13.06.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, முதலில், அனைவரிலும் மிக உறுதியாக நீங்கள் பதியச் செய்ய வேண்டிய மந்திரம்: நீங்கள் ஓர் ஆத்மா. நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும். நினைவு செய்வதன் மூலமாக மாத்திரமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படும்.

பாடல்:
நீங்கள் இப்பொழுது செய்கின்ற உண்மையான சேவை என்ன?

பதில்:
தூய்மையற்றதாகி விட்ட பாரதத்தைத் தூய்மையாக்குவதே உண்மையான சேவையாகும். நீங்கள் எவ்வாறு பாரதத்திற்குச் சேவை செய்கிறீர்கள் என மக்கள் உங்களைக் கேட்கும்பொழுது, அவர்களிடம் கூறுங்கள்: ஸ்ரீமத்திற்கு ஏற்ப, நீங்கள் பாரதத்திற்கு ஆன்மீக சேவை செய்கின்றீர்கள். அதன் மூலமாக அது இரட்டைக் கிரீடம் உடையதாகுகின்றது. பாரதத்தில் முன்னர் இருந்த அமைதியையும், செழிப்பையும் நீங்கள் ஸ்தாபிக்கின்றீர்கள்.

ஓம் சாந்தி.
முதலாவது பாடம்: குழந்தைகளே, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள், அதாவது, “மன்மனாபவ“ ஆகுங்கள். இது ஒரு சமஸ்கிருத சொல்லாகும். குழந்தைகளாகிய நீங்கள் சேவை செய்யும்பொழுது, அனைத்திற்கும் முதலில், அவர்களுக்கு அல்ஃபாவைப் பற்றிக் கற்பியுங்கள். யாராவது வரும்பொழுது, அவர்களை வேறு எந்தப் படத்திற்கும் அல்லாது, சிவபாபாவின் படத்திற்கு முன்னால் அழைத்துச் செல்லுங்கள். எல்லாவற்றிற்கும் முதலில், அவர்களை தந்தையின் படத்திற்கு முன்னால் அழைத்துச் சென்று கூறுங்கள்: பாபா கூறுகிறார்: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, உங்களது தந்தையாகிய, என்னை நினைவுசெய்யுங்கள். நானே உங்களது பரம தந்தையும், பரம ஆசிரியரும், பரம சற்குருவும் ஆவேன். அனைவருக்கும் இப்பாடத்தைக் கற்பியுங்கள். இவ்வாறே நீங்கள் ஆரம்பிக்க வேண்டும். உங்களை ஆத்மாக்களாகக்; கருதி, உங்களது தந்தையாகிய என்னை நினைவுசெய்யுங்கள், ஏனெனில்; நீங்கள் இப்பொழுது தூய்மையற்றவர்களாகி விட்டீர்கள், நீங்கள் மீண்டும் ஒருமுறை தூய்மையானவர்களாகவும், சதோபிரதானாகவும் ஆகவேண்டும். அனைத்தும் இந்தப் பாடத்தில் உள்ளடங்குகிறது, ஆனால் நீங்கள் அனைவரும் இதனைச் செய்வதில்லை. பாபா கூறுகிறார்: அனைத்திற்கும் முதலில், அவர்களைச் சிவபாபாவின் படத்தின் முன்னிலையில் அழைத்துச் செல்லுங்கள். இவர் எங்களுடைய எல்லையற்ற பாபா ஆவார். பாபா கூறுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். உங்களை ஆத்மாக்களாகக் கருதினால், உங்கள் படகு அக்கரை சேரும். என்னை நினைவுசெய்யும்பொழுது, நீங்கள் தூய உலகைச் சென்றடைவீர்கள். ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு தடவை இப்பாடத்தை மீண்டும் மீண்டும் உறுதியாக்குங்கள்: நீங்கள் தந்தையை நினைவு செய்தீர்களா? பாபா என்றால் பாபாதான், அத்துடன் அவர் படைப்பைப்; படைப்பவர். அவர் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிந்தவர், ஏனெனில் அவரே மனித உலக விருட்சத்தின் விதையாவார். முதலில் அவர்களுக்கு இந்த நம்பிக்கை ஏற்படுமாறு தூண்டுங்கள். நீங்கள் தந்தையை நினைவு செய்கிறீர்களா? தந்தை மாத்திரமே உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கின்றார். நாங்களும் தந்தையிடமிருந்தே இந்த ஞானத்தைப் பெற்;றோம், அதனையே நாங்கள் உங்களுக்குக் கொடுக்கின்றோம். முதலில், இந்த மந்திரத்தை அவர்களுக்கு உறுதியாக்குங்கள். உங்களை ஆத்மாக்களாகக்; கருதி, தந்தையை நினைவுசெய்யுங்கள். அப்பொழுது நீங்கள் பிரபுவுக்கும் அதிபதிக்கும் சொந்தமாகுவீர்கள். நீங்கள் இதனையே விளங்கப்படுத்த வேண்டும். அவர்கள் அதனைப் புரிந்துகொள்ளும்வரை, அவ்விடத்திலிருந்து செல்வதற்கு அவர்களை அனுமதிக்காதீர்கள். தந்தையின் அத்தகையதோர் அறிமுகத்தைக் கொடுக்கக்கூடிய இரண்டு முதல் நான்கு படங்கள் இருக்க வேண்டு;ம். ஆகவே, இதனை நீங்கள் மிகத் தெளிவாக விளங்கப்படுத்தும்பொழுது, அது அவர்களது புத்திகளில் புகும். நாங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும், ஏனெனில் அவர் மாத்திரமே சர்வசக்திவான். அவரை நினைவு செய்வதனால், எங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தந்தையின் புகழ் மிகத் தெளிவானது. அனைத்திற்கும் முதலில் நிச்சயமாகக் கூற வேண்டியது: உங்களை ஆத்மாக்களாகக் கருதி, சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். உங்கள் சரீரங்களின் அனைத்து உறவுமுறைகளையும் மறந்து விடுங்கள். நான் சீக்கியன், நான் இன்ன இன்னார்: அவை அனைத்தையும் மறந்து, ஒரேயொரு தந்தையை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். அனைத்திற்கும் முதலில், இந்தப் பிரதான விடயத்தை அவர்களின் புத்தியில் பதியச் செய்யுங்கள். அந்தத் தந்தையே தூய்மை, அமைதி, சந்தோஷத்திற்கான ஆஸ்தியை உங்களுக்குத் தருபவர். தந்தையே உங்கள் குணாதிசயங்களைச் சீர்திருத்துகிறார். இவ்வாறாக, முதலாவது பாடத்தை நீங்கள் அவர்கள் மத்தியில் உறுதியாக்கவில்லையோ என்பதில் தந்தை அக்கறை கொண்டிருந்தார். எவ்வாறாயினும், இதுவே அதி முக்கியமானது. அவர்களது புத்தியில் நீங்கள் அதனை அதிகமாகப் புகுத்தும் அளவிற்கு, அவர்கள் அதனை அதிகமாக நினைவுசெய்வார்கள். தந்தையின் அறிமுகத்தைக் கொடுப்பதற்கு ஐந்து நிமிடங்கள் எடுத்தாலும், அதிலிருந்து செல்லக்கூடாது. அவர்கள் தந்தையின் புகழைப் பெரும் ஆர்வத்துடன் செவிமடுப்பார்கள். தந்தையின் படமே மிகவும் பிரதானமானது. இந்தப் படத்திற்கு முன்னால் ஒரு நீண்ட வரிசையே நிற்க வேண்டும். அனைவருக்கும் தந்தையின் செய்தியைக் கொடுங்கள். பின்னர் படைப்பினதும், சக்கரம் எவ்வாறு சுழல்கிறது என்பது பற்றிய ஞானமும் உள்ளது. நீங்கள் சரக்குச் சாமான்களை, அரைத்து மிக மிருதுவானதாக்குவதைப் போன்று, நீங்களும் இறை பணியைச் செய்வதால், இவ்விடயங்கள் ஒவ்வொன்றையும் அவர்களின் புத்தியில் பதியச் செய்ய வேண்டும். தந்தையைத் தெரிந்து கொள்ளாததால் அவர்கள் அனைவரும் அனாதைகளாகி விட்டார்கள். நீங்கள் இந்த அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும்: பாபாவே, எங்களது பரம தந்தையும், பரம ஆசிரியரும், பரம சற்குருவும் ஆவார். இம் மூன்றாகவும், அவரை நீங்கள் அழைப்பதனால், சர்வவியாபி என்ற எண்ணக் கருத்து அவர்களது புத்தியிலிருந்து அகற்றப்படும். முதலில், அவர்களது புத்தியில் இதனைப் பதியச் செய்யுங்கள். நீங்கள் தந்தையை நினைவுசெய்ய வேண்டும், அப்பொழுதே நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்கள் ஆகுவீர்கள். நீங்கள் தெய்வீகக் குணங்களையும் கிரகிக்க வேண்டும். நீங்கள் சதோபிரதானாக வேண்டும். குழந்தைகளாகிய நீங்கள் அவர்களுக்குத் தந்தையை நினைவூட்டும்பொழுது, நீங்களும் அதனால் பயனடைவீர்கள்; நீங்களும் “மன்மனாபவ”வாக இருப்பீர்கள். நீங்கள் தூதுவர்கள் என்பதால், தந்தையின் அறிமுகத்தைக் கொடுக்க வேண்டும். பாபாவே எங்கள் தந்தையும், ஆசிரியரும், எங்கள் குருவும் என்பது எந்த மனிதருக்குமே தெரியாது. அவர்கள் தந்தையின் அறிமுகத்தைப் பெறும்பொழுது, மிகவும் சந்தோஷமடைவார்கள். கடவுள் பேசுகிறார்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். அப்பொழுது உங்கள் பாவங்கள் அகற்றப்படும். உங்களுக்கு மாத்திரமே இது தெரியும். கீதையுடன் அவர்கள் மகாபாரத யுத்தத்தையும் காட்டியிருக்கிறார்கள். இப்பொழுது, வேறு யுத்தம் பற்றிய கேள்விக்கே இடமில்லை. உங்களது யுத்தம் தந்தையை நினைவுசெய்வதிலேயே உள்ளது. கல்வி வேறுபட்டது, ஆனால் நினைவிற்கே போராட வேண்டியுள்ளது, ஏனெனில் அனைவரும் சரீர உணர்வில் உள்ளார்கள். நீங்கள் இப்பொழுது தந்தையை நினைவுசெய்கின்ற, ஆத்ம உணர்வுடையவர்கள் ஆகுகின்றீர்கள். முதலில், அவரே தந்தையும், ஆசிரியரும், குருவும் என்பதை அவர்களுக்கு உறுதியாக்குங்கள். நாங்கள் அவர் கூறுவதைக் கேட்பதா, அல்லது நீங்கள் கூறுவதைக் கேட்பதா? தந்தை கூறுகிறார்: குழந்தைகளே, நீங்கள் மேன்மையானவர்களாகுவதற்கு, ஸ்ரீமத்தை முற்றாகப் பின்பற்ற வேண்டும். இந்தச் சேவையையே நாங்கள் செய்கின்றோம். தந்தையின் வழிகாட்டல்களைப் பின்பற்றினால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். தந்தையின் வழிகாட்டல்கள்: சதா என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். அவர் உங்களுக்கு விளங்கப்படுத்துகின்ற உலகச் சக்கரமும் அவரது வழிகாட்டலே ஆகும். நீங்கள் தூய்மையாகித் தந்தையை நினைவுசெய்தால், அவர் கூறுகிறார்: நான் உங்களைத் திரும்பவும் என்னுடன் அழைத்துச் செல்வேன். பாபாவே எல்லையற்ற, ஆன்மீக வழிகாட்டியாவார். மக்கள் அவரைக் கூவியழைக்கிறார்கள்: ஓ தூய்மையாக்குபவரே, எங்களைத் தூய்மையாக்கி, இந்தத் தூய்மையற்ற உலகிலிருந்து அப்பால் அழைத்துச் செல்லுங்கள்! அவர்கள் பௌதீக வழிகாட்டிகள், ஆனால் இவரோ ஆன்மீக வழிகாட்டியாவார். சிவபாபாவே எங்களுக்குக் கற்பிக்கின்றார். தந்தை குழந்தைகளாகிய உங்களுக்குக் கூறுகிறார்;: நடக்கும்பொழுதும், உலாவித் திரியும்பொழுதும், தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்யுங்கள். இதில் நீங்கள் உங்களைக் களைப்படையச் செய்ய வேண்டியதில்லை. சில குழந்தைகள் சிலவேளைகளில் அதிகாலையிலேயே இங்கு வந்து அமர்ந்திருப்பதை பாபா பார்க்கிறார், எனவே நிச்சயமாக அவர்கள் களைப்படைந்து விடுகிறார்கள். இது ஓர் இலகுவான பாதையாகும். நீங்கள் பலவந்தமாக இங்கு வந்து அமர்ந்திருக்கக்கூடாது. நீங்கள் உலாவித் திரிந்தாலும், சுற்றுலா சென்றாலும், உங்களால் மிகுந்த ஆர்வத்துடன் தந்தையை நினைவுசெய்ய முடியும். பாபாவையிட்டு உள்ளார்த்தமாக, பெரும் ஆர்வம் இருக்கட்டும். சதா தொடர்ந்தும் தந்தையை நினைவுசெய்பவர்கள் மாத்திரமே சதா உற்சாகமாக இருப்பார்கள். நீங்கள் நினைவுசெய்கின்ற ஏனைய அனைத்தையும் உங்கள் புத்தியிலிருந்து அகற்ற வேண்டும். தந்தை மீது மிகவும் ஆழமான அன்பைக் கொண்டிருங்கள். நீங்கள் தொடர்ந்தும் அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வீர்கள். தந்தையின் நினைவில் உங்களை ஈடுபடுத்தும்பொழுது, தமோபிரதானிலிருந்து சதோபிரதானாகுவீர்கள். பின்னர் உங்கள் சந்தோஷத்திற்கு முடிவே இருக்காது. இந்த விடயங்கள் அனைத்தும் இங்கேயே கூறப்படுகின்றன. இதனாலேயே நினைவுகூரப்படுகிறது: தந்தையாகிய கடவுள் கற்பிக்கின்ற அதீந்திரிய சுகத்தைப் பற்றிக் கோப, கோபிகைகளிடம் கேளுங்கள். கடவுள் பேசுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள். தந்தையின் புகழை நீங்கள் அவர்களுக்குக் கூற வேண்டும். ஒரேயொரு தந்தையிடமிருந்து மாத்திரமே நீங்கள் சற்கதி என்ற ஆஸ்தியைப் பெறுகிறீர்கள். அனைவரும் நிச்சயமாகச் சற்கதியைப் பெறுகின்றார்கள். முதலில், அனைவரும் அமைதி தாமத்திற்குச் செல்வார்கள். தந்தையே உங்களுக்குச் சற்கதியைத் கொடுப்பதை உங்கள் புத்தியில் கொண்டிருக்க வேண்டும். எந்தெந்த இடங்கள் அமைதி தாமம் என்றும், சந்தோஷ தாமம் என்றும் அழைக்கப்படுகின்றன என்பது உங்களுக்கு விளங்கப்படுத்தப்பட்டுள்ளது. ஆத்மாக்கள் அனைவரும் அமைதி தாமத்தில் வசிக்கின்றார்கள். அதுவே இனிய வீடும், மௌன வீடும், மௌனக் கோபுரமுமாகும். அவற்றை இக்கண்களால் காண முடியாது. விஞ்ஞானிகளின் புத்திகள் அவர்களின் பௌதீகக் கண்களால் அவர்கள் காண்கின்ற அனைத்து விடயங்கள் மீதும் தொழிற்படுகின்றன. எவராலும் அக்கண்களால், ஓர் ஆத்மாவைப் பார்க்க முடியாது. அவர்களால் ஓர் ஆத்மாவைப் பற்றிப் புரிந்துகொள்ள முடியும். அவர்களால் ஓர் ஆத்மாவைப் பார்க்க முடியாது, ஆகவே அவர்களால் எவ்வாறு தந்தையைப் பார்க்க முடியும்? இது புரிந்துகொள்வதற்கான ஒரு விடயமாகும். அவற்றை இக்கண்களால் பார்க்க முடியாது. கடவுள் பேசுகிறார்: என்னை நினைவுசெய்யுங்கள், உங்களுடைய பாவங்கள் எரிக்கப்படும். இதனை யார் கூறினார்? அவர்களால் இதனை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாததால், ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதாகக் கூறுகிறார்கள். மக்கள் ஸ்ரீ கிருஷ்ணரைப் பெருமளவு நினைவுசெய்கிறார்கள். நாளுக்கு நாள், தொடர்ந்தும் அவர்கள் கலப்படமாகிக் கொண்டிருக்கிறார்கள். பக்தியிலும், முதலில் அவர்கள் சிவனையே வழிபடுகின்றார்கள். அது கலப்படமற்ற பக்தி, அதன்பின்னர் இலக்ஷ்மி நாராயணனுக்கான பக்தி உள்ளது. கடவுளே அதிமேலானவர். அவர் விஷ்ணு ஆகுவதற்கான ஆஸ்தியை உங்களுக்குக் கொடுக்கிறார்;;; நீங்கள் சிவனின் குலத்தவர்களாகி, பின்னர் விஷ்ணு தாமத்தின் அதிபதிகளாகுகின்றீர்கள். முதலாவது பாடம் மிகத் தெளிவாகக் கற்கப்படும்பொழுதே மாலை உருவாக்கப்படுகின்றது. தந்தையை நினைவுசெய்வதென்பது உங்கள் மாமியார் வீட்டுக்குச் செல்வதைப் போன்றதல்ல! உங்கள் மனதையும், புத்தியையும் ஏனைய அனைத்திலிருந்தும் அகற்றி, அவற்றை ஒரு திசையில் நிலைநிறுத்துங்கள். அந்தக் கண்களால் நீங்கள் பார்க்கும் அனைத்திலிருந்தும் உங்கள் புத்தியின் யோகத்தை அகற்றுங்கள். தந்தை கூறுகிறார்: தொடர்ந்தும் என்னை மாத்திரம் நினைவுசெய்யுங்கள். இதனையிட்டு நீங்கள் குழப்பமடையக் கூடாது. தந்தை இந்த இரதத்தில் அமர்ந்திருக்கின்றார், அவர் அசரீpரியானவர் எனப் புகழப்படுகின்றார். அவர் இவரினூடாக மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகின்றார்: ‘மன்மனாபவ’வாக இருங்கள், அதாவது, நீங்கள் அனைவரையும் ஈடேற்ற வேண்டும் என்பதாகும். உணவு சமைப்பவர்களுக்குக் கூறுங்கள்: சிவபாபாவின் நினைவில் இருந்தவாறே உணவைத் தயாரியுங்கள், அப்பொழுது அந்த உணவை உண்பவர்களது புத்தி தூய்மையடையும். நீங்கள் ஒருவருக்கொருவர் நினைவூட்ட வேண்டும். ஒவ்வொருவரும் சிறிது நேரத்திற்கு நினைவில் இருக்கிறார்கள்: சிலர் அரை மணித்தியாலத்திற்கும், வேறு சிலர் பத்து நிமிடங்களுக்கும் நினைவில் இருக்கிறார்கள். அச்சா, நீங்கள் ஒரு ஐந்து நிமிடங்களுக்கேனும் அன்புடன் தந்தையை நினைவுசெய்தால் இராச்சியத்திற்கு வருவீர்கள். அரசர்களும், அரசிகளும் எப்பொழுதும் அனைவரையும் நேசிக்கிறார்கள். நீங்களும் அன்புக் கடல்கள் ஆகுகிறீர்கள், இதனாலேயே நீங்கள் அனைவரிலும் அன்பைக் கொண்டிருக்கிறீர்கள். அன்பைத் தவிர வேறெதுவும் இல்லை. தந்தை அன்புக் கடல், குழந்தைகளாகிய நீங்களும் அத்தகைய அன்பைக் கொண்டிருப்பீர்கள். அப்பொழுதே அங்கேயும் அத்தகைய அன்பைக் கொண்டிருப்பீர்கள். அரசர்களும், அரசிகளும் பெருமளவு அன்பு கொண்டிருக்கின்றார்கள். குழந்தைகளும் பெருமளவு அன்பு கொண்டிருக்கின்றனர். அன்பு எல்லையற்றது. இங்கு அன்பு ன்ற குறிப்பு கூட இல்லை, துன்புறுத்தலே உள்ளது. அங்கே காம வாளால் ஏற்படுகின்ற எந்த வன்முறையும் இல்லை. இதனாலேயே பாரதத்தின் எல்லையற்ற புகழ் நினைவு கூரப்படுகின்றது. பாரதம் தூய்மையாக இருந்ததைப் போன்று வேறெந்தப் பூமியும் இருந்ததில்லை. இதுவே மிகப் பெரிய யாத்திரைத் தலமாகும். தந்தை இங்கு (பாரதத்தில்) வந்து, அனைவருக்கும் சேவை செய்கிறார்; அவர் அனைவருக்கும் கற்பிக்கின்றார். இக் கல்வியே பிரதான விடயமாகும். பாரதத்திற்கு நீங்கள் எவ்வாறு சேவை செய்கிறீர்கள் என்று சிலர் உங்களை வினவுகிறார்கள். அவர்களுக்குக் கூறுங்கள்: பாரதம் தூய்மையாக வேண்டும் என நீங்கள் விரும்புகிறீர்கள், ஏனெனில் அது இப்பொழுது தூய்மையற்றதாகி விட்டதால், நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம் அதனைத் தூய்மையாக்குகிறோம். நாங்கள் அனைவருக்கும் கூறுவது: தந்தையை நினைவுசெய்யுங்கள்,

நீங்கள் தூய்மையற்றவர்களிலிருந்து தூய்மையானவர்களாகுவீர்கள். இந்த ஆன்மீக சேவையையே நாங்கள் செய்கின்றோம். ஸ்ரீமத்தைப் பின்பற்றுவதன் மூலம், பாரதம் இரட்டைக் கிரீடமுடையதாக இருந்தபொழுது, கொண்டிருந்த அமைதியையும், செழிப்பையும் நாடகத் திட்டத்திற்கேற்ப, முன்னைய கல்பத்தில் செய்தவாறே நாங்கள் மீண்டும் ஒருமுறை உருவாக்குகின்றோம். இந்த வார்த்தைகளை மிக நன்றாக நினைவுசெய்யுங்கள். மக்கள் உலகிலே அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புகிறார்கள், நாங்கள் அதனை உருவாக்குகின்றோம். கடவுள் பேசுகிறார்: தந்தை தொடர்ந்தும் குழந்தைகளாகிய எங்களுக்குக் கூறுகின்றார்: உங்கள் தந்தையாகிய, என்னை நினைவுசெய்யுங்கள். நீங்கள் எவருமே அந்தளவுக்குப் பாபாவை நினைவுசெய்வதில்லை என்பதனை பாபா அறிவார். இதற்கும் முயற்சி தேவைப்படுகின்றது. நினைவின் மூலம் மாத்திரமே நீங்கள் உங்களுடைய கர்மாதீத நிலையை அடைவீர்;கள். நீங்கள் சுயதரிசனச் சக்கரதாரிகள் ஆகவேண்டும். அவர்கள் எவருமே அதன் அர்த்தத்தைத் தங்கள் புத்தியில் கொண்டிருப்பதில்லை. சமயநூல்களிலே அவர்கள் பல விடயங்களை எழுதியிருக்கிறார்கள். இப்பொழுது தந்தை கூறுகிறார்: நீங்கள் கற்றுள்ள அனைத்தையும் மறந்து, உங்களை ஆத்மாக்களாகக் கருதுங்கள். இது மட்டுமே உங்களுடன் வரும். வேறு எதுவுமே உங்களுடன் வர மாட்டாது. தந்தையினுடைய கல்வி மாத்திரமே உங்களுடன் வரும். நீங்கள் அதற்காகவே முயற்சி செய்கின்றீர்கள். சிறு குழந்தைகளைக் குறைவானவர்களாகக் கருதாதீர்;கள். அவர்கள் இளையவர்களாக இருக்குமளவுக்கு, அவர்களால் அதிகளவில் தந்தையின் பெயரைப் புகழடையச் செய்ய முடியும். சிறிய புதல்விகள் அமர்ந்திருந்து, வயதானவர்களுக்கு விளங்கப்படுத்தும்பொழுது, அவர்கள் அற்புதங்களை நிகழ்த்துவார்கள். நீங்கள் அவர்களையும் உங்களுக்குச் சமமானவர்களாக்க வேண்டும். எவராவது அவர்களிடம் ஏதாவது கேட்டால் அவர்கள் பதிலளிக்கத்தக்க வகையில் அவர்களை நீங்கள் தயார்;ப்படுத்த வேண்டும். பின்னர் அவர்களை நிலையங்கள் அல்லது நூதனசாலைகள் உள்ள இடங்களுக்கு அனுப்புங்கள். அத்தகைய குழுக்களை உருவாக்குங்கள். இதுவே அத்தகைய சேவை செய்வதற்கு உகந்த நேரமாகும். வயதில் குறைந்த புத்திரிகள் அமர்ந்திருந்து, வயதானவர்களுக்கு விளங்கப்படுத்துவது மிகவும் அற்புதமான விடயமாகும். நீங்கள் யாருடைய குழந்தைகள் என்று எவராவது உங்களை வினவினால், அவர்களுக்குக் கூறுங்கள்: நாங்கள் சிவபாபாவின் குழந்தைகள், அவர் அசரீரியானவர். அவர் பிரம்மாவின் சரீரத்தினுள் பிரவேசித்து, எங்களுக்குக் கற்பிக்கின்றார். இந்தக் கல்வியினூடாக நாங்கள் இலக்ஷ்மி நாராயணனாக வேண்டும். சத்திய யுக ஆரம்பத்தில், இலக்ஷமி நாராயணனது இராச்சியம் இருந்தது. அவர்களை அவ்வாறானவர்கள் ஆக்கியது யார்? அவர்கள் நிச்சயமாக அவ்வாறான செயல்களைச் செய்திருக்க வேண்டும். தந்தை இங்கமர்ந்திருந்து, செயல்கள், நடுநிலைச் செயல்கள், பாவச் செயல்களின் தத்துவத்தை உங்களுக்குக் கூறுகின்றார். சிவபாபாவே எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவர் மாத்திரமே தந்தையும், ஆசிரியரும், குருவும் ஆவார். தந்தை கூறுகின்றார்: அவர்களுக்குப் பிரதான விடயத்தைப் புரிந்தகொள்ளுமாறு செய்யுங்கள். முதலில், அவர்கள் அல்பாவைப் புரிந்துகொள்ளும்பொழுது, பல்வேறு கேள்விகளை வினவ மாட்டார்கள். அவர்களுக்கு அல்பாவைப் பற்றி விளங்கப்படுத்தாமல், ஏனைய அனைத்துப் படங்களையும் விளங்கப்படுத்தினால் அவர்களது தலைகள் (புத்தி) பாழாகி விடும். முதலாவது விடயம் அல்பா ஆகும். நாங்கள் ஸ்ரீமத்தைப் பின்பற்றுகின்றோம். இவ்வாறு கூறுகின்ற பலர் வெளிப்படுவார்கள்: நாங்கள் அல்பாவைப் புரிந்துகொண்டுள்ளோம். எனவே நாங்கள் ஏன் ஏனைய இந்தப் படங்கள் அனைத்தையும் காட்ட வேண்டும்? அல்பாவை அறிந்துகொண்டதால் நாங்கள் அனைத்தையும் புரிந்துவிட்டோம். தானத்தைப் பெற்றவுடனே, அவர்கள் சென்று விடுவார்கள். நீங்கள் முதற்தரமான தானத்தைக் கொடுக்கிறீர்கள். தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்ததும் அவர்கள் எந்தளவிற்குத் தந்தையை நினைவுசெய்கின்றனர் என்பதற்கு ஏற்ப, அதிகமாகத் தமோபிரதானிலிருந்து சதோபிரதான் ஆகுவார்கள். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. அதீந்திரிய சுகத்தை அனுபவம் செய்வதற்கு, உள்ளாத்தமாக, பாபாவை நினைவு செய்கின்ற உற்சாகத்தைக் கொண்டிருங்கள். நடக்கும்பொழுதும், உலாவித் திரியும்பொழுதும், பலவந்தமாக அல்லாமல், தந்தையை ஆர்வத்துடன் நினைவு செய்யுங்கள்;, ஏனைய அனைவரிலிருந்தும் உங்கள் புத்தியின் யோகத்தைத் துண்டித்து, ஒரேயொருவருடன் அதனை இணைத்துக் கொள்ளுங்கள்.

2. தந்தை அன்புக் கடலாக இருப்பதைப் போன்று, நீங்களும் தந்தையைப் போலவே அன்புக் கடல் ஆகுங்கள். அனைவரையும் ஈடேற்றுங்கள். தந்தையின் நினைவில் நிலைத்திருந்து அனைவருக்கும் தந்தையை நினைவுபடுத்துங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் மௌன சக்தி எனும் உங்கள் ஆயுதம் மூலம் உலகை அமைதி நிறைந்ததாக்குகின்ற, (ஆயுதத்தை ஏந்துகின்ற), ஒரு விசேட ஆன்மீகப் போராளி ஆவீர்களாக.

உங்கள் தூய எண்ணங்களும், உங்கள் நல்லாசிகளும், உங்கள் கண்களின் மொழியுமே மௌன சக்தியின் ஆயுதமாகும். நீங்கள் வார்த்தைகள் மூலம் தந்தையினதும், அவரது படைப்பினதும் அறிமுகத்தைக் கொடுப்பதைப் போல், அதேவிதமாக, மௌனச் சக்தியின் அடிப்படையிலும், உங்கள் கண்கள் மூலமாகவும் உங்களால் ஆத்மாக்களுக்குத் தந்தையின் அனுபவத்தை உங்கள் கண்கள் மூலம் கொடுக்க முடியும். எந்தப் பௌதீகமான சேவைக் கருவிகளை விடவும் மௌனச் சக்தி மேலும் அதிக மேன்மையானது. இதுவே ஆன்மீக சேனைக்குரிய, விசேடமான ஆயுதமாகும். இந்த ஆயுதம் மூலம் உங்களால் அமைதியற்ற உலகை அமைதி நிறைந்ததாக ஆக்க முடியும்.

சுலோகம்:
தடைகளிலிருந்து விடுபட்டிருப்பதும், பிறரையும் தடைகளிலிருந்து விடுவிப்பதுமே உண்மையான சேவையின் சாட்சி ஆகும்.