14.03.25 Morning Tamil Lanka Murli Om Shanti BapDada Madhuban
சாராம்சம்: இனிய குழந்தைகளே, கடவுள் உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதால் உங்கள் முகம் சதா சந்தோஷமாக இருக்க வேண்டும். இந்தச் சந்தோஷத்தில் உங்கள் முகம் பிரகாசிக்க வேண்டும்.
கேள்வி:
குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது செய்ய வேண்டிய பிரதான முயற்சி என்ன?பதில்:
தண்டனையில் இருந்து விடுதலை அடைவதற்கான முயற்சியையே நீங்கள் செய்ய வேண்டும். இதற்கு நினைவு யாத்திரையே பிரதானமாகும். இந்த நினைவின் மூலமே உங்கள் பாவங்கள் அழிக்கப்படுகின்றன. பாபாவை அன்புடன் நினைவு செய்தால், நீங்கள் தொடர்ந்தும் அதிகளவு வருமானத்தை ஈட்டுகின்றீர்கள். அதிகாலை எழுந்து நினைவு செய்வதால், நீங்கள் பழைய உலகை மறப்பதுடன், உங்கள் புத்தியில் ஞான விடயங்கள் மாத்திரமே இருக்கும். குழந்தைகளாகிய உங்கள் உதடுகளில் இருந்து எந்தக் குப்பையும் வெளிவராமல் இருக்கட்டும்..பாடல்:
உங்களைக் கண்டதால், நாங்கள் அனைத்தையும் கண்டுகொண்டோம். இந்த பூமியும் வானமும் எங்களுக்கே சொந்தம்…..ஓம் சாந்தி.
நீங்கள் இப்பாடலைச் செவிமடுக்கும் போது, உங்களில் சிலர் அதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்கின்றீர்கள். கடவுளே கற்பித்து, உங்களுக்கு உலக இராச்சியத்தையும் கொடுக்கின்றார் என்ற சந்தோஷத்தையும் நீங்கள் அனுபவிக்கிறீர்கள். எவ்வாறாயினும், வெகு சிலராலேயே இந்தச் சந்தோஷத்தை நீண்ட நேரம் பேண முடிகின்றது. அவர்களின் நினைவு நிலையாக நிலைத்து இருப்பதில்லை. நாங்கள் தந்தைக்கு உரியவர்கள், தந்தையே எங்களுக்குக் கற்பிக்கின்றார். இத்தகைய போதையைப் பலரும் பேணுவதில்லை. மக்கள் அந்த ஆன்மீக ஒன்றுகூடல்களில், ஆன்மீகக் கதைகளைச் செவிமடுக்கும் போதே அவர்கள் சந்தோஷத்தில் திளைக்கின்றார்கள். இங்கே, தந்தை உங்களுக்கு மிகவும் அழகிய விடயங்களைக் கூறுகின்றார். தந்தை உங்களுக்குக் கற்பித்து, உங்களை உலக அதிபதிகளாகவும் ஆக்குகின்றார். எனவே மாணவர்களாகிய நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். லௌகீகக் கல்வியைக் கற்பவர்கள் சந்தோஷத்தை அனுபவிக்கும் அளவிற்கு, இங்கு கற்பவர்கள் அனுபவிப்பதில்லை. அது அவர்களின் புத்தியில் நிலைத்து இருப்பதில்லை. தந்தை விளங்கப்படுத்தி உள்ளார்: அவ்வாறான பாடல்களை நான்கு அல்லது ஐந்து தடவைகள் செவிமடுங்கள். நீங்கள் தந்தையை மறந்துவிடும் பொழுது, நீங்கள் பழைய உலகையும் உங்கள் பழைய உறவுமுறைகளையும் நினைவு செய்கின்றீர்கள். அத்தகைய நேரங்களில், இப்பாடல்களைச் கேட்கும் போது, நீங்கள் தந்தையை நினைவு செய்வீர்கள். ‘தந்தை’ என நீங்கள் கூறும் போது, நீங்கள் உங்கள் ஆஸ்தியையும் நினைவு செய்கின்றீர்கள். கற்பதன் மூலம் நீங்கள் இந்த ஆஸ்தியைப் பெறுகின்றீர்கள். உலக அதிபதிகள் ஆகுவதற்காகவே நீங்கள் சிவபாபாவுடன் கற்கின்றீர்கள். வேறு என்ன உங்களுக்கு வேண்டும்? அத்தகைய மாணவர்கள் இரவுபகலாக உள்ளார்த்தமாக அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். இதனால் உங்களால் இரவு பகலாக உறங்க முடியாதிருக்கும். உங்கள் உறக்கத்தையும் துறந்து, அந்த ஒரேயொருவரின் நினைவில் முழுமையாக மூழ்கியிருப்பதைப் போன்று, அந்தத் தந்தையையும் ஆசிரியரையும் தொடர்ந்தும் போதையுடன் நினைவு செய்ய வேண்டும். ஆஹா! நாங்கள் உலக இராச்சியத்தைத் தந்தையிடம் இருந்து பெறுகின்றோம்! எவ்வாறாயினும், மாயை உங்களை நினைவு செய்ய அனுமதிப்பது இல்லை. நீங்கள் நண்பர்கள், உறவினர்கள் போன்றோரை நினைவு செய்கின்றீர்கள். நீங்கள் அவர்கள் அனைவரையும் தொடர்ந்தும் நினைவு செய்கின்றீர்கள். பழைய, அழுகிய குப்பைகளையே பலரும் நினைவு செய்கின்றார்கள். அவர்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றார்கள் எனத் தந்தை அவர்களுக்குக் கூறுவதை இட்டு அவர்கள் போதை கொள்வதில்லை. பாடசாலையில் கற்பவர்களின் முகங்கள் எப்பொழுதும் சந்தோஷமாகவே இருக்கும். இங்கு, கடவுளே உங்களுக்குக் கற்பிக்கின்றார்! உங்களில் மிகச் சிலராலேயே இந்தச் சந்தோஷத்தைப் பேண முடிகின்றது. இல்லாவிடின், உங்கள் சந்தோஷ பாதரசம் மிகவும் உயர்ந்தே இருக்கும். எல்லையற்ற தந்தையே உங்களுக்குக் கற்பிக்கின்றார் என்பதை நீங்கள் மறந்து விடுகின்றீர்கள். இதனை நீங்கள் நினைவு செய்தால், நீங்கள் மிகவும் சந்தோஷமாகவே இருப்பீர்கள். எவ்வாறாயினும், சில குழந்தைகளின் கடந்த கால கர்ம வேதனையால், அவர்களால் தந்தையை நினைவு செய்ய முடிவதில்லை. அவர்கள் தமது முகத்தைக் குப்பையை நோக்கியே திருப்பி வைத்துள்ளார்கள். பாபா இதனை அனைவருக்கும் கூறவில்லை. அனைவரும் வரிசைக்கிரமம் ஆனவர்களே. தந்தையையும், பாபாவாகிய கடவுளே தமக்குக் கற்பிக்கின்றார் என்பதையும் நினைவு செய்பவர்களே அதி பாக்கியசாலிகள் ஆவார்கள். அந்தக் கல்வியில் இன்ன ஆசிரியர் தம்மைச் சட்டத்தரணி ஆக்குகின்றார் என்று நினைப்பதைப் போன்றே, இங்கும் கடவுள் எங்களை இறைவன் இறைவிகள் ஆக்குவதற்காகவே கற்பிக்கின்றார். ஆகையால் அதிகளவு போதை இருக்க வேண்டும்! இதனைச் செவிமடுத்துக் கொண்டிருக்கும் போது உங்களில் சிலரின் போதை அதிகரிக்கின்றது. ஆனால் ஏனையோரால் எதனையும் புரிந்து கொள்ள முடிவதில்லை. மக்கள் ஒரு குரு தங்களைத் தன்னுடன் அழைத்துச் செல்வார் என்றும் அல்லது அவர் தங்களைக் கடவுளிடம் அழைத்துச் செல்வார் என்ற நம்பிக்கையுடனேயே அக் குருவை ஏற்றுக் கொள்கின்றார்கள். இங்கே, இந்த ஒரேயொருவரே கடவுள் ஆவார். அவரைச் சந்திப்பதற்கு அவர் உங்களுக்கு உதவுகின்றார். இச்சந்திப்பின் மூலம் உங்களை அவர் தன்னுடன் மீண்டும் அழைத்துச் செல்கிறார். மக்கள் அமைதி தாமத்திற்கு தம்மை அழைத்துச் செல்ல வேண்டும் என்பதற்காக, ஒரு குருவை ஏற்றுக் கொள்கின்றார்கள். இங்கு, தந்தை நேரடியாகவே உங்களுக்கு அதிகமானவற்றை விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் மாணவர்கள். உங்களுக்குக் கற்பிக்கின்ற ஆசிரியரையாவது நினைவு செய்யுங்கள்! எவ்வாறாயினும். நினைவு என்பது சிறிதளவேனும் இல்லை. கேட்கவே வேண்டாம்! நல்ல குழந்தைகளுமே நினைவு செய்வதில்லை. ‘சிவபாபா எங்களுக்குக் கற்பிக்கின்றார். அவரே ஞானக் கடல் ஆவார். அவர் எங்களுக்கு ஆஸ்தியைக் கொடுக்கின்றார்’. இதனை நீங்கள் நினைவு செய்தீர்கள் என்றால் உங்கள் சந்தோஷ பாதரசம் அதிகரிக்கும். தந்தை இவை அனைத்தையும் உங்களுக்கு நேரடியாகக் கூறிய போதிலும், உங்கள் போதை அதிகரிப்பதில்லை. உங்கள் புத்தி வேறு திசைகளில் அலைகின்றது. பாபா கூறுகின்றார்: என்னை நினைவு செய்தால், உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நான் இதற்கான உத்தரவாதத்தை உங்களுக்குக் கொடுக்கின்றேன். ஒரேயொரு தந்தையைத் தவிர வேறு எவரையும் நினைவு செய்யாதீர்கள். அழியவிருக்கும் விடயங்களை நினைவு செய்வதனால் என்ன பயன்? இங்கே ஒருவர் மரணித்தால், இரண்டு அல்லது நான்கு வருடங்களுக்கு அவரை நினைவு செய்கின்றார்கள். அவரை அவர்கள் புகழ்ந்து கொண்டே இருப்பார்கள். தந்தை இப்பொழுது உங்கள் முன்னிலையில் இருந்தவாறே கூறுகின்றார்: குழந்தைகளே, என்னை நினைவு செய்யுங்கள்! பாபாவை நீங்கள் எந்தளவிற்கு அன்புடன் நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கு உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். நீங்கள் அதிகளவு வருமானத்தையும் ஈட்டிக் கொள்வீர்கள். அதிகாலையில் எழுந்து தந்தையை நினைவு செய்யுங்கள். பக்தர்களும் தமது வழிபாட்டை அதிகாலையிலேயே செய்கின்றார்கள். எவ்வாறாயினும், நீங்கள் ஞானமார்க்கத்தில் இருக்கின்றீர்கள். நீங்கள் பழைய உலகின் குப்பையில் சிக்கிக் கொள்ளக் கூடாது. பல குழந்தைகள் அவ்வாறாகச் சிக்கியுள்ளார்கள், கேட்கவே வேண்டாம்! அவர்கள் குப்பையில் இருந்து விலகிச் செல்வதில்லை. அவர்கள் நாள் முழுவதும் தொடர்ந்தும் குப்பையான விடயங்களையே பேசுகின்றார்கள். ஞானத்திற்குரிய விடயங்கள் அவர்களின் புத்தியில் இருப்பதில்லை. எவ்வாறாயினும், சில குழந்தைகள் ஓடோடி நாள் முழுவதும் சேவை செய்கின்றார்கள். சேவை செய்கின்ற குழந்தைகளைத் தந்தை நிச்சயமாக நினைவு செய்கின்றார். தற்போது மனோகர் அதிகளவு சேவை செய்கின்றார். இன்று அவர் கர்நால் செல்கின்றார், நாளை இன்னோர் இடத்திற்குச் செல்வார். அவர் தொடர்ந்தும் ஓடோடிச் சேவை செய்கின்றார். தங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்பவர்களினால் என்ன சேவையைச் செய்ய முடியும்? தந்தையினால் அதிகளவு நேசிக்கப்படுபவர் யார்? மிகவும் நன்றாகச் சேவை செய்பவர்களே. இரவு பகலாகச் சேவையில் அக்கறை கொண்டிருப்பவர்களே பாபாவின் இதயத்தை வெல்கின்றார்கள். இப் பாடல்களை மீண்டும் மீண்டும் செவிமடுக்கும் போது, உங்களால் நினைவில் தொடர்ந்து நிலைத்திருக்க முடியும் என்பதால் உங்கள் போதையும் சற்று அதிகரிக்கும். பாபா கூறியுள்ளார்: உங்களில் எவராயினும் எப்பொழுதாவது சிறிதளவு கவலைப்பட்டாலும், இந்த ஒலிநாடாக்களைக் கேட்டால், நீங்கள் சந்தோஷம் அடைவீர்கள். ‘ஆஹா! நாங்கள் உலக அதிபதிகள் ஆகுகின்றோம்!’ பாபா கூறுகின்றார்: என்னை நினைவு செய்யுங்கள்! இந்தக் கல்வி மிகவும் இலகுவானது. அனைவரும் வைத்திருக்க வேண்டிய பத்து, பன்னிரண்டு பாடல் ஒலிநாடாக்களை பாபா தேர்ந்து எடுத்துள்ளார். ஆனால், குழந்தைகளாகிய நீங்கள் அவரை மறந்து விடுகின்றீர்கள். சிலர் கற்பதையும் நிறுத்தி விடுகின்றார்கள். அவர்கள் முன்னேறுகையில் மாயை அவர்களைத் தாக்குகின்றாள். உங்கள் புத்தியைத் தமோபிரதானில் இருந்து சதோபிரதான் ஆக்குவதற்குத் தந்தை மிகவும் இலகுவான வழியைக் காட்டுகின்றார். இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் எது சரி, எது பிழை என்பதைப் பிரித்தறியும் புத்தியைக் கொண்டிருக்கின்றீர்கள். ‘ஓ தூய்மையாக்குபவரே, வாருங்கள்!’ எனத் தந்தையை மக்களாகிய நீங்கள் அழைத்தீர்கள். இப்பொழுது அத்தந்தையே வந்துள்ளதால், நீங்கள் தூய்மை ஆக வேண்டும். உங்கள் தலையில் பல பிறவிகளின் பாவச் சுமைகள் உள்ளன. ஆகையால் நீங்கள் எந்தளவிற்கு நினைவு செய்கின்றீர்களோ, அந்தளவிற்கே நீங்கள் தூய்மை ஆகுவதுடன், அதிகளவு சந்தோஷமும் இருக்கும். நீங்கள் தொடர்ந்து சேவை செய்தாலும், நீங்கள் ஒவ்வொருவரும் தந்தையை எந்தளவிற்கு நினைவு செய்கின்றீர்கள் என்பதற்கான உங்கள் அட்டவணையையும் வைத்திருக்க வேண்டும். நினைவிற்கான மிகச்சரியான அட்டவணையை எவருமே வைத்திருப்பதில்லை. நீங்கள் கருத்துக்களைக் குறித்துக் கொள்கின்றீர்கள். ஆனால், நீங்கள் நினைவு செய்வதை மறந்து விடுகின்றீர்கள். தந்தை கூறுகின்றார்: நீங்கள் நினைவில் நிலைத்திருந்தவாறு சொற்பொழிவு ஆற்றும்போது, அதிகளவு சக்தியைப் பெறுவீர்கள். இல்லையேல் தந்தை கூறுகின்றார்: நான் பல குழந்தைகளிடம் சென்று, அவர்களுக்கு உதவி செய்கின்றேன். நான் சிலரில் பிரவேசித்து சேவை செய்கின்றேன். சேவை இடம்பெற வேண்டும். ஒருவரின் பாக்கியம் திறக்கப்படுகின்றது என்பதை நான் காணும்போது, விளங்கப்படுத்துபவருக்கு அதிகளவு விவேகம் இல்லாதிருந்தால், நான் அவரில் பிரவேசித்து சேவை செய்கின்றேன். அப்பொழுது சிலர் எழுதுகின்றார்கள்: ‘பாபாவே இந்தச் சேவையைச் செய்தார், எனக்குப் போதியளவு சக்தி இருக்கவில்லை. பாபாவே முரளியைப் பேசியது போன்றிருந்தது’. எவ்வாறாயினும், ஏனையோர் தாமே மிகவும் நன்றாக விளங்கப்படுத்தினோம் என நம்பி அகங்காரத்தை வளர்த்துக் கொள்கின்றார்கள். தந்தை கூறுகின்றார்: ஆத்மாக்களுக்கு நன்மை செய்வதற்காகவே நான் சிலரில் பிரவேசிக்கின்றேன். அப்பொழுது அவர்கள் ஆசிரியரைவிடத் திறமைசாலிகள் ஆகுகின்றார்கள். நான் ஒரு “புத்து” (திறமையற்ற ஒருவர்) ஆசிரியரை அனுப்பினால், மாணவர்கள் எண்ணுவார்கள்: ‘என்னால் இவரை விட நன்றாக விளங்கப்படுத்த முடியும்’ அல்லது, ‘இவரிடம் எந்த தெய்வீகப் பண்புகளும் இல்லை, ஆனால் என்னுடைய ஸ்திதி இவருடையதை விடச் சிறந்தது’. சிலர் நிலையத் தலைவர்களாக இருப்பதால், அதிகளவு அகங்காரம் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் அதிகளவு பகட்டுடன் வாழ்கின்றார்கள். சிலர் முக்கியமானவர்களடன் நெருக்கமாகப் பழகுகிறார்கள். அவர்கள் அந்தத் தலைவியை தேவி என்று அழைப்பதால், அவர் சந்தோஷம் அடைகிறார். இவ்வாறு பல இடங்களில் ஆசிரியரை விட மாணவர்கள் திறமைசாலிகள் ஆகுகின்றனர். ஒரேயொரு பாபா மாத்திரமே பரீட்சைகள் அனைத்திலும் சித்தி எய்தியவர். அவரே ஞானக் கடல் ஆவார். நீங்கள் அவரிடம் கற்றுப் பிறருக்கும் கற்பிக்கின்றீர்கள். சிலர் இவ்விடயங்களை மிகவும் நன்றாகக் கிரகிக்கின்றார்கள். ஏனையோர் மறந்து விடுகின்றார்கள். நினைவு யாத்திரையே மிகவும் முக்கியமானதும், பிரதானமானதும் ஆகும். இல்லையேல் உங்கள் பாவங்கள் எப்படி அழிக்கப்படும்? சில குழந்தைகளின் நடத்தையை இந்த பாபாவும் அந்த பாபாவும் மாத்திரமே அறிவார்கள். குழந்தைகளாகிய நீங்கள் இப்பொழுது தண்டனையில் இருந்து விடுபடுவது என்ற பிரதான முயற்சியைச் செய்ய வேண்டும். இதை நீங்கள் பெறுவதற்கு, நினைவு யாத்திரையே பிரதானமானது. இந்த நினைவின் மூலமே, உங்கள் பாவங்கள் அழிக்கப்படும். சிலர் பணத்தைக் கொடுத்து ஒத்துழைக்கின்றார்கள். அவர்கள் தாம் செல்வந்தர்களாக வருவோம் என எண்ணுகின்றார்கள். எவ்வாறாயினும் தண்டனையில் இருந்து விடுபட வேண்டுமாயின், நீங்களும் இந்த முயற்சியைச் செய்ய வேண்டும். இல்லாவிடின் நீங்கள் தந்தையின் முன்னிலையில் தண்டனையை அனுபவம் செய்வீர்கள். ஒரு நீதிபதியின் குழந்தை பிழையான செயலைச் செய்தால், அந்த நீதிபதிக்கே அது அவமானம். அந்தத் தந்தை கூறுவார்: நான் வளர்த்த பிள்ளையை நான் எப்படித் தண்டிப்பது? ‘தந்தை கற்பித்து, அதிகளவு விளங்கப்படுத்தினார், எனினும் நான் கவனம் செலுத்தவில்லையே’ என அந்த நேரத்தில் நீங்கள் தலைகுனிந்து விரக்திக் கூக்குரல் இடுவீர்கள். தர்மராஜும் தந்தையுடன் உள்ளார். அவருக்கு உங்கள் ஜாதகம் தெரியும். இதனை நீங்கள் இப்பொழுது நடைமுறையில் பார்க்கின்றீர்கள். ஆத்மாக்கள் சிலர் பத்து வருடத்திற்குத் தூய பாதையைப் பின்பற்றினார்கள். பின்னர் மாயை அவர்களைச் சடுதியாகக் குத்தியதால், அவர்கள் தாம் ஈட்டிய வருமானம் முழுவதையும் இழந்து, தூய்மை அற்றவர்கள் ஆகி விடுகின்றார்கள். அத்தகைய பல உதாரணங்கள் உள்ளன. பலரும் வீழ்ந்து விடுகின்றார்கள். மாயையின் புயலினால் சிலர் நாள் முழுவதும் விரக்தி அடைவதனால் தந்தையையும் மறந்து விடுகின்றார்கள். தந்தையிடம் இருந்து எல்லையற்ற இராச்சியத்தைப் பெறுகின்ற சந்தோஷமும் அவர்களுக்கு இருப்பதில்லை. காமத்துடன் பற்றும் உள்ளது. இங்கே நீங்கள் பற்றை வெற்றி கொள்ள வேண்டும். தூய்மை இல்லாத ஒருவரின் மீது உங்கள் இதயத்தில் பற்று வைப்பதனால் என்ன பயன்? ஆம், அவருக்கும் தந்தையின் அறிமுகத்தைக் கொடுத்து அவரை ஈடேற்ற வேண்டும் என்ற எண்ணமே இருக்க வேண்டும். எவ்வாறு இவரை நான் சிவாலயத்தில் வாழத் தகுதியானவர் ஆக்க முடியும்? உள்ளார்த்தமாக இதற்கான வழிமுறைகளை உருவாக்குங்கள். இதில் பற்று என்ற கேள்விக்கே இடமில்லை. உங்கள் உறவினர்கள் எவ்வளவு அன்பானவர்களாக இருந்தாலும் தொடர்ந்தும் அவர்களுக்கு விளங்கப்படுத்துங்கள். ஆழமான அன்பினால் எவராலும் ஈர்க்கப்படாதீர்கள். இல்லாவிட்டால் அவர்கள் சீர்திருந்த மாட்டார்கள். நீங்கள் கருணை நிறைந்தவர்கள் ஆக வேண்டும். நீங்கள் உங்கள் மீதும், பிறர் மீதும் கருணை கொள்ளவேண்டும். தந்தையும் கருணை காட்டுகின்றார். உங்களுக்குச் சமமானவராக எத்தனை பேரை உங்களால் ஆக்க முடியும் என்று நீங்கள் பார்க்க வேண்டும். தந்தையின் அறிமுகத்தை நீங்கள் எத்தனை பேருக்குக் கொடுத்துள்ளீர்கள் என்பதற்கான அத்தாட்சியை நீங்கள் பாபாவிற்குக் கொடுக்க வேண்டும். அந்த ஆத்மாக்களும் பாபாவிற்கு எழுத்தில் அறிவிக்க வேண்டும்: பாபா, உங்களைப் பற்றிய சிறந்த அறிமுகத்தை நான் இவர் மூலமாகப் பெற்றுக் கொண்டேன். பாபா அத்தாட்சியைப் பெறும்போதே, நீங்கள் சேவை செய்கின்றீர்கள் என்பதை பாபாவினால் புரிந்து கொள்ள முடியும். ஆசிரியர் மிகவும் திறமைசாலி என்று அவர்கள் பாபாவிற்கு எழுத்தில் அறிவிக்க வேண்டும். அவர் நன்றாகச் சேவை செய்வதுடன், நன்றாகவும் கற்பிக்கின்றார். எனினும் சில குழந்தைகள் யோகம் என்ற பாடத்தில் சித்தி எய்துவதில்லை. பாபாவை நினைவு செய்வதற்கான அறிவு அவர்களிடம் இல்லை. தந்தை விளங்கப்படுத்துகின்றார்: உணவு உண்ணும் போதும், சிவபாபாவின் நினைவுடன் உண்ணுங்கள். நீங்கள் உலாவச் செல்லும் பொழுதும் சிவபாபாவை நினைவு செய்யுங்கள். அரட்டை அடிக்காதீர்கள்! வியாபாரத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றாலும் தந்தையை நினைவு செய்து அதில் ஈடுபடுங்கள். தந்தை கூறுகின்றார்: எவ்வாறாயினும், நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தையும் செய்யுங்கள். உறங்கலாம், ஆனால், அவற்றுடன், இதனையும் செய்யுங்கள். எட்டு மணித்தியாலங்கள் ஆயினும் நினைவு செய்ய வேண்டும். எவ்வாறாயினும், அது இறுதியிலேயே நிகழும். படிப்படியாக உங்கள் நினைவு அட்டவணையை அதிகரியுங்கள். சிலர் தாம் இரண்டு மணித்தியாலங்கள் நினைவு செய்ததாக எழுதுகின்றார்கள். எவ்வாறாயினும், அவர்கள் முன்னேறும் போது அவர்களின் நினைவு அட்டவணை பலவீனம் அடைகின்றது. மாயை அவர்களை மறைந்து விடச் செய்கின்றாள். மாயை மிகவும் சக்திவாய்ந்தவள். நாள் முழுவதும் இந்தச் சேவையில் மும்முரமாக ஈடுபட்டிருப்பவர்களாலேயே நினைவு செய்ய முடியும். அவர்கள் தொடர்ந்தும் அனைவருக்கும் தந்தையின் அறிமுகத்தை கொடுக்கின்றார்கள். பாபா நினைவு செய்வதை அதிகளவு வலியுறுத்துகின்றார். உங்களாலேயே நினைவு செய்ய முடியாதிருப்பதை நீங்களே உணர்ந்துள்ளீர்கள். நினைவு செய்வதில் மாயை அதிகளவு தடைகளை ஏற்படுத்துகின்றாள். கல்வி மிகவும் இலகுவானது. நீங்கள் தந்தையுடன் கற்கின்றீர்கள். தந்தையிடம் இருந்து ஞானச் செல்வத்தை நீங்கள் எந்தளவிற்கு அதிகமாகப் பெற்றுக் கொள்கின்றீர்களோ, நீங்கள் அந்தளவிற்குச் செல்வந்தர் ஆகுவீர்கள். தந்தை அனைவருக்கும் கற்பிக்கின்றார். முரளி அனைவருக்கும் கிடைக்கின்றது. நீங்கள் மாத்திரமே (மதுவனத்தில் உள்ளவர்கள்) கற்கின்றீர்கள் என்றில்லை, அனைவருமே கற்கின்றார்கள். நிலையங்களுக்கு முரளி வந்தடையாதபோது, அவர்கள் அழுகின்றார்கள். எவ்வாறாயினும், முரளியைச் செவிமடுக்காதவர்களும் உள்ளார்கள். அவர்கள் தாம் விரும்பியவாறு சென்று கொண்டிருக்கின்றார்கள். நீங்கள் முரளியைச் செவிமடுப்பதில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். ‘பாபா, எங்கள் ஆஸ்தியைப் பெற நாங்கள் வந்திருக்கின்றோம்’ என்ற பாடல் முதற்தரமானது. அவர்கள் கூறுகின்றார்கள்: ‘பாபா, நான் யாராக இருந்தாலும், நான் எவ்வாறாக இருந்தாலும், நான் ஒற்றைக்கண் உடையவன் ஆயினும் நான் உங்களுடையவன் ஆவேன்’. அது நல்லது. எனினும் அழுக்கடைந்து இருப்பதனால், அவர்கள் சிறப்பாக வேண்டும். அனைத்தும் யோகத்திலும் நீங்கள் கற்பதிலுமே தங்கியுள்ளது. தந்தைக்கு உரியவராகிய பின்னர் ஒவ்வொரு குழந்தையும் நினைக்க வேண்டும்: ‘இப்பொழுது நான் தந்தைக்கு உரியவர் என்பதால், நான் நிச்சயமாக சுவர்க்கத்திற்குச் செல்ல வேண்டும்’. எவ்வாறாயினும், சுவர்க்கத்தில் நீங்கள் என்னவாக வேண்டும் என்பதைப் பற்றியும் நீங்கள் சிந்திக்க வேண்டும். மிகவும் நன்றாகக் கற்று, தெய்வீகக் குணங்களைக் கிரகியுங்கள். நீங்கள் குரங்குகளைப் போன்றிருந்தால்,எந்த அந்தஸ்தை அடையப் போகின்றீர்கள்? அங்கே பிரஜைகளும் பணியாட்களும் கூடத் தேவைப்படுகிறார்கள். இப்பொழுது கற்காதவர்கள், அங்கே, கற்றவர்களின் சுமைகளைச் சுமப்பவர்கள் ஆகுவார்கள். நீங்கள் எந்தளவிற்கு அதிக முயற்சி செய்கின்றீர்களோ, அந்தளவிற்கே நீங்கள் பெறும் சந்தோஷமும் இருக்கும். நீங்கள் மிகவும் செல்வம் நிறைந்தவர் ஆகினால், அதிகளவு மரியாதையைப் பெறுவீர்கள். நன்றாகக் கற்பவர்கள், அதிகளவு மரியாதையைப் பெறுகிறார்கள். தந்தை தொடர்ந்தும் உங்களுக்கு அறிவுரை கூறுகின்றார். தந்தையின் நினைவில் அமைதியாக இருங்கள். எவ்வாறாயினும், பாபாவிற்கு முன்னிலையில் அமர்ந்திருப்பவர்களை விடத் தொலைவில் இருப்பவர்கள் அதிகளவு நினைவு செய்கின்றார்கள் என்பதும் பாபாவிற்குத் தெரியும். ஆகையால் அவர்கள் உயர்ந்த அந்தஸ்தைப் பெறுகின்றார்கள். பக்தி மார்க்கத்திலும் அதுவே நிகழ்கின்றது. சில பக்தர்கள் மிகவும் நல்லவர்கள், முதற்தரமானவர்கள். அவர்கள் தமது குருவை விட அதிகளவு நினைவு செய்கின்றார்கள். மிகவும் நன்றாகப் பக்தி செய்தவர்களே இங்கே வருகின்றார்கள். நீங்கள் அனைவருமே பக்தர்கள். சந்நியாசிகள் போன்றோர் வரமாட்டார்கள். பக்தர்கள் அனைவரும் தமது பக்தியை முடித்த பின்னர் இங்கே வருவார்கள். தந்தை மிகவும் தெளிவாக விளங்கப்படுத்துகின்றார். நீங்கள் இந்த ஞானத்தைப் பெறுகின்றீர்கள் என்றால், நீங்கள் அதிகளவு பக்தி செய்திருக்கின்றீர்கள் என்பதே அதன் அர்த்தம். அதிகளவு பக்தி செய்தவர்கள், குறைவாக பக்தி செய்தவர்களை விடவும் அதிகளவு கற்பார்கள். நினைவு செய்வதிலேயே பிரதானமான முயற்சி தங்கியுள்ளது. இந்த நினைவினாலேயே உங்கள் பாவங்கள் அழிக்கப்பட முடியும். நீங்கள் மிகவும் இனிமை ஆனவர்களாகவும் ஆக வேண்டும். அச்சா.இனிமையிலும் இனிமையான, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சேவை செய்யும், நம்பிக்கையுள்ள, கீழ்ப்படிவான குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.
தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் உறவினர்கள் எவ்வளவுதான் அன்பானவர்களாக இருந்தாலும், எவ்விதப் பற்றின் இழையும் உங்களை ஈர்ப்பதற்கு அனுமதிக்காதீர்கள். பற்றை வென்றவர் ஆகுங்கள். அவர்களுக்கு சாதுர்யமாக விளங்கப்படுத்துங்கள். உங்கள் மீதும் பிறர் மீதும் கருணை கொண்டிருங்கள்.2. தந்தையையும், ஆசிரியரையும் அதிகளவு அன்புடன் நினைவு செய்யுங்கள். கடவுளே உங்களுக்குக் கற்பித்து, அவரே உலக இராச்சியத்தையும் உங்களுக்குக் கொடுக்கின்றார் என்ற போதையில் இருங்கள். நீங்கள் உலாவச் செல்லும் பொழுதும் நினைவில் நிலைத்திருங்கள். அரட்டை அடிக்காதீர்கள்.
ஆசீர்வாதம்:
நீங்கள் தந்தையின் அழியாத, ஆன்மீக நிறத்தால் உண்மையான ஹோலியைக் கொண்டாடுவதன் மூலம் தந்தைக்குச் சமமாக இருக்கும் ஸ்திதியை அனுபவம் செய்வீர்களாக.நீங்கள் இறைவனின் நிறத்தால் நிறமூட்டப்படுகின்ற புனித ஆத்மாக்கள் ஆவீர்கள். சங்கமயுகம் புனித வாழ்க்கைக்கான யுகம் ஆகும். நீங்கள் இந்த அழியாத, ஆன்மீக நிறத்தால் நிறமூட்டப்படும்போது, எல்லா வேளையும் தந்தைக்குச் சமமானவர் ஆகுவீர்கள். எனவே, உங்களின் ஹோலியானது அவரின் சகவாசத்தால் நிறமூட்டப்பட்டு தந்தைக்குச் சமமானவர் ஆகுவதாகும். மற்றவர்களையும் உங்களுக்குச் சமமானவர்கள் ஆக்குகின்ற உறுதியான நிறம் இருக்க வேண்டும். இந்த ஞானம் என்ற அழியாத நிறத்தால், நினைவெனும் நிறத்தால், சகல சக்திகள் என்ற நிறத்தால், நற்குணங்கள் என்ற நிறத்தால், மேன்மையான மனோபாவம், பார்வை, நல்லாசிகள் மற்றும் தூய உணர்வுகள் என்ற ஆன்மீக நிறத்தால் ஒவ்வோர் ஆத்மாவையும் நிறமூட்டுங்கள்.
சுலோகம்:
உங்களின் பார்வை அலௌகீகமாகவும் உங்களின் மனம் குளிர்மையாகவும் உங்களின் புத்தி கருணைநிறைந்ததாகவும் உங்களின் வாய் இனிமையாகவும் இருக்க வேண்டும்.அவ்யக்த சமிக்கை: சத்தியம் மற்றும் நல்ல பண்புகள் என்ற கலாச்சாரத்தைக் கடைப்பிடியுங்கள்.
சத்தியத்தின் சக்தியின் சொரூபமாகி, போதையுடன் பார்த்துப் பேசுங்கள். நாங்கள் சர்வசக்தி அரசாங்கத்தைப் பின்பற்றுபவர்கள். இந்த விழிப்புணர்வைக் கொண்டிருப்பதன் மூலம் பிழையான எதையும் சரியானது ஆக்குங்கள். நாங்கள் சத்தியத்தை வெளிப்படுத்த வேண்டும், அதை மறைக்கக்கூடாது. ஆனால் நாங்கள் இதை நற்பண்புகளுடன் செய்ய வேண்டும். நீங்கள் சிவனின் சக்திகள் என்ற போதையைக் கொண்டிருங்கள். சக்திகளுக்குத் தைரியம் இருக்கும்போது, சர்வசக்திவான் உதவி செய்வார்.