16.03.26        Morning Tamil Lanka Murli        Om Shanti         BapDada        Madhuban


சாராம்சம்: இனிய குழந்தைகளே, நீங்கள் சற்கதிக்கான தனித்துவமான வழிகாட்டல்களைப் பெற்று விட்டீர்கள்: “சரீர சமயங்கள் அனைத்தையும் துறந்து ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்!”

கேள்வி:
கடவுள் பெயருக்கும், ரூபத்துக்கும் அப்பாற்பட்டவர் எனக் கூறுபவர்களிடம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி என்ன?

பதில்:
அவர்களிடம் கேளுங்கள்: கீதையில், அர்ச்சுனன் ஒரு முடிவற்ற ஒளியின் காட்சியைக் கண்டதாகவும், அவனால் அதைத் தாங்கிக்கொள்ள இயலாமல் இருந்ததால், அதை நிறுத்துமாறு வேண்டியதாகவும் கூறப்படுகிறது. ஆகவே, எவ்வாறு கடவுளால் பெயருக்கும், ரூபத்துக்கும் அப்பாற்பட்டிருக்க முடியும்? பாபா கூறுகிறார்: நான் உங்கள் தந்தை. தனது தந்தையின் ரூபத்தைப் பார்ப்பதில் ஒரு குழந்தை மகிழ்ச்சி அடைவார். அதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என எவ்வாறு அவரால் கூற முடியும்?

பாடல்:
கடவுள் உங்கள் வாசற்கதவில் நிற்கிறார். ஓ பக்தரே, உங்கள் புத்தியை நிரப்புங்கள்!

ஓம் சாந்தி.
“நாங்கள் மிகவும் ஏழைகள் ஆகிவிட்டோம். ஓ பாபா, எங்கள் அனைவருடைய புத்தியையும் நிரப்புங்கள்!” எனப் பக்தர்கள் பாடுகிறார்கள். பக்தர்கள் தொடர்ந்தும் பிறவிபிறவியாக இதைப் பாடுகிறார்கள். சத்தியயுகத்தில் பக்தி இல்லை. அங்கு தூய தேவர்களே இருக்கிறார்கள். பக்தர்களை ஒருபொழுதும் தேவர்கள் அழைக்க முடியாது. மறுபிறவி எடுத்த பின்னர், சுவர்க்கவாசிகளாக இருந்த தேவர்கள், நரகவாசிகளாகவும், வழிபடுபவர்களாகவும், பக்தர்களாகவும், ஏழைகளாகவும் ஆகிவிட்டார்கள். தந்தை இங்கே அமர்ந்திருந்து குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். எந்த ஒரு மனிதருக்கும் தந்தையைத் தெரியாது. தந்தை வரும்பொழுது மாத்திரமே, அவரால் தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்க முடியும். கடவுள் மாத்திரமே பாபா என்று அழைக்கப்படுகிறார். பக்தர்கள் அனைவரினதும் கடவுள் ஒருவரே இருக்கிறார். அனைவரும் பக்தர்கள் ஆவார்கள். கிறிஸ்துவ தேவாலயங்களுக்குச் செல்லும் மக்களும் நிச்சயமாகப் பக்தர்களே. இந்நேரத்தில் அனைவரும் தூய்மை அற்றவர்களும், தமோபிரதானானவர்களும் ஆவர். இதனாலேயே அவர்கள் அனைவரும் அழைக்கிறார்கள்: தூய்மை அற்றவர்களைத் தூய்மையாக்குபவரே, வாருங்கள்! ஓ பாபா, பக்தர்களாகிய எங்களின் புத்திகளை நிரப்புங்கள்! பக்தர்கள் கடவுளிடம் செல்வத்தை வேண்டுகிறார்கள். குழந்தைகளாகிய நீங்கள் எதனை வேண்டுகிறீர்கள்? நீங்கள் கூறுகிறீர்கள்: பாபா, எங்களைச் சுவர்க்க அதிபதிகளாக ஆக்குங்கள். அங்கு எல்லையற்ற செல்வம் இருக்கிறது; அங்கு வைரங்களும், இரத்தினங்களும் பதிக்கப்பட்ட மாளிகைகள் இருக்கின்றன. கடவுளிடம் இருந்து உங்கள் இராச்சியமாகிய ஆஸ்தியைப் பெற இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் இப்பொழுது அறிவீர்கள். இதுவே உண்மையான கீதை; அது கீதையல்ல. பக்தி மார்க்கத்துக்காக அவர்கள் அச்சமயநூல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார்கள். கடவுள் அவர்களுக்கு இந்த ஞானத்தைக் கொடுக்கவில்லை. உங்களைச் சாதாரண மனிதர்களில் இருந்து நாராயணனாக மாற்றுவதற்குக் கடவுள் உங்களுக்கு இந்நேரத்தில் இராஜயோகத்தைக் கற்பிக்கிறார். அரசருடன் நிச்சயமாகப் பிரஜைகளும் இருப்பார்கள்; அங்கு இலக்ஷ்மியும் நாராயணனும் மாத்திரம் இருக்க மாட்டார்கள்; அங்கு முழு இராச்சியமும் இருக்கும். கடவுள் யார் என்பதை இப்பொழுது குழந்தைகளாகிய நீங்கள் புரிந்து கொள்கிறீர்கள். வேறெந்த மனிதர்களும் அவரை அறியார்கள். தந்தை கூறுகிறார்: நீங்கள் தந்தையாகிய, கடவுளைப் பற்றிப் பேசுகிறீர்கள். ஆகவே எனக்குக் கூறுங்கள், உங்கள் தந்தையாகிய கடவுளின் பெயர், ரூபம், தேசம், காலநேரம், என்ன? அவர்கள் கடவுளையோ அல்லது அவருடைய படைப்பையோ அறியார்கள். தந்தை வந்து கூறுகிறார்: நான் ஒவ்வொரு கல்பத்திலும் சங்கமயுகத்தில் வருகிறேன். படைப்பவராகிய நான் மாத்திரமே, வந்து உங்களுக்குப் படைப்பின் ஆரம்பம், மத்தி, இறுதியின் இரகசியங்களைக் கூறுகிறேன். அவர் பெயருக்கும் ரூபத்துக்கும் அப்பாற்பட்டவர் எனவும், ஆகவே அவரால் வரமுடியாது எனவும் மக்களிற் சிலர் கூறுகிறார்கள். தந்தை வந்து விட்டார் என்பதை நீங்கள் அறிவீர்கள். அசரீரியான சிவனின் பிறந்தநாள் நினைவு கூரப்படுகிறது, கிருஷ்ணரின் பிறந்தநாளும் நினைவு கூரப்படுகிறது. கிறிஸ்து எப்பொழுது பிறப்பெடுத்தார் எனவும், அவர் எப்பொழுது அச்சமயத்தை ஸ்தாபித்தார் எனவும் கிறிஸ்துவர்கள் அறிந்துள்ளதைப் போன்றே, சிவனின் பிறந்தநாள் எப்பொழுது என்பதையும் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். இது பாரதத்தையே குறிப்பிடுகிறது. பாரதத்தின் புத்தியைக் கடவுள் எப்பொழுது நிரப்புகிறார்? பக்தர்கள் அழைக்கிறார்கள்: ஓ கடவுளே, எங்கள் புத்திகளை நிரப்புங்கள்! எங்களைச் சற்கதிக்குள் எடுத்துச் செல்லுங்கள், ஏனெனில் நாங்கள் சீரழிந்தவர்களாகவும் தமோபிரதானாகவும் இருக்கிறோம். ஆத்மாக்கள் தங்களுடைய சரீரங்களினூடாக அனைத்தையும் அனுபவம் செய்கிறார்கள். ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என மக்கள், சாதுக்கள், புனிதர்கள் போன்றோர் கூறுகிறார்கள். ஒவ்வோர் ஆத்மாவிலும் நல்ல, தீய சம்ஸ்காரங்கள் உள்ளன என அவர்கள் கூறுகிறார்கள். இதன் அடிப்படையிலேயே ஆத்மாக்கள் பிறப்பு எடுக்கிறார்கள். பின்னர் ஆத்மாக்கள் செயல்களின் தாக்கத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என அவர்கள் கூறுகிறார்கள். இதை விளங்கப்படுத்தக்கூடிய ஒரு புத்திசாலி நபரேனும் இல்லை. இதைப் பற்றிய எண்ணற்ற அபிப்பிராயங்களும் உள்ளன. தங்கள் வீட்டுடனும், குடும்பத்துடனும் முகங்கோணுபவர்கள் சென்று சமயநூல்களை உருவாக்குகிறார்கள். ஒரேயொரு ஸ்ரீமத் பகவத் கீதா மாத்திரமே உள்ளது. வியாசரால் எழுதப்படும் சுலோகங்கள் (வாசகங்கள்) கடவுளால் பேசப்பட்டவை அல்ல. ஞானக்கடலான, அசரீரியான கடவுள் இங்கே அமர்ந்திருந்து, கடவுள் ஒருவரே என்பதைக் குழந்தைகளாகிய உங்களுக்கு விளங்கப்படுத்துகிறார். பாரத மக்கள் இதை அறியார்கள். கடவுளின் வழிமுறைகள் தனித்துவமானவை என்று அவர்கள் பாடுகிறார்கள். அச்சா, எவ்வழிமுறை தனித்துவமானது? கடவுளின் வழிமுறைகள் தனித்துவமானவை எனக் கூறியவர் யார்? ஆத்மாவே இதைக் கூறுகிறார். சற்கதிக்காக அவர் கொடுக்கின்ற வழிகாட்டல்களே, ஸ்ரீமத் என்று அழைக்கப்படுகின்றன. நான் வந்து உங்களுக்கு ஒவ்வொரு கல்பத்திலும் கூறுகிறேன்: மன்மனாபவ! சரீர சமயங்கள் அனைத்தையும் துறந்து, ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுங்கள்! சதா என்னை மாத்திரம் நினைவு செய்யுங்கள்! நீங்கள் இப்பொழுது மனிதர்களில் இருந்து தேவர்களாக ஆகுகிறீர்கள். இலக்ஷ்மியும் நாராயணனுமாக ஆகுவதே இந்த இராஜயோகத்தின் இலக்கும், குறிக்கோளும் ஆகும். கற்பதனால் நீங்கள் ஓர் அரசராக ஆக முடிகின்ற வேறேந்தப் பாடசாலையும் கிடையாது. கீதையில் மாத்திரம் கூறப்படுகிறது: நான் குழந்தைகளாகிய உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். அரசர்கள் எவருக்கும் எந்த இராச்சியமும் இல்லாத பொழுது மாத்திரமே நான் வருகிறேன். ஒரு மனிதர் கூட முற்றாகவே என்னை அறிய மாட்டார்கள். பாபா கூறுகிறார்: குழந்தைகளாகிய நீங்கள் உருவாக்கியுள்ள பெரிய சிவலிங்கம் என்னுடைய ரூபம் அல்ல. கடவுள் ஓர் அநாதியான, முடிவற்ற ஒளி எனவும், அவர் மிகவும் பிரகாசமானவர் எனவும் மக்கள் கூறுகிறார்கள். அர்ச்சுனன் இதைப் பார்த்துக் கூறினான்: அதை நிறுத்துங்கள்! என்னால் அதை மேலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை! ஓ! ஆனால் ஒரு குழந்தை தனது தந்தையைப் பார்க்கும் பொழுது, தன்னால் அவருடைய ரூபத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை எனக் கூறுவது எவ்வாறு சாத்தியமாகும்? தனது தந்தையைப் பார்ப்பதில் ஒரு குழந்தை சந்தோஷப்படுவார், இல்லையா? தந்தை கூறுகிறார்: எனக்கு அத்தகையதொரு ரூபம் கிடையாது. நானே பரமதந்தை, அதாவது, நானே அப்பால் வசிக்கும் பரமாத்மாவாகிய கடவுள் ஆவேன். கடவுளே மனித உலக விருட்சத்தின் விதை என்பதும் நினைவு கூரப்பட்டுள்ளது. பக்தர்கள் அவரைப் புகழ்கிறார்கள்! சத்திய, திரேதா யுகங்களில் எவரும் அவரைப் புகழ்வதில்லை, ஏனெனில் அங்கு சந்தோஷம் உள்ளது. துன்பவேளையின் பொழுதே, அனைவரும் கடவுளை நினைவு செய்கிறார்கள் எனவும், எவரும் அவரைச் சந்தோஷ வேளையின் பொழுது நினைவு செய்வதில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மக்கள் இதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதில்லை. அவர்கள் தொடர்ந்தும் அதைக் கிளிகளைப் போன்று மீண்டும் மீண்டும் கூறுகிறார்கள்! அங்கு எப்பொழுது சந்தோஷம் உள்ளது? அங்கு எப்பொழுது துன்பம் உள்ளது? இது பாரதத்தைப் பற்றிய விடயமாகும். 5000 வருடங்களுக்கு முன்னர் அது சுவர்க்கமாக இருந்தது, பின்னர் அது திரேதா யுகத்தில் இரு கலைகளால் குறைவடைந்தது. சத்திய, திரேதா யுகங்களில் துன்பத்தின் குறிப்பே கிடையாது. அது சந்தோஷ தாமம் ஆகும். “சுவர்க்கம்” எனக் கூறுவதனால், உங்கள் வாய் இனிப்பூட்டப்படுகிறது. சுவர்க்கத்தில் எவ்வாறு துன்பம் இருக்க முடியும்? அங்கு கம்சன், ஜராசந்தன் போன்ற அசுரர்கள் இருந்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது, ஆனால் அது சாத்தியமல்ல. தீவிர பக்தி செய்வதனால், தாங்கள் காட்சிகளைக் காண்பார்கள் எனவும், கடவுளின் ஒரு காட்சியைக் காண்பது என்றால் கடவுளைச் சந்திப்பதாகும் எனவும் பக்தர்கள் நம்புகிறார்கள். அவர்கள் இலக்ஷ்மியை வழிபட்டு, அவருடைய ஒரு காட்சியைக் காணும்பொழுது, தாங்கள் அனைத்தையும் அடைந்து விட்டார்கள் என்று நம்புகின்றார்கள், அதனால் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள். எவ்வாறாயினும், அது ஒன்றுமே இல்லை! அவர்கள் தற்காலிகச் சந்தோஷத்தை மாத்திரம் பெறுகிறார்கள். அவர்களுக்கு ஒரு காட்சி கிடைத்தது, அவ்வளவு தான்! அவர்கள் முக்தியையோ அல்லது ஜீவன்முக்தியையோ பெற்றார்கள் என்பதல்ல் முற்றிலும் இல்லை. பாபா ஏணியைப் பற்றியும், எவ்வாறு பாரதம் அதிமேன்மையாக இருக்கிறது எனவும் விளங்கப்படுத்தி உள்ளார். கடவுளும் அதிமேன்மையானவர். இலக்ஷ்மியும் நாராயணனுமே பாரதத்தில் அதியுயர்ந்த ஆஸ்தியைப் பெற்றவர்களாக இருந்தார்கள். அது சுவர்க்கமாக இருந்த பொழுது, அனைவரும் சதோபிரதானாக இருந்தார்கள். பின்னர், கலியுக இறுதியில், அனைவரும் தமோபிரதானாக இருக்கிறார்கள். தாங்கள் முழுமையாகவே தூய்மை அற்றவர்களாக ஆகிவிட்டார்கள் என அவர்கள் அழைக்கிறார்கள். தந்தை கூறுகிறார்: நான் சக்கரத்தின் சங்கமயுகத்தில் உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிப்பதற்கு வருகிறேன். என்னை மிகச்சரியாக நானாகவோ, நான் எவ்வாறு இருக்கிறேன் எனவோ எவரும் அறிய மாட்டார்கள். உங்கள் மத்தியிலும், நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கேற்ப, வரிசைக்கிரமமாகவே, நீங்கள் என்னை அறிகிறீர்கள். அவர்களுக்கு ஏணியின் படத்தைக் காண்பியுங்கள். இதுவே பாரதத்தின் ஏணியாகும். சத்தியயுகத்தில் தேவர்கள் இருந்தார்கள். 5000 வருடங்களுக்கு முன்னர் பாரதம் அவ்வாறு இருந்தது. சமயநூல்களில், ஒவ்வொரு சக்கரத்தின் கால எல்லையை அவர்கள் நூறாயிரக்கணக்கான வருடங்கள் எனக் காட்டி உள்ளார்கள். தந்தை கூறுகிறார்: அது நூறாயிரக்கணக்கான வருடங்கள் அல்ல, 5000 வருடங்கள் மாத்திரமேயாகும். சத்திய, திரேதா யுகங்கள் புதிய உலகமும், துவாபர, கலியுகங்கள் பழைய உலகமும் ஆகும்; அது அரைக்கு அரைவாசியாகும். பாரத மக்களாகிய நீங்கள் புதிய உலகில் வசித்தீர்கள். தந்தை விளங்கப்படுத்துகிறார்: இனிய குழந்தைகளே, நீங்கள் இப்பொழுது உங்கள் பிறவிகளை அறிவீர்கள், ஆனால் அங்கு ஓர் இரதம் போன்றவற்றைப் பற்றிய குறிப்பு ஏதும் கிடையாது. கிருஷ்ணர் சத்தியயுகத்தின் ஓர் இளவரசர். கிருஷ்ணரின் அதே ரூபத்தை ஒரு தெய்வீகக் காட்சி இன்றிக் காண முடியாது. அவர் சத்தியயுகத்தில் உயிருள்ள ரூபத்தில் இருந்தார்; அவருக்கு வேறெந்த நேரத்திலும் அந்த அதே ரூபம் மீண்டும் இருக்க முடியாது. அவருடைய பெயர், ரூபம், தேசம், காலநேரம் என்பவை மாறுகின்றன. அவர் 84 பிறவிகளை எடுக்கிறார். 84 பிறவிகளில், அவர் 84 பெற்றோர்களைப் பெறுகிறார். அவருக்கு வேறுபட்ட பெயர்கள், ரூபங்கள், தொழில்கள் உள்ளன. இது பாரதத்துக்கான ஏணி மாத்திரமே. நீங்கள் இப்பொழுது பிராமணக் குலத்தின் அலங்காரங்கள். முன்னைய கல்பத்திலும் தந்தை உங்களைத் தேவர்களாக ஆக்கினார். நீங்கள் அங்கு அதிமேன்மையான செயல்களைப் புரிந்தீர்கள். நீங்கள் 21 பிறவிகளுக்குச் சதா சந்தோஷமாக இருந்தீர்கள். பின்னர் யார் உங்களைச் சீரழிவிற்குள் அழைத்து வந்தார்? நான் உங்களுக்கு முன்னைய கல்பத்திலும் சற்கதியை அருளினேன், பின்னர் 84 பிறவிகளை எடுக்கையில், நீங்கள் நிச்சயமாகக் கீழே வரவேண்டி இருந்தது. நீங்கள் சூரிய வம்சத்தில் எட்டுப் பிறவிகளையும், சந்திர வம்சத்தில் 12 பிறவிகளையும் எடுத்தீர்கள், தொடர்ந்தும் இவ்வழியில் கீழே வந்தீர்கள். நீங்கள் வழிபடத் தகுதிவாய்ந்த தேவர்களாக இருந்தீர்கள், நீங்கள் இப்பொழுது வழிபடுபவர்கள் ஆகிவிட்டீர்கள். பாரதம் இப்பொழுது ஏழையாகி விட்டது. கடவுள் பேசுகிறார்: நீங்கள் 100% தூய்மையாகவும், செழிப்பாகவும், சதா ஆரோக்கியமானவர்களாகவும், சதா செல்வந்தர்களாகவும் இருந்தீர்கள். அங்கு நோய் அல்லது துன்பத்தைப் பற்றிய குறிப்பே கிடையாது. அது சந்தோஷ தாமமாக இருந்தது. அது அல்லாவின் பூந்தோட்டம் என அழைக்கப்பட்டது. கடவுள் பூந்தோட்டத்தை ஸ்தாபித்தார். தேவர்களாக இருந்தவர்கள், இப்பொழுது முட்களாக ஆகிவிட்டார்கள். அது இப்பொழுது ஒரு முட்காடு ஆகிவிட்டது. ஒரு காட்டில் உங்களை முட்கள் குத்துகின்றன. தந்தை கூறுகிறார்: காமமே கொடிய எதிரி; அதை வெற்றி கொள்ளுங்கள்! அது ஆரம்பித்த காலத்திலிருந்து, மத்தியினூடாக, இறுதிவரைக்கும் உங்களுக்குத் துன்பத்தையே கொடுத்துள்ளது. ஒருவர் மீது ஒருவர் காம வாளைப் பயன்படுத்துவதே, மகத்தான பாவமாகும். தந்தை இங்கே அமர்ந்திருந்து தனது சொந்த அறிமுகத்தைக் கொடுக்கிறார்: நானே பரந்தாமத்தில் வசிக்கின்ற பரமாத்மா ஆவேன். நான் உலகின் விதை எனவும், பரமாத்மாவாகிய அனைவரினதும் தந்தை எனவும் அழைக்கப்படுகிறேன். ஆத்மாக்கள் அனைவரும் தந்தையை அழைக்கிறார்கள்: ஓ பரமாத்மாவாகிய பரமதந்தையே! ஆத்மாக்களாகிய நீங்கள் நட்சத்திரங்களைப் போல் இருப்பதைப் போன்றே, பரமாத்மாவாகிய பாபாவும், ஒரு நட்சத்திரம் ஆவார். அவர் சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ இருப்பதில்லை. தந்தை கூறுகிறார்: நான் பெருவிரல் உருவத்தை உடையவர் அல்ல. நானே ஆத்மாக்களாகிய உங்கள் அனைவரினதும் தந்தையாகிய பரமாத்மா ஆவேன். அவர் ஞானம்-நிறைந்தவரான பரமாத்மா என அழைக்கப்படுகிறார். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நானே ஞானம்-நிறைந்தவரும், மனித உலக விருட்சத்தின் விதையும் ஆவேன். நானே பரமாத்மாவாகிய, கடவுளான, சத்தியமும், உணர்வுள்ளவரும், பேரானந்த சொரூபமும், ஞானக்கடலும், சந்தோஷக்கடலும் ஆவேன். அதிகளவு புகழ் உள்ளது! பெயர், ரூபம், தேசம், காலநேரம் இல்லாதுவிடின், அவர்கள் யாரை அழைப்பார்கள்? சாதுக்களும், புனிதர்களும் உங்களுக்குப் பக்தி மார்க்கத்தின் சமயநூல்களைக் கூறுகிறார்கள். நான் வந்து உங்களுக்கு இராஜயோகத்தைக் கற்பிக்கிறேன். தந்தை விளங்கப்படுத்துகிறார்: நீங்கள் என்னைத் தூய்மையாக்குபவராகிய, ஞானக்கடல் என்று அழைக்கிறீர்கள். நீங்கள் மாஸ்டர் ஞானக்கடல்கள் ஆகுகிறீர்கள். நீங்கள் ஞானத்தினூடாகச் சற்கதியையும் பெறுகிறீர்கள். தந்தை மாத்திரமே பாரதத்துக்குச் சற்கதியை அருள்கிறார். ஒரேயொருவரே அனைவருக்கும் சற்கதியை அருள்பவர். அனைவரையும் சீரழிந்தவர்கள் ஆக்குபவர் யார்? இராவணன்! யார் உங்களுக்கு இவை அனைத்தையும் விளங்கப்படுத்துபவர்? பரமாத்மாவே ஆவார். ஓர் ஆத்மா மிகவும் சூட்சுமமானவரும், ஒரு நட்சத்திரம் போன்றவரும் ஆவார். கடவுளும் நாடகத்தில் ஒரு பாகத்தை நடிக்கிறார். அவரே படைப்பவரும், இயக்குனரும், பிரதான நடிகரும் ஆவார். யார் அதிமேன்மையான நடிகர் எனத் தந்தை விளங்கப்படுத்துகிறார். அவரே ஆத்மாக்களாகிய நீங்கள் அனைவரும் யாருடன் வசிக்கின்றீர்களோ, அந்தக் கடவுளும், அதிமேன்மையானவரும் ஆவார். கடவுள் அனைவரையும் கீழே அனுப்புகிறார் என்று அவர்கள் கூறுகிறார்கள். இதுவும் புரிந்து கொள்ளப்பட வேண்டியதொன்று. இந்த நாடகம் அநாதியாக, முற்கூட்டியே நிச்சயிக்கப்பட்டது. தந்தை கூறுகிறார்: நீங்கள் என்னை ஞானக்கடல் எனவும், முழு உலகினதும் ஆரம்பம், மத்தி, இறுதியை அறிந்தவரும் என்று அழைக்கிறீர்கள். இவர் வேதங்களையும், சமயநூல்களையும் கற்றவர் எனத் தந்தை அறிவார். தந்தை கூறுகிறார்: நான் உங்களுக்குச் சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தைப் பிரஜாபிதா பிரம்மாவினூடாகக் கூறுகிறேன். விஷ்ணுவின் தொப்பூள் கொடியிலிருந்து பிரம்மா வெளித்தோன்றியதாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. அவர் எங்கே வெளித் தோன்றினார்? இங்கு மனிதர்கள் நிச்சயமாக இருக்க வேண்டும். பிரம்மா அவருடைய தொப்பூள் கொடியிலிருந்து வெளிப்பட்டார், பின்னர் கடவுள் இங்கே அமர்ந்திருந்து உங்களுக்கு வேதங்கள், சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தை இவரினூடாக விளங்கப்படுத்தினார். தனது சொந்தப் பெயர், ரூபம், தேசம், காலநேரத்தைப் பற்றியும் அவர் உங்களுக்கு விளங்கப்படுத்தி உள்ளார். அவரே மனித உலக விருட்சத்தின் விதையாவார். எவ்வாறு இவ்விருட்சம் உருவாக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பின்னர் அழிக்கப்படுகிறது என்பதை எவரும் அறியார். இது பல்வகை விருட்சம் என அழைக்கப்படுகிறது. அவர்கள் அனைவரும் தங்களுக்குரிய நேரத்தில் வரிசைக்கிரமமாகக் கீழே வருகிறார்கள். நான் முதலாவதாகிய தேவ தர்மத்தை ஸ்தாபிக்கிறேன், ஏனெனில் அந்தத் தர்மம் இப்பொழுது இல்லை. தந்தை கூறுகிறார்: அனைவருடைய புத்தியும் மிகவும் சீரழிந்ததாக ஆகிவிட்டது. மக்கள் தேவர்களையும், இலக்ஷ்மி நாராயணனையும் வழிபடுகிறார்கள். ஆனால், இவ்வுலகில் அது எப்பொழுது அவர்களுடைய இராச்சியமாக இருந்தது என்பதைப் பற்றிய எதனையும் அவர்கள் அறியார்கள். பாரதத்தின் அந்தத் தேவ தர்மம் இப்பொழுது இல்லை; விக்கிரகங்கள் மாத்திரமே எஞ்சியுள்ளன. அச்சா.

இனிமையிலும் இனிமையான, அன்புக்குரிய, எப்போதோ தொலைந்து இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளுக்கு உங்கள் தாய், தந்தையாக இருக்கும் பாப்தாதாவின் அன்பும் நினைவுகளும் காலை வந்தனங்களும். ஆன்மீகத் தந்தை ஆன்மீகக் குழந்தைகளுக்கு நமஸ்தே சொல்கிறார்.

தாரணைக்கான சாராம்சம்:
1. மாஸ்டர் ஞானக்கடல்களாகி, தூய்மை அற்றதைத் தூய்மை ஆக்குகின்ற சேவை செய்யுங்கள். தந்தை உங்களுக்கு விளக்கியுள்ள சமயநூல்கள் அனைத்தினதும் சாராம்சத்தை நினைவுசெய்து, சதா முகமலர்ச்சியுடன் இருங்கள்.

2. ஒவ்வொரு கணத்திலும் ஒரேயொரு தந்தையின் ஸ்ரீமத்தைப் பின்பற்றுங்கள். சரீர சமயங்கள் அனைத்தையும் துறந்து ஆத்ம உணர்வு உடையவர்கள் ஆகுவதற்கு முயற்சி செய்யுங்கள்.

ஆசீர்வாதம்:
நீங்கள் விரிவாக்கம் அனைத்தையும் அதன் சாரத்திற்குள் அமிழ்த்தி, உங்களின் ஸ்திதியை மேன்மையான ஒளி மற்றும் சக்தி வீடாக ஆக்குவீர்களாக.

தந்தையைப் போல், ஒளி மற்றும் சக்தி வீடாக ஆகுவதற்கு, எந்தவொரு சூழ்நிலையையும் நீங்கள் பார்க்கும்போது அல்லது கேட்கும்போது, அதன் சாரத்தைப் புரிந்து கொண்டு, அதை ஒரு விநாடியில் அமிழ்த்துவதை அல்லது மாற்றுவதைப் பயிற்சி செய்யுங்கள். ஏன்? அல்லது என்ன? என்ற விரிவாக்கத்திற்குள் செல்லாதீர்கள். ஏனென்றால், எந்த வகையான விரிவாக்கத்திற்குள்ளும் செல்வதன் மூலம் சக்தியும் நேரமும் வீணாக்கப்படும். எனவே, விரிவாக்கங்கள் அனைத்தையும் அமிழ்த்தி, அதன் சாரம் என்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருப்பதைப் பயிற்சி செய்யுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம், உங்களால் ஆத்மாக்கள் பலரும் ஒரு விநாடியில் இந்த ஞானம் அனைத்தினதும் சாரத்தை அனுபவம் செய்ய வைக்க முடியும்.

சுலோகம்:
உங்களின் மனோபாவத்தைச் சக்திவாய்ந்தது ஆக்குங்கள், சேவை இயல்பாகவே அதிகரிக்கும்.

அவ்யக்த சமிக்ஞை: உங்கள் நம்பிக்கை என்ற அத்திவாரத்தை பலப்படுத்தி, சதா பயமற்றவராகவும் கவலையற்றவராகவும் இருங்கள்.

உங்களின் நம்பிக்கை அத்திவாரம் பலமானதாக இருக்கும்போது, இலகு யோகிகளான நீங்கள் தூய, மென்மையான சுபாவத்தையும் நல்லாசிகளின் மனோபாவத்தையும் ஆத்ம உணர்வுப் பார்வையையும் கொண்டிருப்பீர்கள். உங்களின் செயல்பாடுகளிலும் உங்களின் முகங்களிலும் ஒவ்வொரு கணமும் இலகுவான தன்மையின் பிரகாசம் அனுபவம் செய்யப்படும். எனவே, ஒவ்வொருவரின் சிறப்பியல்பையும் உங்களின் விழிப்புணர்வில் வைத்திருந்து, ஒருவரோடு ஒருவர் நம்பிக்கை உடையவராக இருங்கள். எந்தவொரு சூழ்நிலையிலும் உங்களின் நோக்கங்கள் எதிர்மறையாக இருந்தால், அவை மாறிவிடும்.