்குவார்கள். அவர்கள் நூறாயிரக்கணக்கான அல்லது மில்லியன் ரூபாய்களை வீணாகச் செலவழித்து விடுவார்கள். ஒரு தந்தை முழுமையாகவே ஒரு தர்மாத்மாவாக இருப்பார், ஆனால் அவரின் மகனுடைய கணக்கிலோ எதுவும் (பைசா அற்ற) இருக்க மாட்டாது. பாபா அத்தகைய உதாரணங்கள் பலவற்றைப் பார்த்துள்ளார். உலக மக்கள் அனைவரும் எல்லையற்ற தந்தையின் குழந்தைகளே என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். தந்தை கூறுகிறார்: இப்பாரதம் எனது பிறப்பிடமாகும். அனைவரும் தனது சொந்த நாட்டை மதிக்கிறார்கள். அவர்கள் இன்னுமொரு நாட்டில் தங்கள் சரீரங்களை விட்டு நீங்கினால், அவர்கள் திரும்பவும் தங்கள் சொந்த நாட்டுக்குக் கொண்டு வரப்படுகிறார்கள். தந்தை பாரதத்தில் வருகிறார். அவர் பாரத மக்களாகிய உங்களுக்கு மீண்டும் ஒருமுறை உங்களுடைய எல்லையற்ற ஆஸ்தியைக் கொடுக்கிறார். நீங்கள் மீண்டும் ஒருமுறை உலக அதிபதிகளாக, தேவர்களாக ஆகுகிறீர்கள் எனக் குழந்தைகளாகிய நீங்கள் கூறுகிறீர்கள். நீங்கள் அந்த அதிபதிகளாக இருந்தீர்கள். நீங்கள் முன்னர் இருந்ததில் இருந்து இப்பொழுது உங்கள் நிலைமை என்னவாகி உள்ளது எனப் பாருங்கள்! 84 மறுபிறவிகளை எடுக்கும்பொழுது, இது உங்கள் நிலைமை ஆகிவிட்டது. நாடகம் புரிந்து கொள்ளப்பட வேண்டும். இது வெற்றி, தோல்விக்கான நாடகம் என அழைக்கப்படுகிறது. இது பாரதத்தைப் பற்றியதொரு நாடகமாகும், அதில் உங்களுக்குப் பாகங்கள் உள்ளன. பிராமணர்களாகிய உங்களுக்கு நாடகத்தில் அனைத்திலும் அதிமேன்மையான பாகங்கள் உள்ளன. நீங்கள் முழு உலகினதும் அதிபதிகள் ஆகுகிறீர்கள். நீங்கள் பெருமளவு சந்தோஷத்தை அனுபவம் செய்கிறீர்கள். வேறு எவராலும் உங்களைப் போன்று அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய முடியாது. அதன் பெயரே சுவர்க்கம் ஆகும். இது நரகமாகும். இங்குள்ள சந்தோஷம் ஒரு காக்கையின் எச்சத்தைப் போன்றதாகும்! இன்று, அவர்கள் பல்கோடீஸ்வரர்கள், ஆனால் அவர்கள் தங்களுடைய மறுபிறவியில் என்னவாக ஆகக்கூடும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. இதுவே பாவாத்மாக்களின் உலகமாகும். சத்தியயுகமே புண்ணியாத்மாக்களின் உலகமாகும். நீங்கள் புண்ணியாத்மாக்கள் ஆகுவதனால், நீங்கள் ஒருபொழுதும் எப்பாவத்தையும் செய்யக்கூடாது. எப்பொழுதும் பாபாவுடன் மிகவும் ஒளிவுமறைவின்றியும் இருங்கள். தந்தை கூறுகிறார்: துவாபரயுகத்தில் இருந்து, என்னுடன் எப்பொழுதும் தர்மராஜ் இருக்கிறார். சத்திய, திரேதா யுகங்களில் என்னுடன் தர்மராஜ் இருப்பதில்லை. துவாபரயுகத்தில் இருந்து நீங்கள் எனது பெயரில் தானம் செய்து வருகிறீர்கள். அவர்கள் கடவுளின் பெயரில் அர்ப்பணம் செய்வதைப் பற்றிப் பேசுகிறார்கள். கீதையில் ஸ்ரீகிருஷ்ணரின் பெயரைப் புகுத்தியதனால், அவர்கள் ஸ்ரீகிருஷ்ணருக்குச் சம்ர்ப்பணம் செய்வதாக எழுதிவிட்டார்கள். ஒரு தந்தை மாத்திரமே பிரதிபலனைக் கொடுக்கிறார். இதனாலேயே அவர்கள் ஸ்ரீகிருஷ்ணருக்கு அர்ப்பணம் செய்வதாகக் கூறுவது தவறானது. நீங்கள் கடவுளுக்கு அர்ப்பணிப்பதாகக் கூறுவதே சரியானதாகும். தாங்கள் ஸ்ரீ கணேசருக்கு அர்ப்பணம் செய்வதாகக் கூறுவதனால் எதுவும் பெறப்பட மாட்டாது. எப்படியிருப்பினும், நான் அனைவருக்கும் அவர்களின் பக்தியின் பிரதிபலனைக் கொடுத்து வருகிறேன். எவரும் என்னை அறிய மாட்டார்கள். இப்பொழுது மாத்திரமே, நீங்கள் அனைத்தையும் சிவபாபாவுக்கு அர்ப்பணிக்கிறீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் அறிவீர்கள். பாபாவும் கூறுகிறார்: நான் உங்களுக்கு உங்கள் 21 பிறவிகளுக்கான ஆஸ்தியை கொடுக்க வந்துவிட்டேன். இப்பொழுது கீழிறங்கும் ஸ்திதியாகும். இராவண இராச்சியத்தில் தானம் அளித்துப் புண்ணியம் போன்றவற்றைச் செய்பவர்கள், பாவாத்மாக்களுக்கு மாத்திரமே கொடுக்கிறார்கள். கலைகள் தொடர்ந்தும் குறைவடைகின்றன. அவர்கள் ஏதோவொன்றைப் பெற்றாலும், அது தற்காலிகமானது மாத்திரமே ஆகும். இப்பொழுது நீங்கள் 21 பிறவிகளுக்குப் பெறுகிறீர்கள். அது இராம இராச்சியம் என அழைக்கப்படுகிறது. அது கடவுளின் இராச்சியம் என உங்களால் கூற முடியாது. அது தேவர்களின் இராச்சியம். தந்தை கூறுகிறார்: நான் ஓர் இராச்சியத்தை ஆட்சி செய்வதில்லை. உங்களுடைய ஆதிசனாதன தேவிதேவதா தர்மம் இப்பொழுது மறைந்து விட்டது. இப்பொழுது அது மீண்டும் ஒருமுறை ஸ்தாபிக்கப்பட்டு வருகிறது. தந்தையே நன்மை அளிப்பவர் ஆவார். அவர் உண்மையான பாபா என அழைக்கப்படுகிறார். அவர் உங்களுக்கு அவரைப் பற்றியும், படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியினதும் உண்மை ஞானத்தைக் கொடுக்கிறார். பாபா உங்களுக்கு எல்லையற்ற வரலாற்றையும், புவியியலையும் கூறுகிறார். வருமானம் மிகவும் மகத்தானது! நீங்கள் பூகோள ஆட்சியாளர்கள் ஆகுகிறீர்கள். அவர்கள் ஒரு வன்முறைச் சக்கரத்தைக் காண்பித்துள்ளார்கள். உண்மையில், இது ஞானச் சக்கரமாகும். எவ்வாறாயினும், இந்த ஞானம் பின்னர் மறைந்து விடுகிறது. இது உங்களுடைய பிரதான படமாகும். ஒருபுறத்தில் திரிமூர்த்தியும், மறுபுறத்தில் விருட்சத்தினதும், சக்கரத்தினதும் படங்களும் உள்ளன. பாபா விளங்கப்படுத்தி உள்ளார்: சக்கரத்தின் கால எல்லை நூறூயிரக்கணக்கான வருடங்கள் என அவர்கள் எழுதியுள்ளார்கள். அனைத்தும் முழுமையாகவே சிக்குப்பட்டுள்ளது. தந்தையைத் தவிர எவராலும் அந்தச் சிக்கலைப் பிரிக்க முடியாது. தந்தையே உங்கள் முன்னிலையில் நேரடியாக வந்துவிட்டார். அவர் கூறுகிறார்: நாடகத்துக்கேற்ப, நான் வரவேண்டும். நான் நாடகத்தினால் கட்டுப்பட்டுள்ளேன். நான் வராமலிருப்பது சாத்தியமல்ல. நான் வந்து மரணித்தவர்களை உயிர்ப்பிக்கிறேன் அல்லது நான் ஒருவரை அவனுடைய அல்லது அவளுடைய நோயிலிருந்து விடுவிக்கிறேன் என்பதல்ல. பல குழந்தைகள் கூறுகிறார்கள்: பாபா, என் மீது கருணை காட்டுங்கள்! எவ்வாறாயினும், இங்கு கருணை போன்றவற்றின் கேள்வியே கிடையாது. நான் வந்து உங்களை ஆசீர்வதிப்பதனால், உங்களுக்கு ஓர் இழப்பு ஏற்படாது என்பதற்காக நீங்கள் என்னை அழைக்கவில்லை. நீங்கள் அழைக்கிறீர்கள்: ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்! துன்பத்தை அகற்றி, சந்தோஷத்தை அருள்பவரே, வாருங்கள்! வைத்தியர்கள் கூட சரீரத்தின் வேதனையை அகற்றுபவர்கள் ஆவார்கள். இதற்காகவா நான் வருகிறேன்? நீங்கள் கூறுகிறீர்கள்: எங்களைச் சுவர்க்கமாகிய புதிய உலகின் அதிபதிகளாக்கி, எங்களுக்கு அமைதியைக் கொடுங்கள்! நீங்கள் கூறுவதில்லை: வந்து என்னை என்னுடைய நோயிலிருந்து விடுவியுங்கள்! எவராலும் சதா காலத்துக்கும் அமைதியை அல்லது முக்தியைப் பெற முடியாது. அவர்கள் தங்களின் பாகங்களை நடிக்க வேண்டும். பின்னர் வருபவர்கள் அதிகளவு அமைதியைப் பெறுகிறார்கள்! இப்பொழுதும், ஆத்மாக்கள் தொடர்ந்தும் கீழிறங்கி வருகிறார்கள். அவர்கள் அந்தளவு காலத்துக்கு அமைதி தாமத்தில் தங்கி இருக்கிறார்கள். நாடகத்துக்கேற்ப, அது தங்கள் பாகத்தில் உள்ளவர்கள் வருவார்கள். எவருடைய பாகமும் மாற்றப்பட முடியாது. பாபா விளங்கப்படுத்துகிறார்: இறுதியில் கீழிறங்கி வருகின்ற பல ஆத்மாக்கள் அமைதி தாமத்தில் வசிக்கின்றார்கள். இந்நாடகம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இறுதியில் வரவுள்ளவர்கள் இறுதியிலேயே வருவார்கள். இவ்விருட்சம் உருவாக்கப்பட்டுள்ளது. உருவாக்கப்பட்டுள்ள படங்கள் அனைத்தையும் நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும். மிகச்சரியாக அவை முன்னைய கல்பத்தில் உருவாக்கப்பட்டதைப் போன்றே, பல படங்கள் தொடர்ந்தும் உருவாக்கப்படும். 84 பிறவிகளின் விவரங்கள் விருட்சத்தின் படத்தில் உள்ளன. சக்கரத்தின் படத்திலும் நாடகம் இருக்கிறது. இப்பொழுது ஏணியின் படம் உருவாக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் எதையும் புரிந்து கொள்வதில்லை. அது அவர்கள் முழு முட்டாள்களாக (புத்துக்கள்) இருப்பதைப் போலாகும். ஞானக்கடலும், அமைதிக்கடலுமான, பரமாத்மாவாகிய பரமதந்தை, இச்சரீரத்தினூடாக உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பது குழந்தைகளாகிய உங்களின் புத்திகளில் இப்பொழுது உள்ளது. தந்தை கூறுகிறார்: நான் முதன்முதலில் உலக அதிபதி ஆகுபவரில் பிரவேசிக்கிறேன். நீங்கள் உண்மையில் பிரம்மாவினூடாக பிராமணர்களாக ஆகுகிறீர்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். கீதையில் இவ்விடயங்கள் குறிப்பிடப்படவில்லை. தந்தை கூறுகிறார்: இவர் நாராயணனை வழிபடுவது வழக்கமாகும். அவர் புகையிரதத்தில் பிரயாணிக்கும் பொழுது கூட, கீதையைக் கற்பார். அவர் ஒரு பெரிய மகத்தான சமய சம்பந்தமான ஆத்மாவாக இருந்தார் என மக்கள் எண்ணினார்கள். இப்பொழுது, அவர் இவ்விடயங்கள் அனைத்தையும் மறந்துவிட்டார். எப்படியிருப்பினும், அவர் கீதை போன்றவற்றைக் கற்றுள்ளார். பாபா கூறுகிறார்: நான் அனைத்தையும் அறிவேன். நீங்கள் யார் முன்னிலையில் அமர்ந்திருக்கிறீர்கள் என்பதைச் சிந்தியுங்கள்! அவரினூடாகவே நீங்கள் உலக அதிபதிகள் ஆகுகிறீர்கள். ஆகவே பின்னர், நீங்கள் ஏன் திரும்பத் திரும்ப அவரை மறக்கிறீர்கள்? தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்கு ஒரு நாளில் 16 மணித்தியாலங்கள் ஓய்வைக் கொடுக்கிறேன். எவ்வாறாயினும், எஞ்சிய நேரத்துக்கு நீங்கள் உங்களின் சேவையைச் செய்ய வேண்டும். நீங்கள் உங்களுக்குச் சேவை செய்யும்பொழுது, நீங்கள் உலகத்துக்கே சேவை செய்கிறீர்கள் என அர்த்தம். செயல்களைச் செய்யும்பொழுது, குறைந்தபட்சம் எட்டு மணித்தியாலங்களுக்குத் தந்தையை நினைவு செய்கின்ற, அத்தகைய முயற்சியைச் செய்யுங்கள். இப்பொழுது நாள் முழுவதிலும் எட்டு மணித்தியாலங்களுக்குக் கூட தந்தையை நினைவு செய்வதற்கு உங்களால் இயலாதுள்ளது. உங்களுக்கு அந்த ஸ்திதி உள்ளபொழுது, நீங்கள் பெருமளவு சேவையைச் செய்கிறீர்கள் என்பது புரிந்து கொள்ளப்படும். நீங்கள் பெருமளவு சேவையைச் செய்வதாக எண்ண வேண்டாம். சிலர் மிகவும் சிறப்பாக, முதற்தரமான சொற்பொழிவுகளை ஆற்றுகிறார்கள், ஆனால் அவர்கள் முற்றாகவே யோகம் செய்வதில்லை. நினைவு யாத்திரையே பிரதான விடயமாகும். தந்தை கூறுகிறார்: உங்கள் தலைமீது பெரிய பாவச்சுமை உள்ளது ஆகவே, அதிகாலையில் எழுந்திருந்து தந்தையை நினைவு செய்யுங்கள்! அதிகாலை இரண்டு தொடக்கம் ஐந்து மணிக்கு இடையில், சூழல் முதற்தரமாக இருக்கிறது. இரவில் ஆத்மா ஆத்ம உணர்வுடையவர் ஆகுகிறார், இது உறக்கம் என அழைக்கப்படுகிறது. அதனாலேயே தந்தை கூறுகிறார்: இயலுமான வரையில் தந்தையை நினைவு செய்யுங்கள். இப்பொழுது தந்தை கூறுகிறார்: மன்மனாபவ! இதுவே மேலேறும் ஸ்திதிக்கான மந்திரமாகும். அச்சா.இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்பொழுதோ தொலைந்து இப்பொழுது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. தந்தையுடன் ஒளிவுமறைவின்றியும் நேர்மையாகவும் இருங்கள். நீங்கள் நன்மையளிக்கும் தந்தையின் குழந்தைகள், ஆகவே நீங்கள் அனைவருக்கும் நன்மையளிக்க வேண்டும். தகுதிவாய்ந்தவர்கள் ஆகுங்கள்!2. அனைத்தையும் செய்யும்பொழுதும் நிச்சயமாகக் குறைந்தபட்சம் எட்டு மணித்தியால நினைவைக் கொண்டிருங்கள். நினைவு யாத்திரையே பிரதான விடயமாகும். இதனூடாகவே பாவச்சுமை அகற்றப்படும்.
ஆசீர்வாதம்:
நீங்கள் ஒவ்வொரு விநாடியும் ஒவ்வோர் எண்ணத்தாலும் தானம் செய்கின்ற அருள்பவர் ஆகுவதன் மூலம் பெருந்தன்மையான இதயத்தைக் கொண்டவராகி, ஒரு மகாதானி ஆகுவீர்களாக.அருள்பவரின் குழந்தைகளான நீங்கள், எடுத்துக் கொள்பவர்கள் அல்ல, ஆனால் கொடுப்பவர்கள். நீங்கள் ஒவ்வொரு வினாடியும் ஒவ்வோர் எண்ணத்தாலும் கொடுக்க வேண்டும். நீங்கள் இத்தகையதோர் அருள்பவர் ஆகும்போது, பெருந்தன்மையான இதயத்தைக் கொண்டவர், ஒரு மகாதானி என்று அழைக்கப்படுவீர்கள். இத்தகைய ஒரு மகாதானி ஆகுவதன் மூலம், நீங்கள் இயல்பாகவே மகத்தான சக்தியைப் பெறுவீர்கள். எவ்வாறாயினும், வழங்குவதற்கு, உங்களின் பொக்கிஷக் களஞ்சியம் நிரம்பி இருக்க வேண்டும். உங்களுக்குத் தேவையான அனைத்தையும் நீங்கள் பெற்றுள்ளீர்கள், நீங்கள் இப்போது கொடுக்க வேண்டியதே எஞ்சி உள்ளது. எனவே, தொடர்ந்து கொடுங்கள். இவ்வாறு கொடுப்பதன் மூலம், உங்களின் பொக்கிஷக் களஞ்சியம் மேலும் நிறையும்.
சுலோகம்:
ஒவ்வொரு பாடத்திலும் முழுமையான மதிப்பெண்களைப் பெற்றுக் கொள்வதற்கு, முதிர்ச்சி என்ற நற்குணத்தைக் கிரகியுங்கள்.அவ்யக்த சமிக்ஞை: மேன்மையாகுவதற்கு, இனிமை மற்றும் பணிவு என்ற நற்குணங்களை கிரகியுங்கள்.
ஒரு பணிவான ஆத்மாவால் இலகுவாக சந்தோஷத்தை அருள்பவர் ஆகமுடியும். எவ்வாறாயினும், அகங்காரம் உங்களைப் பணிவால் நிரம்புவதற்கு அனுமதிப்பதில்லை. பணிவு இல்லாவிட்டால், சேவையும் இடம்பெற முடியாது. ஒரு சேவையாளரின் சிறப்பியல்பானது, அவர் சதா பணிவாக இருந்து, தலைவணங்குவார். அப்போது மட்டுமே அவரால் மற்றவர்களையும் தலைவணங்கச் செய்ய முடியும். எந்தளவிற்கு அதிகமான பணிவுடன் நீங்கள் இருக்கிறீர்களோ, அந்தளவிற்கு அதிகம் கட்டி எழுப்புவராக இருப்பீர்கள். நீங்கள் பணிவாக இருக்கும்போது, அதிகாரத் தோரணை இருக்காது, ஆனால் ஆன்மீகமே காணப்படும். எவ்வாறு தந்தை மிகுந்த பணிவுடன் இங்கே வருகிறாரோ, அதேபோல் தந்தையைப் பின்பற்றுங்கள்.