15.06.25 Avyakt Bapdada Tamil Lanka Murli 30.11.2005 Om Shanti Madhuban
காலம் நெருங்கி வருவதால், உங்களை எல்லைக்குட்பட்ட பந்தனங்களில் இருந்து விடுவித்து, சம்பூரணமாகவும் சமமானவராகவும் ஆகுங்கள்.
இன்று, பாபா எங்கும் உள்ள சம்பூரணமான, சமமான குழந்தைகளைப் பார்த்தார். சமமான குழந்தைகள் மட்டுமே தந்தையின் இதயத்தில் ஒன்றுகலந்துள்ளார்கள். சமமாக இருக்கும் குழந்தைகளின் சிறப்பியல்பானது, அவர்கள் சதா தடைகளில் இருந்தும் பாவ எண்ணங்களில் இருந்தும் விடுபட்டிருப்பதுடன் பணிவாகவும் தூய்மையாகவும் இருக்கிறார்கள். இத்தகைய ஆத்மாக்கள் சதா சுதந்திரமாக இருக்கிறார்கள். அவர்கள் எந்தவிதமான எல்லைக்கு உட்பட்ட பந்தனத்தினாலும் கட்டுப்படுவதில்லை. எனவே, உங்களையே கேளுங்கள்: நீங்கள் இத்தகைய எல்லையற்ற சுதந்திரத்தைக் கொண்ட ஆத்மாவா? முதலாவது சுதந்திரம், உங்களின் சரீர உணர்வில் இருந்து விடுபட்டிருத்தல்- நீங்கள் விரும்பிய போது உங்களின் சரீரத்தின் ஆதாரத்தை எடுத்தல், நீங்கள் விரும்பிய போது உங்களின் சரீரத்தில் இருந்து விடுபட்டிருத்தல். சரீரங்களின் கவர்ச்சிக்கு ஆளாகாதீர்கள். இரண்டாவதாக, சுதந்திரமாக இருக்கும் ஆத்மாக்கள், எந்தவொரு பழைய சுபாவம் அல்லது சம்ஸ்காரங்களின் பந்தனத்திலும் இருக்க மாட்டார்கள். அவர்கள் தமது பழைய சுபாவம் மற்றும் சம்ஸ்காரங்களில் இருந்து விடுபட்டிருப்பார்கள். அத்துடன், அவர்கள் தமது உறவுமுறைகள் மற்றும் தொடர்புகளில் எந்தவொரு சரீரதாரியினாலும் கவரப்பட மாட்டார்கள். உறவுமுறைகளையும் தொடர்புகளையும் கொண்டிருக்கும் அதேவேளை, அவர்கள் பற்றற்றவர்களாகவும் அன்பானவர்களாகவும் இருப்பார்கள். எனவே, உங்களையே சோதித்துப் பாருங்கள்: ஏதாவது சிறிய, பௌதீக அங்கங்கள் உங்களை பந்தனத்தில் கட்டுகின்றனவா? உங்களின் சுயமரியாதையை நினைவில் வைத்திருங்கள்: நீங்கள் மாஸ்ரர் சர்வசக்திவான், திரிகாலதரிசி, திரிநேத்ரி, சுயதரிசனசக்கரதாரி ஆவீர்கள். இந்த சுயமரியாதையின் அடிப்படையில், சர்வசக்திவானின் குழந்தைகளை ஏதாவது பௌதீக அங்கங்கள் கவர முடியுமா? காலம் நெருங்கி வருவதைப் பார்க்கும்போது, உங்களையே சோதித்துப் பாருங்கள்: உங்களால் ஒரு விநாடிக்குள் சகல பந்தனங்களில் இருந்தும் விடுபட முடிகிறதா? இத்தகைய பந்தனம் ஏதாவது இன்னமும் எஞ்சியுள்ளதா? கடைசிப் பரீட்சையில் சித்தி அடைந்து, முதலாம் இலக்க ஆத்மா ஆகுவதன் நடைமுறை அத்தாட்சி, நீங்கள் விரும்பும் இடத்தில் உங்களின் மனதையும் புத்தியையும் ஒரு விநாடியில் ஒருமுகப்படுத்தக் கூடியதாக இருப்பதே ஆகும். தளம்பல் அடையக்கூடாது. உதாரணமாக, உங்களின் பௌதீக சரீரத்தால் நீங்கள் விரும்பிய இடத்திற்கு உங்களால் செல்ல முடியும்தானே? அதேபோல், உங்களால் உங்களின் புத்தியால் நீங்கள் விரும்பிய ஸ்திதியில் உங்களால் ஸ்திரப்படுத்த முடிகிறதா? எப்படி விஞ்ஞானத்தினூடாக, வெளிச்ச வீடு அல்லது சக்தி வீடு, நீங்கள் அதன் ஆளியைப் போட்ட உடனேயே ஒரு விநாடியில் எல்லா இடங்களுக்கும் வெளிச்சத்தை அல்லது சக்தியை வழங்க ஆரம்பிக்கிறதோ, அதேபோல், நீங்கள் விழிப்புணர்வின் எண்ணத்திற்கான ஆளியைப் போட்டதும் உங்களால் ஒரு வெளிச்சவீடாகவும் சக்திவீடாகவும் ஆகி, ஆத்மாக்களுக்கு ஒளியையும் சக்தியையும் கொடுக்க முடியுமா? ஒரு விநாடியில் சரீரமற்றவர் ஆகுங்கள் என்ற கட்டளை கிடைத்ததும் நீங்கள் அப்படி ஆகுவீர்கள்தானே? அல்லது, நீங்கள் போராட வேண்டி உள்ளதா? நீண்ட காலத்திற்குரிய இந்தப் பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும். நீண்ட காலத்திற்கு இந்தப் பயிற்சி இல்லாவிட்டால், அந்த வேளையில் சரீரமற்றவர் ஆகுவதற்கு உங்களுக்கு முயற்சி தேவைப்படும். இதனாலேயே, பாப்தாதா உங்களுக்கு இந்த சமிக்கையை வழங்குகிறார்: நாள் முழுவதும் செயல்களைச் செய்யும்போது, இதையும் பயிற்சி செய்யுங்கள். இதற்கு மனதைக் கட்டுப்படுத்தும் சக்தி தேவை. உங்களின் மனம் உங்களின் கட்டுப்பாட்டிற்குள் இருந்தால், உங்களின் பௌதீக அங்கங்களில் எதுவும் உங்களை ஆதிக்கத்திற்கு உட்படுத்த முடியாது.
ஆத்மாக்கள் எல்லோருக்கும் உங்களிடம் இருந்து சக்தியின் ஆசீர்வாதம் இப்போது தேவைப்படுகிறது. மாஸ்ரர் சர்வசக்திவான் ஆத்மாக்களான உங்களின் மீது ஆத்மாக்கள் இந்தத் தூய விருப்பத்தை வைத்திருக்கிறார்கள்: நாங்கள் எந்தவித முயற்சியும் செய்யாமல், உங்களின் ஆசீர்வாதங்களால், உங்களின் திருஷ்டியால், உங்களின் அதிர்வலைகளால் எங்களை விடுவியுங்கள். எல்லோருமே சிரமப்பட்டதால் இப்போது களைப்படைந்து விட்டார்கள். நீங்கள் எல்லோரும் சிரமப்படுவதில் இருந்து விடுபட்டு விட்டீர்கள்தானே? அல்லது, இப்போதும் நீங்கள் சிரமப்படுகிறீர்களா? சிரமப்படுவதில் இருந்து விடுபடுவதற்கான இலகுவான வழிமுறை, உங்களின் இதயத்தில் தந்தையின் மீது அதிகபட்ச அன்பைக் கொண்டிருப்பதே என உங்களுக்கு முன்னரும் சொல்லப்பட்டுள்ளது. பிராமண ஆத்மாக்களான நீங்கள் உங்களின் பிறப்பு எடுத்த கணமே ஒரு சத்தியத்தைச் செய்தீர்கள். அந்தச் சத்தியம் என்னவென்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? தந்தை உங்களைத் தனக்குரியவர் ஆக்கி, உங்களின் பிராமணப் பிறவியைக் கொடுத்ததும் நீங்கள் எல்லோரும் உங்களின் பிராமண வாழ்க்கைக்காக என்ன சத்தியத்தைச் செய்தீர்கள்? வேறு எவருக்கும் அன்றி, ஒரேயொரு தந்தைக்குச் சொந்தமாக இருத்தல். உங்களின் சத்தியம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? நினைவிருக்கிறதா? ‘ஆம்’ என்று தலை அசையுங்கள். ஓகே, நீங்கள் உங்களின் கைகளை அசைக்கிறீர்கள். அதை நீங்கள் உறுதியாக நினைக்கிறீர்களா அல்லது சிலவேளைகளில் மறந்துவிடுகிறீர்களா? பாருங்கள், நீங்கள் 63 பிறவிகளாக மறப்பவர்கள் ஆகிவிட்டீர்கள். ஆனால் இந்த ஒரு பிறவியில் நீங்கள் நினைவின் சொரூபங்கள் ஆகியுள்ளீர்கள். அதனால் தந்தை குழந்தைகளான உங்களிடம் கேட்கிறார்: உங்களின் குழந்தைப் பருவத்தின் சத்தியம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவர் அதை உங்களுக்கு மிகவும் இலகுவானது ஆக்கியுள்ளார். உலகம் தந்தைக்குள் இருக்கிறது. நீங்கள் ஒரேயொரு தந்தையுடன் சகல உறவுமுறைகளையும் கொண்டுள்ளீர்கள். நீங்கள் ஒரு தந்தையிடம் இருந்து சகல பேறுகளையும் பெறுகிறீர்கள். ஒரேயொருவரே உங்களுக்குக் கற்பிக்கிறார், அத்துடன் உங்களைப் பராமரிக்கிறார். எல்லாமே ஒரேயொருவரிலேயே உள்ளது. குடும்பமாக இருந்தாலும், இந்த இறை குடும்பம், இதுவும் ஒரேயொரு தந்தையுடையதே. இது வெவ்வேறு தந்தைமார்களின் குடும்பம் அல்ல. இது ஒரேயொரு குடும்பம். குடும்பத்திலும், நீங்கள் ஒருவரோடு ஒருவர் ஆன்மீக அன்பைக் கொண்டிருக்கிறீர்கள். இது வெறுமனே அன்பு அல்ல. ஆனால் ஆன்மீக அன்பு. நீங்கள் பிறவி எடுத்தபோது நீங்கள் செய்த சத்தியத்தை பாப்தாதா உங்களுக்கு நினைவூட்டுகிறார். வேறு எந்தச் சத்தியத்தை நீங்கள் செய்தீர்கள்? எல்லோரும் தமது இதயபூர்வமாக மிகுந்த ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் தந்தையிடம் சொன்னார்கள்: எல்லாமே உங்களுடையவை. உடல், மனம், பொருள் எல்லாம் உங்களுடையவை. நீங்கள் எதை எல்லாம் தந்தையிடம் கொடுத்திருக்கிறீர்களோ, அவர் பணிக்காக நீங்கள் பயன்படுத்தும்படி உங்களிடம் நம்பிக்கைப் பொறுப்பாக ஒப்படைத்துள்ளார். நீங்கள் தந்தையிடம் அவற்றைக் கொடுத்தீர்கள். நீங்கள் அவற்றைக் கொடுத்தீர்கள்தானே? அல்லது, பின்னர் நீங்களே கொஞ்சம் எடுத்துக் கொண்டீர்களா? நீங்கள் அவற்றைப் பின்னர் எடுத்துக் கொண்டால், அது உங்களிடம் நம்பிக்கைப் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டதில் நேர்மை இல்லாமல் நடப்பதாகும். சில குழந்தைகள் தமது இதயபூர்வமான உரையாடலின் போது சொல்கிறார்கள்: ‘எனது மனம் வேதனையில் உள்ளது’. எனது மனம் எங்கிருந்து வந்தது? ‘எனது’ என்பதை ‘உங்களுடையது’ என நீங்கள் அர்ப்பணித்திருக்கும் போது ‘எனது மனம்’ என்பது எங்கிருந்து வந்தது? நீங்கள் எல்லோரும் ஒரு சிப்பிகூட இல்லாமல் சக்கரவர்த்திகள் ஆகியுள்ளீர்கள். இப்போது எதுவும் உங்களுடையது இல்லை. உங்களிடம் ஒரு சிப்பிகூட இல்லை, அப்படியிருந்தும் நீங்கள் சக்கரவர்த்திகள். ஏன்? தந்தையின் பொக்கிஷங்கள், உங்களின் பொக்கிஷங்கள் ஆகியுள்ளன. எனவே, நீங்கள் சக்கரவர்த்திகள்தானே? இறைவனின் பொக்கிஷங்கள், குழந்தைகளின் பொக்கிஷங்கள் ஆகும். எனவே, பாப்தாதா உங்களின் சத்தியங்களைப் பற்றி உங்களுக்கு நினைவூட்டுகிறார். ‘உங்களுடையது’ என்பதை ‘எனது’ என ஆக்காதீர்கள். தந்தை கூறுகிறார்: தந்தை இறை பொக்கிஷங்களால் உங்களைச் செழிப்பானவர்கள் ஆக்கியிருக்கும்போது, அவர் அந்தப் பொறுப்பையும் எடுத்துக் கொண்டார். எந்த வார்த்தைகளால்? என்னை நினையுங்கள், நீங்கள் சகல பேறுகளின் உரிமையையும் பெறுவீர்கள். என்னையே நினையுங்கள். அதற்கு நீங்கள் சொன்னீர்கள்: நான் உங்களுடையவன், நீங்கள் என்னுடையவர். இது ஒரு சத்தியம்தானே? எனவே, தந்தை சொல்கிறார்: சதா இந்தப் பொக்கிஷங்களை உங்களுக்காகவும் ஏனைய ஆத்மாக்கள் எல்லோருக்காகவும் பயன்படுத்துங்கள். எந்தளவிற்கு நீங்கள் அவற்றைப் பயன்படுத்துகிறீர்களோ, அந்தளவிற்கு பொக்கிஷங்கள் அதிகமாக அதிகரிக்கும். உங்களிடம் சகல சக்திகளின் பொக்கிஷமும் உள்ளன. எனவே, சகல சக்திகளையும் பயன்படுத்துங்கள். ‘நான் ஒரு சர்வசக்திவான்’ என்ற இந்த ஞானத்தை உங்களின் புத்தியில் மட்டும் வைத்திருக்காதீர்கள். ஆனால், காலத்திற்கேற்ப சேவை செய்வதற்காக சகல சக்திகளையும் பயன்படுத்துங்கள்.
பெரும்பாலான குழந்தைகளின் அட்டவணைகளில், நீங்கள் இரண்டு சக்திகளை நினைத்து, அவற்றைச் சரியான வேளையில் பயன்படுத்தினால், நீங்கள் எப்போதும் தடைகளில் இருந்து விடுபட்டிருப்பீர்கள் என்பதை பாப்தாதா கண்டார். அப்போது அந்தத் தடைகளுக்கு உங்களின் முன்னால் வருவதற்கான தைரியம் இருக்காது. இது தந்தையிடம் இருந்து பெறப்படும் உத்தரவாதம். உண்மையில், உங்களுக்கு சகல சக்திகளும் தேவை. ஆனால், பெரும்பாலானோரில் சகிப்புத்தன்மை சக்தியும் இனங்காணும் சக்தியும் தேவையாக இருப்பதைக் காணக்கூடியதாக உள்ளது. நீங்கள் எல்லாவற்றையும் இனங்காண்கிறீர்கள். ஆனால், அதை நடைமுறை ரூபத்தில் கடைப்பிடிப்பதில் குறைந்தளவு கவனமே செலுத்தப்படுகிறது. இதனாலேயே, நீங்கள் அதை இனங்காணும்போது, உங்களின் முகமும் நடத்தையும் மாறுகின்றன. ‘ஆம், நான் அதை இனங்கண்டுள்ளேன்’ என்ற மிக நல்ல ஊக்கமும் உற்சாகமும் உங்களுக்கு உள்ளது. ஆனால் அதன்பின்னர் என்ன நடக்கிறது? நீங்கள் எல்லோரும் இதில் அனுபவசாலிகள்தானே? அதன்பின்னர் என்ன நடக்கிறது? அதை ஒவ்வொரு கணமும் உங்களின் ரூபத்தில் கடைப்பிடிப்பதில் ஏதோவொன்று குறைகிறது. ஏனென்றால், நீங்கள் இங்கேயே அதன் சொரூபம் ஆகவேண்டும். உங்களின் புத்தியால் எதையாவது தெரிந்து கொள்வது வேறு விடயம். எவ்வாறாயினும், அதை உங்களின் ரூபத்தில் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சிலவேளைகளில், சில குழந்தைகளின் மீது பாப்தாதா கருணை கொள்கிறார். குழந்தைகளால் முயற்சி செய்ய முடியவில்லை என்பதைத் தந்தை புரிந்து கொள்கிறார். எனவே, குழந்தைகளை அதைச் செய்ய அனுமதிப்பதற்குப் பதிலாக, தந்தை அதைச் செய்ய விரும்புகிறார். எவ்வாறாயினும், நாடகத்தின் இரகசியம் என்னவென்றால், எதையாவது செய்பவர்களே அதற்கான பலனைப் பெறுவார்கள். இதனாலேயே, பாப்தாதா நிச்சயமாக ஒத்துழைத்தாலும் குழந்தைகளான நீங்களே அதைச் செய்ய வேண்டும்.
சில குழந்தைகளுக்கு மிக நல்ல எண்ணங்கள் இருப்பதை பாப்தாதா பார்த்திருக்கிறார். அமிர்த வேளையில், பாப்தாதா மிக நல்ல எண்ணங்களின் பலப்பல மாலைகளைப் பெறுகிறார். ‘நான் இதைச் செய்வேன், நான் அதைச் செய்வேன், நான் அதையும் செய்வேன்.......’ பாப்தாதாவும் மகிழ்கிறார்: ஆஹா! குழந்தைகளே, ஆஹா! அப்படி என்றால், அதைச் செய்வது என்று வரும்போது, நீங்கள் ஏன் பலவீனம் அடைகிறீர்கள்? அதற்கான காரணம், பிராமணக் குடும்பத்தின் ஒன்றுகூடலின் சூழலே எனக் காணப்படுகிறது. சிலவற்றில், சூழல் பலவீனமாக உள்ளது, அது விரைவில் உங்களைப் பாதிக்கிறது. அவர்களின் மொழி என்னவென்று பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? அப்போது அவர்களின் மொழி மிகவும் இனிமையாக இருக்கும். ‘இது எல்லா வேளையும் நடக்கிறது, இது எப்படியோ நடக்கிறதுதானே...’ என்பதே அவர்களின் மொழி. இத்தகைய வேளையில் உங்களின் எண்ணங்கள் என்னவாக இருக்க வேண்டும்? ‘இது நடக்கிறது, இது தொடர்கிறது....’ என நீங்கள் நினைக்கும்போது, அது கவனயீனத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அந்த வேளையில், நீங்கள் அந்த மொழியை மாற்ற வேண்டும். ‘தந்தையின் கட்டளைகள் என்ன? தந்தை எதை விரும்புகிறார்? தந்தை விரும்புவது எதனை? தந்தை இதைச் சொன்னாரா? அவர் இதைச் செய்தாரா?’ நீங்கள் தந்தையை நினைக்கும்போது, கவனயீனம் முடிவடைகிறது. ஊக்கமும் உற்சாகமும் ஏற்படும். பல வகையான கவனயீனங்கள் உள்ளன. இதைப் பற்றி உங்களுக்கு இடையே வகுப்பு நடத்துங்கள். ஒரு பட்டியலை உருவாக்குங்கள். ஒன்று சாதாரணமான கவனயீனம். மற்றையது, இராஜரீகமான கவனயீனம். எனவே, கவனயீனம், உங்களில் திடசங்கற்பம் இருப்பதை அனுமதிக்காது. திடசங்கற்பமே வெற்றியின் அடிப்படை ஆகும். இதனாலேயே, அது உங்களின் எண்ணங்களில் இருக்கிறது, ஆனால் உங்களின் ரூபத்தில் வருவதில்லை.
எனவே, இன்று நீங்கள் எதைக் கேட்டீர்கள்? உங்களின் சத்தியங்கள் நினைவூட்டப்பட்டன, அப்படித்தானே? நீங்கள் மிக நல்ல சத்தியங்களைச் செய்கிறீர்கள். அந்தச் சத்தியங்களைக் கேட்கும்போது பாப்தாதாவே மகிழ்ச்சி அடைகிறார். எவ்வாறாயினும், நீங்கள் செய்யும் சத்தியங்களுக்கேற்ப அந்தளவு நன்மையை அடைவதில்லை. எனவே, இதையே பாப்தாதா விரும்புகிறார். பாப்தாதாவிற்கு என்ன வேண்டும் என நீங்கள் கேட்கிறீர்கள்தானே? இதையே பாப்தாதா விரும்புகிறார்: உரிய நேரத்திற்கு முன்னர் என்றும் தயார் ஆகுங்கள். காலம் உங்களின் அதிபதி ஆகக்கூடாது. நீங்களே காலத்தின் அதிபதிகள். ஆகவே, உரிய நேரத்திற்கு முன்னர் குழந்தைகளான நீங்கள் சம்பூரணம் அடைந்து, உலக மேடையில் தந்தையை வெளிப்படுத்த வேண்டும் என பாப்தாதா விரும்புகிறார்.
பாபாவைச் சந்திக்க வந்துள்ள புதிய குழந்தைகளே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! உங்களின் கைகளை உயரே உயர்த்துங்கள்! ஓகே. புதிய குழந்தைகளைப் பார்க்கும்போது பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார். பாக்கியசாலிக் குழந்தைகள் தமது பாக்கியத்தைப் பெறுவதற்காக இங்கே வந்துள்ளார்கள். ஆகவே, வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்! இப்போது, இங்கே வந்திருக்கும் புதிய குழந்தைகள் எல்லோரிலும் யார் அற்புதங்களைச் செய்வார்கள் எனப் பார்ப்போம். நீங்கள் பிந்தி வந்திருந்தாலும், நிச்சயமாக உங்களால் முன்னே செல்ல முடியும். பெறுபேறுகள் எல்லாமே பாப்தாதாவை வந்தடைகின்றன. அச்சா.
இரட்டை வெளிநாட்டவர்கள்: இரட்டை வெளிநாட்டவர்களான நீங்கள் உங்களிலும் அத்துடன் சேவையிலும் நல்ல கவனம் செலுத்துவது நல்லதே. எவ்வாறாயினும், அதனுடன் நீங்கள் சிறிதளவைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீங்கள் அதைக் கீழ்க்கோடிட வேண்டும். உங்களிடம் மாற்றத்திற்கான என்ன எண்ணம் இருந்தாலும் - நீங்கள் அதை நல்ல ஊக்கத்துடனும் உற்சாகத்துடனும் தைரியத்துடனும் செய்ய வேண்டும் - தொடர்ந்து இதைக் கீழ்க்கோடிடுங்கள்: நான் இதைச் செய்ய வேண்டும். நான் மாற வேண்டும். நான் என்னை மாற்ற வேண்டும், அத்துடன் உலகையும் மாற்ற வேண்டும். மீண்டும் மீண்டும் திடசங்கற்பம் என்பதைத் தொடர்ந்தும் கீழ்க்கோடிடுங்கள். எவ்வாறாயினும், மற்றும்படி பாப்தாதா மகிழ்ச்சி அடைகிறார்: விரிவாக்கம் இடம்பெறுகிறது. அத்துடன் சேவையிலும் உங்களிலும் கவனம் செலுத்தப்படுகிறது. எவ்வாறாயினும், முழுமையான கவனம் செலுத்தப்பட வேண்டும். கவனம் செலுத்துகிறீர்கள். ஆனாலும் இடையில் சிறிது பதட்டமும் ஏற்படுகிறது. அது நிச்சயமாக முடிக்கப்பட வேண்டும். எவ்வாறாயினும், உங்களுக்கு நல்ல தைரியம் உள்ளது. உங்களின் தைரியத்திற்குப் பாராட்டுக்கள். இங்கே தந்தையுடன் அமர்ந்திருக்கும் எல்லோருக்கும் உங்களின் தைரியத்திற்காகத் தந்தை பாராட்டுக்களைத் தெரிவிக்கிறார். கைதட்டுங்கள்! அச்சா.
நீங்கள் எல்லோரும் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள். ஆனால் தொலைவில் அமர்ந்திருக்கும் குழந்தைகளிடம் இருந்தும் பாப்தாதா அதிகளவு அன்பையும் நினைவுகளையும் பெறுகிறார். ஒவ்வொரு குழந்தையையும் தனது கண்களில் அமிழ்த்திய வண்ணம் பாப்தாதா ஒவ்வொருவருக்கும் தனது இதயபூர்வமாக அதிகளவு ஆசீர்வாதங்களையும் வழங்குகிறார். பாரதத்தில் இருந்தோ அல்லது வெளிநாடுகளில் இருந்தோ, பாபா குழந்தைகள் பலரிடம் இருந்தும் கடிதங்கள் மற்றும் ஈமெயில்கள் மூலம் நினைவுகளைப் பெற்றுக் கொண்டார். அவை அனைத்தும் பாபாவை வந்தடைந்துள்ளன. அச்சா.
நீங்கள் ஒரு விநாடியில் சரீரமற்றவர் ஆகுகின்ற அப்பியாசத்தைச் செய்வதை பாப்தாதா காண விரும்புகிறார். நீங்கள் இறுதியில் சித்தி அடைய விரும்பினால், இந்த அப்பியாசம் முற்றிலும் அத்தியாவசியமானது. ஆகவே, இத்தகைய பெரிய ஒன்றுகூடலில் அமர்ந்திருக்கும்போது, ஒரு விநாடியில் உங்களின் சரீர உணர்விற்கு அப்பாற்பட்ட ஸ்திதியில் ஸ்திரம் அடையுங்கள். எந்தவிதமான கவர்ச்சியும் உங்களைக் கவரக்கூடாது. (அப்பியாசம் செய்விக்கப்பட்டது) அச்சா.
எங்கும் உள்ள தீவிர முயற்சி செய்யும் குழந்தைகள் எல்லோருக்கும் சதா சுய மாற்றம் மற்றும் உலக மாற்றத்திற்கான சேவையில் ஈடுபட்டிருக்கும் சகல விசேடமான ஆத்மாக்களுக்கும் தந்தை பிரம்மாவைப் போல் சதா கர்ம யோகிகளாக இருந்து, எந்தவிதமான கர்மத்தின் கவர்ச்சியில் இருந்தும் பௌதீக அங்கங்களின் கவர்ச்சியில் இருந்தும் விடுபட்டிருக்கும் ஆத்மாக்கள் எல்லோருக்கும் தந்தைக்கு நெருக்கமாகவும் சமமாகவும் இருப்பதுடன் திடசங்கற்பத்துடன் தமது ஒவ்வோர் எண்ணத்தையும் வார்த்தையையும் நடைமுறையில் இடுகின்ற குழந்தைகளுக்கும் தயவுசெய்து பாப்தாதாவின் இதயத்தில் இருந்து ஆசீர்வாதங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். அத்துடன் இதயபூர்வமான அன்பையும் நினைவுகளையும் நமஸ்காரங்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்.
தாதிஜியிடம்: நீங்கள் ஆரோக்கியமானவர்கள் ஆகியுள்ளீர்கள். இப்போது நோய் போய்விட்டது. மகாராத்திகளிடம் விடை பெறுவதற்காகவே நோய்கள் வருகின்றன. நீங்கள் கர்மாதீத் ஆகுவதற்காக உள்ளார்த்தமாக ஒத்திகை பார்க்கிறீர்கள். (தாதிஜி ஒரு கவலையற்ற சக்கரவர்த்தி என தாதி ஜான்கி கூறினார்.)
உங்களுக்கு ஏதாவது கவலைகள் உள்ளதா? நீங்களும் கவலையற்றவரே. இருவரும் மிக நல்ல பாகங்களை நடிக்கிறீர்கள். பாருங்கள், நீங்கள் சகல பொறுப்புகளிலும் மிகப் பெரிய பொறுப்புக் கிரீடத்தை அணிவதற்குக் கருவி ஆகியுள்ளீர்கள். இவர்கள் அனைவரும் உங்களின் சகபாடிகள். உங்கள் எல்லோரையும் பார்க்கும்போது, அவர்களுக்கும் ஊக்கமும் உற்சாகமும் ஏற்படுகிறது. (இப்போது நாங்கள் என்ன புதிய விடயங்களைச் செய்யப் போகிறோம்? பாபா சில தூண்டுதல்களைக் கொடுக்க வேண்டும்) ஒவ்வொரு தொழிலைச் சேர்ந்தவர்களின் ஒரு பூங்கொத்து வரவேண்டும், அது மைக்காகவும் இருக்க வேண்டும், சக்தியையும் கொண்டிருக்க வேண்டும் என பாப்தாதா உங்களுக்குக் கூறியுள்ளார். யாராவது ஒருவர் மைக்காகவும் தொடர்பிலும் இருப்பவராக மட்டுமன்றி, அவர் நெருங்கிய உறவுமுறையிலும் இருக்க வேண்டும். இத்தகைய பூங்கொத்தை வெளிப்படுத்துங்கள். அப்போது அந்தக் குழுவானது சேவை செய்வதற்குக் கருவி ஆகிவிடும். அவர்கள் மைக் ஆகுவார்கள், நீங்கள் சக்தி (மைற்) ஆகுவீர்கள். அவர்களின் இதயங்களில் இருந்து ‘பாபா’ என்பது வெளிப்படும்போது, அதனால் ஒரு விளைவு ஏற்படும். அவர்களை நெருங்கிய உறவுமுறையில் கொண்டு வாருங்கள். நீங்கள் சிலவேளைகளில் மட்டுமே அவர்களுடன் தொடர்பில் இருக்கிறீர்கள். அதனால் அவர்களின் போதை சிறிது குறைவடைகிறது. எப்போது எல்லாம் சாத்தியமோ, அப்போது ஏதாவது தொடர்பும் உறவுமுறையும் இருக்க வேண்டும். அது நன்றாக இருக்கும். அச்சா.
ஆசீர்வாதம்:
நீங்கள் சதா மேன்மையான, புதிய வகையான சேவையைச் செய்வதன் மூலம் இலகுவான சேவையாளராகி வளர்ச்சியை ஏற்படுத்துவீர்களாக.உங்களின் எண்ணங்களால் இறை சேவையைச் செய்வதென்பது, சேவை செய்வதில் புதிய மற்றும் மேன்மையான வழிமுறையாகும். ஒரு நகைவியாபாரி தனது இரத்தினங்கள் சுத்தமாக இருக்கின்றனவா, அவை ஜொலிக்கின்றனவா, சரியாக வைக்கப்பட்டுள்ளனவா என ஒவ்வொரு நாளும் சோதிப்பார். அதேபோல், ஒவ்வொரு நாளும் அமிர்தவேளையில் உங்களின் மனதில் உங்களுடன் தொடர்பில் வருகின்ற ஆத்மாக்களுக்கு உங்களின் எண்ணங்களின் பார்வையைச் செலுத்துங்கள். எந்தளவிற்கு அதிகமாக உங்களின் எண்ணங்களில் அவர்களை நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்தளவிற்கு உங்களின் எண்ணங்கள் அவர்களைச் சென்றடையும். இந்த முறையில் புதிய வகையான சேவையைச் செய்வதன் மூலம், நீங்கள் தொடர்ந்து வளர்ச்சியை ஏற்படுத்துவீர்கள். உங்களின் இலகு யோகத்தின் சூட்சுமமான சக்தி இயல்பாகவே ஆத்மாக்களை உங்களை நோக்கிக் கவரும்.
சுலோகம்:
சாக்குப் போக்குகள் சொல்லும் விளையாட்டை மறையச் செய்து, எல்லையற்ற மனோபாவத்தை வெளிப்படச் செய்யுங்கள்.அவ்யக்த சமிக்கை: ஆத்ம உணர்வு ஸ்திதியைப் பயிற்சி செய்யுங்கள், அகநோக்கில் இருங்கள்.
இந்த ஞானத்தைக் கடைவதுடன் கூடவே, நல்லாசிகளினதும் தூய உணர்வுகளினதும் எண்ணங்களைக் கொண்டிருப்பதையும் சகாஷ் வழங்குவதையும் மட்டும் பயிற்சி செய்வதன் மூலம் மனதின் மௌனத்தை அல்லது மனதின் எண்ணக்கட்டுப்பாட்டு வேளையைக் கொண்டிருப்பதற்கு ஒரு நாளை நிச்சயம் செய்யுங்கள். உங்களின் அகநோக்கு என்ற அறையில் அமர்ந்திருந்து எந்தளவிற்கு அதிகமாக ஆராய்ச்சி செய்கிறீர்களோ, அந்தளவிற்கு எல்லாவற்றிலும் சிறந்த அதிகமான தொடுகைகளை நீங்கள் பெறுவீர்கள். இந்தத் தொடுகைகளின் மூலம் ஆத்மாக்கள் பலரும் நன்மை பெறுவார்கள்.
அறிவித்தல்: இன்று மாதத்தின் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. சர்வதேச யோகா தினம். இதில் சகல சகோதரர்களும் சகோதரிகளும் ஒன்றுசேர்ந்து, மாலை 6.30 இலிருந்து 7.30 வரை யோகாவில் அமர்ந்திருந்து இதை அனுபவம் செய்யுங்கள்: நான் நெற்றியின் ஆசனத்தில் இறை சக்திகளால் நிரம்பியவராக, அதிமேன்மையான இராஜயோகி ஆத்மாவாக, பௌதீகப் புலன்களை வென்றவராகவும் பாவச் செயல்களை வென்றவராகவும் அமர்ந்திருக்கிறேன். நாள் முழுவதும் இந்த சுயமரியாதையைப் பேணுங்கள்: நான் கல்பம் முழுவதிலும் கதாநாயக பாகத்தை நடிக்கும் அதிமேன்மையான, மகாத்மா.