14.06.24        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, எங்கள் பாபாவே தந்தையாகவும், ஆசிரியராகவும், சற்;குருவாகவும் இருக்கிறார் என்பதைச் சதா நினைவுசெய்யுங்கள். இதை நினைவுசெய்வது ‘மன்மனாபவ’வாக இருப்பதாகும்.

பாடல்:
உங்கள் கண்களில் மாயையின் தூசு படியும்பொழுது, நீங்கள் செய்யும் முதல் தவறு என்ன?

பதில்:
நீங்கள் கற்பதை நிறுத்துவதே மாயை உங்களைச் செய்ய வைக்கும் முதல் தவறாகும். கடவுள் உங்களுக்குக் கற்பிக்கிறார் என்பதை நீங்கள் மறந்து விடுகிறீர்கள். தந்தையின் சொந்தக் குழந்தைகள் தந்தையின் கற்பித்தல்களைக் கற்காமல் நிறுத்துவது அதிசயமே. இந்த ஞானம் உங்களை உள்ளார்ந்த சந்தோஷத்தில் சதா நடனமாடச் செய்கிறது. எவ்வாறாயினும், மாயையின் ஆதிக்கமும் குறைவானதல்ல் அவள் நீங்கள் கற்பதை நிறுத்தச் செய்கிறாள். கற்பதை நிறுத்துவது என்றால், (வகுப்புக்கு) சமூகமளிக்காமல் இருப்பதாகும்;.

ஓம் சாந்தி.
ஆன்மீகத் தந்தை இங்கமர்ந்திருந்து, ஆன்மீகக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். புரிந்துணர்வு குறைந்தவர்களுக்கே விளக்கங்கள் கொடுக்கப்படுகின்றன. சிலர் மிகவும் விவேகமுள்ளவர்கள் ஆகிவிடுகிறார்கள். பாபா மிகவும் அற்புதமானவர் என்பது குழந்தைகளாகிய உங்களுக்குத் தெரியும்! நீங்கள் இங்கு அமர்ந்திருக்கும்பொழுது, உங்கள் எல்லையற்ற பாபாவே உங்கள் எல்லையற்ற ஆசிரியராகவும் இருக்கிறார் என்பதை உள்ளாரப் புரிந்துகொள்கிறீர்கள். அவர் உங்களுக்கு எல்லையற்ற கற்பித்தல்களைக் கொடுக்கிறார். உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இரகசியங்களை அவர் விளங்கப்படுத்துகிறார். இது மாணவர்களாகிய உங்கள் புத்தியில் நிலைத்திருக்க வேண்டும், பின்னர் அவர் நிச்சயமாக உங்களைத் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்வார். இது ஒரு பழைய அழுக்கான உலகம் என்பதும், குழந்தைகளை இங்கிருந்து அழைத்துச் செல்ல வேண்டும் என்பதும் தந்தைக்குத் தெரியும். எங்கே அழைத்துச் செல்வது? வீட்டிற்குத் திரும்ப அழைத்துச் செல்வது! உதாரணமாக, ஒரு குமாரிக்குத் திருமணமாகும்பொழுது, அவளது புகுந்த வீட்டைச் சேர்ந்தவர்கள் தங்கள் வீட்டிற்கு அவளை வந்து, அழைத்துச் செல்கின்றார்கள். இப்பொழுது நீங்கள் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள். எங்கள் எல்லையற்ற தந்தையே எங்களுக்கு எல்லையற்ற கற்பித்தல்களைக் கொடுப்பவர் என்பது நிச்சயமாகக் குழந்தைகளாகிய உங்களுக்குள் தோன்ற வேண்டும். பாபா எவ்வளவு மகிமை வாய்ந்தவரோ, அந்தளவிற்கு அவர் கொடுக்கும் கற்பித்தல்களும் மகிமை வாய்ந்தவையாக உள்ளன. படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றிய இரகசியங்களும் குழந்தைகளாகிய உங்கள் புத்தியில் உள்ளன. தந்தை எங்களை இந்த அழுக்கான உலகிலிருந்து வீட்டிற்குத் திரும்பவும் அழைத்துச் செல்வார் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். உள்ளார இதை நினைவுசெய்வதும் ‘மன்மனாபவ’ என்றிருப்பதாகும். நீங்கள் நடக்கும்பொழுதும், உலாவித் திரியும் பொழுதும், அமர்ந்திருக்கும்பொழுதும் இது உங்கள் புத்தியில் இருக்க வேண்டும். அற்புதமான விடயங்களை நீங்கள் நினைவுசெய்கிறீர்கள். நன்றாகக் கற்பதாலும், தந்தையின் நினைவில் நிலைத்திருப்பதாலும் நீங்கள் உலக அதிபதிகள் ஆகுவீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இது நிச்சயமாக உங்கள் புத்தியில் சுழன்று கொண்டிருக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் முதலில், தந்தையை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும், பின்னர் நீங்கள் ஆசிரியரைக் கண்டுகொள்கிறீர்கள். அவர் உங்கள் எல்லையற்ற ஆன்மீகத் தந்தை என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இலகுவாக நினைவுசெய்வதற்கு பாபா உங்களுக்கு ஒரு வழியைக் காட்டுகிறார்: சதா என்னை மாத்திரமே நினைவு செய்யுங்கள். உங்கள் அரைக் கல்பத்துப் பாவங்கள் இந்த நினைவின் மூலம் அழிக்கப்படும். தூய்மையாகுவதற்காகப் பிறவிபிறவியாக நீங்கள் பக்தி, பிராயச்சித்தம், தவம் போன்றவற்றைச் செய்து வருகின்றீர்கள். மக்கள் ஆலயத்திற்குச் சென்று பக்தி செய்கிறார்கள், தொன்றுதொட்டே தாங்கள் அவற்றைச் செய்து வருவதாக அவர்கள் நம்புகிறார்கள். சமயநூல்களை எப்பொழுதிலிருந்து செவிமடுக்க ஆரம்பித்தீர்கள் என்று அவர்களை வினவினால், தொன்று தொட்டே கேட்டுக் கொண்டிருப்பதாகப் பதிலளிப்பார்கள். மனிதர்களுக்கு எதுவுமே தெரியாது. சத்திய யுகத்தில், சமயநூல்கள் எதுவுமேயில்லை. இதைப் பற்றிக் குழந்தைகளாகிய நீங்கள் வியப்படைய வேண்டும். தந்தையைத் தவிர வேறு எவருமே இந்த விடயங்களை விளங்கப்படுத்த முடியாது. அவரே தந்தையும், ஆசிரியரும், சற்;குருவும் ஆவார். அந்த ஒரேயொருவரே எங்கள் பாபா. அவருக்கென்று தாயோ அல்லது தந்தையோ இல்லை. சிவபாபா இன்னாரின் குழந்தை என்று எவருமே கூற முடியாது. உங்கள் புத்தி மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை நினைவுசெய்ய வேண்டும். இதுவே ‘மன்மனாபவ’ என்பதாகும். ஆசிரியர் உங்களுக்குக் கற்பிக்கின்றாராயினும், அவர் எவரிடமிருந்தும் இதைக் கற்றுக் கொண்டதில்லை. எவருமே அவருக்குக் கற்பித்ததில்லை. அவர் ஞானம் நிறைந்தவர். அவரே மனித உலக விருட்சத்தின் விதையாக இருப்பவர். அவர் ஞானக் கடலாவார். அவர் உயிருள்ளவராக இருப்பதால், அவரால் உங்களுக்கு எல்லாவற்றையும் கூற முடிகிறது. அவர் கூறுகிறார்: குழந்தைகளே, ஆரம்பத்திலிருந்து இன்று வரைக்கும் உள்ள சகல இரகசியங்களையும், நான் பிரவேசித்து இருப்பவரின் மூலம் உங்களுக்கு விளங்கப்படுத்துகிறேன். முடிவைப் பற்றிப் பின்னரே உங்களுக்குக் கூறப்படும். அந்த நேரத்தில், இறுதி நேரம் நெருங்கி விட்டதென்பதை நீங்களும் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் வரிசைக்கிரமமாக உங்கள் கர்மாதீத ஸ்திதியையும் அடைந்திருப்பீர்கள். நீங்கள் அவை அனைத்தினது அடையாளங்களையும் காண்பீர்கள். பழைய உலகம் நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும். பல தடவைகள் இதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள், நீங்கள் அதனைத் தொடர்ந்தும் பார்ப்பீர்கள். முன்னைய கல்பத்தில் கற்றதைப் போன்றே, நீங்கள் கற்கின்றீர்கள். உங்கள் இராச்சியத்தை நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள். அதன்பின்னர் அதனை இழந்தீர்;கள், இப்பொழுது நீங்கள் அதனை மீண்டும் அதனைப் பெறுகிறீர்கள். தந்தை உங்களுக்கு மீண்டும் ஒருமுறை கற்பிக்கின்றார். இது மிகவும் இலகுவானது. உண்மையாகவே நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்கள் என்பதைக் குழந்தைகளாகிய நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். பாபா வந்து, உங்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கிறார். பாபா உங்களுக்கு அறிவுரை கூறுகிறார்: இவையே உங்களுக்குள் தொழிற்பட வேண்டிய விடயங்கள். பாபா எங்கள் தந்தையும், எங்கள் ஆசிரியரும் ஆவார். ஆசிரியரை என்றாவது மறக்க முடியுமா? நீங்கள் தொடர்;ந்தும் ஆசிரியரிடம் கற்;கின்றீர்கள். மாயை சில குழந்தைகளைத் தவறுகள் பலவற்றைச் செய்ய வைக்கிறாள். இது அவள் அவர்களது கண்களில் மண்ணைத் தூவி, அவர்களைக் கற்பதிலிருந்து நிறுத்தி விடுவது போன்றதாகும்;. கடவுள் கற்பித்தபொழுதிலும், அவர்கள் இவ்வாறானதொரு கல்வியைத் துறந்து விடுகிறார்கள்;! கல்வியே பிரதானமானது, இருப்பினும், கற்பதை நிறுத்துவது யார்? தந்தையின் குழந்தைகள்! குழந்தைகளுக்குள் அளவற்ற சந்தோஷம் இருக்க வேண்டும். தந்தை உங்களுக்கு அனைத்தினது ஞானத்தையும் கொடுக்கிறார், அவர் ஒவ்வொரு கல்பமும் அதை உங்களுக்குக் கொடுக்கிறார். தந்தை கூறுகிறார்: குறைந்தபட்சம் இந்த வழியிலேனும் என்னை நினைவுசெய்யுங்கள். நீங்களே கல்பம், கல்பமாக இந்த ஞானத்தைப் புரிந்துகொண்டு, கிரகிப்பவர்கள். அந்த ஒரேயொருவருக்குத் தந்தையில்லை. அவரே எல்லையற்ற தந்தை, அதனால் அவர் அற்புதமானதொரு தந்தை. கூறுங்கள்: எனக்கென ஒரு தந்தை இருக்கிறாரா? சிவபாபா யாருடைய குழந்தை? இந்தக் கல்வியை வேறெந்தக் காலத்திலும் கற்க முடியாது என்பதாலும், பிராமணர்களாகிய நீங்கள் மாத்திரமே இதைக் கற்கிறீர்கள் என்பதாலும் இந்தக் கல்வி மிக அற்புதமானது. தந்தையை நினைவுசெய்வதனாலேயே நீங்கள் படிப்படியாகத் தூய்மையாகுகிறீர்கள் என்பதும் உங்களுக்குத் தெரியும். இல்லாவிடின், நீங்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும். கருப்பைச் சிறையில் பெருந் தண்டனை அனுபவிக்கப்பட வேண்டியுள்ளது. அங்கே விசாரணைக் குழு அமர்த்தப்பட்டு, அனைத்தைப் பற்றிய காட்சிகளையும் நீங்கள் பெறுவீர்கள். நீங்கள் செய்ததைப்; பற்றிய காட்சி கொடுக்கப்படாமல், உங்கள் எவரையும் தண்டிக்க முடியாது. இல்லாவிடின், நீங்கள் ஏன் தண்டிக்கப்படுகிறீர்கள் என்று குழப்பம் அடைவீர்கள். யார் குறிப்பிட்ட பாவங்களைச் செய்துள்ளார், யார் அந்தச் தவறுகளையும் செய்திருக்கிறார் என்று தந்தைக்குத் தெரியும். நீங்கள் செய்தவற்றின் அனைத்துக் காட்சிகளையும் அவர் உங்களுக்குக் காட்டுகிறார். அந்த நேரத்தில், எத்தனையோ பல பிறவிகளின் பாவங்களுக்காக நீங்கள் தண்டிக்கப்படுவதைப் போலவே இருக்கும். அந்தப் பிறவிகளின் கௌரவம் அனைத்தையும் நீங்கள் இழப்பதைப் போலிருக்கும். ஆகவே. தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, நீங்கள் மிக நல்ல முயற்சியைச் செய்ய வேண்டும். 16 சுவர்க்கக் கலைகள் நிறைந்தவர்கள் ஆகுவதற்கு, நினைவில் இருப்பதற்கு நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். நீங்கள் எவருக்காவது துன்பம் கொடுத்திருக்கிறீர்களா என்று உங்களைச் சோதித்துப் பாருங்கள். நாங்கள் சந்தோஷத்தை அருள்பவராகிய, தந்தையின் குழந்தைகள். நாங்கள் மிக அழகானவர்களாக வேண்டும். இந்தக் கல்வி உங்களுடன் தொடர்ந்து வரும். மக்கள் கற்பதால். சட்டத்தரணிகள் போன்றவர்கள் ஆகுகிறார்கள். இந்தத் தந்தையின் ஞானம் சத்தியமானதும், தனித்துவமானதும் ஆகும், இந்தப் பாண்டவ அரசாங்கம் மறைமுகமானது. உங்களைத் தவிர, எவராலும் இதைப் புரிந்துகொள்ள முடியாது. இந்தக் கல்வி அற்புதமானது. ஆத்மாக்களாகிய நீங்கள் அதனைச் செவிமடுக்கிறீர்கள். தந்தை மீண்டும், மீண்டும் உங்களுக்குக் கூறுகிறார்: கற்பதை ஒருபொழுதும் நிறுத்தி விடாதீர்;கள்! நீங்கள் கற்பதை மாயை நிறுத்தி விடுகிறாள். தந்தை கூறுகிறார்: அவ்வாறு செய்யாதீர்கள், கற்பதை நிறுத்தாதீர்கள்! பாபா சகல அறிக்கைகளையும் பெறுகின்றார்.. ஒருவர் எத்தனை நாட்கள் வகுப்புக்குச் சமூகமளிக்காதிருந்தார் என்பதைப் பதிவேட்டிலிருந்து அவர் புரிந்துகொள்கிறார். ஒருவர் கற்பதை நிறுத்தும்பொழுது, அவர் தந்தையையும் மறந்து விடுகிறார். உண்மையில், அவர் மறக்கப்படக்கூடியவர் அல்ல. அந்த ஒரேயொருவரே அற்புதமான தந்தையாவார். இதை ஒரு நாடகம் போல் அவர் விளங்கப்படுத்துகிறார். ஒருவரிடம் ஒரு நாடகத்தைப் பற்றிக் கூறினால், அவரால் மிக இலகுவாக அதை நினைவில் வைத்திருக்க முடியும்; அவர் ஒருபொழுதும் அதை மறந்து விட மாட்டார். இவரும் தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். மிக இளம் வயதிலேயே இவருக்கு ஆர்வமின்மையின் எண்ணங்கள் இருந்தது. அவர் இவ்வாறு கூறுவது வழக்கம்: இந்த உலகில் அளவற்ற துன்பம் இருக்கிறது. எனக்கு ஒரு பத்தாயிரம் ரூபாய்கள் கிடைக்குமாயின், அதிலிருந்து ஐம்பது ரூபாய்களை வட்டியாக என்னால் பெற்றுக்கொள்ள முடியும், அதுவே விடுபட்டிருப்பதற்கு எனக்குப் போதுமாக இருக்கும். வீடு, வியாபாரம்; என்பனவற்றைப் பராமரிப்பது சிரமமானது. அச்சா! பின்னர் பாபா ‘சௌபாக்கிய சுந்தரி’ (பாக்கியசாலியான, அழகிய பெண்) என்ற திரைப்படத்தைப் பார்த்தார். அதன்பின்னர் முன்னர் ஏற்பட்ட ஆர்வமின்மைக்குரிய எண்ணங்கள் எல்லாம் அகன்று விட்டன. அவருக்குத் திருமணம் செய்வது, அதைச் செய்வது, இதைச் செய்வது போன்ற பல எண்ணங்கள் தோன்றி விட்டன. மாயை அவரை ஒரு தடவை அறைந்ததும், அனைத்தும் இல்லாது போய் விட்டது. ஆகவே, தந்தை இப்பொழுது கூறுகிறார்: இந்த உலகம் ஆழ்நரகம், அதற்குள்ளே அந்தத் திரைப்படங்களும், சினிமாவும் கூட ஆழ்நரகமாகும். அவற்றைப் பார்ப்பதால் அனைவருடைய மனோபாவங்களும் பாழாகி விடுகின்றன. ஆண்கள் பத்திரிகைகள் பார்க்கும்பொழுது, அழகிய பெண்களின் படங்களைப் பார்த்தால் அவர்களது மனோபாவங்கள் அவர்கள் பால் ஈர்க்கப்பட்டு, ‘இவள் மிக அழகானவள்’ என்ற சிந்தனைகள் அவர்களது புத்தியில் ஏற்படுகின்றன. உண்மையில், உங்களுக்கு அத்தகைய எண்ணங்கள் இருக்கக்கூடாது. பாபா கூறுகிறார்: இந்த உலகம் அழிக்கப்படும். அதனாலேயே, நீங்கள் ஏனைய அனைத்தையும் மறந்து, சதா என்னை மாத்திரமே நினைவுசெய்ய வேண்டும். ஏன் அவ்வாறான படங்கள் போன்றவற்றை நீங்கள் பார்க்கிறீர்கள்? அவ்விடயங்கள் அனைத்தும் உங்கள் மனோபாவத்தைச் சீரழிக்கின்றன. நீங்கள் பார்க்கின்ற விடயங்கள் அனைத்தும் இடுகாட்டில் புதைக்கப்படப் போகின்றன. அந்தக் கண்களால் நீங்கள் பார்க்கின்ற எதையுமே நினைவுசெய்யாதீர்கள். அவற்றிலிருந்து உங்கள் பற்றை அகற்றுங்கள். இந்தச் சரீரங்கள் எல்லாம் பழையவையும் அழுக்கானவையும் ஆகும். ஆத்மாக்களான நீங்கள் தூய்மையாகியபொழுதிலும், உங்கள் சரீரங்கள் இன்னமும் அழுக்கானவையாகவே இருக்கின்றன, எனவே, நீங்கள் ஏன் அவற்றில் கவனம் செலுத்த விரும்புகிறீர்கள்? நீங்கள் தந்தையை மாத்திரமே பார்க்க வேண்டும். தந்தை கூறுகிறார்: இனிமையிலும் இனிமையான குழந்தைகளே, இலக்கு மிகவும் உயர்ந்தது. வேறு எவராலும் உலக அதிபதியாகுவதற்கு முயற்சி செய்யக் கூட முடியாது. வேறு எவருடைய புத்தியிலும் இது பிரவேசிக்க முடியாது. மாயையின் ஆதிக்கமும் சளைத்ததல்ல. விஞ்ஞானிகளின் புத்திகள் பெருமளவு தொழிற்படுகின்றன. ஆனால், உங்களுடையது மௌனமேயாகும். அனைவரும் முக்தியை விரும்புகிறார்கள். ஆனால், உங்கள் இலக்கு ஜீவன்முக்தி அடைவதாகும். தந்தையும் இதனை விளங்கப்படுத்தியுள்ளார். குருமார்கள் போன்றோரால் இந்த ஞானத்தைக் கொடுக்க முடியாது. வீட்டில் உங்கள் குடும்பங்களுடன் வாழும்பொழுது, தூய்மையாக இருந்து, இராச்சியத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். பக்தி மார்க்கத்தில், நீங்கள் பெருமளவு நேரத்தை வீணாக்கி விட்டீர்கள். நீங்கள் எத்தனை தவறுகள் செய்தீர்கள் என்று இப்பொழுது புரிந்துகொள்கிறீர்கள். தவறுகள் செய்யும்பொழுது, நீங்கள் விவேகமற்றவர்கள் ஆகினீர்கள், நீங்கள் கல்லுப்புத்தி கொண்டவர்கள் ஆகினீர்கள். இந்த ஞானம் மிக அற்புதமானது என்றும், இதன் மூலம் நீங்கள் ஒன்றுமில்லாத நிலையிலிருந்து மகத்தான ஒரு நிலைக்கு வருவீர்கள் என்றும் உள்ளார நீங்கள் உணர்கிறீர்கள். கல்லுப்புத்தி கொண்டவர்கள் என்ற நிலையிலிருந்து தெய்வீகப் புத்தி கொண்டவர்களாக மாறுகிறீர்கள். எனவே, உங்கள் பாபா எல்லையற்ற பாபாவாக இருப்பதனால், உங்கள் சந்தோஷப் பாதரசம் அதிகரிக்க வேண்டும். அவருக்கென ஒரு தந்தையில்லை. அவர் உங்கள் ஆசிரியராகவும் இருக்கிறார். ஆனால், அவருக்கென ஓர் ஆசிரியர் இல்லை. ‘இவர் எவரிடமிருந்து கற்றார்?’ என்று மக்கள் கேட்கிறார்கள். இதையிட்டு அவர்கள் அதிசயிக்கிறார்கள். அவர் ஒரு குருவிடமிருந்து இதனைக் கற்றிருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கிறார்கள். அவ்வாறாயின், அந்தக் குருவுக்கு இன்னும் பல சீடர்களும் இருந்திருப்பார்கள். ஒரேயொரு சீடர் மட்டுமா அவருக்கு இருந்திருப்பார்? ஒரு குருவுக்குப் பல சீடர்கள் இருக்கின்றனர். அகாகானுக்கு எத்தனை சீடர்கள் என்று பாருங்கள்! அவரை வைரங்களுக்கு நிகராக நிறுக்கும் அளவுக்கு அவர்கள் தங்கள் குருவிடம் அளவற்ற மதிப்பை வைத்திருக்கிறார்கள். சற்குருவை நீங்கள் எதற்கு நிகராக நிறுப்பீர்கள்? அந்த ஒரேயொருவர் எல்லையற்ற சற்குரு. அவர் நிறை என்ன? அவர் ஒரு வைரத்தின் நிறை கூட இல்லை. அத்தகைய விடயங்களைப்;;;;;;;;;;;; பற்றிக் குழந்தைகளாகிய நீங்கள் சிந்திக்க வேண்டும். இது மிகச் சூட்சுமமான விடயமாகும். எல்லோரும் ‘ஓ கடவுளே!’ என்று கூறினாலும், அவரே தந்தையும், ஆசிரியரும், குருவும் என்று அவர்களுக்குத் தெரியாது. இவர் மிகச் சாதாரணமானவராக அமர்ந்திருக்கிறார். எல்லோருடைய முகங்களையும் பார்ப்பதற்காகவே இவர் கதியில் அமர்ந்திருக்கிறார். அவர் குழந்தைகளாகிய உங்கள் மீது அன்பு வைத்திருக்கிறார். குழந்தைகளாகிய உங்கள் உதவியின்றி ஸ்தாபனை இடம்பெற முடியாது. அதிகமாக உதவி செய்யும் குழந்தைகள் நிச்சயமாக அதிகளவு நேசிக்கப்படுவார்கள். பெருமளவில் வருமானம் ஈட்டுகின்ற குழந்தை நிச்சயமாக ஓர் உயர்ந்த அந்தஸ்தைப் பெற்றுக் கொள்வார்;, அவர் மீது பெரும் அன்பும் இருக்கும். குழந்தைகளாகிய உங்களைப் பார்க்கையில். பாபா பூரிப்பு (தயவு) அடைகிறார். ஆத்மாவும் மிகவும் தயவு அடைகிறார். ஒவ்வொரு கல்பமும் குழந்தைகளாகிய உங்களைப் பார்க்கையில், நான் தயவு அடைகின்றேன். ஒவ்வொரு கல்பமும் குழந்தைகளான நீங்களே உதவியாளர்கள் ஆகுபவர்;கள். நீங்கள் பெருமளவு நேசிக்கப்படுகிறீர்கள். ஒவ்வொரு கல்பமும் இந்த அன்பு உருவாக்கப்படுகிறது. நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் புத்தியில் தந்தையின் நினைவு இருக்கட்டும். அவர் உங்கள் எல்லையற்ற தந்தையாக இருக்கிறார். அவருக்கெனத் தந்தையோ அல்லது ஆசிரியரோ இல்லை. அனைவராலும் நினைவுசெய்யப்படுபவராக இருக்கின்ற, அந்த ஒரேயொருவரே அனைத்துமாக இருக்கிறார். சத்திய யுகத்தில் எவரும் அவரை நினைவுசெய்ய மாட்டார்கள். உங்கள் படகு 21 பிறவிகளுக்குக் கரை சேர்கிறது என்பதையிட்டு நீங்கள் அதிகளவு சந்தோஷத்தை அனுபவம் செய்ய வேண்டும். நாள் முழுவதும் தந்தையின் சேவையைச் செய்யுங்கள், அவ்வளவுதான். அத்தகைய தந்தையின் அறிமுகத்தை அனைவருக்கும் கொடுங்கள்: தந்தையிடமிருந்து நீங்கள் இந்த ஆஸ்தியைப் பெற்றுக் கொள்ளலாம். தந்தை எங்களுக்கு இராஜயோகம் கற்பிக்கிறார், அவர் எல்லோரையும் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்கிறார். முழுச் சக்கரமும் உங்கள் புத்தியில் உள்ளது. வேறு எவருமே இத்தகையதொரு சக்கரத்தை உருவாக்க முடியாது. எவருமே அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்வதுமில்லை. பாபா உங்கள் எல்லையற்ற பாபா என்பதையும், அவர் உங்களுக்கு ஓர் எல்லையற்ற இராச்சியத்தைக் கொடுக்கிறார் என்பதையும், அவர் உங்களைத் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்வார் என்பதையும் இப்பொழுது நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள். இந்த வகையில் நீங்கள் விளங்கப்படுத்தினால், கடவுள் சர்வவியாபி என்று எவருமே கூறமாட்டார்கள். அவர் தந்தையாகவும் ஆசிரியராகவும் இருப்பதால். அவர் எவ்வாறு சர்வவியாபியாக இருக்க முடியும்? எல்லையற்ற தந்தை ஞானம் நிறைந்தவர். அவருக்கு முழு உலகின் ஆரம்பம், மத்தி, இறுதி பற்றியும் தெரியும். தந்தை குழந்தைகளுக்கு விளங்கப்படுத்துகிறார்: இக்கல்வியை மறந்து விடாதீர்கள்! இதுவே அதிமகத்தான கல்வியாகும். பாபாவே பரம தந்தையும், பரம ஆசிரியரும், பரம குருவும் ஆவார். அந்தக் குருமார்கள் அனைவரையும் கூட அவர் தன்னுடன் திரும்பவும் அழைத்துச் செல்வார். அத்தகைய அற்புதமான விடயங்களை நீங்கள் எடுத்துரைக்க வேண்டும். இது ஓர் எல்லையற்ற நாடகம் என்று அவர்களுக்குக் கூறுங்கள். ஒவ்வொரு நடிகரும் தனது சொந்தப் பாகத்தைப் பெற்றிருக்கிறார். எல்லையற்ற தந்தையிடமிருந்து நீங்கள் எல்லையற்ற இராச்சியத்தைப் பெற்றுக் கொள்கிறீர்கள். நீங்கள் உலக அதிபதிகளாக இருந்தீர்கள். சுவர்க்கம் இருந்தது. அது நிச்சயமாக மீண்டும் இருக்கும். ஸ்ரீ கிருஷ்ணர் புதிய உலகின் அதிபதியாக இருந்தார். இப்பொழுது இது பழைய உலகம், அவர் நிச்சயமாகப் புதிய உலகின் அதிபதி ஆகுவார். இது தெளிவாகப் படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. உங்கள் பாதங்கள் நரகத்தை நோக்கியும், முகம் சுவர்க்கத்தை நோக்கியும் இருப்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இதையே நீங்கள் நினைவுசெய்கிறீர்கள். இதை நினைவுசெய்வதன் மூலம் உங்கள் இறுதி எண்ணங்கள் உங்கள் இலக்கை நோக்கி உங்களை இட்டுச் செல்லும். இவை மிக அழகான விடயங்கள். அவற்றை நீங்கள் நினைவுசெய்ய வேண்டும். அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டெடுக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும், நினைவுகளும், காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. உங்கள் கண்களால் நீங்கள் பார்க்கின்ற அனைத்திலிருந்தும் பற்றை அகற்றுங்கள். ஒரேயொரு தந்தையை மாத்திரமே பாருங்கள். உங்கள் மனோபாவத்தைத் தூய்மையாக்குவதற்கு, அழுக்கான சரீரங்கள் மீது உங்கள் கவனம் சிறிதேனும் ஈர்க்கப்படுவதை அனுமதிக்காதீர்;கள்.

2. நன்றாகக் கற்று, தந்தை உங்களுக்குக் கற்பிக்கின்ற, இத் தனித்துவமான, உண்மையான ஞானத்தைக் கற்பியுங்கள். என்றுமே இந்தக் கல்வியைத் தவற விடாதீர்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் அமைதிச் சக்தி மூலம் பரீட்சார்த்தம் செய்து, ஒவ்வொரு பணியிலும் இலகுவாக வெற்றியடைகின்ற, ஓர் ஆத்மா ஆவீர்களாக.

இப்பொழுது, மாறுகின்ற காலங்களுக்கேற்ப, அமைதிச் சக்தி எனும் வழியைப் பயன்படுத்துவதனால், பரீட்சார்த்தம் செய்து பார்க்கின்ற, ஓர் ஆத்மாவாக வேண்டும். அன்பான வார்த்தைகள் மூலம் ஆத்மாக்களில் ஒத்துழைப்பு உணர்வுகளை ஏற்படுத்துவதைப் போல், அதேவிதமாக, நல்லாசிகளையும், அன்பான உணர்வுகளையும் கொண்டிருக்கின்ற ஸ்திதியில் உங்களை ஸ்திரப்படுத்தி, அவர்களில் மேன்மையான உணர்வுகளை உருவாக்குங்கள். ஒரு தீபம் இன்னுமொரு தீபத்தை ஏற்றுவதைப் போல், உங்கள் சக்திவாய்ந்த நல்லாசிகள் பிறரில் அதிமேன்மையான உணர்வுகளை உருவாக்கும். இந்தச் சக்தி மூலம் உங்கள் பௌதீகப் பணிகளில் உங்களால் மிகவும் இலகுவாக வெற்றியடைய முடியும். உங்களுக்காக இதனைப் பரீட்சார்த்தம் செய்து பாருங்கள்.

சுலோகம்:
அனைவராலும் நேசிக்கப்படுவதற்கு, மலர்ந்திருக்கின்ற ஒரு ரோஜா ஆகுங்கள், வாடிப் போகாதீர்கள்.