16.06.24    Avyakt Bapdada     Tamil Lanka Murli    03.03.20     Om Shanti     Madhuban


உங்களின் தூய, அன்பான உணர்வுகள் வெளிப்பட வேண்டும். அதனால் மிகப்பெரிய எதிரியான கோபத்தை வெல்லுங்கள்.


இன்று, பாப்தாதா தனது பிறந்தநாள் சகபாடிகளையும் அத்துடன் தனது சேவைச் சகபாடிகளையும் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். இன்று, நீங்கள் எல்லோரும் பாப்தாதாவின் அலௌகீகப் பிறந்தநாளின் சந்தோஷத்தையும் அவரின் பிறப்பின் சகபாடிகளின் பிறந்தநாளின் சந்தோஷத்தையும் இரசிக்கிறீர்கள். ஏன்? வேறு எவருமே இத்தகைய தனித்துவமான, அதியன்பான, அலௌகீகப் பிறந்தநாளைக் கொண்டாட முடியாது. தந்தையின் பிறந்தநாளும் குழந்தைகளின் பிறந்தநாளும் ஒன்றாக இருப்பதை நீங்கள் ஒருபோதும் கேட்டதில்லை. இன்று, நீங்கள் எல்லோருமே வைரம் போன்று பெறுமதிவாய்ந்த இந்தத் தனித்துவமான, அன்பான, அலௌகீகப் பிறந்தநாளைக் கொண்டாடுகிறீர்கள். இத்துடன்கூடவே, உங்கள் எல்லோருக்கும் இந்த அலௌகீகப் பிறந்தநாளின் தனித்துவத்தையும் அன்பையும் உணர்ந்தவராக இருக்கிறீர்கள். இது மிகவும் தனித்துவமானது. அதில், தந்தையான இறைவனே குழந்தைகளுடன் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பரமாத்மாவே மேன்மையான ஆத்மாக்களான குழந்தைகளின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பெயரளவில், உலகிலுள்ள பலரும் பரமாத்மாவான இறைவனே தங்களை உருவாக்கியவர் எனக் கூறுகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அது தெரியாது, அல்லது அவர்கள் அந்த உணர்வுடன் வாழ்வதும் இல்லை. நீங்கள் எல்லோரும் இறைவனின் குலத்தைச் சேர்ந்தவர்கள், பிராமண குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அனுபவத்தின் அடிப்படையில் பேசுகிறீர்கள். பரமாத்மா உங்களின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நீங்கள் இறைவனின் பிறந்தநாளைக் கொண்டாடுகிறீர்கள்.

நீங்கள் எல்லோரும் எங்கும் இருந்து இங்கே எதற்காக வந்துள்ளீர்கள்? வாழ்த்துக்களைத் தெரிவிக்கவும் வாழ்த்துக்களைப் பெறவும். ஆகவே, பாப்தாதா குறிப்பாகத் தனது பிறந்தநாள் சகபாடிகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கிறார். அத்துடன் அவர் தனது சேவைச்சகபாடிகளுக்கும் வாழ்த்துத் தெரிவிக்கிறார். உங்களை வாழ்த்துவதுடன் கூடவே, பாப்தாதா உங்களை அதியுயர்;ந்த அன்பெனும் முத்துக்களையும் வைரங்களையும் ஆபரணங்களையும் உங்கள் மீது பொழிகிறார். நீங்கள் அன்பு முத்துக்களைக் கண்டீர்கள்தானே? அன்பு முத்துக்கள் என்றால் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? ஏனையோர் மலர்களைப் பொழிகிறார்கள். தங்கத்தைப் பொழிகிறார்கள். ஆனால், பாப்தாதா உங்கள் எல்லோருக்கும் அதியுயர் அன்பை, அலௌகீக அன்பு முத்துக்களால் பொழிகிறார். பாப்தாதா உங்களை ஒரு மடங்கு மட்டும் வாழ்த்தவில்லை. ஆனால், அவர் இதயபூர்வமாகப் பல, பல, பல மில்லியன் மடங்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார். நீங்களும் உங்களின் இதயபூர்வமாக வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறீர்கள். அவையும் பாப்தாதாவை வந்தடைகின்றன. ஆகவே, இன்று கொண்டாட்டத்திற்குரிய நாளும் அத்துடன் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதற்கான நாளும் ஆகும். நீங்கள் எதையாவது கொண்டாடும்போது என்ன செய்வீர்கள்? இசை வாத்தியங்கள் முழங்கும். ஆகவே, பாப்தாதாவும் இசை வாத்தியக் கருவிகளையும் ஹார்மோனியங்களையும் உங்களின் மனதின் சந்தோஷப் பாடல்களையும் கேட்கிறார். பக்தர்கள் தொடர்ந்து அழைக்கிறார்கள். ஆனால் குழந்தைகளான நீங்களோ தந்தையின் அன்பிலே திளைத்திருக்கிறீர்கள். எப்படி அதில் திளைத்திருப்பது என்பது உங்களுக்குத் தெரியுமல்லவா? இவ்வாறு திளைத்திருப்பது உங்களைச் சமமானவர் ஆக்குகிறது.

பாப்தாதாவால் தன்னைக் குழந்தைகளிடமிருந்து பிரிந்திருக்க முடியாது. குழந்தைகளான நீங்களும் பிரிந்திருக்க விரும்புவதில்லை. ஆனால், சிலவேளைகளில் உங்களில் சிலர் மாயையின் விளையாட்டுக்களால் சிறிது அப்பால் நகர்ந்து விடுகிறீர்கள். பாப்தாதா கூறுகிறார்: நானே குழந்தைகளான உங்களின் ஆதாரம் ஆவேன். எவ்வாறாயினும், குழந்தைகள் குறும்புத்தனம் செய்கிறார்கள், அப்படித்தானே? மாயை அவர்களை விஷமத்தனம் செய்ய வைக்கிறாள்: நீங்கள் உண்மையில் அப்படிப்பட்டவர்கள் கிடையாது. ஆனால், மாயைதான் உங்களை அப்படி ஆக்கிவிடுகிறாள். அவள் உங்களை இந்த ஆதாரமானவரில் இருந்து அப்பால் நகரச் செய்கிறாள். அப்படியிருந்தும், பாப்தாதா உங்களின் ஆதாரம் ஆகுகிறார். அத்துடன் உங்களை அண்மையில் கொண்டுவருகிறார். பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோரையும் கேட்கிறார்: உங்களின் வாழ்க்கையில் உங்கள் ஒவ்வொருவருக்கும் என்ன தேவை? வெளிநாட்டவர்கள் இரண்டு விடயங்களை மிகவும் விரும்புவார்கள். இது வெளிநாட்டவர்களின் மிகவும் பிடித்தமான ஒரு வார்த்தை. அந்த இரண்டு வார்த்தைகளும் என்னவென்று பாபாவிற்குச் சொல்லுங்கள்! (சகபாடி, சகவாசம்). நீங்கள் இந்த இரண்டு வார்த்தைகளையும் விரும்புகிறீர்கள். உங்களுக்கு இது பிடித்திருந்தால், ஒரு கையை உயர்த்துங்கள். பாரத மக்கள் அவற்றை விரும்புகிறீர்களா? சகபாடி அவசியம். அத்துடன் சகவாசமும் அவசியம். உங்களால் உங்களின் சகபாடி இல்லாமல் இருக்க முடியாது. அத்துடன் சகவாசம் இல்லாமலும் இருக்க முடியாது. எனவே, நீங்கள் எல்லோரும் யாரைக் கண்டுபிடித்திருக்கிறீர்கள்? நீங்கள் உங்களின் சகபாடியைக் கண்டடைந்துள்ளீர்களா? ஹாஜி அல்லது நாஜி என்று சொல்லுங்கள். (ஹா ஜி). நீங்கள் சகவாசத்தைக் கண்டுவிட்டீர்களா? (ஹா ஜி). கல்பம் முழுவதிலும் இத்தகைய சகவாசத்தை அல்லது இத்தகையதொரு சகபாடியை நீங்கள் எப்போதாவது பெற்றிருப்பீர்களா? சென்ற கல்பத்தில் நீங்கள் அவற்றை அடைந்தீர்களா? அவர் ஒருபோதுமே அப்பால் செல்லாத ஒரு சகபாடி ஆவார். நீங்கள் எவ்வளவுதான் விஷமத்தனம் செய்தாலும், அவர் உங்களின் ஆதாரமாகவே இருக்கிறார். அவர் உங்களின் இதயத்தின் ஆசைகளையும் நிறைவேற்றி, உங்களைச் சகல பேறுகளாலும் நிரம்பியவர்கள் ஆக்குகிறார். ஏதாவது பேறு குறைகிறதா? எல்லோருடைய இதயமும் உண்மையில் ஆம் என்று சொல்கிறதா? அல்லது ஒரு ஒழுங்குமுறைக்காக ஆம் என்று வெறுமனே சொல்கிறீர்களா? ‘நாம் விரும்பிய அனைத்தையும் அடைந்துவிட்டோம்’ என நீங்கள் பாடுகிறீர்கள். அல்லது, நீங்கள் இன்னமும் அதை அடைய வேண்டியுள்ளதா? நீங்கள் அதை அடைந்துவிட்டீர்களா? நீங்கள் எதையாவது இன்னமும் அடைய வேண்டியுள்ளதா? அல்லது, உங்களுக்குள் இன்னமும் சிறிது ஆசைகள் எஞ்சியுள்ளனவா? உங்களின் ஆசைகள் எல்லாமே பூர்த்தியாகிவிட்டதா? அல்லது இன்னமும் சிறிது எஞ்சியுள்ளதா? ஏதாவது எஞ்சியுள்ளதா? சில ஆசைகள் இன்னமும் இருக்கின்றன என்றே பாப்தாதா கூறுகிறார். (தந்தையை வெளிப்படுத்தும் ஆசை இன்னமும் எஞ்சியுள்ளது). தந்தை வந்துள்ளார் என்பதைக் குழந்தைகள் எல்லோரும் அறிய வேண்டும் என்பது தந்தையின் ஆசையாகும். தந்தை வந்துள்ளார். சில குழந்தைகள் விடுபட்டுள்ளார்கள். இதனாலேயே, குறைந்தபட்சம் எல்லோருமே தமது என்றுமுள்ள அநாதியான தந்தை வந்துள்ளார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பது பாப்தாதாவின் விசேடமான ஆசையாகும். எவ்வாறாயினும், குழந்தைகளுக்கு அன்பினால் ஆசைகள் உள்ளன. எஞ்சியுள்ள எல்லைக்குட்பட்ட ஆசைகள் நிறைவேறுகின்றன. ஆனால் அன்பினால் ஏற்பட்டுள்ள அவர்களின் ஆசைகள் இன்னமும் எஞ்சியுள்ளன. நீங்கள் ஒவ்வொருவரும் மேடையில் வர விரும்புகிறீர்கள். உங்களுக்கு இந்த ஆசை உள்ளதா? (இப்போது, பாபாவே எல்லோரிடமும் வருகிறார்). இந்த ஆசையும் நிறைவேறிவிட்டதா? நீங்கள் திருப்தியான ஆத்மாக்கள். பாராட்டுக்கள். ஏனென்றால் குழந்தைகளான நீங்கள் எல்லோரும் புத்திசாலிகள். காலத்திற்கேற்ப, நீங்கள் உங்களின் ரூபத்தை அதேபோன்று ஆக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டுள்ளீர்கள். இதனாலேயே, பாப்தாதாவும் நாடகத்தின் பந்தனங்களில் கட்டுப்பட்டுள்ளார், அப்படித்தானே? ஆகவே, குழந்தைகளான நீங்கள் எல்லோரும் காலத்திற்கேற்ப, சதா திருப்தியாக இருக்கிறீர்கள். அத்துடன் நீங்கள் சதா திருப்தி இரத்தினமாகப் பிரகாசிக்கிறீர்கள். ஏன்? நீங்களே சொல்கிறீர்கள்: நாம் விரும்பிய எல்லாவற்றையும் நாம் அடைந்துவிட்டோம். இவையே தந்தை பிரம்மாவின் முதல் அனுபவ வார்த்தைகளாகும். ஆகவே, தந்தை பிரம்மாவின் வார்த்தைகள், பிராமணர்களான உங்கள் எல்லோருடைய வார்த்தைகளும் ஆகும். எனவே, பாப்தாதா குழந்தைகளான உங்கள் எல்லோரையும் மீட்டல் செய்ய வைக்கிறார்: சதா தந்தையின் சகவாசத்தில் இருங்கள். தந்தை தன்னுடன் சகல உறவுமுறைகளின் அனுபவத்தையும் நீங்கள் பெறச் செய்துள்ளார். உங்களின் சகல உறவுமுறைகளும் தந்தையுடன் மட்டுமே என நீங்களும் சொல்கிறீர்கள். உங்களின் சகல உறவுமுறைகளும் அவருடன் என்றிருக்கும்போது, ஏன் நீங்கள் உங்களின் பணிகளில் நேரத்;திற்கேற்ப ஒவ்வோர் உறவுமுறையையும் பயன்படுத்துவதில்லை? நீங்கள் நேரத்திற்கேற்ப உங்களுக்குத் தேவையான உறவுமுறை என்ற முறையில் சதா சகல உறவுமுறைகளையும் அனுபவம் செய்தால், உங்களுக்குச் சகபாடியும் இருப்பார், உங்களிடம் சகவாசமும் இருக்கும். அப்போது உங்களின் மனமும் புத்தியும் ஏனைய சகபாடிகளிடம் செல்லாது. பாப்தாதா இந்த வாய்ப்பை உங்களுக்கு அளிக்கிறார். அவர் உங்களுக்குச் சகல உறவுமுறைகளையும் தர முன்வருவதனால், சகல உறவுமுறைகளின் இந்த சந்தோஷத்தை அனுபவியுங்கள். உங்களின் பணிகளில் இந்த உறவுமுறைகள் எல்லாவற்றையும் பயன்படுத்துங்கள்.

சில குழந்தைகள் சிலவேளைகளில், தாங்கள் தனித்திருப்பதாக அல்லது சிறிது வரட்சியாக உணர்வதை பாப்தாதா காணும்போது, அவர்களிடம் அவர் கருணை கொள்கிறார். இது ஏனென்றால், இத்தகையதொரு மேன்மையான சகவாசம் இருக்கும்போது, நீங்கள் ஏன் உங்களின் பணிகளில் இந்தச் சகவாசத்தைப் பயன்படுத்துவதில்லை? அதன்பின்னர் நீங்கள் என்ன கேட்கிறீர்கள்? ‘ஏன்? ஏன்?’ பாப்தாதா உங்களுக்கு ‘ஏன்?’ என்று கேட்கக்கூடாது எனச் சொல்லியிருக்கிறார். ‘ஏன்?’ என்ற இந்த வார்த்தை வரும்போது, அது ஒரு எதிர்மறையான வார்த்தையாகும். ஆனால், ‘பறவுங்கள்’ (ஃபிளை) என்பது சாதகமானதொரு வார்த்தை. ஆகவே, ஒருபோதும் ‘ஏன்? ஏன்?’ எனக் கேட்காதீர்கள். அதற்குப்பதிலாக, ‘பறவுங்கள்’ என்ற வார்த்தையை நினைவில் வைத்திருங்கள். தந்தையை உங்களின் சகபாடி ஆக்கிப் பறவுங்கள். நீங்களே உங்களை அதிகளவில் இரசிப்பீர்கள். அவரை இரண்டு ரூபங்களிலும் பயன்படுத்துங்கள்: நாள் முழுவதும் உங்களின் வேலைகள் எல்லாவற்றிலும் ஒரு சகபாடியாகவும் உங்களின் சகவாசமாகவும் பயன்படுத்துங்கள். மீண்டும் உங்களால் இத்தகையதொரு சகபாடியைக் காண முடியுமா? பாப்தாதாவும் கூறுகிறார்: நீங்கள் பௌதீகமாகவோ அல்லது மனோரீதியாகவோ களைப்படைந்தால், உங்களை இரு வழிகளிலும் மசாஜ் செய்வதற்கு உங்களின் சகபாடியான நான் காத்திருக்கிறேன். அவர் உங்களைக் களிப்பூட்டுவதற்கும் எப்போதும் தயாராக இருக்கிறார். அப்போது, எந்தவிதமான எல்லைக்குட்பட்ட பொழுதுபோக்குகளுக்கும் அவசியமில்லை. இந்த முறையில் எப்படி அவரைப் பயன்படுத்துவது என்பது உங்களுக்குத் தெரியுமா? அல்லது, அவரே மகத்தான தந்தை, அவரே ஆசிரியர், அவரே சற்குரு என நீங்கள் நினைக்கிறீர்களா? எப்படியிருந்தாலும், அவர் உங்களுக்குச் சகல உறவுமுறைகளிலும் இருக்கிறார். இரட்டை வெளிநாட்டவர்களான உங்களுக்குப் புரிகிறதா?

அச்சா, நீங்கள் எல்லோரும் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கே வந்திருக்கிறீர்கள், அப்படித்தானே? நீங்கள் அதைக் கொண்டாட விரும்புகிறீர்கள்தானே? அச்சா, நீங்கள் ஒரு பிறந்தநாள் கொண்டாடும்போது, அவருக்கு ஒரு பரிசு கொடுப்பீர்களா? அல்லது, நீங்கள் பரிசு கொடுப்பதில்லையா? ஆகவே, இன்று, நீங்கள் எல்லோரும் தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட வந்துள்ளீர்கள். இது சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது. அதனால், நீங்கள் குறிப்பாகத் தந்தையின் பிறந்தநாளைக் கொண்டாட வந்துள்ளீர்கள். நீங்கள் அதைக் கொண்டாட வந்துள்ளீர்கள்தானே? இன்று பிறந்தநாளுக்காக என்ன பரிசை நீங்கள் கொடுப்பீர்கள்? அல்லது, நீங்கள் மெழுகுதிரிகளைக் கொழுத்தி, கேக் வெட்டப் போகின்றீர்களா? இப்படியா நீங்கள் கொண்டாடுவீர்கள்? இன்று என்ன பரிசு கொடுப்பீர்கள்? அல்லது, அதை நாளை கொடுப்பீர்களா? நீங்கள் சிறிய பரிசைக் கொடுத்தாலென்ன அல்லது பெரிய பரிசைக் கொடுத்தாலென்ன, ஒரு பரிசைக் கொடுக்கிறீர்கள்தானே? எனவே, நீங்கள் எதைக் கொடுத்தீர்கள்? நீங்கள் இதைப் பற்றி யோசிக்கிறீர்கள். அச்சா, நீங்கள் ஒரு பரிசு கொடுக்க விரும்புகிறீர்களா? அந்தப் பரிசைக் கொடுக்க நீங்கள் தயாரா? பாப்தாதா கேட்கின்ற எதையும் கொடுப்பீர்களா அல்லது நீங்கள் விரும்பும் எதையும் கொடுப்பீர்களா? நீங்கள் என்ன செய்வீர்கள்? பாப்தாதா கேட்கின்ற எதையும் கொடுப்பீர்களா? அல்லது நீங்கள் விரும்புவதைக் கொடுப்பீர்களா? (பாப்தாதா கேட்கின்ற எதையும் நாம் கொடுப்போம்) கவனமாக இருங்கள்! உங்களுக்குச் சிறிது தைரியம் தேவைப்படும். உங்களுக்குத் தைரியம் உள்ளதா? மதுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கு தைரியம் உள்ளதா? இரட்டை வெளிநாட்டவர்களுக்குத் தைரியம் உள்ளதா? உங்களின் கைகளை உயர்த்துவதில் நீங்கள் மிகவும் நன்றாக இருக்கிறீர்கள். அச்சா. சக்திகளுக்கும் பாண்டவர்களுக்கும் தைரியம் உள்ளதா? பாரத மக்களே உங்களுக்குத் தைரியம் உள்ளதா? மிகவும் நல்லது! தந்தை இந்த வாழ்த்துக்களைப் பெறுகிறார். அச்சா. பாபா உங்களுக்குச் சொல்லட்டுமா? இதைப் பற்றி நான் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என நீங்கள் சொல்லப்போவதில்லைத்தானே? கா, கா (பய பய) எனச் சொல்லாதீர்கள். (இந்தி மொழியில் ஒரு வினைச் சொல்லுக்கு கா என்பதைச் சேர்த்தால், அது எதிர்காலத்தைக் குறிக்கும். உதாரணமாக, நாம் அதைப் பற்றிச் சிந்தித்துப் பார்ப்போம், எதிர்காலத்தில் ஏதோவொரு வேளையில் அதைப் பற்றிப் பார்க்கலாம் போன்றவை) உங்களில் பெரும்பாலானோரில் பாப்தாதா ஒரு விடயத்தைப் பார்த்துள்ளார். சிறுபான்மையினர் அல்ல, ஆனால் பெரும்பாலானோர். பாபா எதைப் பார்த்தார்? ஏதாவதொரு சூழ்நிலை உங்களின் முன்னால் வரும்போதெல்லாம், பெரும்பாலானோருக்கு மூன்றாம் இலக்கக் கோபம் ஏற்படுகிறது. ஒன்று, இரண்டு, மூன்று. அவர்கள் விரும்பாவிட்டாலும், மூன்றாம் இலக்கத்திலுள்ள கோபத்தின் சுவடு வெளிப்படுகிறது. சிலருக்கு அது பெரும் ஆத்திரத்தின் ரூபத்தில் உள்ளது. சிலருக்கு வலிமையான ரூபத்தில் கோபம் வருகிறது. சிலருக்கு எரிச்சலடைதல் என்ற மூன்றாவது வகையான கோபம் ஏற்படுகிறது. எரிச்சல் அடைதல் என்றால் என்னவென்று உங்களுக்குப் புரிகிறதா? அதுவும் கோபத்தின் ஒரு வடிவமே. அது சிறிது குறைவாக உள்ளது. அது மூன்றாம் வகை. அதனால் அது சிறிது குறைவாக உள்ளது. முதல் வகை, மிகவும் சக்திவாய்;ந்தது. இரண்டாவது வகை, அதை விடச் சிறிது குறைவானது. தற்காலத்தில், நீங்கள் எல்லோரும் பயன்படுத்தும் மொழி மிகவும் இராஜரீகமானது. இராஜரீகமான முறையில் நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அந்தச் சூழ்நிலை அப்படியிருந்தது, அதனால் கொஞ்சம் கட்டாயப்படுத்த வேண்டியிருந்தது! எனவே, இன்று, பாப்தாதா இந்தப் பரிசை எல்லோரிடமிருந்தும் பெற விரும்புகிறார். கோபம் மட்டுமல்ல, கோபத்தின் சிறிதளவு சுவடேனும் இருக்கக்கூடாது. ஏன்? உங்களுக்குக் கோபம் வரும்போது, நீங்கள் அவச்சேவை செய்கிறீர்கள். ஏனென்றால், கோபம் என்பது எப்போதும் இரண்டு பேருக்கிடையிலேயே தோன்றும். நீங்கள் தனியே இருக்கும்போது அது தோன்றாது. அது இரண்டு பேருக்கிடையே தோன்றிப் பின்னர் புலப்படும். உங்களின் மனதிலே யாருக்காவது சிறிதளவு வெறுப்பின் சுவடேனும் இருந்தால், நிச்சயமாக உங்களின் மனதில் அந்த ஆத்மாவின் மீது ஏதோவொரு நிர்ப்பந்திக்கும் உணர்வு இருக்கும். பாப்தாதா இந்த வகையான அவச்சேவையை விரும்புவதில்லை. எனவே, எந்த வகையான கோபத்தின் சிறிதளவு சுவடேனும் வெளிப்பட அனுமதிக்காதீர்கள். எப்படி நீங்கள் பிரம்மச்சரியத்தில் கவனம் செலுத்துகிறீர்களோ, அப்படியே, காமம் மகா சத்துரு என நினைவு செய்யப்படுவதைப் போல், கோபமும் மகா எதிரி ஆகும். அது உங்களின் தூய உணர்வுகளை, அன்பான உணர்வுகளை வெளிப்பட அனுமதிக்காது. அது உங்களின் மனோநிலையைப் பாழாக்கிவிடும். நீங்கள் அந்த ஆத்மாவிடமிருந்து அப்பால் விலகிவிடுவீர்கள். நீங்கள் அந்த ஆத்மாவின் முன்னால் செல்லவும் மாட்டீர்கள். அந்த ஆத்மாவிடம் பேசவும் மாட்டீர்கள். அந்த ஆத்மா கூறும் எதையும் நீங்கள் நிராகரிப்பீர்கள். அந்த ஆத்மா முன்னேற நீங்கள் இடமளிக்க மாட்டீர்கள். வெளியில் இருப்பவர்களாலும் இவற்றை எல்லாம் பார்க்கக்கூடியதாக இருக்கும். அப்போது, ‘இன்று, அவருக்கு அவ்வளவு சுகமில்லை. வேறொன்றும் இல்லை’ என நீங்கள் சொல்லக்கூடும். அதனால், உங்களால் இந்தப் பிறந்தநாள் பரிசைக் கொடுக்க முடியுமா? நீங்கள் இதற்கு முயற்சி செய்வீர்கள் என நினைப்பவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். இந்தப் பரிசைக் கொடுப்பதைப் பற்றி நினைக்கப் போகின்றவர்கள், முயற்சி செய்யப் போகின்றவர்கள், உங்களின் கைகளை உயர்த்துங்கள். நேர்மையான இதயத்தையிட்டுப் பிரபுவும் மகிழ்ச்சி அடைகிறார். யாராவது இருக்கிறீர்களா? எழுந்து நில்லுங்கள்! (சில சகோதரர்களும் சகோதரிகளும் எழுந்து நின்றார்கள்) ஆம், நேர்மையான இதயத்தையிட்டுப் பிரபு உண்மையில் மகிழ்ச்சி அடைகிறார். அவர்கள் முயற்சி செய்வார்கள். அவர்கள் மெதுவாக எழுந்து நிற்கிறார்கள். உண்மையைச் சொன்னதற்குப் பாராட்டுக்கள். அச்சா, நீங்கள் முயற்சி செய்வீர்கள் எனச் சொன்னவர்களுக்கு, முயற்சி செய்வதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரம் தேவை? நீங்கள் முயற்சி செய்வது நல்லதே. நீங்கள் அப்படியேசெய்யுங்கள். ஆனால், அதற்கு உங்களுக்கு எவ்வளவு காலம் தேவை? உங்களுக்கு ஒரு மாதம் வேண்டுமா? ஆறு மாதங்கள் வேண்டுமா? எவ்வளவு காலம் தேவை? நீங்கள் இதைக் கைவிடுவீர்களா? அல்லது, இதைக் கைவிட வேண்டும் என்ற இலட்சியமே உங்களுக்கு இல்லையா? நீங்கள் இதைச் செய்ய முயற்சி செய்வீர்கள் எனச் சொன்னவர்கள், மீண்டும் எழுந்து நில்லுங்கள்! இதை இரண்டு, மூன்று மாதங்களுக்கு முயற்சி செய்து, கைவிடுவோம் என நினைப்பவர்கள், அமர்ந்து கொள்ளலாம். அதற்கு ஆறு மாதங்கள் தேவை என நினைப்பவர்கள், அதற்கு ஆறு மாதங்கள் எடுத்தாலும், நீங்கள் அதைக் குறைக்க வேண்டும். இதில் கவனம் செலுத்துவதை நிறுத்தாதீர்கள். ஏனென்றால், இது மிகவும் அவசியமானது. இந்த அவச்சேவை புலப்படுகிறது. நீங்கள் எதையும் சொல்லாவிட்டாலும், அது இன்னமும் உங்களின் முகங்களில் புலப்படுகிறது. ஆகவே, உங்களின் தைரியத்தைப் பேணிய எல்லோரின் மீதும் பாப்தாதா ஞானம், அன்பு, சந்தோஷம், அமைதியின் முத்துக்களைப் பொழிகிறார். அச்சா.

அதற்குப் பதிலாக, பாப்தாதா விசேடமாக உங்கள் எல்லோருக்கும் இந்த ஆசீர்வாதத்தை ஒரு பரிசாக வழங்குகிறார்: எப்போதெல்லாம், தவறுதலாகவேனும் அல்லது உங்களின் விருப்பத்திற்கு மாறாகவேனும், கோபம் வெளிப்படுமாக இருந்தால், உங்களின் இதயபூர்வமாக ‘இனிய பாபா’ என்ற வார்த்தைகளைக் கூறுங்கள். ஆகவே, தைரியமாக இருப்பவர்கள், நிச்சயமாகத் தந்தையிடமிருந்து மேலதிக உதவியைத் தொடர்ந்தும் பெறுவார்கள். ‘இனிமையான பாபா’ எனச் சொல்லுங்கள். வெறுமனே பாபா என்றல்ல, ஆனால் இனிய பாபா எனச் சொல்லுங்கள். அப்போது நீங்கள் உதவியைப் பெறுவீர்கள். நீங்கள் நிச்சயமாக அதைப் பெறுவீர்கள். ஏனென்றால், நீங்கள் அந்த இலட்சியத்தை வைத்திருந்தீர்கள். உங்களின் இலட்சியத்தை வைத்திருப்பதன் மூலம், நீங்கள் நிச்சயமாக அவசியமான தகைமைகளை விருத்தி செய்வீர்கள். நீங்கள் அவற்றை விருத்தி செய்வீர்கள்தானே? மதுவனத்தைச் சேர்ந்தவர்களே, உங்களின் கைகளை உயர்த்துங்கள்! அச்சா. நீங்கள் இதைச் செய்ய வேண்டும்தானே? (ஹா ஜி). வாழ்த்துக்கள்! மிகவும் நல்லது! இன்று, பாபா குறிப்பாக மதுவனத்தைச் சேர்ந்த உங்கள் எல்லோருக்கும் தோளி வழங்குவார். நீங்கள் மிகக் கடினமாக வேலை செய்கிறீர்கள். கோபத்தில் இருந்து விடுபட்டதற்காக அவர்கள் தோளியைப் பெற மாட்டார்கள், ஆனால் அவர்கள் செய்யும் கடின உழைப்பிற்காகப் பெறுகிறார்கள். நாம் கைகளை உயர்த்தியதால், எமக்கும் தோளி கிடைக்கும் என எல்லோரும் நினைக்கக்கூடும். அவர்கள் மிகக் கடினமாக வேலை செய்கிறார்கள். மதுவனம் என்பது, தாம் பெற்றுள்ள சேவையினூடாக எல்லோரையும் திருப்திப்படுத்துவதற்கான உதாரணம் ஆகும். ஆகவே, இன்று, பாபா அவர்களின் வாய்களை இனிமையாக்குகின்றார். அவர்களின் வாய்கள் இனிமை ஆகுவதைப் பார்த்து, ஏனைய எல்லோரும் உங்களின் வாய்களை இனிப்பாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் மிகவும் சந்தோஷப்படுவீர்கள்தானே? நீங்கள் எல்லோரும், ‘அமைதிக் கலாச்சாரம்’ என்றொரு நிகழ்ச்சியை உருவாக்குகிறீர்கள். இதுவும் பிராமணக் குடும்பத்தின் கலாச்சாரங்களில் ஒன்றேயாகும். பிராமண குலத்தின் பண்புகளே முதன்மையான கலாச்சாரம் ஆகும். தாதிகள் பரிசுகளை வழங்கும்போது, ஒரு சணல் பையில், ‘குறைவாகப் பேசுங்கள், மென்மையாகப் பேசுங்கள், இனிமையாகப் பேசுங்கள்’ என்று எழுதப்பட்டிருப்பதை பாப்தாதா பார்த்துள்ளார். ஆகவே, இன்றும், பாப்தாதா உங்களுக்கு இந்தப் பரிசை வழங்குகிறார். அவர் உங்களுக்கு சணல்பையைக் கொடுக்கவில்லை. ஆனால், அதை ஓர் ஆசீர்வாதத்தின் வடிவில் ஒரு பரிசாக வழங்குகிறார். பிராமணக் கலாச்சாரம் ஒவ்வொரு பிராமணரின் முகத்திலும் நடத்தையிலும் வெளிப்படுத்தப்பட வேண்டும். நீங்கள் அந்த நிகழ்ச்சிகளை நடத்தி, சொற்பொழிவுகளை ஆற்றுவீர்கள். ஆனால், முதலில் உங்களுக்குள்ளே இந்தப் பண்புகளைக் கொண்டிருப்பது அவசியமாகும். ஒவ்வொரு பிராமணரும் புன்னகையுடன் மற்றவர்களுடன் தொடர்பில் வரவேண்டும். ஒருவருடன் ஒரு வகையான நடத்தையும் வேறொருவருடன் இன்னொரு வகையான நடத்தையும் என்று இருக்கக்கூடாது. நீங்கள் மற்றவர்களைப் பார்க்கும்போது உங்களின் கலாச்சாரத்தைக் கைவிடாதீர்கள். கடந்த காலத்தின் விடயங்களை மறந்துவிடுங்கள். உங்களின் வாழ்க்கைகளில் உங்களின் புதிய சம்ஸ்காரங்களைக் காட்டுங்கள். நீங்கள் இப்போதே அவற்றைக் காட்ட வேண்டும். சரிதானே? (எல்லோரும், ஆம் எனச் சொன்னார்கள்).

இரட்டை வெளிநாட்டவர்களில் பெரும்பாலானோர் ‘ஹா ஜி’ என மிக நன்றாகச் சொல்வது மிகவும் நல்லது. இது நல்லவிடயம். பாரத மக்களுக்கு, ‘ஹா ஜி’ எனச் சொல்வது அவர்களின் கோட்பாடுகளில் ஒன்றாகும். மாயைக்கு ‘நா ஜி’ எனச் சொல்லுங்கள், அவ்வளவுதான்! ஆத்மாக்களுக்கு, ‘ஹா ஜி, ஹா ஜி’ எனச் சொல்லுங்கள். மாயைக்கு, ‘நா ஜி, நா ஜி’ எனச் சொல்லுங்கள். அச்சா. நீங்கள் எல்லோரும் பிறந்தநாளைக் கொண்டாடினீர்களா? நீங்கள் அதைக் கொண்டாடியதுடன் ஒரு பரிசையும் கொடுத்தீர்களா? நீங்கள் பரிசை ஏற்றுக் கொண்டீர்களா?

அச்சா. உங்கள் எல்லோருடனும் கூடவே, வெவ்வேறு இடங்களில் ஏனைய பல ஒன்றுகூடல்கள் இடம்பெறுகின்றன. சில இடங்களில், சிறிய ஒன்றுகூடல்களும் ஏனைய இடங்களில், பெரிய ஒன்றுகூடல்களும் இடம்பெறுகின்றன. எல்லோரும் பார்த்தும், கேட்டும் கொண்டிருக்கிறார்கள். பாப்தாதா அவர்களிடமும் கேட்கிறார்: நீங்கள் எல்லோரும் இன்று இந்தப் பரிசைக் கொடுத்தீர்களா இல்லையா? அவர்கள் எல்லோருமே, ‘ஹாஜி பாபா’ எனச் சொல்கிறார்கள். அவர்கள் நல்லவர்கள்! அவர்கள் தொலைவில் அமர்ந்திருந்தாலும், பாபாவின் முன்னால் அமர்ந்திருப்பதைப் போன்றே உள்ளது. விஞ்ஞானிகள் அதிகளவு முயற்சி செய்கிறார்கள். அவர்கள் அதிகளவு முயற்சி செய்கிறார்கள்தானே? எனவே, பிராமணர்களே அதிகளவு நன்மையைப் பெறவேண்டும், அப்படித்தானே? இதனாலேயே, சங்கமயுகம் ஆரம்பித்ததில் இருந்து, விஞ்ஞானத்தின் வசதிகளும் அதிகரிக்க ஆரம்பித்தன. சத்தியயுகத்தில், விஞ்ஞானம் தேவ ரூபங்களில் உள்ள உங்களுக்குச் சேவை செய்யும். எவ்வாறாயினும், சங்கமயுகத்தில், பிராமணர்களான நீங்கள் விஞ்ஞானத்தின் சகல சௌகரியங்களையும் பெற்றுக் கொள்கிறீர்கள். சேவையிலும், இந்த விஞ்ஞானத்தின் கண்டுபிடிப்புகள் எல்லையற்ற முறையில் மகிமை செய்வதற்கு ஒத்துழைக்கும். இதனாலேயே, விஞ்ஞானத்தில் கருவிகளாக இருக்கும் குழந்தைகளுக்கும் அவர்களின் கடின உழைப்பிற்காக பாப்தாதா வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறார்.

உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் மதுவனத்திற்குப் பல மிக, மிக அழகான வாழ்த்து மடல்கள் வந்திருப்பதை பாப்தாதா பார்த்தார். அத்துடன் மற்றவர்களின் ஊடாக அனுப்பப்பட்ட கடிதங்களும் அன்பும் நினைவும் வழங்குகின்ற செய்திகளும் இருந்தன. பாப்தாதா அவர்களுக்கு விசேடமான அன்பையும் நினைவுகளையும் வழங்குகிறார். அத்துடன் அவர்களுக்குப் பல-பல-பல-பல மில்லியன் மடங்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறார். குழந்தைகள் எல்லோரும் பாப்தாதாவின் கண்களின் முன்னே தோன்றுகிறார்கள். நீங்கள் எல்லோரும் வாழ்த்து மடல்களையே கண்டீர்கள். பாப்தாதா அவர்களையும் கண்களால் காண்கிறார். அவர்கள் இவற்றை மிகுந்த அன்புடன் அனுப்பி வைத்துள்ளார்கள். பாப்தாதா அவற்றை அதே அன்புடன் ஏற்றுக் கொண்டார். பலர் தமது ஸ்திதி பற்றியும் எழுதியிருந்தார்கள். ஆகவே, பாப்தாதா கூறுகிறார்: பறவுங்கள், அத்துடன் மற்றவர்களையும் பறக்கச் செய்யுங்கள்! பறப்பதன் மூலம், எல்லாமே கீழே இருந்துவிடும். உங்களால் உயரே அதிமேலான தந்தையுடன் இருக்க முடியும். ஒரு விநாடியில் நிறுத்துங்கள். அத்துடன் உங்களின் சக்திகளினதும் நற்குணங்களினதும் களஞ்சியத்தை வெளிப்படச் செய்யுங்கள். அச்சா.

எங்கும் உள்ள மேன்மையான பிராமண ஆத்மாக்கள் எல்லோருக்கும், சதா தந்தையின் சகவாசத்தில் இருப்பவர்களுக்கும், தந்தையைத் தமது சகபாடி ஆக்கிக் கொள்ளும் அன்பான ஆத்மாக்களுக்கும் சதா தந்தையின் நற்குணங்கள் என்ற கடலில் அமிழ்ந்திருப்பவர்களுக்கும் அத்துடன் சமமாக இருப்பவர்களுக்கும், பாப்தாதாவின் மேன்மையான ஆத்மாக்களுக்கும் சதா ஒரு விநாடியில் முற்றுப்புள்ளி (பிந்து) வைக்கும் மாஸ்ரர் கடல் (சிந்து) ஆத்மாக்களுக்கும் பாப்தாதாவிடமிருந்து அன்பும் நினைவும் பலப்பல வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள். பாப்தாதா எல்லா வேளையும் ஒவ்வொரு குழந்தைக்கும் நமஸ்தே சொல்வார். எனவே, இன்றும் நமஸ்தே.

ஆசீர்வாதம்:
நீங்கள் சக்திவாய்ந்த திருஷ்டியையும் தூய்மைக்கான மனோபாவத்தையும் கொண்டிருப்பதன் மூலம் சகல பேறுகளையும் பெறுகின்ற, துன்பத்தை நீக்கி, சந்தோஷத்தை அருள்பவர் ஆகுவீர்களாக.

விஞ்ஞானத்தின் மருந்துகள், வலியையும் வேதனையையும் தற்காலிகமாக நிறுத்தும் சக்தியைக் கொண்டுள்ளன. ஆனால், தூய்மை சக்தி, அதாவது, மௌன சக்திக்கு ஆசீர்வாதங்களின் சக்தி உள்ளது. இந்தச் சக்திவாய்ந்த பார்வையும் தூய்மையின் மனோபாவமும் நீங்கள் எல்லா வேளையும் பேறுகளைப் பெறச் செய்கின்றன. இதனாலேயே, மக்கள் உங்களின் உயிரற்ற விக்கிரகங்களின் முன்னால் சென்று, உங்களை அழைத்து, கருணையை வேண்டுகிறார்கள். நீங்கள் மாஸ்ரர் துன்பத்தை நீக்கி, சந்தோஷத்தை அருள்பவர்கள் ஆகியிருப்பதனாலும் உயிர்வாழும் ரூபத்தில் கனிவானர்கள் ஆகியிருப்பதனாலும் பக்தி மார்க்கத்தில் நீங்கள் வழிபடப்படுகிறீர்கள்.

சுலோகம்:
காலம் நெருங்கி வருவதைப் பார்க்கும்போது, எல்லையற்ற விருப்பமின்மையே உண்மையான தவமும் ஆன்மீக முயற்சியும் ஆகும்.

அறிவித்தல்: இன்று, மாதத்தின் 3 ஆம் ஞாயிற்றுக்கிழமை. சர்வதேச யோகா தினம். இதன்போது சகல பிராமணக் குழந்தைகளும் மாலை 6.30 இலிருந்து 7.30 வரை தியானம் செய்வார்கள். மாஸ்ரர் அருள்பவர் என்ற ஸ்திதியில் ஸ்திரமாக இருந்து. உங்களின் மனதினால் சகல ஆத்மாக்களுக்கும் சகல சக்திகளையும் ஆசீர்வாதங்களையும் தானம் செய்து, அவர்கள் முழுமையை அனுபவம் பெறச் செய்யுங்கள்.